Jump to content

கலக்க போவது யாரு?


Recommended Posts

பாலா : ஏண்டா உன்ன பிரின்சிபல் அடிச்சுட்டு போறாரு

ராம் : பிரின்சிபலோட நாய் கானோம்னு பேப்பர்ல விளம்பரம் போடச்சொன்னாரு

பாலா: அதுக்கு?

ராம்: நான் பிரின்சிபல் நாய் கானோம்னு போட்டுட்டன்..

Link to comment
Share on other sites

  • Replies 502
  • Created
  • Last Reply

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

"சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

:D:lol:

Link to comment
Share on other sites

ஜோசியர் அப்பவே சொன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நான் தான் சரியா புரிஞ்சிக்கல..

ஏன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை.

சண்டைல செம அடி அடிச்சிட்டா என்னை..

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

சார் என்ர பெண்டாட்டியை காணோம்.

இது பொலிஸ் நிலையம் இல்லை, இங்கை ஏன் வந்து சொல்லிறிங்க..

சாரி சார், சந்தோசத்தில என்ன செய்யிறது எண்டு தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • 1 month later...

மனைவி :- என்னங்க 1000 பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும் சொல்வாங்க நம்ம கல்யாணத்துக்கு எத்தன பொய் சொன்னீங்க ??

கணவன் :- உன்ன புடிச்சிருக்கு என்று ஒரு பொய் தான் சொன்னேன்

மனைவி :- ???

Link to comment
Share on other sites

  • 1 month later...

என்னங்க, நம்ம திருமண நினைவு நாளுக்கு கோழி பிரியாணி பண்ணட்டுமா? ஏண்டி, எப்பவோ நடந்த தப்புக்கு, இப்ப ஒரு கோழியை கொலை பண்ணனுமா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாப்பிள்ளை : என்ன் பொண்ணு கிழவி மாதிரி இருக்கு? பொண்ணு வீட்டுக்காரர் ; போங்க தம்பி சும்மா பகிடி விட்டு கொண்டு, இது பொண்ணோட தங்கச்சி. மாப்பிள்ளை : ????

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஒரு ஆபிரேசன் தியேட்டரில் ..ஒரு நோயாளியை ஆபிறேசனுக்கான ஆயதங்கள் செய்து கொண்டு இருந்தார்கள் "'நர்சும் " "டாக்டரும் "" நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர் நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர் ..? "இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி" இன்னும் ஒன்றை ஓட்டினார் ..இது எதக்கு டாக்டர் .? "இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி " இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது இதல்லாம் இயங்க "கரண்ட் தானே ""வேணும் டாக்டர் ....? நிச்சயமா அதில் என்ன சந்தேகம் ? ஆப்பிரேசன் செய்யும் போது "கரண்ட் " நிண்டா ? என்ன செய்வீங்க டாக்டர் ? டாக்டர் ...சிரித்தார் .. அருகில் நின்ற "நர்சு " கேட்டார் ஏன்..? டாக்டர் சிரிக்கிரீங்க ..? டாக்டர் சொன்னார் "இவர் கேட்கிறார் " கரண்ட் நிண்டா என்ன செய் வீங்கள் ?.? எண்டு ..! நர்சு சொன்னா "போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு

Link to comment
Share on other sites

  • 1 month later...

"டாக்டர் என் கணவன் எப்போ கண் திறந்து பேசுவார்?'' ""பேசுவார்...ஆனா கண் திறந்து பேசமாட்டார். வாயைத் திறந்துதான் பேசுவாரு''

Link to comment
Share on other sites

அமெரிக்கன்: எங்க கட்டிடம் விண்ணத்தொடும் !
ரஸ்சியாகாரன்: விண்ணையா ??? !!
அமெ: சீச்சீ.. கொஞ்சம் கீழ.
 
ரஸ்: எங்க நீர்மூழ்கி கடலடியத்தொட்டுக் கொண்டு போகும்.
அமே: கடலடியா ??!!
ரஸ்: சீச்சீ.. கொஞ்சம் மேல.
 
இந்தியா: இந்தியால நாங்க மூக்கால தான் சாப்பிடுவோம்.
அமெ + ரஸ்: மூக்காலயா ????!!!
இந்: சீச்சீ.. கொஞ்சம் கீழ வாயால. 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முதல்முறையா பள்ளி காலத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன், நான் லூசாகி விட்டேன், அவள் பாசாகி விட்டாள். பாவி, என்னை ஸ்கூலில் தவிக்கவிட்டு காலேஜ் போயிட்டா :-(

Link to comment
Share on other sites

  • 1 month later...

தந்தை பார்க்கும் பெண்ணையே மணப்பேன் - சித்தார்த். மூதேவி..தந்தை பார்க்குற பொண்ணு உனக்கு சித்தி முறை.

Link to comment
Share on other sites

  • 1 month later...

என் மனைவிகிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் ஒண்ணே ஒண்ணு தான். என்ன? அடிச்சு முடிச்ச கையோட குடிக்க ஒரு கிளாஸ் தண்ணி குடுப்பா.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய பகிடி.

 

கோபர்சேவ் ,ரேகன் , ராஜீவ் மூவரும் ஓர் ஆலோசனையில் இருக்கும்போது  திடீரென கடவுள் அவர்கள் முன் தோன்றினார் .இவர்கள் ஆளுக்குப் பல கேள்விகள் கடவுளிடம் கேட்டனர்.

 

கடவுளும்  நோ நோ  சைலன்ஸ் பிளீஸ் . நீங்கள் நாட்டு நலன் சார்ந்த ஒரு கேள்வியைக் கேட்கலாம் என்றார் .

உடனே மூவரும் ஆலோசித்து  கேட்டீச்சினம் .

 

கோபர்சேவ் ;  எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல்  ஒழியும் ?   ஐம்பது  வருடங்கள்.

ரேகன் ;    எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல் ஒழியும் ?              ஒரு நூற்றாண்டு .

ராஜீவ் ;   எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல் ஒழியும் ?    கடவுள்  கண்ணீர் மல்க  ம் ... அதைப் பார்க்க நான் உயிரோடு இருக்க மாட்டேன் !!

வேதனையுடன்  மூக்கை உறிஞ்சி உத்தரீயத்தில் துடைத்துக்கொண்டு நடந்து போகிறார் ! :lol:

 

Link to comment
Share on other sites

 

ராஜீவ் ;   எமது நாட்டில் எப்போது லஞ்ச ஊழல் ஒழியும் ?    கடவுள்  கண்ணீர் மல்க  ம் ... அதைப் பார்க்க நான் உயிரோடு இருக்க மாட்டேன் !!

வேதனையுடன்  மூக்கை உறிஞ்சி உத்தரீயத்தில் துடைத்துக்கொண்டு நடந்து போகிறார் ! :lol:

ஐயையோ .... :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • 1 month later...

மாப்பிள்ளை கோடியில் புரள்றவருன்னு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவருக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க? தண்ணி அடிச்சுட்டு, எப்பப்பாரு தெருக்கோடியில் புரள்றவனுக்கு யார் சார் பொண்ணு கொடுப்பாங்க?

Link to comment
Share on other sites

  • 2 months later...

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க? கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஆண் : ஹல்லோ, யார் பேசறது ? பெண் : நான் செல்லம்மா பேசறேன். ஆண் : நான் மட்டும் என்ன கோவமா பேசறேனா ? யாருன்னு சொல்லம்மா !!

Link to comment
Share on other sites

  • 1 month later...

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம். கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

Link to comment
Share on other sites

  • 4 months later...

பஸ் டிரைவர்: யோவ்…என்ன...வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..? பஸ்சின் குறுக்கே...அவசரமா ஓடும்..பயணி : ச்சேச்சே…சின்ன வீட்டுக்குப் போறதை எப்படி வெளீல...சொல்ல முடியும்..!

Link to comment
Share on other sites

மகள் = அம்மா கல்யாணம் என்றால் என்னம்மா? தாய் = ஒன்றுக்கும் உதவாத, தாய் தேப்பானாலை கைவிடப்பட்ட ஒரு பெரிய மாட்டை ஒரு பொம்பிளை பிள்ளையின் தலையில கட்டி விடுகிறது தான் கல்யாணம்.

Link to comment
Share on other sites

  • 2 years later...

மனைவி : அத்தான்.... சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது,
விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது,
ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது.
ஆனால் கிருஷ்ணன் ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் உள்ளது, ஏன்? என்றாள்.

கணவன் : அன்பே.. நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள். கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார் எனவே ஆயுதம் தேவை படவில்லை. இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால், தெய்வமே ஆனாலும் மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.