Jump to content

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்


Recommended Posts

இன்று நள்ளிரவு வெளியாகும் உயர்தர பெறுபேறுகள்
 

image_ba1af29aa1.jpgஇந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு(27) இணையத்தில் வெளியிடப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கும்,  தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் தபால் மூலம் பரீட்சை முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இன்று-நள்ளிரவு-வெளியாகும்-உயர்தர-பெறுபேறுகள்/150-209495

Link to comment
Share on other sites

சற்று முன்னர் வெளியாகின க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

 

சற்று முன்னர் வெளியாகின க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!

எதிர்பார்க்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்படும் என்று என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே சற்று முன்னர் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளதோடு கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் சென்று பரீட்சார்த்திகளின் சுட்டிலக்கத்தை வழங்குவதன்மூலம் பெறுபேறுகளைக் கண்டறியலாம். குறித்த பெறுபேறுகளை அறிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

http://www.results.exams.gov.lk//viewresultsforexam.htm

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/al-result-released-now

Link to comment
Share on other sites

பெறுபேறுகள் எப்படியோ?? ஆனால் வட மாகாணகல்வி தரம் வீழ்ந்து போச்சு எண்டு குப்பாடு போட ஒரு கூட்டம் ஆய்த்தமாக இருக்கும், அதுக்கு ஒரு நொண்டி சாக்கும் ஆயத்தமாக இருக்கும் அதாவது மோபைல் போன் வந்துட்டுது, மோட்டார் பைக் வந்துட்டுது என்று!!! 

Link to comment
Share on other sites

4 hours ago, Dash said:

பெறுபேறுகள் எப்படியோ?? ஆனால் வட மாகாணகல்வி தரம் வீழ்ந்து போச்சு எண்டு குப்பாடு போட ஒரு கூட்டம் ஆய்த்தமாக இருக்கும், அதுக்கு ஒரு நொண்டி சாக்கும் ஆயத்தமாக இருக்கும் அதாவது மோபைல் போன் வந்துட்டுது, மோட்டார் பைக் வந்துட்டுது என்று!!! 

அகில இலங்கை அளவில் ஹார்ட்லி கல்லூரி மாணவர் சிறிதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

ஏனைய பிரிவுகளிலும் சில மாணவர்கள்  அகில இலங்கை அளவில் 10வது இடத்தையும், மாவட்ட அளவில் 5க்கு உட்பட்ட இடங்களையும் பெற்றுள்ளதாக தெரிகிறது.

சிங்கள-பௌத்த அரச-இராணுவப் பயங்கரவாதிகளால் 1980 களிலேயே பலதடவைகள் தீவைக்கப்பட்டு, ஆக்கிரமித்து அழிக்கப்பட்ட பாடசாலை மீண்டும் தனது உயர் அடைவு மட்டத்தை அடைந்தது மகிழ்ச்சியானது.

இன்றும் ஹார்ட்லி கல்லூரி இரண்டு பக்கமாக உள்ள வேலிகளுடன் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.  கல்லூரி நேரங்களில் அந்தப் பயங்கரவாதிகள் பாண்ட் அடிப்பதும் கூச்சலிடுவதும் கூத்தாடுவதும் இப்பவும் நடைபெறும் கொடுமைகள் என அங்கு படிக்கும் மாணவர்கள் கூறுகின்றனர்.

சிங்கள-பௌத்த அரச-இராணுவப் பயங்கரவாதிகளானது அழுத்தங்களின், தடைகளின்  மத்தியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

625.0.560.350.160.300.053.800.700.160.90

625.0.560.350.160.300.053.800.700.160.90

625.0.560.350.160.300.053.800.700.160.90

Link to comment
Share on other sites

உயர் தரப் பரீட்சை : யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீடசை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவனான சிறிதரன் துவாரகன் என்பவர் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 

இதேவேளை, வர்த்தகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டுலந்தி ரசந்திக பெற்றுள்ளார்.

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாத்தா வித்தியாலய மாணவியான  டிலினி சந்துனிக்கா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் கலைப் பிரிவில் இரத்தினபுரி சதகரமலன்கர பிரிவேனாவைச் சேர்ந்த பத்பெரிய முதவன்ச தேரர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்

http://www.virakesari.lk/article/28678

Link to comment
Share on other sites

பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன் இலங்கையில் முதலிடம்!

 

 

பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன்  இலங்கையில் முதலிடம்!

2017 க.பொ.த உயர்தர பரீட்சையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகின.இதில் பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் முதலிடம பெற்றுள்ளாா்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை(29) பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/advanced-level-exam-result-28

உ/த பெறுபேற்றில் யாழ். மாணவன் முதலிடம்
 

image_daa423c212.jpgகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், இன்று அதிகாலை வெளியாகின.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

பெறுபேறுகளின் பிரகாரம் பௌதீகவியல் விஞ்ஞானத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பொது விடயத்தான துறையில் முதலிடத்தை கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஹிருணி சாக்யா அபேதுங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

உயிரித்தொழிற்நுட்ப பிரிவில், இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த லக்ஷித சத்துரங்க மெதலக முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பொறியற் தொழிற்நுட்ப பிரிவில், அகில இலங்கை ரீதியில் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தைச் சேர்ந்த ரத்சிறினி ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.

கலை துறையில், அகில இலங்கை ரீதியில் இரத்தினபுரிய சத்தர்மாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த வண. பத்பேரியே முனித்தவங்ச தேரர் பெற்றுக்கொண்டுள்ளார்.

வணிகத்துறையில், மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரின் மாணவியான துலானி ரன்திகா பெற்றுக்கொண்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உ-த-பெறுபேற்றில்-யாழ்-மாணவன்-முதலிடம்/175-209533

Link to comment
Share on other sites

1,63,104 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி

 

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் 2,53,483 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/58289.html

வட்டு. மாணவர்கள் நால்வர் சாதனை1!

 

ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்ந்துள்ளனர்.

பெளதீக விஞ்ஞானப் பிரிவில் பிரபாகரன் பிரதீஸ்,
விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே ஆகியோரும்,
வணிகப் பிரிவில் அஸ்வினி ஸ்கந்தராஜாவும், அனோஜா சத்தியசீலன்  ஆகியோரும்  3 எ சித்தியைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58260.html

Link to comment
Share on other sites

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

 

உயர்தர பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியாவில் திஷாந்தன் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இராகலை ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே மூன்று ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை இந்த மாணவன் கல்விப் பொதுத்தராதர உயா்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இந்த மாணவனை ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/nuwara-eliya-AL-result

Link to comment
Share on other sites

  • கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்
கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில்  யாழ். மாணவன் மூன்றாம் இடம்
 
 

கணிதப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் மூன்றாம் இடம்

http://newuthayan.com

Link to comment
Share on other sites

பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற சிறிதரன் துவாரகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சிறிதரன் துவாகரன் மற்றும் சித்தியடைந்த அனைவருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த ஹாட்லி மைந்தன் துவாரகனுக்கும் சித்தியடைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

Link to comment
Share on other sites

“ சிறந்த பொறியியலாளராக வருவதே எனது இலக்கு”

சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என கணிதத்துறையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்ட மாணவன் றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

spc.jpg

ஆரம்பப் பிரிவில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்வி கற்று சிறந்த சித்தி பெற்று பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றேன். 

எனக்கு சிறுவயது முதலே கணிதப் பிரிவில் அதிக ஈடுபாடு இருந்தமையால் உயர்தரத்திலும் கணிதப் பிரிவை தெரிவு செய்து கொண்டேன். 

 

அதிகமாக எனது கல்வியை அதிகாலை பொழுதில் தான் தொடர்வேன். எதிர்கால மாணவர்களும் கடினமான பயிற்சியை முன்னெடுத்தால் என்னை விட சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் சிறந்த ஒரு பொறியியலாளராக வந்து இந்த சமூகத்திற்கு கடைமையாற்றுவதே  எனது இலக்கு என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/28697

Link to comment
Share on other sites

முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

 

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு, பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள்!

நேற்று வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் முதலாமிடத்திற்கு தெரிவாகியுள்ளார். மேலும் ஏனைய துறைகளில்,முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வருமாறு.

பௌதீக விஞ்ஞானம்

1. ஸ்ரீதரன் துவாரகன் - ஹார்ட்லி கல்லூரி, பருத்தித்துறை.

2. பமுதிதா ஹிமான் சோமாரட்னே - பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா.

3. ஜெயராஜன் பால் ஜேன்சன் - சென் பற்றிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்.   

உயிரியல் விஞ்ஞானம்

1. திலினி சந்துனிகா பலிஹக்கார - சுஜாதா வித்தியாலய, மாத்தறை

2. ஹசிதா கீத் குணசிங்க - ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ.

3. இஷான் ஷலுகா ராமநாயக்க - ஆனந்த கல்லூரி, கொழும்பு.   

வர்த்தகம்

1. துளனி ரசாந்திகா - சுஜாதா வித்தியாலய, மாத்தறை.

2. கௌசல்யா சுபாஷிணி தாபரே - மியூசஸ் கல்லூரி, கொழும்பு.

3. பாத்திமா அக்கேலா ஈஸ்வர் - செயின்ட் பால்'ஸ் கர்ல்ஸ் ஸ்கூல், கொழும்பு.  

கலை

1. வண. பாபீரியிய முனிந்தவான்ச தெரோ - சதர்மாலங்கர பிரிவேனா, இரத்தினபுரி.

2. சஹிலி அகானா விக்கிரமநாயக்க - சி.எம்.எஸ் பெண்கள் கல்லூரி, கொழும்பு

3. தில்கா சப்பாபமா - பெர்குசன் உயர்நிலை பள்ளி, இரத்தினபுரி

பொறியியல் தொழில்நுட்பம்

1. பாரிமதி பிரசாதி ரான்சிரினி - மஹிந்த ராஜபக்ச கல்லூரி, மாத்தறை.

2. பிரகதி இஷான் மதுஷங்கா - நாரந்தெனிய எம்.எம்.வி., கும்பூபியிட்டி.

3. பாசிந்து லக்ஷன் - மயூர்பாடா மத்திய கல்லூரி, நாரமலை.

https://news.ibctamil.com/ta/internal-affairs/details-of-students-who-got-first-three-places

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கு ஓர் அனுபவம் அடுத்த தடவை வெற்றி என்ற இலக்கை மட்டும் நினைத்தே இருக்க போகிறீர்கள் அந்த இலக்கு உங்களை வெற்றி பெறச்செய்யும் 

Link to comment
Share on other sites

 
யாழ்.இந்து மாணவர்கள் 20 பேர் சாதனை!!
 
 

யாழ்.இந்து மாணவர்கள் 20 பேர் சாதனை!!

 

2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்கள் 3 எ சித்தி பெற்று பாடசாலைக்குப் பெரு மை சேர்த்துள்ளனர்.

கணிதப் பிரிவில் 10 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும், வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3எ சித்தி பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58498.html

 
நெல்லியடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!
 
 

நெல்லியடி மத்திய கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!

 
 

நெல்லியடி மத்திய கல்லூரியில் 2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 8 மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் 2 மாணவர்களும், வணிகப்பிரிவில் 5 மாணவர்களும், கலைப்பிரிவில் ஒர் மாணவியும் 3எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58501.html

Link to comment
Share on other sites

வட. மத்திய மகளிர் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு 3 எ சித்தி!!

 

 

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில்  2017 ஆம் ஆண்டுக்கான ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் ஒருவரும்,கணிதப் பிரிவில் ஒருவரும், கலைப்பிரிவில் ஐவரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 எ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/58515.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A/L Best Results -2017

Biology

1) Dilini Sandunika Palihakkara (Sinhala medium) - Sujatha Balika Vidyalaya, Matara
2) G.A.H.Geeth Gunasinghe (Sinhala medium) - Joseph Vaz College, Wennappuwa
3) K.I.Shaluka Ramanayake (Sinhala medium) - Ananda Collage, Colombo

Physical Science

1) Sridharan Duwarakan (Tamil Medium) - Hartley College, Point Pedro
2) P.M.P.Himan Somaratne (Sinhala medium) - Bandaranaike Vidyalaya, Gampha
3) R.D.Jeyarajan Paul Janshan (Tamil Medium) - St. Patrick's College, Jaffna

Commerce

1) S.A.Dulani Rasanthika (Sinhala Medium) - Sujatha Balika Vidyalaya, Matara
2) P.K. Subashini Dabare (English medium) - Musaeus College, Colombo
3) F.Akila Iswar (Sinhala Medium) - St Paul’s Balika Vidyalaya, Colombo

Art

1) Ven. Pathberiye Munindawansha Thera (Sinhala medium) - Saddarmalankara Pirivena, Ratnapura
2) S.Achana Wickremanayake (English medium) - CMS, Colombo
3) G.G.Dilki Sadupama (Sinhala medium) - Ferguson High School, Ratnapura

Engineering Technology

1) P.P. Ransirini Hettiarachchi (Sinhala Medium) - Mahinda Rajapaksa Vidyalaya, Matara
2) M.G.P.Ishan Madusanka (Sinhala Medium) - Narandeniya Central College, Kamburupitiya
3) W.A.M.P.Lakshan Adhipattu (Sinhala Medium) - Mayurapada Central College, Narammala

Bio Systems Technology

1) M.K. Lakshitha Chaturanga Medalagama (Sinhala Medium) - Sivali Central College, Ratnapura
2) W. P Ramesha Shreemali (Sinhala Medium) - Debarawewa Central College, Tissamaharama
3) Kamaleshwarie Sendilnaadan (Tamil Medium) - Vembadi Girls High School, Jaffna

Other

1) Hiruni Shakya Abeytunga (Sinhala Medium) - Devi Balika Vidyalaya, Colombo
2) Shaveen Bhashitha Thilakaratne (Sinhala Medium) - Royal College, Colombo
3) Diyol Brandon Antony (Sinhala Medium) - De Mazenod College, Kandana

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் தேற்றிய தோற்ற அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

உயர்தரப் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

 

 

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்.மாவட்டத்தில் மாவட்ட மட்டத்திலான முதலிடங்களை யாழின் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

AL.jpg

இதன்படி கணித பிரிவில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன் பெற்றுள்ளார். இவர் தேசிய மட்டத்திலும் முதலிடத்தை பெற்றுள்ளார். கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாலசுப்பிரமணியம் தாட்சாயினி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 51 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி சாரங்கா விஜயகுமார் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 26 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

பொறியல் தொழிநுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆர்.நிலக்ஷன் 2 ஏ , பி பெறுபேற்றை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 08ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மு.வக்சலன் 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 09ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

 

உயிரியல் முறமை தொழிநுட்ப பிரிவில் யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி மாணவி 3 ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 3ஆம  இடத்தையும் பெற்றுள்ளார்.

 

கணிதத்துறையில் யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரி மாணவனான றேமன் டெய்சியஸ் ஜெயராஜன் போல் ஜான்சன் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/28704

Link to comment
Share on other sites

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்

 

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடம்

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில  இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

சாத்துமணி, பத்மா  தம்பதியரின் புதல்வியான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

http://www.samakalam.com/செய்திகள்/அட்டன்-ஹைலண்ஸ்-கல்லூரிய-3/

 

Link to comment
Share on other sites

மன்னாரில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

 

தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

mannar-al.jpg

மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த  அருள்பிரகாசம் டெல்சியஸ் என்ற மாணவனே கலைப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். 

 

இவர் கங்காணித்தீவு நானாட்டான் பகுதியைச் சேர்ந்த திரு.திருமதி அருள்பிரகாசம் மேரி யோசேப்பின் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.

http://www.virakesari.lk/article/28710

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்தகளும் பாராட்டுகளும். கல்வியே எமது இருப்பு என்பதை அனைத்து மாணவர்களும் பற்றிப்பிடிக்கும் வகையிலே தமிழ்தலைமைகள் சிந்திக்கவேண்டும். அறிவார்ந்த குமுகாயத்தால் மட்டுமே இவ்வுலகில் நின்று நிலைத்து நிமிர முடியும். 

மது, வெண்சுருட்டு விற்பனைகளுக்கான வரிகளைக் கூட்டுவதோடு போதைப்பொருள் விற்பனைக்கு ஆகக்கூடிய ஒறுப்பினை வழங்கும் சட்டமாற்றத்தையும் கொண்டுவருவதே எமது இளையோரை முன்னேறவைக்கும். அதேவேளை கிராமிய மட்ட அமைப்பு களும் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மேலதிக அறிவூட்டற் செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவற்றையும் முன்னெடுப்பதனூடாகப்  ஒரு முழுமையான கல்விக் குமுகாயத்தை உருவாக்குவதனூடாக ஈழத்தீவிலும் உலகிலும் முன்னேற முடியுமெனலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்காலம் மென்மேலும் ஒளிமயமானதாக வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைகள் பல சேர்த்து புகழுடன் வாழ பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.