Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்..👍

90520489_623688784876283_298514314564730

கோரோனோ - நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ரின் பீர்.☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இப்படி ஒரு காட்சியை மின்னேரிய சரணாலயத்தில் பார்த்து வீடியோவும் பிடித்து வைத்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நிம்மதி

உடலுக்கு உழைப்பு அவசியம்.
உடலுக்கு அமைதியையும்
மனதிற்கு உழைப்பையும்
தேடிக்கொண்டிருக்கின்றாயே மனிதா.


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, hat and closeup

எலிசபெத் மகாராணியின்... உடைக்கு ஏற்ற  நிறத்தில் உள்ள, கொரோனா முகமூடிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

whatsapp ல் வந்தது....

சீனாவில் தொடங்கி  இத்தாலி, ஸ்பெயின், ஐேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா வரை சென்ற கரோனா சீனாவின் அண்டை நாடான ரஷ்யா, பாக்கிஸ்தான், வியட்னாம், லாவோஸ் பூட்டான் கசகஸ்தான் மொங்கோலி மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை? ஏன்?

(தம்பி ஜெயாஸ் ராஜா எனது கடந்த பதிவில் இட்ட கருத்தோடு விரிவாக்கித் தருகின்றேன்.)

காரணம் இவை சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர். ஐரோப்பிய நாடுகள் கூட இங்குள்ள நிறுவனங்களை சீனர்கள் வாங்குவதற்கு பல தடைகளை கொண்டுவந்தனர்

சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் மிகமிகக் குறைவு. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது.

ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?

கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். 

அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில்,  தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.

கனடாவில் உள்ள ஓர் பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் திட்டம் களவாடப்பட்டதாகவும் இஸ்ரேலிய பிரான்ஸ் உளவுத்துறைகளினிடையே ஓர் செய்தியும் உண்டு. இச்செய்தி எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தெரியாது. ஆனால் சில நாட்களுக்கு முன், கரோனா வைரஸின் சூத்திரதாரிகளை நாம் கண்டறிவோம் என சூளுரைத்திருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்

காட்டுத்தீ போல் வூகானில்(Wuhan) பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங், Xiaogan, Xianning, Huanggang, Huangshi, Changsha, Hefai நகருக்குகளுக்கு  பரவாமலே ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது? 

முக்கியமாக ஸ்பெயின்,  இத்தாலிக்கு அளவுக்கதிகமாக பரவிய கரோனா கிறீக் நாட்டை சிறிதளவும் தாக்கவில்லையே!! கிறீக் இப்போது சீனா வசம். இவர்கள் நீண்ட கனவுகளில் உள்ளவை ஸ்பெயினும்,  இத்தாலியும்.

வூகானில் பரவிய கரோனா திடீரென சீனாவில் அடங்கியது எப்படி ?

கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார்?

அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ?

அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !

அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும். இதைத்தான் கிறீக் நாட்டின் பொருளாதாரம் விழுந்தநிலையில் இந்த யுக்தியை கையாண்டு முழுமையாக வெற்றிகண்டனர்

முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும். 

இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது. இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள். இலங்கையிலும் பல ஆபிரிக்க நாடுகளிலும் இந்த யுக்தியை பயன்படுத்தி முழு வளங்களையும் சுரண்டிக்கொண்டிருப்பதை நாம் காணமுடியும்

இந்தியாவில் செம்மரம் வெட்டப்பட்டு கப்பல் வழியாக கடத்தப்பட்டதும் தாது மணல் கடத்தப்பட்டதும் சீனாவிற்கு தான். இதுபோக பெரிய கும்பலை வைத்துக்கொண்டு உலகில் உள்ள பல அரிய விலங்குகளை கடத்தி கள்ளச்சந்தையில் அதை விற்பதும் சீனா தான்.

கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே? எப்படி ?

தொற்றுநோயை உருவாக்கிய சீனா, அதிசயமாக "மீண்டு" வந்துள்ளது, கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் இல்லை. இந்த நோய் குறித்த விளைவுகளையும் பீதியையும் உலகம் இப்போது உணரத் தொடங்குகிறது. முதலில் மீண்டது யார் ?? சீனாவே! இந்த வைரஸ் அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தத்தின் இழப்புக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கத்தின் நடவடிக்கை என்று தெரிகிறது. குறிக்கோள்: உலகை மந்தநிலைக்குள் தள்ளுவது !!!

காட்சி தெளிவாக இல்லையா? அவை ஏற்கனவே வளர்ந்து வருகின்றன! உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் மதிப்பிழந்த எல்லாவற்றையும் சீனா வாங்கியது ... அதனுடன் சீனாவில் இருக்கும் உலகளாவிய நிறுவனங்களின் உரிமையாளர்களாகவும், சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை பணம் இல்லாமல் சீனர்கள் உரிமையாளர்களாகவும் மாறுகின்ற நிலை இப்போது அங்கு உருவாகிவிட்டது.
இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?

இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் இறப்பு நிலையை அடையும். உயிர் கொடுக்க சீனர்கள் வருவார்கள். அதன்பின் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் நீண்ட திட்டம்.
சிலர் கேட்கலாம் பில் கேட்ஸ் ஏற்கனவே 2015 ல் இதை முன்னறிவித்தார். எனவே சீன நிகழ்ச்சி நிரல் உண்மையாக இருக்க முடியாது. விடை என்னவென்றால்,  ஆம், பில் கேட்ஸ் கணித்தார்..ஆனால் அந்த கணிப்பு உண்மையான வைரஸ் வெடிப்பை அடிப்படையாகக் கொண்டது. 

இப்போது சீனாவும் வைரஸ் முன்கூட்டியே கணிக்கப்பட்டதாகக் கூறுகிறது. அதனால் அதன் நிகழ்ச்சி நிரல் அந்த கணிப்புடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். கடுமையான பொருளாதார சுருக்கத்தின் விளிம்பை எதிர்கொள்ளும் நாடுகளிலிருந்து இப்போது பங்குகளை வாங்குவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதே சீனாவின் பார்வை. பின்னர் சீனா தங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வைரஸை அழிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததாக அறிவிக்கும். இப்போது சீனா தங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் மற்ற நாடுகளின் பங்குகளை வைத்திருக்கிறது, இந்த நாடுகள் விரைவில் தங்கள் எஜமானருக்கு அடிமையாகிவிடும் .

சற்று யோசித்துப் பாருங்கள் ...
உலகைக் கட்டுப்படுத்த சீனா ஒரு பெரிய திட்டமிட்ட விளையாட்டை விளையாடியதா? ஆம்.  இதைப் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

காட்சி 1
சீனா நோய்வாய்ப்பட்டு, ஒரு "நெருக்கடியில்" நுழைந்து அதன் வர்த்தகத்தை முடக்குகிறது.

காட்சி II
சீன நாணயம் மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எதுவும் செய்வதில்லை. 

காட்சி III
சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் நிறுவனங்களின் வர்த்தகம் இல்லாததால், அவற்றின் பங்குகள் அவற்றின் மதிப்பில் 40% வீழ்ச்சியடைகின்றன.

காட்சி IV
உலகம் மோசமாக உள்ளது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் 30-50 % பங்குகளை சீனா மிகக் குறைந்த விலையில் வாங்குகிறது.

காட்சி V
சீனா இந்த நோயைக் கட்டுப்படுத்தியுள்ளது மற்றும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவனங்களை வைத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 20,000 பில்லியன் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்று சீனா முடிவு செய்கிறார்கள். 

இதுதான் இவர்களது சீனாவை தளமாகக் கொண்ட ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரும் நிறுவனங்களை ஆட்டம் காணவைக்கும் திட்டம். இதை விரிவுபடுத்தி மற்றய நாடுகளிலும் அழகுபார்த்து குறுகிய காலத்தில் பல நிறுவனங்களை விழுங்கிக்கொள்வார்கள்.

இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER என்ற முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான்.
 
இதை ஆபிரிக்க நாடுகளில் நன்கு காணமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமோகமாய் முட்டை  சேகரிக்கும் அழகான பெட்டை. இயற்கையுடன் இணைந்த நிறைவான வாழ்வு......! 😁  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200326-182231.png

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

20200326-182231.png

 

சிரித்து... வயிறு நோகுது. :grin: :grin:
தமிழக அரசியல் மீம்ஸ் பகுதிக்காக...  இந்தப் படத்தை எடுக்கின்றேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவம் ஒரு பிரச்சினையே  இல்லை......கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cumbre del Clima 2019: ¿Qué es el Protocolo de Kioto? – GDS Noticias

சத்தியம் பொய்யாகும்!
 தருமம் தலைசாயும்!
அறநெறிகள் அலைமோதும்! 
அதர்மம் அரசாளும்!
பருவ நிலை மாறும்! 
பசுமைக்குப் பஞ்சம் வரும்!
வறுமை சதிராடும்! 
மண்ணுலகே நரகாகும்!

அது முத்திய கலியின் அடையாளம்!
அதன் முடிவே கல்கி அவதாரம்!

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்!
என்னும் நிலைமை வரும்-அது
பிஞ்சுக் குழந்தைகள் உண்ணும் உணவிலும்
பெரிதும் கலந்து விடும்!⁠
அருந்தும் மருந்தில் நஞ்சைக் கலக்கி
அழகுச் சிமிழில் அடைத்து மயக்கி
விற்பனை செய்பவர் வளமடைவார்-பெரும்
வியாபாரிகள் எனும் பெயரடைவார்!
மானாட்டம் மயிலாட்டம் மலராட்டம் கொடியாட்டம்
மகிழ்வூட்டும் பரதக்கலை-கண் வழியே
மனங்காட்டும் புனிதக்கலை-மாறி
நாயாட்டம் பேயாட்டம் நரியாட்டம் கரியாட்டம்
வெறியூட்டும் அங்கங்களைத்-தெளிவாக
வெளிக்காட்டும் புதியகலை!

   sticker_13778495_22233958

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக குரங்குகள் எப்போதும் தன் குட்டியை தன்னுடனேயே வைத்திருக்கும்....மனிதர்களிடம் கொடுக்காது.இங்கு ஒரு குரங்கு தன் குட்டியை இந்தத் தாயிடம் குடுத்து வாங்குது."அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்"  🐒 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

இதுக்கும் கொர்னோவுக்கும்  சுடுதண்ணிதான் மருந்து .வீட்டில் இருந்தால் கண்டதையும் சாப்பிட சொல்லும் கொரனோ  கலவரம் முடிய வீட்டு வாசலால் வரக்கூடியமாதிரி  அளவு இருக்கனும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

இது, அண்ணையின்  கைப்பக்குவம்.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂 அண்ணை போர்டர் (குசினி) க்ரோஸ் பண்ணமாட்டாரே ?

Edited by nilmini
text
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி ...

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

ஓஓஓ
நம்பீட்டன்.
ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

4 சில்லு குழல் புட்டை ஒரே அமுக்காய் அமுக்கி விட்டன்.
 இப்ப கோழி விழுங்கின சாரைப்பாம்பு மாதிரி அசையேலாமல் அரக்கேலாமல் இருக்கிறன்.🙃

 

8 hours ago, பெருமாள் said:

இதுக்கும் கொர்னோவுக்கும்  சுடுதண்ணிதான் மருந்து .வீட்டில் இருந்தால் கண்டதையும் சாப்பிட சொல்லும் கொரனோ  கலவரம் முடிய வீட்டு வாசலால் வரக்கூடியமாதிரி  அளவு இருக்கனும் . 

எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட  கொண்டுவந்து  தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல்  மீ  ப்ளீஸ் .....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

எனக்கு ஒரு சந்தேகம், சுடுதண்ணிய கொதிக்க கொதிக்க கேத்திலோட  கொண்டுவந்து  தலையில ஊத்தணுமா அல்லது தொண்டையில் ஊத்தணுமா டெல்  மீ  ப்ளீஸ் .....!  🤔

தொண்டையிலை ஊத்துனா கொர்னோவை  அழித்த  மனிதர் என்ற பெயர் எடுக்கலாம் தலையில ஊத்துற வேலையை வீட்டுக்காரம்மா பார்த்துக்கொள்ளுவாங்க வீட்டுக்கு வீடு  வாசல்படியுங்க .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

புட்டும் கடலை கறியும் விளாசுது . அண்ணி நல்லா சமைப்பா போல தெரியுது.

அம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..😁
 

8 hours ago, தமிழ் சிறி said:

இது, அண்ணையின்  கைப்பக்குவம்.  :grin:

பிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி. 🕵🏾‍♂️
மேசன் வேலை எல்லாம் அவையள்.👩🏾‍🍳

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.