Jump to content

ஒரு கோப்பை காபி


Recommended Posts

ஒரு கோப்பை காபி - சிறுகதை

 
 

சிறுகதை: ஜெயமோகன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p162a_1514371850.jpg

நான் மார்த்தாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவள் கணவன்தான் எடுத்தான். மார்த்தா ஓய்வு நாளில் செல்பேசியைப் பயன்படுத்துவதில்லை. அது நீண்ட வார இறுதி.

``ஹாய், நான் சாம்’’ என்றான்.

என் பெயரைச் சொன்னதும், உற்சாகமாக ``ஹாய், எப்படி இருக்கிறாய்?” என்றான்.

நான் உற்சாகத்தைக் காட்ட முயன்றாலும் என் குரல் காட்டிக்கொடுத்தது. ``நலமாக இருக்கிறேன்...” என்றேன். “எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.”

அவன் ``என்ன ஆயிற்று? நான் தெரிந்துகொள்ளலாமா?” என்றான்.

``எடுத்துச் சொல்லும்படி நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. ஆனால்...’’ என்று தயங்கினேன். ``நான் மார்த்தாவைச் சந்திக்க வேண்டும். தனிமையில். அவளிடம் சற்று நேரம் பேச வேண்டும்.”

அவன் ``ஆம், நீ அவளிடமே பேசலாம். அவளால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்” என்றான். ``அவள், உள்ளே வேலையாக இருக்கிறாள். சற்றுப் பொறு.”

மார்த்தா பேசியபடி வருவது கேட்டது. அவளுடைய இரு பெண் குழந்தைகளின் குரல்கள். ``ஹாய் மகா, எப்படி இருக்கிறாய்? குரல் கேட்டு நெடுநாள்களாகின்றன” என்றாள்.

“நான் உன்னைச் சந்திக்க வேண்டும் மார்த்தா.”

அவள் ஒரு கணம் தயங்கி ``திங்கட்கிழமை சந்திக்கலாம், சாயங்காலமா” என்றாள்.

``இல்லை, நான் உடனே சந்திக்க வேண்டும். இன்றைக்கே. முடியுமென்றால் இன்னும் சில மணி நேரத்தில்.”

அவள் ``என்ன சொல்கிறாய்? இன்று விடுமுறை. சாம் வீட்டில் இருக்கிறார். குழந்தைகளுக்கு விடுமுறை” என்றாள்.

``மார்த்தா” என்றபோது என் குரல் இடறியது. ``நான் இக்கட்டில் இருக்கிறேன். மிகப்பெரிய துயரத்தில் இருக்கிறேன். எனக்கு வேறு எவரையும் பார்க்கத் தோன்றவில்லை... வேறு யாரிடமும் சொல்ல முடியாத விஷயம்.”

அவள் ``ஜானுவுக்குத் தெரியுமா?” என்றாள்.

p162b_1514371874.jpg

``தெரியாது” என்றேன்.

``மன்னித்துவிடு மகா. அது சரியல்ல.”

அவள் தொலைபேசியை வைக்கப்போகிறாள் என எண்ணி, ``மார்த்தா... மார்த்தா...” என்று கூவினேன். ``நான் உன்னைச் சந்தித்தாக வேண்டும். இல்லாவிட்டால், நான் செத்துவிடுவேன்!”

அவள் பெருமூச்சுடன் ``சரி, நீ இங்கேயே வா” என்றாள். ``சாம் இன்றைக்கு வெளியே போக வேண்டும் என்று சொன்னார். நான் சொல்லிக்கொள்கிறேன். எப்போது வருவாய்... சாயங்காலமா?”

நான் ``ஒரு மணி நேரத்தில்...” என்றேன்.

``என்ன சொல்கிறாய்... எங்கே இருக்கிறாய்?”

நான் ``மார்த்தா, நான் உன்னைச் சந்திக்கக் கிளம்பி வந்துவிட்டேன். வந்துகொண்டே இருக்கிறேன். ஊருக்கு இன்னும் 70 கிலோமீட்டர்தான்.”

அவள் பெருமூச்சு விட்டு ``வா” என்றாள்.

நான் சென்றபோது சாம் பட்டறையில் இருந்தான். என் காரின் ஒலி கேட்டு வெளியே வந்து ``ஹாய்” என்றான். கையில் ரம்பம், உடலெங்கும் மரப்பொடி.

``என்ன வேலை?” என்றேன்.

``ஒரு புத்தக அடுக்கு... சிறியது” என்றான். ``மார்த்தா உள்ளே இருக்கிறாள்.”

நான் ``நன்றி” என்றேன்.

``நீ வருத்தமாக இருக்கிறாய்...” என்றான் சாம்.

``ஆமாம் சாம்” என்றேன்.

``மார்த்தாவிடம் சொல், அவள் எல்லாவற்றுக்கும் தீர்வு

வைத்திருப்பாள், வாழ்த்துகள்.”

அவன் உள்ளே செல்வதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மார்த்தா முன் பக்கம் நீர்க்காப்பு உடையுடன் வெளியே வந்து புன்னகைத்து ``வா...” என்றாள். நான் உள்ளே சென்றேன். கோட்டைக் கழற்றி நிலைக்கொக்கியில் மாட்டும்போது ``குழந்தைகள் எங்கே?” என்றேன்.

``நீச்சல்” என்றாள். கூடத்தில் சோபாவில் அமர்ந்தேன்.
 
அவள் ``என்ன குடிக்கிறாய்... இந்தியக் காபி?” என்றாள். நான் புன்னகைத்தேன்.

16 ஆண்டுகளுக்கு முன்னர் அவள் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ வந்தபோது நான் அருந்தும் இந்தியக் காபி என்னும் பொருளைக் கண்டு திகைத்தாள். ``ஏறத்தாழ டிம்ஹார்ட்டன் காபி போல” என்று கண்டுபிடித்தாள்.

``இது, இந்திய நவீனப் பண்பாட்டின் சரியான அடையாளம். காபிப்பொடி ஐரோப்பியர் கொண்டுவந்தது. சிகிரித்தூள் நாங்கள் கண்டுபிடித்தது. பாலும் சீனியும் போட்டு கீர்போல அதைச் செய்வது எங்கள் தொன்மையான பாரம்பர்யம்” என்றேன். ``நாங்கள் அந்த மூன்று அம்சங்களின் வெற்றிகரமான கலவை, தெரியுமா?”

அவள் கண்களில் நீர்வரச் சிரித்தாள். அன்றெல்லாம் எல்லாவற்றுக்கும் சிரித்துக்கொண்டிருந்தோம்
.
மிகச்சரியான ஃபில்டர் காபி. அதைக் கையில் வாங்கி முகர்ந்ததுமே என் மனநிலை மாறிவிட்டது. முகம் புன்னகையில் விரியும் தசை அசைவை நானே உணர்ந்தேன். அதுவரை முகம் இறுகி இருந்தது என்பது அப்போது தெரிந்தது. அவள் என் எதிரே அமர்ந்துகொண்டு ``பரவாயில்லை, கொஞ்சம் தெளிந்துவிட்டாய்” என்றாள்.

``ஆம்” என்றேன்.

``தனியாகப் பேச வேண்டுமா... அந்த அறைக்குச் செல்வோமா?” என்றாள்.

``ஆம்” என்றேன். தனி அறைக்குள் சென்று அமர்ந்ததும், நான் மேலும் எளிதானேன். கால்களை நீட்டி சோபாவில் அமர்ந்தேன். இதமான குளிர். வெளியே பறவைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. காற்றில் மணி ஓசை எழுந்தது. ``மார்த்தா, நீ மிக அழகாக இருக்கிறாய்” என்றேன்.

அவள் சிரித்து “நன்றி” என்றாள்.

``என்ன பிரச்னை... ஜானுவிடம் ஏதாவது சண்டையா?” என்றாள்.

நான் அதுவரை அவளிடம் எப்படிப் படிப்படியாக எல்லாவற்றையும் சொல்வது எனத் திட்டமிட்டு ஏராளமான சொற்றொடர்களை உருவாக்கிக்கொண்டு வந்திருந்தேன். ஆனால், நேரடியாக ``மார்த்தா, உனக்கு என் அம்மாவைத் தெரியுமே!” என்றேன்.

``ஆம்” என்றாள். ``அப்பா இறந்த பிறகு `இங்கேதான் இருக்கிறார்கள்’ என்று ஒருமுறை சொன்னாய்.”

``ஆமாம்” என்றேன். “என் அம்மா, மிகச் சம்பிரதாயமான பின்னணி கொண்டவள்; அப்பாவுக்கு அடங்கி வாய் பேசத் தெரியாமல் 43 ஆண்டுக்காலம் வாழ்ந்தவள். சொந்தமாக அவளுக்கு எனக் கருத்துகள் ஏதும் இருந்ததில்லை. சொந்தமாக உணர்ச்சிகள் இருந்திருக்கலாம். அதைக்கூட அவள் காட்டிக்கொண்டதில்லை.”

மார்த்தாவுக்கே அதெல்லாம் தெரியும். நான் மார்த்தாவைத் திருமணம் செய்துகொண்ட தகவல் தெரிந்ததும் அப்பா போனில் நாலாந்தரக் கெட்டவார்த்தைகளை இறைத்தார். சாபம்போட்டு மின்னஞ்சல் செய்தார். நான் துணிந்து மார்த்தாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். என்னைத் தெருவிலேயே நிற்கவைத்து வசைபாடினார். அருகே கிடந்த தென்னை மட்டையை எடுத்து அடிக்க வந்தார். அம்மா, கூடத்துக்குள் நின்று ஜன்னல் வழியாக வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு வார்த்தை சொல்லவில்லை.

``அப்பா ஏழு வருஷங்களுக்கு முன்பு இறந்தார்” என்றேன். ``அது வழக்கமான இறப்பு இல்லை.”

மார்த்தாவின் முகம் சுருங்கியது. அவள் கண்களில் வந்த மாற்றத்தைக் கவனித்தேன். அவளுடைய ஒவ்வொரு முகபாவமும் எனக்கு எத்தனை நெருக்கமாகத் தெரிந்திருக்கிறது என வியந்தேன். நீளமான மூக்கும் மெல்லிய உதடுகளும் இளம்பச்சைக் கன்னங்களும்கொண்ட ஒடுங்கிய முகம். நான் இளமையில் கண்டிருந்த எலிசபெத் அரசியின் புகைப்படங்களை அவள் நினைவுறுத்தினாள். அவளிடம் நான் முதலில் சொன்னதே அதைத்தான். ஓர் அலுவலக விருந்தில்.

``அப்பாவும் அம்மாவும் மட்டும்தான் திருச்சியில் தனியாக இருந்தார்கள். அப்பாவுக்கு உயர் ரத்த அழுத்தம். இரண்டு முறை இதய அடைப்பு வந்தது. ஆனால், அவரே கட்டிய வீட்டை விட்டு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அம்மாதான் அவரைப் பார்த்துக்கொண்டாள். வீட்டில் சமையல் எல்லாம் அவள்தான். ஒரு பெண் வந்து தூய்மை வேலைகளை மட்டும் செய்வாள். அப்பாவைத்தான் தெரியுமே, எது செய்தாலும் குற்றம். எவ்வளவு கவனித்தாலும் போதாது. உடல்நிலை மோசமாகும்தோறும் குணம் கெட்டுக்கொண்டே சென்றது.”

``ஆமாம். மறுபக்கம் எதிர்ப்பே இல்லாமல் இருக்கும்போது குரூரம் அப்படி வளர்ந்துகொண்டே போகும்” என்று மார்த்தா சொன்னாள்.

``அது ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் உண்டு. என் அப்பா, வீட்டுக்கு வெளியே ஒரு வாயில்லாப் பூச்சி. அவரைவிடப் பணமும் அதிகாரமும் உள்ளவர்களைக் கண்டால், அவரை அறியாமல் குழைய ஆரம்பித்துவிடுவார். அரசாங்க வேலையில் கூழைக்கும்பிடு போட்டே 36 ஆண்டுக்காலம் வேலை பார்த்ததால் வந்த குணம். அந்த இழிவை, அவர் வீட்டுக்குள் இப்படித் திமிர்கொண்டு சமன்செய்துகொண்டார்.”

p162c_1514371893.jpg

மார்த்தா புன்னகைத்தாள். நான் ``அப்பா அன்று காலை சோபாவில் அமர்ந்திருந்தார். அம்மா வெளியே சென்று பால்காரனிடம் பால் வாங்கிக்கொண்டு உள்ளே வந்தாள். வழியில் கால் விரல் நாற்காலி முனையில் முட்டிவிட்டது. வலியுடன் முனகியபடி அவள் குனிந்து நின்றாள். அப்பா அதுதான் சாக்கு என வசைபாட ஆரம்பித்துவிட்டார். வழக்கம்போல அப்போது வாயில் என்ன வருகிறதோ, எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கு அந்த வலியில் எப்படியோ ஒரு வெறி வந்துவிட்டது. பால்செம்பைத் தூக்கி அவர்மேல் அடித்திருக்கிறாள்” என்றேன்.

``ஓ” என்றாள் மார்த்தா.

``எங்கள் வீட்டில் 50 ஆண்டுகளாக இருக்கும் ஓட்டுப்பித்தளைச் செம்பு. ஒரு கிலோவுக்கு மேல் எடைகொண்டது. அப்பா அடிபட்டதும் ஒரு மூச்சொலி மட்டும் எழுப்பி அப்படியே பக்கவாட்டில் சரிந்துவிட்டார். உண்மையில், அம்மா அதைக் கவனிக்கவில்லை. கோபத்துடன் சமையலறைக்குச் சென்று கொஞ்ச நேரம் நின்றிருக்கிறார். அழுகை வந்து நன்றாக அழுது முடித்த பிறகு வந்து பார்த்தால், சோபாவில் அவர் விழுந்திருக்கிறார். அருகே போய்க் கூப்பிட்டாள். பலமுறை கூப்பிட்டும் பதில் இல்லை. மெள்ள தொட்டு உலுக்கினாள். அப்பா இறந்துகிடந்தார்.”

மார்த்தா இரு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டாள். மூச்சு நின்று நின்று வருவதுபோல கழுத்து அசைந்தது.

``அம்மா அப்படியே மயங்கி விழுந்துவிட்டாள். நான்கைந்து மணி நேரம் மூச்சுப்பேச்சு இல்லாமல் அங்கேயே கிடந்திருக்கிறாள். பிறகு நினைவு வந்து எழ முடியாமல் தவழ்ந்து சென்று, பக்கத்து வீட்டு மாரிமுத்துவைக் கூப்பிட்டாள். அவர்தான் என்னைக் கூப்பிட்டு இறப்புச் செய்தி சொன்னார். நானும் ஜானகியும் உடனடியாகக் கிளம்பிச் சென்றோம். அப்பாவின் சடலத்தை ஆஸ்பத்திரியில் குளிர்ப்பெட்டியில் வைத்திருந்தார்கள். அம்மா, தீவிரக்கண்காணிப்புப் பிரிவில் இருந்தாள். அடிக்கடி மயக்கம் வந்து நினைவிழந்துகொண்டிருந்தாள். அப்பாவின் இறுதிச்சடங்கு நடந்தது எதுவும் அம்மாவுக்குத் தெரியாது.”

மார்த்தா பெருமூச்சு விட்டாள்.

நான் ``நான்காவது நாள் கொஞ்சம் நினைவு திரும்பியபோது அம்மா என்னைக் கண்டு கதறி அழுதாள். என்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னாள். `அவளை வெளியே போகச் சொல்’ என்று ஜானகியைப் பார்த்துக் கை நீட்டிக் கூச்சலிட்டாள். நான் ஜானகியை வெளியே அனுப்பிவிட்டேன். அதற்குள் மீண்டும் மயக்கம் வந்துவிட்டது. மீண்டும் நினைவுவந்தபோது கதறி அழுது கூச்சலிட்டாள். அவளால் சொல்ல முடியவில்லை. கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அவள் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதைக் கண்டு நான், உளவியலாளர் டாக்டர் நரேனிடம் சொன்னேன். அவர் ஏழு அமர்வுகளில் அவளிடம் பேசினார். அதன் பிறகு என்னிடம் நடந்ததைச் சொன்னார்” என்றேன்.

``உளவியலாளரிடம் சென்றது மிக நல்ல விஷயம். அம்மா அதையெல்லாம் உன்னிடம் சொல்லியிருந்தார் என்றால், அந்த உரையாடலே மிகப்பெரிய சித்ரவதையாக ஆகி, மேலும் சிக்கலை உருவாக்கியிருக்கும்” என்றாள் மார்த்தா.

``நரேன் என்னிடம் நடந்ததைச் சொன்னபோது நான் ஆடிப்போய்விட்டேன். என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. கதைகளில்தான் இப்படி நிகழும் என்பதே என் எண்ணம். அவர் சொன்னபோது நான் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. இரவெல்லாம் மனம் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அன்றே வீட்டைக் காலிசெய்துவிட்டு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அடுத்த நாள் முதல் நான் மூளையமைதி மாத்திரைகள் போட ஆரம்பித்தேன். நான் சமநிலைக்கு மீள 15 நாள் ஆனது.”

``புரிகிறது” என்றாள் மார்த்தா.

``நரேன் எல்லாவற்றையும் வழிநடத்தினார். அம்மாவிடம் எதுவும் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ள வேண்டாம் என்றும், அவரே சில நாளில் சொல்வார் என்றும் சொன்னார். அம்மா உடனே தற்கொலை செய்துகொள்ளத்தான் நினைத்திருக்கிறார். ஆனால், நினைவு தவறிக்கொண்டே இருந்ததால் அதற்கு முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளக்கூட ஓர் ஆரோக்கியம் தேவைப்படுகிறது அல்லவா?”

நான் சிரித்தபோது மார்த்தா சிரிக்கவில்லை. என் சிரிப்பே கோணலாக இருந்தது என உணர்ந்தேன். ``அம்மாவை நானும் ஜானகியும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டோம். மெதுவாகத் தேறி வந்தாள். நரேன் அவள் செய்தது தவறு அல்ல, அது வெறும் தற்செயல்தான் என்பதைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு சொற்களில் அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். ஏற்கெனவே அவருடைய இதயம் மிகப் பலவீனமாகவே இருந்தது. ``அது ஒரு வகை இயற்கை மரணமேதான்’’ என்றார். பிறகு அம்மாவே அப்படிச் சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் விசா வந்துவிட்டது. அவளை அமெரிக்காவுக்கு அழைத்து வந்துவிட்டேன்.”

``அமெரிக்கா கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு, அம்மா என்னிடம் நடந்ததைச் சொன்னாள். சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதறி அழுதாள். நானும் அழுதேன். நான் அவளை எப்படியெல்லாம் சமாதானம் செய்ய வேண்டும் என்று முன்னரே யோசித்துவைத்திருந்தேன். ஆகவே, அப்போது என்னால் நன்றாகப் பேச முடிந்தது. ஆனால், அழுது முடிந்ததுமே அம்மா தெளிவாகிக்கொண்டே சென்றது எனக்குள் ஏமாற்றத்தை உருவாக்கியது. நான் சொன்ன ஆறுதல்களை எல்லாம் அவள் அப்படியே ஏற்றுக்கொண்டதும், அவள் தவறே செய்யவில்லை என்று நான் சொன்னபோது அவளும் அதை ஒப்புக்கொண்டதும் என் ஏமாற்றத்தை வளர்த்தன.”

“ஆக, பிரச்னை இதுதான். இல்லையா?” என்றாள் மார்த்தா.

``ஆம். அம்மா அமெரிக்கா வந்தபோது ஒரு பக்கம் மிரட்சியுடனும் இன்னொரு பக்கம் குழந்தைத்தனமான ஆர்வத்துடனும் இருந்தாள். விமானநிலையத்தில் எலிவேட்டரில் ஏறுவதற்கு மிகவும் தடுமாறி விழப்போனாள். ஒருவழியாக நான் அவளைப் பிடித்து அதில் ஏற்றியபோதுதான் முதல்முறையாகப் புன்னகை புரிந்தாள். அமெரிக்காவின் குளிரும் வெள்ளை முகங்களும் அவளை அந்நியப்படுத்தக் கூடாது என, நான் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டேன். இங்கு உள்ள கோயில்களுக்கும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கும் சினிமாவுக்கும் அழைத்துச் சென்றேன். நானும் ஜானகியும் யாராவது ஒருவர் எப்போதும் கூடவே இருந்தோம். அம்மாவை தனியாகவே விடவில்லை.”

``ஜானுவுக்குத் தெரியுமா?” என்றாள் மார்த்தா.

``ஆமாம், அம்மாவே அவளிடம் சொல்லச் சொன்னாள்” என்றேன்.

`` `அம்மாவை நிறைய செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்’ என்று நரேன் சொன்னார். ஆகவே, ஓர் எண்ணம் வந்தது. இங்கே எனக்குத் தெரிந்த ஓர் அம்மா இந்தியச் சமையல் செய்து இணையம் வழியாக தேவையானவர்களுக்குக் கொடுத்தனுப்பும் தொழில் செய்கிறார். அம்மாவை, அவர்களுக்கு சமையலுக்கு உதவியாக அனுப்பினேன். அம்மா, மிகச்சிறந்த சமையல்காரர். சீக்கிரத்திலேயே அம்மாவின் சமையலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அம்மாவுக்கும் அதில் மிகப்பெரிய ஈடுபாடு வந்துவிட்டது. காலையிலேயே உற்சாகமாகக் கிளம்பிச் செல்ல ஆரம்பித்தாள். விதவிதமாகச் சமைக்க ஆரம்பித்தாள். தன் சமையலுக்கு வரும் பாராட்டுகளை என்னிடம் ஒவ்வொன்றாகச் சொல்வாள்.”

``அது நல்ல உத்திதான்” என்றாள் மார்த்தா. ``எதையாவது செய்யும்போது மனம் விலகிவிடுகிறது.”

``மிகச் சீக்கிரத்திலேயே அம்மா மீண்டுவந்தாள். அவளே இங்கே ஓர் அம்மாவிடம் சென்று ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டாள். ஜானகியிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டாள். அம்மாவின் மாற்றத்தை ஓர் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். புடைவை கட்டுவதை விட்டுவிட்டாள். கூந்தலைக் குட்டையாக நறுக்கிக்கொண்டாள். அவளே தினமும் காலையில் காரை ஓட்டிக்கொண்டு வேலைக்குச் செல்கிறாள். கடைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்கிறாள். அங்கே அவளுக்கு என நிறைய தோழிகள் உருவாகிவிட்டார்கள். அவர்கள் சேர்ந்து சுற்றுலாவுக்கெல்லாம் செல்கிறார்கள். அம்மா இப்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர். நிறையவே சம்பாதிக்கிறாள். கிட்டத்தட்ட சுதந்திரமாக வாழ்கிறாள். என் வீட்டில் தங்கியிருப்பதால் மட்டும் என்னிடம் எங்கே போகிறாள் எனச் சொல்கிறாள். மற்றபடி முன்புபோலப் பேச்சு ஏதுமில்லை.”

மார்த்தா என்னை நோக்கியபடி பேசாமல் இருந்தாள். நானும் சற்று நேரம் பேசாமல் இருந்தேன். ``வேறென்ன?” என்றாள்.

``மார்த்தா, அம்மாவை மாற்றியது நான். அதில் நான் வெற்றியும் பெற்றேன். ஆனால், என்னால் இந்த மாற்றத்தைத் தாள முடியவில்லை.”

மார்த்தா ``ஏன்?” என்றாள்.

``தெரியவில்லை. என்னால் இப்போது அம்மாவை நேருக்குநேர் பார்க்கவே முடியவில்லை. அம்மாவை நினைத்தாலே என் மனம் எரிகிறது. பல சமயம் இரவுகளில் தூக்கமே இல்லை. நான் இப்போது மீண்டும் மூளையமைதி மாத்திரைகள் சாப்பிடுகிறேன். என்னால் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை.”
 
மார்த்தா கைகளைக் குவித்து அதன்மேல் முகத்தை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

``நான் அம்மாவின் பழைய புகைப்படங்களை இரவெல்லாம் பார்க்கிறேன். அம்மாவும் அப்பாவும் நானும் இருக்கும் பழைய படங்களைப் பார்த்தால், நெஞ்சுருகி அழத் தொடங்கிவிடுகிறேன். என் அவஸ்தையை ஜானகியிடம் சொன்னேன். `உனக்கென்ன பைத்தியமா?’ என்கிறாள். `அம்மா மகிழ்ச்சியாக இருப்பதில், உனக்கு என்ன பிரச்னை?’ என்கிறாள். என்னை அவளும் புரிந்துகொள்ளவில்லை. நான் முழுத்தனிமையில் இருக்கிறேன்.”

என்னால் கட்டுப்படுத்த முடிய வில்லை. குரல் உடைந்து கண்ணீர் வழிந்தது. அதைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன்.

``என் அப்பா இப்போது அடிக்கடி கனவில் வருகிறார். இறந்தபோது இருந்த வடிவில் அல்ல, அலுவலகம் செல்லும் பழைய தோற்றத்தில். ஒருமுறை `சரியாகப் படிக்கவில்லை’ என என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பதுபோல கனவு. அப்பாவின் ஆவி அமைதி அடையவில்லையோ என எண்ணி, ஊருக்குப் பணம் அனுப்பி ராமேஸ்வரத்திலும் காசியிலும் புத்தகயாவிலும் சடங்குகள் செய்யவைத்தேன். திருவண்ணாமலையிலும் சிதம்பரத்திலும் மோட்சதீபம் ஏற்றினேன். ஆனாலும் கனவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.”

p162d_1514371908.jpg

“இரண்டு நாள்களுக்கு முன் ஒரு கனவு. அப்பா சடலமாக உறைந்து கண்ணாடிப்பெட்டிக்குள் இருக்கிறார். நான் உள்ளே பார்க்கிறேன். சடலமாகவே அவர் அழுதுகொண்டிருக்கிறார். அப்படியே எழுந்து அமர்ந்து நடுங்கினேன். வியர்வை வழிந்தது. மூச்சு சீரடைய நெடுநேரமாகியது.

காலையில் அம்மா கிளம்பிக்கொண்டிருந்தபோது அவளிடம் `கொஞ்சம் பேச வேண்டும்’ என்றேன். கூடத்திலேயே நின்று `என்ன?’ என்று கேட்டாள். என் கனவைச் சொன்னேன். `ஊருக்குச் சென்று அனைவருமாகச் சேர்ந்து ஒரு சடங்கு செய்தால் அப்பாவுக்கு அமைதி கிடைக்கும்’ என்றேன். முகம் சுளித்து `கிறுக்குத்தனம், இனிமேல் இதைப் பற்றி என்னிடம் பேசாதே!’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

நான் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்தேன். மாலை, அம்மா அவள் தோழி மேகியுடன் வந்தாள். ஒரே சிரிப்பு, பேச்சு, கும்மாளம். இரவு ஜானுவிடம் சொன்னபோது `அம்மா சொன்னது சரிதான். உனக்குக் கிறுக்கு’ என்றாள். காலையில் அம்மா தோழிகளுடன் மேரியன் ஏரியில் படகுத் தங்கலுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டாள். நான் வீட்டில் அமர்ந்திருந்தேன். கிறுக்குப்பிடித்துவிடும் எனத் தோன்றியது. என்னால் தாங்க முடியவில்லை. உன்னைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

மார்த்தா தன் கை நகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் தலைகுனிந்து சோபாவின் தோலுறையை நெருடிக்கொண்டிருந்தேன். மார்த்தா மூச்சொலியுடன் நிமிர்வதை உணர்ந்து, நிமிர்ந்து நோக்கினேன். ``நான் என்ன செய்ய வேண்டும் மகா?”

``எனக்குத் தெரியவில்லை.”

``நான் உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். நானும் சாமும் குழந்தைகளும் உன் உறவு என்றே நீ நினைக்கலாம். நீ தனிமையானவனாக எண்ணிக்கொள்ளவேண்டியதில்லை.” 

``நன்றி மார்த்தா” என்றேன்.

``நீ எதையாவது செய்ய ஆரம்பிக்கலாம் மகா. சாம் போல. கைகளால் செய்யக்கூடிய எதையாவது. மரவேலை, கடைசல்வேலை, தோட்டவேலை. இந்தியர்கள், மூளையை உடம்பிலிருந்து பிரித்துத் தனியாக வைத்திருக்கிறார்கள். அது தானாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.”

நான் புன்னகைத்தேன். மார்த்தா ``உனக்கு இன்னொரு காபி தேவைப்படும் என நினைக்கிறேன்” என்றாள்.

``எப்போதுமே அது உனக்குச் சரியாகத் தெரிகிறது” என்றேன்.

மார்த்தா இன்னொரு ஃபில்டர் காபி கொண்டு வந்தாள். நான் அதைக் குடித்தபோது மெய்யாகவே மெள்ள அனைத்திலிருந்தும் விடுபட்டேன்.

``மார்த்தா, இந்தக் கனவுகள்... நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்? உளவியலாளரைப் பார் என்று மட்டும் சொல்லாதே.”

``எனக்குத் தோன்றுவதைச் சொல்லவா?”

``சொல்... நிச்சயமாக அது எனக்கு முக்கியமானது.”

``நீ ஒருமுறை ஊருக்குப் போய் வா. உன் மதத்தின் சடங்குகளை எல்லாம் முறையாகச் செய்” என, மார்த்தா என் கண்களைக் கூர்ந்து பார்த்துச் சொன்னாள், ``உன் அப்பாவை நீதான் கைதவறுதலாகக் கொன்றுவிட்டதாக நினைத்துக்கொள். அதற்குரிய எல்லாவற்றையும் செய். மீண்டுவிடுவாய்.”

``என்ன சொல்கிறாய்?” என்றேன்.

``ஒரு சின்ன உளவியல் நாடகம்... வேறொன்றுமில்லை”

``சரியாகிவிடும் என்கிறாயா?”

``நம்பு. கண்டிப்பாக!”

நான் பெருமூச்சு விட்டு கோப்பையை வைத்தேன். ``நன்றி. நீ எப்போதும் சரியானதைச் சொல்வாய் என்று சாம் சொன்னார்.”

p162e_1514371921.jpg

``அவரிடம் நான் தச்சுவேலை செய்யச் சொன்னேன்” என்று சிரித்தாள். சோழி நிறப் பற்கள். நான் ஜானகியைப் பெண் பார்க்கப் போனபோது அவளுடைய வெண்பற்களைத்தான் முக்கியமாகக் கவனித்தேன்.

``நீ சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். இன்று நான் சாமுக்காக இத்தாலியச் சமையல் செய்யலாம் என்றிருக்கிறேன்.”

``நிச்சயமாக” என்றேன்.

``சரி, சாமிடம் பேசிக்கொண்டிரு. ஒரு மணி நேரம்” என்றாள்

``மார்த்தா” என்றேன்

``என்ன?” என்று திரும்பினாள்.

``நான் வந்தது இதையெல்லாம் சொல்வதற்காக மட்டும் அல்ல.”

அவள் புருவம் சுருங்கப் பார்த்தாள்.

``உன்னிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். மனமார...”

``சேச்சே என்ன இது?” எனச் சிரித்தாள்.

``இல்லை, நீ என்னை மன்னிக்க வேண்டும்.”

``மகா, நான் உன்மேல் கோபமே கொள்ளவில்லை.”

``இதுபோதும்... இதுவும் என்னை ஆறுதல்படுத்தும் என நினைக்கிறேன்”  என்றேன்.

``அரான்சினி செய்கிறேன். உங்கள் ஊர்ப் பலகாரம்போலவே இருக்கும்...” என்றாள் மார்த்தா. நான் புன்னகைத்தேன்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பை காபி

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81.jpg

“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன்.

மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது.

தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண் அகந்தையை வளர்த்துக்கொள்கிறான். அது மீறப்படும் இடங்களில் மிகவும் புண்படுகிறான். வதைப்பதில் அவனுக்குக் கிட்டும் இன்பம் அளப்பெரியது.

‘மகா’ தன் தந்தை அன்னையை வதைப்பதைப் பார்த்துவளர்ந்தவன். அன்னையின் புண்படுதலுக்காக மிகவும் வருந்தியிருக்கலாம். மார்த்தாவை மணமுடித்த போது தந்தையின் அகங்காரம் அடிவாங்குகிறது. தனக்குக் கீழ் உள்ளவன் அதை மீறிச்செல்ல அனுமதிக்கவே முடிவதில்லை.

தந்தையின் இறப்பிலிருந்து அவனின் அன்னை மீண்டுவர அவனுக்குள் இருக்கும் அகங்காரம் அடிவாங்குகிறது. அவன் எப்போதும் தன்னைப்பற்றி அக்கறைகொள்பவன். தன் அகங்காரம் வீழ்ந்து நொறுங்கத் துடிக்கிறான். அம்மாவின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு சுயம் அதை விரும்பினாலும், அவனுக்குள் புதைந்திருக்கும் மற்றொரு சுயம் அதை விழுங்கி “நீ தோற்றுப்போய்விட்டாய்” என்று அலறுகின்றது. வதைப்பதில் இருக்கும் இன்பம் கிடைக்காமல் போக வீழ்ந்து சுருளும் இடம் அது. தற்போதைய மனைவி ஜானகியால் அவனின் அவஸ்தையைப் புரிந்து கொள்ளவே இயலவில்லை. பெரும்பாலான இயல்பான பெண்களுக்கு ஆண்களைப் புரிந்துகொள்வதில் எப்போம் சிக்கலே.

மார்த்தாவினால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மகாவுடன் ஒரு காலத்தில் வாழ்ந்தவள் அவள். அவர்களுக்கான பிரிவுக்கான காரணம் கதையில் இல்லை. ஆனால், உள்ளது. தன் பலவீனங்களை இயல்பாகக் கண்டுகொள்ளும் பெண்களை ஆண்களுக்குப் பொதுவாக பிடிப்பதே இல்லை. மீண்டும் மீண்டும் அகங்காரம் அவர்களிடம் வீழ்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதன் நாடகத்தை, இறுமாப்பை வீழ்த்திவிடுகிறார்கள். இதான் நீ என்று நேரவே காட்டிவிடுகிறார்கள். அதன் உண்மைத்தன்மை சுட்டெரிக்கும். மார்த்தா மகாவினால் ஒரு போதும் வெல்ல முடியாத பெண். அவன் அகங்காரம் தோற்றுப்போகும் இடம். அதனாலேயே அவர்களிடம் மணவிலக்கு ஏற்பட்டிருக்கும்.

%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D.jpg

அம்மாவிடம் தோற்றுப்போக, அதை வென்றுசெல்ல மார்த்தாவிடம் வருகிறான் மகா. அவளால் ஒரு அசைவில் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு கோப்பியைக் கொடுத்து அவனை ஆசுவாசப்படுத்துகிறாள். இங்கே கோப்பி பெண்ணின் வலிமையோ என்று யோசிக்கத் தோன்றுகின்றது. அது அவளின் பதில்கள். ஆணின் அகங்காரம் வீழ்ந்து செல்ல ஒரு பக்கம் பெண்ணின் சமப்படுத்தல் தேவையாக இருக்கிறது. அந்த சமப்படுத்தல் தன்னையும் மீறிச்செல்லும் இடங்களில் மீண்டும் அடிவாங்குகிறான். இதுவொரு சுழல் விளையாட்டு.

தன்னால் வெல்ல முடியாத பெண்ணை வெல்ல மற்றொரு பெண்ணின் முன் மண்டியிடுருகிறான். அதன் அகங்காரத்தை வெல்ல வழிசொல்லு என்று இறைஞ்சுகிறான். இங்கே அவன் தோற்றுப்போவதை அறியவே முடிவதில்லை அவனால்.

மகா மார்த்தாவிடன் கேட்கும் மன்னிப்பு மிகமுக்கியமான இடம். வதைப்பதில் இருக்கும் இன்பத்தைப் பெறவும், அதன் அகங்கார ருசியைக் குற்றவுணர்வு இல்லாமல் அனுபவிக்க ஆணின் தீமை காற்றில் அலையும் தீ நாக்குபோல் மாறி மாறிச் சுழன்று அணையாமல் அசைந்துகொண்டேயிருக்கிறது. அதுவே இக்கதையின் தரிசனத்தனை நோக்கி இட்டுச்செல்கிறது.

ஜெயமோகன் இக்கதையை ஒரு குறுநாவலாக எழுதியிருக்கலாம். அதற்கான உச்சங்கள் எக்கச்சக்கமாக உண்டு. விரிந்திருந்தால், மற்றொரு கோணத்தில் ஆணின் தீமையை உரையாடும் கன்னியாகுமரி நாவல் போல் வந்திருக்கும்.

இக்கதை மிக நேரடியாக எழுதப்பட்ட கதை. அதுவே பொருத்தமாக இருக்கின்றது. வெகுஜன இதழில் இக்கதையைப் படித்து தீண்டப்படுபவன் எப்படியோ தடுமாறி இலக்கியத்திற்கு வந்து சேருவான் என்றே நம்புகிறேன்.

 

http://www.annogenonline.com/2017/12/30/orukopaikcoffe/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.