Jump to content

மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி?


Recommended Posts

மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி?

 

மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி?

தீரன்
நடைபெறவுள்ள தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கி மிக மோசமான சரிவைச் சந்திக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தமிழரசுக் கட்சி தோல்வியை சந்திக்குமா? என்ற கேள்விக்கு அப்பால் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் இம்முறை பாரிய சரிவைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதன் ஆதரவாளர்கள் மற்று பொது மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உட்கட்சி பூசல்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் அதிகாரம் இரண்டு பேரிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் ஏனையவர்களை கலந்தாலோசிப்பதோ அல்லது மதித்து நடப்பதோ இல்லை என்ற கருத்து வேறுபாடுகள் அதிகரித்து காணப்படுகிறது. TNA BAtticaloa

குறிப்பாக இவர்கள் இருவரும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்கு அப்பால் தங்களுடைய ஆதரவு தளத்தை அதிகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக செயற்படுகின்றனர். இதில் மிக முக்கியமானவர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றையவர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இவர்கள் இருவரின் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

உட்கட்சி ஜனநாயகம் இன்றி ஒருமித்து செயற்படாது நான் பெரிது நீ பெரிது என்ற மமதையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதும் ஒருவரை பற்றி ஒருவர் சம்பந்தனிடம் போட்டுக் கொடுப்பதுமே உட்கட்சி ஜனநாயகமாக உள்ளது.

கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படும் யோகேஸ்வரன்!

தமிழரசுக் கட்சியில் இருந்து மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஓரங்கட்டப்படுகின்றார்.

யோகேஸ்வரன் அவர்களை கட்சியின் தலைமையிடம் இருந்து பிரிப்பதற்கு துரைராஜசிங்கம் மற்றும் சிறினேசன் ஆகிய இருவருமே காரணம் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பல தீர்மானம் மிக்க விடயங்களில் யோகேஸ்வரன், வியாளேந்திரன் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டு சிறிநேசனின் தன்னிச்சையான முடிவுகள் பல அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கிய காரணமாக யோகேஸ்வரன் இந்து குருக்கள் என்பதும் அவர் இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார் என்பதற்காக  யோகேஸ்வரனை ஒதுக்கி செயற்படுகின்றார்கள். மட்டக்களப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் அவர்களை அதே கட்சியை சேர்ந்தவர்கள் மதவாதி என வெளிப்படையாக ஊடகங்களில் விமர்சிக்கும் அளவுக்கு யோகேஸ்வரன் குறித்த தவறான அறிவூட்டல்களை தமிழரசு கட்சி தலைவர்களிடம்  விதைத்தது யார்? என்பது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

யோகேஸ்வரன் தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என சம்பந்தன் அவர்களிடம் கூறி யோகேஸ்வரனை மதவாதியாக காட்டி சம்பந்தனிடம் நெருங்கவிடாது தடுப்பது யார்? என்பதும் அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண கட்சி தொண்டனுக்கு நிலமை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் சாதனை?
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் சாதனை என்பது துரைராஜசிங்கம் அவர்களின் சாதனையே. தமிழரசுக் கட்சியின் செயலாளரான துரைராஜசிங்கம் அவர்கள் அரசாங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.

அதாவது தமிழ் இளைஞர்கள் கட்டமைப்பு ரீதியாக வளர்ச்சி அடையக் கூடாது, தாங்கள் விடும் தவறுகளை தட்டிக் கேட்க கூடாது, தங்களுக்கு மேலான தலைமைத்துவம் வளர்ச்சி பெற கூடாது என்பதில் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டவர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஐயா அவர்கள்.

இதனால் அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சேயோனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இளைஞர் அணியின் செயற்பாடுகளை முடக்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயற்பாடுகள் பூச்சியமாகவே அமைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் துரைராஜசிங்கம் ஐயாவின் இராஜதந்திரமே.

கதிரைக்காக காத்திருக்கும் ஊமைகள்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியில் சீட் வாங்குவது என்றால் அது யுத்த நேரத்தில் இராணுவத்திடம் பாஸ் வாங்குவதை விட மோசமானது. இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக வருபவர்களை தீர்மானிக்கும் சர்வாதிகாரம் அதன் செயலாளர் துரைராஜசிங்கம் ஐயாவிடமே உள்ளது. tna_vantharumulai_visit

கட்சியில் என்னதான் தீர்மானங்கள் எடுத்தாலும் துரைராஜசிங்கம் ஐயாவினை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் கனவு நிறைவேறாது என்பதால் கட்சியில் கடந்த காலங்களில் வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கின்றனர். அவர்கள் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்தோ தன்னிச்சையான முடிவுகள் குறித்தோ தவறான செயற்பாடுகள் குறித்தோ விமர்சித்தால் தமக்கு கட்சியில் சீட் கிடைக்காது என்று கருதி இன்று வரை ஊமையாகவே உள்ளனர் .

கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கங்கள், தமிழரசுக் கட்சிக்காக காலம் காலமாக அடிமாடாய் உழைத்த தொண்டர்கள் , ஆதரவாளர்களின் கருத்துக்கள் எதிர்பார்ப்புக்கள் கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்காக புறக்கணிக்கப் படுவதாகவும் தங்களை எதிர்கட்சியில் இருந்து தாக்கியவர்களை தங்களது கட்சி தற்போது வேட்பாளர்களாக இணைத்துள்ளதாகவும் ஆதங்கப்படுகின்றனர்.

இதைவிட கட்சியில் மிக நீண்ட காலமாக இருந்து செயற்பட்ட மூத்தவர்களின் கருத்துக்கு கட்சி தலைமைகள் மதிப்பளிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட சிலரது கருத்துக்கள் மாத்திரமே திணிக்கப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர்.

முஸ்லீம்களிடம் அடகு வைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பெற்றுக்கொண்ட 11 ஆசனங்களை முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கி கிழக்கு மாகாண ஆட்சியை முஸ்லீம்களிடம் கொடுத்து கிழக்கு தமிழர்களின் அபிவித்தி, வேலைவாய்ப்பு , பூர்வீக காணிகளை முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்ததுதான் மிச்சமாக அமைந்துள்ளன.

இன்று அரசுடன் இணைந்த பங்காளிகளாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று அரச கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது என அடம்பிடித்து கிழக்கு தமிழர்களை அடகு வைத்துவிட்டனர். இது குறித்து பேசினால் நாங்கள் மட்டுமா செய்தோம் பிள்ளையான் செய்யவில்லையா என்று கொக்கரிக்கின்றார்கள். TNA-MM

பிள்ளையானை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பிட முடியாது பிள்ளையானின் கட்சி உருவாக்கம் அதன் அங்கத்தவர்கள் குறித்து பார்க்கும் போது மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானதாக இருக்கும்.

உள்ளூராட்சி தேர்தலும் மட்டக்களப்பு மாவட்டமும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்கு காரணம் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு காலம் காலமாக அரசாங்க மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.

தமிழரசு கட்சியின் சில சிரேஷ்ட தலைவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் ஆதிக்கம் இருக்க கூடாது அவ்வாறு இருந்தால் தமிழரசுக் கட்சியை தனியாக பிரிந்து செயற்பட வைக்க வேண்டும் என்ற முடிவை இன்று நிறைவேற்றி உள்ளனர்.

இவர்கள் கட்சிக்குள் வந்தது எவ்வாறு? இவர்களை செயற்பட வைப்பது யார்? இவர்களின் கடந்தகால பாத்திரம் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை அடுத்து வரும் பத்தியில் எழுத உள்ளேன்.
(தொடரும்…)

TNA east

http://www.samakalam.com/செய்திகள்/மட்டக்களப்பில்-வீழ்ச்சி/

Link to comment
Share on other sites

மேலே உள்ள கட்டுரையின் தொடர்ச்சி அல்ல இது. என்றாலும் மட்டக்களப்பு தொடர்பானது என்பதால் இங்கு இணைத்து உள்ளேன்

 

உள்­ளூ­ராட்­சி ­பு­தி­ய­ தேர்தல் முறையும் மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்டத் தேர்­தலும்

 

உள்­ளூ­ராட்­சி­ அ­மைப்­பென்­ப­து­ உண்­மை­யி­லே­யே­ ஒ­ரு ­குட்டிப் பாரா­ளு­மன்­றம் தான் என்­பதில் மாறு­பட்­ட­க­ருத்து இருக்­க­ மு­டி­யாது. அதற்­கா­ன­ பி­ர­தி­நி­தி­க­ளை­ தெ­ரி­வு­செய்­வ­தற்­கெ­ன ­பு­தி­ய­மு­றைகள் இவ்­வ­ரு­டத்தில் இடம்­பெற இருக்­கின்­ற­ உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில்­ பின்­பற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. அதா­வ­து­ அதில் பிர­தா­ன­மா­ன ­அம்­சம் ­வட்­டாரத் தேர்தல் முறை­யாகும். அத்­தோ­டு­ இன்­னும் ­ப­ல­ அம்­சங்கள் புகுத்­தப்­பட்­டுள்­ளன. நம­து­ நாட்டில் மாந­க­ர­ச­பைகள் 24ம், நக­ர­ச­பைகள் 41ம், பிர­தே­ச­ச­பைகள் 272 ம் இயங்­கு­கின்­றன. இவை­க­ளில்­ அ­னே­க­மா­ன­வை­க­ளின் ­ப­த­விக்­காலம் வறி­தாக்கப் பட்­டி­ருக்­கின்­றன. இச்­ச­பை­களில் தனி­உ­றுப்­பினர் வட்­டா­ரங்கள் 4750ம் இரட்­டை ­உ­றுப்­பினர் வட்­டா­ரங்கள் 165ம், மூன்­று­உ­றுப்­பி­னர்கள் கொண்­ட­ வட்­டா­ரங்கள் 4ம் இருக்­கின்­றன. இவ் வட்­டா­ரங்­க­ளி­னூ­டாக 5092 உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள்.

மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்டம்

மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்­டத்தைப் பொறுத்­த­வ­ரை­ மா­ந­கர சபை ஒன்றும், நக­ர­சபை 2ம், பிர­தே­ச­ச­பைகள் 9ம் இருக்­கின்­றன. கோற­ளைப்­பற்­று­ வ­டக்­கு­பி­ர­தே­ச­ ச­பை­யிலும், மண்­மு­னைதென் எருவில் பற்­று­பி­ர­தே­ச­ ச­பை­யிலும் தலா­ ஒன்று, இரட்­டை ­அங்­கத்­து­வ ­வட்­டா­ர­மாக இருக்­கின்­றது. மொத்­த­மா­க­ மட்­டக்­க­ளப்­பு­ மா­வட்­டத்­தி­ல­் உள்­ளூ­ராட்சி சபை­ வட்­டா­ரங்கள் 144 இருக்­கின்­ற­ன­. தேர்தல் மூலம் 146 பிர­தி­நி­தி­கள்­தெ­ரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். இதற்கு 389,582 அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­ வாக்­குகள் இருக்­கின்­றன. இவை­க­ளுக்­கா­ன­ வாக்குச் சாவ­டிகள் 457ஆகும்.

இரட்­டை­வாக்குச் சாவ­டிகள்

இதிலும் இரட்­டை­வாக்குச் சாவ­டி­கள்­ என்­ற ­பதம் பாவிக்கப்படு­கி­றது. ஆகக் கூடு­த­லான­ வாக்­கா­ளர்கள் ஒரு ­வாக்குச் சாவ­டியில் இணைக்­கப்­பட்­டி­ருந்தால் வேலைப்­ப­ளு­வை ­கு­றைப்­ப­தற்­கா­கவும்,வாக்­கா­ளர்­க­ளின்­ இ­ல­குக்­கா­கவும் அதனை இரண்­டாகப் பிரித்­துள்­ள­தா­கவும், அவை­களே இரட்­டை­வாக்குச் சாவ­டிகள் என­அ­ழைக்­கப்­ப­டு­வ­தா­கவும்,மாவட்­ட ­தேர்தல் ஆணை­யாளர் ஆர்.சசீலன் தெரி­வித்தார். அப்­ப­டி­வ­குக்­கப்­பட்­ட­ வாக்­குச்­சா­வ­டி­களின் எண்­ணிக்கை 37 ஆகும்.

பிர­தி­நி­திகள் தெரி­வாகும் முறை

இம்­முறை இடம்­பெற இருக்­கி­ன்­ற­ தேர்­தலில் பிர­தி­நி­திகள் இரண்­டு­மு­றை­யா­க­ தெரி­வு­ செய்யப்படு­வார்கள். ஒன்­று ­தேர்­த­லில்­ இ­றங்­கி ­வாக்­கு­களைப் ­பெற்­று­ தெ­ரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள். மற்றைய­து பட்­டி­யலில் இருந்­து ­தெ­ரி­வு ­செய்­யப்­ப­டு­வார்கள். இத்தேர்தல் எவ்­வ­கை­யிலும் கட்­சி ­அல்­ல­து ­சு­யேட்­சைக்­குழு ­என்­ப­தை­யே ­மு­தன்மைப் படுத்­து­கி­றது. தேர்­தலில் வாக்­கா­ளர்கள் ஒரு­வேட்­பா­ள­ரை­ வி­ரும்­பி­ அ­வ­ருக்­கு­ த­னி­யா­க­ வாக்­க­ளிக்­க­ மு­டி­யா­து. ­அ­வரின் மேல்­கொண்­ட­ வி­ருப்­பத்­தை­ நி­றை­வேற்­று­வ­தற்­கு­ அவர் சார்ந்­த ­கு­ழு­வுக்­கோ அல்­ல­து ­கட்­சிக்­கோ தான் வாக்­க­ளிக்­க­ வேண்­டி­யுள்­ளது. அடுத்­த­தா­க ­பட்­டி­யலில் இருந்­து­ தெ­ரி­வு­ செய்­யப்­ப­டு­ப­வர்­கள்­கூட அவர் சார்ந்த குழு அல்­ல­து­ கட்­சி­ பெற்­ற ­ஒட்­டு­ மொத்­த­வாக்­கு­களில் தங்­கி­யி­ருக்­க­ வேண்­டி­யுள்­ளது. அதற்­கேற்­ப தான் எத்­த­னை ­உ­றுப்­பி­னர்­களை­ பெற்­றுக்­கொள்­ளலாம் என்­று ­க­ணக்­கீ­டு­ வ­குக்­கப்­படும். இதி­லி­ருந்து, கட்­சியின் செல்­வாக்கு, அல்­ல­து ­சு­யேட்­சைக்­கு­ழுவின் செல்­வாக்கு, அத்­தோ­டு­ வேட்­பா­ளரின் செல்­வாக்­கு ­என்­ப­ன ­வெற்­றிக்­கு­ வ­ழி­கோ­லு­கின்­ற­தை­ க­வ­னிக்­க ­மு­டியும்.

வேட்­பாளர் பட்­டியல்: முதலாவது பட்­டியல்

இதற்­கு­ அப்பால் வேட்­பா­ளர் ­ப­ட்­டியல் தயா­ரிக்­கப்­ப­டு­வது இருக்­கி­றது. இதற்­கு ­மு­தலில் வழி­வ­குப்­பது. உள்­ளூ­ரா­ட்சிச் சபையின் குறித்­தொ­துக்­கப்­பட்­ட வட்­டா­ரங்­க­ளாகும். இதில் முதலாவது பட்டியல், 2ஆவது பட்­டி­யல்­ என்று இரு ­பட்­டி­யல்கள் இருக்­கின்­றன. முதலாவது பட்­டி­யலில் அவ்­வட்­டா­ரங்­களின் எண்­ணிக்­கை­ எ­து­வோ­அ­தே ­எண்­ணிக்­கை­யி­லா­ன ­வே­ட­்பா­ளர்கள் இடம்­பெ­ற­வேண்டும்.

2ஆவது பட்­டியல்

2ஆவது ­பட்­டியல் தயா­ரிக்­கும்­போ­து­மு­த­லா­வ­து ­பட்­டி­யலில் உள்­ள­ எண்­ணிக்­கை­யை ­மூன்­றில்­ இ­ரண்­டால் ­பெ­ருக்­கி­அ­தே­தொ­கை­யை ­எ­டுத்­து ­அ­தோடு 3றைக் கூட்­டி­வரும் எண்­ணிக்­கைக்­கு ­ஏற்­ப­ பெயர்ப் பட்­டியல் இருக்­க­வேண்டும். இத­னை­ வ­குக்­கும்­போ­து­ த­ச­மக்­கணக்கில் எண் கிடைக்­கு­மாயின், அதில் வரும் முழு எண்­ணை­யே ­எ­டுக்­க­வேண்டும்.

வேட்­பாளர் பட்­டி­யலில் பெண்­க­ளுக்­கா­ன­

ஒ­துக்­கீடு: முதலாவது பட்­டியல்

இனி இப்­பட்­டி­யல்­களில் பெண் பிர­தி­நிதித்­து­வத்­திற்­கு ­முன்­னு­ரி­மை­ வ­ழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. முதலாவது வேட்­பாளர் பட­்டி­ய­லில்­ உள்­ள­ மொத்தத் தொகை­யின் ­பத்­தி­லொன்­றுக்கு­ ச­ம­மா­ன­ எண்­ணிக்­கைக்­கு ­ச­ம­மா­ன­ பெண்­களின் எண்­ணிக்­கை­ உள்­ள­டக்கப்பட்­டி­ருத்தல் வேண்டும். இத­னை ­வ­குக்­கும்­போ­து ­த­ச­மக்­க­ணக்கில் எண் கிடைக்­கு­மாயின், அதில் வரும் முழு எண்­ணை­யே ­எ­டுக்­க­வேண்டும்.

2ஆவது பட்­டியல்

இனி 2ஆவது பட்­டி­யலின் பெண் பிர­தி­நிதித்­துவம் பற்­றி­ தெ­ரி­விக்­கையில், 2ஆவது வேட்­பாளர் பட்­டி­யலில் உள்­ள­ மொத்தத் தொகையின் அரைப்­பங்­கிற்­கு­ ச­ம­மா­ன ­எண்­ணிக்­கைக்­கு­ ச­ம­னா­க­ பெண்­களின் எண்­ணிக்­கை உள்­ள­டக்கப்பட்­டி­ருத்தல் வேண்டும். இத­னை­ வ­குக்­கும்­போ­து­ த­ச­மக் ­க­ணக்கில் எண் கிடைக்­கு­மாயின் அதில் வரும் முழு எண்­ணை­யே­ எ­டுக்­க­வேண்டும்.

வாக்­கெண்ணும் நிலையம்

பழை­ய ­மு­றை­யி­லி­ரு­ந்­து­ வாக்­கெண்ணும் முறை­ முற்­றிலும் மாறு­ப­ட­ுகின்­றது. அந்­தந்த ­வாக்­கெ­டுப்­பு ­நி­லை­யத்­தி­லே ­வாக்­கு­எண்­ணுதல் நடை­பெறும். ஒரு­வட்­டா­ரத்தில் ஒன்­றுக்­கு­ மேற்­பட்­ட ­வாக்­கெ­டுப்­பு ­நி­லையம் இருக்­கு­மாயின், எவ்­வி­டத்தில் வைத்­து­ வாக்­கு ­எண்­ணப்­படும் என்­ப­தை­ தெ­ரி­வத்­தாட்­சி ­அ­லு­வலர் தீர்­மா­னிப்பார். இத­னால் ­தேர்தல் முடிவு இல­கு­வா­க­ வி­ரை­வா­க­ கி­டைக்கும் என­ எ­திர்­பார்க்­கலாம்.

உறுப்­பி­னர்­க­ளை ­தீ­ர­்மா­னித்தல்

உள்­ளூ­ராட்­சி­ அ­தி­கா­ர­சபைப் பிர­தே­சத்தில் ஒவ்­வொ­ரு­ கட்­சி­ அல்­ல­து­ சு­யேச்சைக் குழு பெற்றுக் கொண்­ட ­வாக்­கு­களின் எண்­ணிக்­கை­யை­ அ­வ்­வுள்­ளூ­ராட்­சி ­ச­பைக்­கா­க­ தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­ மொத்­த ­உ­றுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யினால் பிரிக்­கின்­ற­போ­து­ கி­டைக்­கின்­ற ­தொ­கை­யினால் அவ்­வொவ்­வொ­ரு ­கட்­சியும், சுயேட்சைக் குழுவும் பெற்­றுக்­கொண்­ட ­வாக்­கு­க­ளினால் தொகை­யை ­ப­குப்­ப­தனால் ஒவ்­வொ­ரு ­கட்­சிக்கும் சுயேச்சைக் குழு­வுக்கும் உரி­ய ­உ­றுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­ பெ­றப்­படும்.

ஒவ்­வொ­ரு­ கட்­சிக்கும் அல்­ல­து­ சு­யேச்சைக் குழு­வுக்கும் கிடைக்­கப்­பெற்­ற­மொத்­த­ உ­றுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கை­யி­லி­ருந்­து­வட்­டா­ரங்­க­ளை­ வென்­றி­ருக்­கின்­ற­எண்­ணிக்­கை­யை­ க­ழித்­த­பின்னர் எஞ்­சு­கின்­ற ­நி­லு­வை­அக்­கட்­சிக்­கு­ அல்­ல­து ­சு­யேட்சைக் குழு­வுக்­கு­ பட்­டி­ய­லி­லி­ருந்­து­ கி­டைக்­க­வேண்­டி­ய­ உ­றுப்­பி­னர்­க­ளாவர்.

எந்­த­வொ­ரு­ கட்­சி­யி­லி­ருந்­து ­அல்­ல­து ­சுயேட்சைக் குழு­வி­லி­ருந்­து­ வி­கி­தாசா­ரப் ­பங்­கீட்­டிலும் பார்க்க கூடு­த­லா­ன­தொ­ரு­ தொ­கை ­வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்­து­ தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்பின் அவ்­வா­று­ அ­தி­க­ரிக்­கின்ற­ தொ­கை­யினால் உள்­ளூ­ர­தி­கா­ர ­ச­பைக்­கு­தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­ற ­உ­றுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரிக்கும்.

பெண் உறுப்­பி­னர்­க­ளுக்­கா­ன ­ஒ­துக்­கீடு

உள்­ளூ­ராட்­சி­ அ­தி­கா­ர­ச­பை­யொன்றின் செல்­லு­ப­டி­யா­ன­ மொத்­த ­வாக்­குகளின் 20 விகி­தத்­திற்­கு­ கு­றை­வா­ன ­வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­டதும் 3 உறுப்­பி­ன­ர்­களை தேர்ந்தெடுக்­கப்­பட்­ட­து­மா­ன ­கட்­சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்­றுக்­கொண்­ட­ வாக்­குகள் கழிக்­கப்­பட்­டு­ எஞ்­சி­ய­வாக்குகள் 25 விகி­த ­உ­றுப்­பி­னர்­க­ளின் ­தொ­கைக்­கு­ ச­ம­மா­ன­ தொ­கை­யால் ­ப­குக்­கப்­படும்.

அதன்மூலம் கிடைக்கின்ற பெறுமானத்தி­னால் அவ்வாக்குகளின் எண்ணிக்கைக்குரிய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளைப் பகுப்பதன் மூலம், ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிலிருந்து நியமனம் செய்யவேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்

ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிலிருந்து நியமனம் செய்யப்பட வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்து அக்கட்சி­­யினால் அல்லது சுயேட்சைக் குழுவினால் வட்டாரங் களை வென்றெடுத்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கழிக்கப்பட்டு எஞ்சிய தொகை விகிதாசாரப் பட்டியலிலிருந்து நியமனம் செய்யப்பட வேண்டிய அங்கத்தவர்களிலிருந்து நியமிக்கு­மாறு தேர்தல் ஆணைக்குழு கோருதல் வேண்டும்.

மேயர் அல்லது பிரதிமேயரை அல்லது

தவிசாளர் அல்லது உதவித் தவிசாளரை

நியமனம் செய்தல்.

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை யில் 50 விகிதத்திலும் பார்க்க கூடுதலான எண்ணிக்கை உறுப்பினர்களை உரித்தாக்கிக்கொண்ட கட்சியின் செயலா ளருக்கு அல்லது சுயேட்சைக் குழுத் தலைவருக்கு மேயர் அல்லது பிரதி மேயர் அல்லது தவிசாளர் அல்லது உதவித் தவிசாளரை நியமிக்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் அறிவிப்பார்.

மொத்த அங்கத்தினரின் அரைப் பங்கை

பெறாத கட்சி அல்லது சுயேட்சைக்குழு

எந்தவொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு 50 விகிதத்திலும் பார்க்க கூடுதலான உறுப்பினர் எண்ணிக்கையை பெற்றுக்கொள்ளத் தவறுமிடத்து மேயர் அல்லது பிரதிமேயர் அல்லது தவிசாளர் அல்லது உதவி தவிசாளர் அங்குரார்ப்பண கூட்டத்தில் வைத்து உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிந்தெடுக்கப்படுவர். 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-14#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.