Jump to content

நாங்கள் யார்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  1. யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.
  2. உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?
  3. மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)?
  4. தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா?
  5. அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?
  6. நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?
  7. எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?

தயவு செய்து பதில் சொல்லுங்கள்! மேலுள்ள வற்றை அப்படியே கொப்பி செய்து பதிலில் ஒட்டி உங்கள் பதிலையும் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கஸ்டப்பட்டுக் கேட்டுட்டீங்க.. பொதுவான பதில்கள்..

  1. யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.
    இப்படி வெளிப்படையாகக் கேட்டால் எப்படி? உருப்படியாக அலசி முடிவுகள் எடுத்து செயற்படுத்த கூட்டங்களா யாழ் களத்தில் நடக்கின்றது? பல்வேறு அவதாரங்களிற்குள் பற்பலர் இருப்பார்கள்.. ஒவ்வொருவரின் உள்நோக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. நம்பிக்கையை கட்டியெழுப்பி ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது என்பது நேரடிச் சந்திப்புக்கள் இன்றி, ஒத்துழைப்புக்கள் இன்றி நடக்கமாட்டா. எனவே இங்கு கருத்தாடுபவர்கள் உருப்படியாகக் கருத்தாடுகின்றார்களா இல்லையா என்பதை ஆராயாமல், எல்லோருக்கும் தமிழீழம் என்ற இலக்கின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதற் காரியமாக இருக்கவேண்டும்..
    அறிபூர்வமாக மட்டும் கருத்தாடினால், பலருக்கு அது சலிப்பை உருவாக்கும்.. பெரும் கட்டுரைகளை எழுதினால் ஒன்றிரண்டு பேருக்கு மேல் படிக்கமாட்டார்கள். சிறு சிறு பந்தியாக எழுதினால்தான் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று சொல்வார்கள்.. எனவே மாற்றங்களை சடுதியாக கொண்டுவரலாம் என்ற நினைப்பைவிட்டு எப்படியும் சரியான திசையில் பயணித்தால் போதும் என்றிருப்பது நல்லது.

  2. உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?
    கூடிக் கதைக்கின்றோம். ஊரில் சந்திகளிலும், தெருமுனைகளிலும் நின்று கதைப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.. எல்லோரும் வெட்டிப் பேச்சில் நேரத்தை விரயமாக்குவதில்லை. எனவே யாழ் களமூடாக 5% சதவீதம் தேசியத்தைப் பற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் அறிந்தாலே போதுமானது!

  3. மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)?
    நீங்கள் கூறியபடி எல்லோரும் ஊடகவியலாளராக இருக்க முடியாது. அபிப்பிராயங்களை பகிர்வதற்கு ஒவ்வொருவருக்கும் வேறுவேறான தெரிவுகள்/முறைகள் உண்டு. ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டுவந்து இப்படித்தான் அபிப்பிராயம் சொல்லவேண்டும், இந்த இந்த விதிகளைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லுவது கருத்துக்கள் பதிவதைத்தான் குறைக்கும்.

  4. தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா?
    புலம்பெயர் மக்கள் எல்லோரும் மனம் வருந்தி கொலைகளைத் தடுப்பதற்கு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால், பல விடயங்கள் எங்களுக்கு சாதகமாக எப்போதோ நடந்து முடிந்திருக்கும். எனவே இங்கு வருபவர்கள் எல்லோரும் ஒத்த கருத்தினர், ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் என்று நினைக்காமல், நாம் எல்லோரும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் மாதிரிகள் என்று கொள்ளவேண்டும்.. எனவே சிலர் கொலைகளையும் அவலங்களையும் பற்றி வருத்தப்படுவார்கள், சிலர் செய்தி என்ன என்று அறிய வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், சிலர் தங்கள் கணிப்பீடுகள் சரியாக நடக்கின்றன என்பதையிட்டுப் பெருமிதம் கொள்வார்கள். இப்படி பலவற்றைக் கூறலாம்..

  5. அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?
    செய்பவர்கள் சிறு பகுதியினர். பலரைப் பங்களிக்கச் செய்ய நீண்ட காலம் எடுக்கும்.. அரசியல் தெளிவற்றும், அரசியல் அறிவற்றும், அல்லது அதைப் பற்றி அக்கறையற்றும் இருக்கும் பலரை மாற்றத் தனிநபர்களின் முயற்சிகள் போதாது. பல்ரின் கூட்டு முயற்சி தேவை. ஒரே குடையின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்கள் தேவை. சுயநல/குறுகிய நல நோக்கோடு செயற்படமால், பொது நோக்கத்தோடு செயற்பட எல்லோரும் முன்வந்தால் பலவிடயங்களைச் சாதிக்கலாம்.

  6. நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?
    ஒரு பலனுமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழர்களின் பலம் இல்லை. ஒற்றுமையாகச் செயற்படாமல் சிதறி இருக்குமட்டும் பெரிய மாற்றங்களைப் புலம்பெயர் தமிழரால் கொண்டுவரமுடியாது.

  7. எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?
    எதிர்கால இலக்கு: யாழ் களம் என்றால் தொடர்ந்து கருத்தாடுவது (அதாவது ஒன்றும் செய்யாமல் இருப்பது).. புலம் பெயர் தமிழர்கள் என்றால் வெற்றிச் செய்திகள் வரும் என்று காத்திருப்பது. தாயகத் தமிழர் என்றால் எப்போது அவலங்கள் நீங்கி விடிவு கிட்டும் என்று காத்திருப்பது.. ஆக மொத்தத்தில் "காத்திருப்பு" ஒன்று மட்டும்தான் எமது இலக்காக இருக்கும்.

    மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் தெருவில் இறங்க வேண்டும், விசைப்பலகையைத் தட்டி ஒன்றையும் கிழிக்க முடியாது..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன்

  1. யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.
    இப்படி வெளிப்படையாகக் கேட்டால் எப்படி? உருப்படியாக அலசி முடிவுகள் எடுத்து செயற்படுத்த கூட்டங்களா யாழ் களத்தில் நடக்கின்றது? பல்வேறு அவதாரங்களிற்குள் பற்பலர் இருப்பார்கள்.. ஒவ்வொருவரின் உள்நோக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. நம்பிக்கையை கட்டியெழுப்பி ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஒருங்கிணைப்பது என்பது நேரடிச் சந்திப்புக்கள் இன்றி, ஒத்துழைப்புக்கள் இன்றி நடக்கமாட்டா. எனவே இங்கு கருத்தாடுபவர்கள் உருப்படியாகக் கருத்தாடுகின்றார்களா இல்லையா என்பதை ஆராயாமல், எல்லோருக்கும் தமிழீழம் என்ற இலக்கின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதற் காரியமாக இருக்கவேண்டும்..
    அறிபூர்வமாக மட்டும் கருத்தாடினால், பலருக்கு அது சலிப்பை உருவாக்கும்.. பெரும் கட்டுரைகளை எழுதினால் ஒன்றிரண்டு பேருக்கு மேல் படிக்கமாட்டார்கள். சிறு சிறு பந்தியாக எழுதினால்தான் வாசிக்க இலகுவாக இருக்கும் என்று சொல்வார்கள்.. எனவே மாற்றங்களை சடுதியாக கொண்டுவரலாம் என்ற நினைப்பைவிட்டு எப்படியும் சரியான திசையில் பயணித்தால் போதும் என்றிருப்பது நல்லது.
    உங்கள் கருத்தின்படி யாழ் களத்தைப்பொறுத்தவரை எங்களுக்கு தமிழீழம் தேவை, ஏன் தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதுமானது. மற்றபடி அதைப்பெற எம் பங்கு என்ன என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தத்தேவையில்லை என்கிறீர்கள்
  2. உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?
    கூடிக் கதைக்கின்றோம். ஊரில் சந்திகளிலும், தெருமுனைகளிலும் நின்று கதைப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.. எல்லோரும் வெட்டிப் பேச்சில் நேரத்தை விரயமாக்குவதில்லை. எனவே யாழ் களமூடாக 5% சதவீதம் தேசியத்தைப் பற்றி ஒருவர் ஒவ்வொரு நாளும் அறிந்தாலே போதுமானது!
    5% பேர் தேசியத்தைப்பற்றி அறிந்தாலே போதும். அடடா! உங்கள் கணக்குப்ப்டி பார்த்தாலும் 20 நாட்களில் எல்லாருக்கும் தேசியத்தைப்பற்றி 100% தெளிவு இருக்க வேண்டுமே? இருக்கிறதா?
  3. மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)?
    நீங்கள் கூறியபடி எல்லோரும் ஊடகவியலாளராக இருக்க முடியாது. அபிப்பிராயங்களை பகிர்வதற்கு ஒவ்வொருவருக்கும் வேறுவேறான தெரிவுகள்/முறைகள் உண்டு. ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டுவந்து இப்படித்தான் அபிப்பிராயம் சொல்லவேண்டும், இந்த இந்த விதிகளைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லுவது கருத்துக்கள் பதிவதைத்தான் குறைக்கும்.
    கர்ப்பிணிப்பெண்கள் அதிகம் உடலை வருத்தினால், ஏதாவது வழமைக்கு மாறான கடும்வேலை செய்தால் கூடாது என்பார்கள். கிபிர் வட்டமிட்டு அடிக்கும் போது அவர்கள் இதை எல்லாம் பார்க்கிறார்களா? உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்களே? எதற்காக? ஆக நாங்கள் காலத்தின் தேவையறிந்து ஓடத்தேவையில்லை என்கிறீர்கள். ஆறுதலாக அரட்டையடித்து அளவாக தாயகத்தைப்பற்றி அறிந்து கொள்வோம் என்கிறீர்கள். ஏனென்றால் எங்களுக்கு மேல் கிபிர் வட்டமிடவில்லைத்தானே!
  4. தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா?
    புலம்பெயர் மக்கள் எல்லோரும் மனம் வருந்தி கொலைகளைத் தடுப்பதற்கு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால், பல விடயங்கள் எங்களுக்கு சாதகமாக எப்போதோ நடந்து முடிந்திருக்கும். எனவே இங்கு வருபவர்கள் எல்லோரும் ஒத்த கருத்தினர், ஒரே நோக்கத்திற்காகப் பாடுபடுபவர்கள் என்று நினைக்காமல், நாம் எல்லோரும் புலம் பெயர் மக்களின் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தும் மாதிரிகள் என்று கொள்ளவேண்டும்.. எனவே சிலர் கொலைகளையும் அவலங்களையும் பற்றி வருத்தப்படுவார்கள், சிலர் செய்தி என்ன என்று அறிய வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள், சிலர் தங்கள் கணிப்பீடுகள் சரியாக நடக்கின்றன என்பதையிட்டுப் பெருமிதம் கொள்வார்கள். இப்படி பலவற்றைக் கூறலாம்..
    சிலர் வருந்துகிறார்கள். சிலர் அறிவதோடு நிறுத்துவர். சிலர் dont care என்கிறீர்கள். அந்த dont care ஆசாமிக்ளை விடுங்கள். மற்றவர்களுக்கு அந்தக்கொலைகளுக்கு எவ்வாறு தம் சக்திக்கேற்றவாறு எதிர்வினையற்றுவது என்று கற்றுக்கொடுக்கவேண்டாமா? தனிமனிதனால் அப்படிச் செய்யமுடியாது என்று நினைக்கிறீர்களா?
  5. அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்?
    செய்பவர்கள் சிறு பகுதியினர். பலரைப் பங்களிக்கச் செய்ய நீண்ட காலம் எடுக்கும்.. அரசியல் தெளிவற்றும், அரசியல் அறிவற்றும், அல்லது அதைப் பற்றி அக்கறையற்றும் இருக்கும் பலரை மாற்றத் தனிநபர்களின் முயற்சிகள் போதாது. பல்ரின் கூட்டு முயற்சி தேவை. ஒரே குடையின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவர்கள் தேவை. சுயநல/குறுகிய நல நோக்கோடு செயற்படமால், பொது நோக்கத்தோடு செயற்பட எல்லோரும் முன்வந்தால் பலவிடயங்களைச் சாதிக்கலாம்.
    செய்யவேண்டுமென்று ஒத்துக்கொள்கிறீர்க்ளல்லவா? நீண்டகாலம் என்றால் எவ்வளவு காலம்? எங்களால் இதைவிட வேகமாக செய்யமுடிது என்று நினைக்கிறீர்களா?
  6. நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)?
    ஒரு பலனுமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு தமிழர்களின் பலம் இல்லை. ஒற்றுமையாகச் செயற்படாமல் சிதறி இருக்குமட்டும் பெரிய மாற்றங்களைப் புலம்பெயர் தமிழரால் கொண்டுவரமுடியாது.
    ஏதோ கொஞ்சப்பலுள்ளது என்கிறீர்கள் தானே? ஆக செய்வது வீண்போக வில்லை. இப்போது தேவை எங்கள் efficiendy யை கூட்டுவது. மனம் வைத்தால் செய்ய முடியாதா?
  7. எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)?
    எதிர்கால இலக்கு: யாழ் களம் என்றால் தொடர்ந்து கருத்தாடுவது (அதாவது ஒன்றும் செய்யாமல் இருப்பது).. புலம் பெயர் தமிழர்கள் என்றால் வெற்றிச் செய்திகள் வரும் என்று காத்திருப்பது. தாயகத் தமிழர் என்றால் எப்போது அவலங்கள் நீங்கி விடிவு கிட்டும் என்று காத்திருப்பது.. ஆக மொத்தத்தில் "காத்திருப்பு" ஒன்று மட்டும்தான் எமது இலக்காக இருக்கும்.
    காத்திருப்போம். முதலில் விதைத்துவிட்டு பின்னர் அறுவடைக்குக் காத்திருப்போம். விதைக்காமல் அறுவடை எப்படி சாத்தியம்? தாயகத்தில் மக்கள் விதைத்துவிட்டு காத்திருக்கிறார்கள். நாங்கள் இன்னும் வடிவாக விதைக்கவில்லை. now is better than later.

மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்றால் தெருவில் இறங்க வேண்டும், விசைப்பலகையைத் தட்டி ஒன்றையும் கிழிக்க முடியாது..

ஒரு திட்டமும் இல்லாமல் தெருவில் இறங்கி ஒரு புண்ணியமும் இல்லை. பல தடவை தெருவில் இறங்கிய அனுபவம் உண்டு. கனடாவில் 75,000 பேர் இறங்கினார்கள் பொங்கு தமிழுக்கு. என்ன பலன்? முதலில் மூளையை பாவிக்கவேண்டும். பிறகு தான் சாரீரத்தை.

அது போக இங்கு நாங்கள் என்னத்தை கதைக்கிறோம். நாளும் அரச அட்டூழியத்தால் இறக்கும் மக்களினை பதுகாக்க என்ன செய்யலாம் என் கதைக்கிறோம். அது தொடர்பான அரசின் பொய்ப்பிரசாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று கதைக்கிறோம். தமிழ் ஊடகங்களை பற்றி கதைக்கிறோம். அது தவறே இல்லை.

இது ஒரு open source software மாதிரி. எல்லாரும் சேர்ந்து develop பண்ணுவோம் என்கிறேன். அப்படி உருவாகிய Linux இன்று Microsoft என்ற பில்லியன் கணக்கில் செலவழித்து உருவாக்கிய அரக்கனை எதிர்த்து நிற்கவில்லையா? இன்றைக்கு Firefox ஆனது IE யை பின் தள்ளி முன்னேறவில்லையா?

மனமுண்டானால் இடமுண்டு சார். நாங்கள் தோற்றதற்கு ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கலாம். வெல்லவேண்டுமானால் ஒரே ஒரு வழிதான். உழைப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர், உண்மையைச் சொன்னால் உறைக்கின்றது போலுள்ளது.. உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் விரும்பும் விடைகளைத் தந்தால் நடக்காதவை நடக்கக் கூடியவையாக மாற்றம் பெற்றுவிடுமா? ஒரு சின்ன உதாரணம்.. நீங்கள் இந்தக் கேள்விகளைப் பதிந்து எத்தனை நாட்கள்/எத்தனை மணித்தியாலங்கள்? எத்தனை பேர் இத்தலைப்பைப் பார்த்துள்ளார்கள்? எத்தனை பேர் தங்கள் அபிப்பிராயங்களைத் தந்துள்ளார்கள்? இவற்றில் இருந்து நீங்கள் கற்கவேண்டிய பாடம் பல இருக்கின்றது.. நான் pessimistic ஆக கருத்து எழுதவில்லை. உண்மையில் என்ன நடக்கின்றது என்பதையே எழுதினேன். உங்கள் கோபம்/ஆதங்கம் நியாயமாக இருக்கலாம். அதற்காக மந்திரத்தில் மாங்காய் பறிக்கலாம் என்று நினைக்கக்கூடாது..

இன்னொரு சின்னக் கதை (உண்மையானதுதான்)..

தேசியத் தலைவர் பிரபாகரனும், புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்களும் எவ்வாறு புலனாய்வுத் துறையை மேலும் சிறப்பாகத் தொழிற்படச் செய்யலாம் என்பதை ஆராய ஒரு பட்டறையை நடாத்தினார்கள். தலைவர் எல்லோரையும் பார்த்து முக்கியமாகத் தேவையானது என்னவென்று கேட்டார். ஒவ்வொருவர் ஒவ்வொருமாதிரி விடையளித்தார்கள், சிலர் புதிய தொழில்நுட்பம் தேவையென்றனர், சிலர் நவீன உளவியல் முறைகளையும், மற்றைய உளவு நிறுவனங்களின் உத்திகளையும் பாவிக்கவேண்டுமென்றனர். இப்படி எல்லோரும் கூறிமுடித்த பின்னர், தலைவர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது "ஆர்வம்" என்றார்.

உங்களைப் போல் எத்தனை பேர் ஆர்வத்துடன் இங்குள்ளனர்? இருக்கிற மாதிரித் தெரிகின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத்தலைப்பின் கீழ் உள்ள கிருபனின் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றேன்.உண்மையில் சாதாரணமாக நடைமுறையில் உள்ளதையே கிருபன் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவனின் பின்வரும் கூற்றுக்கு என்பதில்:

மற்றது நாம் யார் என பொருள் படும் தலைப்பில் நீங்கல் கேட்ட கேள்விக்கு பதில்

யாழ் களத்தில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் நடக்கின்ரன காரசாரமான விவாதங்கள் நடக்கின்றன அத்துடன் அரட்டையும் நடக்குது ஆனால் அவை அதுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தெலேயே நடக்குது கண்ட கண்ட இடங்களில் எல்லாம் நடக்கவில்லை அரட்டையை எதிர்கிறீர்கள் எண்டால் மோகன் அண்னாவிடம் மற்ரைய பகுதிகளை எடுக்க சொல்லுங்கள்!!!!

யாழ் களமும் கள உறவுகளும் என் குடும்பம் போன்றவர்கள் அவர்களுடன் அரட்டை அடைப்பதையோ நலம் விசாரிப்பதையோ அதாவது சரியான பகுதியில் செய்யும் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது நானும் அதை எதிர்ப்பேன்்

அரட்டை அடிக்க வேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அரட்டை அடிக்கும் அளவுக்கு மற்றவிடயங்கள் போகவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன்.

உதாரணத்துக்கு நீங்கள் தொட்ங்கிய ஒரு விடயத்தை எடுத்துக்கொள்வோம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20045

இவ்வவு நாட்களாக இது ஒரு அடி முன்னேறாததற்கு என்ன காரணம்?

இங்கு ஈழமே தெரியாதவர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அரட்டைப்பகுதியிலாவது வருவதை நாங்கள் வரவேற்கவேண்டும். தாயகத்தில் நடக்கும் விடயங்களைப்பற்றி முழுவதுமாக தெரிந்த நீங்களும் இப்படியா கேட்பீர்கள். இன்று அரட்டை ஒன்று தானா எமக்கு குறைச்சல்? குடும்பம் என்று சொல்கிறீர்களே ஈழத்தில் வாழ்பவன் எம் குடூம்பம் இல்லையா? அவர்க்ளுக்காக ஏதாவது செய்வோம் என்றால் அது பிழையா? யாழ் குடும்பம் நீங்கள் நலம் விசாரித்தாலும் விசாரிக்காவிட்டாலும் நலமாகத்தான் இருப்பார்கள். அட் லீஸ்ட் உயிரோடு இருப்பார்கள். ஈழக்குடும்பம் அப்படியில்லை.

எனவே நான் சொல்ல வந்த விடயத்தை புரியாதது போல கதைக்காதீர்கள். அரட்டை அடிக்கவேண்டாம் என் நான்கூறவரவில்லை. அரட்டை, உபயோகவேலை என வரும்போது இரண்டாவதுக்கு முதல் இடத்தையும் அடுத்ததுக்கு இரண்டாம் இடத்தையும் கொடுப்போம் என்கிறேன். எங்களுக்கு நேரம் என்ன மிதமிஞ்சியா கிடக்கிறது? வேலை போக ஒருநாளைக்கு ஒரு மணித்தியாலம் யாழின் முன் குந்துவோமா? அந்த 1 மணித்தியாலத்தில் முதல் 45 நிமிடத்தை உபயோகவேலைக்கும் மிகுதி 15 நிமிடத்தை அரட்டைக்கும் செலவழிப்போம் என்றேன்.

முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்லுவது போலதான் இங்கு நடக்குது நான் அரட்டைக்கு முக்கியம் கொடுக்கவில்லை ஆனால் அரட்டை அடிக்காமலும் இருக்கவில்லை.நீங்கள் சொல்லுவது போல அத்தலைப்பானது ஒரு அடி முன்னேறாமல் இருக்கவில்லை குறுக்ஸ் அதற்கான உதவிகளை செய்துள்ளார் தொகுக்கும் வேலையிம் வடிவமைக்கும் வேலையும் நடக்கின்றது எனக்கு நேரம் அவ்வளவு கிடைப்பதில்லை அதனாலேயே தாமதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திட்டமும் இல்லாமல் தெருவில் இறங்கி ஒரு புண்ணியமும் இல்லை. பல தடவை தெருவில் இறங்கிய அனுபவம் உண்டு. கனடாவில் 75,000 பேர் இறங்கினார்கள் பொங்கு தமிழுக்கு. என்ன பலன்? முதலில் மூளையை பாவிக்கவேண்டும். பிறகு தான் சாரீரத்தை.

அது போக இங்கு நாங்கள் என்னத்தை கதைக்கிறோம். நாளும் அரச அட்டூழியத்தால் இறக்கும் மக்களினை பதுகாக்க என்ன செய்யலாம் என் கதைக்கிறோம். அது தொடர்பான அரசின் பொய்ப்பிரசாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று கதைக்கிறோம். தமிழ் ஊடகங்களை பற்றி கதைக்கிறோம். அது தவறே இல்லை.

உங்களிற்கு கனடாவில் உள்ளவர்கள் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. கனடாவில் 75,000 பேர் இறங்கியதன் பலன் உங்களிற்கு வேண்டுமானால் தெரியாது இருக்கலாம். ஆயினும் அவ்வளவு மக்களையும் இறக்கியவர்களிற்கு அதனால் ஏற்பட்ட பயனைத் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். 75,000 மக்கள் இறங்கியது மாத்திரமல்ல அவர்கள் கட்டுக்கோட்பாகத் தம் வேட்கையை மட்டும் தான் சார்ந்து வாழும் சமூகத்துக்கு தெரிவித்த விதம் அவர்களையும் பார்வைகளைத் திருப்ப வைத்திருந்தது. எழுந்தமானமாக இவ்வளவு பேர் தெருவில் இறங்கினார்கள் அதற்கு என்ன நடந்தது என்று மக்கள் மனதில் நீங்கள் சேர்க்கும் வெறுப்பானது, மக்களை சலிப்படைந்த நிலைக்குக் கொண்டுசென்று அம்மக்கள் மீண்டும் ஓர் ஒன்று கூடலிற்கு அழைப்புவிடுக்கும் போது இதுபோன்ற உங்களின் எவ்வித பொருளுமற்ற விதண்டாவாதத்தைக் காரணம் காட்டி மறுதலிக்கக் கூடும். தாயகத்திற்குப் பலம் சேர்க்கிறேன் என்று புறப்பட்டு அதன் அழிவுக்கு வழிவகுக்காதீர்கள். பிறிதொரு விடயத்தில் குறுக்காலபோவன் கூறியது போல் தமிழீழ விடுதலை என்று புறப்பட்டு கட்டுமீறாது இருப்பின் அது சாலச் சிறந்தது.

Link to comment
Share on other sites

வணக்கம் பண்டிதர் நீங்கள் நடைமுறைக்கு ஏற்ப சிந்திக்க மறுக்கின்றீர்கள்

யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள்.

உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்?

இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதை நீங்கள் ஏற்க்க மறக்கினிறீர்கள்.

இங்கே வருபவர்கள் எல்லாரும் ஒரே போலயில்லை ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமானவர்கள், நீங்கள் எல்லாரும் ஒரேபோல இருப்பார்கள் என்று நினைப்பது யதார்ததிற்க்கு எட்டாத முட்டாள்தனம். இதுவரை நான் எதுவும் செய்தோமென்றும் சொல்லமுடியாது, செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. வெவ்வேறாக வெவ்வேறு தேசத்தில் உள்ளவர்களை இணைத்து ஊடகமூடன போரட்ட ஆதரவிற்க்கு யாழ் இணைத்துள்ளது இதை யாரலும் மறுக்க முடியாது. ஈழவன் ஆரம்பித்த முயற்ச்சிக்கு ஆதரவாக சிலர் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். நாங்களும் நம்மால் இயன்ற ஆதரவை வழங்க 1 முயற்ச்சியெடுத்து ஆரம்பக்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளோம். எல்லோருக்கும் படிப்பு,வேலை,குடும்பம் என்று நிறையப் பிரச்சினைகள் உள்ளது, அதையும் நீர் சற்று கவனத்திலெடுத்தால் நல்லது. பொழுது போக்குக்கு சற்று அரட்டையடிப்பதில் ஏதும் தப்பிருப்தாக தோன்றவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிற்கு கனடாவில் உள்ளவர்கள் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. கனடாவில் 75,000 பேர் இறங்கியதன் பலன் உங்களிற்கு வேண்டுமானால் தெரியாது இருக்கலாம். ஆயினும் அவ்வளவு மக்களையும் இறக்கியவர்களிற்கு அதனால் ஏற்பட்ட பயனைத் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். 75,000 மக்கள் இறங்கியது மாத்திரமல்ல அவர்கள் கட்டுக்கோட்பாகத் தம் வேட்கையை மட்டும் தான் சார்ந்து வாழும் சமூகத்துக்கு தெரிவித்த விதம் அவர்களையும் பார்வைகளைத் திருப்ப வைத்திருந்தது. எழுந்தமானமாக இவ்வளவு பேர் தெருவில் இறங்கினார்கள் அதற்கு என்ன நடந்தது என்று மக்கள் மனதில் நீங்கள் சேர்க்கும் வெறுப்பானது, மக்களை சலிப்படைந்த நிலைக்குக் கொண்டுசென்று அம்மக்கள் மீண்டும் ஓர் ஒன்று கூடலிற்கு அழைப்புவிடுக்கும் போது இதுபோன்ற உங்களின் எவ்வித பொருளுமற்ற விதண்டாவாதத்தைக் காரணம் காட்டி மறுதலிக்கக் கூடும். தாயகத்திற்குப் பலம் சேர்க்கிறேன் என்று புறப்பட்டு அதன் அழிவுக்கு வழிவகுக்காதீர்கள். பிறிதொரு விடயத்தில் குறுக்காலபோவன் கூறியது போல் தமிழீழ விடுதலை என்று புறப்பட்டு கட்டுமீறாது இருப்பின் அது சாலச் சிறந்தது.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கனடாவில் இவ்வளவு பேர் இருந்தும் அரசியலில் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியவில்லையென்பதே என்கருத்தாகவிருந்தது. அதாவது அந்த நிகழ்வின்பின்னும் ஏற்பட்ட"தடை"யைக்குறிப்பிட்டேன். ஆக, வீதியில் இறங்குவதை விட அரசியல் வேலைகள் போன்ற வேலைகளில் அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை என் குறிப்பிட்டேன். நான் என்ன குறிப்பிட்டது கடந்த வார "காலக்கணிப்பு" வை பாருங்கள்.

இதைப்பற்றி நான் அதிகதைக்க விரும்பவில்லை. கனடாவைப்பற்றி கதைப்பது என் நோக்கமல்ல. யாழைப்பற்றி மட்டும் கதைப்ப்து மட்டுமே. மேலும் கனடாவைப்பற்றி கதைக்க எந்த moral authority யும் எனக்கும் இல்லை. கதைத்தது பிழையானால் மன்னித்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எத்தினை பேருக்கு போரட்டம் பற்றி தெரியும்....? எனக்கு கூட போரட்டம் நடக்குது என்று தெரியும், ஆனால் யாழ் வந்தபிறகுதான் அதன் முக்கியதுவம், நாங்கள் அதற்க்கு எப்படி உதவுவது என்ற பல விடயங்களை அறிந்தேன், இதை பொறுத்தவரையில் யாழுக்கு வெற்றிதானே. முடிவுக்குப் போகமுதல் ஆரமபம் தெரிய வேண்டும். தற்போது யாழில் அது 100% வெற்றிகரமாகவே நடக்கின்றது. எத்தனை பேர் யாழ் வந்த பிறகு என்னைப் போல போரட்டத்தைப் பற்றி பலமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதை நீங்கள் ஏற்க்க மறக்கினிறீர்கள்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

பலமாக சிந்திப்பதை செயலிலும் காட்டுவோம்.

எல்லோருக்கும் படிப்பு,வேலை,குடும்பம் என்று நிறையப் பிரச்சினைகள் உள்ளது, அதையும் நீர் சற்று கவனத்திலெடுத்தால் நல்லது.

அதனால் தான் உபயோகவேலை #1 அரட்டை #2 என்றேன். அரட்டை தவறு என கூறவரவில்லை என்பதை மேலே ஈழவனுக்கான பதிலில் கூறியிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டிதர் அவர்களே,

உங்கள் கருத்தை நான் வழிமொழிகின்றேன். யாழ்களத்தில் கூட அரட்டை/பொழுதுபோக்குக்கென்று பகுதிகள் இருக்கின்றன. ஆனால் செய்திகளுக்கிடையில் கூட வேண்டாத சீண்டல்களும்.தேவையற்ற கீறல்களுமாய் கருத்தின் நோக்கமே திசை திருப்பி நிற்பதை நானும் அவதானித்திருக்கின்றேன்.

நமக்கான பணிகளை நாம் இன்னும் சரிவர உணரவில்லை என்றே தோன்றுகின்றது.

கசப்பு மருந்துக்கு இனிப்புத்தடவிக்கொடுக்க யாரும் குழந்தைகள் இல்லை இங்கே. எத்தனையோ கசப்புகளை நாமும் நம் உறவுகளும் தாங்கி வந்திருக்கின்றோம் இன்னும் தாங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே அதற்கான தீர்வினை வழியினை நோக்கி நம் பணிகளை முன் வைப்போமானால் நமக்கான விடியல் வெகுதொலைவில் இல்லை!.

ஒரு சிலருக்கே புரிகின்றது! என்ன செய்வது?!

Link to comment
Share on other sites

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நடக்கும் இந்த நாட்களில் முன்னர் பண்டிதர் கேட்ட கேள்விகள் நினைவுக்க வந்தன.

 

தற்போதுள்ள சூழலில் பண்டிதரின் கேள்விகளுக்கு பதில்கள் வேறாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.