Jump to content

அவன் போலொருவன்  பிறப்பான். 


Recommended Posts

அவனில்லை இன்று
எம்மோடு அவன் 
நினைவுகள்  நீர்சூடி 
வழிகிறது விழியிரண்டும்.
 
அவனில்லா வனம் 
ஆளில்லா நிலம். 
அவனின்றி அனைத்துமே
அனாதைப் பிணம். 
 
ஆனைகள் மிதித்து 
அடங்காத் துயர் மூடி 
அ (உ)லையும் காற்றும்
ஊழித்தீயூறி அடைகாக்கும்
தாயாகிறது. 
 
அவன் போலொருவன் 
பிறப்பான். 
பிரபாகரன் என்ற 
பெருந்தீயாய் இருப்பான்.  
 
அவன் வருவான்  
ஆன்மபலம் தருவான். 
அனைத்துமே அவனாகி
எமையுருக்கி ஒளிர வைப்பான். 
 
காலக் கணக்கிருப்பை
கார்த்திகை ஈரம்
காலவிதி கடத்திக்
கரையேற்றும். 
கனவுகள் விதைத்துக் 
காத்திருக்கிறோம். 
 
சாந்தி நேசக்கரம் 
26. 11. 2017. 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.