Jump to content

பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

அது மட்டுமில்லை வலவன் 
முகப்புத்தகமூடாக ஏதாவது பரிமாறினால் அதனை விசாரிக்க மாகாண கட்டமைப்பில் கூட அதிகாரம் இல்லை , சைபர் கிரைம் தொடர்பாக 
BMICH இல் தற்காலிகமாக இயங்கும் அலுவலகத்திலேயே விசாரணை நடைபெறுகிறது .அதன்படி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட தகவல்கள்களை  TID (Terrorism Investigation Department) இனரிடம் கையளிப்பர் 
அத்தோடு விவகாரம் காலி . கொழும்பிற்கு அலைந்தே காலம் போயிரும் . அத்தோடு வழக்கு தொடரப்பட்டால் அதனை தொழிலிற்கு விண்ணப்பிக்கும் போது  மறக்காமல் குறிப்பிடவேண்டும். 
TID வழக்கு என்றால் முடிந்தது  விண்ணப்பம் நேரடியாக குப்பைக்குத்தான் ...இதுவெல்லாம் புலம்பெயர்ந்தோருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு 

இலத்திரனியல் தடயங்களை ஏற்றப்படுத்தும் முறைகள் தவிர்ப்பது  மட்டுமன்றி, நிலைமைகளிற்கு ஏற்ப நடப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
On 1/10/2018 at 2:46 AM, கிருபன் said:

ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நாட்டில் அதன் கொடி, இலச்சினை, அமைப்பின் பிரசுரங்கள், படங்கள் எதையும் வைத்திருந்தால் சிக்கல்கள் வரத்தானே செய்யும்.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் உறுப்பினர்களுக்கு தான் வீரர்களால் மாவீரர்தினம் தாயகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது! இது நடப்பது தமிழன படுகொலைகளை செய்த சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாய் மண்ணில்!

2009 இன் பின்னரும் வட-கிழக்கு ஈழமண்ணில் மட்டுமல்ல கொழும்பில் கூட தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் மாவீரர் வாரம் முழுவதும் வீடுகளின் வாசல்களில் தீபமேற்றி உணர்வு பூர்வமாக அனுட்டிக்கும் பல வீரத் தமிழர் குடும்பங்கள் தாய் நாட்டில் உண்டு!   

தடை செய்யப்பட்டுள்ள அமைப்பின் போராளிகள் பலர் இன்றும் ஈழமண்ணில் வாழ்கின்றனர்! இவர்களில் பலரது வீடுகளின் வரவேற்பறைகளை இன்னுயிர் ஈந்த வீரமறவர்களின் படங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் அலங்கரிக்கின்றன!

எனது வீட்டிலும், எனது உறவினர், நண்பர்கள் பலர் வீடுகளிலும் மாவீரர் வார தீபமேற்றல் வருடா வருடம்  தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் சில மாவீரர்கள் மட்டுமல்ல தலைவர் பிரபாகரன் படமும் வீடுகளில் பேணப்பட்டு வருகிறது.

இவ்வாறு வீர உணர்வுள்ள பலரும் தாய் மண்ணில் இன்றும் பயமின்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் எமது தாய் நாட்டில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள் யாரும் நினைக்கவில்லை.

ஆனால், எம் மத்தியில் பிச்சையெடுத்து, கோழைகள் போல பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலர் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதனால் தானே போராட்டம் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இல்லையென்றால் என்றோ வென்றிருப்போம்!!!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சில பயமற்ற சில தலைவர்கள், வீரர்கள்  தாய் மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழ்வதால் தான் தாய் நாட்டிலுள்ள கோழைகளும் ஆக்கிரமிப்புக்களின் மத்தியில் ஓரளவு பாதுகாப்பாக வாழ முடிகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!  

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

Link to comment
Share on other sites

On 1/9/2018 at 3:40 PM, அக்னியஷ்த்ரா said:

வெளிநாட்டிலிருக்கும் கோழைகளுக்கும்  வழிமட்டும்தான் காட்டத்தெரியும் என்பதும் இந்த்ததம்பிக்கு தெரியும்  

ஆனால் வெளிநாட்டிலுள்ள, உள்நாட்டிலுள்ள  வீரர்கள் செய்துவரும் சாதனைகள் உலகிலுள்ள சகல கோழைகளுக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, போல் said:

மீண்டும் சொல்கிறேன்!
தமிழர்கள் பரவலாக பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் அப்போது ஒன்றும் செய்ய முடியாது போகும்.
சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தை அடக்க இதுவும் ஒரு ஜனநாயக போராட்ட வழி.

ஊருக்க வந்து இப்படி ஒரு பிரச்சாரம் செய்ய இயலுமா  போல் சும்மா வார்த்தைகளை அள்ளிவிடாமல் அமைதியா இருங்க அமைதியாக இருப்பவன்  எல்லாம் கோழைகள் அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”

 
யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. :rolleyes: ..சரி இதுக்கு இப்ப யாரிண்ட  தலை உருளும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

“நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா தமிழனுக்கு இந்தமண்ணில் சொந்தமில்லையாம்” “இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா”

 
யாழில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரகட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டது. :rolleyes: ..சரி இதுக்கு இப்ப யாரிண்ட  தலை உருளும் 

குருக்களின் குசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்   சந்தர்ப்பவாதந்தான். த. தே. கூட்ட்டமைப்புக்கும் இவர்கள்மேல் காதல் வந்திடுச்சு, சிங்களவனுக்கு இவர்கள்மேல் மரியாதை வந்துடுச்சு.  தேர்தல் படுத்துற பாடு.  எல்லோரின் வாய் வாக்கும் மாறிடுச்சு. தென்பகுதியில் இதற்கு எதிரான பாடல் ஒலிக்கும். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், தமிழனை எல்லாரும் எல்லாக்காலமும் ஏமாத்தலாம் என்ற வரலாறு மாற்றப்படும்வரை இப்படிப் பல பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டுக்கொண்டே ஏமாறலாம்.  காக்கா, நரி, வடை, தந்திரம் கதைதான்.

Link to comment
Share on other sites

On 1/9/2018 at 2:02 PM, வைரவன் said:

ஊருக்கு அடுத்த முறை
போகும் போது
தலைவரின் படத்தை போட்ட
ஷேர்ட்டை  போட்டுக்
கொண்டு தானே தம்பி
போய்
விமான நிலையத்தில்
இறங்குவீர்கள் ?

 

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

நுணா அண்ணை 
2015 ஜனாதிபதி தேர்தல் வடக்கிற்கு வந்த மகிந்த ஒரு கதை கூறினார், கண்ணுக்கு தெரியாத தேவதையை விட்டு கண்ணுக்கு தெரிந்த பேயை ஆதரியுங்கள் 
எனக்கு இறந்து போன உயிர்களை தவிர அனைத்தையும் தரமுடியும் என்றார் ...
அனைத்தையும் என்றால் தமிழீழமும் அடங்குமல்லவா  ...ஏன் வடக்கு தமிழர்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை , மூன்று தசாப்த்தம் போராடி பெறமுடியாததை ஒரு வாக்களிப்பில் பெற்றிருக்கலாமே 
ஏன் சிங்களவர்கள் மகிந்தவிற்கு எதிராக கிளர்ந்தெழவில்லை ..தமிழருக்கு எப்படி இவர் அனைத்தையும் தரமுடியும் என்று ....?
சமீபத்தில் ஞான சார தேரர் பிரபாகரன் நல்லவர் அவர் அவர் சார்ந்த இனத்திற்கு உண்மையாய் நடந்தார் என்றும்  கூறினார்  ....சிங்களவர் உண்மையில் இவருக்கு விகாரை புகுந்து அடித்திருக்க வேண்டும் 
நடந்ததா ...? 
எல்லோருக்கும் தெரியும் தேர்தலுக்காக எவரும் எவற்றையும் கூறுவார்கள் ...
இங்கு அப்படித்தான் தலைவர் பெயரை எந்த இனம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து நீதியும் மாறுபடும்  தண்டனையும் மாறுபடும், நாம் தான் சூதானமாக நடந்து கொள்ளவேண்டும்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

யதார்த்தமான, ஞாயமான கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

புலிகளை  பயங்கரவாதிகள் என்றவர்கள் அவர்களின் பாட்டை போட்டு வாக்கு வேட்டை சேர்ப்பதில் இருந்து நீங்களும் உங்களூக்கு பச்சை போட்ட விண்ணர்களும் உங்களின் கருத்துக்களை ஆரம்பிக்கலாம்.

தமிழர்களை கொன்று குவித்த

சிங்கள தேசிய கட்சி ஒன்று

தேர்தல் ஒன்றுக்காக 

புலிகளின் பாடல்களை

போட்டு வாக்கு அரசியலுக்கு

பயன்படுத்தி அப் பாடல்களின்

புனித தன்மையையே கேவலப்படுத்துகின்றார்கள்

 

இதற்காக நாம் 

வெட்கப்பட வேண்டும்

ஆனனால் தை தம்பியர்

உணரவில்லை போல

 

சரி

உங்கள் வழியில் வந்தே 

கேள்வி கேக்கிறன்

 

உள்ளூராட்சி தேர்தலில்

யாழில் சுக கட்சி

தோல்வி அடைந்தால்

அது 

புலிகளின் பாடல்களை 

ஒலிபரப்பியதால் மக்கள்

வாக்களிக்கவில்லை

என்று எடுத்துக் கொள்ளலாமா?

 

On 1/9/2018 at 3:01 PM, Sasi_varnam said:

வைரவரின் சூலாயுதத்தின்  கூர்மை வாசிப்பிலும் அதை கிரகித்து கொள்வதிலும் இருக்கவேண்டும்.
நான் கொழும்பு போகும் வரை பொறுத்திருப்பீர்களா?
இல்லை என்றால் விமானப் பற்று சீட்டை அனுப்பி வையுங்கள்.
உங்கள் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.

கண்டிப்பாக

காத்திருக்கின்றன்

தம்பி

 

நீங்களும்

அங்கால தும்பளையான்

படம் போட்டு

பயணக் கட்டுரை

எழுதுவது போல்

கட்டுநாயக்காவில்

இறங்கி

தலைவரின் படம் போட்ட
ரீ ஷெர்ட் டுடன்

படம் எடுத்து

எமக்கு உங்கள்

வீரத்தை தெரிவிப்பீர்கள்

என நம்புறம்

 

அதுவரைக்கும் 

இந்த அண்ணன்

காத்திருப்பான்

Link to comment
Share on other sites

On 1/12/2018 at 8:28 PM, தனிக்காட்டு ராஜா said:

ஊருக்க வந்து இப்படி ஒரு பிரச்சாரம் செய்ய இயலுமா  போல் சும்மா வார்த்தைகளை அள்ளிவிடாமல் அமைதியா இருங்க அமைதியாக இருப்பவன்  எல்லாம் கோழைகள் அல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் 

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, போல் said:

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

அதை விட படு

கோழைகள் தான் 

வெளிநாடுகளில் வாழ்வினும் 

கூட சிங்களத்துக்கு 

அஞ்சி தொடை நடுங்கி

தம் படத்தை கூட

avatar ஆக போடாமல்

பொய் பெயரில் வந்து

ஊரில் இருப்பவர்களை

பார்த்து கோழைகள் என்பர்

Link to comment
Share on other sites

Just now, வைரவன் said:

அதை விட படு

கோழைகள் தான் 

வெளிநாடுகளில் வாழ்வினும் 

கூட சிங்களத்துக்கு 

அஞ்சி தொடை நடுங்கி

தம் படத்தை கூட

avatar ஆக போடாமல்

பொய் பெயரில் வந்து

ஊரில் இருப்பவர்களை

பார்த்து கோழைகள் என்பர்

உங்களைப்பற்றி மிகமிகத் தெளிவாக எழுதியுளீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவமடா ...எமது இரண்டு வீரத்திலகங்கள் ...இப்படித்தான் யாரோ முகப்புத்தகத்தில் அடித்த விசிலடிப்பை பார்த்து மெரசலாகி 
கம்பி மேல கம்பியும் எண்ணி வாய்தா மேல வாய்தா வாங்குரானுகள். விசிலடிக்கும் கூட்டம் அத்துடன் களண்டுக்கும் என்பது அந்த  வீர மறவர்களுக்கு 
தெரியாதது பரிதாபம். வெளிநாட்டு வீர மறவர்களும் வாயால் வடை சுடாமல்  அவர்களது சொந்த செலவில் திறமான வக்கீல்களை ஏற்பாடுசெய்து கொடுத்து வழக்கையும் உடைத்து நாட்டிலிருக்கும் வீரத்திலகங்களை காப்பாற்றி  கோழைகள் எங்களை மூக்கில் விரல்வைக்க வைக்கலாம்  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:


இங்கு அப்படித்தான் தலைவர் பெயரை எந்த இனம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து நீதியும் மாறுபடும்  தண்டனையும் மாறுபடும், நாம் தான் சூதானமாக நடந்து கொள்ளவேண்டும்    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தி வீர பிரதாங்களைக் காட்டி ஒன்றும் புடுங்கமுடியாது என்பதை கடந்த கால வரலாறு காட்டியும் சிலருக்கு அது இன்னமும் புரியாமல் இருக்கின்றது. களிதின்று கம்பி எண்ணிக்கொண்டு தொடையில் இருக்கும் சிரங்கை சொறியும்போது புரியக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டேலாவை ஒளிச்சு வைத்தவர்கள் இப்போது அவருக்கு சிலை வைக்க போட்டி போடுகிறார்கள். 

இந்த நிலையும் மாறும்... நாம் தான் உறுதியாக எம் தலைவரை போற்ற வேண்டும்.. அவரின் மதிப்புக்களை அவர் மீதான பற்றுதலை சர்வதேசத்தின் முன் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

தாயகத்தில் இருப்பவர்களே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்களை கோழைகள் என்று கூறும் உரிமை யாருக்குமே இல்லை. மாவீரர் தின நிகழ்வுகள் மற்றும் தேர்தல் காலத்தில் நடப்பவை விக்கி அய்யாவின் பேச்சு என்பவற்றை இன்னுமா சனம் நம்பிக்கொண்டிருக்குது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த மட்டில்  தனியும்,அக்கினியும்  கையை மடக்கி(சீமானை போல்,என்ன ஒரு கேவலமான உதாரணம்  எண்டு நீங்க சொல்லுறது  எனக்கு கேட்குதம்மா)  சிங்கள ஏகாதிபத்திய ( வேற என்னப்பா சொல்லுறது.) அரசுக்கு எதிராக புலிக்கொடியை ஏந்தி போராடணும்.அப்போ தான்  நாங்க எங்க புள்ளை குட்டியுடன் வரமுடியும்

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் மத்தியில் கோழைகளும், பிற்போக்கு சிந்தனாவாதிகளும் கணிசமாக இருப்பதால் தான் நீதிக்கான தமிழர் போராட்டங்கள் கூட வெல்லமுடியாமலும், சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாமலும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று

இவர்கள் தமிழர்களை பூச்சாண்டி பயம் காட்டி அடக்கியொடுக்கும் வேலைகளை செய்ய முற்படுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்று கூறுமளவுக்கு அளவுகடந்த உரிமை கொண்ட பேர்வழிகள் தாராளமாக உலவுகின்றனர். இப்படிப்பட்ட அராஜக உரிமை கொண்டவர்கள் தமிழின விடுதலைக்கு - நீதிக்கு எதிராகவும், தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் செயற்படுவது கண்கூடு. இவர்களை ஆராய்ந்தால் இவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, வேலை, தமிழின விரோதிகள் தயவு போன்றவற்றின் அடிப்படையில்  சுயபிழைப்புக்காகவே கருத்தெழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு வகையினர் தங்களுடன் உடன்வாழும் தமிழ்ச் சகோதரர்களின் சட்டவிரோத கைதுகளை எதிர்க்கும் துணிவு இல்லாமால், அதை பிறர் வந்து செய்யுமாறு சவால் விடுமளவுக்கு சுயநலவாதிகளாக உள்ளனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரர்கள், கோழைகள் என்று இணையத்தில் மார்தட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்களின் கதியை அறிந்து சொல்லமுடியுமா?

 

Link to comment
Share on other sites

வாழ்த்து தெரிவிக்க விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல்

 

Bookmark and Share
 
இந்த ஆண்டு புது வருட பிறப்பின் போது வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=99279

Link to comment
Share on other sites

23 hours ago, Rajesh said:

ஈழத்தமிழர் மத்தியில் கோழைகளும், பிற்போக்கு சிந்தனாவாதிகளும் கணிசமாக இருப்பதால் தான் நீதிக்கான தமிழர் போராட்டங்கள் கூட வெல்லமுடியாமலும், சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாமலும் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று

இவர்கள் தமிழர்களை பூச்சாண்டி பயம் காட்டி அடக்கியொடுக்கும் வேலைகளை செய்ய முற்படுகின்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் ஒருவர் ஒரு கருத்தை சொன்னால், அதை சொல்லும் உரிமை அவருக்கு இல்லை என்று கூறுமளவுக்கு அளவுகடந்த உரிமை கொண்ட பேர்வழிகள் தாராளமாக உலவுகின்றனர். இப்படிப்பட்ட அராஜக உரிமை கொண்டவர்கள் தமிழின விடுதலைக்கு - நீதிக்கு எதிராகவும், தமிழின படுகொலைகாரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்பாலும் செயற்படுவது கண்கூடு. இவர்களை ஆராய்ந்தால் இவர்கள் பெரும்பாலும் தாங்கள் சார்ந்திருக்கும் நாடு, வேலை, தமிழின விரோதிகள் தயவு போன்றவற்றின் அடிப்படையில்  சுயபிழைப்புக்காகவே கருத்தெழுதுபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு வகையினர் தங்களுடன் உடன்வாழும் தமிழ்ச் சகோதரர்களின் சட்டவிரோத கைதுகளை எதிர்க்கும் துணிவு இல்லாமால், அதை பிறர் வந்து செய்யுமாறு சவால் விடுமளவுக்கு சுயநலவாதிகளாக உள்ளனர்.

 

நல்ல கருத்து..

தாயகத்தில் இருப்பவர்கள் தாங்களுடைய சந்தர்ப்ப சூழுலுக்கு ஏற்ப மாவீரர் தினத்தை கொண்டாடவோ இல்லை வீரவணகக நிகழ்வுகளை கொண்டாடவோ அவர்கள் படங்களை பயன்படுத்தவோ உரிமையுடையவர்கள்.. அதனால் ஏற்படும் இடர்பாடுகள் நெருக்கடிளுக்கு புலத்தில் உள்ளவர்கள் முடிந்தால் ஆதரவு கொடுக்கலாம். மற்றபடி உசுப்பேத்துதல் அல்லது புறணிபாடுதல் என்பதன் காலம் கடந்து விட்டது வேணுமானால் இனிவருங்காலங்களில் இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். இங்கு நடக்கும் இது குறித்த விவாதங்கள் தாயகத்தில் மேற்கண்ட நடவடிக்கைகள் சார்ந்து எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அனுமதிக்கப்பட்ட நாடுகளில் கூட மவீரர் நாள் நினைவு கூரல்களை பலமாக ஒற்றுமையாக எழுச்சியுடன் புலம்பெயர்ந்தவர்களால் கொண்டாட முடியவில்லை ஆனால் கடந்த மாவீரர் தினம் தாயகத்தில் மிக எழுச்சியுடன் ஐக்கியப்பட்ட நிலையில் நினைவு கூரப்பட்டுள்ளது. இவ் நினைவுகூரலானது சிங்களம் மற்றும் தமிழ் கட்சிகள் மேலும் உங்கள் கருத்தில் இருக்கும் உரிமைகள் தொடர்பான புலத்து நிலைப்பட்டிற்கும் பல விசயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சொந்த நிலத்தில் வாழ்பவர்களே அவர்களது உரிமைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள்  முடிந்தால் அவர்களுக்கு ஆதரவாக மட்டுமே ஏனையவர்களால் இருக்கமுடியும் தவிர அட்வைஸ் ஆலோசனைகள் நடத்துதல் மேய்தல் என்ற எதுவும் சாத்தியமில்லை அது நியாயமும் ஆகாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2018 at 9:49 PM, போல் said:

இந்த உண்மை உங்களுக்கு விளங்கியிருந்தால் இந்த கோழைத்தனமான கருத்து உங்களிடமிருந்து வந்திருக்காது.

நான் எழுதியது ஊரிலுள்ள வீரர்களுக்கு! கோழைகளுக்கல்ல!

கோழைகள் எனது கருத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதுவும், ஒப்பாரிகளுக்கு பச்சை குத்தி மகிழ்வதும் அவரவர் சுதந்திரம்! ஆனால் கோழைகள் சும்மா ஒப்பாரி வைத்து வீரர்களுக்கு இடைஞ்சல் இல்லாது அமைதியா இருப்பது நல்லது.

கோழைகள் தான் தாங்கள் நோகாதிருக்க யாராவது வந்து சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்று நினைப்பார்கள்!

நான் இதெல்லாம் சீரிசா எடுக்கிரல்ல கண்டியளோ ஏனென்றால் பழகிப்போன ஒன்று  இதை விட இன்னும் எதிர்பார்த்தன் உங்ககிட்ட இப்படி கொஞ்சத்தோடு நிறுத்தி விட்டியல் இன்று என்ன கேஸ் எதுக்கு போட்டார்கள் என்று தெரியாமல் இருக்கிறார்கள் பல ஜெயிலில் எனது நண்பர்கள் பலர் சிறைக்காவலர் மற்றும் பொலிசார்கள் அவர்கள் சொல்லுவதையெல்லாம் உங்களிடமும் சொல்ல முடியாது  நீங்க உசுப்பேத்தி மகிழ்கிறீர்கள் ஆனால் அவர்களின் எதிர்க்காலம் என்பது ????? அண்மையில் மொன்றாகல நீதிமன்றத்தில் ஒரு தமிழ் கைதிக்கு வழக்கில் பல வ்ருடம் தண்டனை ஆயூட்காலம் முடியப்போகுது விசாரித்து பாருங்கள் அவரை காப்பாற்ற நாதியுமில்லை ஒருத்தனும் இல்லை இதுக்குள்ள நீங்க வெலாட்டு காட்டுறியள் 

இப்படி கோழைகள் என்று சொல்லிவிட்டு தாங்கள் கச்சைக்குள் ஒளிந்திருந்து அடியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் லாபம் சார் நான் ஊரில் இருக்கிறன் இங்க ஊர் வந்து போனவனுகளுக்கும் நிலமை தெரியும் நான் இப்படும் சொல்வது நீங்கள் ஊர் வந்து ஒரு போராட்டம் தொடங்கப்படாது நாங்கள் கோழைகள் நீங்கள் வீராதி வீரன் வாங்களன் எத்தனை பேர் வாரானுகள் என்று பார்ப்போம் tw_blush:tw_blush:

On 1/16/2018 at 12:00 PM, நந்தன் said:

என்னை பொறுத்த மட்டில்  தனியும்,அக்கினியும்  கையை மடக்கி(சீமானை போல்,என்ன ஒரு கேவலமான உதாரணம்  எண்டு நீங்க சொல்லுறது  எனக்கு கேட்குதம்மா)  சிங்கள ஏகாதிபத்திய ( வேற என்னப்பா சொல்லுறது.) அரசுக்கு எதிராக புலிக்கொடியை ஏந்தி போராடணும்.அப்போ தான்  நாங்க எங்க புள்ளை குட்டியுடன் வரமுடியும்

ஏதோ ஒன்று சொல்வார்கள் அண்ண பாட்டு வாச்ச கிழவியும் பாடுவாளாம் அது போல தான் இருக்குது சிலரின் கதை இன்னும் உசுப்பேத்தாம இருக்கிர வழியை பாருங்கள் என்று சொல்ல வந்தம் இது கூட விளங்குதில்லை  அரசியல் கட்சிகளே அரசாங்கத்துக்கு சோப்பு போடுது இதுக்குள்ள இவங்க வேற  ஒரே சிரிப்பா வருகுதண்ண 

On 1/16/2018 at 1:11 PM, கிருபன் said:

வீரர்கள், கோழைகள் என்று இணையத்தில் மார்தட்டுபவர்கள் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்களின் கதியை அறிந்து சொல்லமுடியுமா?

 

கிருபன் இதைதான்  சிலர் எதிர்பார்க்கிரார்கள் என்ன செய்ய  எது நடந்தாலும் அது சிலரை கம்பிக்கூண்டுக்குள் இழுத்து செல்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.