"கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவது சர்வதேசத்தின் கண்களை அதிகம் உறுத்தத் தொடங்கியிருக்கின்றது."
கோத்தாவின் ஆட்சியில் மகிந்தாவின் தாக்கம் இருக்கும், இராணுவம் / புலநாய்வை தவிர ( காரணம் தானே அதை சிறப்பாக செய்ய முடியும் என எண்ணுகிறார்).
அடுத்த ஐந்தாண்டுகள் மட்டும்தானா இல்லை அதையும் கடந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரியணையில் இவர்கள் இருந்தால் அது சீனா சார்பாக மாறிவிடும் என்ற பயமே அதிகமாக இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் இருக்கும்.
"ஆனால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அந்த ராஜதந்திர விலக்குரிமையை நிராகரித்தே தீர்ப்பை அளித்திருக்கிறது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது."
பொதுவாக ராஜதந்திர விலக்குரிமையை மீற முடியாது. ஏற்கனவே ஒரு பிரித்தானிய சிங்களவர் அபராத பணத்தை செலுத்து முன்வந்துள்ள நிலைமையிலும் இந்த சிங்கள போர்குற்றவாளிக்கு உயர்பதவியை கொடுத்து சர்வதேசத்தின் முகத்தில் மீண்டும் கரியை சிங்களம் பூசிய நிலையிலும் - இந்த விடயம் அமைதியாக மறந்து போய்விடலாம் ..,... ஆனால் பிரித்தானிய வாழ் தமிழர்களும் அவர்கள் தம் அரசியல் பலத்தாலும் அழுத்தங்களை பிரயோகிக்கலாம்.