Jump to content

உழைப்பால் உயர்ந்தவர்கள்: விபத்தே என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது


Recommended Posts

உழைப்பால் உயர்ந்தவர்கள்: விபத்தே என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது

 
20170811_155312.jpg

இவ்வாண்டு 2017 யாழ். கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சியாளர் கண்காட்சியின் போது....

இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள், சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற சூழலில் சில நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் புதுவளவு என்கிற இடத்தில் வசிக்கும் மார்ட்டீன் ஜெயராஜா நிர்மலா என்கிற குடும்ப பெண்ணொருவர் ஜெயா உற்பத்திகள் என்கிற பெயரில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளை 2014 மாசி மாதம் முதல் தயாரித்து வருகிறார்.

அவர் சொந்தமாக தயாரிக்கும் ஒவ்வொரு கைப்பையும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சுயதொழில் முயற்சியாளரின் உற்பத்திகளோ தரத்தில் மிகவும் மேம்பட்டவையாகவே இருக்கின்றன.

உள்ளூர் உற்பத்தி இவ்வளவு தரமாக உள்ளதா என எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. யதார்த்தமான விலையில் விற்கும் உற்பத்திப் பொருட்களை நிர்மலாவின் கணவர் கடைகளுக்கு விநியோகித்து வருகிறார்.

சுயதொழில் முயற்சியாளர் நிர்மலாவுடன் பேசினோம், என் கூட குடும்பத்தில் இரண்டு பொம்பிளை சகோதரங்களும், ஒரு ஆண் சகோதரமும் இருந்தார்கள். அப்பா சின்ன வயதிலேயே இறந்து விட்டார். இரண்டாவது அக்காவும் நோய் வாய்ப்பட்டு ஆசிரியர் கலாசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். அவர் இறந்த கவலை தாங்காமல் சில நாள் செல்ல அம்மாவும் இறந்துவிட்டார். நான் 96 ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். அன்றிலிருந்து சாதாரண வருமானத்துடன் தான் வாழ்ந்து வருகிறோம்.

நான் இந்த பெண்களுக்கான கைப்பைகள் தயாரிக்கும் தொழிலுக்கு வந்த விதம் கொஞ்சம் விசித்திரமானது. எனது கணவர் பாதையில் நடந்து போகும் போது பின்னால் வந்த வாகனம் மோதி கடுமையான விபத்துக்கு உள்ளாகினார். விபத்தை நேரில் பார்த்த பலரும் அவர் பிழைக்கமாட்டார் எனவே நினைத்தனர். காதால், மூக்கால் எல்லாம் இரத்தம் வழிந்த சீரியஸாக தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பின்னர் ஒருவாறு கடவுளின் கிருபையால் குணமடைந்தார்.

என் கணவர் அழகுசாதனப் பொருட்கள் விற்கும் கடையிலேயே வேலை செய்தார். விபத்துக்கு பிற்பாடு ஞாபகசக்தி சற்று குறைந்து விட்டது. இதனால் வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. அந்த நேரம் உதவி செய்வதற்கு பல உறவுகள் முன் வந்தனர். ஆனால், எனது கணவர் அந்த உதவிகளை ஏற்க மறுத்துவிட்டார்.

அந்த நேரம் நாங்களே ஏன் ஒரு சிறிய தொழிலை தொடங்க கூடாது என கணவருக்கு ஆலோசனை கூறினேன். அவரும் சம்மதித்தார். நான் ஏற்கனவே பெண்களுக்கான சாறிபிளவுஸ், சட்டைகளை தைத்து வந்தேன். எனவே அது தொடர்பிலான ஒரு தொழிலை செய்வது பற்றியே சிந்தித்தேன். பக்கத்து கடைக்குப் போய் பெண்களுக்கான கைப்பைகள் இரண்டு வாங்கி வந்து அதன் தையல்களைப் பிரித்துப் பார்த்தேன். ஒவ்வொரு தையலாக பிரித்து பார்த்து அதன்படி தைக்க முயற்சித்தேன். இறுதியில் அது வெற்றியளித்தது.
21754263_10155752300993330_121876335_n.jpg

வீட்டில் தையல் மிஷினின் உதவியுடன் கைப்பைகள் தயாரிக்கும் காட்சி... 


இப்பொழுது நாம் பல்கலைக்கழக, பள்ளிக்கூட மாணவிகளுக்கும், வேலை செய்யும் பெண்களுக்கும், வீட்டுப் பெண்களுக்கும் பொருத்தமான கைப்பைகளையே அதிகம் தயாரித்து வருகிறோம். 25 வகைக்கும் மேலான கைப்பைகள் தயாரித்தாலும் சந்தையில் 5 வகையான கைப்பைகளே அதிகம் விற்பனையாகிறது.

எமது உடுவில் பிரதேச செயலகமும் எங்களை பல்வேறு வழிகளிலும் ஊக்குவித்தது. முதலில் நிலத்தில் வைத்து தான் கைப்பைக்கான அளவுகளை வெட்டுவேன். எனது நிலையைப் பார்த்த பிரதேசசெயலக அதிகாரிகள் அலுமாரி, தையல்மிஷின், றாக்கைகள் போன்றவற்றை தந்துதவினார்கள். கண்காட்சிகள் நடாத்தும் போது எனக்கும் அறிவிப்பார்கள். அவை தான் எனது உற்பத்திப் பொருட்களை பலரிடம் சென்றடையவும் வைத்தது. இறுதியாக நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற சிறுகைத்தொழில் கண்காட்சியிலும் கலந்து கொண்டேன். அதிலும் பல்வேறு வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் கிடைத்தன. குறிப்பாக எங்கள் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் மக்களும் எனது கைப்பைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

எங்களுக்கு இப்போது பிரதான பிரச்சினையாக உள்ளது இடவசதி தான். சீமெந்திலான கொட்டகையும், தையல் உபகரணங்களும் ஏற்பாடு செய்து கொடுத்தால் இன்னும் இரு மடங்கு கூடுதலாக பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். நான் சாதாரண தையல் மெசினில் தான் இவ்வளவு
கைப்பைகளையும் தயாரித்து வருகின்றேன். கைப்பைகள் தைப்பதற்கென்று சிறப்பு மெசின்கள் இருக்கின்றன. அவற்றை வாங்கினால் இன்னும் வினைத்திறனுடன் இந்தத் தொழிலைக் கொண்டு
நடத்தலாம்.

சரியான விலைக்கு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தலிலும் சிக்கல்களை எதிர்நோக்கிறோம். எனது கூலியையும் சேர்த்து இலாபத்துடன் வருமானம் சற்றக் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதனை வைத்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது. ஆனால்
உற்பத்தியை இன்னும் பெருக்கி அதிக லாபத்தை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

என் போன்று கஷ்டப்படும் ஏனைய பெண்களுக்கும் இதனைக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். என சமூக அக்கறையுடன் கூறி முடித்தார்.
bags.jpg

சிறுதொழில் முயற்சியாளர் நிர்மலா தயாரிக்கும் கைப்பைகளில் சில.... 


எமது தேசத்தில் இப்படி ஆயிரம் நிர்மலாக்கள் இருக்கிறார்கள். உள்ளூரில் எமது பெண்கள் இந்த உற்பத்திகளை வாங்கிப் பயன்படுத்துவதால் எமது தொழில் துறைகள் பன்மடங்கு வளர்ச்சியடையும்.

போர் முடிந்த இந்த காலப்பகுதியில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இப்படியான சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தரும்.

அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.

அவற்றை வழங்கி ஊக்குவித்தால் சிறுகைத்தொழில் முயற்சிகள் வளரும் போது எமது தேசத்தின் பொருளாதார பலம் அதிகரிக்கும். தமிழர்கள் பொருளாதாரத்தில் மேலும் பலமடைவர்.

உற்பத்திகளை வாங்க, ஆலோசனைகளுக்கு நிர்மலாவின் கைபேசி எண்: 0094 774 585094

துருவன்-


 
2.jpg
 
3.jpg

http://www.nimirvu.org/2017/09/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி இன்னும் முன்னேற வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தைப்படுத்தல் சம்பந்தப்பட்டவர்கள் இப்படியாவனவர்களை கவனத்திலெடுத்தால் மக்கள் வளம் பெறுவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.