Jump to content

வெஜிடபிள் பிரியாணி


Recommended Posts

வெஜிடபிள் பிரியாணி

 
 
 
2015-01-16%2B13.40.51.jpg
 
தேவையான பொருட்கள்;
முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய:
அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்டு+அன்னாசிப்பூ  1+ நட்சத்திர மொக்கு பாதி + சோம்பு 2 டீஸ்பூன்+பிரியாணி இலை 2 சேர்த்து நன்கு வதக்கவும்.
2015-01-16%2B07.58.33.jpg
 
 
அத்துடன் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு பெரிய தக்காளி, தலா ஒரு கைப்பிடி,மல்லி,புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
 
 
2015-01-16%2B08.01.12.jpg
 இஞ்சி பூண்டும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். எனக்கு பிரியாணி தாளிக்கும் பொழுது வெங்காயத்துடன் வதக்க விருப்பம் .அதனால் இங்கு சேர்க்கவில்லை. சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
2015-01-16%2B08.02.16.jpg
 
நன்கு வதங்கிய பின்பு  ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரைடீஸ்பூன் சீரகத்தூள் ,அரைடீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 2015-01-16%2B08.04.07.jpg
 நன்கு பிரட்டி அடுப்பை சிம்மில் வைத்து வதங்க விடவும்.
 
 
2015-01-16%2B08.07.26.jpg
 வதங்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விடவும்.
2015-01-16%2B08.19.57.jpg
 ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
2015-01-16%2B08.32.14.jpg
பிரியாணி மசாலா பேஸ்ட் ரெடியாகிவிட்டது.இப்படி பேஸ்ட் செய்து ரெடியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் எந்த வகை பிரியாணியும் செய்யலாம்.

காய்கறி பிரியாணி செய்ய மற்ற தேவையான பொருட்கள்;
2015-01-16%2B10.27.25.jpg

பாசுமதி அல்லது சீரக சம்பா - 2 கப்
காய்கறி - கேரட்- 1,உருளைக்கிழங்கு - 1,பீன்ஸ் - 15 எண்ணம், உரித்த பச்சை பட்டாணி - ஒரு கையளவு
பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 -5  டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை - சிறியது 1
பச்சை மிளகாய் - 2  நீள்வாக்கில் நறுக்கியது.
நறுக்கிய மல்லி புதினா சிறிது -
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
நெய் -1- 2  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரிசியை ஊற வைக்கவும்.காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
பிரியாணி செய்முறை:
 
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.
2015-01-16%2B10.26.31.jpg
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
2015-01-16%2B10.26.49.jpg
நன்கு வதக்கவும்.
 
 
2015-01-16%2B10.29.11.jpg
 
 
நறுக்கி தயாராக உள்ள காய்கறிகள் போடவும்.
2015-01-16%2B10.30.24.jpg
ஒரு சேர பிரட்டி மூடி போட்டு வேக விடவும்.
2015-01-16%2B10.32.58.jpg
பாதி வெந்து வரும் பொழுது பிரியாணி மசாலா சேர்க்கவும்.
2015-01-16%2B10.34.02.jpg
நன்கு கொதிக்கட்டும்.
2015-01-16%2B10.34.38.jpg
தயிர் சேர்க்கவும்.
2015-01-16%2B10.35.21.jpg
நன்கு கலந்து விடவும்.
2015-01-16%2B10.37.05.jpg
தண்ணீர் வடித்து விட்டு ஊறிய அரிசி சேர்த்து நன்கு பிரட்டவும்.
2015-01-16%2B10.37.50.jpg
அரிசி அளவிற்கு இரண்டு அளவு கொதி நீர் விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
2015-01-16%2B10.41.33.jpg
மூடி மீடியமாக நெருப்பை எரிய விடவும்.அரிசி மலர்ந்து தண்ணீர் வற்றி வரும்.எலுமிச்சை பிழியவும்.
2015-01-16%2B10.48.07.jpg
நறுக்கிய மல்லி புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
 
மேலே நெய் சேர்க்கவும்.
2015-01-16%2B10.49.32.jpg
 
2015-01-16%2B10.51.40.jpg
மூடி 10 நிமிடம் சிம்மில் தம் செய்யவும். அடுப்பை அணைக்கவும்.
 
மீண்டும் 10 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி பரிமாறவும்.உடனே திறக்கக் கூடாது.
2015-01-16%2B11.22.04.jpg
 
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெடி. ஜம்மென்று இருக்கும்.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி பேஸ்ட் தயாரிக்கும் முறை சூப்பர்....!பிரியாணியும் நல்லாத்தான் இருக்கு என்றாலும் மேலே கொஞ்சம் கஜு , பிளம்ஸ் சேர்ந்தால்தான் ஒரு பிரியாணி எபெக்ட் கிடைக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.