Jump to content

தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்


Recommended Posts

  • தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்
DSCF2442-750x400.jpg

தனியார் துறைகளில் தொழில் புரியும் பெண்களின் பிரச்சினைகள்

 

உண்டி சுருங்­கு­தல் பெண்டிர்க்கழகு’ எனும் பழ­மொழி எங்­கள் பெண்­க­ளைச் சுட்டியே அமைந்ததொன்று. ஆண்­க­ளுக்கு வழங்கி மீத­மாக, மிஞ்­சிப்­போ­கிற உண­வைத்­தான் வீட்­டி­லுள்ள பெண்­கள் உண்ப தென்பது தமிழ்ப் பாரம்­ப­ரிய, பண்­பா­டாக இருக்­கி­றது. இத­னால் வீட்­டுப் பெண்­க­ளுக்­குச் சரி­யான, நிறை­வான, திருப்­தி­ யான உணவு கிடைப்­ப­தில்லை. இதனை அடி­யொற்­றியே மேற்­படி பழ­மொழி வழக்­கி­ல் அமைந் ததா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

ஆண்களும், பெண்களும் இணைந்த இந்­தச் சமூ­கத்­தில் எந்த விட­யத்திலும் பெண்­கள் இரண்­டாம் பட்­ச­மா­கவே கணிக்­கப்­பட்டு வரு­கின்­றார்­கள். குடும்­பத் திலோ, சமூ­கத்­திலோ பெண்­க­ளின் பங்கு காத்­தி­ர­மா­ன­தா­க­வும், ஆண்­களை விடக் கன­தி­யா­ன­தா­க­வும், பெறு­மதி மிக்­க­தா­க­வும் இருக்­கின்­றது. தாயாக, மனை­வி­யாக, சகோ­த­ரி­யாக இந்த உற­வு­க­ளுக்கு அப்­பால் தனி மனு­ஷியா­கப் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு ஆண்­களை விட மேலா­னது.

ஒரு குடும்­பத்­தில் குடும்­பத் தலை­வ­னாக, உழைப்­புத் தலை­வ­னா­கக் கண­வனோ ஓர் ஆணோ கரு­தப்­பட்­டா­லும், பெண்­க­ளின் மதிப்­பிட முடி­யாத உழைப்பு ஒரு­போ­துமே கணிப்­புக்கு வரு­வ­தில்லை. உடல் உழைப்பை வழங்­கும் ஆண்­க­ளை­விட, பின்­தூங்கி முன்­னெ­ழுந்து உழைக்­கும் பெண்களின் உழைப்பு பணக்­க­ணி­யத்­துக்கு வராத கார­ணத்­தி­னால் பெறு­ம­தி­யில்­லா­மல் போய்­விடு கிறது.

இந்­தப் பின்­ன­ணி­யில் கூலி­வேலை மற்றும், ஏனைய வேலை­க­ளுக்கு ஆண்­க­ளைப் போலவே வேலைக் குச் செல்­லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சம்பளத்­தின் அளவு எப்­ப­டி­யா­னது என்­பது வெளிப்­படை யானது. எத்­த­கைய உட­லு­ழைப்­பி­னைப் பெண்­கள் வழங்­கி­னா­லும், அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் சம்­ப­ளத்­தின் அளவு ஆண்­கள் பெறும் சம்­ப­ளத்துடன் ஒப்பிடும் போது பெரி­ய­ அளவில் வேறு­பாடு கொண்டதாகவே உள்­ளது. ஆனால் மாற்றமுறும் சமூ­க, அர­சி­யல், பொரு­ளா­தார ரீதி­யான கார­ணங்­க­ளால் பெண்­க­ளைத் தலை­மை­யா­கக் கொண்ட குடும்­பங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

 

ஆண்­கள் இல்­லாத குடும்­பங்­க­ளில் பெண்­களே வேலை செய்து ஏனைய குடும்­ப உறுப்பினர்களைக் காப்­பாற்­றும் நிலை­யில், கந்­த­றுந்து வெட்­டி­யாய் வேலை அற்­றுச் சுற்­றும் ஆண்­க­ளுக்­கா­க­வும் பெண்­கள் வேலை செய்து உழைக்க ­வேண்­டிய சூழ்­நி­லை­யில் பெண்­கள் தொழில் செய்து தங்­க­ளை­யும் தங்­கள் குடும்­பத்­தை­யும் காப்­பாற்­றும் நிலை இன்று நிலவுகிறது.

இன்­றைய நிலவரத்தின்படி, பெண்­கள் பல்­வேறு தளங்­க­ளி­லும் தமது கல்­வி­ய­றிவு ஏனைய துறை­சார்ந்த பட்­ட­றி­வு­க­ளால் சமூ­கத்­தில் பல்­வேறு துறை­க­ளில் முன்­னேறி நிலைத்து நின்­றா­லும், முழு­மை­யான, ஒரு திருப்­தி­யான நிலையை பெண்­கள் இன்­ன­மும் அடைந்து விட­வில்லை. இந்த இரண்­டாம்­தர நில­மையை வைத்­துக்­கொண்டே பல­ரும் பெண்­க­ளின் உழைப்பை யும், நலன்­க­ளை­யும் சுரண்டி வரும் நிலை யைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

பல்­வேறு உதா­ர­ணங்­களை உங்­கள் முன் வைக்­கா­மலே, சமூ­கத்­தில் உயர் நிலை­யி­லும் இல்­லா­மல், தாழ் நிலை­யி­லும் இல்­லா­மல் இடைப்­பட்ட நிலை­யில் எமது சமூ­கத்­தில் நட­மா­டும் தொழில் பார்க்­கும் பெண்­க­ளைப் பாருங்­கள். அதி­கம் படிக்­கா­மல் குறை­வா­க­வும் படிக்­கா­மல், 8,9,10, மற்றும் 11ஆம் வகுப் புக்­க­ளில், மிஞ்சி மிஞ்­சிப் போ­னால், க.பொ.த. உயர்­த­ரம்வரை படித்து அவற்­றில் முழு­ மை­யா­கச் சித்­தி­ய­டை­யா­ மல் பல்­வேறு விநோதப் பொருள் கள் விற்பனை நிலை யங்களி லும் (Fancy goods), மருந்­துக் கடை­க­ளி­லும், புட­வைக் கடை­க­ளி­லும் இது போன்­றி­ருக்­கும் இன்­னும் பல கடை­க­ளி­லும் பணி­பு­ரி­யும் பெண்­க­ளைப் பாருங்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள சிறு பெட்­டிக் கடை­கள் முதல் பார்ப்­ப­தற்­குப் பிர­மாண்ட மாகத் தோற்­ற­ம­ளிக்­கும் புட­வைக்­க­டை­கள் வரை எத்­த­கைய நிலை­யில் பெண் பிள்­ளை­கள் வேலை செய்­கி­றார்­கள்? என்பதை எம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. வேலை செய்­தால் தான், தானும் சாப்­பிட்டு நோயா­ளி­யான தாயை­யும், இய­லாத தந்தையையும், ஊர்­சுற்­றும் அண்­ணன், தம்­பி­மா­ரை­யும் தாங்­கிக் கொள்­ள­வேண்டிய நிலையில் எத்­தனை பெண்­கள் வேலை செய்­கி­றார்­கள் என்­பது புரி­யும்.

அத்­தனை பெண்­க­ளுக்கும் தாம் பார்க்கும் வேலை­கள் திருப்­தியா­க, சரி­யா­ன பொரு­ளா­தார நலன்­கள் தருபவையாக அமை கின்ற னவா என்­ப­தைப் பற்­றிச் சிறிது ஆராய விரும்­பி­னோம். இந்த விடயம் குறித்து நாம் சந்தித்துப் பேசிய ஒரு சிலர் கூறிய கருத்­துக்­க­ளைக் கீழே தொகுத்­துத் தரு­கின்­றோம்.

யாழ்ப்­பாண நக­ருக்­குள் இருக்­கும் ஒரு பிர­பல புத்­தகசாலை அது. அதன் முன் வாயி­லில் நின்று தன்னை மொய்த்­துப் பிடித்­து­விட்ட வாடிக்­கை­யா­னர்­க­ளைச் சமா­ளித்து வியா­பா­ரம் செய்து கொண்­டி­ருந்த பெண்­பிள்ளை அவர். அந்த இடர்­பாட்­டுக்­குள் கிடைத்த சிறி­ய­தொரு இடை­வெ­ளிக்­குள் எங்­க­ளு­டன் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். பெயர் வித்­தியா. வயது 22. இடம் சங்­கானை. அவர் குறித்த தனிப்பட்ட விவ­ரங்­களை எடுத்தாயிற்று. தனது மனஆதங்­கத்தை, தான் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னையை அவர் இப்­ப­டிச் சொன்­னார், ‘‘எனக்கு 6.30க் குப் பிற­கு­தான் வேலை முடி­யி­றது. வீட்டை போற­துக்­குக் கடைசி பஸ்­ஸைத்­தான் என்­னாலை பிடிக்க முடி­யும். இரவு பஸ். அதிலை குடிச்­சுப்­போட்டு வாற ஆள்­க­ளுக்கு முகம் குடுக்­கே­லாமல் இருக்­குது. தைரி­யத்தை வர வைத்­துக் கொண்டு அவர்­க­ளைத் தள்ளி நிக்­கச் சொன்­னால், கெட்ட வார்த்­தை­க­ளாலை ஏசுகினம்’’ என்றார் வித்தியா.

உழைத்­துக் களைத்து வீடு திரும்­பும் வேளை யில் பெரும்பாலான நாள்களில் வித்­தியா இப்­படி ஏரா­ளம் கஷ்டங்­களை எதிர்­கொண்­டா­லும், இது ஒன்­றைத்­தான் எங்­க­ளுக்­குத் துணிந்து கூறு கிறார் என்பது தெரிந்­தது. அவ­ரது அன் றாட அவஸ்­தை­யாக அது மேலெ­ழுந்து நிற்­ப­தும் எங்­க­ளுக்­குப் புரிந்­தது.

புதிய சந்­தைக் கட்­ட­டத் தொகு­திக்­குள் புகுந்­தோம். அழகு சாத­னக் கடை ஒன்­றில் நின்ற அந்­தப் பெண் ஏதோ ஒரு அவஸ்­தைக்­குள் அகப்­பட்­டி­ருப்­பது புரிந்­தது. அவ­ரது முகம் அதை இனங்­காட்டியது. பெயர் விதுரா என்­றார். அவ­ரு­க் கு வயது 24. அல்­லைப்பிட்­டி­யைச் சேர்ந்­த­வர். ‘‘பாத்­ரூம் பிரச்­சினை­தான் இஞ்சை பெரும் பிரச்­சினை. இதுக்­குள்ள வேலை செய்­யிற எல்­லாப் பிள்­ளை­ய­ளுக்­கும் அது­தான் பெரிய பிரச்­சினை’’ என்­றார். நாங்­கள் உத­ய­னில் இருந்து வரு­கி­றோம் என்று எங்­களை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­டோம். ‘‘இந்­தப் பிரச்­சி­னையை உங்­க­ளுக்­குச் சொல்­லு­ற­தாலை தீர்வு கிடைக்­கும் என்ட நம்­பிக்­கை­யில சொல்­லு­றன்’’ என்று அவர் தொடர்ந்­தார்.
‘‘கீழை இருக்­கிற பாத்­ரூம் ஒண்­டுக்­கும் உத­வாத ஒண்­டாய்ப் போச்­சுது. அதைப் பற்றி உரிய ஆக்­கள் எவரும் அக்­க­றை எடுப்பதில்லை. இவ்­வ­ளவு நாளும் மேலை இருக்­கிற பாத்­ரூ­மைப் பாவிச்­ச­னாங்­கள். இப்ப மேலை திருத்த வேலை நடக்­கி­ற­தால, அங்க போக ஏலாது. எந்த ஒரு மாற்று வச­தி­யும் இல்லை. ஒவ்­வொரு நாளும் பெரிய கஷ்டம் இது’’
விதுரா மாத்­தி­ர­மன்றி அந்­தச் சந்­தைக் கட்­ட­டத் தொகு­திக்­குள் இருக்­கும் கடை­க­ளில் பணி புரி­யும் இவர்­போன்ற மேலும் சில பெண்­க­ளும் இந்­தக் கழிப்­ப­றைப் பிரச்­சினை­யைத் தான் முதன்­மைப்ப ­டுத்­திக் கூறி­னர் என்­ப­தை­யும் இங்கு குறிப்பிட்டுத் தானாக வேண் டும்.

மணிக்­கூட்­டுக் கடை­யில் மற்றொரு பெண்­பிள்­ளை­யைச் சந்­தித்­தோம். மயூரா அவ­ரு­டைய பெயர். 23 வயது. காரை­ நக­ரைச் சேர்ந்­த­வர். பெண்­க­ளுக்­குப் பெண்­க­ளாலதான் பிரச்­சினை. தாங்­கள் நல்ல பெயர் எடுக்­கி­ற­துக்­கா­கச் சக வேலை­யாள்­க­ளைப் பற்றி முத­லா­ளி­மா­ரி­டம் தவ­றாய்ச் சொல்­லு­றது. அடுத்­த­வ­ருயை தனிப்­பட்ட விஷ­யத்­தில தலை­யி­டு­றது என்று வேலைத்­த­ளத்­தில் பெண்­க­ளுக்கு இப்­ப­டி­யு­மொரு பிரச்­சினை இருப்­பதை அவர் வெளிப்படுத்தி வைத்தார்.

அடுத்­த­டுத்து இருந்த பான்சி கடை களுள் ஒன்றுக்குள் நுழைந்­தோம். மாதங்கி என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திய அவர், மிக­வும் சிறிய பெண்­ணா­கத் தென்பட்­டார். வயது18 என்ற றிந்து திருப்­தி­ய­டைந்து கொண்­டோம். ‘‘ஆக்­க­ளுக்கு முன்­னால வைச்­சுப் பேசு­றது கஷ்ட­மாக் கிடக்­கும். நேரத்­துக்­குச் சாப்­பிட முடி­யிற இல்லை. முந்தி இன்­னொரு பிள்ளை இஞ்சை வேலை செய்­தது. இப்ப நான் தனி­யத்­தான் வேலை செய்­யி­றன். சாப்­பி­டுற நேரம் வாடிக்­கை­யா­ளர் வந்தா, அவை­யளைக் நல்லாய்க் கவ­னிக்­க­வே­ணும். இவை­ய­ளோடை வேலை செய்­யி­றது கஷ்டமாய் இருக்கு. சம்­ப­ள­மும் குறைவு. இதை­விட, நல்லாய்ப் படிச்­சி­ருந்தா நல்­ல­நி­லை­மைக்கு வந்­தி­ருக்­க­லாம் எண்டு இப்­ப­தான் நினைக் கிறன்’’ என்­றார் மாதங்கி.

மருந்தகம் ஒன்­றுக்­குள் நுழைந்­தோம். அங்கு வேலை செய்யும் சாம்­பவி என்ற பெண்பிள்ளையைச் சந்தித்தப் பேச முடிந்தது . முத­லாளி என எண்­ணும்­ப­டி­யா­ன­ ஒருவரும் அங்கே நின்­றார். தனக்கு 28வய­தெனவும், தான் புங்­கு­டு­ தீ­வைச் சேர்ந்­த­வர் என்­றும் சாம்­பவி சொன்­னார். ‘‘வேலை முடிய நேரம் செல்­லு­ற­தும், சில வேளை­யில பஸ்ஸை ‘மிஸ்’ பண்­ணு­ற­தும் அதாலை ‘லேற்றா’ வீட்டை போற­தும், நெடு­க­லும் எனக்­கி­ருக்­கிற பிரச்­சனைதான்’’ என்­றார்.

புட­வைக்கடை­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­தார் ஒரு பெண். அவ­ரது பெயர் அமுதா. வயது34. ‘‘பஸ்­ஸில போகேக்க ஆம்­பி­ளை­யள் சேட்­டை­யள் செய்­யி­னம். வேலைக்கு வந்து போறது கஷ்­ட­மாய் இருக்கு’’ என்­றார். அவ­ர் வேலை செய்த கடைக்கு அரு­கி­லி­ருந்த கடை­யில் வேலை செய்யும் பெண்ணொருவர் தன்­னைச் சாந்தி என்று அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்­டார். ‘‘ஓய்வு இல்­லா­மல் வேலை பாக்­கி­ற­தால ஒரே களைப்பாய் இருக்­குது. வாற வாடிக்­கை­யா­ள­ர்களைச் சரி­யாக் கவ­னிக்­கே­லாமை இருக்­கும். பஸ் போய்விடும் எண்ட பயத்­திலை அவ­சர அவ­ச­ர­மாய் பஸ்­சுக்கு ஓடு­ற­து­தான் நெடுக இருக்­கிற பிரச்­சினை’’ இவர்­கள் இரு­வர் மாத்­தி­ர­மன்றி இங்­குள்ள பெரும்­பா­லான பெண்­க­ளின் பேச்­சுக்­கள் பஸ் பய­ணத்­தின்­போது ஏற்­ப­டும் பிரச்­சி­னை­கள் குறித்தும், முத­லாளி மார் இவர்­களை வைத்து அதிக நேரம் வேலை வாங்­கு­வ­து குறித்த அவர்க ளது மன ஆதங்கத்தையுமே உணர்த் தின.

ஆனால், பாமி­னி­யின் பிரச்­சினை இவர்­க­ளில் இருந்து சற்று வேறு­பட்­டுத்­தான் இருந்­தது. ‘‘ நான் வேலை செய்யும் கடை ஒரு சிறிய கடை எண்ட படி­யால நான் ஒரு ஆள்தான் வேலைக்கு நிக்­கி­றன். வியா­பா­ரம் இல்­லாத நேரத்­தில எதை­யா­வது யோசிச்­சுக் கொண்டு தனி­மை­யிலை இருக்­கி­றன்’’ என்­றார். இறு­தி­யா­கச் சந்­தித்த பொன்­மதி மாத்­தி­ரம் இப்­ப­டிச் சொன்­னார். ‘‘நேரத்­துக்கு சாப்­பி­டே­லாது, செய்­யிற வேலைக்கு ஏற்ற சம்­ப­ளம் கிடைக்­கி­றேல்லை, சம்­ப­ளம் சரி­யான குறைவு.
வீட்­டி­லை­யும் நிறை­யப் பிரச்­சினை கள். எல்­லாத்­தை­யும் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்கு. சம்­ப­ளத்­தைக் கூட்­டித் தரச் சொன்­னால், வேலையை விட்டு நிப்­பாட்­டிப் போடு­வி­னம் எண்ட பயத்­திலை பேசா­ம­லி­ருக்­கி­றன்’’ என்­றார் பொன்மதி. இவ்விதம் வியாபார நிலையங்களில் உதவியாளர்களாக, விற்பனையாளர்களாகத் தொழில் பார்க்கும் அனைத்­துப் பெண்­க­ளுக்­கும் இத்தகையோர் போன்ற பிரச்­சி­னை­கள் ஏரா­ளம் இருப்­பது உண்­மை­தான். ஆனால் அவர்­க­ளில் சிலரே துணிந்து தாம் எதிர்சொகொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து உரையாடுகிறார்கள். மற்றையோர் தமது நிலைமை குறித்து உண் மையை வெளிப்படுத்த வெட்கம் காரணமாகத் தயங்குகின்றனர் என்பதை எம்மால் தெளிவாக உணரமுடிகிறது.

https://newuthayan.com/story/59325.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.