Jump to content

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை .

"நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்."

பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.

மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு

இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.

இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வட-கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.

தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது. இதனாலேயே பல குடும்ப உறவுகளே சிதைவடைகின்றது.

தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை.

( நயினை அன்னைமகன் )

நன்றி  முக நூலில் இருந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை .

 இஞ்சத்தையான் கஸ்டங்களை அப்ப தொடக்கம் சொல்லிக்கொண்டு வாறன்......

அங்கையிருக்கிறதுகள் கேட்டாத்தானே....

ஏதோ நான் காசுமரத்துக்கு கீளை படுத்திருக்கிற மாதிரியும் அவையள் முன்னேறிடுவினம் எண்டு எரிச்சல் பொறாமையிலை சொல்லுறமாதிரி நினைக்கினம்....
வாங்கோ இங்கை வந்து வேலை செய்து பாருங்கோ....அப்ப தெரியும் கையின் கருக்குமட்டை சொரசொரப்பு...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கடா வெட்டி விருந்துவைத்தல் ,கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர்.

தற்போதைய நிலைமை இதுவல்ல ...ஊரிலிருக்கும் ஒரளவு விடயம் தெரிந்த அனைவருக்கும் இந்த விளக்கம் தெரியும். இவர்கள் காட்டும் கலரில் பிரமிப்பதில்லை மாறாக நமுட்டு சிரிப்பை சிரித்து மனதுக்குள் சொல்லிக்கொள்வினம் தம்பியர இனி நான்கு வருடத்துக்கு ஊரில காணக்கிடைக்காது என்று. பிரமித்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. இவர்களை சூழ்ந்து கொள்ளும் இன சன நண்பர்கள் எல்லாம் பெரும் பாசத்திலோ சூழ்கிறார்கள் ...?
வெளிநாட்டு வெற்று பந்தா பார்ட்டி புடுங்கும் வரைக்கும் புடுங்குவோம் என்று ஓசித்தண்ணி இத்யாதி ...இத்யாதி என்று அனுபவித்து விட்டு போகும்போது கஜுக்கொட்டை பக்கெட்  ஒன்றை கையில் திணித்து அனுப்பிவிடுவர்...எங்கடை புலத்து ஆக்களும் நெம்பர் ஒன் சுயநலவாதிகள் தெரியுமோ. சிக்கினான் சின்னத்தம்பி என்று பிரித்து மேஞ்சுடுவினம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள மக்கள் யாவும் அறிந்தவர்கள் ஒரு சிலரைத்தவிர ஆனால் வெளிநாட்டு வாழ்க்கை  பந்தாக்கு வாழ்பவ்ரகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்குறார்கள் சில படு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கூழோ கஞ்சியோ எம் நாட்டில் வாழ்ந்தால் போதும் எனக்கு 

எனக்கு கார் வேணாம் அப்பாடா பெடல் இல்லாத சைக்கிள் போதும் 

கையில் சுவிஸ் வாச்சி வேணாம்  காகம் போதும் கரந்தால் நேரமறிவேன் மாலை மய்க்கினால் நேரமறிவேவ் 

பீசா , வேணாம் , பர்கர் வேணாம் பழைய தண்ணிச்சொறு போதும் 

ஒரு சறமும் வேட்டியும் சொல்லும் நான் தமிழன் என எந்த ஆடையும் என்னை பிடிக்க முடியாது 

கையில் அதிக காசு  வேணாம் நல்ல உறவுகள் போதும் போலியாக வாழ முடியாது 

ஏசி வேணாம் , மெத்தை வேணாம் ஒர்  தரை போதும் படுத்துறங்க

இன்னும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழனாக ஒன்று சேர்ந்தால்தான் அதிசயம் !

மற்றும்படி எல்லா குடும்பத்திலும் கலந்து இருப்பதாலோ என்னோவோ 
இன்னமும் கொஞ்சம் பொது நிறமானவர்கள் ... கறுப்பானவர்கள் 
என்பதை தவிர 

மற்றையபடி எல்லா வித பிரிவினையும் உண்டு.
பொறாமையின் அதியுச்சிதான் இதன் முதன்மை காரணம் 

போராட்டம் என்றாலும் ...
பொருளாதார உதவி என்றாலும் ...
குடும்ப மேம்பாடு என்றாலும் ....
கூத்தமைப்பு உண்டியல் குலுக்கினாலும்.
கடடேறும்பாய் தேய்ந்தது புலப்பெயர்ந்த தமிழன்தான்.

அவன் செய்த மாபெரும் குற்றம் ....
25 30 வருடம் முன்பு வரும்போது கொண்டுவந்த 
சாரம் கேஷியோ மணிக்கூடு இதுகளை தொலைத்துத்தான்.
திரும்பி போகும்போது அவற்றுடன் திரும்பி இருந்தால் 
அங்கிருந்து கொளுத்தவர்களுக்கு குளிர்ந்திருக்கும் போல??

அங்கிருக்கிறவை பெருமை கொள்ளலாம் தாம் ஐ போன் 8 10 
எல்லாம் வைச்சிருக்கிறம் என்று ...
இங்கிருக்கிறவனுக்கு அந்த குப்பை ஒரு வார சம்பளம் 
ஆனால் அதனுடன் போக கூடாது ....
இனி ஆப்பிளுக்கு சொல்லி இங்கிருந்து கொண்டுபோற மாதிரி 
ஐ போன் - 5    -6 என்று ரிவெர்சில செய்ய வேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

அங்கிருக்கிறவை பெருமை கொள்ளலாம் தாம் ஐ போன் 8 10 
எல்லாம் வைச்சிருக்கிறம் என்று ...
இங்கிருக்கிறவனுக்கு அந்த குப்பை ஒரு வார சம்பளம் 
ஆனால் அதனுடன் போக கூடாது ....
இனி ஆப்பிளுக்கு சொல்லி இங்கிருந்து கொண்டுபோற மாதிரி 
ஐ போன் - 5    -6 என்று ரிவெர்சில செய்ய வேணும். 

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

 
சிறப்பு எழுத்துக்குறிகள்

புலம்பெயர்தவணை உங்களின் சகோதரர்கள் எனும் மனநிலையில் பார்த்தால்
இந்த கேள்விகள் வரத்தேவையில்ல
அவர்கள் வரும்போது கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அவன

 
சிறப்பு எழுத்துக்குறிகள்
புலம்பெயர்தவணை உங்களின் சகோதரர்கள் எனும் மனநிலையில் பார்த்தால்
இந்த கேள்விகள் வரத்தேவையில்லை
அவர்கள் வரும்போது கேட்டு அறிந்து கொள்ளலாம்.

அவனது உழைப்பில்தான்
அவனது குடும்பம்
ஊர்
நாடு
என்று எல்லாம் வளருகிறது.

எல்லவற்றையும் உதறிவிட்டு இருந்தால்
ஒருவார உழைப்பில் அந்த குப்பையை வாங்க முடியும்.

முதல் தலைமுறைதான் உள்ளதை எல்லாம் ஊருக்கு
ஊத்திவிட்டு இப்படி புலம்புகிறார்கள் ... இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் நாட்டுக்கு என்று உழைத்தவன்
ஊரில் இருந்தாலும் .... புலம்பெயர்ந்து இருந்தாலும்
இழந்தவன் அவன்தான்.

தான் இருந்தவன் இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும்
ஊத்திதான் இருக்கிறான். 
 
இதை மேம்படுத்த உதவவும்!
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை வருபவர்கள் தாரளமாக எந்த குப்பையையும் வைத்திருக்கட்டும். ஆனால் வைத்திருக்கும் குப்பை என்னிடம் மட்டும் தான் இருக்கு என்று அடுத்தவனுக்கு படம் காட்ட ஆயத்தப்படும் போதுதான் மூக்குடையவேண்டி வரும் ஏனென்றால் அந்தக்குப்பையை நாட்டில் வைத்திருப்பவனும் தூக்கிக்காட்டுவான் . வருபவர்களும் தாம் கேசியோ கொண்டு போன காலத்தில் இருந்தது போலத்தான் நாடு இப்போதும் இருக்கும் என்று நினைக்கக்கூடாது பாருங்கோ  
ஒருவாரத்தில் குப்பையை வாங்குமளவு உழைக்கும் புலம்பெயர்ஸ் எல்லாம் ஏன் அவல வாழ்க்கை என்று அலுத்துகொள்கின்றினம் ...? மேலே உள்ள பதிவு வாழ்க்கை அலுத்த ஒரு புலம் பெயர்சின் பதிவுதானே. 
அவல வாழ்க்கையை  ஒருவாரத்தில் அந்த குப்பையை வாங்கும் அளவுக்கு உழைக்கும் வசதிக்கான ஒரு Trade-off என்று எடுத்துக்கொள்ளலாமே  ...ஏதற்கு மூக்கால் அழுவான் 

து உழைப்பில்தான்
அவனது குடும்பம்
ஊர்
நாடு
என்று எல்லாம் வளருகிறது.

எல்லவற்றையும் உதறிவிட்டு இருந்தால்
ஒருவார உழைப்பில் அந்த குப்பையை வாங்க முடியும்.

முதல் தலைமுறைதான் உள்ளதை எல்லாம் ஊருக்கு
ஊத்திவிட்டு இப்படி புலம்புகிறார்கள் ... இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

எப்படி பார்த்தாலும் நாட்டுக்கு என்று உழைத்தவன்
ஊரில் இருந்தாலும் .... புலம்பெயர்ந்து இருந்தாலும்
இழந்தவன் அவன்தான்.

தான் இருந்தவன் இங்கிருந்தாலும் அங்கிருந்தாலும்
ஊத்திதான் இருக்கிறான். 

 
இதை மேம்படுத்த உதவவும்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Maruthankerny said:

.. இப்போ
மூன்றாவது தலைமுறை உருவாகி கொண்டு இருக்கிறது
இரண்டாவது தலைமுறை அவுடி பி எம் டபிள்யூ என்று
நன்றாகத்தான் வளருகிறது.

இங்கிருப்பவர்களை நக்கல் நளினம் செய்து
இங்கிருப்பவர்கள் இழக்க ஒன்றும் இல்லை
அடுத்த தலைமுறையிடம் இணக்கம் இன்றி போனால்
அங்கிருப்பவர்கள் நஷ்ட்டப்படவே நிறைய இருக்கிறது.

புலம்பெயர்சின் அடுத்த  தலைமுறைகள் அவுடிகளுடனும் பீமர்களுடனும் வலம் வருவது மகிழ்ச்சி 
ஆனால் முக்கியமாக  ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது   அவர்களுக்கும் புலத்து சொந்தங்களுக்கிடையான உறவு அப்படியே அருகிக்கொண்டு செல்கிறது. புலத்திலும் புலம்பெயர்சிலும் முதலாம் தலைமுறை  இறுதி தலை விழும் காலத்திருந்து 
புலம் , புலம்பெயர் இரண்டாம் தலைமுறைகளுக்கான உறவு சொந்தம் என்பதிலிருந்து நாகரிகம் கருதிய ஒரு உறவாக மாறும் சாத்தியமே அதிகம் 
உதாரணமாக எனது குடும்பத்திலும் எனது தாயாரின் நான்கு சகோதரங்கள் எண்பதுகளில்  புலம்பெயர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை விட 
அவர்களது பிள்ளைகள் (இரண்டாம்   தலைமுறை ) எங்களிடம் இருக்கும் அந்நியோன்னியம் நாகரிகம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது 
அதாவது எனது மச்சான் என்பதை விட மாமாவின் மகன் என்பதாகவே இருக்கிறது . எந்த நல்லவை கெட்டவைகளில் இரண்டாம் தலைமுறைகளை காணவே கிடைக்காது. புலம் பெயர் இரண்டாம் தலைமுறைகளின் வாழ்க்கை துணைகள் அனைத்துமே வெள்ளைகள்  
உதாரணமாக குழந்தை பிறந்தால் கூட முகப்புத்தகத்தில் லைக் போட்டு வாழ்த்திவிட்டு நகரும் ஒரு வகையிலே தான் இரண்டாம் தலைமுறை இருக்குகிறது . உண்மையிலே இரண்டாம் தலைமுறை எப்போதாவது  புலத்திற்கு வரும்நோக்கில் 
தொடர்புகொண்டாலோ புலத்திலிருக்கும் இரண்டாம் தலைமுறை ஏதாவது சாக்கு சொல்லி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் பாங்கே அதிகரித்துகொண்டு  செல்கிறது. மூன்றாம் தலைமுறையில் இந்த இடைவெளிகள் அதிகமாகி 
தமக்கு  உறவுகள் உண்டென்பதையே இரு சாராரும் மறந்துவிடுவார்கள்.  இப்படி புலத்துடனான தொடர்பே முற்றாக அற்றுபோனபின் புலம் பெயர் அடுத்த சந்ததிகளில் எவ்வாறு புலத்தின் அடுத்தசந்ததி தங்கியிருக்கப்போகிறது
நிச்சயமாக இதுமட்டும் நடக்காது    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

தற்போதைய நிலைமை இதுவல்ல ...ஊரிலிருக்கும் ஒரளவு விடயம் தெரிந்த அனைவருக்கும் இந்த விளக்கம் தெரியும். இவர்கள் காட்டும் கலரில் பிரமிப்பதில்லை மாறாக நமுட்டு சிரிப்பை சிரித்து மனதுக்குள் சொல்லிக்கொள்வினம் தம்பியர இனி நான்கு வருடத்துக்கு ஊரில காணக்கிடைக்காது என்று. பிரமித்தகாலம் எல்லாம் மலையேறிவிட்டது. இவர்களை சூழ்ந்து கொள்ளும் இன சன நண்பர்கள் எல்லாம் பெரும் பாசத்திலோ சூழ்கிறார்கள் ...?
வெளிநாட்டு வெற்று பந்தா பார்ட்டி புடுங்கும் வரைக்கும் புடுங்குவோம் என்று ஓசித்தண்ணி இத்யாதி ...இத்யாதி என்று அனுபவித்து விட்டு போகும்போது கஜுக்கொட்டை பக்கெட்  ஒன்றை கையில் திணித்து அனுப்பிவிடுவர்.
..எங்கடை புலத்து ஆக்களும் நெம்பர் ஒன் சுயநலவாதிகள் தெரியுமோ. சிக்கினான் சின்னத்தம்பி என்று பிரித்து மேஞ்சுடுவினம்   

 

 

cause and effect........  

 

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலம்பெயர்சின் அடுத்த  தலைமுறைகள் அவுடிகளுடனும் பீமர்களுடனும் வலம் வருவது மகிழ்ச்சி 
ஆனால் முக்கியமாக  ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது   அவர்களுக்கும் புலத்து சொந்தங்களுக்கிடையான உறவு அப்படியே அருகிக்கொண்டு செல்கிறது. புலத்திலும் புலம்பெயர்சிலும் முதலாம் தலைமுறை  இறுதி தலை விழும் காலத்திருந்து 
புலம் , புலம்பெயர் இரண்டாம் தலைமுறைகளுக்கான உறவு சொந்தம் என்பதிலிருந்து நாகரிகம் கருதிய ஒரு உறவாக மாறும் சாத்தியமே அதிகம் 
உதாரணமாக எனது குடும்பத்திலும் எனது தாயாரின் நான்கு சகோதரங்கள் எண்பதுகளில்  புலம்பெயர்ந்தவர்கள் . அவர்களுக்கிடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை விட 
அவர்களது பிள்ளைகள் (இரண்டாம்   தலைமுறை ) எங்களிடம் இருக்கும் அந்நியோன்னியம் நாகரிகம் கருதிய ஒன்றாகவே இருக்கிறது 
அதாவது எனது மச்சான் என்பதை விட மாமாவின் மகன் என்பதாகவே இருக்கிறது . எந்த நல்லவை கெட்டவைகளில் இரண்டாம் தலைமுறைகளை காணவே கிடைக்காது. புலம் பெயர் இரண்டாம் தலைமுறைகளின் வாழ்க்கை துணைகள் அனைத்துமே வெள்ளைகள்  
உதாரணமாக குழந்தை பிறந்தால் கூட முகப்புத்தகத்தில் லைக் போட்டு வாழ்த்திவிட்டு நகரும் ஒரு வகையிலே தான் இரண்டாம் தலைமுறை இருக்குகிறது
. உண்மையிலே இரண்டாம் தலைமுறை எப்போதாவது  புலத்திற்கு வரும்நோக்கில் 
தொடர்புகொண்டாலோ புலத்திலிருக்கும் இரண்டாம் தலைமுறை ஏதாவது சாக்கு சொல்லி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்க்கும் பாங்கே அதிகரித்துகொண்டு  செல்கிறது. மூன்றாம் தலைமுறையில் இந்த இடைவெளிகள் அதிகமாகி 
தமக்கு  உறவுகள் உண்டென்பதையே இரு சாராரும் மறந்துவிடுவார்கள்.  இப்படி புலத்துடனான தொடர்பே முற்றாக அற்றுபோனபின் புலம் பெயர் அடுத்த சந்ததிகளில் எவ்வாறு புலத்தின் அடுத்தசந்ததி தங்கியிருக்கப்போகிறது
நிச்சயமாக இதுமட்டும் நடக்காது    

 

 

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி மேலோட்டமாக ஆராய முற்பட்ட மேற்படி முகநூல் பகிர்வு அதன் இப்பிரச்சனைக்கான அடிப்படை என்ன என்பதை பற்றி வசதியாக மறந்து விட்டு தனியே புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மீது மட்டும் சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டியுள்ளது. மற்றவர்களுக்கு பந்தா காட்டும் பழக்கம் ஐரோப்பாவில் இருந்து அங்கு சென்றதல்ல. எமது தாயகம் உட்பட தெற்காசிய நாடுகளில தான் இப்பழக்கம் பல காலமாக  வேரூன்றி உள்ளது. புலம் பெயர் மக்களில் சிலர் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் அந்த பழக்கம் அவர்களுக்கு தாயகத்தில் தான் ஊட்டப்பட்டது என்பதை மறந்து அது ஏதே மேற்கத்தய பழக்கம் என்பது போல கட்டுரையாளர் காட்ட முன்வந்துள்ளார். ஐரோப்பியர்கள் தனது வாழ்வில் என்றுமே பந்தாகாட்டுவதில்லை என்பது அவர்களுடன் பழகும் எவரும் இலகுவில் அறிந்து கொள்வர். எனவே இவவாறு பந்தா காட்டுபவர்கள் அந்ந பழக்கத்தை தாயகத்தில் தான் வாழ்ந்த காலத்தில் தான் கற்று தனது நிலை பொருளாதாரத்தில் உயரும் போது அதை மற்றவர்களுக்கு காட்ட முன்வநதுள்ளனர். எனவே மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்  என்ற விடுப்பு பார்க்ககும் கலாச்சாரத்தை தாயகத்தில் உள்ளவர்கள் உட்பட நம்மவர் கைவிடும் போது இந்த பந்தா காட்டும் பழக்கமும் இல்லாமல் போய்விடும். உண்மையில் மற்றவர்களை பார்க்கும் தவறான பார்வையும் அவர்கள் பந்தா காட்டுகிறார்கள் என்ற நினைப்புக்கு காரணம்.

நாற்பதுகளின் நோய்களை சுமந்து முதுமை அடைந்து விடும் மக்கள் கூட்டம் என்றால் தவறு எங்கே இருக்கிறது. இருபதுகளில் சிறந்த உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப்பழக்கம் போன்ற காரணங்களே நாற்பதுகளில் மனிதர்கள்  நோய்வாய்பட பெரும்பாலும் காரணமாகிறது. இருபதுகளில் இங்கு வந்த தலைமுறையினர்  தவறான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தனர் என்பதையே மறைமுகமாக  கட்டுரை சொல்கிறது. அப்படியானால்   இருபதுகளின் தமது ஆரம்ப உயர் கல்வியை முடித்து இங்கு வந்த இளைஞர்களுக்கு சிறந்த சுகாதார  வாழ்க்கை முறையை தாயக கல்விமுறை சொல்லி கொடுக்க வில்லையோ என்ற ஐயம் எழுவது இயல்பானது. 

துப்பவரவு தொழிலாளி காட்டும் கலரால் என்று அத்தொழிலை இழிவாக கட்டுரையாளர் கூறுவது எமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அத்துப்பரவு தொழிலாளிடன் ஒரு நிறுவனத்தில் இயக்குனர் பதவியில் இருக்கும் ஒருவர் சரிசமமான இருந்து உணவருத்துவது  ஐரோப்பிய கலாச்சாரம்

எம்மவர்களின் அளவுக்கு அதிகமான மது பாவனை  இங்கு கற்று கொண்டதல்ல. தாயகத்தில் கூட அப்படிதான். ஐரோப்பாவில் ஒரு Restaurant அறிமுகம் இல்லாத  மது அருந்துபவர்களின் பக்கத்து மேசையில் ஒரு குடும்பம் தனது குழந்தைகளுடன் கண்ணிமான முறையில்  உணவருந்த முடியும். அதிகம் கலாச்சாரம் பேசும் தாயகத்தில் என்ன நிலை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  மனிதர்கள் உறவாடாத தனிமை சிறை என்பது மிகைபடுத்த பட்ட கூற்று. பணத்தை தவிர வேறு உலக அறிவு இல்லை என்றால் அதற்கு காரணம் வாழும் நாட்டின் இணைவு வாழ்க்கையை (intergration) வாழ தவறுவதே. தூக்கி எறியவேண்டிய பத்தாம்பசலி த்தனமான  மடைத்தனமான பல  பழக்கங்களை கலாச்சாரம் என்ற அடைமொழியுடன்  இன்றும் கைகொள்ள தெரிந்த எமக்கு  வாழும் நாட்டின் சிறந்த பழக்கங்களை கற்று கொள்ள தவறுவது  மறுப்பது ஏன்?  எம்மை போல புலம்பெயர்ந்த மற்றய இன மக்கள் ஒப்பீட்டு ரீதியில் மிகவும் வேகமாக இணைவு வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் போது எம்மவர்களால் அது முடியாதற்கு காரணம் தாயகத்தில் அவர்கள் பழகிய விதமே. ஆகவே இங்கு புலம் பெயர்ந்தவர்களின் மீது விரல் நீட்டி தாயகத்தில் இருப்பவர்கள் குற்றம்   சாட்டும் போது மற்றயை விரல்கள் குற்றம் சாட்டுவபர்களையும் சேர்த்தே காட்டி நிற்கிறது.

.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

அண்ணேய் முதலில் ஊரில் இருக்கும் சிங்கங்களை ஒழுங்கா ஒரு வேலை செய்ய சொல்லுங்க பார்க்கலாம் ஒரு வாழை மரத்துக்கு பாத்தியை மாத்த கூலிக்கு ஆட் பிடிக்கும் கூட்டம் இன்னும் வருது வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Wolken, Himmel, Brücke und im Freien

 

Bild könnte enthalten: Fahrrad und im Freien Bild könnte enthalten: Auto, im Freien und Natur

Bild könnte enthalten: Schnee, Auto und im Freien

Bild könnte enthalten: Schnee und im Freien

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான்  பார்த்தேன்

அருமையான  கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன

 

2003  இல் ஊர்   போயிருந்தபோது நான்  சொன்னது

எனது ஊரை கூட்டி அள்ளினாலே நான் கோடீசுவரனாகிவிடுவேன்

இன்றுவரை அதை செய்ய  ஆளில்லை

இது தான் அங்குள்ள  நிலைமை

ஆனால் புலத்தில் வந்து......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில்  வாழ்ந்துவிட்டு

தாயகத்தில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் ஒன்றை  செய்துவரும்

முகநூல் நண்பர் ஒருவரின் கருத்து இது.

 

களத்திலும் புலத்திலும் வாழ்பவன்

எனக்கொரு உண்மை தெரியும்.

நாட்டில் உள்ளவர்களில்99%

வெளி நாடு சென்றுவாழவே விரும்பும் கின்றார்கள்.

சின்ன உதாரணம்                                                                                                                                                                                                                                                                                                               என்  நண்பர் படித்தவர் வசதியானவர் அவரின் ஆதங்கம் "எங்கள் குடும்பதில் ஒருவர் கூட வெளிநாடு செல்லும் பாக்கியம் அற்றவர்கள்."

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/13/2017 at 1:39 AM, சுவைப்பிரியன் said:

இந்தப் பதிவில் உள்ளது 99 வீதம் உண்மை.மற்றது அவர்அவரின் வாழ்க்கை ரசனையைப் பொறுத்து.இங்கா அல்லது அங்கா என்பது.இன்னும் எழதலாம் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்.

இன்னும் எழுத தொடங்கல எதிர்பார்த்தேன் பார்த்துக்கொண்டிருக்கிறன் உங்கள் கருத்தையும் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.