Jump to content

சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்


Recommended Posts

சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

 
சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்
 
புதுடெல்லி:

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் S9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச நுகர்வோர் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸி S9 சீரிஸ் விற்பனை ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒவ்வொரு நிறுவனமும் தனது ஃபிளாக்ஷிப் சாதனங்களை அறிமுகம் செய்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.

கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தென் கொரியாவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இதே தேதியில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் பிப்ரவரி 26-ம் தேதி வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
201712171134006971_1_Samsung-Galaxy-S8-Plus-1._L_styvpf.jpg

2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஐபோன் X தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கேலக்ஸி S8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விட ஒரு மாதம் முன்னதாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, முறையே 5.8 மற்றும் 6.2 இன்ச் அளவு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் அமெரிக்காவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சர்வதேச சந்தையில் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் ஆப்பிள் ஃபேஸ் ஐடிக்கு போட்டியாக புதிய கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் ஐரிஸ் ஸ்கேனர் மேம்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இம்மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது. எனினும் இது குறித்து சாம்சங் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/17113357/1135074/Samsung-Galaxy-S9-series-Rumoured-to-launch-for-MWC.vpf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சாம்சங் கேலக்ஸி S9 வெளியீட்டு தேதி அறிவிப்பு

 
அ-அ+

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்த தகவலை அந்நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.

 
சாம்சங் கேலக்ஸி S9 வெளியீட்டு தேதி அறிவிப்பு
 
லாஸ் வேகாஸ்:
 
சாம்சங் நிறுவனத்தின் 2018 முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவலை சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ அறிவித்துள்ளார். 
 
அதன்படி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018) விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ள நிலையில், ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் என இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
201801110955492851_1_Galaxy-S9-patent-1._L_styvpf.jpg
 
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன்களின் கேமரா வன்பொருள் அம்சங்களில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் டூயல் கேமரா லென்ஸ் வழங்காமல் இம்முறை ஒற்றை கேமரா யூனிட் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. 
 
மேலும் புதிய ஸ்மார்ட்போன்களின் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளேவினுள் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் எக்சைனோஸ் 9810 சிப்செட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு தாமதமாகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/01/11095550/1139625/Samsung-chief-confirms-Galaxy-S9-launch-at-MWC-this.vpf

Link to comment
Share on other sites

  • 2 months later...

சாம்சங் வலைத்தளத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்

 
அ-அ+

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டு வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.

 
 
 
சாம்சங் வலைத்தளத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
கோப்பு படம்
புதுடெல்லி:
 
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாட்டு வலைத்தளங்களின் அதிகாரப்பூர்வ சப்போர்ட் பக்கத்தில்  லீக் ஆகியுள்ளது. புதிய தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் SM-N960U என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
 
முன்னதாக வெளியான தகவல்களில் நோட் 9 ஸ்மார்ட்போன் இதே குறியீட்டு பெயர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பென்ச்மார்க்கிங் வலைத்தளங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இதன் சர்வதேச மாடலில் எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
 
சமீபத்திய தகவல்கள் Androidu.ro வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ளது. அதன்படி நோட் 9 ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் வட ஆப்ரிக்கா மற்றும் தென்னாப்ரிக்கா வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் SM-N960U குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இதில் 'U' என்ற வார்த்தை புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படுவதை உணர்த்தும் வகையில் உள்ளது.
 
201803311410548443_1_Samsung-Galaxy-Note-8-pic._L_styvpf.jpg
கோப்பு படம்
 
சாம்சங் அதிகாரப்பூர்வ சப்போர்ட் பக்கங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும் கீக்பென்ச் வலைத்தளத்தில் வெளியான தவல்கள் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
 
கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் போன்றே புதிய ஸ்மார்ட்போனும் சிங்கிள் கோரில் 2190 புள்ளிகளையும், மல்டி-கோர்களில் 8806 புள்ளிகளை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுவதை விட முன்னதாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
 
இத்துடன் புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்ற டிஸ்ப்ளே முந்தைய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
 

https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/31141054/1154264/Samsung-Galaxy-Note-9-Spotted-on-Company-Site.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.