சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. இதனிடையே ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியில் கடன் திட்டத்துடன் சீனாவிற்கு நிதி வழங்க உலக வங்கி சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்; அமெரிக்க வரி பணத்தை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார நாடுகளுக்கு உலக வங்கி கடன் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் என அமெரிக்க பொருளாதார விவகாரத்துறை முன்னாள் அதிகாரி டேவிட் மால்பாஸ் தலைமையில் செயல்படும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏற்கெனவே சீனாவுக்கு கடன் அளிப்பது பலமடங்கு குறைந்து விட்டது. வரும் காலத்தில் மேலும் அது குறைக்கப்படும் என கூறியுள்ளது. மேலும் வளர்ந்து விட்ட நாடுகளுக்கு கடனை நிறுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547104
என்ன இப்படி சொல்லிப்போட்டியல்;சென்ற வருடம் புலிகளை ஆதரித்த வழக்கில் எங்க கலா அக்காவே கைதாகி ....மிக வேகமாக விடுதலையாகி உலக சாதனை படைச்சவவெல்லே .....!!!!!!
பொலிசார் சொல்வதில் உண்மையில்லை – மறுக்கிறது மாணவர் ஒன்றியம் !
மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓடியதனாலேயே அத்துமீறி உள்நுழைந்ததாகப் பொலிசார் சொல்வதில் உண்மையில்லை என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில்; மோட்டார் சைக்கிளில் வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், போக்குவரத்துப் பொலிசாரும் தேடிக் கொண்டு வந்து, யாழ். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறாமல் – அத்துமீறி உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய படையினர் எக் காரணம் கொண்டும், அனுமதி பெறாமல் உள்ளே வருவதில்லை. இன்றைய தினம் மாணவர்கள் இருவரை வீதியிலிருந்து கலைத்துக் கொண்டு வந்து வளாகத்தினுள் வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கியைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர்.
அத்துமீறி உள் நுழைந்ததைத் திசை திருப்பும் வகையிலேயே மாணவர்கள் மது போதையில் இருந்ததாகப் பொலிசார் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
https://www.virakesari.lk/article/70695