Jump to content

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்


Recommended Posts

சாதனை படைத்த,  சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

சாதனை படைத்த தமிழ் மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
 

Link to comment
Share on other sites

சாதித்துக்காட்டிய பழுகாமம் மாணவன் -பெருமைகொள்கின்றது படுவான்கரை

 

சாதித்துக்காட்டிய பழுகாமம் மாணவன் -பெருமைகொள்கின்றது படுவான்கரை

எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்கமுன்வரவேண்டும் என கா.பொ.த.உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மத்திய மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தெரிவித்தார்.மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இருந்து முதன்முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தினை உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மாணவன் துதிசான் படைத்துள்ளார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் மூன்று பாடங்களில் பீ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாதாரணதரம் கற்றதுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாயத்தில் உயர் கல்வியையும் கற்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த அவர்,எதிர்காலத்தில் தமது சமூகத்திற்கு சிறந்த கல்வியினையும் சேவையினையும் வழங்கும் வகையில் ஒரு விரிவுரையாளராக வருவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்..

தான் எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்தபோதும் எனது இலக்கு கல்வியி; உச்ச நிலையினேயே அடையவேண்டும் என்பதாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

DSC06825DSC06829DSC06831

http://www.samakalam.com/செய்திகள்/சாதித்துக்காட்டிய-பழுகா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கல்விப் பொது தராதரப் பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவர்கள்!

 

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவர்கள்!

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்,புனித மைக்கேல் கல்லூரி மாணவனான ராஜன் திபிகரன் ஆங்கில மொழிமூல விஞ்ஞானப்பிரிவில் முதல்நிலை பெற்றதோடு, மாவட்டத்திலும் முதல்நிலை பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

மட்டு.புனித மைக்கல் கல்லூரி மாணவன் சிவா மிதுசனன் எனும் மாணவன் இரு பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்று மாவட்டத்தில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.

வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா வணிகப் பிரிவில்,மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் உயிர்முறை தொழில்நுட்பவியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் பீ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த மீரா முகைதீன் அகமட் அபாஸ் எனும் மாணவன் விஞ்ஞானப்பிரிவில்,இப்பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 3ஏ சித்தி பெற்று மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகி,சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Students-rank-in-Batticaloa-district

 

 

விசேட வைத்திய நிபுணராக வவுனியாவில் கடமையாற்ற வேண்டும் :சுந்தர் சுகிர்தன்!

 

விசேட வைத்திய நிபுணராக வவுனியாவில் கடமையாற்ற வேண்டும் :சுந்தர் சுகிர்தன்!

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த சுந்தர் சுகிர்தன் மாவட்ட மட்டத்தில் விஞ்ஞான பிரிவில் 3 ஏ பெற்று முதலிடம் பெற்றுள்ளாா்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்....

நான் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் 97 புள்ளியை பெற்று சித்தியடையவில்லை. அதே போன்று சாதாரண தர பரீட்சையிலும் 07ஏ சித்திகளையே பெற்றிருந்தேன். எனினும் விடா முயற்சி என்னிடம் காணப்பட்டது.

விஞ்ஞான பிரிவை கற்க சென்றபோது விஞ்ஞான பிரிவிலா கற்கப்போகின்றாய் என கேட்டார்கள். எனினும் எனக்கு நம்பிக்கை இருந்தது.

மாவட்ட ரீதியில் இடம்பெற்ற பரீட்சையில் 05ம் இடத்தை பெற்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதில் இருந்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் கற்று இன்று முதலாம் இடத்தை பெற்றுள்ளேன்.

இதற்கு உறுதுனையாக இருந்த பாடசாலை முன்னாள் அதிபர் த.அமிர்தலிங்கம்,அதற்போதைய அதிபர்,ஆசிரியர்கள்,எனது குடும்பத்தினர் மற்றும் சிரேஸ்ட மாணவர்களிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தோடு நான் விசேட வைத்திய நிபுணராக வவுனியா வைத்தியசாலையில் சேவை செய்வதோடு என்னை கல்வியில் இவ்விடத்தை அடைய உதவிய என் பாடசாலையை அபிவிருத்தி செய்வதோடு என் குடும்பத்தையும் பார்ப்பேன்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியலத்தை சேர்ந்த கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெறும் மாணவரக்கான பல்கலைக்கழக செலவினை பொறுப்பெடுப்பதாக வடமாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் படி இன்று மாவட்டத்தில் விஞ்ஞான பீடத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றந சுந்தர் சுகிர்தனிற்கு நேரில் சென்றுவாழ்த்து தெரிவித்ததோடு அவரின் பல்கலைக்கழக் செலவு அனைத்தையும்தான் பொறுப்பெடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/al-result-in-vavuniya-student-sukirthan

Link to comment
Share on other sites

வெளியாகிய உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இரு மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேற்றின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், இரு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவாகியுள்ளார்கள்.

 

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி நித்தியானந்தன் சங்கவி 3 ஏ சித்திகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 2017ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்கள் தொடர்பான விபரங்கைளப் பார்க்கலாம்.

 

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த சு.சுகிர்தன் க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்.

 

யாழ் சென்.பற்றிக் கல்லூரி மாணவன் கணிதப்பிரிவில் தேசிய மட்டத்தில் 03 ஆம் இடம்

Link to comment
Share on other sites

சாதனை படைத்த,  சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் பங்கெடுத்த எமது மாணவ மணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்ச்சியின் சிறப்பு தமிழ் பிள்ளைகள் நல்ல பெறு பேறு எடுத்துள்ளார்கள் அந்த வகையில் மட்டு மாவட்டத்தில் அதிக தமிழ் பிள்ளைகள் நல்ல பெறு பேறுகளை பெற்றுள்ளார்கள் tw_blush:

Link to comment
Share on other sites

 
சாதனை மாணவனை சந்தித்தார் வடக்கு ஆளுநர்
 
 

சாதனை மாணவனை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

 

ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் பௌதீகவியல் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரனை வடக்கு ஆளுநர் சற்று முன்னர் சந்தித்தார்.

இச் சந்திப்பு மாணவனின் வீட்டில் இடம்பெற்றது. மாணவனைச் சந்தித்த வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தனது வாழ்த்துக்கைளைத் தெரிவித்தார்.

அத்துடன் மாணவனின் பெற்றோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார். தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும் மாணவனுக்கு அன்பளிப்புச் செய்தார்.

IMG-377b7ffd625507775925e26712c3eded-V.j

IMG-598c983bf926e312e3ad042909b579eb-V.j

http://newuthayan.com/story/58709.html

 

தேசிய ரீதியில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகனுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

கொப்பியடித்து சிக்கிய 205 பேரின் பெறுபேறுகளே இடைநிறுத்தம்

 

கொப்பியடித்து சிக்கிய 205 பேரின் பெறுபேறுகளே இடைநிறுத்தம்

205 பேரின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு அவர்கள் பரீட்சையின் போது கொப்பியடித்தல் என கூறப்படும் பிரதியடித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டமையே காரணமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளத.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் போது அந்த விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அது தொடர்பான விசாரணைகளுக்கு வருமாறு 3 தடவைகள் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் அந்த விசாரணைகளுக்கு வருகை தரவில்லையெனவும் இதனாலேயே அவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -

http://www.samakalam.com/செய்திகள்/கொப்பியடித்து-சிக்கிய-205-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் கலந்து சிறப்பு பெறு பேறுகள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்ற புனித மைக்கேல் கல்லூரி

 

 
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்ற புனித மைக்கேல் கல்லூரி

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் அடிப்படையில் மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.வெளியாகியுள்ள உயர்தரப்பரீட்சைகளின் பெபேற்றின் அடிப்படையில் 10 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 05மாணவர்கள் மருத்துவ துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இவற்றில் கணிதப்பிரிவிலும் விஞ்ஞானப்பிரிவிலும் ஏனைய பாட விதானப்பிரிவிலும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் நிலையினைப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து கணிததுறையின் வளர்ச்சிக்கு பங்காற்றவிரும்புவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கனித பிரிவில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான சிவா விதுசனன் தெரிவித்தார்.

கடின உழைப்பினை கல்வியில் வெளிப்படுத்துவதன் மூலம் சிறந்த அறுவடையினை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என விஞ்ஞான துறையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் தோற்றி மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட இராஜன் திபிகரன் தெரிவித்தார்.

வித்தியாசமான தெரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வதன் மூலம் சிறந்த அடைவுகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் என ஏனைய துறைகளைக்கொண்ட பாட விதானத்தில் தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் யோகேந்திரன் தனுஷாந்த் தெரிவித்தார்.

இன்று பாடசாலைக்கு விஜயம் செய்த முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரனும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

DSC07060DSC07061DSC07062

http://www.samakalam.com/செய்திகள்/மட்டக்களப்பு-மாவட்டத்த-21/

Link to comment
Share on other sites

  • பாட­சாலை அனு­மதி மறுத்த மாணவி மாவட்­டத்­தில் முத­லி­டம்
625.0.560.320.160.600.053.800.700.160.90

பாட­சாலை அனு­மதி மறுத்த மாணவி மாவட்­டத்­தில் முத­லி­டம்

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தின் தங்­கா­லைப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மாணவி ஒரு­வ­ருக்கு உயர் தரத்­தில் கல்­வி­யைத் தொடர பாட­சா­லை­யில் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­யா­கத் தோற்றி மாவட்­டத்­தில் முத­லி­டம் பெற்­றுள்­ளார்.

வணி­கப் பிரி­வில் அம்­பாந்­தோட்டை மாவட்டத்­தில் ஹரினி நிஹாரா கஜ­சிங்க என்ற மாண­வியே இவ்­வாறு முத­லி­டம் பெற்­றுள்­ளார்.

தங்­காலை மக­ளிர் மகா வித்­தி­யா­ல­ யத்­தில் கல்வி கற்ற ஹரினி நிஹாரா என்ற மாணவி உயர்­த­ரத்­தில் ஆரம்­பத்­தில் உயி­ரி­யல் பிரிவைத் தெரிவு செய்­துள்­ளார். ஒன்­றரை ஆண்­டு­க­ளின் பின்­னர் உயி­ரி­யல் கற்­கையை தொடர அவ­ருக்குக் கடி­ன­மா­கி­யுள்­ளது. அதன் பின்­னர் வர்த்­தகப் பிரி­வை தெரிவு செய்­துள்­ளார். பாட­சாலை நிர்­வா­கம் அதற்கு அனு­மதி மறுத்­துள் ளது.

இத­னால் உயர் தரப் பரீட்­சையைத் தனிப்­பட்ட பரீட்­சாத்­தி­யா­கவே எதிர்­கொண்­டுள்­ளார். கடந்த 28ஆம் திகதி உயர்­த­ரப் பரீட்­சைப் பெறு­பே­று­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அதில், வணி­கப் பிரி­வில் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தில் முத­லி­டம் பெற்­றுள்­ளார் ஹரினி.

http://newuthayan.com/story/59650.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • வடக்­கில் 274 மாண­வர்­கள் – 3 பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தரச்­சித்தி
download-1-7.jpg

வடக்­கில் 274 மாண­வர்­கள் – 3 பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தரச்­சித்தி

ஜி.சி.ஈ உயர்­த­ரத்­தில் வடக்கு மாகா­ணத்­தில் இருந்து பாட­சா­லைப் பரீட்­சார்த்­தி­க­ளா­கத் தோற்­றிய 11 ஆயி­ரத்து 591 மாண­வர்­க­ளில் 274 மாண­வர்கள் மூன்று பாடங்­க­ளி­லும் ‘ஏ’ தரச் சித்தி பெற்­றுள்­ள­னர். அதேநேரம் 7 ஆயி­ரத்து 925 மாண­வர்­கள் மூன்று பாடங்­க­ளி­லும் சித்­தி­பெற்று பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர்.

அதா­வது 68.37 வீதத்­தி­னர் தகுதி பெற்­றுள்­ள­னர். அதே­நே­ரம் தோற்­றி­யோ­ரில் 816 மாண­வர்­கள் ஒரு பாடத்­தி­லும் சித்­தி­ய­டை­ய­வில்லை.

அண்­மை­யில் வெளி­யான ஜி.சி.ஈ உயர்­த­ரப் பரீட்­சைப் பெறு­பே­று­கள் தொடர்­பான பகுப்­பாய்வு அறிக்கை இலங்­கைப் பரீட்­சைத் திணைக்­க­ளத் தால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் உள்­ள­தா­வது:

நாட­ளா­விய ரீதி­யில் பாட­சாலை மாண­வர்­க­ளின் பரீட்சை பெறு­பே­று­க­ளில் வீத அடிப்­ப­டை­யில் மாகாண நிலை­யில் வடக்கு மாகா­ணம் முத­லாம் இடத்­தை­யும் சப்­பி­ர­க­முவ மாகா­ணம் இரண்­டாம் இடத்­தை­யும் ஊவா மாகா­ணம் மூன்­றாம் இடத்­தை­யும் பெற்­றுள்­ளன.

 

பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளை­யும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின்­படி தேசிய ரீதி­யில் வடக்கு மாகா­ணம் மூன்­றாம் இடத்­தை­யும் சப்­பி­ர­க­முவா மாகா­ணம் முத­லாம் இடத்­தை­யும் ஊவா மாகா­ணம் இரண்­டாம் இடத்­தை­யும் பெற்­றுள்­ளன.

ாாவடக்கு மாகா­ணத்­தில் இருந்து தோற்­றிய பாட­சாலை பரீட்­சார்த்­தி­க­ளை­யும் தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ரீதி­யில் 13 ஆயி­ரத்து 643 மாண­வர்­க­ளில் 8 ஆயி­ரத்து 956 மாண­வர்­கள் மூன்று பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டைந்­துள்­ள­னர். 65.65 வீத­மா­னோர் சித்­தி­ய­டைந்­துள்­ள­னர்.

மாவட்ட நிலை­யில் தேசிய ரீதி­யில் 25 மாவட்­டங்­க­ளி­லும் மன்­னார் மாவட்­டம் 1ஆம் இடத்­தை­யும், முல்­லைத்­தீவு மாவட்­டம் 5ஆம் இடத்­தை­யும் யாழ்ப்­பாண மாவட்­டம் 9ஆம் இடத்­தை­யும், வவு­னியா மாவட்­டம் 16ஆவது இடத்­தை­யும், கிளி­நொச்சி மாவட்­டம் 21ஆவது இடத்­தை­யும் பெற்­றுள்­ளன.

மன்­னார் மாவட்­டத்­தில் 68.41 வீதத்­தி­ன­ரும் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 66.47 வீதத்­தி­ன­ரும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 65.88 வீதத்­தி­ன­ரும், வவு­னியா மாவட்­டத்­தில் 64.51 வீதத்­தி­ன­ரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 62.30 வீதத்­தி­ன­ரும் சித்­திய­ டைந்­துள்ள னர். நாட­ளா­விய ரீதி­யில் உயர்­த­ரப் பரீட்­சைக்கு 2 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 330 மாண­வர்­கள் தோற்­றி­யி­ருந்­த­னர்.

மூன்று பாடங்­க­ளி­லும் ஒரு இலட்­சத்து 65 ஆயி­ரத்து 104 மாண­வர்­கள் சித்­தி­ய­டைந்து பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­க­ளில் 64.38 வீதத்­தி­னர் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு விண்­ணப்­பிக்­கத் தகுதி பெற்­றுள்­ள­னர். (எ–11)

http://newuthayan.com/story/62855.html

Link to comment
Share on other sites

13 hours ago, நவீனன் said:

அதே­நே­ரம் தோற்­றி­யோ­ரில் 816 மாண­வர்­கள் ஒரு பாடத்­தி­லும் சித்­தி­ய­டை­ய­வில்லை.

மிகவும் கவலை தரும் புள்ளிவிபரம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.