Jump to content

நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்.............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்.............

------------------------------------------------------------------------------------------
சாவதெனினும்    தன்மானத் தமிழராய் 
சாவதென்ற  முடிவுடன் தொடர்ந்தார்
தொடர்ந்ததால்தானே உரிமைப் போரை
பிராந்தியம் கடந்து நகர்த்திட வைத்து
அனைத்துலகிடம்  கொண்டு சென்றதும்
அதனையும் மீண்டும் நயவஞ்சகத்தாலே
கர்ணனைக் கொன்ற  கண்ணனைப்போன்று
கைங்கரியத்தை அரங்கேற்றிய அசிங்கமான 
கிந்தியர் அரசது வங்கதேசத்திலும்காஸ்மீரிலும் 
கைக்கொண்ட கொடுமைகள் போன்று
மீண்டும் வந்து எங்கள் தேசத்திலும் 
பேரழிவினை விதைத்து இனத்தினையழித்து
ஈழத்தீவிலே தமிழினத்தை இல்லாதுசெய்யும்
பொல்லாத  பொழுதொன்றை வென்றிட வேண்டி
மெளனம் காத்திட மைந்தர்கள் துணிந்தனர்
துணிந்த மைந்தர் துயரம்தோய்ந்திட
அணிஅணியாகச் சாய்ந்த பொழுதையும்
கடந்த தேசம்  மீண்டும் நிமிர்ந்தெழும்
நிபுணத்துவங்கள்  கேள்விக்குள்ளாக்கி
நீதியைத்தேடும் மூன்றாம் தலைமுறை
கிந்தியருடன் இந்த உலகையும் 
தலைகளைத் தாழ்த்தி அழுதிட வைப்பர்
அதுவரை தமிழன் ஓய்ந்திடமாட்டான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்.............

------------------------------------------------------------------------------------------
சாவதெனினும்    தன்மானத் தமிழராய் 
சாவதென்ற  முடிவுடன் தொடர்ந்தார்
தொடர்ந்ததால்தானே உரிமைப் போரை
பிராந்தியம் கடந்து நகர்த்திட வைத்து
அனைத்துலகிடம்  கொண்டு சென்றதும்
அதனையும் மீண்டும் நயவஞ்சகத்தாலே
கர்ணனைக் கொன்ற  கண்ணனைப்போன்று
கைங்கரியத்தை அரங்கேற்றிய அசிங்கமான 
கிந்தியர் அரசது வங்கதேசத்திலும்காஸ்மீரிலும் 
கைக்கொண்ட கொடுமைகள் போன்று
மீண்டும் வந்து எங்கள் தேசத்திலும் 
பேரழிவினை விதைத்து இனத்தினையழித்து
ஈழத்தீவிலே தமிழினத்தை இல்லாதுசெய்யும்
பொல்லாத  பொழுதொன்றை வென்றிட வேண்டி
மெளனம் காத்திட மைந்தர்கள் துணிந்தனர்
துணிந்த மைந்தர் துயரம்தோய்ந்திட
அணிஅணியாகச் சாய்ந்த பொழுதையும்
கடந்த தேசம்  மீண்டும் நிமிர்ந்தெழும்
நிபுணத்துவங்கள்  கேள்விக்குள்ளாக்கி
நீதியைத்தேடும் மூன்றாம் தலைமுறை
கிந்தியருடன் இந்த உலகையும் 
தலைகளைத் தாழ்த்தி அழுதிட வைப்பர்
அதுவரை தமிழன் ஓய்ந்திடமாட்டான்!

இல்லை....  அது.... நடக்க, சாத்தியமில்லாமல் .... 
சம்பந்தனும், சுமந்திரனும் அலுவல் பார்த்து விட்டார்கள். 
இப்ப... கத்திக், குழறிக்  கொண்டு இருப்பதால்,  
ஒரு பயனும்.... இல்லை.
இப்படியே.... வீழ்ந்து, சாக வேண்டும்.....  அது, நம்.... தலை விதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளிட்ட குமாரசாமி ஐயா மற்றும் Knowthyself ஆகியோருக்க நன்றி!

On 29.12.2017 at 10:22 PM, Knowthyself said:

பிச்சல் ...

Knowthyselfஅவர்களுக்கு  எனது  நன்றி!

On 29.12.2017 at 11:42 PM, தமிழ் சிறி said:

இல்லை....  அது.... நடக்க, சாத்தியமில்லாமல் .... 
சம்பந்தனும், சுமந்திரனும் அலுவல் பார்த்து விட்டார்கள். 
இப்ப... கத்திக், குழறிக்  கொண்டு இருப்பதால்,  
ஒரு பயனும்.... இல்லை.
இப்படியே.... வீழ்ந்து, சாக வேண்டும்.....  அது, நம்.... தலை விதி.

தமிழ்ச்சிறியவர்களே உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால் மாற்றம் ஒன்றே மாறதது என்பது யதார்த்தம் . பார்ப்போம் நாம் வாழும் காலத்தில் இல்லாது போகலாம். கற்றுவளரும் இளைய தலைமுறை இப்படியே அடிமைகளாக இருந்து மடிய உடன்படுமா என்பது .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனதியான கவிதை மேலும் சொல்லத் தெரியவில்லை......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

மிகவும் கனதியான கவிதை மேலும் சொல்லத் தெரியவில்லை......!  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 

இந்திய இராணுத்தின் வருகை - முப்பதாண்டுச் சாட்சியங்கள் என்ற கவியினுடைய(அது கவியல்ல தமிழரது துயரம் தோய்ந்த அனுபவம்) இறுதி வரி என்னுள் எழுப்பிய எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன். 

பச்சைப்புள்ளிகளிட்ட புங்கையூரானவர்களுக்கும் சுவியவர்களுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.