Jump to content

ஆபரேஷன் புலி


Recommended Posts

ஆபரேஷன் புலி - சிறுகதை

 

 

p44b_1513144245.jpg

மூன்று காரணங்களுக்காக, எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்துவது என நாங்கள் முடிவெடுத்தோம்.

ஒன்று, புலி எந்த நேரமும் முழு போதையில் தெருவில் அங்குமிங்கும் உலாத்திக்கொண்டே இருப்பது.

இரண்டு, புலி முழு போதையில் எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் உள்ளே நுழைந்து சமையலறையில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, சோற்றை எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது.

மூன்று, எங்கள் தெருவுக்குள் புதிதாக யார் நடந்து சென்றாலும் அவர்களை நிறுத்தி அலப்பறை கொடுத்து, அவர்கள் சட்டைப்பையில் கையை விட்டு, தனது குடிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்வது.

இது அப்பட்டமான ரெளடித்தனம்; பகல் கொள்ளை.

p44a_1513144258.jpg

எங்கள் தெரு, பேருந்துநிலையத்துக்குச் செல்லும் பெரிய சாலையையொட்டிய இன்னொரு குறுகிய சாலை. எனவே, புலியின் நடமாட்டம் அறியாத கிராமத்து மனிதர்களே பெரும்பாலும் புலியின் இரையாகச் சிக்குவார்கள். ஒருசில நேரத்தில் அப்பாவித்தனமாகத் தோற்றமளிக்கும் உள்ளூர் இளைஞர்கள் சிக்கிக்கொள்வார்கள். இதில்தான் எங்கள் தெருவுக்கும், இங்கே வசிக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் பெரும் அவமானம் வந்து சேர்கிறது.  ஆனால், புலியை யாரும் ஒன்றும் பண்ண முடியாது. ஏனெனில், புலி எங்கள் வார்டு கவுன்சிலர். அதுவும் ஆளும் கட்சி கவுன்சிலர்.

யாராலும் அசைக்க முடியாமல் தொடர்ந்து ஜெயித்துவரும் புலியின் நிஜப்பெயர் சுந்தரமூர்த்தி. அந்தப் பெயர், புலிக்கே நினைவிருக்காது. நல்ல மப்பில் உற்சாக மூடில் இருந்தால், வேட்டியைக் கழட்டி மடித்து வைத்துவிட்டு, அரை நிஜாரில் புலியாட்டம் ஆடிக் காட்டுவது புலியின் ஹாபி. அவரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன்போட்டாலும், ``ஹலோ... நான் புலி எம்.சி (முனிசிபல் கவுன்சிலர்) பேசறேன்’’ என்று சொல்வதுதான் வழக்கம்.

புலியின் அட்டகாசங்களை இனியும் பொறுப்பதில்லை என, எங்கள் தெரு இளைஞர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி, எதிர்வரும் கவுன்சிலர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி புலியைத் தோற்கடிப்பது என முடிவுசெய்தோம்.

எங்கள் வார்டு என்பது, மிக நீளமான ஒரு தெரு. அதில் ஒருசில குறுக்குச் சந்துகள், அவ்வளவுதான். மொத்தமுள்ள 1,380 வாக்குகளும் இதற்குள்ளாகவே அடங்கிவிடும். குறுகிய சந்து என்பதால், வாகனங்கள் உள்ளே வர வாய்ப்பில்லை. எனவே, எங்கள் தெருவே பசங்களுக்குக் கிட்டிப்புள், ஐஸ்பாய், கபடி விளையாடவும், பெண்களுக்குப் பாண்டி ஆடுவதற்கான கிரவுண்டாக இருந்தது. இதன் காரணமாகவே எங்கள் தெருவில் இந்த முனையிலிருந்து அந்த முனை வரையிலான அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தோம்.

சீனு வீட்டு மொட்டைமாடியில்தான் எங்கள் முதல் கூட்டம் நடந்தது. சீனுவின் அண்ணி பத்து, பன்னிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதற்காக அங்கே பெரிய கூரை வேயப்பட்டு, ஒருபுறம் பெரிய கரும்பலகை மாட்டப்பட்டிருக்கும். உட்கார பெஞ்சு, நாற்காலி எதுவும் இருக்காது. தரை முழுக்க பாய் விரிக்கப்பட்டிருக்கும். எந்தப் பக்கம் இருந்தேனும் மலைக்காற்று வீசிக்கொண்டேயிருப்பதால், ஃபேன் தேவைப்படவில்லை.

முதல் கூட்டத்திலேயே வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். சீனுதான் எங்களின் வேட்பாளர். ரொம்பப் பிகு பண்ணினான். பிறகு ஒற்றைப் பைசாகூட அவனுக்குச் செலவு இல்லை என்ற  உத்தரவாதம் தந்த பிறகே ஒப்புக்கொண்டான்.  தெருவுக்கான பொதுக்காரியம் என்பதால், செலவை நண்பர்களே பகிர்ந்துகொள்ளலாம் என்றும் முடிவெடுத்தோம்.

கோடை விடுமுறை. எனவே அடுத்த ஒரு மாதத்துக்கு டியூஷன் இல்லை. அவர்கள் வீட்டிலும் வெளியூர் சென்றிருந்தனர். மேலும் மொட்டைமாடிக்குச் செல்லும் படிகள் தெருவில் இருந்தே தொடங்குவதால், யாருக்கும் தொந்தரவின்றி இந்த இடத்தையே தேர்தல் அலுவலகமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படிப் பல வசதிகள் இருந்ததால் மட்டும் சீனுவை வேட்பாளராகத் தேர்தெடுக்கவில்லை. உண்மையில், எங்கள் செட்டில் அதுவரையில் எங்கள் தெருவில் எந்த ஒரு பெண்ணுக்கும் காதல் கடிதம் கொடுக்காத இரண்டாவது ஜென்டில்மேன் சீனு மட்டுமே. முதல் ஜென்டில்மேன் நான். `பத்தரைமாத்துத் தங்கம்’ என்பது, எங்கள் தெரு தேவதைகளின் அம்மாக்கள் சீனுவுக்கு வைத்திருக்கும் பெயர்.

``டேய் இன்ஜினீயர்... உனக்கு லீவுதானே? நீதான் எலெக்‌ஷன் ஆபீஸ் இன்சார்ஜ்’’ என்றான் மணவாளன்.

அங்கு இருந்த மொத்தம் 32 பேரில், நான் மட்டும்தான் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் அதிகமாக பொறியியல் பட்டதாரிகள் வராத 90-களின் தொடக்கம் அது. தெருவிலேயே நான்தான் முதல் இன்ஜினீயர் ஆகப்போறேன் என்பதால், அனைவரும் அப்படித்தான் அழைப்பார்கள். ஃபைனல் செமஸ்டர் லீவில் ஊருக்கு வந்திருந்தேன்.

``அடிச்சேடா லக்கி பிரைஸ்! ஜஸ்ட், எதிர்வீடுதான் வசுமதியோடது. இங்கு இருந்தபடியே தினமும் பார்த்துக்கலாம்’’ என்று  இளங்கோ காதருகே வந்து சொன்னான். வசுமதி எங்கள் தெருவின் பேரழகி. அட்லீஸ்ட் என் கண்களுக்கு. என்னைப் பார்த்தாலே முகத்தில் ஒரு வெளிச்சம் வந்துவிடும் அவளுக்கு. இரண்டு பக்கமும் ஓர் ஈர்ப்பு இருந்தது. விரைவில் ஒரு கடிதம் கொடுத்து உறுதிசெய்துகொள்ளக் காத்திருந்தேன்.

``பார்த்துக்கிறேன். ஆனா, புராஜெக்ட் ரெவியூக்கு காலேஜ்லே கூப்பிட்டா, நடுவுல ரெண்டு மூணு நாள் போய் வரவேண்டியிருக்கும்’’ என்றேன்.

``அதெல்லாம் வரப்போ பார்த்துக்கலாம்’’ என்றான் சைக்கிள் கடை ஏழுமலை. எங்கள் பள்ளித்தோழன்.

நிதிக்குழு, பிரசாரக் குழு எல்லாம் சடசடவென அமைக்கப்பட்டன.

``சரி... புலியை எப்படிச் சமாளிக்கப்போறோம்?’’ என்றான் இளங்கோ.

``சே... சே! புலி என்னிக்காவது நம்ம வார்டு ஆளுங்ககிட்ட தகராறு பண்ணியிருக்கா என்ன?” என்றேன்.

``நம்மகிட்ட ஏதாச்சும் வேலை காட்டினால், புலியோட வாலை ஒட்ட நறுக்கிடவேண்டியதுதான்’’ எனக் கருவினான் ஏழுமலை.

``புலியைக்கூட சமாளிச்சிடலாம். முத்தண்ணன் முகத்துல எப்படி முழிக்கிறதுன்னுதான் தெரியலை’’ என்றான் சீனு.

முத்து அண்ணன், எங்கள் தெருவில் விறகு மண்டி வைத்திருக்கிறார். பின்னாடியே வீடு. ரொம்ப நல்ல மனுஷன். எதிர்க்கட்சி வேட்பாளராகத் தொடர்ந்து மூன்று முறை புலியை எதிர்த்து நின்று மூன்று முறையும் தோற்றவர். எங்கள் எல்லோருக்கும் அவரின் விறகு மண்டிதான் எப்போதும் மீட்டிங் பாயின்ட். டீ கணக்கு எப்பவும் அவர் தலையில்தான் விடியும். சிரித்துக்கொண்டே எங்களின் அரட்டைகளை வேடிக்கை பார்ப்பார்.

``பேசாம, நாம முத்தண்ணனையே இந்த வாட்டியும் நிறுத்தி ஜெயிக்கவெச்சுடலாமேடா”  என்றான் சீனு.

``வாய்ப்பே இல்லை! அந்த ஆளோட பலம் நானூறு ஓட்டுதான். அதுக்குக் குறைவாகவும் வாங்க மாட்டார்... கூடவும் வாங்க மாட்டார்’’ என்று பின்னால் இருந்து சத்தமாகக் குரல்கொடுத்தார் தோழர்.

``வாங்க தோழர். நீங்க எப்ப வந்தீங்க?’’

``மொதல்லயே வந்துட்டேன். முத்துவாலே இந்த ஜென்மத்துல புலியை ஜெயிக்க முடியாது. புதுமுகம் ஒண்ணைப் போட்டுதான் அடிக்கணும். சீனு நல்ல சாய்ஸ்தாம்பா!’’ என்றார்.

சீனுவின் முகத்தில் முதல்முறையாக, பீதி மறைந்து ஒரு தெளிவு வந்தது.

``அப்போ எங்க சார்புல நீங்களே நில்லுங்களேன் தோழர்?’’

எங்க தெருவில் பொதுக்காரியம் எது என்றாலும் தோழர்தான் முன்னே இருந்து செய்வார். மாலையில் சின்னப்பசங்களுக்கு பாரதியார் பாடல்கள், ஆத்திசூடி எல்லாம் சொல்லித்தருவார்.

``அதெல்லாம் எங்க கட்சி ஒத்துக்காதுப்பா... கட்சியை மீறி நான் தனியால்லாம் நிக்க முடியாது. சீனுவே நிக்கட்டும். நாமெல்லாம் ஒத்துமையா நின்னு அவரோடு மோதிப்பார்த்துரலாம்’’ என்றார் தோழர்.

ஒரு கோபத்தோடு கூட்டப்பட்ட அந்தக் கூட்டம், ஒரு குறிக்கோளுடன் முடிந்தது.

நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் நான்கைந்து பேர் சீனுவைத் தூக்கிக்கொண்டு போய், அவன் செலவில் மெட்ராஸ் டீக்கடையில் டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு, டி.ராஜேந்தர் படத்துக்குச் சென்றோம்.

எங்கள் முடிவு ஒன்றும் ரகசியமானது அல்ல! தோழரே எப்படியும் டீக்கடையில் நூறு பேரிடம் சொல்லியிருப்பார். நாங்கள் முதல் ரியாக்‌ஷனைப் புலியிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் வந்ததோ, எதிர்க்கட்சியோட நகரச் செயலாளரிடமிருந்து! எங்களை அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொல்லி ஆள் அனுப்பியிருந்தார்.

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி, எங்க ஊர் முனிசிபல் தேர்தலில் ஜெயிக்காது என்பது ஒரு நம்பிக்கை. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிதான் எங்கள் ஊர் முனிசிபாலிட்டியில் எப்பவும் ஆளும் கட்சி.

p44c_1513144272.jpg

நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே எங்கள் பகுதியின் நகரச் செயலாளர் ஒரே நபர்தான். கட்சிக்காரன் எந்த நேரத்தில் அவர் வீட்டுக்குப் போய் எழுப்பினாலும், லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டு முண்டா பனியனுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எப்படியாவது பேசிக் காப்பாற்றி விடுவார்.

நகரச் செயலாளருடனான சந்திப்புக்கு, மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு வந்து என்னை எழுப்பி உடன் கூட்டிச் சென்றனர். நான், சீனு, ஏழுமலை, இளங்கோவுடன் தோழரும் இணைந்துகொள்ள, நாங்கள் புறப்பட்டோம்.

நகரச் செயலாளரின் தெருமுனையிலேயே சைக்கிளில் இருந்து இறங்கிக்கொண்டவர், ``நான் கூட வந்தா சரியாயிருக்காது. இங்கியே டீக்கடையில இருக்கேன். நீங்க போய்ப் பேசிட்டு வாங்க’’ எனக் கடைசி நிமிடத்தில் கழன்றுக்கொண்டார் தோழர்.

வாசல் ஓரத்தில் நகரத்தின் டி.வி.எஸ் 50 நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. அவர் மனைவி வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தார்.

``அண்ணி, அண்ணன் வீட்டுல இல்லியா?’’ என்றான் ஏழுமலை.

``இல்லாம எங்க போவப்போறார்! இன்னும் கடை தொறந்திருக்காதே. நீங்க நேரா கிணத்தாண்ட போய்ப் பாருங்க’’ என்றார்.

வீட்டுக்குப் பின்கட்டில் வெற்றுடம்புடன் கிணற்று மேடையில் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டு வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார் நகரம்.

ஏழுமலையை அவருக்குத் தெரிந்திருந்தது.

``வாப்பா, என்ன சுயேச்சை போடப்போறீங்கனு பேசிக்கிறாங்க!’’ என்று பட்டென விஷயத்துக்கு வந்தார்.

``ஆமாண்ணா, பசங்க எல்லோரும் இந்த வாட்டி புலியைத் தோக்கடிச்சே ஆகணுங்கிறாங்க. உங்க ஆள் செலவும் பண்ண மாட்டேங்கிறார். தெருவுல எறங்கி கால்ல உழுந்து ஓட்டு கேட்கவும் மாட்டேங்கிறார். ரெண்டு வாட்டி கையெடுத்துக் கும்பிட்டுட்டு, சைக்கிள் ரிக்‌ஷாவுல போயிட்டா புலியை ஜெயிச்சுட முடியுமாண்ணா?’’ என்றான் ஏழுமலை.

``யாரு... முத்துவைத்தானே சொல்றே? அவன் சுயமரியாதைக் காரனாச்சேப்பா! கால்ல எல்லாம் விழ மாட்டானே. ஆனா, நிறைய செலவு பண்றேன்னுதானே என்கிட்டே சொல்வான்?’’

``எங்கே பண்றார்... நல்ல மனுஷன்தான், எங்களுக்கும் வேண்டியவர்தான். ஆனா, ஓட்டு வாங்குறதுல கோட்டை விட்டுடுறாரே?”

``ஆமாமாம். அந்த நானூறு ஓட்டைத் தாண்ட மாட்டான். அப்ப, நீங்க  முடிவு  பண்ணிட்டீங்களா?’’

நகரத்தின் இந்தக் கேள்விக்கு எப்படி ரியாக்ட் செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. `ஆமாம்’ எனச் சொன்னால், எதிர்த்துப் பேசுகிற மாதிரி இருக்குமென்று அமைதியாக இருந்தோம்.

நகரம், கிணற்றை விட்டுக் கீழிறங்கி வாளித்தண்ணீரில் கை அலம்பிவிட்டு, எங்கள் அருகில் வந்து மிகச்சரியாக சீனுவின் தோள்மீது கை போட்டவாறு, ``தைரியமா நில்லு. 1,400 ஒட்டுல முத்து 400 ஓட்டை வாங்கிடுவான். மீதி இருக்கும் ஆயிரத்துல உங்க குறி 501. அவ்ளோதான். உங்க கூட்டாளிங்க, அவங்க அம்மா, அப்பான்னு ஈஸியா இதை வாங்கிடலாம். நான் முத்துவை நிறுத்தலைன்னா, நீ 800 ஓட்டு வாங்கினாத்தான் ஜெயிப்பே. அது இன்னும் கஷ்டம். புரியுதா?’’ என்றார்.

இந்தப் புதுவிதமான கணக்கைக் கேட்டு, நாங்கள் உறைந்துபோய் நின்றோம்.

அவர் கட்சிக்காரன் எத்தனை ஓட்டு வாங்குவான் என்பதும், எங்களால் எத்தனை ஓட்டு வாங்க முடியும் என்பதும் அவருக்குத் தெரிகிறது. எப்படி ஓட்டு வாங்க வேண்டும் என்பதையும்  சொல்லித்தருகிறார். தன் கட்சிக்காரன் தோற்பான் எனத் தெரிந்தும் எதிர்க்கட்சிக்காரனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ரூட் க்ளியர் செய்து விடுகிறார்.

தலையாட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு டீக்கடைக்கு வந்தோம்.

``ப்பா... என்னா ராஜதந்திரம்டா!’’ என்றான் இளங்கோ.

``இதென்ன ராஜதந்திரம்! அவரு கட்சித் தலைவர் போடுவாரு பாரு ப்ளான்! ஒவ்வொண்ணும் மாஸ்டர் ப்ளான்! அதெல்லாம் அங்க சாதாரணம்பா’’ என்றார் தோழர்.

``ஆனாலும் இது டூ மச் தோழர்’’ என்றேன் நான்.

``இதென்ன டூ மச்! உனக்குத் தெரியுமா? மொத மொத புலியை கவுன்சிலர் தேர்தல்ல நிக்கச் சொன்னதே இந்த நகரச் செயலாளர்தான். முத்து இவரோட தீவிர விசுவாசி. புலி எதிரே சீட் வாங்கி நின்னுட்டா, அவனுக்கு இருக்கிற கெட்டபேருக்கு முத்து ஈஸியா ஜெயிச்சிருவாருன்னு, இவரே புலிக்குக் காசு கொடுத்து சீட் வாங்கச் சொன்னார். இவங்க கெட்ட நேரம், புலி தொடர்ந்து அடிச்சுட்டு வர்றான்’’ என்றார் தோழர்.
``திஸ் ஈஸ் தி லிமிட். இதுக்குமேல என்னால தாங்க முடியாது. இதெல்லாம் ஐ.ஐ.எம்  எம்.பி.ஏ-வுலகூட சொல்லித்தர மாட்டாங்க தோழர்’’ என்றேன்.

``யாராலும் கத்துத்தர முடியாதுப்பா! இது அரசியல்’’ என்றார் தோழர்.

வேட்புமனுத் தாக்கலின்போது தெருவில் இருக்கும் அத்தனை பசங்களையும் அழைத்துக்கொண்டு மேளதாளத்தோடு போய் வெற்றிகரமாக முடித்தோம். எங்களுடன் வந்த கூட்டத்தைக் கண்டு முனிசிபாலிட்டியே அரண்டுபோனது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் எங்கள் புது கவுன்சிலர் வேட்பாளர் சீனுவுக்குக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

``சுயேச்சையாக மனுப் போட வந்திருந்த ஒண்ணு ரெண்டு பேரும், எங்க கூட்டத்தைப் பார்த்துட்டு, போடாமலேயே போயிட்டாங்க’’ என்று தோழர் சொன்னார்.

எங்கள் வார்டு வேட்புமனுவின் பரிசீலனையின்போதுதான் புலியை நேருக்குநேராகச் சந்தித்தோம். முனிசிபல் கமிஷனர் அருகில் இருந்த மரநாற்காலியில் காலை மடித்து அமர்ந்துகொண்டு செய்தித்தாளை எட்டாக மடித்து முகத்தருகில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தது.  முத்து அண்ணன் எங்களிடம் ஏதும் பேசாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தது, எங்களுக்கு சங்கடமாக இருந்தது.

மொத்தம் மூன்றே மனுதான். ஒவ்வொரு மனுவாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டே வந்தவர், எங்கள் வேட்புமனு வந்தவுடன் திகைத்துப்போய் எங்களை நிமிர்ந்து பார்த்தார். வேட்புமனுவை நிரப்பும் பொறுப்பு என்னிடம்தான் தரப்பட்டிருந்தது. ஒரு இன்ஜினீயர் என்ற முறையில் அதை அழகான கையெழுத்தில் ஆங்கிலத்தில் நிரப்பியிருந்தேன்.

கையில் இருந்த வேட்புமனுவை எங்கள் முன் நீட்டியபடி, ``இதென்ன?’’ என்றார் கமிஷனர்.

அனைவரும் திகைத்துப்போய் என்னைத் திரும்பிப் பார்த்தனர்.

``நாமினேஷன் பேப்பர் மேடம். இங்கிலீஷ்ல ஃபில்லப் பண்ணக் கூடாதுன்னு எந்த ரூல்புக்லயும் இல்லியே?’’ என்றேன் கெத்தாக.

``அதெல்லாம் இருக்கட்டும். வேட்பாளரோட கையெழுத்து எங்கே?’’

அந்தக் கட்டடம் அப்படியே இடிந்து என் தலைமீது விழுந்திருந்தால், நான் அவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பேன். வேட்புமனுவைத் தொலைத்துவிடக் கூடாது என்பதற்காக, அதை  யாரிடமும் கொடுக்காமல் நானே வைத்திருந்ததில் சீனுவிடம் கையெழுத்து வாங்க மறந்திருந்தேன்.

வேட்பாளர் கையெழுத்து இல்லாத நாமினேஷன் ஃபார்ம். முதல் சுற்றிலேயே ரிஜெக்ட் ஆகிவிடும். அனைவரும் என்னை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்த நான், தலையைக் குனிந்துகொண்டேன். முத்து அண்ணனால் முகத்தில் சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை. புலி, தலையை நிமிர்த்தாமல் தந்தி பேப்பரிலேயே கவனமாக இருந்தது.

``இப்ப என்ன மேடம் பண்றது?’’ என்றான் சீனு.

``நீங்க இன்னுமா இங்க இருக்கீங்க? எல்லாம் புறப்படுங்க. வார்டு எண் 12! ரெண்டே வேட்பாளர்கள்தான். மிஸ்டர் சுந்தரமூர்த்தி அண்ட் மிஸ்டர் முத்து’’ எனக் கூறிவிட்டு, அருகில் இருந்த டைப்பிஸ்டிடம், ``டைப் பண்ணும்மா’’ என்றார்.

தேர்தல் முடிவு அப்பவே தெரிஞ்சுபோச்சு, புலி நான்காம் முறையாக எங்கள் கவுன்சிலராவது. நாங்கள் நாற்காலியிலிருந்து எழுந்தோம்.

எதற்காக கமிஷனரிடம் சொல்கிறேன் எனத் தெரியாமல் கண் கலங்கியபடி, ``ஸாரி மேடம். இட்ஸ் மை ஃபால்ட்’’ என்றேன். குரல் தழுதழுத்தது. பசங்க யாராவது ஒரே ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் வெடித்து அழுதிருப்பேன்.

எனது தழுதழுத்த குரலைக் கேட்ட புலி, செய்தித்தாளிலிருந்து கண்ணை எடுத்து, நாற்காலியிலிருந்து இறங்கி வந்தது. நேராக கமிஷனர் டேபிளில் இருந்த எங்கள் மனுவை எடுத்து சீனுவிடம் நீட்டி, ``இப்ப என்ன... கையெழுத்துதானே போடலை? அதென்ன முப்பது வரி  நீட்டமா  எழுதப்போறான். ஒத்த வார்த்தைதானே! நீ போட்டுக் கொடு கண்ணு’’ என்றது.

மொத்த அலுவலகமும் திகைத்து நிற்க, கமிஷனர், முத்து அண்ணனைப் பார்த்தார். அவரால் எதுவும் சொல்ல முடியாத சங்கடம். சீனு கண் கலங்கியபடி கையெழுத்து போட, நாங்கள் மீண்டும் களத்துக்கு வந்தோம்.

அதன் பிறகு ஒரு மாதம் நடந்ததெல்லாம் ஒரு நாவலுக்குரியவை. சிறுகதைக்குள் சொல்ல வேண்டும் என்றால், எங்களின் தேர்தல் அறிக்கையைச் சொல்லலாம்.

``மூணே பாயின்ட்... சும்மா நச்சுனு இருக்கணும்டா’’ என்றான் ஒருவன்.

முதல் பாயின்ட் எழுதும்போதே தோழர் வந்துவிட்டார். நமது நட்பு நாடான ரஷ்யாவுக்கு அமெரிக்கா என்னவெல்லாம் தொல்லைகள் தருகிறது என விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார். பொறுமையிழந்த இளங்கோ, ``தோழர், முதல் பாயின்ட் உங்க சாய்ஸ். நீங்க எதைச் சொன்னாலும் எழுதிக்கிறேன்’’ என்றான்.

இப்படியாக முதலாவது வாக்குறுதி, `அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை விடாமல் எதிர்ப்போம்’ என்றானது.

அடுத்து, இன்ஜினீயரான என்னோட சாய்ஸ். `நதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை நீங்கி வளமாகிவிடும்’ என ஒரு கட்டுரையில் படித்திருந்தேன். எனவே, இரண்டாவது வாக்குறுதி `எங்கள் ஊர் தென்பெண்ணையாற்றைக் காவிரியோடும் பாலாற்றோடும் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவோம்’  என்றானது. 

மூன்றாவது வாக்குறுதி வேட்பாளர் எடுத்துக்கொண்டான். அவனின் ஐடியாபடி எங்களது மூன்றாவது வாக்குறுதி `எங்க தெருப் பசங்களுக்கு இலவசமா மெடிக்கல், இன்ஜினீயரிங் சீட் வாங்கித் தருவோம்’ என்றானது. இதைக் கேள்விப்பட்ட சிலர், அன்று மாலையே தேர்தல் அலுவலகம் வந்து அவரவர் பிள்ளைகளின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதிச் சென்றனர்.

சீனுவின் படத்தை வெளியூருக்கு அனுப்பி பிளாக் எடுத்து, அதைக் கொண்டு ரோஸ்கலர் பேப்பரில் தேர்தல் வாக்குறுதிகளோடு 10,000 காப்பி  பிட்நோட்டீஸ் பிரின்ட் பண்ணி, பேருந்துநிலையத்தில் அனைவருக்கும் விநியோகித்தோம். மொத்த ஓட்டு 1,380தான்.

``வார்டு தேர்தல் நோட்டீஸை, பஸ் ஸ்டேண்டுல வந்து ஏன் தர்றீங்க?’’ என ஒரு பெரியவர் கேட்டபோது, ஒரு கணம் திகைத்து, ``அது வந்து... இப்பத்திய இளைஞர்களோட லட்சியப் பயணம் எப்படி இருக்கும்னு எங்க தேர்தல் அறிக்கையைப் பார்த்தாவது நீங்க எல்லோரும் தெரிஞ்சுக்கத்தான் பெருசு!’’ என்றான் இளங்கோ.

p44d_1513144286.jpg

வசுமதி வீட்டுக்கு நோட்டீஸ் தர, என்னை அனுப்பிவிட்டனர். நான் ஒவ்வொரு நோட்டீஸ்லயும் ஒரு கேட்பரீஸ் சாக்லேட் பின் செய்து எடுத்துப் போய்க் கொடுத்தேன். என்னை விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டே வசீகரமாகச் சிரித்தபடி மொத்தம் பத்து நோட்டீஸை அவள் அள்ளிக்கொண்டாள்.

``ஏம்பா, எல்லா வீட்டுக்கும் சாக்லேட் வெச்சா தர்றீங்க?’’ என அவள் அம்மா கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பாராமல் அவர் பங்குக்கு ஒரு கொத்து நோட்டீஸை அள்ளிக்கொண்டார்.

தேர்தல் எந்தவோர் அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. சொல்லப்போனால், புலி, பூத்துக்கு உள்ளேயே வரவில்லை. அன்றுமட்டும் குடிக்காமல் பளபளப்பாக வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து நெற்றியில் திருநீற்றுடன் தெருவின் எதிர்த்திசையில் அமைதியாக அமர்ந்திருந்தது. முத்து அண்ணன் வழக்கம்போல வாசலில் நின்றுகொண்டு, வரும்  ஒவ்வொருவரிடமும் கைகூப்பி ஓட்டு கேட்டார். நாங்கள் மீதம் இருந்த எங்கள் நோட்டீஸை அனைவரின் கைகளிலும் திணித்து அனுப்பினோம்.

வாக்கு எண்ணிக்கையின்போது சீனுவுக்கு ஜெனரல் ஏஜென்டாக ஏழுமலையை அனுப்பிவைத்தோம். யாருக்கும் பயமில்லாமல் தைரியமாகப் பேசுவான். முத்திரை எதிலுமே சரியாக விழாதது, சின்னங்களுக்கு நடுவில் முத்திரை இருந்தது, முத்திரையே இல்லாதது என சர்ச்சைக்குரிய 16 ஓட்டுகளும் எங்களுடையதுதான் எனக் கடுமையாக அவன் குரல் உயர்த்தி சத்தம்போட, புலி எங்கள் பெட்டியிலேயே அவற்றைப் போடச் சொல்லித் தலையாட்டியதாம்!

தேர்தல் முடிவு தினத்தன்று எங்கள் வார்டு முடிவு, மதியத்துக்கு சற்று முன்னே வந்தது. பதிவான 1,184 வாக்குகளில் முத்து அண்ணன் 312, சீனு 88 வாங்கியிருக்க, புலி 784 பெற்றிருந்தது. தனது வரலாற்றின் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் புலி நான்காம் முறையாக எங்கள் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றது.

நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தையும் பேச முடியாதபடி அதிர்ந்துபோயிருந்தோம்.

``ஆக, முத்தண்ணனுக்குப் போகவேண்டிய 88 ஓட்டைத்தான்டா நாம பிரிச்சிருக்கோம்!’’ என்றான் இளங்கோ.

``ம்க்கும்... அதுலயும் 16 ஓட்டு கவுன்ட்டிங்ல சண்டைபோட்டு நான் வாங்கினது’’ என்றான் ஏழுமலை. தனது வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்ட சீனு, வெளியே வரவே இல்லை.

2 மணிக்கு எங்க தேர்தல் அலுவலகம் மாடிக்கு  ஓர் அட்டைப்பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து வைத்தான் புலியின் கையாள் ஏகாதேசி. பெட்டி முழுக்க பிரியாணிப் பொட்டலங்கள்.

``புலியண்ணன் குடுத்து அனுப்புச்சுடா, சாப்புடுங்க!’’ என்றான்.

மறுநாளிலிருந்து நான் யார் முகத்திலும் விழிக்க விரும்பாததால், ``புராஜெக்ட் ரிவ்யூ இருக்கு’’ எனச் சொல்லிட்டு, கல்லூரிக்குப் புறப்பட்டேன். இரவு 9 மணிக்கு எனக்கு பஸ். ``நாங்க கூட வர்றோம்’’ என இளங்கோவும் ஏழுமலையும் எனது பையை சைக்கிளில் வைத்துத் தள்ளிக்கொண்டு வர, நாங்கள் மெளனமாக எங்கள் தெருவைக் கடந்து சென்றோம்.

தேர்தல் பிரசாரம், ஆலோசனைக் கூட்டங்கள் என நாங்கள் ஒரு மாதமாகக் கட்டியாண்ட தெரு! ஒவ்வொரு வீட்டிலும் காலில் விழுந்து அவர்களிடம் சத்தியம் பெற்று எங்களுக்காக நாங்கள் உறுதி செய்திருந்த வாக்குகள் மட்டும் 900 இருக்கும். எங்கள் தெரு மக்கள் அத்தனை பேருமே பொய் சத்தியம் செய்வார்கள் என்ற சாத்தியக் கூற்றை நம்ப முடியாமல் பேச்சற்றுப்போயிருந்தோம்.

சீனு வீடு, வெளி விளக்குகூடப் போடப்படாமல் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

வசுமதி வீட்டு வாசற்படிகளை நிரப்பிக்கொண்டு பெண்கள் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு பெளர்ணமி இரவு.

பாவாடை,  தாவணியில் வசுமதி தேவதையைப் போல் நடுப்படியில் அமர்ந்துகொண்டிருக்க, அவள் அம்மா அதற்கு மேல்படியில் அமர்ந்துகொண்டு தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு தேவதையின் தலையில் ஈர்க்குச்சி கொண்டு இழுத்து இழுத்து பேன் பார்த்த காட்சி, நாங்கள் வாங்கிய ஓட்டு எண்ணிக்கையைவிட அபத்தமாக இருந்தது.

வீட்டைக் கடக்கும்போது, வசுமதியின் அம்மா சத்தமாக, ``என்னப்பா... காலேஜுக்கா?’’ என்றார்.

``ஆமாங்க... நாளைக்கு புராஜெக்ட் ரெவ்யூ இருக்கு’’ என்றேன்.

``அமெரிக்கா போகப்போறீயாமே?’’

``ஆமாமாம்... என் மச்சானுக்கு கேம்பஸ் இன்டர்வியூவுல வேலை கிடைச்சிருக்கு. மொத சம்பளமே டாலர்லதான்’’ என்றான் இளங்கோ.

நான் வசுமதியையே பார்த்துக்கொண்டிருந்தேன். வைத்த கண் வாங்காமல் என்னை அதே விழுங்கல் பார்வையில் பார்த்துக்கொண்டு வாயில் எதையோ போட்டு மென்றுகொண்டிருந்தாள். நான் தந்திருந்த சாக்லேட்டில் மிச்சம் வைத்திருந்திருப்பாள்போல.

``என்னமோப்பா... நம்ம பசங்க எல்லோரும் நல்லா படிச்சு மேலே வந்தா சந்தோஷம்தான். ஆனா, படிச்சவுடனே வெளிநாட்டுக்கு ஓடுறீங்களே! இங்கியே இருந்து நம்ம தாய்நாட்டை முன்னேத்த வேணாமா?’’ என்றார் சரோஜாக்கா.

ஏழுமலை கடுப்பாகிவிட்டான். ``ஆங்... நல்லா முன்னேத்த வுட்ருவீங்களே, 88 ஓட்டைப் போட்டு! சீனுவுக்கே ஓட்டு போடாத மக்கள்தானே நீங்க?’’

``அடப்போங்கடா, இவனுங்க வேற கிண்டல் பண்ணிக்கிட்டு. சீரியஸாவா நீங்க எலெக்‌ஷன்ல நின்னீங்க... சொம்மா தமாசுக்குதானே?’’

``என்னது... தமாசுக்கா! உயிரைக் கொடுத்து வேலை செஞ்சோமே! உங்க ஒவ்வொருத்தர் கால்லயும் விழுந்தோமே! எல்லாம் தமாசாவா தெரிஞ்சுது? அட, சீனுவை விடுங்க... போயும் போயும் புலிக்கு இத்தனை பேரு ஓட்டு போட்டிருக்கீங்களே? எங்க... புலிக்கு ஓட்டு போட, ஒரே ஒரு நியாயமான காரணம் சொல்லுங்க பாப்போம்!’’ - ஏழுமலை பொரிந்து தள்ளினான்.

p44e_1513144300.jpg

சரோஜாக்கா சளைக்கவில்லை.

``ஒண்ணு என்னடா, மூணு காரணம் சொல்றேன் கேட்டுக்கோ. ஒண்ணு, புலி எவ்ளோ போதையிலே இருந்தாலும் தெருவை விட்டு இங்க, அங்க போவாது. கூப்டா ஓடிவரும். கவுன்சிலர்னா இப்படிதான்டா இருக்கணும்.

ரெண்டு, பெரியவங்க, சின்னவங்க பார்க்காது. மேல் சாதி, கீழ் சாதி பார்க்காது. யார் ஊட்டுக்குனாலும் உரிமையா உள்ளே வரும். வேணுங்கிறதை எடுத்துப் போட்டு சாப்புடும். அவ்ளோ நல்ல குணம்.

மூணாவது, முக்கியமானது. வயசுப் பொண்ணுங்க கொசகொசன்னு இருக்கிற தெரு நம்மது. வெளியாள் ஒருத்தரையும் லேசுல புலி உள்ளே வுடாது. ஒவ்வொருத்தரையும் நிறுத்தி, தரோவா விசாரிக்கும். தப்பான ஆளுன்னா ஃபைன் போட்டுடும். ஆமாம்.”

``என்னது... ஃபைன் போடுமா?’’ - நாங்கள் திகைச்சுப்போய் நின்றோம்.

``இப்பேர்ப்பட்ட மனுஷனை விட்டுட்டு, வேற யாருக்கு ஓட்டு போடுறதாம்? வந்துட்டானுங்க, ஏகாதிபத்தியம்... எங்க ஊட்லே பைத்தியம்னு, எடுபட்டவனுங்க.’’

இப்படியாக, சரோஜா அக்காவின் அரசியல் பாடத்துடன் எங்கள் தெரு இளைஞர்களின் லட்சியப் பயணம் அந்த இரவின் நிலவொளியில் நிறைவுற்றது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.