Jump to content

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு


Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு

இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய  விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துக்கணிப்பில் எந்தத் தெரிவைக் கிளிக் பண்ணாமல் விடலாம் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லாமே ஒத்துப்போகின்றனவே.

கருத்துக்கணிப்பை வைத்து ஆராய என்ன இருக்கின்றது? யாழ் களத்தின் நோக்கமே கருத்தாடலை முன்னிறுத்துவதுதானே. அதற்கு கள உறுப்பினர்கள்தானே முன்வரவேண்டும்:cool:

Link to comment
Share on other sites

நான் எழுதுவது குறைவு, முக்கியமான காரணங்கள் கைத்தொலைபேசி மூலம் தமிழில் எழுதுவது மிகக்கடினமாக இருக்கின்றது. இப்போது சிறிது காலமாக கொஞ்சம் எழுதுகின்றேன் மடிக்கணணியை வேறு தேவைகளுக்கு பாவிப்பதால். முன்பு இரண்டு பெட்டிகள் இருந்தன, கீழ்ப்பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதும்போது மேல்பெட்டியில் தமிழில் வரும். இப்போது தமிழில் எழுதவெளிகிட்டால் அது டொஸ் மோடில் வருவது போல் சொற்கள் சரியாக வருவது இல்லை, அழிகின்றன. ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.

இங்கு பலரும் நண்பர்கள், எனது உண்மையான தனிப்பட்ட கருத்துக்களை கூறி ஒருவரையும் நான் பகைக்கவிரும்பவில்லை, நட்பை இழக்க விரும்பவில்லை. இதனால் ஊர்ப்புதினம், அரசியல் பற்றி ஏதும் கருத்துக்கள் சொல்ல மனம் வருவது இல்லை

Link to comment
Share on other sites

நீங்கள் யாரையும் பகைக்க தேவை இல்லை. சாதாரணமாகவே உங்கள் கருத்துக்களை சட்டென சொல்லும் ஒருவர் அதுவும் கருத்துக்கள் அநாமதேயமாக வைக்கப்படும் (இருக்கும்) எனும் பொழுது ஏன் தயக்கம்???

Quote

ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.


பல  ஆங்கில மொழி விற்பன்னர்கள் உள்ளார்கள். நிர்வாகத்திலும் கூட. எப்படியான மாற்றங்களை யாழ் களம் எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம் என்பது தான் மிக முக்கியமானது. மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசியில் எழுதுவது பெரிய சிரமமல்ல. ஆனால் எழுதும்போது prediction வந்து சொல்லை மாற்றும்போதுதான் சினம் வரும்.

மற்றும்படி கருத்து வைப்பவரைப் பார்த்து பதில் எழுதுவதும் தவிர்ப்பதும் சரியாகப்படவில்லை. 

Link to comment
Share on other sites

கைத்தொலைபேசியில் எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் பாவிப்பது சாம்சங்க் நோட்5. 

ஆங்கிலமும், தமிழும் கலந்து கருத்துக்கள் எழுதக்கூடிய பகுதியை கருத்துக்களத்தில் திறந்தால்கூட நல்லது.

கருத்துக்களை வெளிப்படையாக வைக்கலாம் என்று கூறுவது இலகு, செயல்வடிவத்தில் வரும்போதுதான் பிரச்சனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2018 at 4:02 PM, நியானி said:

 

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - 

அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது.

நிர்வாகத்திற்கும், கருத்தாளர்களுக்கும் இடையிலே ரகசியம் பேணப்பட்டால் ,இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாத உறுப்பினர்களின் மனசில், கருத்தாடலின் வெளிப்படை தன்மை  சந்தேகத்துக்குரியதொன்றாகிவிடாதா?

அதுஒரு பக்கம் வைத்து , எதிர்பார்ப்பு என்று நீங்கள் கேட்டதால் ஒரே ஒரு எதிர்பார்ப்பு சொல்லலாம் என்று நினைக்கிறேன்..

களவிதிகளை மீறி செயற்பட்டதால் கடந்தகாலங்களில் யாழ் இணையத்தால் தடை செய்யப்பட்டவர்கள்போக..

காலபோக்கிலும்,காலமாற்றத்திலும்,பிற சமூக வலைதளங்களின் பயன்பாட்டினாலும்,வேறு இன்ன பிற காரணங்களினாலும்..

யாழ் ஆரம்பித்த காலத்திலிருந்து இந்நாள்வரை ஒதுங்கியிருக்கும் சக கள உறவுகளை , ஏற்கனவே அவர்களுடன் தொடர்பில் இருக்கும் சமகால கருத்தாளர்களை வைத்தே ஒரு ‘’முன்னாள்’’ உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நடத்தப்படவேண்டும்!

அவர்கள் இங்கு தொடர்ந்து கருத்து எழுத சொல்லி கேட்பதோ எதிர்பார்ப்பதோ அதன் நோக்கமன்றி, கடந்தகால பசுமை நினைவுகளை யாவருடனும் பகிர்ந்து கொள்ளும், மனம்விட்டு பேசும் சிறு சந்திப்பாக எடுத்துக்கொள்ளலாம்!

Link to comment
Share on other sites

On 1/7/2018 at 7:16 AM, கிருபன் said:

இந்தக் கருத்துக்கணிப்பில் எந்தத் தெரிவைக் கிளிக் பண்ணாமல் விடலாம் என்று தெரியவில்லை. அனேகமாக எல்லாமே ஒத்துப்போகின்றனவே.

கருத்துக்கணிப்பை வைத்து ஆராய என்ன இருக்கின்றது? யாழ் களத்தின் நோக்கமே கருத்தாடலை முன்னிறுத்துவதுதானே. அதற்கு கள உறுப்பினர்கள்தானே முன்வரவேண்டும்:cool:

 

முன் வரவேண்டும் என்பது தான் பெரு விருப்பம்..

ஒருவகையில் சமூகங்களை இணைக்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய சமூக வலைத்தளங்களை தனித்தனி தீவுகளாக பிரியும் குணத்திற்கு பயன்படுத்துகின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தேசீயம் என்ற பொதுத் தன்மை சிதைந்து ஊர்ச் சங்கங்களாக உருமாறி காணாமல் போவது போல் கருத்தாடலின்  பின்னடைவு ஒவ்வொருவருடைய பின்னடைவாகவே இறுதியில் இருக்கும்.

பொதுத் தன்மையை எட்டமுடியாத தோல்விகளுக்கு ஒவ்வொருவரும் காரணமாகின்றோம். எம்மைச்  சுற்றி நாம் போடும் வேலிகள் எமக்கு பாதுகாப்பு என்று எண்ணுகின்றோம் ஆனால் பல ர் சேர்ந்து கட்டும் கோட்டையின் பலத்திற்கு ஒரு வீட்டின்பலம் ஈடாகாது என்பது தனே யதார்த்தம். கருத்துக் களத்தை கைவிட்டது ஒரு பலவீனம் என்பதை உணருவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

 

Link to comment
Share on other sites

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் கருத்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி.

ஏலவே குறிப்பிட்டபடி தெரிவுகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நியானி said:

கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. இக்கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் கருத்துக்கள் கூறியவர்களுக்கும் நன்றி.

ஏலவே குறிப்பிட்டபடி தெரிவுகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நியானி  அண்ணை, நீங்கள் கூறிய....  "விரைவில்"  என்பதற்கு...
மூன்று கிழமை,  மூன்று மாதம்... என்பது, ஓகே....
அதை... தாண்ட மாட்டோம், என்று.... நீங்களும்.. எங்களுக்கு உத்தரவாதம் தாருங்கப்பு.  :grin:
(சும்மா... பகிடிக்கு....)  tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2018 at 5:08 AM, சண்டமாருதன் said:

கருத்துக் களத்தை கைவிட்டது ஒரு பலவீனம் என்பதை உணருவது தவிர்க்க முடியாமல் நிகழும். 

கருத்துக்களம் கைவிடப்பட்டு விட்டதாகத்தான் தெரிகின்றது.

யாழில் பதியப்படும் பதிவுகளை குத்துமதிப்பாகப் பார்த்தால் அதில் 20 வீதம்தான் கள உறுப்பினர்களின் கருத்தாடல் கருத்துக்கள். மிகுதி எல்லாமே வெட்டி ஒட்டல்கள்தான். அதிலும் ஒரு திரியில் பின்னூட்டமாக வரும் பதிவுகள்கூட வெட்டி ஓட்டல்களாக இருக்கின்றன. இதை நானும் செய்வதுண்டு என்பதையும் ஒத்துக்கொள்கின்றேன்.

நவீனனும் கருத்துக்களத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் மனம் தளராமல் தினமும் நேரத்தைச் செலவழித்து  வெட்டி ஒட்டி 60 - 70 வீதமான பதிவுகளை இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கின்றார். ஆனால் பெரும்பான்மையான பதிவுகள் பூச்சியமான பின்னூட்டங்களுடன் கருத்தாடலே இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன.

யாழில் இருந்த பல மாற்றுக் கருத்தாளர்களையும் ஒதுக்கியும் அல்லது ஒதுங்கச் செய்ததும் ஒரு குறைபாடே.

Link to comment
Share on other sites

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

கருத்துக்கணிப்பு முடிவுகள்

Poll_1.jpg

 

Poll_2.jpg

 

Poll_3.jpg

 

Poll_4.jpg

 

Poll_5.jpg

 

Poll_6.jpg

 

 

Link to comment
Share on other sites

14 hours ago, கிருபன் said:

 

யாழில் இருந்த பல மாற்றுக் கருத்தாளர்களையும் ஒதுக்கியும் அல்லது ஒதுங்கச் செய்ததும் ஒரு குறைபாடே.

கருத்தாளர்கள் ஒதுங்குவது குறித்து சில விசயங்கள் முரணாகவே உள்ளது. யாழில் அல்லாது ஏனைய இணையங்களில் ,  அரசியல் சார்ந்த காணொளிள் விமர்சனங்களில் நான் அதிகம வாசிப்பது பின்னூட்டங்களையே. எனது வாசிப்பின் எழுபது வீதத்துக்கு மேலானவை பின்னூட்டங்களை வாசிப்பதே. அந்த அனுபவத்தில் இருந்து பார்கையில் யாழின் கருத்து மோதல்கள் மட்டுறுத்தல்களுக்கு உட்பட்டு கண்ணியமாகவே நடந்துள்ளது. ஆனால் எதிர்க்கருத்தை முன்வைக்கும் ,  ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலை என்பது அறிவுபூர்வமாக அன்றி உணர்ச்சிகரமாகவே இருக்கின்றது. ஆரம்பகாலத்தில் சில எதிர்க்கருத்துக்கள் அவை முன்வைக்கப்பட்ட விதம் கருத்தைக் கடந்து தனிமனித தாக்குதல் சாயலை கொண்டிருக்கும் போது அவற்றை ஏற்றுக்கொள்வதில் எனக்கும் சிக்கல் இருந்தது. ஒருவிதமான பயம் ஏற்படும். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் நான் இங்கு எனது அடயாளத்தை நிலைநாட்டவோ தக்கவைக்கவோ எனது ஆழுமைகளை பாதுகாக்கவோ கருத்தாடலில் ஈடுபடவில்லை. அவைகளை எல்லாம் இழந்து தானே பரதேசீயாக புலத்தில் இரண்டாம் பிரஜயாக வாழ்கின்றேன் என்று சிந்திக்கும் போது தனிமனித தாக்குதல் என்பது என்னைப் பாதிக்கவில்லை.  ஆயுதம் வைத்திருப்பவன், அதிகாரம் வைத்திருப்பவன், விமர்சனம் செய்பவன்,  அவமரியாதை செய்பவன் என்று அனைத்துக்கும் பயந்து ஓதுங்க முற்பட்டால்  இவ்வுலகில் எனக்கு இடமில்லை.  எனக்கென்று ஒரு தனி உலகை கட்டியெழுப்பி அதில் என்னை நானே சிறையில் வைப்பதிலும் உடன்பாடில்லை. நட்பு எதிரி விருப்பு வெறுப்பு இன்றி கருத்தாடல்களோடு பங்குபெற்றி பயணிப்பது ஆரோக்கியமாகவே உள்ளது.

ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் குறித்து எனது அனுபவத்தோடு ஒட்டிய தனிப்பட்ட கருத்து இது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நட்பு எதிரி விருப்பு வெறுப்பு இன்றி கருத்தாடல்களோடு பங்குபெற்றி பயணிப்பது ஆரோக்கியமாகவே உள்ளது.

இதைத்தான் நானும் விரும்புகின்றேன். ஆனால் உணர்ச்சிபூர்வமாகமே எதையும் எடுத்துக்கொள்பவர்கள் உள்ள இடத்தில் சிலவேளைகளில் உராய்வுகள் வந்து எல்லை மீறியதும் உண்டு. 

மேலுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்தால் கருத்துக்கள் வைப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் குறைவாகவும், ஆனால் கருத்துக்களை வாசிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் செய்திகளை வாசிக்க வருவதை விட அதிகமாகவும் உள்ளனர். இது யாழில் கருத்தாடலின் முக்கியத்துவத்தையும் தேவையையும் காட்டுகின்றது. ஆனால் நீண்ட கருத்தாடல் திரிகள் அண்மைக்காலத்தில் வந்ததில்லை!

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2018 at 1:29 AM, கலைஞன் said:

நான் எழுதுவது குறைவு, முக்கியமான காரணங்கள் கைத்தொலைபேசி மூலம் தமிழில் எழுதுவது மிகக்கடினமாக இருக்கின்றது. இப்போது சிறிது காலமாக கொஞ்சம் எழுதுகின்றேன் மடிக்கணணியை வேறு தேவைகளுக்கு பாவிப்பதால். முன்பு இரண்டு பெட்டிகள் இருந்தன, கீழ்ப்பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதும்போது மேல்பெட்டியில் தமிழில் வரும். இப்போது தமிழில் எழுதவெளிகிட்டால் அது டொஸ் மோடில் வருவது போல் சொற்கள் சரியாக வருவது இல்லை, அழிகின்றன. ஆங்கிலத்தில் எழுதலாம் என்று கொண்டுவந்தால் எழுதி தள்ளலாம்.

இங்கு பலரும் நண்பர்கள், எனது உண்மையான தனிப்பட்ட கருத்துக்களை கூறி ஒருவரையும் நான் பகைக்கவிரும்பவில்லை, நட்பை இழக்க விரும்பவில்லை. இதனால் ஊர்ப்புதினம், அரசியல் பற்றி ஏதும் கருத்துக்கள் சொல்ல மனம் வருவது இல்லை

நீங்கள் என்ன வகைக் கைத்தொலைபேசி பாவிக்கிறீர்கள்?

ஐபோன் ஆயின் அதில் தமிழ் இருக்கிறது.

Settings-general-keyboard -keybord-select language (tamil)

done.

பின்னர் keybordஇல் உள்ள உலகப்படத்தைத் தெரிவு செய்வதன் மூலம் ஆங்கிலம்,தமிழ் என மாற்றலாம்.சாம்சும் வகைப் போனுக்கு sellinam என்னும் செயலியைத் தரவிறக்கவும்

 

Link to comment
Share on other sites

நான் பாவிப்பது சாம்சங்க் நோட். ஆம் ஐபோனில் தமிழில் எழுதத்தெரியும். இப்போது பயன்படுத்துவது கூழிழ் இந்திக் கீபோர்ட். செல்லினம் பாவித்து பார்க்கின்றேன், நன்றி புலவர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.