Jump to content

பென்டில் கில்(Pendle Hill)


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ"

"ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்."

"நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் "சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள்.

கார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து.

நல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன்  இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க  கொத்து ரொட்டி கடைக்கு போனேன்.

அங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு  நின்றேன்.

புகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று.

"வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் .

"அண்ணே உங்கன்ட கொத்து ரெடி "என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர்.

"‍ஹலோ"

"இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே "

"இல்லை ஏன்"

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

"சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி"

மாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன்.

இருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்கு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம்.

மாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும்.

 

விடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது.

வந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில்  சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன்.

 

"‍ஹலோ மச்சான் என்ன  இந்த பக்கம்"

" தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து  கொண்டு போவம் என்று வந்தனான்"

" என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு"

"பின்ன!! எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ? அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு"

 

"  பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல.":10_wink::10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க வீட்டிலயும்  ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

உங்க வீட்டிலயும்  ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....!  tw_blush:

 

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

Link to comment
Share on other sites

வித்தியாசமான கடைக்கு..:rolleyes:  யாராவது கிரெடிட்கார்டு பாவிப்பினாமா.:grin:

19 minutes ago, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

 

வழமையான புத்தனின் கிறுக்கல்... தொடர்ந்து கிறுக்குங்கள்..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

மூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Supermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.12.2017 at 5:20 AM, putthan said:

"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ  டைகர் பிரான்ட் அரிசியும்  வாங்கி கொண்டு வாங்கோ"

" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது"

"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்"

" என்ன"

" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று"

மனிசி... நினைச்சு, நினைச்சு...  தொலை பேசியில்   சொன்னதெல்லாத்தையும்....  
கடை கடையாய்... ஏறி  வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,
கடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு... 
பேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில  சொல்லிப் போட்டா... :grin:

கவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.
புலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/12/2017 at 11:53 PM, கிருபன் said:

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

integrate பண்ணுவோம் ஆனால் பண்ணமாட்டோம் அதுக்கும் ஒரு talent வேணும்:10_wink:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்  நன்றிகள்

On 04/12/2017 at 10:46 AM, குமாரசாமி said:

மூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..:cool:

அதை விட‌ பெரிய டெக்னிக் எல்லாம் இருக்கு வருகைக்கு நன்றி:10_wink:

On 04/12/2017 at 11:27 AM, MEERA said:

Supermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.

நன்றிகள் மீரா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை அள்ளி வழங்கிய சகலருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.12.2017 at 5:20 AM, putthan said:

"‍ஹலோ"

"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ"

"சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்

""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்"

"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்"

"சு..இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை .தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ

சாமான் சக்கட்டையள் வாங்கிறதுக்கு உவையள் ஒரு லிஸ்ற் ஒண்டு எழுதித்தருவினம். கனக்க இருக்காது...ஆனால் அதை வாங்கிறதுக்கு பெரிய நகரத்தையே சுத்தி வரவேணும்.
அது சரி பொண்டிலைத்தானே பென்டில் எண்டு மழுப்பி சுழியன் விளையாட்டு விட்டுருக்கிறீங்க.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/12/2017 at 3:55 PM, தமிழ் சிறி said:

மனிசி... நினைச்சு, நினைச்சு...  தொலை பேசியில்   சொன்னதெல்லாத்தையும்....  
கடை கடையாய்... ஏறி  வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,
கடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு... 
பேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில  சொல்லிப் போட்டா... :grin:

கவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.
புலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி. :)

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தமிழ்சிறி

On 08/12/2017 at 1:41 AM, வல்வை சகாறா said:

புத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)

அநேகமான புலம்பெயர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்.:10_wink:

On 08/12/2017 at 1:01 PM, ஈழப்பிரியன் said:

புத்தனின் கதை ஒரு கொத்து ரொட்டி சாப்பிட்ட மாதிரியே இருக்கிறது.

நீங்கள் போன கடைத் தொகுதியில் எனது ஒன்றுவிட்ட அண்ணரின் மகன் அண்மையில் ஒரு சாப்பாட்டு கடை திறந்துள்ளார்.

எனது அண்ணனின் வீடும் பென்டில் கில் தான்.ஒரு தடவை பொழுதுபட்ட நேரம் கடைக்கு நடந்து போய் வந்தேன்.

ஏன் தனியாக போனனநீ? இரவில் அடிச்சுப் போடுவாங்கள் என்று ஒரு பயம் காட்டி வைத்திருந்தார்.

கடையின் பெயரை சொன்னால் நான் போய் உங்கன்ட பெயரை சொல்லி டிஸ்கவுண்ட்டில் கொத்துரொட்டி வாங்கலாம்...:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை 

ஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன் 

எதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்
மற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்

என்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்

உங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு
ஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ
இவை இதயத்துக்கு இதமானவையில்லை.

Link to comment
Share on other sites

On 12/3/2017 at 6:17 AM, putthan said:

வெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று  பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...tw_blush:

நீங்கள் சுழியன் அல்லோ???tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2017 at 12:21 AM, Kavallur Kanmani said:

சமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...கிறுக்கல் தொடரும்

On 12/12/2017 at 1:14 AM, யாயினி said:

நடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...

On 15/01/2018 at 7:51 AM, Elugnajiru said:

நல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை 

ஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன் 

எதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்
மற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்

என்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்

உங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு
ஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ
இவை இதயத்துக்கு இதமானவையில்லை.

இது அவுஸ்ரெலியா கனடா அல்ல நண்பரே ,வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் 

On 15/01/2018 at 4:04 PM, nunavilan said:

நீங்கள் சுழியன் அல்லோ???tw_blush:tw_blush:

அதே...tw_blush:tw_blush:.வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன.  அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது.  லண்டனோடு ஒப்பிடும்போது   உணவுப் பொருட்களுக்கு  விலையதிகம்.
 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2017 at 11:53 PM, கிருபன் said:

அவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ?:rolleyes:

விசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா!tw_blush:

சிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும்  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான்  வேலை.  வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம்  வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள்.  பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை.  பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/01/2018 at 12:39 AM, karu said:

சிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன.  அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது.  லண்டனோடு ஒப்பிடும்போது   உணவுப் பொருட்களுக்கு  விலையதிகம்.
 

கரு, 

நான் முதன் முதல் லண்டனில் உழுந்து வடை வாங்கிய காலத்தில்...வடையின் விலை...ஐம்பது பென்ஸ்!

வடையின் அளவு....கழுத்தில் போடக்கூடிய அளவு!

நான் கடைசியாக வடை வாங்கிய போது....வடையின் விலை....ஐம்பது பென்ஸ்!

வடையின் அளவு.....மோதிர விரலில் போடக்கூடிய அளவு!

 

அவுசில் வடை அளவு பெரிதாக அதிகம் மாறவில்லை!

ஆனால் விலையை...அடிக்கடி கூட்டிக்கொண்டு போகின்றார்கள்!

 

புத்தன்...உள்வீட்டு ரகசியங்கள் எல்லாம்....அவிட்டு விடுகிரியள் போல கிடக்குது!

கதையோட்டம்....வழமை போல....புத்தன் ஸ்டைல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும்  திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான்  வேலை.  வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம்  வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள்.  பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை.  பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள். 

பிரித்தானியாவிலும் இதே நிலைதான். ஆனால் சாப்பாட்டுக் கடைகளில் வேலை முடிய கூட்டம் அலை மோதுவதில்லை. ஒரு சில கடைகளில் மிகவும் மலிவாக இருந்தாலும் தரமான சாப்பாடு என்று சொல்வதிற்கில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.