Jump to content

சுமித்ரா


Recommended Posts

சுமித்ரா - சிறுகதை

 

 

மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத வயசாச்சு. இன்னும் மனசுக்குள்ளயே படிச்சி பாடத்தைப் புடிச்சி வச்சிக்கத் தெரியல” என்று முணுமுணுத்துக்கொண்டே இரண்டாவது மகளின் - வாணிக்கு நேர் மூத்தவளின் -  கூந்தலில் ஈருளியைவிட்டு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசம். “வயசுக்கு வந்து ஆறேழு வருஷம் ஆச்சு... இன்னும் தானா தலை சீவிக்கத் தெரியாது. தலையைப் பேன் இல்லாம வச்சிக்கத் தெரியாது” என்று அலுத்துக்கொண்டாள். அவளது அங்கலாய்ப்பு,  புத்தகத்தை மடியில் வைத்துக் கண்களை அதில் ஓட்டிக்கொண்டு மெல்லிய கோட்டைப்போலப் பிரிந்திருக்கும் உதடுகளுக்குள்ளே பாடத்தை முணுமுணுத்தவாறு  அம்மாவுக்குத் தலையைக் கொடுத்திருப்பவளின் காதுக்கு எட்டிவிடாமல் பார்த்துக்கொண்டாள். இருப்பதிலேயே இது சமர்த்து. ஒன்று குறையாகச் சொல்லிவிட்டால் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வைத்துக்கொண்டு முகத்தைச் சிவக்க வைத்துக்கொள்ளும் குணம் வேறு.

p64a.jpg

கோவிந்தன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். யாரோ அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசிப் பெண் அவரை ஒட்டி நின்றுகொண்டு பேசுபவர்களை வாய் பார்த்துக்கொண்டிருக்கிறது. வந்திருப்பது யாராக இருக்கப்போகிறது? தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லியோ,  மகனுக்குப் பெண் பார்க்கச் சொல்லியோ வந்திருப்பவராகத்தான் இருக்கும். வந்தவுடன் சட்டுபுட்டென்று வந்த செய்தியைச் சொல்லும் அளவுக்கு இந்த ஊரில் யாரும் பழக்கப்பட்டிருக்கவில்லை. காப்பி குடிக்கும் நேரத்துக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்தால் இவள்போய் காலை ஆகாரத்துக்கு அழைக்கும்போதுதான் அவர்கள் ஜாதகக் குறிப்பை எடுத்து கோவிந்தனிடம் நீட்டுவார்கள். திண்ணை மாடத்தில் உள்ள கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு அவர் கட்டங்களை ஆராய்வார். இத்தனை வருடத் தரகர் வாழ்க்கையில், கிட்டத்தட்ட முழு ஜாதகமும் கணிக்கும் அளவுக்கு அவருக்குத் திறமை வந்திருந்தது. சில நேரங்களில் இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டுவிடலாமா என்று ஆலோசிப்பதும் உண்டுதான். ஆனாலும் அப்படி யோசிக்கையில் மனதிற்குள் சுருக்கென்று முள் தைத்ததுபோல இருக்கும். எப்படியாப்பட்ட ஜாம்பவான் ஜோசியர்களிடமெல்லாம் போய் கல்யாண பார்ட்டிகளுடன் உட்கார்ந்திருக்கிறார்.

p64b.jpg

ஒரு முறை ஜாதக நோட்டுடன் செவிட்டு ஜோசியரிடம் ஒரு பார்ட்டியை அழைத்துக்கொண்டு போனபோது, பக்கத்தைப் புரட்டிய இரண்டு விநாடிகளில் அவர்,  “நாளைக்கு வரமுடியுமா...” என்று கேட்டுவிட்டு, இவர்கள் பதில் சொல்வதற்குள் எழுந்து உள்ளே போய்விட்டார். மறுநாள் கோவிந்தனுக்கு ஒரு பெண் வீடு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அதற்கு மறுநாள் அந்த பார்ட்டியின் வருகைக்காகக் காத்திருந்தபோது, அவரின் மகன், அவன்தான் அந்த ஜாதக நோட்டில் தனது தலையெழுத்தைக் கட்டம் கட்டமாகப் பரப்பி வைத்திருந்தவன் ஏதோ ஒரு வாகனம் மோதி நடுரோட்டில் காலைப் பரப்பியிருந்தான். ஜாதக நோட்டைப் புரட்டிய இரண்டு விநாடிகளுக்குள்  ‘இது ஏற்கெனவே செத்துப் போனவனது ஜாதகம் அல்லவா, அவனுக்கு என்ன பெண் பார்க்க வேண்டியிருக்கிறது...’ என்று நினைத்துத்தான் பெருசு சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து உள்ளே போயிருக்கிறது. இதைப்போல அவருக்கு எத்தனை சம்பவங்கள், எத்தனை அனுபவங்கள். அப்படியான பெரியவர்கள் பார்க்கும் வேலையை, ஏதோ இரண்டு கட்டங்களைப் பார்த்து நாலு பொருத்தங்கள் இருக்கிறது என்று சொல்லும் திறமை தமக்கு வந்துவிட்டதற்காக நானும் ஜோசியன்தான் என்று மார்தட்டிக்கொள்ள முடியுமா என்ன என்கிற சங்கடம்தான் அவரை ஜோசியராகவிடாமல் தடுத்துவிட்டது. ஆனால்,  ராசம் இதை வேறு மாதிரி பார்த்தாள்.

ஏன்... நீங்கள் போகும் எல்லா ஜோசியர்களும் ஞானிகளா என்ன? இதோ இத்தனை பொருத்தம் இருக்கிறது... தாராளமாக இந்தச் சம்பந்தத்தை உறுதி செய்யலாம்... என்று அவர்களால் சொல்லப்பட்ட எத்தனை திருமணங்கள் நடந்த ஆறுமாதத்திற்குள் அறுத்துக்கொண்டு நின்றிருக்கின்றன. அதற்குப் பிறகும்கூட, அடுத்து என்ன செய்யலாம் என்று அதே ஜோசியரிடம் போய் நிற்கும் யாருக்கும், ஏன் இப்படிப் பொய் சொல்லி இந்தக் கல்யாணத்தை நடத்திவைத்தாய், சரிதான்... பொய்யென்றுகூட வேண்டாம்... இந்த அபத்தத்தை ஏன் கண்டுபிடிக்காமல் விட்டாய்... அப்புறம் என்ன நீ ஜாதகப் புலி... என்று அவர்களது துண்டைப் பிடித்து இழுக்கும் தைரியம் ஏன் வரவில்லை? “பத்தில் ரெண்டாவது பலிக்கிறதே...” என்கிற ஆறுதல்தானே. பிறகு ஜோசியர் ஒன்றும் கடவுள் இல்லையே. எதையும் சடாரென உடைத்துச் சொல்லாமல், கொஞ்சம் இலைமறை காய்மறையாக, ஜோசியம் பார்க்க வந்திருப்பவர்களும் நடக்கப் போவதைத் தாங்களே யூகித்துக்கொள்வதற்குக் கொஞ்சம் இடம் கொடுத்து, சொல்லவேண்டியதைப் பூடகமாகச் சொல்லத் தெரிந்துவிட்டால் முடிந்தது... இதில் என்ன பெரிய தயக்கம் வேண்டிக்கிடக்கிறது என்பது அவளது கட்சியாக இருந்தது. இந்த இடம்தான், மிகச் சரியாக இந்தக் குணம்தான் கோவிந்தனுக்குக் கைவராமல் போகிறது.

p64c.jpg

அது என்னவோ யோசிப்பதற்கு எளிதாக இருந்தாலும், அத்தகைய மன வார்ப்பை அடைவதற்கு மிகப்பெரிய பிரயத்தனம் தேவைப்படுகிறது. வந்திருப்பவரின்  மகன் இன்னும் ரெண்டு நாளில் சாகப்போகிறான் என்று தெரியும்போது அவரிடம் ஒன்றும் சொல்லாமல் நாளைக்கு வரமுடியுமா என்று புட்டத்தைத் தட்டிக்கொண்டு எழுந்து போகமுடியும் என்பதெல்லாம் இந்த ஜென்மத்தில் தமக்குக் கைகூடாத பக்குவம் என்பதை கோவிந்தன் அறிந்துவைத்திருந்தார். அதனால்தான் நடந்தேபோய் பஸ் ஏறிக்கொண்டிருக்கிறார். வீட்டு வாசலில் காரில் வந்து காத்துக்கிடக்கும் கூட்டத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே முற்றத்தில் தனக்கு முன்னால் ஜாதகக் கட்டைப் பிரித்துவைத்துவிட்டு, முகத்தைப் பார்த்தபடி பவ்யமாக உட்கார்ந்திருப்பவனிடம் ஜம்பமாக அலுத்துக்கொள்ளும் சந்தோஷத்தை அவர் அனுபவிக்கக் கொடுத்துவைக்கவில்லை. அவரிடம் இருப்பது வெறும் தன்னடக்கம் மட்டும் அல்ல. சித்திக்கும் ஞானத்தின் மீதான பிரமிப்பு. அப்படியானவர்கள்மீது இருக்கும் மரியாதை. அதைத் தானும் செய்து பார்ப்பதில் இருக்கும் லஜ்ஜை. பின்னிரவுகளில் அவரருகில் படுத்துக்கொண்டு, கால்களை அவர்மீது போட்டுக்கொண்டு அவரது நெஞ்சைத் தடவிக்கொடுத்துக்கொண்டு, மின்னும் அவருடைய  கண்களைப் பார்த்தபடியே அவருடன் பேசிக்கொண்டிருக்கும் ராசத்துக்கு அத்தகைய நேரங்களில் புருசனின் இந்தக் குணத்தின்மேல் உன்மத்தம் பெருகும். யாரிடமும் இல்லாத குணமது. ஆனால், உயர்ந்த விஷயங்கள்மீது அவர் கொள்ளும் மரியாதையும் பக்தியும் இந்தக் குடும்பத்துக்கு என்ன செய்திருக்கிறது?

வீட்டில், சமைந்த குமரிகள் ஏற்கெனவே மூன்றாகிவிட்டார்கள். நாலாவது, வெளியாட்களிடம் பேசிக்கொண்டிருக்கும் தகப்பனின் தோளில் சாய்ந்துகொண்டு வாய் பார்க்கிறது. இத்தனைக்கும் இன்னைக்கோ நாளைக்கோ சமைந்துவிடும் என்ற நிலையில்தான் அதுவும் இருக்கிறது. நெடுநெடுவெனத் தன்னைப்போல ஒல்லியான உருவமும் மருளும் விழிகளுமாக, சதா சிட்டுக்குருவியைப்போல அந்தச் சிறிய வீட்டில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கும் அவளது முகத்தில் தொனித்துக்கொண்டிருக்கும் அதீதக் குழந்தைத்தனம் மட்டுமே அவளைச் சிறுமியாகக் காட்டாமல் குழந்தையைப்போலத் தோற்றம் கொள்ள வைக்கிறது. அவளும் எத்தனை நாள் தான் அப்படியே இருக்கமுடியும். இப்போதிருக்கும் குழந்தைகள்தான் ஏழு வயதிலும் எட்டு வயதிலும் உட்கார்ந்துவிடுகிறார்களே. இதன் முகத்தில் வேறு சமீப காலங்களில் பளபளப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. அப்பளமும் ரசமும் தான் முக்கால்வாசி நேரம் என்றாலும், ரத்தத்தில் நிலைத்திருக்கும் பழைய வாழ்வின் மிச்சம் முகத்தில் வழிந்த வண்ணம் இருக்கிறது என்று நினைத்தாள். அப்படி யோசிக்கையில் பகீரென்று இருந்தது ராசத்துக்கு.

p64d.jpg

சுமித்ரா சமைந்தபோது, இப்போதா அப்போதா என்று தள்ளாடிக்கொண்டிருந்த, சரக்குகள் வாங்கிப்போட்டு நிறைக்க முடியாத பலசரக்குக் கடையை மூட நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்கள் எல்லாரையும் தெரியச் செய்திருந்த பலசரக்குக் கடை, எந்த வீட்டில் கல்யாணத்துக்குத் தயாரான பெண் இருக்கிறாள், மாப்பிள்ளை இருக்கிறான் என்பதை வெறும் தகவலாக,  தேவைப் படுபவர்களிடம் ஸ்நேக பூர்வமாகப் பகிர்ந்து, அது அப்படியே வளர்ந்து, அவரிடம் போய்க்கேட்கலாமே என்று கொஞ்சம் கொஞ்சமாகக் கடைக்கு ஆட்களை வரவழைத்தது. வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட கடையில் இதற்காகவாவது ஆட்கள் வருவது ஆறுதலாக இருந்தது கோவிந்தனுக்கு. யாரோ ஒரு வெளியூர்க்காரனுக்கு இவர் சொன்ன அந்த வரன் திகையவும் பணம் என்று அதற்காகக் கொஞ்சம் அவன் கொடுத்ததை வாங்கத் தயங்கி மறுத்தபடியே இருந்தார். அவன் வலுக்கட்டாயமாக அதைச் சட்டைப்பையில் திணித்து விட்டுப்போன நாளில் ஒருவிதத்  தத்தளிப்புடன் அவர் வீட்டுக்கு வந்தது இப்போதும் அவர் நினைவில் இருக்கிறது.

அன்று அவர் வீட்டையடைந்தபோது இரண்டாவது மகள் நித்யா ருதுவாகியிருந்தாள். முதல் மகள் ஆனபோது பக்கத்து வீட்டு அத்தையை அழைத்துக் குழந்தையைப்   பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, எட்டி எட்டி நடந்து கடைக்குப் போய் அங்கு சில வாடிக்கையாளர்கள் நிற்பதைப் பார்த்துத் தயங்கி, தூரத்திலிருந்தே ‘இங்க வாங்களேன்...’ என்று கைகாட்டிப் புருஷனை வரவழைத்துக் கூச்சத்துடன் அவனிடம் அதைத் தெரிவித்த ராசம், தன் இரண்டாவது மகள் வயசுக்கு வந்தபோது அவருக்குத் தகவல் சொல்லாமல், அவளைக் குளிப்பாட்டி முற்றத்தை ஒட்டிய நடையில் ஜமுக்காளத்தை விரித்து அதில் உட்கார வைத்துவிட்டு அவருக்காகக் காத்திருந்தாள். அவர் வந்தபோது வீடு அமைதியாக இருந்தது. சுமித்ராதான், “தங்கச்சி உக்காந்துட்டாப்பா” என்று தந்தையிடம் வந்து சொன்னாள். அந்தத் தரகுக் காசுடன் மீதி கொஞ்சம் காசுபோட்டு, மயில் கண் நிறத்தில் ஒரு பட்டுப் பாவாடையும் மஞ்சள் நிறத்தில் மேல்சட்டையும் வாங்கி வந்தார். `எதாவது பொருத்தம் இருக்கா இந்தப் பாவாடைக்கும் சட்டைக்கும்...’ என்று ராசத்துக்குத் தோன்றினாலும்,  ‘அவளுக்கு நல்லாதான் இருக்கும்’ என்ற சமாதானத்தையும் அவளால் உடனே அடைந்துவிட முடிந்தது. எதற்கு அழுதுகொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் குழப்பத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தவளுக்கு அந்தப் புத்தாடை பெரும் ஆசுவாசத்தை அளித்தது.

கடையை நிரந்தரமாக மூடியதும் முழுநேர கல்யாண புரோக்கராக மாறியதும், குளிர்கால அந்தி,  ராத்திரியாவதைப்போல அவரது புலனுக்குத் தட்டுப்படாமல் நடந்தேறியது. “நம்ம கோவிந்தன் பய...” என்று சொல்லிக்கொண்டிருந்த கிழடுகள் ஒவ்வொன்றாக மரித்ததற்கும், “கோவிந்தன் மாமா” என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் “தரகர் மாமா” என்று சொல்லத் தொடங்கியதற்குமான கால மாற்றம்கூட இப்படித்தான் மயங்கி மயங்கிப் புகைமூட்டமாக அவரது மனதில் நிலைத்திருக்கிறது. பின்னந்தியில் தூரத்து மரச்செறிவின் கருமைமீது கவிழும் அத்துவானத்தின் பொன்சாந்தைப்போல அதில் மின்னுமொரு நிலையாமை கவிந்திருக்கிறது.

மூன்றாவது மகள் வாணி உட்கார்ந்தபோது வீடு கிட்டத்தட்ட மயான அமைதிக்குப் போனது. அவர் வீட்டை வந்தடைந்த அன்றைய இரவில் மின்சாரம் தடைப்பட்டுத் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. வழக்கம் போல வீதிவரை கசிந்து வழியும் தொலைக்காட்சித் தொடர்களின் வசனங்கள்கூட இல்லாமல் தெரு அமைதியாக இருந்தது. அன்று மட்டும் மூன்று வரன்களைப் பார்ப்பதற்காக அலைந்திருந்தார். மூன்றில் ஒன்றுகூட சம்பந்தப்பட்டவர்களது மனதுக்குப் பிடிக்காமல்போக, வெறும் பேருந்துச் செலவைத் தாண்டிப் பணமாக ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் பார்க்கும்போது குழந்தை தீபாவளிக்கு எடுத்திருந்த அந்தப் புதுச் சட்டையை உடுத்தியிருந்தாள். ஒன்றிரண்டு முறை போட்டதால் பழசாகிவிடுமா என்ன. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவளும் கூடத்தில் படுத்திருந்தாள். ஒரே போர்வையில் எல்லாக் குழந்தைகளும் உறங்கிக்கொண்டிருந்தன. இவர் சாப்பிட்டு முடித்தவுடன் திண்ணைக்கு வந்து வெற்றிலை சீவல் போடும்போதுதான் ராசம் இவரிடம் தகவலைச் சொன்னாள். ஓ அப்படியா... என்று அனிச்சையாக அவரது தலை வீட்டின் உள்பக்கம் திரும்பியது. எதுவும் தெரியவில்லை தான். நான்கு தப்படிதான் இருக்கும் என்றாலும் குறுக்கே மடங்கலாக ஒரு சுவர் இருக்கிறதே திண்ணைக்கும் கூடத்துக்கும். அதற்குமேல் மனைவியிடம் சொல்வதற்கு அவருக்கு ஒன்றும் இல்லை. இருந்தாலும் அந்தக் குழந்தையைச் சமீபித்து அதன் தலையைத் தடவிக்கொடுக்க வேண்டும்போலத் தோன்றியது அவருக்கு. வழக்கத்தைவிடக் கூடுதலாக விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த சுண்ணாம்பை வெற்றிலையின் பின்பக்கம் தடவிக் கொண்டிருந்தார். ராசமும் அவரது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து வெறிச்சோடிக்கிடந்த தெருவைப் பார்த்தாள்.

p64e.jpg

அவரிடம் கேட்பதற்கு ஒன்றுமே இல்லை அவளுக்கு. அவரிடம் குறைபட, கோபப்பட, வருத்தப்பட எதுவும் இல்லாமல் போனதை நினைத்து அவளுக்குத் துக்கம் பெருகியது. இத்தனை வருடத் தாம்பத்யத்தில் அவரிடம் அதிருப்தியே தோன்றியதில்லை அவளுக்கு. இத்தனைக்கும் அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த நகை நட்டு உட்பட, குடும்பத்தின் சொத்தாக அவருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட பலசரக்குக் கடை வரைக்கும் எல்லாவற்றையும் ஆவியாக்கிவிட்டிருக்கிறார்தான். ‘இருந்தாலும் என்ன’ என்றே அவளுக்குத் தோன்றும். இப்படி அலைந்து திரிந்து வருகையில், வளர்ந்த குழந்தைகள் வீட்டில் இருப்பது பற்றியெல்லாம் கவலைப் படாமல், அவருடைய கால்களை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அமுக்கி விடுபவள்தான் அவள். இன்று அவளுக்கு அப்படிச் செய்யத் தோன்றவில்லை. மனது வெறுமையில் அலைந்தது. சோர்வாகவும் இருந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தனக்குள்ளே சொல்லிக்கொள்பவரைப் போல  “நானும் போற இடத்துல சொல்லிக்கிட்டுதான் இருக்கேன்... பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... பொருத்தமா எதாவது வந்தா முடிச்சிடலாம்தான்... எனக்கு மட்டும் என்ன, பெரியவளைப் பற்றி நினைப்பு இல்லாமலா இருக்கு...” என்றார்.   அவர் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது உள்ளிருந்து போர்வை சரசரக்கும் ஒலி கேட்பதுபோல இருந்தது. அடுத்த கொஞ்ச நேரத்தில் அடுக்களைக்கு நடக்கும் ஒலியும் தண்ணீர் மொண்டு குடிக்கும் சத்தமும் கேட்டது. இருவரும் சம்பாஷணையை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார்கள்.

ராசம்தான் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.  “எனக்கென்னவோ அடுத்தடுத்து புள்ளைங்க உக்காரும்போது பெரியவளை நினைச்சி பதட்டமா இருக்கு. எரிச்சல்ல பல நேரங்கள்ல அவளையே சபிச்சிக் கொட்டிடுறேன் வேற. எனக்கு நான் செய்றது தப்புன்னு தெரியுதுதான். ஆனாலும் என்ன கட்டுப்படுத்திக்க முடியல. அவ திருப்பி ஒரு வார்த்தை,  ‘அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்...’ அப்படின்னு கேட்டா கூட பரவால்ல. பேசாம போயி கிணத்தடியில இருக்க துணி துவைக்கிற கல்லுல உக்காந்துகிட்டுத் தண்ணிய எட்டிப் பாத்திட்டிருக்கா.”  கோவிந்தனால் ராசத்தின் நிலையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. பெரியவளின் இருப்பு ராசத்தின், கோவிந்தனின் ஏதோ ஒரு தோல்வியை அறிவித்துக்கொண்டே இருப்பது போலவும், எந்தக் காலத்திலும் வெற்றிகொள்ளப்பட முடியாத நீண்ட போரொன்றின் மத்தியில் தம்பதிகள் சிக்கிக்கொண்டிருப்பதைப் போலவும்,  அந்த அலைக்கழிப்பைப் பெரியவள் ஒரு பார்வையாளரைப்போல தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதைப்போலவும் ராசம் உருவகித்துக்கொள்கிறாள் என்று நினைத்தார். இப்படிக் கோவையாக யோசித்து வார்த்தைகளால் அவள் தொகுத்துக்கொள்ளவில்லை என்றாலும்கூட, அவளுள் வளர்ந்து வளர்ந்து நிறையும் அதிருப்தியின் அடிப்படை இதுதான் என்று கலங்கலாக கோவிந்தனுக்குப் புரிந்தது.

p64f.jpg

சுமித்ரா வேறு வயதாக ஆக தன்னையே நகலெடுத்ததைப் போல மாறிக்கொண்டிருப்பதைக் காண ராசத்துக்கு அச்சமாக இருந்தது. பதினெட்டு வயதில் கல்யாணம் முடித்து இந்த வீட்டுக்கு வந்து நிறைய இடைவெளி இருந்தாலும் சடசடவென நான்கு குழந்தைகளைப் பெற்றுப் போட்டவளுக்கு ,  மூத்தவள் தனக்கு இணையாக முதிர்ந்து வீட்டை வளைய வருவது, சகிக்கமுடியாத நெருக்குதலை அளித்தது. இதற்கு எந்த வகையிலும் சுமித்ரா பொறுப்பில்லைதான். பத்தாம் வகுப்போடு படிப்பை விட்டு நிறுத்தி அவளை வீட்டு வேலைக்கு ஒத்தாசையாக நிறுத்தியது ராசம்தான். அவள் கல்லூரியோ ஏதோ ஒன்று முடித்து ஒரு வேலைக்குப் போயிருந்தால்கூட கோவிந்தனுக்கு உதவியாக இருந்திருக்கும். அவளுக்கும் தனது முகத்தைக் கிணற்று நீரில் பார்த்துப் பார்த்து மாய வேண்டிய அவசியம் வந்திருக்காது. இப்போது இதை யோசிப்பதற்கு ஒன்றும் இல்லைதான்.

ஆனாலும், அடுத்தடுத்து குழந்தைகள் வயதுக்கு வரும் போது பெரியவளது முகத்தை மிகுந்த கழிவிரக்கத்துடன் ராசம் பார்க்கத் தொடங்கியிருந்தாள். அது தாங்கமுடியாத அழுத்தத்தைச் சுமித்ராவுக்கு அளித்தது. “என்னை ஏம்மா அப்படிப்பாக்குற...” என்று, மூன்றாவது மகள் வயதுக்கு வந்த அன்று அம்மாவைப் பார்த்துச் சுமித்ரா கேட்டேவிட்டாள். இத்தனைக்கும் அவள்தான் தங்கையின், உடைகளைக் களையவைத்துத் துவைத்து, குளிப்பாட்டி, அவளது கூந்தலை உலர்த்தி, ஒரு பருத்தித் துண்டால் அவளது சிகையைக் கொண்டையாகக் கட்டி, ‘உடனே படுக்காத... கொஞ்ச நேரம் உக்காரு...’ என்று சொல்லி அவளது கையில் ஒரு வார இதழைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி, சமைத்திருந்ததை அவளுக்கும் ஒரு தட்டில் போட்டுச் சாப்பிட வைத்திருந்தாள். இப்போது கடைக்குட்டியைப் பார்க்கும்போதெல்லாம் அவள் எப்போது உட்கார்ந்துவிடுவாளோ என்கிற பதற்றம் ராசத்தை அலைக்கழித்தது. அவள் ஓடினால், நடந்தால்கூட அவளைக் கடிந்துகொண்டாள். அத்தகைய நேரங்களில் ராசத்தின் பார்வை அனிச்சையாகச் சுமித்ராவை நோக்கித் திரும்புவது தவிர்க்க முடியாததாக இருந்தது. சுமித்ரா அந்த எரிச்சலின் அடர்த்தியை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று அடுக்களையில் தன்னை மறைத்துக்கொண்டாள் அல்லது கிணற்றடியில் புதைத்துக் கொண்டாள். இப்போதெல்லாம் ராசத்தின் முகத்தை மட்டுமல்ல,  கடைக்குட்டியின் முகத்தைப் பார்த்தால்கூட சுமித்ராவுக்கு இனம்புரியாத நடுக்கம் வந்துவிட்டிருந்தது.

குழந்தைகள் கல்லூரிக்கும் பள்ளிக்கும் சென்றுவிட,  ராசமும் சுமித்ராவும் தனித்து விடப்படும் பொழுதுகளில் இருவருக்கும் பேசிக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இரண்டு தனித்த உருவங்கள், நிழல்களைப்போல அந்த வெக்கையில் எப்போதும் அலைந்து கொண்டிருந்தன. திட்டுவதற்காக மட்டுமே உசந்த குரலில் கிணற்றடியில் உட்கார்ந்திருப்பவளை நோக்கி அழைப்பவளாக மாறிப்போயிருந்தாள் ராசம். அப்படி எதைத்தான் அந்தக் கிணற்று நீரில் பார்க்கிறாளோ பகலெல்லாம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் போதும், உடனே பிரமை பிடித்தாற்போல் கிணற்றடியில் போய் சமைந்துவிடுவதுதான் நடக்கிறது என்று புலம்பித் தீர்த்தாள்.

ஆனால், சுமித்ராவுக்கு அதுவொரு தனித்த உலகமாக இருந்தது. ஆழ்ந்த அமைதியில் இருக்கும் கிணற்று நீர் எங்கோ அவளது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுபோல அவளை உணரச்செய்திருந்தது. நீர் மேலேறிக் கிடக்கும் மழைக்காலங்களின் மதிய வெளிச்சத்தில், நிழலின் மீதான இன்னொரு குட்டி நிழலைப் போன்று பதிந்திருக்கும் அவளது முகத்தைக் கிணற்று நீரில் உற்றுப்பார்க்க முயன்றபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. தங்கைகள் வீட்டில் இல்லாத பகல் பொழுதுகளில் அவள் உணர முடிந்த நீண்ட தனிமை அந்தக் கிணற்றின் பாசி படர்ந்த இரு படிக்கட்டுகளை ஒத்ததாக இருந்தது. அதன் வசீகரம் பல நேரங்களில் ரகசியமான அழைப்பைப் போல அவளது அந்தரங்கத்தில் ஊடுருவியது. அவள் மிகத் தீவிரமாகக் கிணற்றுடன் உரையாடத் தொடங்கியிருந்தாள். தூரத்தில் கொஞ்சமாக அசைவுற்றபடியே கிடக்கும் நீர்ப்பரப்பிலிருந்து அரூபமான இசைக்கோவை உருவாகி வந்து அவளை முழுதும் நனைத்தது. உச்சிப்போதில் அதன்மீது பட்டுத் தெறிக்கும் கிரணங்கள் அதிலிருந்து ஒருவித சௌந்தர்ய லகரியை உண்டு பண்ணிக் கிணற்றின் புறம் நோக்கிப் பரவச்செய்தன. அந்த ஒலியும் ஒளியும் கலந்த பிரவாகம் தனது மேனியை ஊடுருவுவதை, நனைப்பதை, மூழ்கடிப்பதைச் சுமித்ரா உணரத்தொடங்கினாள். உடலும் மனசும் இறகாகும் தருணங்களில் வாளியைப் பிணைத்திருக்கும் கயிற்றில் அவள் உணர்ந்த சொரசொரப்பும் குளிர்ச்சியும் அந்த ஏகாந்தத்துக்கு வலுக் கூட்டின. அவள் கட்டமைத்திருந்தது அவளுக்கே அவளுக்கான தனித்த உலகமாக மாறியிருந்தது. பட்டைகள் உரிந்திருக்கும் கிணற்றை ஒட்டிய வாழையின் வழவழப்பை ஒரு கையில் அணைத்துக்கொண்டு ஒரு காலைத் துணி துவைக்கும் கல்லில் ஊன்றிக்கொண்டு கிணற்றை எட்டிப் பார்க்கும்போது, அங்கு நிகழ்வது பிரபஞ்ச நிலைமாற்றமாக இருந்தது அவளுக்கு. விவரிக்க முடியாத வலையொன்றில் விரும்பியே தன்னைச் சிக்கக் கொடுத்தவள் போல அவள் மாறிப்போயிருந்தாள்.

அப்படி அவள் ஒவ்வொரு முறை பரவசத்தின் உச்சியை அடையும்போதும் அதைச் சுக்குநூறாக்கும் குரல் ராசத்தினுடையதாக இருந்தது. கிணற்றின் பிரவாகத்தில் மிதந்துகொண்டே இருக்கும் ஒருத்தியை அப்படியே மயிரைப் பற்றித் தூக்கிப் புழுக்கள் நெளியும் எருக்குழியில் தள்ளிவிடுவது போல இருந்தது சுமித்ராவுக்கு. சமீப காலங்களில் மிக ரகசியமான ஒரு வேட்கையால் உந்தப்படுபவளாக அவள் இருந்தாள். அந்தியில் கிணற்றில் கவியும்  இருட்டின் மீது, அதை ஊடுருவி ஊடுருவி எல்லைகளற்ற அதன் வண்ணத்தில் தடைகளற்ற அதன் பிரவாகத்தில் கலந்துவிட வேண்டும் எனும் தீவிரம் மேலிட்டது. சமநிலையான நேரங்களில் அந்தத் தீவிரத்தின் அடர்த்தி நினைவுக்கு வந்து அவளது உடலைச் சிலிர்க்கச் செய்தது. கிணற்றுக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கும் வாளியாகத் தன்னை உருவகித்துச் சிரித்துக் கொள்ள முயன்றாள். ஆனால், அது அருவருப்பாக இருந்தது. அதன் கட்டுப்பாடும் எல்லையும் அவளுக்கு ஆபாசமாகத் தோன்றின.

உள்ளே வந்து குளித்துச் சாப்பிட்டுவிட்டு கோவிந்தன் வெளியே கிளம்பத் தயாரானார். வார இறுதி நாள் என்பதால் எல்லாக் குழந்தைகளும் வீட்டில் இருந்தன. “நீங்கள் நேராக அந்த ஜோசியக்காரரின் வீட்டுக்கு வந்துவிடுங்கள்” என்று சொல்லி, வந்திருந்தவர்களை அனுப்பி யிருந்தார். என்னதான் கருநாக்குக்காரராக இருந்தாலும் செவிட்டு ஜோசியரிடம்தான் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பதில் வந்திருந்தவரும் பிடிவாதமாக இருந்ததால், “சரி அப்படியே செய்யலாம்” என்று சொல்லியிருந்தார். அவரிடம் போவதில் இவருக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், ஆறு கிலோமீட்டருக்குமேல் இருக்கும். பஸ்ஸில் போக வேண்டும். ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தான் பேருந்து. மேலும், அந்த ஜோசியருக்குச் சில வார்த்தைகள் வேகமாகப் பேசினால் புரியாது, சில வார்த்தைகளை மெதுவாகப் பேசினால் புரியாது என்று அவரது செவித்திறன் விநோதமாக இருந்தது. கோவிந்தன் கூட இருப்பது  பார்ட்டிகளுக்கு உபயோகமாக இருந்தது. மேலும், வரன் பொருத்தமாக இருந்தால், அப்படியே அடுத்த வண்டியைப் பிடித்து அவர்கள் வீட்டுக்குப் போய் மற்ற ஏற்பாடுகளைப் பார்க்கலாம்... அலைச்சல் மிச்சம் என்று கோவிந்தனும் நினைத்தார்.

p64g.jpg

கிளம்பித் திண்ணைக்கு வந்து செருப்பை மாட்டும்போது, ராசம் நிலைப்படிக்கு அருகில் வந்து “ஏங்க, போறதுதான் போறீங்க... அப்படியே நம்ம பொண்ணோட ஜாதகத்தையும் பாத்துட்டு வாங்களேன்...” என்று சொன்னாள். அவருக்கு வேண்டாம் என்று தோன்றியது. ஆனால், அதைச் சொன்னால் ராசம் சங்கடப்படுவாள் அல்லது ஏற்கெனவே தான் அதைப் பார்த்திருப்பேன் என நினைப்பாள் என்று யோசித்தார். “சரி எடுத்துட்டு வா...” என்று சொல்லிவிட்டுத் திண்ணையில் சற்று உட்கார்ந்தார். ஜாதக நோட்டு கசங்காமல் மடங்காமல் புத்தம் புதிதாக இருந்தது. இதுவரை ஒருமுறைகூட அதைப் புரட்டிப் பார்க்காமல் இருந்திருக்கிறோம் எனும் நினைவு ஆச்சர்யத்தில் அவரது புருவத்தை நெளியச் செய்தது.  ஏற்கெனவே இருந்த ஜாதகப் பையில் அதையும் வைத்துக்கொண்டு, அவள் கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தார்.

ஜோசியரின் வீட்டை அடைந்தபோது நல்ல உச்சியாகியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே கூட்டம். திண்ணையிலும்,  வீட்டுக்கு வெளியே இருந்த புங்க மரத்தினடியில் கிடந்த நாற்காலிகளிலும் ஆட்கள் காத்திருந்தார்கள். காலையில் வீட்டுக்கு வந்திருந்தவர் தன்  மனைவியுடன் இவருக்கு முன்பாகவே வந்து திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, படிகளைக் கடந்து உள்ளே தலையை நீட்டி,  தாம் வந்திருப்பதை ஜோசியருக்கு கோவிந்தன் தெரியப்படுத்தினார். கர்ப்பகிரகத்தின் முன்னால் உட்கார்ந்திருப்பதைப் போல ஒரு குடும்பம் ஜோசியரின் முன்னால் உட்கார்ந்திருந்தது. வெற்றுடம்பாக நெஞ்சு வரை ஏற்றிக்கட்டிய வேட்டியுடன் அவர் கட்டங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார். கோவிந்தனும் திண்ணையில் உட்கார்ந்துகொண்டார். பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும். அந்தக் குடும்பம் ஒருவரது முகத்தை ஒருவர் ஆறுதலாகப் பார்த்துக்கொண்டு வெளியேறியது. உள்ளிருந்து ஓர் ஆள் வந்து கோவிந்தனை வரச்சொல்லிச் சைகை செய்தான்.

 “வா கோவிந்தா... வா.. வா... ரொம்ப நாளாச்சு பாத்து... இப்பல்லாம் வேற எங்கயோ போறாப்ல தெரியுது...” என்று சொல்லிவிட்டுக் கோவிந்தனைப் பார்த்து ஸ்நேகமாகச் சிரித்தார். “இல்ல... இல்ல... அப்படில்லாம் இல்ல. பார்ட்டிங்க விருப்பப்படுற இடத்துக்குப் போறோம்... எனக்கு உங்க கணிப்பு மேல துளி சந்தேகம் கிடையாது... என்று சொல்லிவிட்டு ஜாதகத்தை எடுத்துப் பவ்யமாக அவரிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்தவரின்  புருவங்கள் சட்டென்று நெறிந்தன.

“இந்தப் பொண்ணு... இந்தப் பொண்ணு இன்னேரம்...” என்று தொடங்கிவிட்டு பார்ட்டிகளின் முகத்தைப் பார்க்காமல் கோவிந்தனைப் பார்த்தார். அன்று எழுந்து போனதைப் போன்ற அதே உணர்ச்சிகளற்ற மையமான முகம்.
 “இல்லியே... நாங்க குடுத்தது பையன் ஜாதகமாச்சே...” என்று, கூட வந்திருந்தவர்கள் குழப்பத்துடன் ஜோசியரையும் கோவிந்தனையும் பார்த்தபோதுதான் அவருக்கு உறைத்தது...

“அடடா.. இல்ல.. இல்ல.. தப்பு நடந்துபோச்சு...” என்று சொல்லிவிட்டு அந்த ஜாதக நோட்டை அவரது கையிலிருந்து பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு அந்தப் பையனின் ஜாதகத்தைப் பையிலிருந்து எடுத்து ஜோசியரின் முன்னால் வைத்தார். ஜோசியர் பக்கத்தில் இருந்த பித்தளைச் சொம்பிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு அந்த ஜாதகத்தைப் பார்க்கத் தொடங்கினார். கோவிந்தனுக்கு  அங்கு உட்கார இருப்பு கொள்ளவில்லை. உடனே வீட்டுக்குப் போகவேண்டும் என்று இருந்தது.

p64h.jpg

“என்ன கோவிந்தா எதாவது கேக்கணுமா... கேளு...” என்றார் ஜோசியர். வாய் வரை வந்த கேள்வியை அப்படியே அடக்கிக்கொண்டு,  “ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல...” என்று கோவிந்தன் அவசரமாக மறுத்தார். அவரை அரைக்கண்ணால் பார்த்துவிட்டு ஜோசியர் மீண்டும் ஜாதகத்தில் ஆழ்ந்தார். கோவிந்தனால் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “மன்னிக்கணும்...” என்று சொல்லிவிட்டு அவர்களது பதிலை எதிர்பாராமல் எழுந்து நின்றார். பிறகு விடுவிடுவென நடந்து வீட்டை விட்டு வெளியில் வந்தார். “அந்தப் பொண்ணு ஜாதகம் யாருது...” எனும் ஜோசியரின் குரல் அவரைத் துரத்தித் தேய்ந்தது.

அவர் வீட்டையடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருக்கவில்லை. அவர் தன் செருப்புகளை உதறும்போது வீட்டின் திண்ணையை ஒட்டிய மாடத்தில் சிறிய அகல் விளக்கு எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தார். இருட்டு இன்னும் முழுமையடையாததால்  தீபம் அதன் தீவிரத்தை எட்டாமல் அலைந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே யாருமே இல்லை. அவர் அதே வேகத்துடன் கிணற்றடிக்குப் போனார். அங்கே சுமித்ராவும் கடைக்குட்டியும் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும் அது ஓடிவந்து கைகளைப் பிணைத்துக் கொண்டது. “எல்லோரும் கோயிலுக்குப் போயிருக்காங்கப்பா.... அப்புறம், இந்தக் கிணத்துல இருந்து மியூசிக் வருதுப்பா” என்று சொல்லிக்கொண்டே அது அவரைக் கடந்து உள்ளே ஓடியது. ததும்பும் விழிகளுடன் அவர் சுமித்ராவைப் பார்த்தபோது, “ஏம்ப்பா செத்துடுவேன்னு பயந்துட்டியா...” என்று மின்னும் கண்களுடன் கேட்டாள். “ச்சே...ச்சே... இல்லம்மா” என்று சொல்லிக்கொண்டே அவரும் கிணற்றினுள்ளே எட்டிப்பார்த்தார். முழு இருட்டாக இருந்தது. அகல் விளக்கின் ஒளியைப் போன்ற மெல்லிய இசையொலியை அவரால் உணர முடிந்தது. அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.

 

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.