Jump to content

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்


Recommended Posts

இன்று நள்ளிரவு வெளியாகும் உயர்தர பெறுபேறுகள்
 

image_ba1af29aa1.jpgஇந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு(27) இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கும்,  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் தபால் மூலம் பரீட்சை முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இன்று-நள்ளிரவு-வெளியாகும்-உயர்தர-பெறுபேறுகள்/150-209495

Link to comment
Share on other sites

சற்று முன்னர் வெளியாகின க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

 

சற்று முன்னர் வெளியாகின க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என்று என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே சற்று முன்னர் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளதோடு கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் சென்று பரீட்சார்த்திகளின் சுட்டிலக்கத்தை வழங்குவதன்மூலம் பெறுபேறுகளைக் கண்டறியலாம். குறித்த பெறுபேறுகளை அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

http://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/al-result-released-now

Link to comment
Share on other sites

பெறுபேறுகள் எப்படியோ?? ஆனால் வட மாகாணகல்வி தரம் வீழ்ந்து போச்சு எண்டு குப்பாடு போட ஒரு கூட்டம் ஆய்த்தமாக இருக்கும், அதுக்கு ஒரு நொண்டி சாக்கும் ஆயத்தமாக இருக்கும் அதாவது மோபைல் போன் வந்துட்டுது, மோட்டார் பைக் வந்துட்டுது என்று!!! 

Link to comment
Share on other sites

4 hours ago, Dash said:

பெறுபேறுகள் எப்படியோ?? ஆனால் வட மாகாணகல்வி தரம் வீழ்ந்து போச்சு எண்டு குப்பாடு போட ஒரு கூட்டம் ஆய்த்தமாக இருக்கும், அதுக்கு ஒரு நொண்டி சாக்கும் ஆயத்தமாக இருக்கும் அதாவது மோபைல் போன் வந்துட்டுது, மோட்டார் பைக் வந்துட்டுது என்று!!! 

அகில இலங்கை அளவில் ஹார்ட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

ஏனைய பிரிவுகளிலும் சில மாணவர்கள்  அகில இலங்கை அளவில் 10வது இடத்தையும், மாவட்ட அளவில் 5க்கு உட்பட்ட இடங்களையும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

சிங்கள-பௌத்த அரச-இராணுவப் பயங்கரவாதிகளால் 1980 களிலேயே பலதடவைகள் தீவைக்கப்பட்டு, ஆக்கிரமித்து அழிக்கப்பட்ட பாடசாலை மீண்டும் தனது உயர் அடைவு மட்டத்தை அடைந்தது மகிழ்ச்சியானது.

இன்றும் ஹார்ட்லி கல்லூரி இரண்டு பக்கமாக உள்ள வேலிகளுடன் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.  கல்லூரி நேரங்களில் அந்தப் பயங்கரவாதிகள் பாண்ட் அடிப்பதும் கூச்சலிடுவதும் கூத்தாடுவதும் இப்பவும் நடைபெறும் கொடுமைகள் என அங்கு படிக்கும் மாணவர்கள் கூறுகின்றனர்.

சிங்கள-பௌத்த அரச-இராணுவப் பயங்கரவாதிகளானது அழுத்தங்களின், தடைகளின்  மத்தியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

625.0.560.350.160.300.053.800.700.160.90

625.0.560.350.160.300.053.800.700.160.90

625.0.560.350.160.300.053.800.700.160.90

Link to comment
Share on other sites

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீடசை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 

இதேவேளை, வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டுலந்தி ரசந்திக பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சதகரமலன்கர பிரிவேனாவைச் சேர்ந்த பத்பெரிய முதவன்ச தேரர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்

http://www.virakesari.lk/article/28678

Link to comment
Share on other sites

பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன் இலங்கையில் முதலிடம்!

 

 

பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன்  இலங்கையில் முதலிடம்!

2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகின.இதில் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் முதலிடம பெற்றுள்ளாா்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை(29) பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/advanced-level-exam-result-28

உ/த பெறுபேற்றில் யாழ். மாணவன் முதலிடம்
 

image_daa423c212.jpgகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், இன்று அதிகாலை வெளியாகின.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

பெறுபேறுகளின் பிரகாரம் பௌதீகவியல் விஞ்ஞானத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பொது விடயத்தான துறையில் முதலிடத்தை கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஹிருணி சாக்யா அபேதுங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

உயிரித்தொழிற்நுட்ப பிரிவில், இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த லக்ஷித சத்துரங்க மெதலக முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பொறியற் தொழிற்நுட்ப பிரிவில், அகில இலங்கை ரீதியில் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தைச் சேர்ந்த ரத்சிறினி ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.

கலை துறையில், அகில இலங்கை ரீதியில் இரத்தினபுரிய சத்தர்மாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த வண. பத்பேரியே முனித்தவங்ச தேரர் பெற்றுக்கொண்டுள்ளார்.

வணிகத்துறையில், மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரின் மாணவியான துலானி ரன்திகா பெற்றுக்கொண்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உ-த-பெறுபேற்றில்-யாழ்-மாணவன்-முதலிடம்/175-209533

Link to comment
Share on other sites

1,63,104 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி

 

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் 2,53,483 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/58289.html

வட்டு. மாணவர்கள் நால்வர் சாதனை1!

 

ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்ந்துள்ளனர்.

பெளதீக விஞ்ஞானப் பிரிவில் பிரபாகரன் பிரதீஸ்,
விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே ஆகியோரும்,
வணிகப் பிரிவில் அஸ்வினி ஸ்கந்தராஜாவும், அனோஜா சத்தியசீலன்  ஆகியோரும்  3 எ சித்தியைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58260.html

Link to comment
Share on other sites

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

 

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இராகலை ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே மூன்று ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை இந்த மாணவன் கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இந்த மாணவனை ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/nuwara-eliya-AL-result

Link to comment
Share on other sites

  • கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்
கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில்  யாழ். மாணவன் மூன்றாம் இடம்
 
 

கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்

http://newuthayan.com

Link to comment
Share on other sites

பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சிறிதரன் துவாரகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சிறிதரன் துவாகரன் மற்றும் சித்தியடைந்த அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த ஹாட்லி மைந்தன் துவாரகனுக்கும் சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

“ சிறந்த பொறியியலாளராக வருவதே எனது இலக்கு”

சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என கணிதத்துறையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவன் றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

spc.jpg

ஆரம்பப் பிரிவில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்வி கற்று சிறந்த சித்தி பெற்று பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றேன். 

எனக்கு சிறுவயது முதலே கணிதப் பிரிவில் அதிக ஈடுபாடு இருந்தமையால் உயர்தரத்திலும் கணிதப் பிரிவை தெரிவு செய்து கொண்டேன். 

 

அதிகமாக எனது கல்வியை அதிகாலை பொழுதில் தான் தொடர்வேன். எதிர்கால மாணவர்களும் கடினமான பயிற்சியை முன்னெடுத்தால் என்னை விட சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து இந்த சமூகத்திற்கு கடைமையாற்றுவதே  எனது இலக்கு என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/28697

Link to comment
Share on other sites

முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

 

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

நேற்று வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் முதலாமிடத்திற்கு தெரிவாகியுள்ளார். மேலும் ஏனைய துறைகளில்,முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு.

பௌதீக விஞ்ஞானம்

1. ஸ்ரீதரன் துவாரகன் - ஹார்ட்லி கல்லூரி, பருத்தித்துறை.

2. பமுதிதா ஹிமான் சோமாரட்னே - பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா.

3. ஜெயராஜன் பால் ஜேன்சன் - சென் பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்.   

உயிரியல் விஞ்ஞானம்

1. திலினி சந்துனிகா பலிஹக்கார - சுஜாதா வித்தியாலய, மாத்தறை

2. ஹசிதா கீத் குணசிங்க - ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ.

3. இஷான் ஷலுகா ராமநாயக்க - ஆனந்த கல்லூரி, கொழும்பு.   

வர்த்தகம்

1. துளனி ரசாந்திகா - சுஜாதா வித்தியாலய, மாத்தறை.

2. கௌசல்யா சுபாஷிணி தாபரே - மியூசஸ் கல்லூரி, கொழும்பு.

3. பாத்திமா அக்கேலா ஈஸ்வர் - செயின்ட் பால்'ஸ் கர்ல்ஸ் ஸ்கூல், கொழும்பு.  

கலை

1. வண. பாபீரியிய முனிந்தவான்ச தெரோ - சதர்மாலங்கர பிரிவேனா, இரத்தினபுரி.

2. சஹிலி அகானா விக்கிரமநாயக்க - சி.எம்.எஸ் பெண்கள் கல்லூரி, கொழும்பு

3. தில்கா சப்பாபமா - பெர்குசன் உயர்நிலை பள்ளி, இரத்தினபுரி

பொறியியல் தொழில்நுட்பம்

1. பாரிமதி பிரசாதி ரான்சிரினி - மஹிந்த ராஜபக்ச கல்லூரி, மாத்தறை.

2. பிரகதி இஷான் மதுஷங்கா - நாரந்தெனிய எம்.எம்.வி., கும்பூபியிட்டி.

3. பாசிந்து லக்ஷன் - மயூர்பாடா மத்திய கல்லூரி, நாரமலை.

https://news.ibctamil.com/ta/internal-affairs/details-of-students-who-got-first-three-places

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கு ஓர் அனுபவம் அடுத்த தடவை வெற்றி என்ற இலக்கை மட்டும் நினைத்தே இருக்க போகிறீர்கள் அந்த இலக்கு உங்களை வெற்றி பெறச்செய்யும் 

Link to comment
Share on other sites

 
யாழ்.இந்து மாணவர்கள் 20 பேர் சாதனை!!
 
 

யாழ்.இந்து மாணவர்கள் 20 பேர் சாதனை!!

 

2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்கள் 3 எ சித்தி பெற்று பாடசாலைக்குப் பெரு மை சேர்த்துள்ளனர்.

கணிதப் பிரிவில் 10 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும், வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3எ சித்தி பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58498.html

 
நெல்லியடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!
 
 

நெல்லியடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!

 
 

நெல்லியடி மத்திய கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 8 மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் 2 மாணவர்களும், வணிகப்பிரிவில் 5 மாணவர்களும், கலைப்பிரிவில் ஒர் மாணவியும் 3எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58501.html

Link to comment
Share on other sites

வட. மத்திய மகளிர் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!

 

 

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில்  2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் ஒருவரும்,கணிதப் பிரிவில் ஒருவரும், கலைப்பிரிவில் ஐவரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58515.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A/L Best Results -2017

Biology

1) Dilini Sandunika Palihakkara (Sinhala medium) - Sujatha Balika Vidyalaya, Matara
2) G.A.H.Geeth Gunasinghe (Sinhala medium) - Joseph Vaz College, Wennappuwa
3) K.I.Shaluka Ramanayake (Sinhala medium) - Ananda Collage, Colombo

Physical Science

1) Sridharan Duwarakan (Tamil Medium) - Hartley College, Point Pedro
2) P.M.P.Himan Somaratne (Sinhala medium) - Bandaranaike Vidyalaya, Gampha
3) R.D.Jeyarajan Paul Janshan (Tamil Medium) - St. Patrick's College, Jaffna

Commerce

1) S.A.Dulani Rasanthika (Sinhala Medium) - Sujatha Balika Vidyalaya, Matara
2) P.K. Subashini Dabare (English medium) - Musaeus College, Colombo
3) F.Akila Iswar (Sinhala Medium) - St Paul’s Balika Vidyalaya, Colombo

Art

1) Ven. Pathberiye Munindawansha Thera (Sinhala medium) - Saddarmalankara Pirivena, Ratnapura
2) S.Achana Wickremanayake (English medium) - CMS, Colombo
3) G.G.Dilki Sadupama (Sinhala medium) - Ferguson High School, Ratnapura

Engineering Technology

1) P.P. Ransirini Hettiarachchi (Sinhala Medium) - Mahinda Rajapaksa Vidyalaya, Matara
2) M.G.P.Ishan Madusanka (Sinhala Medium) - Narandeniya Central College, Kamburupitiya
3) W.A.M.P.Lakshan Adhipattu (Sinhala Medium) - Mayurapada Central College, Narammala

Bio Systems Technology

1) M.K. Lakshitha Chaturanga Medalagama (Sinhala Medium) - Sivali Central College, Ratnapura
2) W. P Ramesha Shreemali (Sinhala Medium) - Debarawewa Central College, Tissamaharama
3) Kamaleshwarie Sendilnaadan (Tamil Medium) - Vembadi Girls High School, Jaffna

Other

1) Hiruni Shakya Abeytunga (Sinhala Medium) - Devi Balika Vidyalaya, Colombo
2) Shaveen Bhashitha Thilakaratne (Sinhala Medium) - Royal College, Colombo
3) Diyol Brandon Antony (Sinhala Medium) - De Mazenod College, Kandana

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் தேற்றிய தோற்ற அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

உயர்தரப் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

 

 

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.மாவட்டத்தில் மாவட்ட மட்டத்திலான முதலிடங்களை யாழின் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

AL.jpg

இதன்படி கணித பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் பெற்றுள்ளார். இவர் தேசிய மட்டத்திலும் முதலிடத்தை பெற்றுள்ளார். கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாலசுப்பிரமணியம் தாட்சாயினி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 51 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி சாரங்கா விஜயகுமார் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 26 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

பொறியல் தொழிநுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆர்.நிலக்ஷன் 2 ஏ , பி பெறுபேற்றை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 08ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மு.வக்சலன் 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 09ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

 

உயிரியல் முறமை தொழிநுட்ப பிரிவில் யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி மாணவி 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 3ஆம  இடத்தையும் பெற்றுள்ளார்.

 

கணிதத்துறையில் யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரி மாணவனான றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/28704

Link to comment
Share on other sites

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்

 

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில  இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

சாத்துமணி, பத்மா  தம்பதியரின் புதல்வியான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

http://www.samakalam.com/செய்திகள்/அட்டன்-ஹைலண்ஸ்-கல்லூரிய-3/

 

Link to comment
Share on other sites

மன்னாரில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

 

தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

mannar-al.jpg

மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த  அருள்பிரகாசம் டெல்சியஸ் என்ற மாணவனே கலைப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். 

 

இவர் கங்காணித்தீவு நானாட்டான் பகுதியைச் சேர்ந்த திரு.திருமதி அருள்பிரகாசம் மேரி யோசேப்பின் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.

http://www.virakesari.lk/article/28710

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்தகளும் பாராட்டுகளும். கல்வியே எமது இருப்பு என்பதை அனைத்து மாணவர்களும் பற்றிப்பிடிக்கும் வகையிலே தமிழ்தலைமைகள் சிந்திக்கவேண்டும். அறிவார்ந்த குமுகாயத்தால் மட்டுமே இவ்வுலகில் நின்று நிலைத்து நிமிர முடியும். 

மது, வெண்சுருட்டு விற்பனைகளுக்கான வரிகளைக் கூட்டுவதோடு போதைப்பொருள் விற்பனைக்கு ஆகக்கூடிய ஒறுப்பினை வழங்கும் சட்டமாற்றத்தையும் கொண்டுவருவதே எமது இளையோரை முன்னேறவைக்கும். அதேவேளை கிராமிய மட்ட அமைப்பு களும் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மேலதிக அறிவூட்டற் செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றையும் முன்னெடுப்பதனூடாகப்  ஒரு முழுமையான கல்விக் குமுகாயத்தை உருவாக்குவதனூடாக ஈழத்தீவிலும் உலகிலும் முன்னேற முடியுமெனலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் மென்மேலும் ஒளிமயமானதாக வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைகள் பல சேர்த்து புகழுடன் வாழ பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.