Jump to content

தாரா வளர்ப்பில் சாதிக்கும் யாழ்ப்பாண இளம்பெண்


Recommended Posts

தாரா வளர்ப்பில் சாதிக்கும்  யாழ்ப்பாண இளம்பெண்

 

               
20170916_145035.jpg

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்.  வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார்.  அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

 இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும்  ஸ்ராலினியுடன் பேசியபோது,

2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை நாட்டப்பட்டது. அங்கு பல புதிய வர்த்தக முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமான முதலீட்டாளர்களையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.  இங்கே எப்படி பரவலாக கோழி இறைச்சி விற்கப்படுகிறதோ அதே போல் அங்கே உள்ள பெரும்பாலான கடைகளில் தாரா இறைச்சி விற்கப்படுகிறது. தாரா இறைச்சியின் சுவையும், போசணைப் பெறுமானமும் நன்றாகவே இருந்தன. தாரா இறைச்சி ஏன் எங்கள் பகுதிகளில் இல்லை என எனக்குள்ளே கேள்வி தோன்றியது. அதனை ஏன் சிறு தொழில் முயற்சியாக ஆரம்பிக்கக் கூடாது என்று யோசித்தேன்.
20170916_153825.jpg

எனக்கு சுவடிகள் நிறுவனத்தை சேர்ந்த வைத்தியர் நடராஜா பிரபுவும், கணேசமூர்த்தி ஸ்ரீபவனும் சரியானதொரு வழிகாட்டிகளாக இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையின் பேரில் 2016 ஆனி மாதம் ஐந்து சோடி தாராக்களுடன் தாராப் பண்ணையை கொக்குவில் பொற்பதி பிரதேசத்தில் ஆரம்பித்தேன். எனக்கு இந்த தொழில் முயற்சி பெரும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஏனெனில், எமது மக்கள் தாரா இறைச்சி, முட்டைகளை பெரும்பாலும் உணவுத் தேவைக்கு பயன்படுத்தாத சூழலே இருந்தது. மக்களுக்கு தாரா இறைச்சி மற்றும் முட்டை நல்ல போசனைப் பெறுமானங்கள் நிறைந்தது என விழிப்பூட்ட துண்டுப் பிரசுரங்கள் மூலம் முயற்சித்தோம். அது நல்ல பலனை அளித்தது. கிட்டுப் பூங்காவில் நடந்த சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் காட்சிக் கூடமொன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட முடிந்தது.
20170916_153909.jpg

 இப்போது ஓரளவு தாரா இறைச்சி நுகர்வு எம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தாரா முட்டைகளை அழகுசாதன தேவைக்காக இங்கே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக தாராக்கள் குறித்து எம்மக்களிடையே சில கருத்துக்கள் உண்டு. ஒன்று, தாரா முட்டை சரியான வெடுக்கு என்று சொல்வார்கள். அவர்கள் சொல்கிற அளவுக்கு தாரா முட்டை வெடுக்கு கிடையாது.

இரண்டாவது, தாராக்கள் வளர்ப்பதற்கு குளம் அல்லது நீர்நிலை ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது. நான் கோழிக் கூடுகள் போன்ற நிலக் கூடுகளுக்குள் வைத்து தான் கடந்த ஒன்றரை வருடங்களாக தாரா வளர்த்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லாமல் வளர்ந்து வருகிறது. நீர்நிலை அவசியமல்ல. இருந்தால் நல்லது.

மூன்றாவது தாராக்களுக்கு சாப்பாட்டு செலவு கூடுதலாக இருக்கும் என்பது. நான் பெரிதாக எந்த செலவும் இல்லாமல் தான் தாரா வளர்த்து வருகிறேன். மூன்று திருமண மண்டபங்களில் ஓடர் கொடுத்துள்ளேன். அங்கே வீணாகும் சாப்பாடுகளை வாங்கி வந்து தான் தாராக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். இது தவிர அசோலாக்களையும், மண்புழுக்களையும்  வளர்த்து தாராக்களுக்கு உணவாக்கி வருகிறேன்.

 தாராக்களை மூன்று நிலைகளில் விற்பனை செய்து வருகிறேன். தாராக் குஞ்சு ஒருசோடி 450 ரூபாய்க்கும், 3 மாதம் நிரம்பிய தாராக்கள் ஒரு சோடி - 1400 ரூபாய்க்கும், பெரிய தாராக்கள் 3500 ரூபாய்க்கும் விற்று வருகிறேன். என் போன்ற தாரா வளர்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு தாரா வளர்ப்பு முறைகளை சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏற்கனவே சில இடங்களில் என்னிடம் தாரா வாங்கி வளர்ப்பை சிலர் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் சந்தை வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.
20170916_144948.jpg

தாரா வளர்ப்பு மட்டுமல்ல தாரா முட்டை மா என்கிற சத்து மாவையும் உற்பத்தி செய்து வருகிறேன். வல்லாரையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன். அத்தோடு கத்தாழை நாற்றுக்களையும் விற்பனை செய்கிறேன். முருங்கை கன்றுகளை வளர்க்கும் நோக்கமும் எதிர்காலத்தில் இருக்கிறது.  இவையெல்லாவற்றையும் தாண்டி சுவடி அமைப்பின் கல்வி நிறுவனமூடாக சின்னம் சிறார்களுக்கு ஆங்கில மொழியையும் கற்பித்து வருகிறேன், என்றார்.

இன்று வேலையில்லா பட்டதாரிகள் பலர் அரசாங்க வேலைக்கு மட்டுமே விண்ணப்பித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முற்றுமுழுதாக தன் உழைப்பை நம்பி புதிய முயற்சிகளை செய்யும் இளையோரை ஊக்குவிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.  வறுமையான தச்சுத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த ஸ்ராலினி இன்று  24 வயதிலேயே இந்த நிலைக்கு முன்னேறி இருப்பது ஏனையவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
 
தீசன்-
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

http://www.nimirvu.org/2017/10/blog-post_31.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல வசதிகளும் கொண்ட வெளிநாடுகளில் வாழ்ந்தும் வேலை வெட்டிக்குபோகாமலிருக்கும் ஆண்கள் வாழும் நம்மினத்தில்தான், அடிபடை வசதிகளே குறைவான தேசத்தில் வாழ்ந்தாலும் புதிதாய் தொழிற்முயற்சிகளை கண்டுபிடிக்கும் இந்த பெண்களும் இருக்கிறார்கள்! நயன்தாரா ஒன்றும் பெரிய அழகில்லை, நீங்க வளர்க்கிற தாராதான் அழகு!

Link to comment
Share on other sites

  • 1 year later...

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமது வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வடக்குமாகாண பெண்கள் முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறு சுயதொழில் முயற்சிகளில் வடக்கு மாகாணத்தில் ஈடுபடுகின்ற பெண்கள் பலரும் சாதித்து வருவதுடன் ஏனைய பல பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு சிறந்த எடுத்தக்காட்டாக யாழ்ப்பாணம் மாவட்டம் பண்டத்தரிப்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ராலினி தனி ஒரு பெண்ணாக வாத்து பண்ணை ஆரம்பித்து இயற்கை விவசாயத்தை ஊக்கிவித்து வருகிறார்

வணிக மேலாண்மை கல்வி பயின்றுள்ள இவர், வங்கியில் கிடைத்த வேலையினை தவிர்த்துவிட்டு வாத்துப்பண்ணை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

தனது வாத்துப் பண்ணை மற்றும் இயற்கை விவசாயம் பற்றி பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார் ஸ்ராலினி.

à®à®²à®à¯à®à¯ à®à®³à¯à®¨à®¾à®à¯à®à¯ பà¯à®°à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®£à¯à® à®à®°à¯ பà¯à®£à¯à®£à®¿à®©à¯ வà¯à®±à¯à®±à®¿ à®à®¤à¯

"வணிக மேலாண்மையில் எனது உயர்தர கல்வியினை முடித்த பின்னர், 2016ஆம் ஆண்டு வாத்து பண்ணையினை ஆரம்பித்தேன். கொக்குவில் பொற்பதி பகுதியில் எனது பண்ணை அமைந்துள்ளது. உண்மையில் வாத்து வளர்ப்பு என்பது மிகவும் இலகுவான ஒன்றாகும். இயற்கையாக வளரக்கூடடிய அசோலா என்கின்ற பாசியினத்தை நான் வளர்த்து அதற்கு உணவளிக்கிறேன். அதே நேரம் கடைகளில் கிடைக்கும் உணவுகள் மற்றும் மரக்கறிக் கழிவுகள் என்பன வாத்துகளுக்கு உணவாக வழங்கலாம்."

"வாத்து என்பது எல்லா காலநிலைக்கும் ஏற்றவாறு வாழக்கூடியது. நாம் கோழிகளை எடுத்துக்கொண்டால் மழைகாலத்தில் தொடர்ந்து உயிரிழக்கும். ஆனால் வாத்து அவ்வாறு நோய் வாய்ப்படுவதில்லை. அதே நேரம் மழை, வெயில் மற்றும் குளிர் என எல்லா காலங்களிலும் வாத்துகள் உயிர்வாழும்."

"நான் வாத்து வளர்ப்பினை தேர்வு செய்ததன் காரணம் என்னவென்றால், கோழி வளர்ப்பில் ஏற்படும் பாதக தன்மையினை நிவர்த்தி செய்யும் முகமாக தான் நான் வாத்து வளர்ப்பில் ஈடுபட்டேன். உதாரணமாக கோழிவளர்ப்பு என்பது நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் வைத்து பார்ப்பது போன்றதாகும், ஆனால் வாத்து வளர்ப்பில் குஞ்சு பொரிச்சு வளர்ந்து இறைச்சியாகும் வரையில் நோய் ஏற்படாது மருந்துகள் கொடுக்கும் தேவை இருக்காது. வாத்து இறைச்சி முட்டைக்கு தற்போது மிகுந்த தேவையுள்ளது. 600ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரையில் லாபம் வழங்கக்கூடியதாக உள்ளது."

"நான் முழுக்க முழுக்க இயற்கை உணவுகளை வாத்துகளுக்கு வழங்குகிறேன். தாரா முட்டையினை அழகுகலை தொழில் சார் கலைஞர்களும் வாங்குகின்றனர் அதனைவிட தலைக்குக்கும் பயன்படுத்துகின்றனர். கோழி முட்டை 2 இன் சத்து தாரா முட்டை ஒன்றில் உள்ளது."

à®à®²à®à¯à®à¯ à®à®³à¯à®¨à®¾à®à¯à®à¯ பà¯à®°à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®®à¯à®£à¯à® à®à®°à¯ பà¯à®£à¯à®£à®¿à®©à¯ வà¯à®±à¯à®±à®¿ à®à®¤à¯

சீருயிர் என்ற எனது இந்த பண்ணையின் நோக்கம் ஒரு பண்ணையாளர் தனது விலங்குகளுக்கு இயற்கையான உணவுகளை எவ்வாறு உற்பத்தி செய்து வழங்குவது என்ற விடயத்தை பரப்புவதாகும்.

நான் வாத்து வளர்ப்புடன் நின்றுவிடாது ஆடு வளர்ப்பு முயற்சியுடன் இயற்கை பூச்சிக் கொல்லி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முயற்சியும் ஆரம்பித்துள்ளேன். இயற்கை பசலை ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்தது என்றால், வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இரசாயணம் விசிறும் மரக்கறிகளை பயன்படுத்துகிறோம். ஆனால் சில விவசாயிகள் மக்கள் நலன் கருதி இயற்கை விவசாய முறையினை பின்பற்றுகின்றனர் அவர்களுக்கு இருக்கின்ற பிரச்சினை இயற்கையான கரசல்கள் மற்றும் பசலைகள் கிடைக்கப்பெறாமை அதை நான் கவனத்தில் கொண்டு அந்த உற்பத்திகளை செய்து வழங்குகின்றேன்.

வேப்பிலை கரைசல், உள்ளிக் கரைசல் என பலவகையான கரைசல்கள் அதாவது ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையான பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக பூச்சி பிரச்சனை உள்ளது என்றால் நாம் இரசாயன மருந்துகளை வாங்கி பயன்படுத்தாமல் இவ்வாறு இயற்கை கரைசல்களை பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் தற்போது நாம் சமூகத்தில் அருகிவரும் கற்றாழை, புதினா, சிறுகுறிஞ்சா, வல்லாரை போன்ற மூலிகைகளை தேடி எடுத்து அதனை வளர்த்து விற்பனை செய்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் நிறைய பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சில பெண்கள் அவர்களுடைய பட்டப்படிப்பினை முடித்து வேலையின்றி உள்ளனர். அவர்கள் எதற்கும் கவலைப்படாது எங்களால் எதையும் சாதிக்கமுடியும் என நினைத்து முயற்சித்தால் வெற்றியடையாலாம். இவ்வாறு நாமே முன்வந்து நமது சிந்தனைக்குரிய தொழில் செய்தால் கட்டாயம் அதில் நாம் சாதிக்கமுடியும்.

இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் வெற்றி கதை

நான் வாத்து பண்ணை ஆரம்பிக்கும் போது வங்கியில் சிறிய கடன் பெற்றுதான் ஆரம்பித்தேன். இது போன்று பிற பெண்களும் சுய தொழில் தொடங்கும் போது அரச தினைக்களங்களும் வங்கிகளும் உதவி செய்தால் அவர்களை ஊக்கிவிப்பதாக அமையும். குறைந்த வட்டி வீதங்களில் நுன்கடன்களை வழங்கவேண்டும். எனக்கு வங்கி, அரசதினைக்களங்கள், புனர்வாழ்வு அமைச்சகம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உதவிகளை பெற்று எனது நிறுவனத்தை நான் விஸ்தரித்தேன் என்கிறார் ஸ்ராலினி.

இலங்கை உள்நாட்டு போரிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் வெற்றி கதை

நான் இந்த பண்ணையினை ஆரம்பிக்கும் போது எனது வீட்டின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தேன். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை செய்யவேண்டும் என வற்புறுத்தும் பெற்றோருக்கு மத்தியில் எனது தாய் தந்தை எனது இந்த முயற்சிக்கு ஆதரவு தந்தார்கள். எனக்கு வங்கியில் வேலை கிடைத்தும் அதனை தவிர்த்து இந்த பண்ணையினை ஆரம்பித்தேன்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48723878

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.