Jump to content

சென்னையில் ஈரடுக்குச் சாலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஈரடுக்குச் சாலை..

double%20decker

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் ஒரு பகுதி, அடுக்குச் சாலையின் மீது தரமணியிலிருந்து சிறுசேரி வரை 17.2 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவிருக்கிறது.

பழைய மகாபலிபுரம் சாலை, ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’யாக, 2000-களின் தொடக்கத்தில் மாறிய பிறகு, சென்னை நகரம் தன்னை மெட்ரோ நகரமாகப் புதுப்பித்துகொண்டிருக்கிறது.

ஏற்கெனவே நெரிசலாக இருக்கும் ஆறு-வழி ‘ஐடி எக்ஸ்பிரஸ்வே’ இப்போது எதிர்காலத்துக்கான சாலையாக மாறவிருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், நான்கு வழி அடுக்குச் சாலையின் மேல் மெட்ரோ ரயிலின் உயர்தடம் அமைக்கப்படும். தரமணியிலிருந்து சிறுசேரிவரையிலான 17 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தத் தடம் ‘எக்ஸ்பிரஸ்வே’-யில் அமைக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), தமிழ்நாடு சாலை வளர்ச்சி நிறுவனம் (TNRDC) என்ற இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்குப் பிறகு இந்த உள்கட்டமைப்புத் திட்டம் உருவாகியிருக்கிறது.

இந்த அடுக்குச் சாலையின் முதல் கட்டம், ‘எஸ்.ஆர்.பி. டூல்ஸ்’ சந்திப்பிலிருந்து சிறுசேரிவரை, 5.5 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தச் சாலையில் மேலடுக்கில் 4.5 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் தடம் அமையவிருக்கிறது. சுங்க வசதியுடன் 2008-ம் ஆண்டு டிசம்பரிலிருந்து செயல்படும் இந்த ஆறு வழி சாலையில், நாள் ஒன்றுக்குச் சுமார் 63,000 வாகனங்கள் கடந்துசென்றன. தற்போது இந்தச் சாலையில் தினசரி 1.30 லட்சம் வாகனங்கள் கடந்துசெல்கின்றன.

இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளுக்குமுன் முன்வைக்கப்பட்டது என்று ‘டிஎன்ஆர்டிசி’ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தைப் பற்றிய விரிவான அறிக்கை மாநில அரசுக்குத் தாக்கல்செய்யப்பட்டது. நிதி ஆதாரம் திரட்டும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டிருக்கிறது.

இரண்டு திட்டங்களில் முதலில் 17.2 கிலோமீட்டர் நீளம் இருக்கும் அடுக்குச் சாலை முதலில் தொடங்கப்படவிருக்கிறது. இந்தத் திட்டம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம். “சாலையில் அதிக இடத்தைக் கட்டுமானத்துக்காக எடுத்துகொள்ள முடியாது. அதனால், கூடுமானவரை கட்டுமான நேரத்தைக் குறைப்பதற்காக முன்னதாக வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் ‘டிஎன்ஆர்டிசி’ அதிகாரி ஒருவர்.

இந்த அடுக்குத் தடத்தை ஆறு-வழி சாலையில் திட்டமிடக் காரணம் அதன் அகலம்தான் என்கின்றனர் சி.எம்.ஆர்.எல். அதிகாரிகள். இதனால் கட்டுமானத்தை முடிப்பது எளிமையாக இருக்கும் என்று சொல்கின்றனர் அவர்கள். இந்தப் பாதை 22 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. டைடல் பார்க், பெருங்குடி, ஒக்கியம்பேட்டை, இன்ஃபோசிஸ், சத்யபாமா பல்கலைக்கழகம், சிறுசேரி, சிப்காட் உள்ளிட்ட 22 நிலையங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

“இந்தத் தடத்தில் ஐடி துறையினர் அதிகமாகப் பயணிக்கின்றனர். அதனால், இந்தத் திட்டத்தை இரண்டாம் கட்டமாகத் தொடங்கவிருக்கிறோம்” என்று சொல்கிறார் அதிகாரி ஒருவர்.

குறுகிய காலத் தீர்வுகள்:

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டத் திட்டத்திலும் ஒரு மேம்பாலம் வடபழனி வழியாக அமைக்கப்பட்டது. இதை முடிப்பதற்கு ஆறு ஆண்டுகளானது. “இந்த மாதிரி திட்டங்களை முடிப்பதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும். சென்னை மெட்ரோ ரயில் வெற்றிபெறுவதற்குப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி முக்கியம். போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி இல்லாத மெட்ரோ ரயிலின் தேவை குறைவானதாக இருக்கும். ஏனென்றால், இந்தத் திட்டத்தை முடிக்க நீண்டகாலம் ஆகும். அதனால், குறுகிய காலத்துக்கு, விரைவுப் பேருந்து சேவை செலவு குறைந்த தீர்வாக இருக்கும்” என்று சொல்கிறார் ஐஐடி-மெட்ராஸ் போக்குவரத்துப் பொறியியல் துறை பேராசிரியர் கீதாகிருஷ்ணன் ராமதுரை.

“ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைப்பதற்குச் சரியான சாலைகள் இல்லை. ‘ஓ.எம்.ஆர்.’ போக்குவரத்து நெரிசலை இந்தச் சாலைக் கட்டுப்படுத்தும். சிறிய உட்சாலைகளைப் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும்தான் கிழக்குக் கடற்கரை சாலைக்குச் செல்ல இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்” என்கிறார் போக்குவரத்தைத் திட்டமிடுபவர் ஒருவர். இந்தச் சாலையில் கட்டமைப்பு வளர்ச்சி இல்லாததால் வாகனங்கள் முக்கிய ‘கேரேஜ்வே’, ‘சர்வீஸ்’-வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

தி இந்து

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.