Jump to content

ரஜினி அரசியல்: -ஜெயிக்கிற குதிரை!


Recommended Posts

ரஜினி அரசியல்: 1-ஜெயிக்கிற குதிரை!

 
rajinijpg

ரஜினிகாந்த் | படம்: அருண் சங்கர்.

'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே!', 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!'. இந்த வரிகளை ரஜினிக்கு முன்னதாக யாராவது அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்களா. பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ எங்காவது எடுத்தாண்டு உள்ளார்களா? இதை வாசிக்கும் உங்களுக்காவது தெரியுமா? ரஜினியே இந்த வசன கோர்வை வாக்கியத்தை அமைத்துக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது வசனகர்த்தாக்கள் அவருக்கெனவே எழுதிக் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. இந்த வசனத்தை அவர் எப்போது பேச ஆரம்பித்தார் என்பதை அறிவீர்களா?

இதை உங்களிடம் கேட்பது போலவே எனக்குத் தெரிந்த மூத்த ரஜினி ரசிகர்கள் பலரிடம் கேட்டுவிட்டேன். அத்தனை பேருமே உதடு பிதுக்கினார்கள். ஆரம்ப கால அவரது உரைகளை வீடியோ கேசட்டில் போட்டுப் பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்றும் சிலர் சொன்னார்கள். இந்த விஷயத்தை எதற்காக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என பலரும் கேட்டபோது சொன்ன அதே பதிலைத்தான் இங்கேயும் குறிப்பிடுகிறேன்.

ரஜினிக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள் பலர். ரஜினி அரசியலுக்குள்ளேயே வரவில்லை என்கின்றனர் இன்னமும் பலர். 1996-ம் ஆண்டு தமாகா, திமுகவிற்கு வாய்ஸ் கொடுத்தபோதே அவருக்கான அரசியல் சந்தர்ப்பம் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள் அதை விடப் பெரும்பான்மையோர். எஞ்சியிருக்கிற இன்னமும் சிலர் கூட இந்த கருத்தை ஒட்டியே கருத்தை தெரிவிக்கிறார்கள். அதிலும் அதையொட்டி ரஜினியையும் சமகால அரசியலையும் இணைத்துப் பேசும்போது அது கேலிக்கும், கிண்டலுக்கும், எள்ளலுக்கும், ஏளனத்துக்கும் உள்ளாவது என்பது தொடரும் சாபமாகவே மாறிவிட்டது.

சமூக வலைதளங்களில் ரஜினியின் அரசியல் வாய்ஸிற்காக உலா வந்த மீம்ஸ் போல் வேறு எங்காவது ஒரு நடிகருக்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்த நேரத்திலும் ஒற்றை அரசியல் வார்த்தையை ரஜினி உதிர்த்தாலும் ஏராளமான அரசியல் தலைகளின் ஏளனத்திற்கும், நக்கலுக்கும் உள்ளாகிறது. அதுவே பலரும் அவரின் பலவீனமாகப் பார்க்கிறார்கள். அதை ஒரு சிலரே பலமாக பார்க்கிறார்கள். ரசிகர்கள் நிலையில் இல்லாமல் அப்படி தலைகீழ் பார்வையில் பார்ப்பவர்களும் மேற்சொன்னவர்களின் கண்டனத்திற்கும், நகையாடலுக்கும் உள்ளாகிறார்கள் என்பதே யதார்த்தம்.

இந்த இடத்தில் ஒன்று கேட்கத் தோன்றுகிறது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்றால் அல்லது அரசியலுக்குள் இருக்கிறார் என்றால், அவர் அரசியலில் தன் நிலைப்பாட்டை சொல்லியே ஆக வேண்டுமா? ஒரு முறை தமாகா-திமுகவிற்கும் வாய்ஸ் கொடுத்துவிட்டு, அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவுக் குரல் கொடுக்கக்கூடாதா? அப்படி ஆதரவுக்குரல் கொடுக்கப்பட்ட கட்சிகள் தேர்தலில் வென்றே தீர வேண்டுமா?

ஒரு முறை வாய்ஸ் கொடுக்கப்பட்ட கட்சி வென்றால் அது ரஜினியின் வெற்றியாகவும், அதே மறுமுறை வாய்ஸ் கொடுத்த கட்சி தோற்றால், அதை ரஜினியின் தோல்வியாகவே கொள்ள வேண்டுமா? மறுபடி தேர்தல் வந்தால் அதில் இந்த இரு அணிகளுக்கும் அல்லாமல் நடுநிலை வகிக்கக் கூடாதா?

உடனே அவர் மாற்று அரசியல் கொள்கையை உருவாக்கி ஜனங்களின் பல்ஸ் பார்த்து புதுக் கட்சியை ஆரம்பித்தே தீர வேண்டுமா? அதற்கு அவர் தலைவராகி தேர்தலை சந்திக்க வேண்டுமா? தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமா? அதன் தொடர்ச்சியாக நாட்டை ஆண்டே தீர வேண்டுமா? அதன் பிறகு அரசியலுக்கு முழுக்கு போட்டு விடக்கூடியவர் போல் முன்னரே தெரிந்தால், 'அவர் அரசியலுக்கு வரவே மாட்டார். வந்தாலும் நிற்க மாட்டார்!' என்றெல்லாம் இஷ்டம் போல் ஏற்கெனவே அரசியலில் ஊறி திளைத்த சிகாமணிகள் அறிவுஜீவித்தனமாக கருத்து சொன்னால், அதையும் சகித்துக் கொண்டு ரஜினி அரசியல் பேசினால் அதை கேட்கக்கூடாது. கேட்டாலும் பரவாயில்லை அதைப்பற்றி கருத்து சொல்லக்கூடாதா? கருத்து சொன்னாலும் பரவாயில்லை. அவர் கருத்துக்கு ஏற்ப பாசிட்டிவாக சிந்தித்தே விடக்கூடாதா?

ரஜினி பேசும் பேச்சுகளை ஏதோ ஒரு தெருப்போக்கன் பேசியதாகக் கருத வேண்டுமா? அப்படியே எல்லோரும் போய்விட்டாலும் கூட அதையும் தாண்டி அந்த மனிதர் (ரஜினி) கொஞ்சமும் கூசாமல் மறுபடி அரசியல் வாய்ஸ் உதிர விட்டால் அதை கடுமையாகத் தாக்கித்தான் தீர வேண்டுமா? இதற்கெல்லாம் ஒரே போடாக அந்த மனிதருக்கு அரசியலே தெரியாது என்று ஒரேயடியாக மூடி முத்திரையிட்டு சமாதியாக்கி நகர்ந்து விட வேண்டியதுதானா?

இப்படியான கேள்விகளில் ஒரு பகுதியை மட்டுமே யோசிக்காமல், இன்னொரு எதிர்நிலை பகுதியையும் யோசித்து பதில்களை ஏற்படுத்தி பாருங்கள். எது புரிகிறதோ இல்லையோ? இந்த விஷயத்தில் 'சரி, தவறு; பாசிட்டிவ், நெகட்டிவ்' என வரும் இருவேறு புலன்களிலும் அந்த ஒற்றை மனிதரே ஆதிக்கம் புரிந்திருப்பதை உணர முடியும். அதுதான் ரஜினி. அதை வைத்துத்தான் 'எனக்கு அரசியல் தெரிந்ததால்தான், அதன் ஆழும் தெரிந்ததால்தான் வருவதற்கு யோசிக்கிறேன். தெரியாவிட்டால் ஆகட்டும், ஓகேன்னு போயிட்டே இருந்திருப்பேன்!' என்கிறார்.

நம்முன் இருக்கிற நூல்களிலேயே உன்னத காப்பியம் மகாபாரதம் என்பதை அனைவரும் அறிவோம். அதில் இருக்கும் அரசியல் சூதுவாதுகள், சூழ்ச்சிகளுக்கு நிகராக எந்த ஒரு காவியமும், காப்பியமும் இந்திய சரித்திரத்தில் இல்லை என்பதை பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். அதில் எத்தனை ஆயிரம் பாத்திரங்கள். துரியோதனாதிபதிகளும், பாண்டவர்களுக்குமான நிலவுடமைப் போரில் இந்த இருதரப்பு ரத்த உறவுகள் மட்டும்தானா போர்க்களத்தில் - அரசியல் களத்தில் நிற்கிறார்கள். மற்ற அதிரர்கள் அத்தனை பேருக்கும் என்ன வேலை? அவர்களைக் கூட நம் வாக்காளர்களாக, தொண்டர்களாக, ரசிக சிகாமணிகளாக கொள்வோம்.

ஆனால் சூதே நிரம்பிய சகுனிக்கும், சூழ்ச்சிகளால் முறியடிக்கும் கண்ணனுக்கும் அங்கே என்னதான் வேலை. அத்தனை பேருக்குள்ளும் பிரம்மாண்ட அரசியல் இயங்குகிறது. அதில் பீஷ்மருக்கான அரசியலில் தொடங்கி, அபிமன்யு, அஸ்வத்தாமன் அரசியல் வரையிலான ஒவ்வொரு பாத்திரங்களை நேசித்துப் பார்க்கிறேன். அதில் நிரம்பும் அரசியல் ததும்பலை தரிசித்து மிரள்கிறேன்.

அதில் ஏதோ ஒரு கண்ணியிலிருந்துதான் சுவாரஸ்யமிக்க ரஜினியின் அரசியலை இங்கே சிந்திக்கத் தொடங்குகிறேன். அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டாம். ரசிகர் மன்றங்களை உருவாக்க வேண்டாம். தானே உருவான மன்றங்களையும் கலைக்க வேண்டாம். தேர்தலை சந்திக்க வேண்டாம். கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்தாலும் வெற்றியும் பெற வேண்டாம். வெற்றி பெற்றாலும் ஆட்சியில் அமர வேண்டாம். ஆட்சியில் அமர்ந்தாலும், அநியாயமாக அக்கிரமமாக, நேர்மையாக, சத்தியகீர்த்தியாக எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யட்டும். அதிகாரம் புரியட்டும்.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முசோலினியிடமும், ஹிட்லரிடமும் ஜெர்மன், இத்தாலி நாட்டவர்கள் எதிர்பார்த்தார்களா என்ன? இந்திய சுதந்திரத்திற்கு மகாத்மா காந்தி போன்ற தனிமனித ஒழுக்கசீலர் முன்னணியில் நிற்க வேண்டும், பண்டித ஜவஹர்லால் நேரு போன்றவர் பிரதமர் ஆகவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோமா என்ன? அவரவர் அவரவர் பாணியில் இயங்கினார்கள். அதை அடியொற்றி சிலர் விருப்பப்பட்டார்கள். சிலரோ அதற்கு எதிர்நிலை எடுத்தார்கள். இன்னும் சிலரோ சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆகப்பெரும் வீரரே தேசத்தின் தலைவராக கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். ஆகப் பெரும்பான்மை என்ன விரும்பியதோ, அதுவே தேர்தலின் தேர்வாக மாறியது.

அப்படிப்பட்ட தனிமனித உன்னதங்களின் செயல்பாடுகளே அவரவரின் வரலாறாக மாறியது. அதில் ஹிட்லர், முசோலினிக்கான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேரு, காந்திகளுக்கான இருக்கைகளும் நிரம்பித்தான் இருக்கின்றன. அந்த நல்லது கெட்டதுமான அரசியல் வரலாற்றில் எல்லாமே சுவாரஸ்யம் மிக்கதாகத்தானே இருக்கிறது. அதற்காக இவர்களில் ஒருவராகத்தான் அரசியலும், அரசியல்வாதியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம் என கொள்ள வேண்டியிருக்கிறது.

'ரஜினி அரசியலுக்கு வருவார்; வரமாட்டார்; வரக்கூடாது; வந்தாலும் நிற்க மாட்டார்; படுதோல்வி காண்பார்; அவர் உடல்நிலை தாங்காது; 1996 ஆம் ஆண்டுடன் அவரின் செல்வாக்கு போயே போச்சு!' என கமெண்ட் பண்ணுவதில் எல்லாமே அரசியலும் சுவாரஸ்ய வரலாறும் அடங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. காரணம் இன்றைக்கும் நம் தமிழ் மக்கள் கண்டு களிக்கும் ஆகப்பெரும் ஊடகமான சினிமாத்துறையில் அவர்தான் முன்னணி கதாநாயகன். இன்றைக்கும் ஒரே ஜெயிக்கிற குதிரை. கோடானுகோடி தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகர். அவர் சினிமாவில் நடித்த படம் வெளியாகும்போது, அடித்துப்பிடித்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ரசிகனுக்கு, அவரின் அரசியல் நகர்வை கவனிப்பதிலும், அதில் ஆரவாரிப்பதிலும் தனி ஒரு சுகம். எதிர்பார்ப்பு.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

ரஜினி அரசியல்: 2 - 'என்னை வாழவைக்கும் தெய்வங்கள்!'

 

 
26177076102155557404268841415213241njpg

ரஜினிகாந்த் | படம்: எல்.சீனிவாசன்.

'நடிகனுக்கு நாடாளத் தெரியுமா?' என்றார்கள். கூத்தாடிக்கு ஓட்டுப்போடலாமா என்றார்கள். அவர்தான் பத்தாண்டுகள் தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். எதிர்க்கட்சியான திமுக தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மாறி, மாறி அவர் கட்சியில் கூட்டணி கண்டன. 'நாட்டியக்காரிக்கு ஓட்டு போடலாமா?' என்பதோடு, சொல்லவே நா கூசும் விஷயங்களை எல்லாம் மேடையேற்றி அசிங்கப்படுத்தினார்கள்.

அதே ஜெயலலிதாதான் சகலத்தையும் துச்சமாக நினைத்து மக்கள் செல்வாக்கால் அகற்றி அரியணையில் பல முறை அமர்ந்தார். அவர் மீது விழாத ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. கடைசியாக சொத்துக் குவிப்பு வழக்கில் இறந்த பின்னும் குற்றவாளி தீர்ப்புக்குள்ளானார். அதுவும் கூட தனி வரலாறாகத்தானே ஆனது?

 

இது மட்டுமா, ஜெயலலிதா ஒரு பாவமும் அறியாதவர். மன்னார்குடி குடும்பம்தான் அவரை அநியாயத்திற்கு பழிபாவங்களை சுமக்க வைத்திருக்கிறது என்றார்கள். இப்போது சசிகலா சிறையில் இருந்தாலும், அவர் மீது, அவர் குடும்பத்தினர் மீதும் ஆயிரம் களங்கங்கள் கற்பிக்கப்பட்டாலும் இன்றைக்கு கட்சிகளை, சின்னங்களை எல்லாம் தாண்டி அவர் குடும்பத்தின் கவசமாக தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவையெல்லாம் நேர்மையாளர்களும், சிந்தனையாளர்களும், விமர்சகர்களும், இன்ன பிற அறிவுஜீவிகளும் விரும்பியபடியா நடக்கிறது. இல்லையே! அப்படி ஒரு வியூகத்தை அவர்கள் அமைக்கிறார்கள். வெற்றி கொள்கிறார்கள். அதில் பணமும், பதவியும், அதிகாரங்களும் பெரும்பங்கு வகிக்கிறது. அதுவே வரலாறாகி விடுகிறது.

அந்த வகையில் ரஜினிக்கு 1970கள் தொடங்கி இன்று வரையிலான சினிமா பிரபல்யம் இருக்கிறது. அது மற்ற நடிகர்களுக்கு இல்லாத விதமாக எழுச்சியுடன் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அவருக்கு பிடித்ததை தேடுகிறார். பிடித்த ஒன்றை மையப்புள்ளியிட்டு பேசுகிறார். அந்த மையப்புள்ளியில் ஒன்று அரசியலாக இருக்கிறது.

அது இங்கே ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும், இன்னபிற அரசியல்வாதிகளுக்கும் மட்டுமல்ல மக்களுக்கும் கூட இனிப்பாக அல்லது கசப்பாக இருக்கவே செய்கிறது. இனிப்பும், கசப்பும் இரண்டுமே இல்லாதிருந்தால் ரஜினி என்கிற சினிமா சக்தி கண்டு கொள்ளப்படாமலே போயிருக்கும் என்பதை இதில் உணர வேண்டும். அப்படித்தான் அவரின் அரசியலையும் நான் பார்க்கிறேன்.

அவர் 1995ல் தனது போயஸ் கார்டனுக்கு செல்லும் வழியில் பாதுகாப்புக் காவலர்களால் மறிக்கப்பட்டார். ஜெயலலிதா அரசாங்கத்தின் போக்கை அப்போதுதான் அவர் உணர்ந்து கொண்டார். அதன் நிமித்தம் தன் வீட்டிற்கு சில மீட்டர் தூரம் நடந்தே சென்றார். அதை ஒட்டியே ஜெயலலிதாவிற்கு எதிர் நிலை எடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது!' என்று 1996-ல் பேசினார்.

இதன் பின்னணியில் தமாகா கட்சி மூப்பனார் தலைமையில் உருவெடுத்தது. திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஏற்கெனவே காங்கிரஸ் மீதான நல் அபிமானத்தில் இருந்த ரஜினி இந்த கூட்டணிக்கு ஆதராவாக வாய்ஸ் கொடுத்தார். அதனால் அந்த கூட்டணி வென்றது. அதிமுக படுதோல்வி கண்டது. அதிலும் ஜெயலலிதாவே தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் கடுமையாக தோற்றார்.

இதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கான முதல் அஸ்திரம் என்பதுதான் பெரும்பான்மையோரின் எண்ணம். எனக்கு அப்படி தோன்றவில்லை. அது வெளிப்படையான அவரின் அரசியல் பிரவேசம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

rajini3165426f

ரஜினி | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்

 

ஆனால் எப்போது 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே, ரசிகப் பெருமக்களே!' என தனது மேடைப்பேச்சின் முதல் வரியை உச்சரிக்க ஆரம்பித்தாரோ, அப்போதே அவரின் அரசியல் பேச்சும் தொடங்கி விட்டது என கருதுகிறேன். இந்த மாதிரியான திராவிட மாயை பேச்சுகள்தான் 1969 வரை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை காலி செய்தது என்பது தமிழகத்தின் வரலாறு என்பதால்தான் இதைக் கூறுகிறேன்.

திராவிடக் கட்சிகளின் முதல் தோன்றல், 'அருமைத் தம்பிகளே!' என்றழைத்தார் அறிஞர் அண்ணா. இளைஞர் பட்டாளம் அலைகடலென அண்ணாவின் அந்த குரல் நாதத்தில் மயங்கி ஆரவாரித்தனர். அதனை அடியொற்றி, 'என் உயிரினும் மேலான அருமை உடன்பிறப்புகளே!' என்றார் கருணாநிதி. அந்த அழுத்தமான கணீர் குரலுக்கு மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புபோல் இனம்புரியா சிலிர்ப்பை வெளிப்படுத்தியது அவரின் தொண்டர் படை. அண்ணாவுக்கும், கருணாநிதிக்குமான சங்கநாதம் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்தார்.

எழுத்தாளர்களுக்கு எப்படி கதைக்கு ஆரம்பம் முக்கியமோ, செய்தியாளனுக்கு எப்படி ஓப்பனிங் அவசியமோ அதே போலத்தான் அரசியல் தலைவர்களாக உருவெடுக்கும் வரலாற்று நாயகர்கள் தம் தொண்டர்களை காந்தமென ஈர்க்கும் வார்த்தை ஜாலங்களை கொண்டிருக்க வேண்டும். அதுவே உரையின் துவக்கப்புள்ளியாகவும் மினுங்க வேண்டும் என்பதை இயல், இசை, நாடக அனுபவங்களிலிருந்து சினிமா என்கிற மாயசக்தியிலும் கொண்டு வந்தவர் அல்லவா எம்ஜிஆர்.

அந்த உணர்வை ரத்த நாளங்களிலும், அணு செல்களிலும் பரவ விடுகிற மாதிரி, 'என் ரத்தத்தின் ரத்தமான இனிய உடன்பிறப்புகளே, உயிரினும் மேலான தாய்க்குலங்களே!' என்றார். அந்த குரல் நாதத்தின் வெளியே கட்டுக்கடங்காத வெள்ளமென புறப்பட்டது தொண்டர் படை. எம்ஜிஆரிடமே வெள்ளி செங்கோல் பெற்று, 'நானே வாரிசு!' என பிரகடனப்படுத்திக் கொண்ட, எப்பேர்பட்ட தொண்டர்படையையும் தன் ஆளுமை மிக்க கூரிய பார்வையால் அடக்கி ஆண்ட ஜெயலலிதா இந்த விஷயத்தில் சும்மாயிருப்பாரா? 'நம் இதயதெய்வம் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, தாய்மார்களே!' என பேச்சை தொடங்கி திரும்பின திக்கெல்லாம் ஆராவாரக்குரல்களை தனக்கு சாதகமாக ஒலிக்கச் செய்தார் ஜெயலலிதா.

அண்ணா முதல் ஜெயலலிதா வரை, அவர்களைத் தாண்டி பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்பட தங்கள் அளவில் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் கூட இதே துவக்கப் பேச்சின் வலிமையை உணர்ந்தே மேடைப்பேச்சுக்கு தொடக்க வரியை வைத்திருந்தார்கள். அந்த வரிகள் தம் வழி வருபவர்களின் உணர்வை மீட்டுவதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தே அதை தேர்ந்தெடுத்து தயாரித்தனர். இவர்கள் எல்லாம் இயக்கம் ஒன்று கண்டு, கட்சியாக அதை உருவெடுக்க வைத்து அதற்குள்தான் இந்த ஜோடனை வார்த்தைகளை மக்களுக்காக உருக்கியெடுத்துக் கொடுத்தார்கள்.

ரஜினியோ, இயக்கம் காணவில்லை. கட்சி ஆரம்பிப்பதாக கூட சொல்லவில்லை. தனக்கென உருவான - உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்களுக்கு கூட ஒரு பகுதிக்கு பதிவு எண் கொடுத்து விட்டு, இருபது ஆண்டுகளாக அதையும் கொடுக்காமல் நிறுத்தி விட்டார். அப்படிப்பட்டவர்தான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தன் உரையின் தொடக்கத்திலேயே உரைக்கிறார், 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!' என்று. இதன் உட்பொருள் என்ன?

அந்த உட்பொருள் என்னவோ இருக்கட்டும். எதற்காக எடுத்த எடுப்பில் இப்படியொரு வரியை தன் ரசிகர்களுக்காக போட்டு உணர்வை மீட்ட வேண்டும்.

சரி, அதைக்கூட விடுங்கள். ரசிகர்கள் சந்திப்பு மட்டுமல்ல, தன்னை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யும் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில் எல்லாம் 'பாபா' லோகோவையும், தாமரை லச்சினையையும் பின் பக்கத்திரையில் பயன்படுத்துவதை 10 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கிறார். இதற்குள் அரசியல் இருக்குமா இருக்காதா? அதற்குள்ளிருக்கும் ரஜினிக்குள் அரசியல்வாதி இருக்கிறாரா? இல்லை தன்னை வாழவைத்த மக்களின் மீதான நேசத்தையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் சாதாரண மனிதர்தான் இருக்கிறாரா? அப்படிப்பட்ட மனிதருக்கு வார்த்தை ஜோடனைகள் எதற்கு?

தாடியை மழிக்காமல், மீசையை ட்ரிம் செய்யாமல் எதையும் லட்சியம் செய்யாத சராசரி பாமர மனிதன் போல் தோற்றம் கொண்டு மேடையேறும் ரஜினி. 'சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். ஏனென்றால் வெளியில் நடிப்பதற்கு எனக்கு யாரும் ஊதியம் தருவதில்லை!' என்று சொல்லும் ரஜினி. தாம் மேடையேறும் நிகழ்ச்சிகளில் பேசும்போது தினுசுக்கு ஒன்றாக தொடக்க வரிகளை வைக்க வேண்டியதுதானே? அதிலும் ரசிகர்களையும், மக்களையும் ஈர்க்கும் வண்ணம், அவர்கள் உணர்வுகளை மீட்டும் வண்ணம் வார்த்தை ஜாலங்களை வைத்து அழைக்க வேண்டிய அவசியம் என்ன? அங்கேயே தொடங்குகிறது அவரின் அரசியல்.

உரையின் அந்த தொடக்க வரிகளில் கோர்க்கப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, 'சூப்பர் ஸ்டார்' என்று அகண்ட திரையில் ஜொலிக்க வைக்கும் வண்ணங்களில் டைட்டில் கார்டு போட்டுவிட்டு, சாமன்ய மழிக்கப்படாத தாடி மீசையுடன் மேடைக்கும் வரும் சாமன்ய மனிதனாக தோற்றம் காட்டும் அந்த தோற்றத்திற்குள்ளும் அரசியல் இருக்கிறது.

அப்படியான எளிமைதான் தன்னை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் என்கிற சூட்சுமமான ஆளுமை அது. இருக்கும் அழகிலேயே அரிதிலும் அரிதான அழகு, இயல்பாக இருந்ததலில்தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட தன்மை அது. அந்த தன்மை தன்னை நேசிக்கும் மக்களை இன்னமும் நேசிக்க வைக்கும் என்பதற்கான சங்கநாதமும் அதுதான்.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடப் பாவிகளா....இந்தப் பாவி மனுசன் இரவல் பாட்சில்தான் வாழுறார்....அதுவும் அப்பவோ இப்பவோ என்றூ.... இலக்கு மனுசி பிள்ளையள் .. அரசியல் நோக்கு......அய்க்கிய நாடுகள்  சபையில் பரதநாட்டியம் தெரியும்தானே....தமிழ்நாட்டில் ஒருபடித்த ஊழலற்ற தலைவன் இல்லையா.....கூத்தாடிகளா ஆளவேண்டும்...

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 3 - அது சமுத்திரம் என்றால் இது சுனாமி!

 

 
IMG0639

'லிங்கா' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி | கோப்புப் படம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

சாதிகள் குறித்த விவாதம் அதில் பேசுபொருளாக இருந்தது. பேசியவர்கள் அனைவருமே சாதிகளை ஒழித்தே தீர வேண்டும் என்பதை கொடும் ஆயுதம் ஏந்தாத குறையாக கசந்து பேசித் தீர்த்தார்கள். அப்படிப் பேசுவதுதானே நியதி, நீதி, தர்மம்? கவிஞர் சிதம்பரநாதன் இதில் ஒரு படி மேலே போயிருந்தார்.

   
 

'சாதி கொசுக்களை விட மோசமானது. கொசுக்களை எந்த மருந்து அடித்துக் கொல்வது என்று எடுத்தாலும், அப்போதைக்கு அந்த மருந்துக்கு கொசுக்கள் செத்ததுபோல் பாவ்லா காட்டும். சில நாட்களில் பார்த்தால் அந்தக் கொசு மருந்தையே உட்கொண்டு அந்த கொசுக்கள் உயிர் வாழ ஆரம்பித்துவிடும். தன் வீரியத்தையும் அந்த மருந்தின் மூலமே பெருக்கிக் கொள்ளும். அது போன்றதுதான் சாதி. சட்ட திட்டங்கள், விதிமுறைகள் கடுமையாக சாதிக்கெதிராக கொண்டுவரப்பட்டாலும், அப்போதைக்கு அந்த சட்ட திட்டங்களுக்கு பயந்தது மாதிரி சாதி நடிக்கும். ஒடுங்கினதுபோல் பாவ்லா காட்டும். பிறகு பார்த்தால் அந்த சட்ட திட்டங்களையே சாப்பிட்டு உயிர் வாழ ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் இங்கே சாதிகளின் வளர்ச்சி இருக்கிறது!' என வேதனை ததும்பினார்.

கடைசியாகத்தான் பேசினார் ஜெயகாந்தன். எழுத்திலும், பேச்சிலும், சிந்தனையிலும் ஆளுமை மிக்க அவர் எப்போதுமே மற்றவரிலிருந்து மாறுபட்டுத்தான் சிந்திப்பார். ஒளிவு மறைவின்றி அதைப் பேசவும் செய்வார். அப்படித்தான் அன்றைக்கும் ஆரம்பித்தார்.

'இங்கே சாதிகள் கூடாது என்கிறார்கள். சாதிகளை பகிஷ்கரியுங்கள் என்கிறார்கள். என்னைக் கேட்டால் சாதிகள் வேண்டும் என்பேன். சாதிகளால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த சாதிகள்தான் மக்களிடம் எந்த நிலையிலும் போர்க்குணத்தை எதிர்கொள்ளலையும் மனித குலத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனிதகுலப் போராட்டத்தை விவரிக்கும்போதுதான் இலக்கிய உலகம் வாழ்கிறது. அதுவே வரலாறாகவும், எதிர்கால சந்ததிக்கான புதிய வரலாறு படைப்பதற்கான கருவியாகவும், புதிய சிந்தனைக்கான வழித்தோன்றலாகவும் காண்கிறேன். சாதிகள் இல்லாவிட்டால் நானே இப்படியான மக்கள் இலக்கியங்களை கொடுத்திருக்க முடியுமா என்றும் யோசிக்கிறேன். நிச்சயம் கொடுத்திருக்க முடியாது. அதுதான், அதற்கு எதிராக புறப்பட்ட போர்க் குணமும், தீரமும்தான் என் எழுத்துக்கு மேன்மையைக் கொடுத்திருக்கிறது!'

இப்படியாக ஜெயகாந்தனின் பேச்சு நீள, மேடையில் இருந்தவர்களுக்கும், அரங்கில் நிறைந்திருந்தவர்களுக்கும் கூட குழப்பமோ, குழப்பம். ஆனால், ஜெயகாந்தனை தெரிந்தவர்களுக்குத்தான் புரியும். எந்த இடத்திலும் சாதிகளின் ஆதரவாளர் அல்லர் ஜெயகாந்தன் என்பது. வாழ்க்கையைப் படிப்பதற்கு, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு, வாழ்க்கையைப் பற்றி புரிந்துகொள்வதற்கு, வாழ்க்கையில் போர்க்குணம் நிரம்பித் ததும்புவதற்கு சாதிகளும், அதற்கெதிரான போராட்டங்களும் கூட ஒரு வகையில் உதவி புரிகின்றன என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.

இதை சொல்வதற்காக சாதிகளை உருவாக்குதில் அக்கறை காட்டுகிறார் என்று கொள்ள முடியாதல்லவா? அது போலத்தான் ரஜினியையும், அவர் அரசியலையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் எடுத்த எடுப்பில் நாம் சுந்தர ராமசாமியையும், லா.ச.ராவையும், தனுஷ்கோடி ராமசாமியையும், ஜோடிகுரூஸ் எழுதிய நூல்களையும் படித்துப் புரிந்துகொள்ள முடியுமா? வாண்டு மாமா, முல்லைத் தங்கராசன் ஆரம்பித்து ராஜேஷ்குமார். ராஜேந்திரகுமார், தமிழ்வாணன் என பயணம் செய்துதானே அறிவுப்பூர்வமான அடுத்த கட்ட வாசிப்புக்குள் நுழைய முடிகிறது.

அப்படி நம்மை வாசிக்க வைக்க சில நூல்களும், அதன் நூலாசிரியர்களும் உதவுவது போலவே இந்த அரசியலை எளிமையாகப் புரிந்துகொள்ள, எந்த அரசியல் தேவை, எந்த அரசியல் கூடாது என்பதற்கான பாலபாடத்தை எம்ஜிஆர் தொடங்கி வைத்த அரசியலின் மையப்புள்ளி வளரும் இளைய தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துச் செல்கிறது.

ஆகப்பெரும்பான்மை மக்களுக்கு எது பிடித்தமானதாக இருக்கிறதோ, அதன் வழியிலேயே கல்வியும் அமைந்து, அதில் உள்ள சாதக பாதகங்களை அனுபவித்தால் பாதகம் நீக்கி சாதகம் ஏற்றுக்கொள்ளும் உலகு என்பதே சரியான பார்வை.

mgr2

எம்.ஜி.ஆர் | கோப்புப் படம்.

 

எம்ஜிஆர் அரசியல் அப்படித்தான் 1970களில் அன்றைய தலைமுறையினருக்கு அரசியல் பால பாடத்தை நடத்தியது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக அண்ணா ஒரு கிராமத்திற்கு செல்கிறார். அங்கே அவரின் காரை கிராமத்தவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். அண்ணா இறங்குகிறார்.

மக்களிடம் பேச எத்தனிக்கிறார். அப்போது கூட்டத்தில் வந்த சிறுவன் ஒருவன் அண்ணாவை சுற்றி எங்கெங்கோ பார்வையை ஓடிவிடுகிறான். காரை எட்டி எட்டி பார்க்கிறான். அண்ணா கேட்கிறார், 'தம்பி என்ன தேடுகிறாய்?' என்று.

'எம்ஜிஆர் வரவில்லையா?' என்று கேட்கிறான் சிறுவன். 'இல்லை' என்கிறார் அண்ணா. அடுத்து அந்த சிறுவன் அண்ணாவைப் பார்த்துக் கேட்டான். 'நீங்க எம்ஜிஆர் கட்சியா?' என்று. அண்ணா உள்ளூர எழுந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்ன வார்த்தை 'இல்லையே தம்பி!'.

இதை விட இன்னொரு சம்பவம். எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்ஜிஆர். எம்ஜிஆர் உயிருடன் திரும்ப வேண்டுமே என்பதற்காக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என பிரார்த்தனைகளை கட்டுக்கடங்காமல் செய்தனர் மக்கள். குணமாகி கட்டுடன் அண்ணாவை சந்திக்க வந்த எம்ஜிஆர், 'நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் பேச முடியாதே!' என அண்ணாவிடம் வருத்தம் தெரிவிக்கிறார். அதற்கு அண்ணா சொன்ன பதில். 'நீ பேசாவிட்டால் என்ன? ஒரு சுற்று உன் முகத்தை மக்களிடம் காட்டிவிட்டு வந்தால் போதும். அந்த ராசியே அத்தனை தொகுதிகளிலும் நமக்கு வெற்றியை கொடுத்து விடும்!'. இப்படிப்பட்ட எம்ஜிஆர் கதைகளை அவர்தம் விசுவாசிகள் நிறைய பேர் கேட்டிருப்பார்கள்.

ஆக, இதன் மூலம் அண்ணா இருந்த காலத்திலேயே திமுகவை வெல்ல வைத்தது எம்ஜிஆர் சினிமா மாயைதான் என்பதை உணர்ந்து கொள்கிறோம். அன்று எம்ஜிஆர் தொடங்கி வைத்த சினிமா மாயை கமல்-ரஜினி, அஜித்-விஜய் வரை மாறாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

இந்த சினிமா மோகம் தமிழகத்தில் இன்றும் மாறாமல் இருப்பது இந்த சமூகத்திற்கு வேதனை அளிக்கிறதா? மகிழ்ச்சியை தருகிறதா? என்பதெல்லாம் இங்கே விவாதிப்பதில் அர்த்தமில்லை. ஆனால் எம்ஜிஆர் காலத்திய சினிமாவும், அவரின் அரசியல் ஈடுபாடும், கட்சி நடவடிக்கைகளும், சினிமாவிற்குள்ளும், சினிமாவிற்கு வெளியேயும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சுதந்திர வேட்கையினால் உருவாகி நேர்மைத்திறத்துடன் அரசாண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களையே அசைத்து நிர்மூலமாக்கி, சினிமா நாயகர்களை அதில் முன்னிலைப்படுத்தியது. அரியணையிலும் அமர வைத்தது.

எம்ஜிஆர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து காட்டியதன் விளைவு, திடீர் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் என்டிஆர் எதிர்க்கட்சியே இல்லாத அளவு பெரும் வாகை சூடினார். அதன் தொடர்ச்சியாகவே சிவாஜி கணேசன் முதற்கொண்டு (தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி தொடங்கும் முன்பு காங்கிரஸில் இருந்தார்) பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சீமான் வரை கட்சி தொடங்கினார்கள்.

இந்த சினிமாக்காரர்களின் அரசியல் என்பது அவர்களை நேசிப்பவர்களுக்கான அரசியல் அறிவாக மாறியது. ஆனால் பெரும்பான்மை மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்களை கவரக்கூடிய ஈர்ப்பு சக்தி இவர்களிடம் இல்லாததாலேயே தேர்தல் அரசியல் என்ற அளவில் தோல்விகளை கண்டது.

அதே சமயம் பெண்களானாலும், ஆண்களானாலும் பெரும்பான்மையாய் விரும்புவது, பொழுது போக்குவது சினிமா என்கிற அகண்ட திரையில் என்பதால் அதில் எம்ஜிஆரை போல் அரசியல் பேசும் நிலை யாருக்கும் இல்லாது போனது. குறிப்பாக எம்ஜிஆருக்குப் பின் இருந்த ஆகப்பெரும் நடிக சக்திகளான ரஜினியும், கமலும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை பெயரளவுக்கு சினிமாவில் வசனங்களாக உச்சரித்து விட்டு, வாழ்க்கை வெளியில் நழுவிச்செல்லும் போக்கையே கையாண்டனர்.

இதன் பின்னணியில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் சக்திகள் அரசியல் கோலோச்சிக் கொண்டிருந்த சூழலில் அவர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகளை இவர்கள் என்னனென்ன வகையில் சந்தித்தார்களோ, அதன் எதிரொலியாக தங்களுக்கெனவே உருவான ரசிகர் மன்றங்களை கூட கலைத்தார்கள். கமல் அதை ரத்ததான, உடல்தான, சமூக நல இயக்கமாக அறிவிக்க, ரஜினியே ரசிகர் மன்றங்களை ஆரம்பத்தில் பதிவு செய்தததோடு கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டார். என்றாலும் பதிவு செய்யப்படாமலே மாவட்டங்கள் தோறும் அவர் பெயரில் ரசிகர் மன்றங்கள் உருவாவதை கண்டு கொள்ளாமலே இருந்தார்.

விஜயகாந்தோ தான் செல்லும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாம் ரசிகர் மன்றங்களை உருவாக்கினார். அவரின் விசுவாசிகளை வைத்து அவற்றை உருவாக்க வைத்தார். அந்த திட்டமிடல் தொலைநோக்கு அரசியல் பார்வையிலேயே இருந்தது. இந்த உருவாக்கம் ஏனைய அரசியல்வாதிகளுக்குக் கூட தெரியாமலே ஆழம் மிகுந்த நதியில் உள்நீச்சல் போலவே நகர்ந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகால உழைப்பு, அதன் மூலமான ரசிகர்கள் சேகரம், ரசிகர் மன்றங்களின் சேகரம். திரட்சியாக திரண்ட - திரட்சியாக திட்டமிட்டு திரட்டப்பட்ட ரசிகர் மன்றங்களை, எம்ஜிஆர் பார்முலாவில் அரசியல் கட்சியை டிக்ளரேஷன் செய்தார். அதில் உள்ள, ரசிகர்களை அரசியல் தொண்டர்களாகவே மாற்றினார்.

ஆனால் அப்போதைய அவருக்கான சக்தி கூட ரஜினி மன்றங்களை ஒப்பிடும்போது மலையளவு, மடுவளவுக்கானதாகவே தோற்றப்பிழை கண்டது. அதன் வெளி வேறு தொலைவிலும் நின்றது.

என்னுடன் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், அழகிரி போன்றோருடன் பழகியவனாக்கும் நான் என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் அந்தப் பத்திரிகையாளர், ரஜினியை பற்றி நான் பேசும்போதெல்லாம் அடிக்கடி சலிப்பு தட்ட ஒன்றை சொல்லுவார். 'ரஜினியை எதுக்கு பேசறீங்க. அவரோட அரசியல் எல்லாம் 1996லேயே முடிஞ்சுடுச்சு. அவர் இனி அரசியலுக்கு வந்தா தேற மாட்டார். டெபாசிட் கூட கிடைக்காது!'

இந்த விஷயத்தில் எனக்கும் அவருக்கும் பல தடவை வாக்குவாதம் வந்திருக்கிறது. ''நான் ரஜினி ரசிகன் அல்ல, இவ்வளவு ஏன் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் மீது கூட நான் ஈர்ப்பு கொண்டதில்லை. என்றாலும் மக்கள் எந்த அளவு ஒருவரை நேசிக்கிறார்கள், அவர்களையே எண்ணி பிதற்றுகிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதுவே ஒரு கட்டத்தில் அவர்களை அரசியலிலும் வெற்றி வாகை சூடவும் வைத்துள்ளது. அப்படித்தான் ரஜினியையும் பார்க்கிறேன். அவர் அரசியலில் ஜெயிப்பாரா, தோற்பாரா என்பதெல்லாம் தெரியாது.

B824059032Z120140416115218000GHQ8JNM964-

'எந்திரன்' முதல் நாள் முதல் காட்சியில் ரஜினி ரசிகர்கள் | கோப்புப் படம்.

 

ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் அதிகம் பேர் நேசிக்கும் நடிகராக அவர் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் கட்சி ஆரம்பிப்பதும், தேர்தலில் வெல்வதும் தோற்பதும் காலத்தின் கையிலேயே இருக்கிறது. அதில் பாசிட்டிவ் தன்மையே இன்னமும் புலப்படுகிறது!'' என்றெல்லாம் விவாதிப்பேன்.

ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவரையே அப்படி சொல்லுபவர் விஜயகாந்தை எப்படிப் பார்த்திருப்பார். ''விஜயகாந்த் கட்சி, அரசியல் எல்லாம் சும்மாங்க. அவர் கட்சி ஆரம்பிச்சு, தேர்தலில் நின்னா ஒரு சீட்டுல டெபாசிட் கூட வாங்க மாட்டார்!'' என்றே சொன்னார். அதுவே விஜயகாந்த் மதுரையில் கட்சி ஆரம்பித்து, முதல் அரசியல் கட்சி மாநாட்டையும் கொடி அறிமுகத்தையும் செய்த போது கொஞ்சம் உணர்வு பொங்கிப் போனார். அந்த மாநாட்டின் லட்சோப லட்ச ஜனக்கூட்டத்தில் இருந்த அவரை தொலைபேசியில் அழைத்து, 'கூட்டம் எப்படி?' என்று கேட்டேன்.

'பயங்கரம்' என்றார்.

'5 லட்சம் பேர் இருப்பாங்களா?' திரும்பக் கேட்டேன்.

'அதுக்கும் மேலேயே இருக்கும். சமுத்திரம் போல் இருக்கிறது!' என உணர்ச்சி பொங்க பதிலளித்தார். அத்துடன் அவரை நான் விட்டிருக்கலாம்.

'ரஜினி கட்சி ஆரம்பித்தால் எப்படியிருக்கும்?' என்றேன்.

'இது சமுத்திரம் என்றால் அது சுனாமி போல் இருக்கும்!' என்றார்.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 4 - நானும் இல்லை என் கையும் இல்லை!

 

 
rajini1234

ரஜினிகாந்த் | கோப்புப் படம்.

விஜயகாந்த் அப்போது கட்சி ஆரம்பித்ததன் விளைவு. முதலில் ஒரு சீட் வென்றார். அந்தத் தேர்தலில், திமுக பக்கம் வரவேண்டிய ஓட்டுகளை சாதுர்யமாக தன் பக்கம் திருப்பி திமுகவை மைனாரிட்டி அரசாக இயங்க வைக்கும் அளவு சக்தி பெற்றவர் ஆனார். அதுவே ஒரு கட்டத்தில், ஒரு நிகழ்ச்சியில் ரஜினியே, 'விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சு ஜெயிச்சுட்டார், அவருக்கு என் வாழ்த்துக்கள்!' என பாராட்டும் நிலையை ஏற்படுத்தியது.

அதற்கடுத்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி கூட்டணி சேராவிட்டால் அதிமுகவின் நிலை சிக்கலுக்குள்ளாகி விடும் என்பதை ஜெயலலிதாவே உணரும் நிலையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் கட்சியுடன் பேச திரைமறைவு விஜபிக்கள் சோ போன்றவர்கள் களம் இறங்கியது எல்லாம் வரலாறு.

 

 

அவருடன் கூட்டணி வைத்து வெற்றி கண்ட ஜெயலலிதா பிறகு அதிகார பலத்தை முழுமையாக கையில் வைத்துக் கொண்டு, அதே விஜயகாந்தை அரசியல் ரீதியாக எதிர்த்தார். 'உன்னால் ஜெயிக்கவில்லை. நானே உன்னை ஜெயிக்க வைத்தேன். உனக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றுத் தந்தேன்' என்று முழங்கினார்.

இப்படியான முழக்கம் விஜயகாந்தை எந்த மாதிரியெல்லாம் பேச வைக்கும். அவரை எப்படியெல்லாம் உணர்ச்சி பொங்க வைக்கும் என்பதை அறிந்தவர்தான் ஜெயலலிதா. அந்த உணர்ச்சி பொங்கல்கள், வெம்பல்கள், வெடித்தல்கள் எல்லாவற்றையும் திரும்பின பக்கமெல்லாம் வீடியோ, ஆடியோ காட்சிகளாக பரிபாலிக்கவும் செய்தார். அதன் விளைவு ஜெயலலிதாவின் இமேஜ் உயர்ந்ததோ இல்லையோ, விஜயகாந்தின் இமேஜ் சரிவைக் காண ஆரம்பித்தது. அடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேராமல் விஜயகாந்த் துண்டிக்கப்பட்டதிலேயே அவரின் சாணக்யம் வென்றது.

இப்படியாக ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் பணபலத்தோடு, கட்சி பலத்தோடு, ஆளுமை பலத்தோடு, அதிகார பலத்தோடு, சூழ்ச்சிகளும், சூதும் நிறைந்த அரசியல் நிலைகளுடன் மோதும் நிலையை கண்டதால் விஜயகாந்த் கட்சி ஒரு பக்கம் துவண்டது. இன்னொரு பக்கம் அவரின் குடும்பமே அரசியல் என்ற நிலையில் உட்கட்சிக்குள்ளேயே சுனாமிகள் சீறிப் பாய்ந்தன.

இதில் விஜயகாந்த் ரஜினி அளவு மாஸ் ஹீரோ ஆகாவிட்டாலும், தன் படங்களின் மூலம் கட்சி ஆரம்பித்த காலத்தில் தன் கொடியை, தன் கொடி நிறத்தை அறிமுகப்படுத்தினார். தனக்கான தத்துவார்த்தங்களை பிரச்சாரமாக புகுத்தினார். ஏற்கெனவே சப்ஜெக்ட் வைஸாக மட்டுமே ஹீரோ தனத்தில் வென்ற விஜயகாந்தின் இந்த திரைப்பட அரசியல் உத்திமுறை மக்களிடம் எடுபடவில்லை. அதை விட அவரின் ரசிக, தொண்டர் சிகாமணிகளிடமே எடுபடவில்லை. இந்த ஒரு போக்கும் அவரின் சினிமா வாழ்க்கைக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த இரண்டு நெகட்டிவ் போக்குகளின் விளைவு, அதீத உணர்ச்சி பொங்கலின் வெளிப்பாடு அரசியல் பேரோசையாக வந்த அவரையும், அவர் கட்சியையும், தொண்டர்களையும் சின்னாபின்னப்படுத்தியது.

vijayakanth%202

விஜயகாந்த் | கோப்புப் படம்.

ஆளும், ஆண்ட கட்சிகளின் துரியோதன சூழ்ச்சிகள் இன்னமும் அக்கட்சிக்கு மோசமான சூழலை ஏற்படுத்தி விட்டது.

இந்த இடத்தில் ரஜினிகாந்த் ரொம்ப இயல்பாகவே நகர்ந்து கொண்டிருந்தார். தனக்கான களம் சினிமா மட்டுமே என்று நகர்ந்தவர் எந்த இடத்திலும் சினிமாவில் கூட அரசியல் போதிக்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளும் சக்திகளின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை புரிந்தவராகவே காய் நகர்த்தினார். என்றாலும் மறைமுகமாக தன் படங்களின் பஞ்ச் வசனங்களில் அதை புகுத்தினார். 'நானும் இல்லை என் கையும் இல்லை; கோழி முட்டைக்கு சுருக்கு வைத்தது போல்' என்பார்களே கிராமத்து பாஷையில். அதுபோலவே பட்டும் படாமலும் செயல்பட்டார்.

அதே சமயம் ராகவேந்திராவும், பாபா முத்திரையுமான ஆன்மிக வாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். தன்னை வாழவைத்த ரசிக சிகாமணிகளையே கண்மணிகளாகவும், அமைதியையே தன் சுவாசமாகக் கொள்வதாகவும் அடிக்கடி அறிவிக்கவும் செய்தார். அதையும் மீறி வெளிவட்டாரத்தில் ஒற்றை வரி அரசியல் வசனம் உதிர்ப்பதும், அதன் ரியாக்ஷன் பார்ப்பதற்காகவே இமயமலையில் போய் அமர்ந்து கொள்வதுமான காட்சிகளை நிஜப்படுத்தினார்.

இந்த காலகட்டத்தில் கமல், அஜித், ரஜினி மட்டுமல்லாது, அர்ஜூன், விஷால், விக்ரம் என உருவாகி நின்ற காலப்போக்கு கதாநாயகர்கள் எல்லாம் அரசியல்னா மோசம். எல்லோருமே திருடர்கள். ஊழல்வாதிகள். அது கொள்ளையர்கள் கூடாரம். அதை ராபின்ஹூட் போல் ஒருவன் வந்துதான் அவர்களை அடித்து நொறுக்கி விரட்ட வேண்டும் போன்ற மாயத்தோற்றங்களை, கதைக்கருக்களை மக்கள் மத்தியில் பரவ விட்டனர்.

அதற்கு முந்தைய எம்ஜிஆரோ, அவர் காலத்திய சிவாஜி கணேசனோ அரசியல் பார்வையில் தீர்க்கமாக இருந்தனர். எம்ஜிஆரைப் பொறுத்தவரை தன் தலைவன் அண்ணா என்றார். அவர் தென்னாட்டு காந்தி என சுட்டினார். தன் கொடி, கறுப்பு சிகப்பு, தன் கட்சி சின்னம் உதயசூரியன் என்பதையெல்லாம் படம் போகிற போக்கிலேயே ஜனரஞ்சகத்துடன் புகுத்தினார்.

ஒரு கட்டத்தில் கட்சியில் வெளியேற்றப்பட்டு புதுக் கட்சி தொடங்கியதும், புதிய கட்சி கொடியையும், அதன் லோகோவையும் எடுத்த எடுப்பிலேயே அகன்ற திரையில் பட்டொளி வீசிப் பறக்க விட்டார். தன் அரசியல் எதிரிகளை நம்பியார் வேடத்தில் உட்புகுத்தி, அவர்களை வதம் செய்வதையே தன் கண்ணெனக் கொண்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், புலமைப்பித்தன் என வரும் கவிஞர்களை தத்துவப் பாடல்களையே தன் வாயசைவுக்கு பயன்படுத்தினார். அவரே கதைச்சூழலையும், தன் பாத்திரத்தையும் பாடலாசிரியர்களுக்கு விளக்கி, குறிப்பிட்ட விஷயங்களிலான தத்துவார்த்தப் பாடல்களை உருவாக்கித்தரவும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்தார்.

இந்த ஏற்பாடுகள் மூலம் அந்த காலத்து மக்களின், குறிப்பாக இளைஞர்கள், பெண்களின் மனதில் அவர்களையும் அறியாமல் அப்போதைய அரசியல் நிலவரங்கள் மண்டையில் ஏறின. அவற்றையே ரத்த நாளமாகக் கொண்டனர். ரஜினி எம்ஜிஆர் அளவுக்கு சினிமாவிற்குள் பிரபல்யம் அடைந்தாலும், அரசியல் ரீதியாக யாரையும் தலைவனாகக் காட்டவில்லை. உத்திகள் வகுக்கவில்லை.

ஆனால் படங்களில் பாசிட்டிவ் அப்ரோச் மற்றும் தனித்துவ ஹீரோயிஸத்தை வளர்த்தார். மற்ற கதாநாயகர்கள் நடித்த படங்களில் அரசியல் என்றாலே மோசம், ஊழல், கொள்ளை என நெகட்டிவ் சிந்தனைகள் விதைக்கப்பட இவர் படங்களோ, அந்த மாதிரியான நெகட்டிவ் விஷயங்கள் வில்லன்களாக முன்வைத்து ரஜினி என்கிற ஹீரோவால் நொறுக்கப்பட்டனர். அது 'பாட்ஷா', 'முத்து', 'மன்னன்' போன்ற படங்களில் எதிரொலிக்க ஆரம்பித்தது. எஜமான் படத்திலோ, 'எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியிலே பொட்டு வைச்சோம்' ரேஞ்சுக்கு கொண்டு போனது. அதன் மூலம் ரஜினி கூட அவர் தன் படங்களில் தன் ரசிகர்களுக்கு அரசியல் அறிவு ஊட்டும்படியாக படத்தில் கதாநாயகனைக் கொடுக்கவில்லை.

rajini%20kanth1

ரஜினி | கோப்புப் படம்.

 

ஆனால் அந்த ஏக்கம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அதை சொல்லத் தெரியவில்லை. இப்போதும் பாருங்கள். தமிழகத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பேசும் அரசியல் வசனங்கள், அரசியல் தன்மைகள் இப்போதைய இளைஞர்களில் பெரும்பான்மையானோருக்கு இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அவன் மோசம், இவன் மோசம் என்று சுட்டிக்காட்டும் திறம் இருக்குமே ஒழிய, அவன் அதில் மோசம்; இதில் பரவாயில்லை. இவன் இதில் மோசம்; அதில் பரவாயில்லை. அந்தக் கட்சி அதற்கு தேவலை. இந்த கட்சி இதற்கு தேவலை என்று ஒரு அரசியல் தலைவருக்குள், ஒரு அரசியல் கட்சிக்குள் இருக்கும் பன்முகத்தன்மைகளை பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை.

இந்த விஷயங்களுக்குக் காரணம் 60 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆகப்பெரும் ஊடகமாக விளங்கி வரும் சினிமாதான் காரணம். அப்போதைய எம்ஜிஆர், சிவாஜி படங்கள் (சிவாஜி கணேசனின் படங்கள் குடும்பப் பாங்கான கதை நாயகனை மட்டுமல்லாது, சுதந்திர போராட்ட தியாகிகளை பாத்திரங்களாக படைத்து தேச அறிவையும், சுதந்திர, தியாக உணர்வையும் ஊட்டின) அந்த காலகட்ட தலைமுறையினருக்கு பொதுவிதமான அரசியல் அறிவை ஊட்டின. அதை அடுத்த தலைமுறைக்கு சினிமா கதாநாயகர்கள் கொடுக்க மறந்தனர்.

அதனால் சினிமா மூலம் மட்டுமே பார்த்து அரசியல் அறிவை வளர்த்து வந்த பாமரர்கள், ஏழை எளியவர்கள் வேறு திசையில் பயணம் செய்தனர். பணம், பதவி, காசு, பணம் கொடுத்தால் ஓட்டு என்ற நிலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவே அரசியல் மயமாகவும் மாறியது. அதன் ஆரம்ப காலகட்டத்தில்தான் 1996-ல் ரஜினி வாய்ஸ்- திமுக-தமாகா வெற்றி கிடைத்தது. அந்தத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக பணிபுரிந்தனர். பலர் பூத் ஏஜண்ட்டுகளாக, பிரச்சாரகர்களாகவும் மாறினர்.

அதன் தொடர்ச்சியாக ரஜினி அரசியலுக்கு வருவார். மற்ற கட்சிகளை ஓட, ஓட விரட்டியடிப்பார் என்றெல்லாம் கூட அவரின் ரசிகர்கள் கனவு கண்டனர். ஆனால் ஏதோ ஒன்று அவரை வரவிடாமல் தடுத்தது. ரஜினியா? அரசியலா? அரசியல் கட்சியா? அதற்கெல்லாம் அவருக்கு சாமர்த்தியம் கிடையாது. வர மாட்டார். வரவே மாட்டார் என்றெல்லாம் அதற்கான காரண காரியங்களை இட்டுக்கட்டி கூறி பலரும் கிண்டல் கேலி செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்த மறைமுக பிரச்சாரத்தில் திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் கூட இருந்தனர். அப்போது இருந்த ஒரு அமைச்சர் என்னிடம் அதற்கு கூறிய காரணம் அதிர்ச்சியூட்டக்கூடியது. அதில் அவரின் தனிப்பட்ட விஷயங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி, ''அவரின் பலம் எது, பலவீனம் எது என்பதை எங்கள் தலைவரும், நாங்களும் அறிவோம். அரசியல் கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் அதற்கு எதிர்விளைவுகள் கடுமையாக வரும். அதை தாங்கும் சக்தி அவருக்கு கிடையாது. எனவே அவர் எந்த சூழலிலும் அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் தொடங்க மாட்டார்!'' என்றார்.

அப்போதுதான் ஐம்பது வருடம் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றின் கோவை பகுதி நிருபராக சேர்ந்திருந்தேன். அதற்கான பேட்டிக்கு அந்த விஜபியை நாடி சென்றிருந்தேன். அப்போது அந்த அரசியல் விஜபி சொன்னதில் எனக்கு உடன்பாடு இருந்ததோ இல்லையோ, ரஜினி என்கிற நடிகர் மீது எனக்கு அப்போது துளி கூட அபிமானம் இல்லை. எனவே அதை பொருட்படுத்தவும் இல்லை. அந்த சமயத்தில்தான் அலுவலகத்தில் இருந்து ஓர் அசைன்மென்ட் வந்தது.

அதாவது, 'நான் முதல்வராக இருந்தால், நான் பிரதமராக இருந்தால், நான் மேயராக இருந்தால்..!' என வரும் தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்புக்கும் கோவையில் உள்ள ஒவ்வொரு கல்லூரியையும் தொடர்பு கொண்டு குறைந்தது ஒவ்வொரு தலைப்பிலும் 30 மாணவ-மாணவிகளை பேட்டி கண்டு கட்டுரையாக்கி புகைப்படங்களுடன் அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருந்தார் ஆசிரியர். அவர் கொடுத்திருந்தது தலைப்புகளில் ஒன்று, 'ரஜினியாக நானிருந்தால்..!' என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

- பேசித் தெளிவோம்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 5 - ‘சூப்பர் ஸ்டாராக’ நானிருந்தால்!

 

 
rajini2058821f

கொடுக்கப்பட்டிருந்த தலைப்புகளில் 'முதல்வராக இருந்தால், பிரதமராக நானிருந்தால், மேயராக இருந்தால்...!' என வரும் பேட்டிக் கட்டுரைகளை மூன்று கல்லூரி மாணவ- மாணவிகளை பேட்டி எடுத்து கட்டுரையாக எழுதி அனுப்பிவிட்டேன். அவை தொடர்ந்து அடுத்தடுத்த இதழ்களில் அச்சிலும் வந்தன. அதேபோல 'ரஜினியாக நானிருந்தால்' என்ற தலைப்புக்கும் ஒரு கல்லூரியை அணுகி அங்குள்ள மாணவ மாணவிகளைப் பேட்டி கண்டேன்.

அந்த மாணவ- மாணவிகள் தன்னை ரஜினியாக கற்பிதம் கொண்டு கேலி, கிண்டல், ஏளனத் தன்மையுடனே கொட்டித் தீர்த்திருந்தார்கள்.

   
 

உதாரணமாக, 'இந்த வயசுல சின்னப் பொண்ணுகளை கதாநாயகியா போட்டு நடிக்க மாட்டேன். அதிலம் ஐஸ்வர்யாராய் கூட நடிக்க ஆசைப்பட மாட்டேன்!', 'இனிமே கதாநாயகனாக நடிக்க மாட்டேன். நடிச்சாலும் தாத்தா வேஷத்துலதான் நடிப்பேன்!', 'அரசியலில் இப்படியெல்லாம் வாய்ஸ் கொடுக்க மாட்டேன். கொடுத்து விட்டு இமயமலைக்கு ஓடிப்போய்விட மாட்டேன்!' இப்படியே அவை நீண்டன. இவர்கள் கொடுத்த பேட்டிகளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்து என் அலுவலகத்திற்கு அனுப்பியும் விட்டேன்.

ஆனால் அந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படவில்லை.

மாறாக தொலைபேசியில் அழைத்தார் அப்போது எனக்கு துணை ஆசிரியராக இருந்தவர். அவரும் தற்போது மிகப் பிரபலமாகியிருக்கும் பத்திரிகையாளர், எழுத்தாளர்தான்.

'என்ன ஐயா. ரஜினி எவ்வளவு பெரிய சக்தி. அவரைப் பற்றி மாணவ-மாணவிகளிடம் ஆக்கபூர்வமான பேட்டி எடுத்து அனுப்புவீங்கன்னு பார்த்தா இப்படி அனுப்பியிருக்கீங்களே. சரியா?' எனக் கேட்டார்.

நான் அவரின் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. 'மாணவர்கள் எல்லோருமே இப்படித்தான் பேசறாங்க. யாருக்குமே ஆக்கபூர்வமா ரஜினியை பற்றி சொல்லத் தெரியலை. அதுதான்!' என்ற போது, அவர், 'அவங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, அவங்களை நம்மதான் மோட்டிவேட் செய்யணும். ரஜினியை கிண்டலடிக்கிறது இந்த கட்டுரையோட நோக்கமல்ல. இன்னைக்கும் தமிழ் சினிமாவுல அவர்தான் சூப்பர் ஸ்டார். சினிமாதான் பெரிய ஊடகம். அதில் வரும் கருத்துப் பரிமாற்றமே பெரிய சக்தி. இன்றைக்கும் கோடானு கோடி ஜனங்க ரசிக்கிற ஒரே நடிகரா, சூப்பர் ஸ்டாரா இருக்கும்போது, அவர் தான் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், சமுதாயத்தை மாற்றக்கூடிய அளவில் ஏதாவது நினைத்தால் என்னவெல்லாம் செய்யலாம். அதை மாணவர்கள் மூலமா கொண்டு வாங்க. அதை மற்றவர்களும் புரிஞ்சுக்கணும். ரஜினி கூட அதைப் படிச்சு அறிஞ்சு தன் திரைப்படத்தில் அதைக் கொண்டு வரணும்!' என்றெல்லாம் குறிப்பிட்டார்.

அந்த காலகட்டத்தில் அவர் சொன்னது பெரிசாக படவேயில்லை. ரஜினியை முன்வைத்து இந்த சமுதாயத்தில் எதுவுமே செய்ய முடியாது. அவர் மூலம் தமிழ் சினிமா வர்த்தகம் நடக்கிறது. அதைப் புரிந்து அவரும் நடிக்கிறார். அந்த வர்த்தகத்திலிருந்து மாறி வந்து சமுதாயத்திற்கு நல்லது செய்வார். செய்ய முடியும் என்பதை நம்பவே என் மனம் மறுத்தது. என்றாலும் எனக்கு உத்தரவிட்டவர் சீனியர் அல்லவா? அவர் சொன்ன மாதிரியே திரும்ப அதே கல்லூரிக்குச் சென்று மாணவர்களைப் பேட்டி கண்டேன். அனுப்பினேன். அதுவும் நக்கல், நையாண்டித் தனத்துடனே அமைந்திருந்தது.

'இல்லே இதுவும் சரியா வரலை. அபத்தமா இருக்கு. உங்களுக்குள்ளேயே ரஜினி என்கிற மனிதர் இப்படிச் செய்வதற்குப் பதிலா இப்படி செஞ்சிருக்கலாமேன்னு சிந்திக்கிற அளவுக்கு அவரைப் பற்றி (ரஜினியை) பற்றிய நல் அபிப்ராயம் இல்லைன்னு நினைக்கிறேன்!' என்றார்.

அவர் அப்படி சொன்னவுடனே ஒப்புக்கொண்டேன். அன்றைக்கு (20 வருடம் முன்பு) நானே ரஜினியின் நடிப்பையும் கேலியாகவும், கிண்டலடிக்கும் பார்வையிலான மன நிலையில்தான் இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் என் பட்டறை பணிக்கால நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் பட்டறையில் என்னுடன் பணிபுரிந்தவர் என்றாலும் பல்வேறு வார பத்திரிகைகளுக்கு சிரிப்புத் துணுக்கு, தகவல் துணுக்கு, வாசகர் கடிதங்கள், வாசகர் கேள்விகள் என எழுதிக் கொண்டிருந்தவர். அவர் எழுதுவது அச்சில் வருவதைப் பார்த்துதான் வானொலியில் மட்டுமே கதைகள் எழுதிக் கொண்டிருந்த நான் பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தேன். அப்படிப்பட்ட அந்த நண்பர் தீவிர சினிமா பிரியர். அதிலும் ரஜினி படங்கள் என்றால் விடவே மாட்டார். எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்வார். அன்றைக்கு டீக்கடையில் டீ சாப்பிடும்போது அன்றுதான் பார்த்து வந்த ரஜினி படத்தை பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். தவிர அன்று பார்த்த படத்தை மட்டும் 6 முறைக்கு மேல் பார்த்துவிட்டதாக பெருமை பொங்கிட சொன்னார். எனக்கோ சரி கடுப்பு.

'எப்படி ஒரு பத்திரிகை விமர்சகராக, தீவிர இலக்கிய வாசிப்பாளராக இருந்து கொண்டு பத்தாம் பசலித்தனமான ரஜினியின் படங்களை ரசிக்கிறீர்கள். அதிலும் அந்த படங்களை ஆறேழு தடவை பார்க்கிறீர்கள்' என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்.

அவர் என்னை விட இளையவர்தான். ரொம்ப பொறுமையாக இருந்தார். நான் உணர்ச்சி கொந்தளித்த பிறகு பேசினார். 'நீங்க ரஜினி படங்களே பார்க்க மாட்டீங்களா?' எனக் கேட்டார். 'பார்த்திருக்கிறேன். அதற்காக இப்படி வெறித்தனமாக பார்த்ததில்லை!' என்றேன்.

'நீங்க பார்த்த ரஜினி படங்கள் சில சொல்லுங்கள்!'என்றார்.

rajini11

'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் அம்பிகா, ரஜினி | கோப்புப் படம்.

 

'பதினாறு வயதினிலே, அவர்கள், பைரவி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கியோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி...!' என சொல்ல ஆரம்பிக்க அவர் இடைமறித்தார்.

'நீங்க கதை உள்ள, அர்த்தமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கிறீங்க. நான் அப்படியில்ல. ஒரு ஜாலிக்காக பார்க்கிறேன். எத்தனையோ கடன் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, கம்பெனி பிரச்சினைன்னு அழுந்திக் கிடக்கிற நான் சினிமா தியேட்டருக்குள்ள நுழைஞ்சு படம் பார்க்க உட்கார்ந்தா ரஜினி படம் மட்டும்தான் ரெண்டரை மணி நேரம் போறது தெரியாம ஜாலியா போகுது. லாஜிக் இடிக்கிற விஷயங்களை ஒதுக்கி வச்சுட்டு என்டர்டையின்மென்ட் மட்டுமே நோக்கமா வச்சு அந்த படங்களைப் பாருங்க. நம்ம கஷ்டமெல்லாம் பறந்து போகும். அதுதான் என்னை அவர் படத்துல ஈர்க்குது. மற்றபடி நான் எந்த இடத்திலும் ரஜினி ரசிகர் அல்ல!' என்றார் அழுத்தமாக.

பிறகு, 'இப்ப பேச்சுக்கு சொல்றேன். 'பாட்ஷா' படம் நான் சொன்ன கண்ணோட்டத்துல இப்ப போய் பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும். அது மட்டுமில்ல, அதை தொடர்ந்து பார்த்தாலும் சலிக்காது!' என்றார்.

நான் அப்படிப் போகவில்லை. என்றாலும் அந்த நண்பரின் வாதம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள வைத்தது. நாடகக் கலைஞருக்கும், திரைப்படக் கலைஞருக்கும் உள்ள வேறுபாடுகளை, அவர் தம் கஷ்ட நஷ்டங்களை பற்றி அண்ணாதுரை பெரிய அளவில் சொல்லியிருக்கிறார்.

அதில், 'எத்தனையோ துன்ப துயரங்களை அனுபவிக்கும் மனித மனம் ஓரிடத்தில் ஆசுவாசம் கொள்ள ஏங்குகிறது. தனக்கான துன்பங்களை, துன்பம் கொடுப்பவர்களை ஏதாவது செய்து ஒடுக்க முடியாதா? என ஏக்கமாக ஏங்குகிறது. இந்த இடத்தில் மூன்று மணி நேரம் சினிமாவுக்கு காசு கொடுத்து வரும் சினிமா ரசிகன், அங்கேயும் துன்ப துயரங்களும், ஒப்பாரிக் கூக்குரல்களும் ஒலித்தால் தாங்குவானா? அவனின் மனதுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டியதாக சினிமா அமைய வேண்டும்!' என்கிற ரீதியில் அவர் சொல்லி சென்றிருப்பார். அதைத்தான் நண்பரும் சொல்கிறார். சமூகத்தில் ரணப்பட்டு நிற்கும் மனிதனுக்கு ஒத்தடம் கொடுக்கும் வேலையை ரஜினி படம் செய்கிறதா? என்ற கேள்வி மட்டும் எனக்குள்ளேயே இருந்தது.

இது ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும், சராசரியான சினிமா ரசிகர்களுக்குமான இடைவெளியை துல்லியமாக எனக்கு உணர வைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ரஜினிக்குள்ளேயே புகுந்து பார்க்கும் நிலையை மற்றொரு சம்பவம் ஏற்படுத்தியது.

1998-2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் இருண்ட காலம் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் பல தமிழ்த் திரையரங்குகள் மூடுவிழா கண்டது. அப்படி மூடுவிழா காணும் திரையரங்குகள் ஷாப்பிங் மால்களாகவும், திருமண மண்டபங்களாகவும் உருவம் மாற ஆரம்பித்தது. எல்லோரும் சின்னத்திரைப் பக்கம் போய்விட்டார்கள். சினிமாவையும் திருட்டு விசிடியில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே சினிமாவிற்கு மட்டுமல்ல, அதை திரையிடும் திரையரங்குகளுக்கும் எதிர்காலம் இல்லை என்ற அவநம்பிக்கை சினிமா துறையினரிடம் வலுவாக ஏற்பட்டிருந்த காலம் அது.

இந்த நேரத்தில் கோவையில் மட்டும் ஸ்ரீபதி, மணியம், கீதாலயா, முருகன் என தொடங்கி பல புகழ்பெற்ற திரையரங்கங்கள் மூடப்பட்டு வந்தது. அதையொட்டி, திரையரங்கங்களுக்கு என்ன ஆச்சு? என்கிற கேள்வியுடன் ஒரு கட்டுரை தயாரிக்க, கோவையில் பிரபலமாக இருக்கும் காம்ப்ளக்ஸ் தியேட்டர் மானேஜரை அணுகினேன். அவர் திரையரங்க பொறுப்பில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றவர்.

அவர் திரையரங்க தொழில் நடத்துவதில் சமகாலத்தில் நடக்கும் சிக்கல்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்தார். அதில் ஒன்றாக தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கிட் கொடுக்கும் ஹீரோக்கள் நம்மிடம் இல்லை என்பதையும் எடுத்துச் சொன்னார். அதாவது எம்ஜிஆர் -சிவாஜி கணேசன் நடித்த காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றார்.

'அப்போது எம்ஜிஆர்- சிவாஜி படம் என்றால் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரமாண்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். பாடல் கேசட் வெளியிட்டவுடனே அந்த படம் சில்வர் ஜூபிளியா, கோல்டன் ஜூபிளியான்னு சொல்லி விடலாம். அதே ஹிட் கமல்-ரஜினி கொடுத்து வந்தாங்க. அதை ரஜினி கடைசி வரை தக்கவைத்து வந்தார். அவர் படம் பூஜை போட்ட நாளிலேயே பட விநியோகஸ்தர்கள் வாங்கிவிடும் சூழல் இருந்தது. அந்த அளவுக்கு அவர் படம் லாபகரமாகவே இருந்தது. கமல் படம் கூட சில சமயங்களில் ஏமாற்றி விடும். அஜித், விஜய் என்ட்ரி இப்போதுதான் நடக்கிறது. அவை படம் பேசப்பட்டால் மட்டும் ஓடும் நிலை உள்ளது. என்றாலும் இன்றைக்கு தமிழ் சினிமாவில் எப்படி பந்தயம் கட்டினாலும் ஜெயிக்கிற குதிரை ரஜினி மட்டுமே. அவரும் இப்போது நான்கு வருடமாக படங்கள் நடிக்காமல் உள்ளார். அப்படியே நடித்தாலும் ஓரிரு வருடத்திற்கு ஒரு படம் என்றே தருகிறார். இதனால்தான் திரையரங்குகள் பெட்டியை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது!' என விவரித்தார்.

rajinijpg
 

எனக்கு அவர் சொன்னதில் பல விஷயங்கள் உடன்பாடு என்றாலும், ரஜினி விஷயத்தில் சிரிப்பு வந்து விட்டது. 'இது என்ன சார். ரஜினி என்கிற ஒற்றை மனிதரால் இத்தனை திரையரங்குகளின் தலைவிதியை தீர்மானிக்க முடியுமா? அவரே சினிமாவில் ஒதுங்கிக் கொண்டு விட்டது போல் தெரிகிறார். அதிலும் திமுக-தமாகாவுக்கு வாய்ஸ் கொடுத்ததன் மூலம் அரசியல் சாயம் வேறு பூசிக் கொண்டார். அதனால் அவரால் படம் ஓடுகிறது. அவர் நடிக்காததால் துவண்டு நிற்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை!' என்றேன்.

நான் உணர்ச்சி பொங்கி தொடர்ந்து என்னவெல்லாமோ பேசினேன். பொறுமையாக கேட்டு விட்டு அவர் சொன்னார்:

'இன்னைக்கு தமிழ்நாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்காங்க. எல்லோரும் ஏதாவது ஒரு படம் பூஜை போட்டுட்டுத்தான் இருக்காங்க. அதில் பாதி பேரோட படம் பெட்டிக்குள்ளேயே தூங்கிடுது. பல படங்கள் முழுசா எடுத்தும் முடிக்காம பாதியிலயே கிடக்கு. எதுக்குமே தியேட்டர்காரங்க, பட விநியோகஸ்தர்கள் படம் முடிச்சு பிரிவ்யூ ஷோ பார்க்காம படத்தை புக் பண்றதில்லை. அட்வான்ஸ் தொகை கூட கொடுக்கிறதில்லை. ஆனா, ரஜினியோட படத்துக்கு மட்டும் விதிவிலக்கு. அவர் படம் டைட்டிலே வைக்காம பூஜை போட்டாலும் சரி, டைட்டில் மட்டும் வச்சுட்டு பூஜை போடாட்டியும் சரி. உடனே பெட்டியில பணத்தைக் கட்டீட்டு தயாரிப்பாளரை நோக்கி படையெடுக்கிற ஆயிரக்கணக்கான விநியோகஸ்தர்களை நாங்க பார்க்கிறோம்.

இப்ப பேச்சுக்கு உங்களுக்காக ஒண்ணு சொல்றேன். இன்னைக்கு மூணு நாலு வருஷமா ரஜினி படமே பண்ணலை. பண்ணவும் மாட்டேங்கிறார். இந்த நேரத்துல அவர் இப்ப ஒரு படம் நடிக்கப் போறேன்னு அறிவிப்பு செய்யட்டும். படம் டைட்டில் கூட வைக்காம, பூஜை கூட போடாம, அந்த படத்தோட கோவை மண்டல உரிமையை உங்க பேருக்குன்னு ரஜினியே சொல்லட்டும். அப்புறம் பாருங்க. இந்த ஜோல்னா பை, பேனா, பேடு எல்லாம் உங்க கையில இருக்காது. இருக்கவும் விட மாட்டாங்க. உங்களைத் தேடிட்டு எத்தனை கார்கள் உங்க வீட்டு வாசல்ல நிற்குதுன்னு பாருங்க. அதுல வர்றவங்க எத்தனை கோடிகளை எத்தனை சூட்கேஸ்கள்ல அடுக்கிட்டு, 'எனக்கு இந்த ஏரியா கொடுங்க!'ன்னு கெஞ்சறாங்க பாருங்க. ஒத்தை பைசா இல்லாம, நீங்க ஒத்தை வார்த்தை உதிர்க்காம, ரஜினி உதிர்த்த ஒற்றை வார்த்தையிலயே பிரபலம் ஆயிடுவீங்க. ஓவர் நைட்ல கோடீஸ்வரராகவும் ஆயிடுவீங்க. அதுதான்ங்க ரஜினி!' என்றார்.

நான் நெளிந்தேன். அப்படி நடக்குமா? யோசித்தேன். சிந்திக்கவும் ஆரம்பித்தேன். ரஜினியின் ஒற்றைச் சொல்லுக்கு அத்தனை ஆற்றலா? அந்த ஆற்றலை கொடுத்த மக்கள் சக்தி எது? எப்படி அது அவருக்கானதாக ஆனது? எனக்குள் ரஜினியை இருத்தி ஆராய்வதை விட்டு, விட்டு ரஜினிக்குள் என்னை மூழ்க வைத்து ஆராய ஆரம்பித்தேன்.

- பேசித் தெளிவொம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல் 6 - ஆரிய மாயை, திராவிட மாயை, ஆன்மிக மாயை!

 

 

rajini11jpg

ரஜினி | படம்: அருண் சங்கர்.

ரஜினி கொளுத்திப் போடும் வார்த்தைகளில் மீண்டும், மீண்டும் குழப்பத்தையும், சந்தேக, குதர்க்க, எகத்தாள வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரின் எதிர்வினையாளர்கள்.

இந்த முறை உதிர்க்கப்பட்ட முக்கியமான பஞ்ச் ஆன்மீக அரசியல் செய்வேன்! என்பதாகும். அதைப் புரிந்துகொள்ள முடியாமல் மீடியா கேட்ட கேள்விக்கு, 'ஆன்மிக அரசியல் என்பது நியாயமான, தர்மமான அரசியல்' என்று அதே சூட்டில் சுருக்கமாக தெரிவித்திருக்கிறார் ரஜினி.

   
 

என்றாலும் இதன் அர்த்தம் நம் மக்களுக்கு புரிபடுவது சிக்கலாகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட அரசியல் தலைகளுக்கும், அறிவு ஜீவிகளுக்கும் கூட புரிதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அடுத்தடுத்து வந்த ஒவ்வொருவரின் அனர்த்த வெளிப்பாடுகள் காட்டுகிறது. எல்லோருமே கோனார் நோட்ஸ் வைத்து பொழிப்புரை பகிராத குறைதான்.

''இது காந்தியம் முன்னெடுக்கும் அரசியலே. ஆன்மிகம் என்பது வேறு, மதம் என்பது வேறு. மதம் சார்ந்த மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே நேசிப்பவர்கள். ஆனால், ஆன்மிகம் அரசியலை விட்டு வேறுபட்டு இருக்கிறது. உலகத்தில் உள்ள அனைவரையும் அன்பினால், அரவணைத்துக் கொள்வதுதான் ஆன்மிகம். அந்த ஆன்மிகம் சார்ந்த அரசியல் வரவேண்டும். எனவே, ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடம் கிடையாது. தவறுகளுக்கு, குற்றங்களுக்கு இடம் கிடையாது. ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த், காந்திய வழியில் தடம் பதிக்கிறார் என்றுதான் பொருள்!'' என்கிறார் ரஜினியின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ள தமிழருவி மணியன்.

''ரஜினி ஆன்மிக அரசியல் என்பதன் மூலம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது சாதியவாதிகளோடு, மதவாதிகளோடு கைகோக்கப் போவதில்லை. அதே சமயம் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேரப் போவதில்லை. பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்கு துணை போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாகத் தெரிய வருகிறது. அதன் மூலம் கடவுள் நம்பிக்கை உள்ள அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அணிதிரட்ட விரும்புகிறார். அவருடைய 'ஆன்மிக அரசியல்' மத வாதத்திலிருந்து வேறுபட்டது, விலகி நிற்கக்கூடியது. அதை எதிர்காலத்தில் அவருடைய செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்!'' என்று இதற்கு அர்த்தம் தேட முயல்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.

இவர்கள் எல்லாம் இப்படிக் கூறினாலும், குழம்பினாலும் தப்பில்லை. ஆனால் ரசிகர்களே இந்த விஷயத்தில் ரொம்பவும் குழப்பமடைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

rajini1jpg

'படையப்பா' படத்தில் ரஜினி.

 

''ஆன்மிக அரசியல் என்று சொன்னது கூட பிரச்சினையில்லை. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் புதுக்கட்சி கண்டு, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 4 வருஷம் நாங்கள் அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? இடையில் மக்களவைத் தேர்தலுக்கு என்ன செய்வது. அதற்குள் தமிழ்நாட்டில் ஆட்சி கவிழ்ந்து மக்களவைத் தேர்தலுடனே சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால் என்ன செய்வது? அரசியல் குளத்தில் கட்சி ஆரம்பித்த பின்புதான் குதிக்கப் போகிறோம். அது வரை அந்த அரசியல்ங்கிற குளத்தில் நீங்கள் குதிக்க வேண்டாம். நீந்த வேண்டாம். அதில் குதித்தவர்கள் நீந்தட்டும். அந்த அரசியல் குளத்தில் நீந்துபவர்கள் பேசும் பேச்சுக்கும், செயலுக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். கமெண்ட் கூட அடிக்க வேண்டாம். மீடியாவிடம் பேச வேண்டாம். நான் உட்பட இதே நிபந்தனைதான் என்கிறார். இது எந்த மாதிரியான அரசியல். இவர் சொல்வது போல் நடந்தால் அரசியல் நடத்த முடியுமா?'' என நான் சந்தித்த ரசிகர்கள் பலரும் சந்தேகத்தை கொட்டித் தீர்த்தார்கள்.

ஒரு சிலர் இன்னொரு உச்சத்திற்குப் போய் ரஜினியின் குரலுக்கு எதிர்வாதம் கொடுத்த அரசியல்வாதிகளைப் போலவே, ''2.0, காலா படத்தை ஓட வைப்பதற்காகத்தான் இந்த திட்டமோ. பிறகு கட்சிக்கு கதம், கதம் சொல்லி விடுவாரோ?'' என்று கூட சில ரசிகர்கள் கேட்டார்கள்.

இது எந்த அளவுக்கு சரி. அரசியல்வாதிகளானாலும், அறிவுஜீவிகளானாலும், ரசிகர்களானாலும் ஒரே நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருக்க, ரஜினி மட்டும் வேறொரு திசையில் பயணிக்கிறார் என்பதையே இது காட்டுவதாக என்னளவில் உணர்கிறேன்.

வேறொரு திசையில் என்பது ரஜினிக்கு சமகால அரசியல் தெரியாது என்பது அர்த்தமல்ல. ரஜினியின் அரசியல் சமகால அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை என்றுதான் இதை உணர முடிகிறது. அந்த தெரிவை ரஜினி உணர்ந்துதான் திட்டுமிட்டுப் பேசுகிறாரா, அல்லது உணராமலே பேசுகிறாரோ, ரஜினியின் இயல்பே இதுதானோ என்றும் அவர் அரசியலை இன்னமும் புரிந்த கொள்ள முடியவில்லை. அதற்காக அதில் ஊடுருவும் நுட்த்தை உரசிப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அதை முதலில் இங்கே விளக்கி விடுகிறேன்.

rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

 

'ஆரிய மாயை' என்ற நூல் அண்ணாதுரை எழுதியது. இந்நூலில் பிராமணர்களையும், பிராமண அரசியலையும் கடுமையாக சாடுவதாக விமர்சனங்கள் எழுந்து வன்முறையை தூண்டுகிற நூல் என்பதற்காக சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு சிறைதண்டனை கூட அளிக்கப்பட்டது வரலாறு.

அதிலிருந்து புறப்பட்ட திராவிட நாடு, தனித்தமிழ்நாடு கோஷங்கள்தான் திமுகவை வளர்த்தெடுத்தது. ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தியது. திமுக, அதிமுக, தேமுதிக என திராவிடம் என்ற பெயர் இல்லாமல் கட்சிகள் இல்லை ஆளும் கட்சிகள் இல்லை என்ற நிலை 1969 முதல் இன்று வரை தொடர்கிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் தொடங்கி நேற்றைய ஜெயலலிதா வரை திராவிடக் கட்சிகளால் தமிழ்நாடு என்ன பாடுபட்டிருக்கிறது என உரசிப் பார்த்தும் பல நூல்கள் எழுதப்பட்டது. அதில் ஆர்யமாயைக்கு எதிர்வினையாக 'திராவிடமாயை' என்ற தலைப்பில் கூட நூல்கள் வெளிவந்தன.

இன்றைக்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி 48 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் 2 ஆண்டுகளில் அது பொன்விழாவை கொண்டாட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய மாயையில் உழன்று கிடந்த தமிழகம், அடுத்ததாக 50 ஆண்டுகள் திராவிட மாயையில் அமிழ்ந்து கிடந்த மாநிலம் அடுத்தாக ஆன்மிக மாயையில் (கவனிக்க ரஜினியின் 2021ல் தேர்தல் அறிவிப்பு) திகழப்போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியானால் ஆரியத்தில், திராவிடத்தில் உழன்றதற்கு மாற்றாக மக்களை ஆன்மிக ரீதியில் கொண்டு போக, அல்லது ஆன்மிகத்தை விரும்பும் பெருவாரி மக்களை தன்னகத்தில் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் ரஜினி என்றே எண்ணத்தோன்றுகிறது.

சரி ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன வித்தியாசம்?

கொஞ்சம் மூளையை கசக்கிப் பாருங்கள். ரஜினி பேசிய பேச்சிலேயே அதற்கான அர்த்தம் ஆழமாகப் புலப்படும். ஆரியம் சாதி, மத பேதங்களுடன் வேற்றுமைகளை கற்பித்து நகர்ந்தது. அதை உடைத்து பிராமண, சத்திரிய, வைஷ்யர்களை தாண்டி, திராவிடம் சூத்திரனையும் அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது. இருந்தாலும் சமூக நீதியும், சமத்துவமும் இங்கே நடைபயில ஆரம்பித்து விட்டதா? இல்லையே!

பெரிய பதவிகள் அரசாங்க பதவிகள் அடைந்தவர்கள் பெரும்பாலும் அவர்கள் எந்த சாதிசமயத்தைச் சார்ந்தவர்களானாலும் புதிய ஷத்திரியர்களாகவும், புதிய பிராமணர்களாகவுமே உருவெடுத்துள்ளார்கள். அவர்களால் அடிமட்டத்தில் உள்ளவர்கள் நொறுக்கப்படுவதே இந்த ஆட்சி அதிகாரங்களால் நடந்து வந்துள்ளது. எந்த இடத்திலும், 'வாடின பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்!' என்ற வள்ளலாரின் கருணையுடனும், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் நானொன்றியேன் பராபரமே!' என்ற தாயுமானவரின் பரிவுடனும் ஒருவரும் ஆட்சி செய்யவில்லை என்பதை உணர்த்த வருகிறார். அப்படிப்பட்ட ஆன்மிக அரசியலையே சாதி கடந்து, மதம் கடந்து தான் நிலைநாட்ட இருப்பதாக, அதைச் சொல்லிலும், செயலிலும் கூட உணர்த்துகிறார் என்றே தோன்றுகிறது.

எப்படி?

பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 7 - லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய்!

 

 
rajinisarath

ரஜினி உடன் சரத்குமார் | கோப்புப் படம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்துவிடும். வரும் 2019-ம் ஆண்டிற்குள்ளாவது ஆட்சியைக் கலைத்து அப்போது நடக்க உள்ள மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கும் என நம்புகிறார்கள் பொதுமக்கள்.

ஸ்டாலின் உட்பட தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆட்சி ஒரு மாதம் நிலைக்காது; இரண்டு மாதம் கூட நிலைக்காது என சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் ஆர்.கே.நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரன் கூட, வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த ஆட்சி கவிழும் என்று அதிரடியாக அறிவிக்கிறார். யாரும் இப்படி பேசுவது, அதிரடி அறிவிப்பு செய்வது சரிதானா? தர்மம்தானா? அரசியல் சட்டத்திற்கு, இறையாண்மைக்கு, மதமாச்சர்யங்களுக்கு உட்பட்டதா? அட்லீஸ்ட் அடிப்படை நேர்மையாவது அந்த வார்த்தைகளில் உள்ளதா என்று யோசித்துப் பாருங்கள்.

 

சட்டப்படி, விதிமுறைப்படி, இறையாண்மை, தர்மப்படி ஐந்தாண்டுகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியில் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரவை பதவி வகித்தேதான் தீர வேண்டும். அந்தக் கட்சிக்கும், அதன் தலைவரை மட்டுமே முன் வைத்து ஓட்டு போட்ட மக்கள், அந்தத் தலைவர் காலமானதால் (ஜெயலலிதா) இப்போது இருக்கும் ஒட்டுமொத்த தலைமையையே விரும்பவில்லை. அல்லது அது நீடித்தே தீர வேண்டும் என்ற புரிதல் அவர்களுக்குள் இல்லை. அறிவுப்பூர்வமாக இல்லாமல், நேர்மைப்படி இல்லாமல், தலைவர் எப்படி இறந்தார் என்பதில் கூட சந்தேகங்கள் கிளப்பி இந்த அரசியலில் குளிர்காயத் திரிவதும், அதையொட்டி மக்களின் உணர்வுகளை தூண்டி ஆட்சியை கவிழ்க்க நினைப்பதும்தான் அந்த அரியணையில் அமரத் துடிப்பதும் எந்த வகையில் தர்மம்? எந்த வகை நேர்மை?

இந்த சூழலில் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அதுவும் ஆன்மிக அரசியக் செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். இதை எப்படி உணர்ந்துகொள்வது?

''இப்போதைக்கு நமக்கு அமைப்பாக திரள்வது வேலை. அதை முழுமையாக முடிக்கும்போது தேவையில்லாமல் அரசியல் பேசினால் வம்பு வழக்குகள் வரும். வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவார்கள். அதில் யாரெல்லாம் தம் ரசிகர்களோ, தம் கள உழைப்பாளர்களோ, தம் செயல்வீரர்களோ தாக்கப்படுவார்கள். சிறைப்படுத்தப்படுவார்கள். பொய்குற்றச்சாட்டுகளின் பேரில் பொய் வழக்குகள் கூட போடப்படலாம். அவர்கள் குடும்பங்கள் கூட தாக்கப்படலாம். அது எதற்கு தேவையில்லாமல். அரசியல் கட்சிக்கான முன்னோட்ட அமைப்பை ஆரம்பிக்கும் போது நாம் அரசியல் பேச வேண்டியதில்லையே. அதைப் பேசி நாம் ஏன் 'டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், எவ்ரி திங்க் வேஸ்ட்' என்று நாம் திரிய வேண்டும்.

அது நேர்மையும், தர்மமும் அல்லவே. இந்த செயல்பாடுகளை கூட ஆன்மிக அரசியலுக்குள் கொண்டு வருகிறாரோ ரஜினி என்று தோன்றுகிறது. அந்த அரசியல்வாதி அப்படி, அந்த முன்னாள் தலைவர் இப்படி, அவர் ஊழல் செய்தார், இவர் ஊழல் செய்தார் என்று நாம் ஏன் நெகட்டிவ் விஷயங்களை கோடிட்டுக் காட்டி ஓட்டு வாங்க வேண்டும்.

இதுவரை நடந்தது நடந்ததுதான். கதம், கதம். இனி நடக்கப் போவதற்கு என்ன செய்ய வேண்டும். அதை மட்டும் யோசித்து, சிந்தித்து செயல்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு போவதுதானே நம் சரியான செயல்பாடாக இருக்கும்? எனக்கு நடிப்பது வேலை. அதைச் செய்து கொண்டிருந்தேன். அப்போது யாராவது தமிழன், கர்நாடகாக்காரன், காவிரி தண்ணி என்று பிரச்சினை கிளப்பினால் மட்டுமே வேறு வழியில்லாமல் அதில் தன் நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டி நிலையும், சில காரியங்கள் செய்ய வேண்டி நிலையும் வந்தது. அவ்வளவுதான்.

இப்போதைய என் அரசியல் வருகை தயாரிப்பு என்பது முற்றிலும் வேறு. அதை எம்ஜிஆருடனோ, என்.டி.ஆருடனோ, சிவாஜி கணேசனுடனோ, சிரஞ்சீவியுடனோ, ஏன் அமிதாப்பச்சன் கூடவும் ஒப்பிட முடியாது. இனி நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அதில் குதிக்கட்டும். இலங்கை பிரச்சினையிலிருந்து, காவிரி பிரச்சினை வரை அரசியல் தலைவராக இருந்து என்ன கருத்து தெரிவிக்கிறேன். என்ன செய்யப்போகிறேன் என்பதை அனுபவத்தால் உணர வைக்கிறேன்!''

இப்படியான பொருளாகவே ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியலை உணர முடிகிறது. ரஜினி குறித்த எனக்கான சமீப காலப் புரிதல் இப்படியாக இருப்பதாலேயே இதைச் சொல்கிறேன். இதற்கு மாறுபட்டுக்கூட இருக்கலாம்தான். அதனால் என்ன இருந்து விட்டுப் போகட்டுமே. இதையெல்லாம் சொல்வதன் மூலம் ரஜினி வந்தால் தேர்தலில் வென்று விடுவார்; நல்லாட்சி கொடுத்து விடுவார் என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படி சொன்னால் எனக்கும், சராசரி சினிமா ரசிகர்களுக்கும், அரசியல் தொண்டர்களுக்கும், ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். அப்படியான வித்தியாசத்தை புரியாததையும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு நாம் ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை சம்பவம் ஒன்றை இந்த இடத்தில் அறிந்து கொள்வது நல்லது.

rajini%20and%20wife

மனைவி லதாவுடன் ரஜினி | கோப்புப் படம்.

 

லியோ டால்ஸ்டாய் என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய். போரும்; வாழ்வும், அன்னா கரேனினா, புத்துயிர்ப்பு போன்ற உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களை கொடுத்தவர். தத்துவார்த்த கோட்பாடுகளிலான படைப்பிலங்கியங்களுக்கு புத்துயிர் கொடுத்தவர் மட்டுமல்ல; தம் வாழ்க்கையில் அனுபவித்தில் உணர்ந்தவற்றையே எழுதிப் புகழ் பெற்றார்.

அதைவிட அவர் மிகப்பெரிய பிரபுத்துவ வம்சத்தை சேர்ந்தவர். அவரின் நிலபுலன்கள் பல லட்சக்கணக்கான ஏக்கரில் நாடுகள் கடந்து விரிந்து கிடந்தது. அவற்றை பரிபாலிக்க மேலாளர்கள், கங்காணிகள், மேஸ்திரிகள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். அவர்களின் கொடுங் கட்டுப்பாட்டில் கூலி மற்றும் குத்தகை விவசாயிகள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். இது அந்தக் காலத்தில் இயல்பான வாழ்நிலையாகவே இருந்தது.

இப்படி அவல வாழ்க்கை வாழும் விவசாயிகளின் நிலையையும் சுரண்டலில் கொழுக்கும் அதிகார வர்க்கத்தையும் கண்டு மனமுருகிய டால்ஸ்டாய் ஒரு கட்டத்தில் தம் வசமுள்ள நிலங்களை உழுபவர்களுக்கே சொந்தமாக்க முடிவு செய்தார். தம் நிலங்கள் நீண்டிருக்கும் மாகாணங்கள், நாடுகள் என பயணம் செய்தார்.

அங்கு தம் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்ட மேலாளர்கள், கங்காணிகள், மேஸ்திரிகளை சந்தித்தார். தன் பூர்வீக நிலங்களை உழுபவர்களுக்கே சொந்தமாக்க முடிவு செய்திருப்பதையும், அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் பணித்தார்.

அவர்கள் தங்கள் அதிகாரம் பறிபோவதை எண்ணி, அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப் பார்த்தனர். அதற்கேற்ப டால்ஸ்டாயிடம் பல்வேறு ஆலோசனைகள் சொன்னார்கள். தந்திரங்கள் செய்தார்கள். உழுபவர்களிடம் நிலத்தைக் கொடுத்தால் அவர்கள் தங்கள் வறுமைக்காக நிலத்தை மற்றவர்களுக்கு விற்று விடுவார்கள் என்றெல்லாம் கூட உபதேசித்தார்கள்.

அதனால் எல்லாம் தம் முடிவிலிருந்து மாறவில்லை டால்ஸ்டாய். எனவே விவசாயிகள் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. டால்ஸ்டாயின் முடிவு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தந்த நிலங்களை உழும் விவசாயிகளிடமே அதை ஒப்படைப்பு செய்ய பத்திரங்கள் பதிவிட ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்தார் லியோ டால்ஸ்டாய். அதற்கு எதிர்பாராதவிதமாக விவசாயிகளிடமே எதிர்ப்பு கிளம்பியது.

பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 8 - பொருந்துமா எம்ஜிஆர் ஃபார்முலா?

 

 
rajini2jpg

ரஜினி | கோப்புப் படம்.

''இதை நாங்கள் ஏற்க மாட்டோம். நாங்கள் இப்போது உள்ளபடியே விவசாயம் செய்து நிலங்களில் விளையும் விளைச்சலில் ஒரு பகுதியை உங்களுக்கு கொடுத்து விடுகிறோம்!'' என்றனர்.

''அப்படி எதுவும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் நிலம் உங்களிடமே இருப்பதால் அதில் விளையும் விளைச்சல் எல்லாம் உங்களுக்கே சொந்தமாகும்!'' என எவ்வளவோ எடுத்துரைத்தார் டால்ஸ்டாய்.

 

இறுதியில், ''நாங்கள் எங்கள் முடிவை அறிவிக்க சில நாட்கள் அவகாசம் வேண்டும்!'' என்று கேட்டனர் உழவர்கள்.

அதற்கு சம்மதித்த டால்ஸ்டாய் இறுதியாகக் கேட்டார், ''உங்களுக்கு வாழ்க்கையிலேயே நடக்க இருக்கும் இவ்வளவு நல்ல விஷயத்திற்கு ஏன் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?'' என்று.

அதற்கு அவர்கள் சொன்ன பதில் டால்ஸ்டாயியையே தூக்கி வாரிப்போடச் செய்தது.

''முதலாளிகள் என்பவர்கள் எங்களுக்கு என்றைக்குமே நல்லது செய்ததில்லை. செய்யவும் மாட்டார்கள். இதுதான் காலங்காலமாக எங்களுக்கு நடந்திருக்கும் அநீதி. அப்படியிருக்க, இப்போதைய முதலாளியான நீங்கள் மட்டும் எங்களுக்கு நல்லது செய்வீர்கள் என எப்படி நம்புவது? இந்த நிலங்களை எங்கள் தலையில் கட்ட ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும். அது நிச்சயம் எங்களுக்கு அநீதி பயப்பதாகத்தான் இருக்கும்!'' என்பதுதான் அவர்கள் சொன்ன வரிகள்.

இதை டால்ஸ்டாய் தனது புத்துயிர்ப்பு நாவலில் கூட பதிவு செய்திருக்கிறார்.

மனித மனம் என்பது இன்றும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது. மனித மனத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து அது சுத்தமாக நடக்காது, அது ஒரு மூடநம்பிக்கை போலவே மாறி, அதனாலேயே தீயவை, கொடூரங்கள் நடந்து மனம் ரணமாகி, காப்பு காய்த்து நிற்கும் வேளையில், எதை நம்பவே முடியாததாக இந்த சமூகம் நோயாகவே விரவிக் கொண்டதோ, அது நடக்க வரும்போது நம்பவே நம்பாது. அது சாத்தியமேயில்லை. அதில் தீதுதான் நிறைந்திருக்கும் என்றே நினைக்கும். அதுவே அந்த மனிதர்களின் ரத்தநாளங்களில், மரபணுக்களில் கூட கலந்திருக்கும்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது கூட காலங்கடந்த விஷயமாக நம்ப முடியாத விஷயமாக, கேலிக்கும், கிண்டலுக்கும் ஆட்பட்டதாக மாறியதற்கும் இப்படிப்பட்ட எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் ஆன தன்மையே காரணம் என சொல்லலாம். அதேபோல் ஏற்கெனவே அரசியலில் இருந்தவர்கள் இப்படியெல்லாம் செயலாற்றினார்கள். அதிலும் நடிகராக இருந்து அரசியல் தலைவராக இருந்தவர்கள் இப்படித்தான் அரசியலுக்குள் நுழைந்தார்கள். தங்கள் கொள்கை பிரகடனங்களை வெளியிட்டார்கள். சிவாஜி இதனால் தோற்றார். எம்ஜிஆர் இதனால் வென்றார். விஜயகாந்த் இப்படித்தான் சறுக்கினார் என்று பல முன்னுதாரணங்களை காட்டுகிறார்கள். இதில் எந்த ஒரு சங்கதியும் இல்லாமல் ரஜினி கட்சி ஆரம்பிப்பதும், அதில் தொண்டர்படையை திரட்டி வெல்லுவதும் சாத்தியமேயில்லை என்கிறார்கள். அது எப்படி சரியாகும்?

இந்த பிரபஞ்சத்தில் சுழலும் சூரியன்கள், அவற்றை சுற்றும் கோள்கள், அந்த கோள்களை சுற்றும் துணைக்கோள்கள் யாவும், எப்படி ஒரே மாதிரியாக இல்லையோ, அதன் தட்பவெப்பம், சுழற்சி வேகம் எப்படி பல்வேறுபட்ட தன்மையில் உழன்று கொண்டிருக்கிறதோ, அதேபோல் இந்த பூமியில் உலவும் ஜீவராசிகளும், புல், பூண்டு செடி கொடிகளும் ஒரே மாதிரியானதாக இல்லை. ஒரு வெண்டைச் செடியில் உள்ள வெண்டைக்காய்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசாகவே இருக்கின்றன. அதைப் போலத்தான் மனித உருவும், செயல்பாடும் கூட என்பதை விஞ்ஞானப் பூர்வமாக அறியலாம்.

உதாரணத்திற்கு எம்ஜிஆரை எடுத்துக் கொள்வோம். அவர் தன் திரைப்படத்தில் கூட மது அருந்துவது, பீடி, சிகரெட் குடிப்பது போலவெல்லாம் காட்சிகள் வைக்க மாட்டார். அதை பகிஷ்கரிப்பவராக, பெண்குலத்தை போற்றும் கதாநாயகராகவே சுடர்விடுவார். ஆனால் ரஜினி சிகரெட்டை சுழற்றிவிட்டு தன் உதடுகளில் பொருத்தி பற்ற வைப்பதையே முதன்மை ஸ்டைலாக கொண்டார். அதையே அவர் ரசிகர்கள் கொண்டாடினார்கள். தாய்மார்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள். நாவசைத்தால், கை சொடுக்கினால், நடந்தால், ஒரு சிரிப்பு சிரித்தால் எல்லாமே ரஜினியின் ஸ்டைலாக ஏற்றார்கள். ஆக, ஒரு காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை, அதே மனித குலம் வேறு காலகட்டத்தில் ஏற்றுக் கொள்கிறது. இன்னமும் சொல்லப்போனால் அதையே கொண்டாடுகிறது.

இதற்காகவெல்லாமா அந்த மனிதர் கொண்டாடப்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது. கொண்டாடப்படலாம். ஏற்றுக் கொள்வார்களா? அதுவும் இவர் இதைச் செய்தால் நல்லாயிருக்கும் என்று எண்ணம் வருமா? அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம் இல்லை. வெறும் ரசிப்புத் தன்மை மட்டுமே தலைமைப் பண்புக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக அமைந்துவிடாது.

rajini4
 

எம்ஜிஆர் அப்படிச் செய்வது அன்றைக்குப் பிடித்திருந்தது. ரஜினி இப்படிச் செய்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் இவர்கள் எப்படி நடித்தாலும், ரசிகப் பட்டாளத்தை தூண்டினாலும், இவர்கள் தன்னை நேசிப்பவர்களுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்கள், தனக்கு ஒரு காலத்தில் உதவியவர்களுக்கு எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். இந்த சமூகத்திற்கு நேர்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொருத்தே அவர்களின் நற்குணங்கள் அமைகிறது. அவர்கள் தலைமைப் பண்புக்கு உரியவர்களாகவும் மாறுகிறார்கள். அப்படித்தான் நடிக சக்திகளில் ஒருவரான எம்ஜிஆர் உருவானார்.

எம்ஜிஆரின் தர்ம சிந்தனை குறித்து பல கதைகளும் சம்பவங்களும் மூத்தவர்கள் சொல்வார்கள். அதில் சமீபத்தில் காலமான அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் சொன்ன சம்பவம் சுவாரஸ்யமானது. சிந்திக்கவும் வைக்கக்கூடியது. அந்த சம்பவம் ரஜினிக்கும் பொருந்தக்கூடியது.

அந்த எம்எல்ஏ ஒரு காலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் அதிமுக செயலாளராக இருந்தார். தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்காக எம்ஜிஆர் வந்திருந்தார். வேட்பாளர்களை சர்க்யூட் ஹவுசில் சந்தித்தார். இவர் முறை வந்தபோது தொகுதி நிலவரம் எப்படி என்று கேட்டார்.

அதற்கு அவர், ''தலைவரே, நான் நிற்கும் தொகுதி கவுண்டர்கள் கோட்டையாக உள்ளது. நான் பிள்ளைமார் சமூகம் சேர்ந்தவன். என்னை எதிர்ப்பவர்களும் கவுண்டர் சமூகத்தவர்களே. என்னை தோற்கடித்தே தீருவது என அவர்கள் எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீங்க ஒரு இடத்தில் எனக்காக பிரச்சாரம் செஞ்சா போதாது!'' என தெரிவித்தாராம்.

அதைக் கேட்டு கோபம் கொண்ட எம்ஜிஆர், ''என்னை மலையாளிங்கிறாங்க. அதுக்காக நான் கேரளாவிலா போய் போட்டியிடணும்?'' என்று கேட்டு விட்டு, 'நீ போய் வெளியே நில்லு!' என்று சொல்லியிருக்கிறார். இவரும் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரும் நீங்கிக்கலைந்த பின் மறுபடியும் இவர் எம்ஜிஆரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.

அப்போது படு சாந்தமாக பேசிய எம்ஜிஆர், ''உன் கோரிக்கையை ஏத்துட்டேன். நீ என்ன பண்றே. போனதும் நான் உன் தொகுதியில எந்தந்த பாயிண்ட்ல பேசணும்னு ஒரு வரைபடம் போடு. அதுல ஒரு கண்டிஷன். நம்ம போற பாதையில ஒரு முறை போன திரும்பி அதே பாதையில் வரக்கூடாது!'' என உத்தரவிட்டிருக்கிறார்.

அதோடு, 'உன்னுடன் யாரெல்லாம் வந்திருக்காங்க?' என கேட்டுள்ளார். 'நானும் டிரைவரும் மட்டும்தான் தலைவரே!' என சொல்லியிருக்கிறார் இவர்.

அதைக் கேட்டுவிட்டு அங்கே இருந்த சில சால்வைகளை மேஜையில் விரித்திருக்கிறார் எம்ஜிஆர். ஒரு செய்தித்தாளை எடுத்து சில லட்ச ரூபாய்கள் கொண்ட சில கரன்சி கட்டுகளை அதில் அடுக்கி ஒரு சால்வையால் சுருட்டியிருக்கிறார். அப்படி சுருட்டப்பட்ட சால்வை மீதும் இன்னொரு சால்வையை சுற்றியிருக்கிறார். அதை இவரிடம் கொடுத்து, 'இதை தேர்தல் செலவுக்கு வச்சுக்க. வெளியே போனால் உன் டிரைவர் தலைவர் என்ன கொடுத்தார்னு கேட்பார். இந்த சால்வைதான் கொடுத்தார்னு மேலயிருக்கிற சால்வைய உருவி அவர்கிட்ட கொடுத்துடு!' என சொல்லியிருக்கிறார்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

 

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 9 - ரஜினியிடம் காணப்படும் எம்ஜிஆரின் பண்பாடு!

 

 

raj1jpg

ரஜினி | கோப்புப் படம்.

எம்.எல்.ஏ (வேட்பாளர்) வேண்டுகோளை ஏற்று அப்படியே செய்த எம்.எல்.ஏ அடுத்தநாள் எம்ஜிஆர் பிரச்சாரத்தின் போது மொத்தம் 28 இடங்களில் பிரச்சாரம் செய்ய வரைபடம் போட்டுக் கொடுத்திருக்கிறார். 27 இடங்களில் பிரச்சாரம் முடித்த பின்பு வந்த வழியிலேயே திரும்பச் சென்று கடைசி இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டி வந்தது.

அதை நம் எம்எல்ஏ (வேட்பாளர்) எம்ஜிஆரிடம் சொல்ல, அவருக்கு வந்ததே கோபம். தன் துண்டால் எம்எல்ஏவை ஓங்கி ஓர் அடி அடித்தார். டிரைவரை காரை நிறுத்தச் சொன்னார். பிரச்சார வழியிலேயே வேட்பாளரை இறக்கிவிட்டு எம்ஜிஆர் கார் பறந்தது. இவர் கும்பிட்டுக் கொண்டே அங்கே நிற்க, எம்ஜிஆர் பிரச்சார வேனுக்குப் பின்னால் வரிசையாக சென்ற காரில் உள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

 

'வேட்பாளர் இங்கே நிற்கிறார். தலைவர் யாருக்கு பிரச்சாரம் செய்யப்போகிறார் என்பதுபோல் இருந்தது அவர்கள் பார்வை. அந்த தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வென்றேன்!' அந்த முன்னாள் எம்.எல்.ஏ சொன்னது இப்போது போல் உள்ளது.

இதேபோல் அப்போதைய வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தவர் சொன்ன இன்னொரு சுவாரஸ்ய சம்பவம்.

1977-80 ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி தந்தார் எம்ஜிஆர் என்பதை மறுப்பவர்கள் கூட அந்த காலகட்டத்தில் கள்ளு, சாராயக்கடைகளை ஒழித்து, கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டினார் என்பதை மறுக்கமாட்டார்கள். தன் தாயின் மீது ஆணையிட்டு தான் ஆட்சிக்கு வந்தால் தாய்க்குலம் கண்ணீர் சிந்தும் கள், சாராயக்கடைகளுக்கு சமாதி கட்டுவேன் என்று வாக்குறுதி தந்தே வென்றார். அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்.

ஆனால் 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து திமுக தமிழகத்தில் 39க்கு 38 இடங்களை வெல்ல, ரொம்பவும் சோர்ந்து போனார் எம்ஜிஆர். அதையொட்டி ஆட்சியும் கலைக்கப்பட அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனார். நான் என்ன தவறு செய்தேன் என்று தமிழக மக்களிடம் கலங்கி நின்றார். அதில் உருகிப்போயினர் மக்கள். அந்த காலகட்டத்தில் கோவைக்கு வந்த எம்ஜிஆர் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பேசிய கட்சிக்காரர்கள் ஒரேயடியாக பொங்கித் தீர்த்தனர்.

''இரண்டரை ஆண்டுகாலம் நல்லாட்சி நடத்தினீர்கள். உண்மைதான். ஆனால் எங்களுக்கு என்ன பலன். நாங்கள் கட்சிப்பணி ஆற்றக்கூட செலவுக்கு பணம் இல்லை. காவல்நிலையங்களில் கூட எங்கள் பேச்சு எடுபடுவதில்லை. அங்கெல்லாம் திமுகவினரே கோலோச்சராங்க. அவங்க காலத்துல எல்லோரும் சாராயம், கள்ளுக்கடை மூலமா நிறைய சம்பாதிச்சு வச்சிருக்காங்க. அவங்க பண பலம்தான் அதிகாரிகளை சலாம் அடிக்க வைக்குது!'' என்றெல்லாம் அதில் காரசார பேச்சு.

கடைசியாக எம்ஜிஆர், ''கவலைப்படாதீர்கள். இந்த முறை கலங்காமல் தேர்தல் பணி செய்யுங்கள். கடந்த முறை நடந்த தப்பு இப்போது நடக்காது. வரப்போவது மக்களுக்கான ஆட்சியாக மட்டும் இருக்காது; உங்களுக்கான ஆட்சியாகவும் அமையும். நான் உங்களை கைவிட மாட்டேன்!'' என்று உருக்கமாகப் பேசினார்.

அந்த தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார். 'ரொம்ப நேர்மையாக ஆட்சியை நடத்துவது ஆபத்தானது; சில நெளிவு சுளிவுகளுடன்தான் நகர்வதுதான் சரியானது!' என எம்ஜிஆருக்கே அனுபவம் பாடம் காட்டியதுதான் அந்தத் தேர்தல்.

அத்தோடு நின்றாரா?

mgrjpg

எம்ஜிஆர் | கோப்புப் படம்.

 

சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

அவர் தன் ஒரு நாள் கலெக்ஷனை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரை சந்தித்தார். அதை கட்சி நிதியாகவோ, தனிப்பட்ட நிதியாகவோ ஏற்க வேண்டும் என்று வேண்டி நின்றார். அந்தப் பணத்தை கையால் கூட தொடமாட்டேன் என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர். அந்த தொழிலதிபரும் பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல், இந்த நிதியை சத்துணவுத் திட்டத்துக்கு அளித்து விடுங்கள் என்று அந்த துறை அதிகாரியை கைகாட்டி விட்டார். அது முடிந்தபிறகும் பிரச்சினை ஓய்ந்ததா என்றால் அதுதான் இல்லை.

மறுபடியும் சில நாட்களில் பெரும் தொகையை பெட்டியில் அடுக்கிக்கொண்டு வந்தார் அந்தத் தொழிலதிபர். 'இதையாவது நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்!' என்றார். எம்ஜிஆர் மறுக்கிறார். இருந்தாலும் பிடிவாதமாக கட்டாயப்படுத்தி தொழிலதிபர் அங்கேயே அதை வைத்துவிட்டுச் செல்கிறார்.

எம்ஜிஆர் பார்க்கிறார். அன்று இரவு முழுக்க அவர் தூங்கவேயில்லை. தனது அறையில் பரணில் அங்கங்கே இருந்த பழைய டைரிகள், பழைய நோட்டுகளை எடுத்து, எடுத்து அதிலிருந்து எதையோ குறிப்பெடுக்கிறார்.

விடியற்காலை 4 மணிக்கு தன் கதவைத் திறந்து உதவியாளரை அழைக்கிறார். தன் கையில் உள்ள தாள்களை நீட்டி, 'இதில் உள்ள முகவரிகளுக்கெல்லாம் போன் செய்; தந்தி அடி. அவர்களை எல்லாம் இங்கே மாலைக்குள் அவசரமாக வரச்சொல்!' என உத்தரவிடுகிறார்.

அதேபோல் உதவியாளரும் செய்ய, அதில் அழைக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் இல்லம் பதறியடித்து ஓடி வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்கிறார். தனித்தனியே அழைத்துப் பேசுகிறார்.

''நீங்க இன்ன நேரத்தில் இப்படி கஷ்டத்தில் இருந்தேன். நீங்க இன்ன உதவி செஞ்சீங்க. அதை மறக்க மாட்டேன். அதற்காக இல்லாவிட்டாலும் எனக்காக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் என்ன உதவி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கேளுங்க. என்னால் முடிஞ்சதை செய்யறேன்!'' என்று சொல்லி கட்டி வைக்கப்பட்டிருந்த பொட்டலங்களை அளிக்கிறார்.

அந்தப் பொட்டலங்களில் தொழிலதிபர் வைத்து சென்ற பணமே லட்சலட்சமாக பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பைசாவை கூட அவர் தொடவில்லை. கடைசி வரை எம்ஜிஆர் இப்படியேதான் இருந்தார். எனவேதான் அவர் ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வீசப்பட்ட போதெல்லாம், ''நான் தப்பு செய்தேனா? நான் ஊழல் செய்தேனா? ஆதாரத்துடன் நிரூபியுங்கள். ஆட்சியை விட்டே செல்கிறேன்!'' என்றெல்லாம் சவால் விட்டார்.

சரி, இதற்கும் ரஜினிக்கும், ரஜினி அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் இருக்கிறது. தனக்கு உதவி செய்தவர்களை மறக்கலாகாது, தன்னை நம்பி வந்தவர்களை கைவிடக்கூடாது என்ற எம்ஜிஆரின் அந்தப் பண்பாடு ரஜினியிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதுதான் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டிய அம்சம்.

'பாபா' பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரம். நான் அப்போது பணியாற்றிய வாரமிரு பத்திரிகையில் வாசகர்களுக்கு ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள்.

ரஜினி படம் என்றால் பஞ்ச் வசனங்கள் இல்லாமலா? ரஜினியின் 'பாபா' படத்தில் எப்படிப்பட்ட பஞ்ச் வசனங்கள் இடம் பெறலாம். வாசகர்களே உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். ஓர் அஞ்சலட்டையில் எழுதி அனுப்புங்கள். பரிசு காத்திருக்கிறது என அறிவிப்பு செய்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பஞ்ச் வசனத்திற்கும் ரூ.250 பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டிருந்ததாக நியாபகம்.

அந்தப் போட்டி முடிவும் வெளிவந்தது. தொடர்ந்து வாரவாரம் பல பஞ்ச் வசனங்கள் வெளியாகின.

திடீரென்று அலுவலகத்திலிருந்து எனக்கு போன். உதவி ஆசிரியர் பேசினார்.

''நாம் வெளியிட்டு வரும் பாபா பஞ்ச் வசனங்களை ரஜினிகாந்த் படித்திருக்கிறார். அந்த பஞ்ச் வசனங்கள் பல அவருக்கு பிடித்து போய்விட்டது. அதை படத்தில் பயன்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது அச்சில் வெளியான அத்தனை பஞ்ச் வசனம் எழுதிய வாசகர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் தந்திருக்கிறார்!'' என தெரிவித்தார்.

அதற்காக கோவையில் பரிசு பெற்ற இரண்டு வாசகர்களின் முகவரியைச் சொல்லி அவர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்து அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.

அன்றைக்கு ரூ.10 ஆயிரம் என்பது பெரிய தொகை. அந்த வாசகர்கள் குடும்பத்தை சந்தித்து இதை சொன்னபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை காணக் கண்கோடி வேண்டும்.

இது 'பாபா' படத்தில் மட்டும்தான் நடந்ததா?

பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 10 - சர்ச்சைகளில் புகுந்து வெளிவரும் சாமர்த்தியம்!

 

 

rajiniKamalAmita2284467a

ரஜினியுடன் கமல், அமிதாப் பச்சன் | கோப்புப் படம்.

'பாட்ஷா' படம் தமிழகம் முழுக்க சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த நேரம். என் மைத்துனர் சென்னை சென்றிருக்கிறார். தன் நண்பர்களுடன் ரஜினியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தன்னைக் காண ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்றவுடன் வாசல் வரை வந்து அழைத்து சென்று ஹாலில் நிறுத்தி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

என் மைத்துனர் ஆட்டோ டிரைவர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் சென்றவர்களும் ஆட்டோ டிரைவர்கள்தான். அவர்களும் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். அவர்கள் எல்லாம் இன்று வரை, 'ரஜினி போல் ஒரு எளிமையான மனிதரை பார்க்கவே முடியாது. அப்ப அவரை பார்க்கப்போனபோது அவர் ரெண்டு கைகளையும் நீட்டி வாங்கன்னு வேகமா வந்ததையும், ஜோடியாக இடுப்பில் கைபோட்டபடி போஸ் கொடுத்து போட்டு எடுத்துக் கொண்டதையும், மனைவி குழந்தைகளை கவனிங்க, அம்மா, அப்பாவை காப்பாத்துங்க. உழைச்சு சாப்பிடுங்கன்னு அவர் சொல்லியனுப்பியது இருக்கே. அதை வாழ்நாளில் மறக்க மாட்டோம்!' என சொல்லிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர்.

 

இத்தனைக்கும் இவர்கள் இன்று வரை எந்த ஒரு ரசிகர் மன்றத்தையும் ஆரம்பிக்கவில்லை. எந்த ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராக இல்லை. ஆனால் ரஜினி படம் போட்டால் எப்படியாவது டிக்கெட்டை தேடி வாங்கி, முதல் ஷோ பார்ப்பவர்களாகவே அவர்கள் உள்ளனர்.

இவர்களின் நேசம் இப்படி. ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் நிலை எப்படி?

என்னைப் பாதித்த ஒரு மனிதரின் கதையைக் கேளுங்கள்.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றின் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக ஆரம்ப காலம் முதலே இருந்தவர் அவர். இப்பவும் அவர் வகித்த மன்ற பொறுப்புக்கு மாற்றாக வேறு நபர் நியமிக்கப்படவேயில்லை. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். கோமா நிலைக்கு சென்று, உயிருக்கும் போராடிக் கொண்டிருந்தார்.

வெறும் ரஜினி ரசிகராகவே இருந்து குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்து, இப்போது என்ன கண்டார் என்ற குற்றச்சாட்டு அவரின் உறவுக்காரர்களிடமிருந்து மட்டுமல்லாது, ஏனைய ரசிகர்களிடமிருந்தும் கிளம்பியது.

ரஜினி மன்றங்கள் எல்லாம் செயல்படாமல், புதிய மன்றங்கள் எவையும் பதிவு செய்யாமல் இருந்த காலகட்டம் அது. ரசிகர்களுக்கும், ரஜினிக்கும் பெரிய இடைவெளி. அதனால் அந்த ஆதிகால ரசிகர் மன்றத் தலைவரின் நிலை ரஜினியின் கவனத்திற்கே செல்லவில்லை என்பது நீண்டகாலம் கழித்தே தெரிந்தது. அதுவும் ஒரு முக்கிய படத் தயாரிப்பாளரே இப்படி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் கஷ்டப்படுகிறார் என்பதை கண்டுபிடித்தார். அதை அவரே சென்று ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். உடனே பதறிப்போன ரஜினி, அந்த தயாரிப்பாளரையே விட்டு, அந்த ரசிகர் மன்றத் தலைவரை தன் இருப்பிடத்திற்கு அழைத்து வரச் செய்திருக்கிறார்.

காரில் படுத்த நிலையிலேயே, குடும்பத்தோடு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ரசிகர் மன்றத் தலைவரால் ரஜினியிடம் பேசக்கூட முடியவில்லை. அடிக்கடி நினைவு தப்பியவராக இருந்தவரின் கண்கள் ரஜினியைக் கண்டதும் ஒளி விட்டுள்ளது.

அவரைப் பெயர் சொல்லி அழைத்த ரஜினி, 'என்னைத் தெரியுதா? உங்க உடம்புக்கு ஒண்ணுமில்லே. நான் இருக்கேன். கைவிடமாட்டேன்!' என்றெல்லாம் சொல்லி தேற்றியிருக்கிறார். அதில் கண்ணீர் உகுத்த ரசிகர் மன்றத் தலைவர் தத்தளிப்பில் ஆழ, தொடர்ந்து அவருடைய உடல்நிலையிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு தொகையை மருத்துவ செலவுக்காக அவருக்கு கொடுத்த ரஜினி, 'எந்த நேரம் எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்!' என்று சொல்லி அந்த ரசிகர் குடும்பத்துக்கு விடை கொடுத்து அனுப்பியிருக்கிறார் ரஜினி. அடிக்கடி அவர் உடல்நிலை எப்படி என்பதை அந்த தயாரிப்பாளர் மூலமும் விசாரித்து வர செய்திருக்கிறார்.

இன்றைக்கு இந்த உடல்நலம் விசாரிப்பு நடந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அந்த ரசிகர் மன்றத்தலைவர் படுக்கையில்தான் இருக்கிறார். அவரின் மகன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். ரஜினியின் உதவிகள் பற்றியும், அந்த ரசிகர் மன்றத் தலைவர் குறித்தும் பத்திரிகையில் எழுத அவர் மகனை சமீபத்தில் அணுகினேன்.

'இல்லை. வேண்டாம். அதை ரஜினியே விரும்ப மாட்டார். எங்களுக்கும் விருப்பமில்லை!' என மறுத்துவிட்டார்.

இவற்றை எல்லாம் ஏன் இங்கே குறிப்பிட வேண்டும்? 'தனக்கு உதவி செய்தவர்களை மறக்கலாகாது, தன்னை நம்பி வந்தவர்களை கைவிடக்கூடாது' என்று எம்ஜிஆரின் இருந்த பண்பாடு ரஜினியிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு சின்ன சின்ன உதாரணங்கள்தான் இவை.

எம்.ஜி.ஆரால் அறிமுகமாகி, ரஜினியுடனும் நடித்த கதாநாயகி நடிகை லதா எம்ஜிஆரை ஒப்பிட்டே ரஜினியின் நல்ல குணங்களை பட்டியலிட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் அதிமுகவில் இருக்கிறார். ரஜினியுடன் நடித்த குஷ்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிப் பொறுப்பில் இருந்தாலும் ரஜினியின் அரசியல் வருகையை மலர்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். நடிகர் கமலும், வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

rajini9jpg

ரஜினியுடன் துரை தயாநிதி, அழகிரி | கோப்புப் படம்.

கருணாநிதியின் மகன் அழகிரியோ ரஜினி வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொடுக்கும் என்கிறார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினோ, ரஜினி வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என சூசகமாக அறிவிக்கிறார்.

இந்த குழப்பங்களூடே ரஜினியோ எடுத்த எடுப்பில் சில ஆன்மிக தலைவர்களை சந்திக்கிறார். ஆசி பெறுகிறார். அது அவரின் ஆன்மீக அரசியல் 'பஞ்ச்'-க்கு ஏற்ப புதுவித சர்ச்சைகளை உருவாக்குகிறது.

இவர் மடங்களையும், மடாதிபதிகளையும் அரவணைப்பவர். அவர்களின் சொல் கேட்டு நடப்பவர். இவர் பாஜகவின் காவிச் சிந்தனையின், மதச்சார்புத் தன்மையின் இன்னொரு வடிவம் என்றெல்லாம் விமர்சனங்கள் புறப்படுகிறது. அந்த விமர்சனங்கள் ஒரு திக்கை அடைவதற்குள்ளாக அடுத்த அதிர்ச்சி, ரஜினி திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்திக்கிறார். பொன்னாடை போர்த்துகிறார். அவருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்.

ரஜினி - கருணாநிதி சந்திப்பு திமுகவில் புதுவித சலசலப்பையும், சிக்கலையும் ஏற்படுத்துகிறது. கருணாநிதியையும் தன் அரசியலுக்கு ரஜினி பயன்படுத்தும் உத்தியே தவிர வேறில்லை. இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் மனம் புழுங்குகின்றனர் திமுகவினர்.

இந்த புழுக்கத்தை தாண்டி அடுத்ததாக ஆர்.எம்.வீரப்பனை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் ரஜினியை வைத்து எடுத்த பாட்ஷா திரைப்படமும், அதன் வெற்றி விழாவில், 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது!' என ரஜினி பேசிய பேச்சும், அதனால் ஜெயலலிதா அமைச்சரவையில் ஆர்.எம்.வீரப்பன் பதவி பறிக்கப்பட்டதும் புதுவித அரசியல் சர்ச்சைகளாய் தமிழக அரசியலில் மையம் கொள்கிறது.

இதுவெல்லாம் எந்த வகையிலான அரசியல்? இதில் எந்த மாதிரியான அரசியல் புயல் நுழையும் என்று புரிபடாமலா அடுத்தடுத்து இந்த சர்ச்சைகளுக்குள் புகுந்து வெளிவருகிறார் ரஜினி? இதற்கும் பின்னூட்ட அரசியல் நிகழ்வுகள் உள்ளன. அதைத் தாண்டிய அரசியல் வரலாறும் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள கொஞ்சம், கொஞ்சமாக காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 11- நடிப்புக்கு சிவாஜி; அரசியலுக்கு கருணாநிதி

 

 
rajini1jpg

ரஜினி | கோப்புப் படம்: ம.பிரபு.

கடந்த 2014-ம் ஆண்டு. மார்ச் மாதம். திமுக தலைவர் குடும்பத்தில் பிரச்சினை. சகோதர யுத்தம் மூண்டு கிடந்த வேளை. அழகிரியும், அவரின் ஆதரவாளர்களும் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். அந்த காலகட்டத்தில் விநோத நிகழ்வாக ரஜினியை அவர் வீட்டில் சந்திக்கிறார் அழகிரி. அவருடன் அவர் மகன் துரை தயாநிதி.

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, 'என் மகன் படம் எடுக்கப் போகிறான். அதைப் பற்றி பேசவே வந்தேன். கோச்சடையான் பற்றியும் பேசினோம். நிஜமாகவே அரசியல் பேசவில்லை!' என பதில் அளித்து பறந்துவிட்டார் அழகிரி.

 

ஆனால் அழகிரியின் ஆதரவாளர்களோ நின்று நிதானித்து, அழகிரி மகனின் சினிமா படம் பற்றி பேசவா ரஜினியை சந்திக்க வருவார்? எனக்கேட்டு பல்வேறு விஷயங்களை கொளுத்திப் போடவும் செய்தார்கள்.

'அழகிரியின் திட்டம் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளுவதும், அதன் மூலம் தன் இழப்பை புரிய வைப்பதும்தான். அதற்காகவே டெல்லியில் அழகிரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அடுத்து ரஜினிகாந்தையும் சந்தித்தார். 1996-ல் நீங்கள் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டீர்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 10 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றிருக்கும்போது, நீங்கள் அரசியலுக்கு வந்தால் 35 சதவீதம் ஓட்டுகளை அள்ளலாம். தமிழகத்தில் சாதி, மதம், இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு உங்களுக்கு மட்டுமே மக்களின் செல்வாக்கு இருக்கிறது. தயங்காமல் அரசியலுக்கு வாங்க. நான் உங்களுக்கு தோள் கொடுக்கிறேன். இப்போதும் 40 சதவீதம் திமுகவினர் என்னுடன் இருக்கிறார்கள். 10 சதவீதம் பேர் ரகசியமாக எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ரஜினி எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை!' என்பதே அப்போது அவர்கள் வெளிப்படுத்திய விஷயங்களாக இருந்தன. இந்த விவகாரங்கள் அப்போதே பத்திரிகை மற்றும் மீடியாக்களில் இலைமறைவு காய் மறைவாக வெளி வந்தவைதான்.

2014-ல் அழகிரி எதிர்பார்த்தது இப்போது நடந்துள்ளது. அதன் எதிரொலியே அழகிரி ரஜினி அரசியலுக்கு விரித்த சிவப்புக் கம்பள வரவேற்பு. அழகிரியின் வெளிப்படை அரசியல் சரிதான். ஆனால் அழகிரி சொன்னதை எந்த அளவு உள்வாங்கினார் ரஜினி?

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவினை எடுத்துக் கொள்வோம். அதில் திமுக மூன்றாவது இடம் பெற்றிருக்கிறது. டெபாசிட்டும் போயிருக்கிறது. பதிவான வாக்குகள் 1,77,057. அதில் தினகரன் பெற்ற வாக்குகள் 89,013.

கடுமையாக சரிந்த திமுகவின் செல்வாக்கு

2016 தேர்தலில் 57,673 வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை 24,651 வாக்குகளே பெறறுள்ளது. 2016 தேர்தலில் திமுக பெற்ற ஓட்டுகளில் பாதியைக்கூட இப்போது பெறவில்லை. இதன் மூலம் அழகிரியின் அரசியல் பார்வை சரியாக இருந்ததா? திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கினவர் அன்று சொன்னது இந்த தேர்தலில் நடந்ததா இல்லையா? அதை ரஜினி உன்னிப்பாக கவனித்தாரா இல்லையா? தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சி அறிவிப்பதாக இப்போதுதான் சொல்லியிருக்கிறார். சொல்லிவிட்டு 1949-ம் ஆண்டு கால அரசியல் வியூகத்திற்குள்ளேயே போயிருக்கிறார் ரஜினி.

அந்த அரசியலுக்குள் செல்லுவதற்கு முன்பு இதுவெல்லாம் திட்டமிட்டு நடந்ததா இயல்பாக நடந்ததா தெரியவில்லை என்பதையும் சொல்லித்தான் தீர வேண்டும். அதே சமயம் நிச்சயம் இயல்பாகத்தான் நடந்திருப்பதற்கே வாய்ப்பு அதிகம் என்பதையும் சுட்டிக் காட்டிட வேண்டும். திட்டமிட்டது போலவே இயல்பாக நடக்கும் விஷயங்கள் யாவும் வரலாற்றை நினைவுகூர வைக்கும் வகையில் அமைந்து, அதுவே மீண்டும் வரலாறு படைக்கிறது என்பதை சரித்திரம் சொல்லிக் கொண்டிருப்பதால்தான் அதையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால், ரஜினி கருணாநிதியை சந்தித்ததை வைத்து அரசியல் சர்ச்சைகள் கிளப்புகிறார்கள். தன் மரியாதை நிமித்தமான சந்திப்பை அரசியலுக்கு பயன்படுத்திவிட்டார் ரஜினி என்ற புகார்களும் திமுகவினர் மத்தியில் எழுகிறது. மாற்று அரசியலுக்கு வருபவர்கள் தம் நேசமுள்ள தலைவர்களை சந்திப்பதும், அதில் அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் எழுவதும் சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய, பிந்தைய காலத்திலிருந்தே நடந்து வந்துள்ளது. தமிழகத்தில் திராவிட இயக்க வரலாற்றிலும் அத்தகைய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

அப்படித்தான் 1949-ஆம் ஆண்டு ஈவெரா பெரியார், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை திருவண்ணாமலையில் தனியாகச் சந்தித்துப் பேசினார், தம் சொந்தப் பிரச்சினை குறித்துப் பேசினேன் என்றே செய்தி வெளியிட்டார். தொடர்ந்து கோவையிலும், பண்ருட்டியிலும் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அண்ணா மேடையிலேயே பேசும் போது, 'ராஜாஜியை ஏன் சந்தித்தீர்கள்? என்ன நோக்கம்? தங்களுக்கு என்று சொந்தப் பிரச்சினை என்ன இருக்க முடியும்? இயக்கத்திற்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு பிரச்சினையும் திராவிடக் கழகத் தலைவராக இருக்கும் தங்களுக்கு இருக்க நியாயமில்லையே?' என்றெல்லாம் கேட்டார்.

இரண்டு பொதுக்கூட்டங்களிலும் எந்த ஒரு விளக்கமும் கூறாத ஈவெரா, சில நாட்கள் கழித்து, 'ஈவெரா இயக்கத்தின் பாதுகாப்பு கருதியும், எதிர்கால நலன் கருதியும் திருமணம் என்ற பெயரால் இரு ஏற்பாடுகள் செய்யப்போகிறேன். எனக்கு உதவியாளராகவும், எனது நம்பிக்கைக்கு உரியவராகவும், இருந்துவரும் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதனைத் தடுக்கவே அல்லது எதிர்க்கவே எவருக்கும் உரிமையில்லை!' என்று கருத்துப்பட ஓர் அறிக்கையை வெளியிட்டார். ஈவெராவின் முடிவை மறுபரிசீலனை செய்ய பல்வேறு முயற்சிகளை அண்ணாவின் தரப்பு எடுத்தது. ஒன்றும் ஈடேறவில்லை.

இது மட்டுமல்லாது வேறு பல கொள்கை ரீதியான விஷயங்களில் பெரியாருடன் முரண்பாடு கொண்டே (இவையெல்லாம் அந்த காலத்தில் விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட ஏடுகளில் காரசாரமான இரு தரப்பு தலைவர்கள் மூலமாகவும் கட்டுரைகளாக வந்திருக்கிறது) 1949 செப்டம்பர் 17-ம் தேதியன்று சென்னை பவளக்காரத் தெருவில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டின் மாடிப் பகுதியிலுள்ள கூடத்தில் திமுக தொடங்கப்பட்டது. அதற்கடுத்த நாள் (செப்டம்பர் 18) ராபின்சன் பூங்காவில் கூடிய ஒரு கூட்டத்தில் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அப்போது அண்ணாவுடன் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் ஈவெராவின் அண்ணன் மகன் ஈ.வி.கே.எஸ்.சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே.நீலமேகம், அன்பழகன், சி.பி.சிற்றரசு போன்றவர்களே.

இப்போது திமுகவின் தலைவராக விளங்கும் மு.கருணாநிதி அரசியல் காட்சியிலேயே இல்லை (அவர் இக்காலகட்டத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதை வசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாள்கள் அவை. தன் குடும்பத்தோடு சேலத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தார் அவர். அவருடன் இருந்தது கண்ணதாசன். அவர்கள் இருவரும் இக்கூட்டத்திற்காக சேலத்திலிருந்து வந்து விருதுநகர் நாடார் லாட்ஜில் தங்கியதாகவும், அண்ணா 'உன்னை பிரசாரக் குழுவில் சேர்த்திருக்கிறேன்' என்று சொன்னதாகவும், மறுநாள் காலை தானும் கண்ணதாசனும் சேலம் திரும்பிவிட்டதாகவும் கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி'யில் எழுதியிருக்கிறார்).

அப்போதிருந்து அரசியல் களத்தில் ஏகப்பட்ட களப்பணிகளுக்கு பிறகே திமுக படிப்படியான வளர்ச்சி கண்டு 1967-ல் திமுக கட்சி தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அது ஆட்சியில் அமர கட்சி ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கம் எனப்பெரும் இயக்கத்தில் துளிர்த்த இருபெரும் கிளைகளின் கருத்தியல் ரீதியான முரண்பாடுகள், எதிரும் புதிருமாக உள்ள தலைவர்களையே சந்தித்து ஆலோசனை பெற வைத்தது (கவனிக்க தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், பொதுப் பிரச்சனையாக இருந்தாலும்), இயக்கத்தையே உடைத்து வெளியேற வைத்து புதிய கட்சியை உருவாக்க வைத்தது என்பது திமுக உருவாக்கத்திற்கு ஆகப்பெரும் சான்று.

சரி, அதற்கு பிறகு சரித்திரம் மாறுகிறது.

rakajpg

கருணாநிதியுடன் ரஜினி | கோப்புப் படம்.

 

காங்கிரஸை போட்டுத்தாக்குவதில் வரிந்து கட்டிக் கொண்டு திமுக நின்றிருந்த வேளை. காமராஜர் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து திமுகவிற்கு வந்தவர் அல்லவா அவர்? கருத்தியல் ரீதியாக எம்ஜிஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய ஒரு சம்பவம் 1965-ல் நடந்தது. அது காமராஜரின் 62-வது பிறந்தநாள் விழா. சென்னை எழும்பூரில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் தன்னை மறந்து காமராஜருக்கு புகழாரம் சூட்டி உணர்ச்சி பொங்கினார். அதில்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவன், காமராஜரின் பற்றாளன். அவரே என் முதல் தலைவர். என் தலைவர் அண்ணாவிற்கு இணையானவர் என்றெல்லாம் குறிப்பிட்டார். இதன் மீது கடும் கண்டனக் குரல்கள் திமுகவிலேயே எழுந்தது.

'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம். அண்ணாவுடன் ஒப்பிடலாம்!' என்றெல்லாம் கட்சிக்குள்ளேயே கண்டனங்கள் எழுந்தன. என்றாலும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். ஒரு கட்டத்தில் அண்ணாவிடமே தன் நிலையை எடுத்துரைத்தார். எம்ஜிஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை.

1969-ல் மறைகிறார் அண்ணா. முதல்வர் நாற்காலி காலியாகிறது. அடுத்த கட்ட திமுக தலைவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவரை முதல்வராக விடவில்லை கருணாநிதி வகுத்த அரசியல் வியூகம். முழு பக்கபலமாக எம்ஜிஆர் இருந்ததாலேயே அப்போது முதல்வர் நாற்காலியில் கருணாநிதி அமர முடிந்தது என்பதை வரலாறு சொல்கிறது. 1971 சட்டப்பேரவைத் தேர்தல். மாபெரும் வெற்றியை திமுக சூடி, கருணாநிதி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்னர் எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.

அதற்கு பிறகு ஆறாண்டுகள் கழித்தே ஆட்சியைப் பிடிக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆரைப் பொருத்தவரை ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 1952-ல் அண்ணாவின் தலைமையில் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து திரைப்படங்களில் வசனங்கள் பாடல்கள் மூலம் கட்சியின் பிரச்சார பீரங்கியாகவே மாறினார். கிட்டத்தட்ட கட்சியில் எம்எல்ஏவாகி, கட்சி பொருளாளராகி தீவிர கட்சிப்பணிக்கு பிறகுதான் வந்து அதிமுகவை 1972-ல் ஆரம்பித்தார். அவர் திமுகவில் சேர்ந்து 20 ஆண்டுகள் கழித்தே இது நிகழ்ந்தது.

கட்சி ஆரம்பித்ததும் சும்மாயிருந்தாரா? நேராக மாற்றுக்கட்சி தலைவர்களை எல்லாம் சந்தித்தார். குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்தார். தோழர்கள் ராமமூர்த்தி, உமாநாத் போன்றவர்கள் ஏற்கெனவே அவருக்கு நெருக்கமான வழிகாட்டிகளாக இருந்தார்கள் (இன்று ரஜினி ஆன்மிகத் தலைவர்களை அருகில் இருத்தியிருப்பது போல்). பெரியாரை சந்தித்து ஆசி பெற்றார். காமராஜரிடம் திண்டுக்கல் தேர்தலின் போது ஆதரவு கேட்டார். அவர் அதிமுக-திமுக ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என கமெண்ட் அடித்த அரசியல் பஞ்ச் வசனமும் உருண்டது இந்தக் காலத்தில்தான்.

ரஜினிக்கு எம்ஜிஆர், கருணாநிதியைப் போன்று நேரடியான அரசியல் பின்னணிகள் இல்லை. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து தனக்கு பிடித்தமான தலைவர்களை சந்தித்தது போலவே, 'கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்!' என்று அறிவித்துவிட்டு இவரும் தலைவர்களை சந்திக்கிறார். அதில் திராவிடத் தலைவர் பெரியார் வந்தார் என்றால் இதில் ஆன்மிகத்தலைவர்கள், மடாதிபதிகள் வருகிறார்கள். அதேசமயத்தில் திராவிடக்கட்சியின் மூத்த தூணாக விளங்கும் கருணாநிதியும் வருகிறார்.

தனக்கு அரசியல் என்ட்ரியை கொடுத்து அமைச்சர் பதவியை இழந்த ஆர்.எம்.வீரப்பன் வருகிறார். ஆர்.எம்.வீரப்பன் எந்த கமெண்ட்டும் மீடியாக்களிடம் சொல்லவில்லை. கருணாநிதியோ கமெண்ட் சொல்லும் நிலையில் இல்லை. அதனால் அவரின் திமுக முகாமிலிருந்து பெரும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. ரஜினியைப் பொருத்தவரை மடாதிபதிகள் பீடாதிபதிகளை சந்தித்தாலும், அவர்களை முன்னணியில் வைத்தாலும் அவரின் பாசத்திற்குரிய நடிகர் சிவாஜி கணேசன். பற்றுதலுக்குரிய அரசியல் தலைவர் கருணாநிதி என்பதை மறுப்பதற்கில்லை. அதுதான் அவரை இந்த கட்டத்தில் சந்திக்க வைத்திருக்கிறது என்பதை உணரத் தலைப்படுகிறேன். சரி, இந்த இடத்தில் எதற்கு திகவிலிருந்து திமுக, திமுகவிலிருந்து அதிமுக உருவான சரித்திரத்தின் சம்பவங்கள்?

பேசித்தெளிவோம்.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 12 - வகுப்புவாதி; ஆன்மிகவாதி வேறுபாடு

 

 
rajini11jpg

ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி | படம்: எல்.சீனிவாசன்

அண்ணாதுரை திமுக கட்சியை உருவாக்கி 18 ஆண்டுகள் கழித்தே ஆட்சியில் அமர்ந்தார். கருணாநிதி திமுகவில் முக்கிய இடத்திற்கு வந்தும் அதே அளவு வருடங்கள் பிடித்தே முதல்வர் நாற்காலிக்குள் தன்னை பொருத்திக் கொண்டார். எம்ஜிஆரும் திமுகவில் 1952-ல் சேர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து 1972-ல் கட்சி ஆரம்பித்து, 1977-ல் (அரசியலில் 25 ஆண்டுகள் பணியாற்றியே) ஆட்சிக்கட்டிலைப் பிடித்தார். ஜெயலலிதாவும் கூட 1981-ல் அதிமுகவில் இணைந்து அரசியலில் பத்தாண்டு கடும் உழைப்புக்குப் பின்பே 1991-ல் முதல்வர் ஆனார்.

அப்படி நேரடி அரசியலில் இன்று வரை இறங்காத ரஜினி 1990களில் தொடங்கி வெறும் அரசியல் சர்ச்சைகளில் மட்டுமே உலா வந்திருக்கிறார். ஒன்று அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்ற வேண்டும். அல்லது அரசியலுக்கே வராமல் தானுண்டு தன் குடும்பம் உண்டு; தன் தொழில் உண்டு என்று இருக்க வேண்டும். இவரோ மற்ற எவருமே செய்யாத அரசியல் சர்ச்சைக்குள் 1990 முதலே சிக்குவதும், கழுவின மீனில் நழுவின மீனாக இருப்பதுமே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அது அரசியலில் வெற்றியடைய வைக்கும்? வெற்றியடைய வைக்குமோ இல்லையோ! 27 ஆண்டுகால ரஜினி-அரசியல் சர்ச்சைக்கு அழுத்தமான ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே நிஜம். அதற்காகவேனும் ரஜினியின் முடிவை நாம் வரவேற்கத்தான் வேண்டும். அதெல்லாம் இருக்கட்டும். அவர் 1996-ல் தானே அரசியல் வசனத்தை உதிர்த்தார்? 1990ல் எங்கே, எப்படி? நீங்கள் கேட்பது புரிகிறது.

 

'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படைச்ச ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!' என்று 1996-ல் தமாகா - திமுகவிற்கு கொடுத்த அரசியல் வாய்ஸ் வைத்துதான் ரஜினியைச் சுற்றி இன்றளவும் அரசியல் சுழல்கிறது. அப்போதே அவருடைய அரசியலுக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது என்பதுதான் பெரும்பான்மையோரின் கருத்து.

'அரசியலுக்கே நான் வரலைன்னு எல்லோரும் சொல்றாங்க. நான் 1996லேயே அரசியலுக்கு வந்துட்டேன். அப்ப நான் நினைச்சிருந்தா 1996லேயே அரசியலில் பெரிய பதவியை அடைஞ்சிருக்க முடியும். எனக்கு பதவி ஆசை கிடையாது. அப்பவே பதவிக்கு ஆசைப்படாதவன் 20 வருஷம் கழிச்சு இப்பவா ஆசைப்படுவேன்!' என்று ரஜினியே இப்போது ரசிகர்களிடமும் முழங்கியிருக்கிறார்.

உண்மையில் ரஜினியைச் சுற்றி 1995-1996ல்தான் அரசியல் சர்ச்சை சுழன்றதா? 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களே!' என்று எப்போது அவர் தன் மேடைப் பேச்சுக்கு தொடக்க வரியை அமைத்தாரோ, அப்போதே அவர் அரசியல்வாதி ஆகிவிட்டார். அந்த தொடக்க வரியை எப்போது உச்சரிக்க ஆரம்பித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆனால் அதிகாரபூர்வமாக, பத்திரிகைகள் 1985-1990 வாக்கிலேயே அவரை அரசியல்படுத்த ஆரம்பித்துவிட்டன. அதற்கேற்ப அவர் பேட்டிகளும் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஆன்மிக அரசியல் என்ற சொற்றொடரை அப்போதே பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் அதில் உள்ள ஆச்சர்யம். 20.02.1985ல் ஜூனியர் விகடன் இதழ் (இதழுடன் இலவச இணைப்பு) ரஜினி அரசியலில் நுழைவாரா? என்ற கேள்வியுடன் ஒரு ஐந்து மணி நேர பேட்டி என்ற தலைப்பிலான RajiniFans.com சிறப்பிதழை அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து 5-11, 18.03.1987-ல் அதே ஜூனியர் விகடன் இதழ் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ரஜினியுடன் ஒரு பேட்டியை அட்டைப்படத்துடனே அச்சிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளிலும் அவரைப் பற்றி பேட்டி என்றாலும், ஹேஸ்யம் என்றாலும் அரசியல் பஞ்ச் இல்லாமல் இருந்ததில்லை. 1990-ல் ஒரு பல்சுவை வார இதழில் (உதயம்) ரஜினியின் ஒரு பேட்டி வெளியாகியிருக்கிறது. நிருபர் அவரிடம் கேட்கிறார். 'நீங்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக ஈடுபட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்களே உண்மையா?' எனக் கேட்கிறார்.

rajini1
 

''நான்சென்ஸ். நான் மட்டும் அரசியலில் ஈடுபட என் மனதைப் பக்குவப்படுத்தி இருந்தேன்னு வச்சுக்குங்க. பிரமாதமா, பிரம்மாண்டமா அரசியல் பண்ணிக் காட்டுவேன். ஆனா எனக்கு அதில் விருப்பமே கிடையாது. நான் நடிக்க வேண்டிய படங்கள் கைவசம் எக்கச்சக்கமா இருக்கு. அதை முடிச்சுக் கொடுக்கவே நேரமில்லாம இருக்கும்போது நான் ஏன் அரசியலில் குதிக்கணும். அதுலயும் காங்கிரஸ் கட்சியில் ஏன் சேரணும்? எல்லாமே பொய். வதந்தி. விஷமிகள் வேணும்னே திட்டம் போட்டு பரப்பறாங்க. அரசியலில் குதிக்கிறதை விட வேற நல்ல காரியங்கள் நிறையவே இருக்கு!'' என்றார் ரஜினி.

'அரசியலில் ஆர்வம் இல்லாத நீங்கள் தமிழ்நாடு முழுக்க ரசிகர் மன்றங்களை உருவாக்கி ஏன் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள்?' என நிருபரிடம் புறப்படுகிறது அடுத்த கேள்வி. அதற்கும் பட்டென்று ரஜினியிடம் பதில் வருகிறது.

''ஒரு உண்மையை தெரிஞ்சுக்குங்க. என் பெயரில் ரசிகர் மன்றங்களை நான் உருவாக்கவில்லை. மக்களேதான் உருவாக்கிட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அவங்க திரையில் பார்த்து ரசித்த ஹீரோவை, அவங்களுக்கு பிடிச்ச ஹீரோவை நேரில் ஒரு தடவை பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. அதுக்காக செலவு செஞ்சு சொந்த ஊரிலிருந்து பல மைல் தூரம் கடந்து சென்னைக்கு வந்து என்னைப் பார்க்கிறாங்க. அவ்வளவுதான். மற்றபடி கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்றேன். யெஸ். ரஜினிகாந்த் 20 வருஷங்களுக்கு முன்னால சின்னப் பையனா, சாதாரண சிவாஜிராவ் கெய்க்வாட் ஆக வீதியில திரிஞ்சவன். இன்னிக்கு சினிமாவுல நடிச்சு பணக்காரனாயிட்டேன். என்னிடமுள்ள பணத்தை உதவி கேட்டு வர்றவங்களோட முடிஞ்சளவு பகிர்ந்து கொள்ளணும்னு முயற்சி பண்றேன். அது தப்பா. அந்த சின்ன சின்ன உதவிகளுக்கெல்லாம் அரசியல் உள்நோக்கம் கற்பிக்காதீங்க!'' என்றார் ரஜினி.

அரசியலையும், நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு, ''பொதுமக்களை அரசியல்வாதிகள் சுரண்டுவதாக நினைக்கிறேன். இது என் உறுதியான கருத்து. அப்பாவி மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கிறாங்க!'' என்றார் உறுதியுடன்.

உங்களுக்கு மதப்பிடிப்பு அதிகம் என்றும், சந்நியாசி போல் நடந்து கொள்வதாகவும் கருத்து நிலவுகிறேதே? என கேள்வி.

''மதத்தின் மேல் நம்பிக்கை வைக்கிற வகுப்புவாதி அல்ல நான். நானொரு ஆன்மிகவாதி. மதங்கள் மக்களை குழப்பியடிக்குது. எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா மதத்தின் மேல இல்லை. அடிப்படையில் நான் ஒரு மனிதன். அடுத்தபடியா நான் இந்தியன். அவ்வளவுதான். மனுசனை மனுசன் மதிக்கக் கத்துக்கிட்டா போதும் பிரபஞ்சப் பேரமைதி உருவாகி விடும்!'' என்றார் ரஜினி.

சாமான்ய நிலையிலிருந்து பிரபலமானவர் ஆன்மிகம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறதே என உப கேள்வி. அதற்கும் ரஜினியிடம் சளைக்காமல், ''ஏன் பேசக்கூடாது? நான் மனிதன் இல்லையா? எனக்கு நிரந்தர அமைதி தேடி அலையும் ஆன்மா இல்லையா? நான் வாழ்க்கையை வித்தியாசமா பார்க்கிறேன். அதனாலதான் மத்தவங்கள்ல இருந்து நான் வித்தியாசமானவனா தெரியறேன். என் எதிர்கால வாழ்க்கை பத்திக்கூட நான் தெளிவான யோசனைகள் வச்சிருக்கேன்!'' என்றார் பதிலாக.

1989-ல் பிரபல இதழில் வெளிவந்த ரஜினி பேட்டி ஒன்று.

கண்மூடித்தனமாய் ஹீரோ ஒர்ஷிப் செய்கிறார்கள் இன்றைய சினிமா ரசிகர்கள். இது சரியானதாய் தோன்றுகிறதா?

சாதாரண சிவாஜி ராவ் என்பவனை இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ஆசனத்தில் கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறார்கள். யார்? ரசிகர்கள். இன்றைக்கு எனக்காக உயிரையும் விட காத்திருக்கிறார்கள். ஏன்? அதில் கண்மூடித்தனமான ஹீரோ ஒர்ஷிப் இல்லை. அது அன்பு. ஆத்மார்த்தமான ஈடுபாடு. அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்யத் தயார். தேவையெனில் என் உயிரையும் கொடுப்பேன்.

உங்கள் வாழ்க்கை, உங்களுக்கு கற்றுத்தந்த பாடம்?

பேசித் தெளிவோம்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 13-ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறாரா?

 

 
rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

‘’என் கடமைகளை நான் ஒழுங்காக செய்ய வேண்டும். யாரையும் துன்புறுத்தாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், எந்த ஆசைகளையும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம். எனக்கு மிகவும் பிடித்த வாசகம் 'Happiness begins when ambition ends'. ஆக, அபிலாஷைகள் குறையக்குறைய, நிம்மதி, சந்தோஷம் அதிகமாகிறது. வாழ்க்கை ஒரு புத்தகம். அதன் முதல் சில பக்கங்களும், இறுதியில் சில பக்கங்களும் காணாமல் போயிருக்கின்றன. அவற்றைத் தேடுவதுதான் வாழ்க்கை. அதாவது நாம் எங்கிருந்து வந்தோம்; எங்கே போகப் போகிறோம் என்று நமக்கு தெரியாது. அதை அறிய முயல்வதுதான் வாழ்க்கை, ஃபிலாசஃபி, தத்துவம். அதை அறிய முயல்பவன்தான் தத்துவ ஞானி, ஃபிலாசபர். காணாமல் போன பக்கங்களைப் பற்றி கவலைப்படாமல், கிடைக்கிற பக்கங்களை மட்டுமே படிப்பவன் மனிதன், சாதாரண, சராசரி மனிதன்’’ என்றார் ரஜினி.

நீங்கள் சொல்லும் நிம்மதி உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா?

   
 

ஓ. பர்ஃபெக்டா இருக்கு.

இன்றைய சமூகத்தில் வன்முறை அதிகரிக்க, சினிமாவும் ஒரு காரணம். உங்கள் படங்களில் வன்முறை அதிகமாக உண்டு. வன்முறை கூடாது என்று சொல்லும் ரஜினிகாந்த் மறைமுகமாய் சமுதாயத்தின் வன்முறைக்கு காரணமாகிறாரே?

சினிமா என் தொழில். வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நான் என்னுடைய உணர்ச்சிகளை, கொள்கைகளை சொல்ல, அடுத்தவர்கள் எடுக்கும் சினிமாவை பயன்படுத்திக்கொள்வது நியாயமில்லையே. நான் நினைப்பதை செயல்படுத்தணும்னா துறவியா இமாலயத்திற்குத்தான் போயாகணும். படங்களில் வன்முறை இருப்பது உண்மைதான் ஆனால் அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடவில்லையே. வன்முறையின் முடிவில் நடப்பது நல்லவைதானே.

இது இப்படி என்றால் 1989-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒரு பேட்டி:

ஆர்.எம்.வீரப்பனுடன் நெருக்கம் பாராட்டுகிறீர்கள். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவியைப் போய் ரகசியமாக சந்திக்கிறீர்கள். கருணாநிதி பிறந்தநாளன்று முதல்வர் நிவாரண நிதி கொடுக்கிறீர்கள். எல்லா கட்சிகளுக்கும் நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா?

கருணாநிதி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்றதும், நிதி வழங்கறதும் என் கடமை. ஆர்.எம்.வீ படங்களில் அவர் அமைச்சராக இருந்தப்பவும் நடிக்கிறேன். இப்பவும் நடிக்கிறேன். அது தொழில். ஜெயலலிதாவை நான் பார்த்ததா சொல்றது பொய் சார். அவங்களை நான் பார்க்கவே இல்லை!.

தமிழ்நாடு உங்கள் கனவுகளை பல மடங்கு நிறைவேற்றியிருக்கிறது. இந்த நாட்டுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?

ஆண்டவன் தமிழ் ரசிகர்கள் வடிவத்தில் தமிழ் மக்கள் வடிவத்தில் வந்து என் மேல் அன்பையும், செல்வத்தையும் பொழிஞ்சு என்னை இவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கார்னு நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு சோஷியல் சர்வீஸ் மாதிரி என்னால் முடிஞ்சதை செய்வேன். அதைப் பத்தி யோசிச்சுட்டிருக்கேன். ஆனால் நான் என்ன செஞ்சாலும் அரசியல் மூலமா இருக்காது.

நீங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்த உங்களுடைய இன்னொரு பக்கத்தைப் பற்றி, உங்களுடைய மைனஸ் பாய்ண்ட் பற்றி சொல்லுங்களேன்?

என்ன, முன்னாலெல்லாம் ரொம்ப கோபம் வரும். இப்போ வர்றதில்லை. யாராவது கோபப்பட்டா கை நீட்டி அடிச்சிடுவேன். இப்போ எல்லாம் அடங்கிடுச்சு. சுவிட்ச் ஆப் பண்ணின பிறகு சுத்திகிட்டிருக்கிற ஃபேன் மாதிரி வாழ்க்கை ஓடிட்டிருக்கு. தண்ணி அடிக்கிறதை மட்டும் நிறுத்த முடியலை. ஆனா குறைச்சிருக்கேன்.

rajini%20kamaljpg

ரஜினி - கமல் | கோப்புப் படம்.

 

கருணாநிதியைப் பாராட்டும் ரஜினி ஜெயலலிதாவைப் பாராட்டியதே இல்லையா? என்று எல்லோருக்கும் கேள்வி எழலாம். ஏன் இல்லை. இதோ ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு திரைத்துறையினர் நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சிக்கு முதல்வர் வருவதற்கு முன்பே கமல், சரிகா வந்து இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர். மனைவி லதாவோ அரங்கில் நுழைகிறார். கமலை நெருங்குகிறார். லதாவைப் பார்த்த கமல் எழுந்து தன் இருக்கையை அவருக்கு கொடுத்துவிட்டு, அடுத்த இருக்கையில் அமர்ந்து கொள்ள இடம் இல்லாததால் ரஜினி மெல்ல பின்வரிசைக்குப் போகிறார். உடனே சரிகாவும் எழுந்து பின்வரிசைக்கு செல்ல, லதாவும் அவரைத் தொடர்ந்து செல்ல அந்த இருக்கைகளில் ரஜினியும், கமலும் அருகருகே அமர்ந்து கொள்கின்றனர்.

உடனே ஆட்டோகிராப் கேட்டு ரஜினியை ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். முதலில் தயங்கிய ரஜினி, பின்னர் பலர் வற்புறுத்த, எல்லோருக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுக்கிறார். கையோடு ஆட்டோகிராப் புத்தகத்தை கமலிடமும் கொடுத்து அவரிடமும் ஆட்டோகிராப் வாங்கிக் கொடுக்கிறார். அதனால் ரஜினியிடம் ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கு போனஸாக கமலின் ஆட்டோகிராப் கையெழுத்தும் கிடைக்கிறது. பின்னர் ரஜினியும், கமலும் சீரியஸாக ஏதோ பேசிக் கொள்கின்றனர். சற்று நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வந்து விடுகிறார். ரஜினிக்கு அருகில் அவருக்கான ஸ்பெஷல் சோபா போடப்படுகிறது. முதல்வர் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ளும்போதெல்லாம் அந்த விழா நடக்கும் அரங்கத்தினுள் இந்த ஸ்பெஷல் சோபா கொண்டு வந்து போடப்படுவது வழக்கமாக இருந்தது.

ரஜினி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு வணக்கம் சொல்ல, பதில் வணக்கம் தெரிவிக்கிறார் முதல்வர். அதன்பின்னர் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. விழாவில் எல்லாக் கலைஞர்களும் பேசிய பின்னர் ரஜினி பேச அழைக்கப்படுகிறார். ரஜினியின் பேச்சு அப்போது முக்கியத்துவமாய் கருதப்பட்டதாலோ என்னவோ, அதற்கு முன்னர் பேசிய கமல் தனது பேச்சை வெகுசீக்கிரமாகவே முடித்துக் கொண்டார். ரஜினி பேச எழுந்த போது, முதல்வர் உட்பட அனைவரின் முகங்களிலும் ஆர்வம் பிரகாசிக்கிறது. குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அமைதி பூண்ட அரங்கில் ரஜினியின் பேச்சு ஒலிக்கிறது.

''இது ஆண்கள் உலகம். ஆண் என்றாலே ஆணவம் நிறைந்தவன்னு அர்த்தம். அதனாலதான் ஆண் என்றே சொல்கிறோம். இதுல ஒரு பெண்மணி போராடி எதிர்ப்புகளை சமாளிச்சு இந்த அளவுக்கு உயர்ந்திருக்காங்கன்னா அது புரட்சியில்லையா? புரட்சித்தலைவிங்கிற பேர் அவரைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும்? இந்த மாதிரி ஒருவர் நம்ம வீடான சினிமாவிலிருந்து போயிருக்கிறது நமக்கு எல்லாம் பெருமை இல்லையா?'' என்று பஞ்ச் இன்ட்ரோ கொடுத்த ரஜினி அடுத்ததாக சீரியஸ் பேச்சுக்கு தாவுகிறார்.

rajpg

ரஜினி | கோப்புப் படம்.

 

''என்னைப் பற்றி இப்போ பலவிஷயங்கள் பலவிதமா பேசப்படுது. எல்லோருக்கும் ஒண்ணு தெரியும். நான் யாருக்கும் பயப்படறவன் இல்ல. உண்மை. மனசாட்சி, ஆண்டவன். இதுக்குத்தான் பயப்படுவேன். போயஸ் கார்டன்ல எனக்கு ஏராளமான பிரச்சினை, தொந்தரவுன்னு எல்லாம் பேப்பர்ல செய்தியா வருது. சத்தியமா சொல்றேன். எனக்கு அங்கே எந்த பிராப்ளத்தையும் யாரும் தர்றதில்லை. பத்திரிகைகாரங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். நீங்க அறுபது சதவீதம் உண்மையை வச்சுட்டு, அதுக்கு மேலே கொஞ்சம் அப்படி, இப்படி வேண்ணா சேர்த்தி எழுதிக்குங்க. ஆனா ஒரு சதவீதம் கூட உண்மையில்லாத ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டு அதை நூறு சதவீதம் உண்மைன்னு சொன்னா, அது நூறு சதவீதம் பொய்னு ஆகுது. உண்மை ஒரு நெருப்பு மாதிரி. அதை யாராலயும் அழிக்க முடியாது. ஒண்ணு தெரிஞ்சுக்குங்க. உலகத்துல எனக்கு விரோதிகள் யாரும் இல்லை. ஒருத்தரை தவிர. அந்த விரோதி நானேதான். நான் அரசியலுக்கு வரப்போறேன்னு கொஞ்ச நாளா செய்திகள். கமல், விஜயகாந்த், பிரபு இவங்களையெல்லாம் விட்டுடறாங்க. என்னைப் புடிச்சிக்கிறாங்க. நிம்மதியா இருக்கிற என்னை டென்ஷன் பண்றாங்க. என்னடா இவன் ரொம்ப சுலபமா கொண்டையில தாழம்பூ, கூடையில குஷ்புன்னு பாடிட்டு லட்ச, லட்சமா சம்பாதிச்சுட்டு போயிடறானேன்னு பொறாமையில அந்த மாதிரி பண்றாங்க!'' என்றார்.

ஒரு கட்டத்தில், ''நான் சொல்றேன்னு இங்கே உள்ளவங்க யாரும் தப்பா எடுத்துக்கக்கூடாது. ரொம்ப அதிகமா தப்பு பண்றவங்களை ஆண்டவன் அரசியல்ல போட்டுடறான். எனக்கு அரசியல்ல வர விருப்பம் இல்லை. ஆனால் நாளைக்கு என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. சஞ்சய்காந்திதான் பிரதமர் ஆவார்னு நினைச்சோம். ராஜீவ் காந்தி வந்தார். அரசியலை விட்டே ஒதுங்கி நினைச்ச நரசிம்மராவ் பிரதமர் ஆக வேண்டியதாப் போச்சு. நேத்து நான் பஸ் கண்டக்டர். இன்று சூப்பர் ஸ்டார். நாளை என்னவோ. ஆனா, அதே நேரம் ஆண்டவா என்னை எந்தச் சூழ்நிலையிலும் அரசியல்ல விட்டுடாதேன்னுதான் நான் வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்துட்டா நிம்மதி போயிடும். அதிகாரத்துக்கு வந்துதான் நல்லது செய்யணும்னு இல்லை. அதுக்கு வராமலே நல்லது செய்ய முடியும். அரசியல்ங்கிறது புலிவாலை புடிச்ச மாதிரிதான். அதை விட்டுட்டா நமக்குத்தான் ஆபத்து. முதல்வர் அவர்களே. உங்களுக்கு எதிரா புலி இல்லை. பல புலிகள் இருக்கு. நீங்க எச்சரிக்கையா இருக்கணும்!''.

பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 14- 'சிஸ்டம் சரியில்லை' என எப்போது சொன்னார்?

 

 
rajpg

கமல், கே.பாலசந்தர், ரஜினி | கோப்புப் படம்.

அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவைப் பாராட்டி ரஜினி மேடையில் பேசும் காட்சியை அவருக்குப் பின்னே இருந்த பிரம்மாண்ட ஜெயலலிதா கட்-அவுட் பேக்ரவுண்ட் புகைப்படத்துடன் வெளியிட்டு, 'நிஜ அடக்கமா? வாமன அவதாரமா?' என அடிக்குறிப்பில் கமெண்ட்டும் அடித்திருக்கிறது அந்த பிரபல வார இதழ்.

1991-ல் ஜெ ஆட்சி அமைந்த பிறகு ஒரு வார இதழில் ரஜினியிடம் குறும்பேட்டி.

 

பெண்களுக்கு பெருமை சேர்ப்பது தாய்மை. ஆண்களுக்கு பெருமை சேர்ப்பது எது?

ஆண்களுக்கு பெருமை, பத்து பேருக்கு உபயோகப்படற மாதிரி பிரயோஜனமாக இருப்பதுதான்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று ஆசையிருக்கிறதா?

முதலில் உங்களுக்கு இருக்கிறதா சொல்லுங்கள். எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லம்மா. வீட்லயும், நாட்டிலேயும் நல்ல பேர் கிடைச்சா அது போதும். அது கின்னஸ் புத்தகத்துல இடம் பெற்ற மாதிரிதான்.

ஐந்தே நிமிஷம் நீங்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ளச் சொன்னால், முதன் முதலில் என்ன செய்வீர்கள்?

அஞ்சு நிமிஷத்துலயா? ஒண்ணுமே செய்ய முடியாது. அதை ஒரு நாளாக வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு நான் முதன் மந்திரியாக இருந்தால் உடனே நாட்டில் ஏழைகளே இல்லாமல் செய்து வறுமையை ஒழித்து விடுவேன். என்னால அது முடியும்.

இதே போல் 1995-ல் ஜெயலலிதா ஆட்சியில் சுஜாதா- ரஜினி சந்திப்பு. பேட்டியாக அச்சில் வந்துள்ளது.

'அரசியலுக்கு வந்தா உங்கள் கைக்கு சக்தி வாய்ந்த பதவி வரும் இல்லையா?' என்று ஒரு கேள்வி. அதற்கு பதில் சொல்கிறார். தனிமனிதனால் எதுவும் சாதிக்கவே முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்த அமைப்பே மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா? அது மாதிரி. அரசியல் அமைப்பே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது. மொத்தமா மாறினாதான் உண்டு!' என்கிறார் ரஜினி.

ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்க கூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? அந்த கிளீன் இமேஜ் சீக்கிரத்தில மறைஞ்சு போயிடுது?

ஆமாம். எம்ஜிஆரையே எடுத்துக்குங்க. வந்த முதல் இரண்டு வருஷத்துல அவர் எப்படி இருந்தார். எப்படிப்பட்ட ஆட்சி நடத்தினார். அதுக்கப்புறம் அவராலேயே ஒண்ணும் செய்ய முடியலையே?

சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லியா?

யெஸ். என்னன்னா, கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். அவரை விட இவர் கொஞ்சம் பெட்டர். அது பிரயோஜனமில்லையே. சிஸ்டம் மாறணும்! என சொல்லிவிட்டு சிரிக்கிறார்.

ஆக, சிஸ்டம் சரியில்லை என்று சொன்னது இன்று நேற்று நடந்தது அல்ல. 1994-95 களில் ஜெயலலிதா ஆட்சியின்போதே அவர் சொன்ன அரசியல் வார்த்தைதான் அது. அதே சந்திப்பில் பல்வேறு அரசியல் கேள்வி பதில்கள் இடம் பிடிக்கின்றன.

நீங்க ஒரு சக்தி. உங்க படம் ரிலீஸ் ஆகலைன்னு திருச்சியில ஒரு ரசிகர் தற்கொலை பண்ணிட்டதாக கூட படிச்சேன். ஆனால் அந்த இல்யூசன் உங்ககிட்ட இல்லைங்கிறதும் தெரியும். உலகம் நம்மை விரும்புதுங்கிறது இல்யூசன் இல்லை. ஆனா, ரசிகர்கள் உங்களை ரொம்ப நெருக்கமா உணர்றாங்க. Larger than life image. ரசிகனோட சப்ஸ்டிட்யூட்டா இருக்கிற ஒருத்தர் நீங்கங்கிற இமேஜ் இருக்கே, அதை பாசிட்டிவ்வா திசை திருப்பலாமில்லையா? உங்க ரசிகர் மன்றங்கள்ல என்ன பண்றாங்க?

நிறைய பண்றாங்க. நற்பணிகள், சமூக சேவை, கண்தானம், முதியோர் உதவி, வெள்ள நிவாரணம் மாதிரி பலதும் செய்யறாங்க!

நீங்க சொல்றதை அப்படியே கேட்கிறாங்களா?

நிச்சயமா. அவங்க எல்லோருக்குமே நான் ஏன் அரசியலுக்கு வர மாட்டேங்கிறேன்னு ஓர் ஆசை இருக்கு. ஏன் தெளிவாச் சொல்ல மாட்டேங்கிறேன்னு நினைக்கிறாங்க. ஆனா ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிட்டே வந்திருக்கேன். எனக்கு அரசியல்ல ஈடுபாடு கிடையாதுன்னு. அது மட்டுமில்லாம, நான் எதிர்காலத்தை பத்தி யோசிக்க மாட்டேன். இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன்னா, நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. நாளை சூப்பர் ஸ்டார் யாரு, வில்லன் யாருன்னு இப்பவே யாருமே சொல்ல முடியாது!

ரசிகர் மன்றங்களுக்கு ஏதாவது கைட்லைன்ஸ் கொடுத்திருக்கீங்களா?

ஆமாம். முதல்ல வீடு. அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் இதைத்தான் கவனிக்கணும். அதுக்கு அப்புறமா ரசிகர் மன்றத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கேன்!

ஜெயலலிதா அரசாங்கம் பத்தி என்ன நினைக்கிறீங்க?

நல்லா திறமையான லேடி. நல்ல நாலட்ஜ். எனக்கு உறுத்தற விஷயம் இந்த கட்-அவுட், பப்ளிசிட்டி இதெல்லாம்தான். இர்ரிடேட்டிங்கா ஃபீல் பண்ண வேண்டியிருக்கு. இவ்வளவு இன்டெலிஜென்ட் லேடிக்கு இது ஏன் தெரியலைன்னு புரியலை. நல்ல லீடர்ஷிப். ஆனா இதுல இப்படி அதையெல்லாம் மீறி கட்சியை கன்ட்ரோல்ல வெச்சிருக்கிறது மிகப் பெரிய விஷயம்!.

1996-ல் ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது என்று பஞ்ச் டயலாக் பேசி தமாகா-திமுக கூட்டணிக்கும் வெற்றிக்கும் காரணமான ரஜினி, அதற்கு முன்பே இவ்வளவு அரசியல் சர்ச்சைகளில் உழன்று வந்திருக்கிறார் என்பதை அந்தந்த காலகட்டத்தில் பத்திரிகை பேட்டிகளே உணர்த்துகின்றன.

rajjpg

ஒரு நிகழ்ச்சியில் ரஜினி - கருணாநிதி | கோப்புப் படம்.

 

இது மட்டுமா? 1989-ம் ஆண்டு. டிசம்பர் 14-ம் தேதி. ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழா. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, அந்த மண்டபத்தையும் திறந்து வைக்கிறார். அப்போது மேடையில் பேசிய ரஜினியின் பேச்சு ரசிகர்களை மட்டுமல்ல; அப்போதைய அரசியல் தலைகளையும் கூட கனிந்துருகச் செய்துவிட்டது.

''என்னை கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான் என்று சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதை ஆராய்ந்து பார்த்தால்தான் நான் தமிழ்நாட்டுக்காரன் என்பது புரியும். எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். தற்போதும் கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில்தான் உள்ளது. நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி ஒரு தமிழர். நான் ஆன்மிகத்தில் குருவாக வழிபடும் ரமண மகரிஷி அவரும் ஒரு தமிழர்தான். சிவாஜிராவாக இருந்த எனக்கு தமிழ் கற்றுத்தந்து எனக்கு மறுவாழ்வு கொடுத்து என்னை தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னை சினிமாவில் சேரச் சொல்லி ஊக்கப்படுத்தய என் ஆத்ம நண்பர் ராஜ்பகதூர் ஒரு தமிழர். வாழ்நாள் முழுவதும் எனக்கு துணை வருவதாக கூறி என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி. என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை தமிழ். எனக்கு அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப் பெருமக்கள் தமிழர்கள். அப்படியென்றால் நான் யார். நீங்களே சொல்லுங்கள்!'' என கனிந்துருகியதில் கூட்டமே கரைந்தது.

ரஜினி பேசிய பேச்சு இப்படி, அடுத்ததாக முதல்வர் கருணாநிதி பேசியதைப் பாருங்கள். கரையாதோர் மனதையும் கரைக்கும் மட்டுமல்ல. அப்போதே தமிழக அரசியலில் எவ்வளவு தூரம் ரஜினி உட்பொருளாய் நிறைந்திருக்கிறார் என்பதை உணர வைக்கும். கருணாநிதி பேசுகிறார்.

''இங்கே அனைவரையும் அன்புடன் அழைத்து அன்பினைப் பொழிந்து வரவேற்ற அன்புத்தம்பி ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏதோ நான் ஆட்சிப்பொறுப்பில் உள்ள இப்போதுதான் அன்புத்தம்பி ரஜினிகாந்த் என்னிடத்தில் அன்பு கொண்டவர் அல்ல. ஆட்சிப் பொறுப்பில் இல்லாது பல்வேறு அல்லல்களை நான் அனுபவித்துக் கொண்டிருந்தபோதே என்னிடம் மாறாத அன்பு கொண்டிருந்தவர். அதை அவர் எப்போதும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் ரகசியமாக என்னிடத்தில் பாசத்துடன் பழக்கம் கொண்டிருந்தவர். அவருடைய விழாவில் நான் கலந்து கொண்டதை நன்றிப் பெருக்குடன் ஆற்றும் கடமையாக கருதுகிறேன்.

இந்த விழா தொடக்கத்தில் ரஜினிகாந்த் பேசும்போது தனது தந்தை தமிழகத்தில் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர் என்றார். அதைக்குறிப்பிட்டு இங்கே பேசிய நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி, ரஜினிகாந்த் எனது கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்தவர். அதனால் மண்ணின் மைந்தர் என்று குறிப்பிட்டும் பேசினார். மண்ணின் மைந்தர் கொள்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்வதில்லை. ஆனாலும் வாழப்பாடி ராமமூர்த்தி மணணின் மைந்தர் என்று சொன்னதைக் கேட்டதும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிய கணியன் பூங்குன்றனார் நினைவுக்கு வருகிறார். ஏழை எளியோரக்கும் திருமணம் நடத்த இங்கே இடம் அளிக்கப்படும் என்று ரஜினிகாந்த் இங்கே சொல்லியிருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது. இது எனது குடும்ப விழா. இதில் கலந்து கொள்வதில் மீண்டும் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்!'' என்றார் கருணாநிதி.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 15- அண்ணாமலை முதல் ஆர்எம்வீ வரை!

 

 
baatshajpg

'பாட்ஷா' படத்தில் ரஜினி.

1989-ல் ரஜினி அளித்த பேட்டிகளையும், கருணாநிதி பேசிய பேச்சுகளையும் அரசியல் உட்பொருளோடு பொருத்திப் பாருங்கள். ரஜினியிடம் அதே அழுத்தம், மாறாத அதே பிடிவாதம். அதே உள் ஆழம் நிறைத்ததாக தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்த மையப் புள்ளிகளிலிருந்துதான் ரஜினியின் அரசியலும், அதில் உண்டான அரசியல் சர்ச்சைகளும் தொடங்குகிறது. ஏற்கெனவே நான் பார்த்த, 'என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக (தமிழ்) மக்களே!' என்ற ரஜினியின் அரசியலுக்குண்டான முதல் வாக்கியமும் இங்கிருந்தே தொடங்குவதை உணர முடிகிறது.

 

அப்போது அவரின் பத்திரிகை பேட்டிகள், விழா மேடைகளில் தொனித்த அரசியல் அவற்றில் மட்டுமல்லாது, அவர் நடித்த படங்களிலும் இடம் பெறாமல் இருந்ததில்லை. அதுதான் 1995-ல் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் அவரை பகிரங்கமாகப் பேச வைத்தது. அது இயல்பாகவே நடந்தேறியது.

அதில் உச்சமாக வந்ததுதான் 'அண்ணாமலை'. ரஜினியின் திரையுலகத்தில் ஒரு மைல் கல் என பேசப்பட்ட இந்த படத்தில் சில அரசியல் பஞ்ச்களும் இடம் பிடித்திருக்கும். இப்படத்தில் தன் நண்பர் ஜனகராஜுடன் சென்று ஜோசியம் பார்ப்பார் ரஜினி. 'உனக்கு ஒரு பெண்ணால்தான் ஆபத்து!' என்று சொல்வார் ஜோதிடர்.

இதே படத்தில் அரசியல்வாதியாக வரும் வினுசக்கரவர்த்தி அண்ணாமலையின் மாட்டுப்பண்ணையுடன் கூடிய வீட்டை ஆக்கிரமித்து விடுவார். பதிலுக்கு அண்ணாமலை வினுசக்கரவர்த்தி வீட்டிற்கு மாடுகளை ஓட்டிச் சென்று விட்டுவிடுவார். அந்த மாடுகளை அடித்து விரட்டுவர் அரசியல்வாதியின் ஆட்கள்.

அப்போது ரஜினி பேசும் வசனம்: 'என்னை அடிங்க. என்ன வேண்ணா செய்யுங்க. என் மாடுகளை அடிச்சா தெரியும் சேதி. என்னோட பாணியே தனியாக இருக்கும்!' என்பார். அதே சமயம் வினுசக்கரவர்த்தியிடம் அவர் பேசுவார்.

'அரசியல் புனிதமானது. சம்பாதிக்கிறதுக்கு இதை பயன்படுத்தாதீங்க. காந்தி, காமராஜர், அண்ணான்னு மேடையில் எல்லாம் பேசறீங்க. ஆனா பதவின்னு வந்தா அவங்களையெல்லாம் மறந்துடறீங்க!' என்று பொங்குவார். இதையெல்லாம் ரஜினி ரசிகர்கள் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கு சூடு போட்டதாகவே கருதினார்கள்.

'அண்ணாமலை' படம் வெளி வருவதற்கு முன்புதான் மதுரையில் ஒரு ரஜினி ரசிகரை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் கண்மூடித்தனமாக அடித்திருக்கின்றனர். அந்த சமயம் தமிழ்நாடு முழுக்க ரஜினிக்கு மன்றங்கள் பெரிய அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதை கணக்கெடுக்கவோ, வேறு விதமாக கண்காணிக்க சொல்லியோ மேலிடத்திலிருந்து ரகசிய உத்தரவு பரிமாறப்பட்டிருந்திருக்கிறது. அதன் எதிரொலியாகவே அந்த ரசிகர் போலீஸாரால் தாக்கப்பட்டார். மற்ற மாவட்டத்தில் கூட ரசிகர்களுக்கு நெருக்கடிகள் வந்தன. சில இடங்களில் ரசிகர்கள் போராட்டங்களில் கூட ஈடுபட முயற்சித்தார்கள். அப்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைமையிலிருந்து அவசரப்பட வேண்டாம் என்று உத்தரவும் வந்திருந்தது. அதன் பிறகுதான் 'அண்ணாமலை' ஷூட்டிங் நடந்தது. அதில் இந்த பொறி பறக்கும் அரசியல் வசனங்களை வைத்திருந்தார் ரஜினி. அந்த வசனங்கள் ஜெயலலிதாவிற்காகவே வைக்கப்பட்டிருப்பதாகவே எங்களைப் போன்ற ரசிகர்கள் உணர்ந்தோம் என்கிறார் அப்போதைய ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த ரஜினி ரசிகர் ஒருவர்.

''அந்த காலகட்டத்தில் வந்த 'மாப்பிள்ளை', 'பாண்டியன்' என வரும் ரஜினி படங்களை எல்லாம் பாருங்கள் வில்லன் பாத்திரப் படைப்புக்கு பதில் வில்லி பாத்திரப் படைப்பையே உருவாக்கி திரையில் உலவ விட்டிருப்பார். அதுவெல்லாம் ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வே!'' என்று மேலும் பொடி வைத்தார் அந்த ரசிகர்.

1993-ல் வெளிவந்த 'வள்ளி' படத்தில் கூட பல அரசியல் பஞ்ச் வசனங்கள். அதில் ஒன்று, 'அரசாங்கத்துகிட்ட இலவசமா வேட்டி சேலை கேட்காதீங்க. வேலை வெட்டி கேளுங்க!' என்ற வசனம் கூட ரசிகர்களின் பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது. இந்த சூழ்நிலையெல்லாம் தாண்டியே 'பாட்ஷா' படத்தின் விழாவில் அந்த அரசியல் முக்கிய சம்பவம் நடந்தது.

rajini%20rmvjpg

ஆர்.எம்.வீரப்பனை சமீபத்தில் சந்தித்துப் பேசிய ரஜினி. | கோப்புப் படம்.

 

சத்யா மூவிஸ் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' 25 வாரங்கள் ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதன் வெள்ளி விழா 1995 ஜூலை 14-ம் தேதி சென்னை அடையாறு பார்க் ஓட்டலில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர் நடிகையர், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலருக்கும் பரிசுப்பொருட்கள் கேடயம் வழங்கிப் பேசினார் ரஜினிகாந்த்.

'' 'பாட்ஷா' படத்தின் வெற்றிக்கு உரிய பெருமை அதை உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பனையே சேரும். நான் இந்த விழாவில் முக்கியமான பிரச்சினை பற்றி பேசப்போறேன். அது டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு. அது நம் மனதை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அது மட்டுமல்ல. பல இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் சமீபத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழக முதல்வருக்கு (அப்போது முதல்வர் ஜெயலலிதா) என்னுடைய வேண்டுகோளை வைக்கிறேன். வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வாருங்கள். சிங்கப்பூரில் போதை மருந்து வைத்திருந்தால் விசாரணையே இல்லாமல் தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை பிடித்து தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளி கூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்?

தமிழக போலீஸார் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மிகுந்த திறமைசாலிகள். அவர்களுக்கான இடத்தை அவர்களிடமே விடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கிக் காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரமே இல்லாமல் அவர்கள் ஆக்கி விடுவார்கள். இனி தமிழ்நாட்டில் வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாக சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவன் என்ற முறையில் சொல்கிறேன்'' என்றார்.

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எம். வீரப்பன் அப்போது அதிமுக அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார். அவர்தான் ரஜினிகாந்திற்கு கேடயமும் வழங்கினார். ஆனால் அவர் ரஜினி பேச்சுக்கு மறுப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. அதுவே தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த விழா நடந்த பின்பு ஆர்.எம்.வீரப்பன் அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்ல, தமிழகத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கும், ரஜினிக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்தனர் அதிமுகவினர். கண்டன அறிக்கைகள், கொடும்பாவியும் எரித்தனர்.

ஆர்.எம்.வீரப்பனை கட்சி துரோகி என வர்ணித்து அவரை நீக்குங்கள் என கட்சி நிர்வாகிகளே அறிக்கை விடுமளவு சென்றது.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள், 'ரஜினி கட்சி தொடங்க வேண்டும். அதிமுகவினருக்கு பாடம் புகட்ட வேண்டும்!' என்றெல்லாம் கிளர்ந்தெழ ஆரம்பித்தனர்.

ரஜினி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும். அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்களே வெளிப்படையான கோரிக்கை வைத்தனர். அப்படி இதில் என்னதான் நடந்தது? அதை ஆர்.எம்.வீரப்பன் தரப்பே பின்னாளில் வெளிப்படுத்தியது.

'பாட்ஷா' விழாவுக்கு முன்னரே ஆர்.எம்.வீ அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். அதை விழாவுக்கு செல்லும் முன்னரே ஜெயலலிதாவை சந்தித்து சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்றுதான் வந்திருந்தார். 'பாட்ஷா' படத்தயாரிப்பில் தனக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்பதால் முன்வரிசையிலேயே விழாவிற்கு சென்று அமர்ந்திருக்கிறார்.

விழாவுக்கு வந்த ரஜினியோ, ஆர்.எம்.வீ கீழே அமர்ந்திருப்பதை எதேச்சையாக பார்த்துவிட்டே மேலே மேடைக்கு வரும்படி அழைத்திருக்கிறார். இவரும் மேடையில் சென்று அமர்ந்துள்ளார்.

பொதுவாகவே ரஜினி மனசுக்குப் பட்டதை எந்த மேடையானாலும் வெளிப்படையாக பேசக் கூடியவர். அப்படித்தான் அன்றும் வெடிகுண்டு கலாச்சாரப் பேச்சையும் கொளுத்திப் போட்டார். அந்தக் கூட்டத்தில் கடைசியாகப் பேசியவர் ரஜினி என்பதாலும், ஆர்.எம்.வீ பேசுவதற்கு அதற்குப் பிறகு வாய்ப்பில்லை என்பதாலும் அப்படியே அவர் புறப்பட்டு வீட்டிற்கு சென்றும் விட்டார்.

அடுத்த நாள் ஆர்.எம்.வீக்கு போயஸ் கார்டனிலிருந்து 'முதல்வர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்!' என அழைப்பும் வந்திருக்கிறது. ஆர்எம்வீயும் போயிருக்கிறார்.

- பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article22512576.ece

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 16- எப்ப வருவேன்; எப்படி வருவேன்?

 

 
rjpg

ரஜினி | கோப்புப் படம்: ம.பிரபு.

அப்போது அங்கு இன்டர்காமிலேயே பேசியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'என்னை மேடையில் ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கிறார். நீங்க அதைக் கேட்டுகிட்டு சும்மா இருந்திருக்கீங்க?' என்று குற்றப்படுத்தும் தொனியில் பேசியிருக்கிறார்.

ஆர்.எம்.வீயோ தனக்கான சூழ்நிலையை சொல்லி இருக்கிறார். தவிர, 'ரஜினியின் இயல்பு அப்படி. அவர் பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்பவில்லை. கடைசியாக அவர் பேசியதால் கூட்டமும் முடிந்துவிட்டது. அவர் பேச்சுக்கு மறுப்பு சொல்லவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!' என்றெல்லாம் எடுத்துச்சொல்லியும் இருக்கிறார்.

   
 

அதைத் துளியும் பொருட்படுத்தவில்லை ஜெயலலிதா, 'அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கார். நீங்களும் கேட்டுக்கிட்டு இருந்திருக்கீங்க. அவ்வளவுதான், அதுதான் நிஜம்!' என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்துவிட்டார். அதற்குப் பிறகு ஆர்.எம்.வீக்கு முதல்வருடன் பேசவே வாய்ப்பில்லாத போய்விட்டது. திட்டமிட்டபடி அமெரிக்காவுக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அங்கு போய் சேர்ந்த பின்புதான் தமிழ்நாட்டில் ரஜினி பேச்சை வைத்தே தன் அரசியல் வாழ்க்கைக்கு தன் அரசியல் எதிரிகள் ஆபத்து ஏற்படுத்தியதை உணர முடிந்தது. ரஜினிக்கும், தனக்கும் எதிராக அறிக்கைகள், கண்டனங்கள், போராட்டங்கள் வெடிப்பதைப் பார்த்து ஆர்.எம்.வீ அமெரிக்காவிலிருந்தே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

'நான் அமைச்சராக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அவர் எப்போது என்னை வேண்டாம் என்றாலும் நான் போகத் தயாராகவே இருக்கிறேன். இதற்காக போராட்டம் செய்யத் தேவையில்லை!' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின் ஒரு மாதம் கழித்துதான் அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினார் ஆர்.எம்.வீ.

விமான நிலையத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு. வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் ரஜினி மன்ற ரசிகர்கள். அதுவும் பத்திரிகைகளில் பரபர செய்திகளாக வந்தது. ரஜினி புதுக்கட்சி, ஆர்.எம்.வீ திட்டம் என்கிற லெவலில் கூட அதிமுகவில் பேச்சுகள் புறப்பட்டன. அது இன்னமும் பிரச்சினைகளுக்கு நெருப்பு மூட்டியது.

ஆர்.எம்.வீ அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தது ஆகஸ்ட் 15-ம் தேதி. அன்று சுதந்திர தினம். தேசியக் கொடி ஏற்றும் அரசு விழாவில் ஜெயலலிதாவை ஆர்.எம்.வீரப்பன் சந்தித்தார். சுமுகமாகவே அந்த சந்திப்பும் இருந்தது. பின்னர் அவர் உணவுத்துறை அமைச்சர் பொறுப்பை கவனிக்கலானார்.

தன் பேச்சால் அமைச்சர் பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உண்மையிலேயே உணர்ந்து ஆர்.எம்.வீரப்பனின் வீட்டிற்கே சென்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு சென்றார் ரஜினி. இந்த சந்திப்பு நடந்து இரண்டே வாரங்கள். ஆர்.எம்.வீரப்பனுக்கு உணவுத்துறைக்கு பதிலாக கால்நடைத்துறை ஒதுக்கப்பட்டது. இதன் பின்பு அமைச்சர் பொறுப்பிலிருந்தும், அதிமுகவிலிருந்தும் கூட நீக்கப்பட்டார்.

இதன் காரணமாக எம்ஜிஆர் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ஆர்.எம். வீரப்பன் தொடங்கினார்.

இதே காலகட்டத்தில்தான் (1995 அக்டோபர் 23-ம்தேதி) ரஜினியின் அடுத்த வெற்றிப்படமான 'முத்து' வெளியானது. 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவே?ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என்ற அரசியல் பஞ்ச் வசனம் இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். இதே படத்தில் மீனா கதாநாயகி. சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருப்பார்.

muthujpg

'முத்து' படத்தில் ரஜினி.

 

அரங்கில் முதல் வரிசையில் ரஜினி தூங்கிக் கொண்டிருப்பார். தூக்கத்திலேயே தும்முவார். அதில் மீனா எரிச்சலாகி, 'என்னய்யா தும்மிட்டே இருக்கே?' வசனம் பேசுவார்.

'என்னய்யா நாட்டுல தும்மினா கூடவா பிரச்சினை என்பார் ரஜினி. இப்படியாக நீளும் வசனம், 'கீழே உட்கார்ந்துட்டு எது வேண்ணா பேசலாம். மேடையேறிப்பாரு தெரியும்!' என்பார் மீனா. 'நமக்கெதுக்கு அது வேண்டாத வேலை. நான் பாட்டுக்கு இங்கே இருக்கேன்!' என்பார் ரஜினி. பதிலுக்கு அரங்கில் உள்ளவர்கள், 'அவர் ஏறமாட்டார். நம்மதான் ஏத்திவிடணும்!' என சொல்லி மேடையேற்றி விடுவார்கள்.

இந்த காட்சிகள், வசனங்கள் எல்லாம் ஜெயலலிதாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட அரசியலாக கருதினர் ரசிகர்கள்.

இந்த 'முத்து' படம் ரிலீஸ் ஆன பிறகு வந்த ரஜினியின் பிறந்த நாளில்தான் தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள் தமிழகம் எங்கும் கடை விரித்தன. (இதற்குப்பிறகு அதே அளவு பேனர்கள், வாழ்த்து போஸ்டர்கள் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினி அறிவித்த இந்த ஆண்டுதான் இறங்கியிருக்கின்றன).

இந்த காலகட்டத்தில்தான் அரசியல் ரீதியாக மறைமுகமாக ஜெயலலிதா ஆட்சியில் பதவியில் இருந்த அதிகாரிகளால் பல்வேறு இடர்ப்பாடுகளையும் சந்தித்தார் ரஜினி. அதில் ஒன்றாகத்தான் அவர் வீட்டின் விவகாரமும் பத்திரிகை செய்திகளாக கட்டம் கட்டின.

ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு என்பது அனைவருக்கும் தெரியும். 1991-1996 கால கட்டத்தில் (அப்போது விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் காரணமாக, முதல்வருக்கு கடும் பாதுகாப்பும் இருந்தது) எல்லாம் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் செல்லும்போதும், வேறு பகுதிகளுக்குச் செல்லும்போதும் மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்படும். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். ஜெயலலிதா இல்லம் இருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலோ 24 மணி நேரமும் பாதுகாப்பு பலமாகவே இருக்கும்.

afpjpg

ரஜினியின் புகைப்படங்கள்| கோப்புப் படம்: ஏஎஃப்பி.

 

அதேசமயம் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினரைப் பொருத்தவரை, அவர் வீட்டிற்கு வருபவர்களைப் பொருத்தவரை அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தி உடனுக்குடனே வழிவிட்டு வந்தார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். அந்த அளவுக்கு ரஜினி மீதும், அவர் வீட்டிற்கு வருபவர்கள் மீதும் (ரசிகர்கள் உள்பட) மரியாதையும் வைத்திருந்தார்கள். இடையூறும் கொடுக்காமல் இருந்தார்கள். ஆனால் ரஜினியின் வெடிகுண்டு கலாச்சார பேச்சிற்குப் பிறகு, 'முத்து' படம் வெளியான பிறகும் அவர் வீட்டிற்கு வரும் வாகனங்களை உள்ளே அனுப்புவதில் கெடுபிடி கொடி கட்ட ஆரம்பித்தது.

ரஜினியைத் தேடி வரும் ரசிகர் பட்டாளம் தடுக்கப்பட்டது. அதையும் மீறி அங்கே வருபவர்கள், பல்வேறு சோதனைகள் மற்றும் நெருக்கடிக்கு ஆட்பட்டார்கள். ஜெயலலிதா தன் வீட்டிலிருந்து வெளியில் செல்லுவதற்கு முன்னரும், வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் முன்னரும் அரை மணி நேரத்திற்கும் குறையாமல் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அப்படித்தான் ஒரு முறை வீட்டிற்கு வந்த ரஜினிகாந்தின் வாகனம் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் நடந்தே தன் வீட்டிற்குச் சென்றார். இதுவெல்லாம் அந்த காலகட்டத்தில் பத்திரிகைகளில் செய்திகள் ஆகின.

இதையும் தாண்டி அரசாங்க இயந்திரம் ரஜினியின் மீது எந்த மாதிரியான மறைமுகத் தாக்குதல்களை தொடுத்ததோ தெரியாது. ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவரான மூப்பனாரிடம் அழைத்துச் சென்றார்கள்.

1996 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாவிற்கு ரஜினி எதிர்நிலை எடுப்பதற்கு காங்கிரஸ்-திமுக தரப்பில் ஒரு விதமாகவும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் மற்றொரு விதமாகவும் காரணங்களை அடுக்குகிறார்கள். இதில் வெளிப்படையாக இருதரப்பிலும் வெளிப்படும் அரசியல் சங்கதி, 'பாட்ஷா' பட விழா மேடையில் இடம் பெற்ற வெடிகுண்டு கலாச்சாரப் பேச்சையே சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அதற்கும் அப்பால் பல அரண்மனை ரகசியங்கள் இருந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எப்படி?

- பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 17- அண்ணாமலை அரண்மணை ரகசியம்!

rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

''1995-96ல் ஜெயலலிதா எதிர்ப்பு என்பது மக்கள் மத்தியில் ஆழமாகவே இருந்தது. முக்கியமாக முதல்வர் ஜெயலலிதா செல்லும் சாலையில் போக்குவரத்து அரைமணி நேரம், ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ரஜினியே அதனால் பாதிக்கப்பட்டது எல்லாம் வெளிப்படையாக பத்திரிகைகளில் வந்த செய்தி. ஆனால் அதையும் தாண்டி ஏதோ அதி முக்கியப் பிரச்சினைகள் ரஜினிக்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போது அவரிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் அவரை மூப்பனாரிடம் கூட்டிப் போயிருக்கிறார்கள். அவரும், சிதம்பரமும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் ரஜினியை அழைத்து போயிருக்கின்றனர்!'' என்கிறார் அப்போது தமாகா இளைஞர் அணியில் இருந்த பிரமுகர் ஒருவர். இப்போது இவர் அதிமுகவில் இருக்கிறார்.

அவர் மேலும் பேசியது:

 

''தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லை ஜெயலலிதா ஆட்சியின் அராஜகப்bபோக்கும் கட்டுடைத்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா இரண்டாண்டுகளுக்கு முன்பே காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார். எனவே நாம் வரும் தேர்தலில் ரஜினியை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும்'' என்றெல்லாம் சிதம்பரம், மூப்பனார் போன்றோர் கோரிக்கை வைத்ததாகவே சொன்னார்கள். அதற்கு நரசிம்மராவும் ஒப்புக் கொண்டுவிட்டார். அந்த காலத்தில் சோ ராமசாமியும் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிர் மனநிலையில் இருந்தார். அவர்தான், 'காங்கிரஸ் தனித்து நிற்பதன் மூலமும், ரஜினியை முன்னிலைப்படுத்துவதன் மூலமும் ஓட்டுகள் பிரிந்து திரும்பவும் பெரிய கட்சிக்கான அதிமுகவிற்கே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்புகள் இருக்கு. எனவே திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதே சரியானது!' என்ற கருத்தை முன் வைத்துள்ளார். அவரே இரு பக்கமும் தூதுவராக பேசியிருக்கிறார். இதற்கு நரசிம்மராவும் சம்மதித்து விட்டார்.

இதற்கிடையில் என்ன நடந்ததோ? நேரடியாகவே ஜெயலலிதா நரசிம்மராவுடன் பேசி விட்டார். அதனால் தமிழக காங்கிரஸாரின் எண்ணத்தையும் உணர்வுகளையும் மீறி அதிமுகவுடன் கூட்டணி என அறிவித்து விட்டது மத்திய காங்கிரஸ் கமிட்டி. அதை கடுமையாக எதிர்த்தே தமிழக காங்கிரஸ் உடைந்தது. தமாகாவும் உருவானது. அதனையொட்டி பல்வேறு கட்சிகள் ரஜினியின் ஆதரவை கேட்பதில் முனைந்திருந்தன. அந்த சமயத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்தார். நரசிம்மராவ் ஏற்படுத்திய காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டிருந்த ரஜினி அமெரிக்கா செல்லும் முன்னரே, 'என்னுடைய படங்களை எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது. என் ரசிகர்கள் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்தலுக்கு முன்பு அறிவிப்பேன்!' என்று அறிக்கை விட்டுவிட்டே சென்றிருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் மூப்பனார் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்காவில் இருந்த ரஜினியுடன் தொலைபேசியில் மாறி, மாறி தொடர்பு கொண்டு பேசினார்கள். ரஜினியைப் பொருத்தவரை அடுத்தது ஜெயலலிதா ஆட்சி வந்து விடக்கூடாது என்பதில் உறுதிப்பாடுடன் இருந்தார். அதன் நிமித்தம் திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ரஜினி சம்மதித்தார். அதில் சோ ராமசாமியின் பங்கு பெரும்பான்மையாக இருந்தது. இந்தக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு பிரச்சினை வந்தபோது கூட ரஜினியே தலையிட்டிருக்கிறார். அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் இருகட்சியும் சரிபாதித் தொகுதிகளை பகிர்ந்து கொண்டது போலவே சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தலா 117 என பாதி, பாதியாக பிரித்துக் கொள்ளவே பேசப்பட்டது. 1980-ல் இந்திராகாந்தி இருந்தபோது பேசப்பட்ட மாதிரி கூட்டணியில் எந்தக் கட்சி அதிக தொகுதியைப் பிடிக்கிறதோ, அதற்கே முதல்வர் பதவி என்றும் கூட பேசப்பட்டதாக கேள்வி.

அதற்கு திமுக இணங்கவில்லை. ஆனால் மூப்பனார் அதில் உறுதியாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பக்கபலமாக தமாகாவினர் இருப்பதையே அவர் விரும்பினார். அவரைப் பொருத்தவரை திராவிடக்கட்சிகளின் ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருந்தது. அதற்கு ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை. திமுக தலைவர் கருணாநிதி ரஜினியுடன் பேசியிருக்கிறார். அவர் கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே இத்தனை தொகுதிகளும், தமாகாவுக்கு இத்தனை தொகுதிகளும் என முடிவெடுத்து மூப்பனாரிடம் பேசியிருக்கிறார். அதன் பிறகே மூப்பனார் அந்த தொகுதி பங்கீட்டிற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் அன்றைக்கே காங்கிரஸ் தலைவர் ஒருவர் தமிழக முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது!'' என்கிறார் அந்த காங்கிரஸ் பிரமுகர்.

rajini1jpg
 

இந்த சமயத்தில்தான், ''நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, அரசியல்வாதி ஆகணும் என்றோ எப்போதுமே நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. திடீரென்று அரசியலுக்கு வாங்கன்னு சொன்னா அதை என்னால ஏத்துக்கவும் முடியாது. எந்த ஒரு வேலைன்னாலும் அதை ஒழுங்கா, கரெக்டா செய்யணும்னு நினைப்பேன். தனி ஒரு மனிதனால் எந்த நாட்டையும் திருத்தி விட முடியாது. நம் நாட்டை திருத்தணும்ங்ற உணர்வு இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் வரணும்!'' என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் ரஜினி. அவை ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது. அதை ஒட்டித்தான் ''எனக்கு பதவி மீது ஆசையில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தேன்னா 1996ல் பதவி என்னைத் தேடி வரும்போதே அதை அனுபவித்திருக்க முடியும்!'' என்று சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் ரஜினி என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையே ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் மாற்றிப் பேசுகிறார்கள்.

''1992-வது வருஷம் 'அண்ணாமலை' படம் உருவான போதே ஜெயலலிதா எதிர்ப்பு என்பது ரஜினியிடம் உருவாகிவிட்டது. அதற்கு காரணம் அப்போதே ரஜினிக்கு எந்த அளவு செல்வாக்கு? எதற்கு அவருக்கு இத்தனை ரசிகர் மன்றங்கள், அந்த மன்றங்களை உருவாக்குபவர்கள் எந்த மாதிரியான அரசியல் பின்புலங்கள் உள்ளவர்கள் என்பதையெல்லாம் தமிழக போலீஸின் உளவுப் பிரிவு சர்வே செய்ய ஆரம்பித்து விட்டது. அதில் ஜெயலலிதா உவகை கொள்ளும்படியான தகவல்கள் இல்லை. எனவேதான் ரசிகர்கள் மீதான நெருக்கடிகளை போலீஸ் செய்ய ஆரம்பித்து. மதுரையில் மட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் மீது தாக்குதல்கள், பொய் வழக்குகள் என்பது தவிர்க்க முடியாததாகி வந்தது.

அதில் வெகுண்டே அவர் 'அண்ணாமலை'யில், ''என்னை எதுவேண்ணா செய்யுங்க. என் மாட்டு மேல கைவச்சீங்க. என் பாணியே தனியா இருக்கும்!'' என்ற பஞ்ச் வசனத்தை அரசியல்வாதி வினுசக்கரவர்த்திக்கு எதிராக வைப்பதும் நடந்திருக்கிறது.

அதே சமயம் அவருக்கு அரசியல் ஆசை என்பது அப்பவும் சரி, 1996லும் சரி இல்லவேயில்லை. அதை ரசிகர்களாகிய நாங்கள்தான் விரும்பினோம். வெளிப்படையாகச் சொன்னால் 1996 தேர்தலின் போது ரஜினிதான் எல்லாம் என்பதில் திமுகவும், தமாகாவும் தீவிரமாக இருந்தது. 'ரஜினி ரசிகர்கள் சிலருக்கு மட்டுமாவது இரு அணிகளிலும் சீட் கேட்கலாம். தலைவரிடம் கேளுங்கள்' என்றோம். தமாகா, திமுக சைடில் தலா 10 தொகுதிகள் கொடுத்தால் நம் மன்றங்களையே நம்பியிருக்கும் மூத்த ரசிகர்கள் சிலரின் அரசியல் வாழ்வு மலருமே என்றும் கேட்டுப் பார்த்தோம். அதை சத்தியநாராயணாவிடமும் சொன்னோம். அவரும் அந்த விஷயத்தை ரஜினியிடம் கொண்டு போயிருக்கிறார்.

அதைக் கேட்டு ரொம்பவுமே கோபப்பட்டு விட்டாராம் ரஜினி. 'ஒரு சீட்டு மட்டுமில்லை. தேர்தல் பணியாற்றுவதற்காக எந்த பிரதிபலனும் நம் ரசிகர்கள் அரசியல் கட்சிகளிடம் கேட்கக்கூடாது. எதிர்பார்க்கவும கூடாது. அப்படி யாராவது எதிர்பார்த்து பலன் அடைஞ்சா என்னுடைய நடவடிக்கை கடுமையா இருக்கும்னு கூட எச்சரிச்சிருக்கார். அந்த தேர்தலின்போது ரசிகர்கள் நிறைய பேர் அதிமுகவில் இருந்தனர். அவர்கள் எல்லாம் கட்சியை விட்டுவிட்டு வந்து திமுக, தமாகாவுக்கு தேர்தல் வேலை செய்தனர்!'' என்று 1996-ம் ஆண்டு அரசியலை நினைவு கூர்கிறார் கோவையை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர்.

- பேசித் தெளிவோம்...

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 18 - கோவை குண்டுவெடிப்பு எதிர்வினை

 

 
rajinijpg

ரஜினி | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.

1996 மே மாதம் தமிழக சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடந்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணியும், திமுக-தமாகா அணியும் இரண்டு பெரும் பிரிவுகளாக போட்டிக் களத்தில் இருந்தன.

நரசிம்மராவை 2 முறை சந்தித்துப் பேசியும், அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததில் அதிருப்தியுற்று, திரும்ப ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் படைத்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்ற கமெண்ட்டை உதிர்த்து விட்டு, இமயமலைக்குச் சென்றுவிட்டார் ரஜினி. அதன்பிறகு சென்னை திரும்பியவர், 'தன்னுடைய படங்களை எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது; என் ரசிகர்கள் வரவிருக்கும் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தேர்தலுக்கு முன் அறிவிப்பேன்!' என்று அறிக்கை விட்டார்.

 

பிறகு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்காவில் இருந்த ரஜினியுடன் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசினார்கள். திமுக தலைவர் கருணாநிதியும், தமாகா தலைவர் மூப்பனாரும் பல முறை பேசியதாக செய்தி வெளியானது. தொடர்ந்து இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார் ரஜினி.

அன்றைய தேர்தலில் முக்கிய ஹீரோவாக சன் டிவி இடம் பிடித்தது. 1977களில் எப்படி எம்ஜிஆரின் வெற்றிக்கு அகண்ட திரை முன்னின்றதோ, அதேபோல் 1996 தேர்தலுக்கு சின்னத்திரை பிரச்சாரம் குறிப்பாக சன்டிவியின் தேர்தல் பிரச்சாரம் பெரிய அளவில் திமுக-தமாகா கூட்டணிக்கு பயனானது.

திமுக -தமாகா ஆதரவையும், கருணாநிதி-மூப்பனார் ஆகிய இரண்டு தலைவர்களின் அனுபவம், அவர்களின் அரசியல் சாதுர்யம், அது எந்த அளவுக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பது குறித்தெல்லாம் தொலைக்காட்சியிலேயே பேசினார் ரஜினி. அதற்காக திமுக-தமாகா கூட்டணியை ஆதரிக்குமாறு பகிரங்கமாகவே மக்களை கேட்டுக் கொண்டார்.

இந்தத் தேர்தலில் திமுக 167 இடங்களிலும், தமிழ்மாநில காங்கிரஸ் 39 இடங்களையும் கைப்பற்றியது. பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவே தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வெற்றிக்கு மூலகாரணம் ரஜினிதான் என்று பரவலாக பேச்சு எழுந்தாலும், ரஜினி வாய்ஸ் கொடுக்காவிட்டாலும் ஜெயலலிதாவின் மீது இருந்த எதிர்ப்பலை திமுகவை ஜெயிக்க வைத்திருக்கும் என்றும் சர்ச்சைகளை சில அரசியல் நோக்கர்கள் கிளப்பினர்.

அதே சமயம் ரஜினியின் ஆதரவு தமாகாவை முன்வைத்தே திமுகவுக்கும் இருந்தது. ரஜினியின் அசலான தலைவர் மூப்பனார். அசலான கட்சி தமாகா, அவரின் அசலான சின்னம் சைக்கிள், அண்ணாமலை சைக்கிள் என்றும் பேசினர் தமாகாவினர். ரஜினியை சொந்தம் கொண்டாடுவதில் அப்போதைய தமாகா இளம் தலைவர்கள் விடியல் சேகர், டாக்டர் செல்லக்குமார், திருச்சி அடைக்கல்ராஜ் போன்றோர் முதன்மை வகித்தனர்.

இந்த அணிக்கு ஆதரவாக ரஜினியை இழுப்பதில் முக்கிய பங்கு வகித்த மூப்பனார், ப.சிதம்பரம் ஆகியோர் இந்த விஷயத்தில் அமைதி காத்தாலும், இவர்கள் பிரிந்து வந்த காங்கிரஸ் தரப்பில் ரஜினி குறித்த ஒருவித பதற்றமும் இருந்து வந்ததைக் காண முடிந்தது. காங்கிரஸ் அணியில் இருந்த தங்கபாலு, ஆர்.பிரபு போன்றவர்கள் 1996 தேர்தலுக்குப் பிறகு ரஜினி குறித்த எந்த கேள்வி கேட்டாலும் போதும், 'நோ கமெண்ட்ஸ், ரஜினி என் நெருங்கிய நண்பர்!' என்றே பேட்டிகளில் சொல்லத் தொடங்கிய அரசியல் காலமாக அது இருந்தது.

திமுக-தமாகா வெற்றியை எந்த இடத்திலும் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை ரஜினி. மாறாக இந்த வெற்றியின் பிரார்த்தனையோ என்னவோ ஏழைப்பெண்கள் 20 பேருக்கு தன் சொந்த செலவில் 1997-ல் திருமணம் நடத்தி வைத்தார். அவர்களுக்கு மூன்று பவுன் தங்கம், சீர் வரிசைகள் வழங்கியதோடு, தனிக்குடித்தன செலவுக்கு ஜோடிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கினார். இது எல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு 'அரசியல் டானிக்' போலானது.

moopanarjpg

கருணாநிதியுடன் மூப்பனார் | கோப்புப் படம்.

'எந்த நேரத்திலும் தலைவர் புதுக்கட்சி ஆரம்பிப்பார். அதில் நிச்சயம் தங்களுக்கான இடமும் இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் தமாகா உருவாக்கம், தேர்தல் சின்னமான 'அண்ணாமலை' சைக்கிள் என பெரிதும் நம்பினார். அதனால் பல கட்சிகளிலிருந்தும் தமாகாவிற்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. அதிலும் அதிமுகவிலிருந்த ரஜினி ரசிகர்கள் கூட இக்கட்சியை நாக்கி வர ஆரம்பித்தனர். அல்லது அதிலிருந்து விலகி திமுக-தமாகா கட்சிகளின் அனுதாபியாகவும் மாறினர். என்றாலும் ரஜினி சைடில் நோ ரியாக்ஷன்.

குறிப்பாக 1996 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து அடுத்த மக்களவைத் தேர்தல் 1998 பிப்ரவரியில் நடந்தது வரையிலான கால இடைவெளியில் அரசியலில் ரஜினி என்ற கதைகள் நிறைய பேசப்பட்டன. என்றாலும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரஜினி அரசியலுக்காக வாய் திறந்தார். அதையொட்டி சில ஆச்சர்ய, அதிர்ச்சிகர சம்பவங்களும் மற்ற அரசியல் முகாம்களில் நடந்தன.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் கோவையில் நிகழ்ந்தது. 1998 பிப்ரவரியில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து பிரச்சாரத்தில் இறங்கியிருந்தது. அதற்கு முன்னோட்டமாக அதிமுக ஒரு மாநாட்டையும் நடத்தி முடித்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஒரு அதிமுக பிரமுகர் ஜெயலலிதா முன்னிலையிலேயே ரஜினி குறித்து இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அவர் அந்நிகழ்வில் ரஜினிக்கு எதிராக கண்டன கவிதை ஒன்றையும் வாசித்தார். அதற்கு எதிர்நிலை எடுத்து ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் ஜெயலலிதாவுக்கு எதிரான போஸ்டர்களை ஒட்டினர். கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்., கூட்டங்களும் நடத்தினர்.

இந்த நேரத்தில் 08.01.1998 அன்று வியாழன் இரவு 12.30 மணி வாக்கில் கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை ஒட்டி அப்போதைய எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ஜி.ரவீந்திரனின் கார் ஒன்றும் எரிந்தது. இதே காலகட்டத்தில் கோவை மாநகர வீதிகளில் ஜெயலலிதாவுக்கு எதிரான கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

குறிப்பாக ரஜினியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஒரு போஸ்டர் இந்த அதிமுக அலுவலக வாசலின் எதிர்புற சுவற்றிலும் ஒட்டப்பட்டிருந்ததுதான் கூடுதல் சுவாரஸ்யம். அதில் 'எச்சரிக்கை. எச்சரிக்கை. எம் தலைவன் வாய் திறந்தால் வையகமே கொதித்தெழும். ஜெயலலிதாவே மன்னிப்புக் கேள்!' இவண் தனிக்காட்டு ராஜா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், நீங்காத இதயம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படி ஒட்டப்பட்ட ரஜினி ரசிகர் போஸ்டரையும், வீசப்பட்ட பெட்ரோல் குண்டையும் இணைத்துத்தான் போலீஸ் தன் விசாரணையை தொடங்கியிருந்தது.

அப்போது நான் கல்கி நிருபராக இருந்தேன். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து அதிமுகவின் அப்போதைய கோவை மாநகரச் செயலாளர் மலரவனிடம் பேசினேன். 'இது ரஜினி ரசிகர்கள் செய்தது அல்ல!' என்றே அவர் விளக்கங்களை அளித்தார்.

''நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதுதான் பிரச்சினை என்றால், அதற்கு ரசிகர்கள் அதிருப்தி காட்ட வேண்டுமென்றால் சில வகுப்புவாத சக்திகள் கூட்டு சேர்ந்து ஒரு மாநாடு நடந்து 15 நாள் கழித்து இதைச் செய்ய வேண்டியதில்லை. மதவாத அமைப்புகள் எதையும் உடனுக்குடனே செய்யக்கூடியவை. ரஜினி ரசிர்களையும் கூட அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. எதையும் உடனுக்குடன் துடிப்புடன் செய்துவிடுவார்கள். மாநாட்டில் கவிதை வாசித்ததற்கு கண்டனம் தெரிவித்த (ஜெ.வுக்கு எதிரான வாசகங்கள் உள்ள) வால்போஸ்டர் கூட அவர்கள் ஒட்டியதல்ல என்பதுதான் எங்கள் அபிப்ராயம்.

எப்படியென்றால் ரஜினி ரசிகர்களாக இருந்தால் தமிழ்நாடு முழுக்க ஒரு நேரத்தில் போஸ்டர் அச்சடித்து ஒட்டியிருப்பார்கள். கவிதை வாசிக்கப்பட்ட மறுநாளே இது நடந்து முடிந்திருக்கும். அது நடந்து ஒரு வாரம் கழித்து ஒவ்வொரு மாவட்டமாக ஆற அமரத்தான் செய்திருக்கிறார்கள் என்றால் இது யாருடைய வேலையாக இருக்கும்? எனவே இதை ரஜினி ரசிகர்கள் செய்திருக்கவே முடியாது.

உதாரணமாக கோவையில் அபு என்ற ரஜினி ரசிகர் ஒட்டிய போஸ்டரில், 'தலைவா நீ ஆணையிடு. அதிமுகவை அழித்துக் காட்டுகிறோம்' என்று ஒரு வாசகம் உள்ளது. இந்த அபுவின் அப்பா ஏ.எம்.சையது முகம்மது போட்டி அதிமுக (நால்வர் அணி) காரர். அவர் மகன் ரஜினி ரசிகர் பெயரில் போஸ்டர் ஒட்டுவது மற்றவர்களுக்கு எப்படியோ எங்களுக்கு வேடிக்கையாக உள்ளது!'' என்றார் மலரவன்.

இந்த ஒரு சம்பவம் மற்றும் கட்சி நிர்வாகியின் வெளிப்பாடு என்பது அப்போது அதிமுக நிர்வாகிகள் கூட, அதுவும் தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு எதிராகவோ, ரஜினியை பெரிதுபடுத்தவோ அப்போது விரும்பவில்லை என்பது தெளிவாக உணர்த்தியது. அதிலும் ரஜினியை பற்றி உச்சரிக்கவே கூடாது என்பது எதிரணியில் கூட எழுதப்படாத கட்டளையாகவே இருந்து வந்திருக்கிறது.

ரஜினி ரசிகர்கள் இதை செய்திருக்கவே முடியாது என்று இதைப்பற்றி அதிமுகவினர் சொன்னதற்கு சரியாக ஒரு மாதம் கழித்துதான் கோவையில் அத்வானி வருகையின் போது தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டு வெடிகுண்டுக்கு பதறிப்போய் ஜெயலலிதா ஆட்சியை கண்டம் செய்து மேடையில் பேசின ரஜினி, தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என்று அப்போது கொதித்த அதே ரஜினி, கோவை குண்டுவெடிப்புகளின் பெரும் கொடூர சம்பவத்தின் பின்னணியில் பல அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டதன் அவல சூழலில், 'கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது!' என்று அரசியல் வாய்ஸ் கொடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த வாய்ஸ் ரஜினிக்கு எதிராக அவர் ரசிகர்களையே புறப்பட வைத்தது. அதை தன் அரசியலுக்கு பாஜகவும், அதிமுகவும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் செய்தது.  

- பேசித் தெளிவோம்!  

http://tamil.thehindu.com/opinion/blogs/article22629838.ece

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 19 -கோவை தொடர் குண்டுவெடிப்பின் பின்னே...

 

 
rajini2

ரஜினி | கோப்புப் படம்.

1998 பிப்ரவரி மாத இறுதியில் நடந்த மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை ரஜினி திமுக-தமாகா கூட்டணியையே ஆதரித்தார் ரஜினி. என்றாலும் வெளிப்படையான அரசியல் வாய்ஸ் எதுவும் தரவில்லை அவர். அதே சமயம் 1996 தேர்தலில் ரஜினி வாய்ஸின் தாக்கத்தை ஜெயலலிதாவும் மறக்கவில்லை. 'சோ'வின் பங்களிப்பின் எதிர்நிலையும் அவரிடம் அப்போது உக்கிரமாய் கனன்றது.

உதாரணமாக 1998 மக்களவைத் தேர்தலின் அதிமுக வேட்பாளர் பட்டியலை 1998 ஜனவரி கடைசி வாரத்தில் அதிமுக தலைமைக் கழகத்தில் வெளியிட்டார் ஜெயலலிதா.

 

பத்திரிகையாளர்களுக்கு அப்போது பேட்டி அளித்த ஜெயலலிதா சோ பற்றிய ஒரு கேள்விக்கு, 'நான் தவறு செய்தேன் என்று சொல்ல சோ ஒன்றும் நீதிபதி அல்ல!' என்று வெடுக்கென்று பதிலளித்தவர், 'தினம்தினம் குண்டு வெடிக்கிறது. பஸ் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் அந்த நடிகர் ஏன் வாய் திறக்கவில்லை?' என்று ரஜினியின் மீது வலுக்கட்டாயமாக பாய்ச்சலும் காட்டினார்.

இந்த செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆனால் ரஜினியிடம் நோ ரியாக்ஷன். என்றாலும் ஜெயலலிதா தினம்தினம் குண்டுகள் வெடிக்கிறது என்று சொன்ன சொல்லுக்கு அர்த்தம் இருந்தது. தினம்தினம் அல்ல, கோவையில் ஒரே நாளில் தொடர் குண்டுகளே வெடித்தது.

இந்தியாவிலேயே கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் போல் ஒரு நடுநடுங்க வைக்கும் துயர சம்பவம் வேறு எங்கும் நடந்ததில்லை என்பதை இன்றளவும் அரசியல் நோக்கர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

1998 பிப்ரவரி 14-ம் நாள் மாலை கோவை ஆர்.எஸ்.புரம் மைதானத்தில் பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான அத்வானி பேச இருந்த மேடைக்கு அருகில் ஆரம்பித்து, இங்கிருநு்து கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தொலைவுக்குள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர், உலக சரித்திரத்திலேயே இல்லாத விதமாய் மக்கள் நோய்தீர்க்க வரும் மருத்துவமனை வளாகத்திலேயே குண்டுகள் வெடித்து பலர் பலியாகினர் என்பதையெல்லாம் வரலாறு பதிவு செய்துள்ளது.

1997 நவம்பரில் நடந்த காவலர் செல்வராஜ் கொலை, அதையொட்டி நடைபெற்ற கலவரச் சூழல், அதில் கொல்லப்பட்ட 19 இஸ்லாமியர்கள், அதற்கு போலீஸ் நடவடிக்கையில் மெத்தனப் போக்கு ஆகியவையே இஸ்லாமிய அமைப்புகளில் ஓரிரு பிரிவினரின் ஆவேசத்திற்கு காரணமாக அமைந்தது. அதுவே இப்படியொரு குண்டுவெடிப்பு சூழலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த உடனே இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை அறிந்து கைது நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க ஆரம்பித்துவிட்டது. பதுக்கப்பட்ட குண்டுகள், வெடிக்கத் தயாராக இருந்த குண்டுகள் என பலவும் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இந்த அசாதாரண சூழலின் போதுதான் 1998 மக்களவைத் தேர்தலும் நடந்தது. வரலாறு காணாத அளவு வெங்காய விலை உயர்ந்து கிடந்த அந்த காலகட்டத்தில் போகிற மேடைதோறும் அதைப் பற்றியே தாய்மார்களிடம் பிரச்சாரம் செய்து தன் கூட்டணிக்கான ஆதரவை (பாஜக-அதிமுக கூட்டணி) பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு, வெங்காயத்திற்கு பதிலாக இந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் கிடைத்துவிட்டன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு பெருகும் என உறுதிபட கணித்தனர் அக்கூட்டணிக் கட்சி தலைவர்கள்.

இந்த சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் கருணாநிதி-மூப்பனார் மற்றும் அப்போதைய ஆளும்கட்சி கூட்டணித் தலைவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசிப்பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை நான்கரை மணி வாக்கில்தான் செல்போன் மூலம் மேடையில் இருந்த முரசொலி மாறனுக்கு முதல் தகவல் வந்தது.

முகம் மாறிய மாறன் அதை ஆற்காட்டாரிடம் சொல்ல, 'இந்த அதிர்ச்சியான செய்தியை முதல்வரிடம் நான் சொல்ல மாட்டேன்!' என்று அவர் ஜகா வாங்க, பின்னர் முதல்வரின் உதவியாளர் சண்முகநாதனுக்கு சொல்லப்பட்டது. அவரும் அதை சொல்ல யோசிக்க, கடைசியில் அப்போதைய காவல்துறை ஆணையர்தான் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்.

அந்தச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த முதல்வர் கருணாநிதியிடம் அங்கிருந்து நேரடியாக கோட்டைக்கு வண்டியை விடச் சொல்லி விட்டார். அதன் பிறகு கோட்டையில் நடந்த ஆலோசனைகள், அதிகாரிகளுக்கு போடப்பட்ட உத்தரவுகள், தேர்தல் சமயத்தில் இதை எப்படி எதிர்கொள்வது என எடுக்கப்பட்ட அரசியல் வியூகங்கள் எல்லாமே அரண்மனை ரகசியங்கள்.

குண்டு வெடிப்புக்கு இரண்டாம் நாள் கோவையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் காண முதல்வர் கருணாநிதியே நேரடியாக வந்தார். அவர் வரும்போது கூடவே மூப்பனாரும் இருந்தார். குண்டு வெடித்த இடங்களில் ஒன்றான கோவை அரசு ஆஸ்பத்திரி அப்போது போர்க்களம் போல் காட்சியளித்தது. ஒரு பக்கம் குண்டு வெடிப்பு பாதிப்பு. இன்னொரு பக்கம் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சூழல். அதே ஆஸ்பத்திரியிலும் குண்டு வெடித்ததால் அலறி அடித்து சிகிச்சை பெற வந்தவர்களும் ஓடிப்போன கொடுமை. தனியார் ஆஸ்பத்திரிகளை தேடி அலைந்த அவலம் என சகல குரூர காட்சிகளும் அரங்கேற்றம் காண சில நிமிடம் கூட அங்கே கருணாநிதியும்-மூப்பனாரும் சேர்ந்தாற் போல் நிற்க முடியவில்லை.

அந்த இடத்தில் கதறி அழுத மக்களுடன் மக்களாக கரைந்து அழுதார் முதல்வர். அதிலும் அங்கிருந்த மருத்துவர்களும், பயிற்சி நர்ஸ்களும், மருத்துவமனை ஊழியர்களும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்; இல்லாவிட்டால் இங்கே பணிபுரியவே முடியாது! என கத்திக்கூப்பாடு போட்டது கருணாநிதியை அப்செட் ஆக்கியது. அந்த இடத்திலும் முண்டியடித்த கட்சிக்காரர்களை கடிந்து கொண்டார். கோவையில் இப்படியொரு சூழல் இருக்கிறது என்பதை அவர்கள் யாருமே தெரியப்படுத்தவில்லை என்கிற கோபமும், வெப்பமும் அவரிடம் இருந்ததை காண முடிந்தது.

rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

 

இரண்டரை மாதத்திற்கு முன்பு நடந்த டிசம்பர் கலவரத்தின் போது நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத முதல்வர் இதற்கு வந்ததற்கு தேர்தல்தான் காரணம். அதிலும், 'கோவையில் நவம்பரில் கலவரம் நடந்தது. 19 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதில் பலருடைய உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. வந்தாரா கருணாநிதி? ஆறுதல் கூறினாரா கருணாநிதி?' என்று ஏற்கெனவே பிரச்சாரத்தில் கடுமையாக சாடியிருந்தார் ஜெயலலிதா.

இனி இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு மேடைதோறும் எப்படியெல்லாம் வார்த்தைகளை உதிர்ப்பாரோ என்ற கவலை திமுக, தமாகா தலைவர்களிடம் அப்போது குடிகொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கருணாநிதி கோவை வரும் முன்னரே இந்த தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக அல்உமா, ஜிகாத் கமிட்டி ஆகிய அமைப்புகளை தமிழக அரசு தடை செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான பலரையும் தேடித்தேடி கைது செய்து கொண்டிருந்தனர்.

அந்த வேகத்தில் அமெரிக்காவிலிருந்து ரஜினி தானாக வந்தாரோ, வரவழைக்கப்பட்டாரோ நிச்சயம் தெரியாது. வந்த வேகத்தில் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

இயக்குநர் மணிரத்னம் வீட்டு ஒற்றை வெடிகுண்டுக்கே 'வெடிகுண்டு கலாச்சாரம்' என மேடையில் முழங்கியவர், இந்த விஷயத்தில் கடும் கொந்தளிப்பையே வெளிப்படுத்துவார். அதிலும் இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு நிலை எடுப்பார்; அல்லது திமுக-தமாகா ஆதரவு நிலையை விடுத்து நடுநிலை வகித்து விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மாறாக, 'நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது!' என அதிரடி கிளப்பினார்.

கூடவே, 'இனியொரு குண்டு வெடிப்பு தமிழகத்தில் நடக்காது. நடக்கவும் விடமாட்டார் கருணாநிதி. அப்படி மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்தால் கருணாநிதியே பதவியை ராஜினமா செய்து விடுவார்!' என்று உத்தரவாதம் வேறு கொடுத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் தொலைக்காட்சியில் தோன்றி 1996 போலவே 1998லும் திமுக- தமாகாவை ஆதரிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

இது பாஜக மற்றும் பிற இந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிமுகவிலிருந்து வெளியேறிய ஒரு பிரிவு ரஜினி ரசிகர்களுக்குள்ளும் அதிருப்தியைக் கிளறிவிட்டது. இது ரஜினியின் பேச்சு அல்ல. திமுகவும், தமாகாவும் சேர்ந்து தூண்டி விட்ட பேச்சு. அவர்களே வெளிநாட்டிலிருந்து ரஜினியை கட்டாயமாக வரவழைத்து இப்படியொரு பேட்டியை கொடுக்க வைத்து தங்களுக்கான தேர்தல் கால அரசியலில் ஆதாயம் தேடிக் கொண்டனர் என்றெல்லாம் வெளிப்படையான கண்டனங்கள் வெளிவந்தன. இந்த கண்டனக் குரலுக்கு சொந்தக்காரர்கள் பலரும் ரஜினியை எதிர்த்துப் போராட்டம் செய்யவும் தொடங்கினர்.

குறிப்பாக ரஜினி ரசிகர்கள் பெயராலேயே இந்தப் போராட்டங்கள் எல்லாம் நடந்தது. கொடும்பாவி எரிப்பு, செருப்பு மாலை போடுவது, ரசிகர்கள் மன்றத்திலிருந்து இத்தனை பேர் விலகல், ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைப்பு என்றெல்லாம் செய்திகள் இறக்கை கட்டிக் கொண்டன. 'ரஜினிக்கு செல்வாக்கு கிடையாது. ரஜினிக்கு அரசியல் தெரியாது!' என்றெல்லாம் மேடைகளில் பேசித் தீர்த்தனர் அதிமுக-பாஜகவினர்.

இந்த அமளியில் திமுக தரப்பிலும் ரஜினி பேச்சில் ஒரு தர்மசங்கடமான நிலை நிலவியது. அதாவது, 'மீண்டும் தமிழகத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் கருணாநிதியே ராஜினாமா செய்து விடுவார்!' என்று ரஜினி சொல்லிவிட்டாரே! என்ன செய்வது?

பத்திரிகைகள் பலவும் அந்த வார்த்தைகளை உச்சரித்தது, உச்சரித்தபடியே அச்சேற்ற, 'ராஜினாமா செய்து விடுவார்' வார்த்தைகளை பயன்படுத்தாமல், 'எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்கு (கலைஞருக்கு) தெரியும்' என்று பேட்டியை மாற்றி வெளியிட்டிருந்தது திமுகவின் செய்தி பிரகடன ஏடான முரசொலி.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/opinion/blogs/article22660853.ece

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 20 - வீரப்பன் வடிவில் வந்த வில்லங்கம்

 

 
ptijpg

நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியை கவுரவிக்கிறார் ஜெயலலிதா | கோப்புப் படம்.

1998 பிப்ரவரியில் நடந்த மக்களவைத் தேர்தலில் ரஜினி ஆதரித்தும் திமுக-தமாகா கூட்டணி தோல்வியை சந்தித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக அளவில் அதிமுக-18, பாமக-4, மதிமுக-3, ஜனதா கட்சி-1, தமிழக ராஜீவ் காங்கிரஸ்-1 என மொத்தம் 30 இடங்களை வென்றது. ஐக்கிய முன்னணியில் இருந்த திமுக-5, தமாகா-3, சிபிஐ-1 ஆகியவை 9 இடங்களைப் பிடித்தன.

மத்தியில் ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெற்றது. இந்த ஆட்சி நடந்த 13 மாத காலமும் தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை தொடர் குண்டு வெடிப்பும், அதை ஒட்டி தீவிரவாதச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு காவல்துறை ஒடுக்கும் செயல்களுமே முக்கிய இடம் பிடித்தன.

   
 

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த வேகத்தில் ரஜினியின் குண்டுவெடிப்பு வாய்ஸும் பெரும் சர்ச்சைகளில் அகப்பட்டது. அவர் கொடுத்த குண்டு வெடிப்பு வாய்ஸ் காரணமாக ஏராளமான ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டதாகவும் செய்திகள் அவ்வப்போது வந்தபடி இருந்தன. என்றாலும் அதற்குப் பின்பு சுத்தமாக அரசியல் மவுனியானார் ரஜினி.

1998 மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த வந்த அதிமுக 13 மாதத்தில் தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. அதனால் மத்தியில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியதும், திமுக அதில் கூட்டணி கொண்டது.

இதனால், மூன்றாண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த திமுக-தமாகா கூட்டணி உடைந்தது. பிறகு 1999 செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி காணப்பட்டது. திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, சு.திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர் அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதனை எதிர்த்து அதிமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. தமிழகத்தைப் பொருத்தவரை இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றன. இவை தவிர இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் கட்சிகளும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தன.

இவை தவிர தமாக-விடுதலைச் சிறுத்தைகள்-புதிய தமிழகம் கூட்டணியும் களத்தில் இருந்தது.

1998 தேர்தலில் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணியிலோ என்னவோ எந்த இந்த தேர்தலில் எந்த ஓர் அரசியல் நிலைப்பாட்டையும் ரஜினி வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியுடனும், தமாகா தலைவர் மூப்பனாருடனும் இணக்கமான நட்புடனே செயல்பட்டு வந்தார் ரஜினி. அதை சில சம்பவங்களே ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியது.

1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பே (1999 தமிழ் புத்தாண்டின் போது) 'படையப்பா' திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை ரஜினியுடன் பார்த்துவிட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, 'படையப்பா! அனைத்து சாதனைகளையும் உடையப்பா!' என வாழ்த்தினார். அதற்கு முன்பே 1997 ஏப்ரல் 10-ம் தேதி வெளியான ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை பார்த்து விட்டும், 'தம்பி ரஜினிகாந்த் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்!' என்று தன் ஆதரவை ரஜினிக்கு தெரிவித்திருந்தார்.

எனவே திமுகவினர் ரஜினியை முன்னிறுத்தியது மட்டுமல்ல, ரஜினி ரசிகர்கள் கூட திமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். குறிப்பாக 'படையப்பா' படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி பாத்திரத்தை ஜெயலலிதாவாக கருதி தன் நரம்புகளை முறுக்கேற்றி விட்டுக் கொண்டனர்.

padaiyappajpg

'படையப்பா' படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணன்.

 

அதிலும், 'நீ ஒரு தடவை ஜெயிச்சுட்டே, நான் இப்ப முழிச்சுட்டேன்!' என்று கடைசியாக ரஜினி, ரம்யா கிருஷ்ணனைப் பார்த்துப் பேசும் வசனத்தை ஜெ.வை மனதில் நிறுத்தி ஆகர்சிக்கவே செய்தார்கள். 1996 அரசியல் வாய்ஸுக்கு பின்பு வெளியான 'அருணாச்சலம்' 37க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 100 நாட்களை கடக்க, அதில் சில தியேட்டர்களில் 200 நாளையும் கடந்து வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது.

அதே சமயம் 1998 குண்டுவெடிப்பு சம்பந்தமான வாய்ஸுக்கு பின்பு, ரசிகர்கள் அதிருப்தி, ஆயிரக்கணக்கான மன்றங்கள் கலைப்பு, ரஜினிக்கு எதிரான பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து 'படையப்பா'வின் ரிசல்ட் எப்படியிருக்குமோ என்ற அச்சம் ரஜினி ஆதரவு தரப்பினருக்கு இருந்தது. அது அருணாச்சலத்தையும் முறியடித்து வெற்றி விழா கொண்டாட மிகவும் சந்தோஷப்பட்டார் ரஜினி.

'போன தேர்தலின் போது நான் சொன்ன கருத்தின் காரணமாய் ரசிகர்கள் எல்லாம் எங்கே என்னை விட்டுவிட்டு போய்விட்டார்களோ என நினைத்தேன். குண்டு வெடிப்பு சம்பவத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட வகுப்புவாதம் பூசாமல் எரியும் நெருப்பை அணைப்பதற்கு என்ன செய்வது என்பதுதான் அப்போதைய யோசனையாக இருந்தது. எனவேதான் அந்த மாதிரியான கருத்தை நான் தெரிவிக்க வேண்டியதாக இருந்தது. அதைத்தான் நான் செய்தேன். அந்த கருத்தின் என் நிலைப்பாட்டை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ என் ரசிகர்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் என் பின்னால்தான் என்றென்றும் இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதற்கு இந்த 'படையப்பா'வின் வெற்றி விழா மேடையே சான்று!'' என அன்று ரஜினி சொன்னதை நினைவு கூர்ந்தார் கோவை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவராக உள்ள அபு.

rajijpg

தயாரிப்பாளர் தாணுவுடன் ரஜினி | கோப்புப் படம்.

 

இந்த வெற்றி விழா மேடைக்கு பிறகுதான் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் பாஜக-திமுக கூட்டணி 26 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களை பிடித்தது. பாஜக கூட்டணி அமைச்சரவையில் திமுகவும் பங்கு பெற்றது.

அதன் பிறகு ரஜினியை ஒட்டி பெரிய அரசியல் சர்ச்சைகள் பெரிய அளவில் வரவில்லை. அதன் திருஷ்டி பரிகாரமோ என்னவோ ரஜினி ரசிகர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தார் என்ற கேள்வியுடன் புதிய அரசியல் வெடியை கொளுத்திப் போட்டார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

பூம்புகாரில் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வன்னியர் மகளிர் மாநாடு நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் அதற்கு முன்தினம் பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் ரஜினி பேசியதற்கு காட்டமாக கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ். சந்தன வீரப்பன் ராட்சஷன். அவரைப் பிடித்து வரவேண்டும் என்று ரஜினி பேசியதாக அவர் வெளியிட்ட கருத்துகள் அத்தனையும் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்தது. அவை பல்வேறு செய்திப் பத்திரிகைகளில் பெரிய அளவில் வந்தது. ஒரு நடிகர் அங்கே போய் வீரப்பனை புடிக்கப்போறேன்னு சொல்றார். அவர் யார்னு உங்களுக்கே தெரியும். இவ்வளவு காலம் அவர் என்ன செஞ்சார். போய் வீரப்பனை புடிச்சுட்டு வரவேண்டியதுதானே? இதை சொன்ன நான் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவதாக சொல்வார்கள். வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்க ஏற்பாடு செய்யுமாறு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா எனக்கு போன் பண்ணிக் கேட்டுக் கொண்டார். அப்போது இவர் போய் ராஜ்குமாரை காப்பாற்றியிருக்கலாமே? இவர் படத்தை நீங்க பார்க்கப் போறீங்களா? 50 கோடிங்கிறாங்க. 100 கோடிங்கிறாங்க. இவர் யாரை வாழ வைக்கப்போகிறார்? அவர் தமிழ்நாட்டுல யாரை வாழ வச்சார் சொல்லுங்க பார்ப்போம்.

தினமும் குடிச்சிட்டு நம்ம இளைஞர்களுக்கு சிகரெட், பீடி பிடிக்க கத்துக் கொடுக்கிறார். இவர்களுக்கெல்லாம் நாம கொடி புடிச்சுட்டு கோஷம் போட்டு கிட்டு வாழ வச்சிட்டு இருக்கோம். இந்த மண்ணுல இவர்களுக்கெல்லாம் இனிமே ரசிகர் மன்றம் இருக்கக்கூடாது. ரசிகர் மன்றங்களை தூக்கி எறியுங்க. சிங்கப்பூர்ல போய் கலை நிகழ்ச்சி கொண்டாடறாங்க. நடிகர் சங்கத்ததுக்கு பணம் இல்லையாம். ஏன், ஒவ்வொருத்தரும் 50 கோடி, 100 கோடின்னு வாங்கறீங்களே, ஒரு கோடியை நடிகர் சங்கத்துக்கு கொடுக்க வேண்டியதுதானே?

மலேசியாவில் போய் நிகழ்ச்சி நடத்தறாங்க. மலேசியாக்காரன் நம்மை கேவலமாக நினைக்கிறான். நிறைய பேர் எனக்கு போன் பண்ணி, என்ன இவங்க இங்கே வந்து ஆடிப்பாடி பிச்சை எடுத்துட்டு போறாங்களேன்னு கேட்கிறாங்க. இந்த சினிமாக்காரர்களுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நானும் கூட ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இந்த நடிகர்களுக்கெல்லாம் ஒன்று சொல்றேன். ஒரு மணி நேரம் எங்க பொண்ணுகளை போல வயலில் வேலை பார்க்க முடியுமா? இந்த சினிமா மாயை ஒழியணும். வேற எந்த மாநிலத்திலே, நாட்டிலே இப்படி சினிமாக்காரன் பின்னாடி போய் குட்டிச்சுவரா போயிருக்காங்க சொல்லுங்க? கிடையாது. இனியும் இனி சினிமாக்காரன் இங்கே தேவையே இல்லை. நாம் வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் ஆள வேண்டும்!'' என்றார் ராமதாஸ்.

இதுதான் அப்போது அவர் கொளுத்திப் போட்டு பத்திரிகைகள் கட்டம் கட்டி வெளியிட்ட சமாச்சாரம். அவரின் பேச்சுக்கு எதிராக ரசிகர்களிடம், சினிமாக்காரர்களிடம் கோபாவேசம் புறப்பட்டது.

பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com/opinion/blogs/article22668799.ece

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 21- 'பாபா' படப்பெட்டியும் பதற்றமும்

 

 
rajini1

ரஜினி | கோப்புப் படம்.

பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் ரஜினி பேசியதற்கு காட்டமாக கண்டனம் தெரிவித்து ராமதாஸ் பேசிய பேச்சினை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர். ராமதாஸ் பேசியது ஆகஸ்ட் 11-ம் தேதி. அது இரண்டு நாட்கள் கழித்தே செய்திகள் வெளிவந்தன. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து - அதாவது ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்றுதான் 'பாபா' படம் ரிலீஸ் ஆனது.

அதற்கு முந்தைய நாள் இரவே சென்னையில் மட்டும் 'பாபா' படத்துக்கான ரசிகர் மன்ற காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கான டிக்கெட்டுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.75. நான்கு டிக்கெட்டுகள் சேர்த்து ஒன்றாகவே இவை வழங்கப்பட்டன. அந்த டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.400 வரை விற்கப்பட்டன.

 

இதற்கு முன்பு ரிலீஸான ரஜினியின் படம் 'படையப்பா' 1999-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகி தமிழ்நாட்டிலும், தென் மாநிலங்களிலும் மொத்தம் 123 தியேட்டர்களில் வெற்றி விழா கொண்டாடியிருந்தது. 11 தியேட்டர்களில் வெள்ளி விழாவும் கண்டது. சென்னையில் 210 நாட்களும், கோவையில் 275 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. 'படையப்பா'வுக்குப் பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் படங்களே வராத ஏக்கத்தில் இருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

அந்த ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் நிறைந்து நின்ற நிலையில் 'பாபா' படம் வருவதால் அது மகத்தான வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் பட விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அப்படத்தை அதீத விலை கொடுத்து வாங்கினர். 'அண்ணாமலை', 'பாட்ஷா' படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இப்படத்தின் இயக்குநரும் என்பதாலும் இந்த எதிர்பார்ப்பு கூடி நின்றது.

இந்த நிலையில்தான் மருத்துவர் ராமதாஸின் அரசியல் தாக்குதல் ரஜினியின் 'பாபா' படத்தை நிலைகுலைய வைத்தது. படம் ஓட வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்புடன் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றெல்லாம் கவலையில் ஆழ்ந்தது ரஜினி தரப்பு. எதுவும் பேசி சிக்கலில் ஆழ்ந்து விடக்கூடாது என்று எந்த டயலாக்கையும் உதிர்க்காமல் அமைதி காத்தார் ரஜினி.

அதையும் மீறி, அங்கங்கே பாமக தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. பல இடங்களில் 'பாபா' படத்தின் திருட்டு வீடியோ காப்பிகள் எடுத்து மக்களுக்கு பலர் விநியோகிப்பதாக தகவல்கள் பரவின. அதன் உச்சகட்டமாக 2002 ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை 'பாபா' படம் திரையிடப்பட இருந்த பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தியேட்டரின் திரை கிழிக்கப்பட்டது. படத்தின் கட்அவுட், பேனர்கள் கிழித்து, உடைத்து சின்னாபின்னப்படுத்தப்பட்டன. படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது. விருத்தாச்சலத்தில் படத்தை திரையிட இருந்த தியேட்டரின் மேலாளர் கடத்தப்பட்டார்.

அதனால் தமிழகம் முழுவதும் 'பாபா' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பதற்றம் நிலவியது. பெரும்பான்மை தியேட்டர்களில் போலீஸ் காவலுடன் படம் ஓடியது. பாமக பலம் வாய்ந்த வட மாவட்டங்களில் பல தியேட்டர்களில் 'பாபா' திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபற்றிய தகவல்களும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டதாக அடுத்தடுத்து செய்திகள். 'உணர்ச்சி வசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். வன்முறையில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தில் சந்திப்போம்!' என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார் ரஜினி.

ஜெயங்கொண்டத்தில் திரை கிழிக்கப்பட்ட தியேட்டருக்கு திருச்சி காவேரி தியேட்டரில் ஸ்டாக்கில் இருந்த பழைய திரை உடனே அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திரை ஜெயங்கொண்டம் தியேட்டருக்கு மதியம் 11.30 மணிக்கு வந்து சேர, அந்த ஸ்கிரீனை கட்டும் வேலை ஒரு பக்கம் அங்கே நடக்க, இன்னொரு பக்கம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் டாடா சுமோ வேனில் வேறு ஒரு படப்பெட்டி சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது. இந்த ஏற்பாடுகளை ரஜினியே திருச்சி அடைக்கல்ராஜிடமும், சென்னையில் படத் தயாரிப்பாளரிடமும் பேசி ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகின (பின்னர் ரஜினி இதில் நஷ்டப்பட்ட தியேட்டர்காரருக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் எனவும் செய்திகள் வந்தன).

rajini%20mangalore

ரஜினி | கோப்புப் படம்.

 

இந்த களேபரங்களுக்கிடையே ஜெயங்கொண்டத்தில் முதல்காட்சி அன்று 3.15 மணிக்கே தொடங்கியது. அதில் ரசிகர்கள் காட்சி முதலாவதாக நடந்தது. அந்த மாவட்ட எஸ்.பி பன்னீர்செல்வத்தின் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாகவும் இருந்தன. அவர்கள் களவு போன படப்பெட்டியை யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்கவேயில்லை. அதற்கான முன் முனைப்பு கூட காட்டவில்லை. மாறாக, 'படப்பெட்டி களவு போனதை கண்டுபிடிப்பது இப்போதைக்கு கிடையாது. மறுபடியும் இங்கே படம் போடறதுலயும், ரசிகர்களாலும் எந்த கலாட்டவும் நடந்து விடக்கூடாது என்பதைத்தான் கவனமாக பார்க்கிறோம்!' என்றனர்.

இந்த விவகாரத்தில் பாமக உள்ளூர் நிர்வாகிகள் தரப்பிலோ இதற்கு நேர் எதிர் ரியாக்ஷன் இருந்தது. 'மாநாட்டுல எங்க ஐயா எங்களுக்குச் சொன்ன செய்திக்கு ரஜினி ரசிகன்னு சொல்லிட்டு எவனவனோ சகட்டு மேனிக்கு எங்க ஐயாவைப் பேசறான். அவங்களுக்கு எதிராக நாங்க ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சா ராத்திரியில செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பட்டப்பகல்லயே செய்வோம். டிவியில சில செய்திகளை பார்த்த கோபத்துல உணர்ச்சி வசப்பட்ட சில இளைஞர்கள் யாராவது இதை செய்திருக்கலாம். ஆனா எங்களுக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!' என்றனர்.

என்றாலும் இச்சம்பவத்தை அடியொற்றி பாமகவின் சில நிர்வாகிகளை அழைத்த போலீஸ், 'எப்படியாவது அந்தப் பெட்டியை மட்டும் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க ஐயா. யாராவது மேலே சின்னதா கேஸ் போட்டுட்டு உடனே ஜாமீன்ல விட்டுடறோம்!' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

கடைசியில் பெரம்பலூர் சின்னவளையம் முந்திரிக்காட்டில் படப்பெட்டியை கைப்பற்றியதோடு, அதை வைத்திருந்த இருவரை கைது செய்தது. இருந்தாலும், 'பண்ருட்டியில் கொலை மிரட்டலுக்கு பயந்து அங்குள்ள தியேட்டரில் 'பாபா' படத்தை திரையிடவில்லை. கொலை மிரட்டலின் காரணமாக திண்டிவனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் 'பாபா' படத்தை நிறுத்தப் போறாங்க!' என்றெல்லாம் 'பாபா' திரையிடப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்களிலும் இதே அரசியல் வதந்திதான் மீடியாக்கள் மத்தியில் ஒலித்தது.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில் வெளியான 'பாபா' வழக்கமான ரஜினி படங்களைப் போல அமையவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், ஆன்மிகம் அதிகமாகவும் இருந்தது. எனவே இப்படம் ரசிகர்களுக்கே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தவிர இந்தப் படம் திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரச்சினைகளை சந்தித்ததால் ஒரே நேரத்தில், ஒரே ஊரில் ஏராளமான தியேட்டர்களில் திரையிடப்பட்டு, ஒரே நாளில் நான்கைந்து காட்சிகள் ஓடின. இதனால் விரைவிலேயே கூட்டம் குறையத் தொடங்கியது.

அதன் வெளிப்பாடாக இப்படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் கட்டணத்தை குறைத்து அறிவித்தார் ரஜினியின் மனைவி லதா. ரஜினியின் 'பாபா' படம் சம்பந்தமான ஸ்டில்கள், அவரது ஸ்டைல், அவர் படங்களில் பயன்படுத்திய அலங்காரப் பொருட்கள் இவைகளின் மாடல்களை, ஸ்டிக்கர், டி சர்ட்டுகளை ஏகமாக பல கம்பெனிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டன. அதில் லாபமும் அடைந்தன. அதன் எதிரொலியாக அவற்றை வர்த்தக ரீதியாக பயன்படுத்த ரஜினியின் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் பாபா உடைகள், பாபா 3 டி ஸ்டிக்கர், பாபா டி சர்ட்டுகள் போன்றவை ரயோ என்ற பிராண்ட் பெயரில் கொண்டு வரப்பட்டது. இதனை சென்னையில் நடந்த விழாவில் 23.08.2002 அன்று தொடங்கி வைத்துப் பேசினார் ரஜினியின் மனைவி லதா.

பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 22- நிழலாய் தொடர்ந்த வீரப்ப ரகசியம்

 

 
rajinijpg

'கபாலி' படத்தில் ரஜினி.

அப்போது பேசிய லதா, '' 'பாபா' படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அனைத்து பிரச்சினைகளும் இப்போது சரியாகிவிட்டது. படத்திற்கு முதல் இரண்டு வாரம் கட்டணம் உயர்த்தி வசூலித்துக்கொள்ள அரசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை ஒரு வாரமாக குறைத்துக்கொண்டோம். நேற்று (22.08.2002) முதல் தியேட்டர்களில் கட்டணம் குறைக்கப்பட்டு வழக்கமான கட்டணத்தில் 'பாபா' பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பு குறித்து அரசுக்கும் தெரிவித்துவிட்டோம்.

'பாபா' படத்தை ஒட்டி 'மேக் தூத்' என்ற பெயரில் 'பாபா தபால் கார்டு' தபால்துறை மூலம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்டமாக 5 லட்சம் கார்டுகள் வெளியிடப்படுகிறது. 'பாபா' படத்தின் சிறப்புக் காட்சி சென்னை சத்தியம் தியேட்டரில் வெளியிடப்பட்ட போதே பாபா உடைகள், பாபா 3 டி கார்டுகள், பாபா டி சர்ட் ஆகியவைகளை ரயோ பிராண்ட் மூலம் விற்பனைக்கு கொண்டு வர இருந்தோம்.

 

பட வெளியீட்டிற்கு வந்த அமெரிக்க சுவாமிஜி கூட்டம் அதிகம் இருந்ததால் நெரிசலில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இதனால் அப்போது இதனைத் தொடங்க முடியவில்லை. அதனால் இன்று தொடங்குகிறோம். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கும் உதவ பயன்படுத்தப்பட உள்ளது.

'பாபா'வின் பெயரை பயன்படுத்தி தரமற்ற பொருளை விற்பனை செய்வதை தடுப்பதற்காகவே இந்த முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். 'பாபா' படம் சம்பந்தமான ஸ்டில்கள், தகவல்கள் பத்திரிகைகளுக்கு கொடுக்க முடியாததற்கு காரணம் படப்பிடிப்பு இரவு பகலாக 92 நாட்கள் நடத்தப்பட்டது. ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திக்க முடியாததற்கும் இதுதான் காரணம். ரஜினி பத்திரிகை நிருபர்களை மிகவும் மதிப்பவர்.

'பாபா' படப்பெட்டியை விஷமிகள் சிலர் ஜெயங்கொண்டம் தியேட்டரில் தூக்கிக் கொண்டு சென்றதற்கு உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் ரஜினிக்கு மட்டும்தான் தெரியும். அவர் எந்த முடிவு எடுத்தாலுமு் அதில் ஒரு நியாயம் இருக்கும். 'பாபா' படப் பிரச்சனை சம்பந்தமாக அவர் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமோ அதை அவர் மேற்கொண்டார். அது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். மற்றபடி படம் தயாரித்த லோட்டஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்தான் சொல்ல வேண்டும். படத்திற்கு கூட்டம் வரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். படம் வெளியிடப்பட்டு ஒரு வாரம்தான் ஆகிறது. குழந்தை பிறந்தவுடன் அது எப்படியிருக்கும் என்று எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும். படம் 15 நாட்களுக்கு மேல் ஓடும்போதுதான் ஓரளவு கணிக்க முடியும்.

'பாபா' படம் ஓடிய சில தியேட்டர்களில் எதிர்பாராமல் நடந்த பிரச்சினைகளால் பெண்கள் கூட்டம் வருவதில் தடை ஏற்பட்டது. தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது. இனி கூட்டம் வரும்!'' என்று அப்போது நீண்ட உரையாற்றினார் லதா.

நிருபர்கள், ''பாபாவிற்கு கூட்டம் வரவில்லை என்றுதான் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''நிச்சயம் அப்படி இல்லை. டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று ஆயிரக்கணக்கான பெண்கள் எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதங்களை பரிசீலனை செய்த பிறகே டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு செய்தோம். இனி தியேட்டர்களில் வழக்கமான கட்டணத்தில் 'பாபா' படத்தைப் பார்க்கலாம்!'' என்று பதில் தந்தார்.

maxresdefaultjpg

'பாபா' படத்தில் ரஜினி.

 

இதே நிகழ்ச்சியில் பாபா படத்திற்கான மேக்தூத் தபால் கார்டு மற்றும் பாபா த்ரீ டி கார்டு மாதிரியையும் அறிமுகம் செய்து வைத்தார் லதா. இவர் இங்கே இப்படி அறிமுகம் செய்ய இதே நாளில் மரக்காணம் நிகழ்ச்சி ஒன்றில் திரும்ப ரஜினியின் சிகரெட், மது பழக்கத்தை கண்டித்துப் பேசினார் மருத்துவர் ராமதாஸ். மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர் எடுக்கும் பணியை அன்று தொடங்கி வைத்தார் ராமதாஸ்.

தொடர்ந்து ராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசினார். வன்னியர் சமூகம் குறித்தும், அவர்கள் வீர தீரம் குறித்தும், அவர்கள் சமகால போராட்டங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸை பார்த்து அக்கிராம இளைஞர் ஆறுமுகம் என்பவர், 'ரஜினியை பற்றி பேசினீர்களே?' என கேள்வி கேட்டார். உடனே பேச்சு திசைமாறியது. ரஜினியின் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு புகாராக ராமதாஸ் கூறத் தொடங்கினார்.

''சிகரெட், பாக்குக்கு தடை விதித்தார்கள். அதை வைத்துத்தான் படம் எடுப்பார் ரஜினி. பீடி, சிகரெட்டை எப்படி போட்டுப் பிடிப்பது போன்றதை எல்லாம் தியேட்டரில் போய் படத்தில் பார்க்க ரூ.100, ரூ.200 என்று கொடுக்க வேண்டும். இவர் நடித்த பட கட்-அவுட்களை வைத்து பால் அபிஷேகம், கற்பூர ஆரத்தி எல்லாம் எடுக்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 60 பேரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகா போய் குரல் கொடுத்தாரா? அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டாரா? வீரப்பன் என்னை நன்றாக வைத்திருந்தார். எந்த குறையும் இல்லை. என்று ராஜ்குமார் சொல்லியிருக்கிறார். ஆனால் ராஜ்குமார் மகன் நடத்திய படவிழாவில் வீரப்பன் ராட்சதன். அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும்'' என்கிறார். நானும் தமிழன்தான். என்னையும் சம்ஹாரம் செய்ய வேண்டும் என்றுதானே அர்த்தம்?

ரஜினி இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வைத்திருக்கிறார். அதனால் தமிழகத்திற்கு என்ன பயன்? இவர் அரசியலுக்கு வருகிறார் என்று சொல்கிறார்கள். இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்வார். இவர் பட வெளியீட்டிற்கு அமெரிக்காவில் இருந்து ஒருவரை வரவழைத்தார். நன்றாக இருந்தவர் செத்துப்போனார். அவர் நம் தமிழர்தான். குஷ்புவுக்கு கோயில் கட்டினாங்க. கடைசியில் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். அதனால் மன்றம் திறப்பதை விட பாரதி, காமராஜ், காந்தி, நேரு ஆகியோரின் பெயர்களில் நற்பணி மன்றங்கள் திறந்து நல்லது செய்யுங்கள் என்கிறேன். நூலகம் திறந்து நம் மக்களின் அறிவுக்கண்ணை திறக்க வேண்டும்'' என்றார் ராமதாஸ்.

இந்தச் செய்திகளும் அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகளில் செய்திகள் ஆகின. ஆனால் எந்த இடத்திலும் ரஜினி நேரடியாக இதற்கு பதில் சொல்லவில்லை.

ரசிகர்களுக்கு சத்தியநாராயணா மூலம் இருந்து மட்டும் வேண்டுகோள்கள் வந்தன. 'உணர்ச்சிவசப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள். இதை எப்போது எப்படி சந்திக்க வேண்டும் என்பது தலைவருக்கு (ரஜினிக்கு) தெரியும்!' என்று.

ரஜினி வீரப்பனைப் பற்றி பேசியதால்தான் ராமதாஸிடம் இந்தக் கொதிப்பு என்பது அன்றைய அரசியல் உலகம் அறிந்த ரகசியம். இன்றைக்கும் வீரப்பன் பிறந்த மண்ணான கர்நாடக எல்லை கோபிநத்தமும், தமிழக எல்லை கோவிந்தபாடியிலும் பாமகவிற்கு செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அதற்கு ஆதிமுதலே வீரப்பன்தான் காரணம் என்பது இந்த அரசியலினுள் ஆழ ஊடுருவி செல்பவர்களுக்கு புரியக்கூடும் என்று நினைக்கிறேன்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய காலகட்டத்தில் கோபிநத்தம், மேட்டூர், கோவிந்தபாடி பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன். அப்போது அதை நேரிலேயே தரிசித்தேன். மேட்டூரில் பாமகவின் செல்வாக்கும், வீரப்பனின் பிரபல்யமும் இரண்டறக் கலந்திருந்தது. அதிலும் கோபிநத்தம் டூ கோவிந்தபாடியில் வீரப்பனை பற்றியோ, பாமகவைப் பற்றியோ ஒற்றைச் சொல் தவறாக உதிர்த்து விட்டால் அந்த நபரின் நிலைமை சிக்கல்தான் என்ற நிலையே நீடித்தது.

1989 மக்களவைத் தேர்தலின்போதும், 1991, 1996 சட்டப்பேரவைத் தேர்தல்களின் போதும் சரி, இங்கே பாமக வேட்பாளருக்காக வீரப்பனே நேரில் வந்து ஓட்டு கேட்டார் என்றார்கள். அதிலும் 1991 தேர்தலின் போது கடைகடையாக, வீடுவீடாக துப்பாக்கி ஏந்தியபடி தன் தோழர்கள் புடைசூழ, 'மரியாதையா நம்ம ஆளுக்கு ஓட்டுப் போட்டுடுங்க. இல்லை சுட்டுப்போடுவேன்!' என்று மிரட்டிச் சென்றதாக கதை, கதையாகச் சொன்னார்கள்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 23- ராஜாங்கம் வகித்த வீரப்ப ரகசியம்

 

 
RAJANIKANTHjpg

ரஜினி | கோப்புப் படம்.

வீரப்பன், ராஜ்குமாரை கடத்தி விடுவித்த பிறகு, அதற்காக பெரும் தொகை கைமாறியதும் ராஜாங்க ரகசியம். அதை வீரப்பன்-ராஜ்குமார் விவகாரம் அறிந்த அத்தனை பேரும் அறிவார்கள். அந்தத் தொகையில் ராஜ்குமார் குடும்பம் ஒரு பங்கும், கன்னடத் திரையுலகம் ஒரு பங்கும், தமிழ்த்திரையுலகம் சார்பாக ஒரு பங்கும் அளிக்கப்பட்டதாக அப்போது அடிபட்ட செய்திகள். அதில் மூன்றாம் பங்குத் தொகையை ரஜினியே பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் அங்கே நிழலாக தொடர்ந்த அரசியல் ரகசியம்.

அரசியல் ரீதியாக வீரப்பன் வன்னியர் பிரதிநிதியாக நின்று பாமக கட்சிக்கு ஓட்டு சேகரித்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீதான அபிமானியாகவும் விளங்கினார் என்பதும் கண்கூடு.

 

இதன் வெளிப்பாடுதான் வீரப்பன் என்றாலே கன்னம் சிவக்க ஜெயலலிதா பொங்கியதும், கருணாநிதி கனிவுடன் அணுகுவதுமான சங்கதிகள் நடந்தேறின. ரஜினியைப் பொருத்தவரை தமிழகத்தில் சிவாஜியை எந்த அளவு நடிப்பில் நேசித்தாரோ, அதை விட ராஜ்குமாரை கன்னட எம்ஜிஆர் என்பது போல அவரின் தீவிர ரசிகராகவே இருந்தவர்.

இந்த நிலையில் வீரப்பனின் ராஜ்குமார் கடத்தல் நாடகம் நிகழ்ந்தேறினால் எப்படியிருந்திருக்கும்?

மத்தியில் திமுக கூட்டணியுடன் கூடிய வாஜ்பாய் ஆட்சி. மாநிலத்திலும் திமுக தலைவர் கருணாநிதி முதல்வர். அந்த திமுக தலைவர் மீது தனியொரு அரசியல் அபிமானம் கொண்டவர் ரஜினி. இந்த அரசியல் சதுரங்கத்தில் நடந்த திரைமறைவு நாடகத்தில் நிறைய காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. அவை எல்லாமே ராஜாங்க ரகசியமாக இன்றளவும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

அப்படிக் காப்பாற்றப்பட்டதன் வெளிப்பாடாகவே நடிகர் ராஜ்குமாரும் கடைசி காலத்தை கழித்தார். 'வீரப்பன் ரொம்ப நல்லவர். என்னை கடத்தி வைத்திருந்த போது நன்றாக வைத்துக் கொண்டார்!' என்ற வார்த்தைகளை மீறி அவர் எதுவுமே இந்த நாடக அந்தரங்கத்தில் சாகும் வரை உச்சரிக்கவில்லை.

2004-ல் வீரப்பன் என்கவுன்ட்டர், 2006-ல் ராஜ்குமார் மறைவு நிகழ்வுகள் கூட இந்த அரசியல் அந்தரங்கத்தை வெளிக்காட்டவில்லை. உள்ளூர கனக்கும் நெருப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் ரஜினி என்கிற நடிகர் அவ்வப்போது யதார்த்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே இருப்பவர். நாக்கு பிறழ்ச்சியாலோ, உணர்வு பொங்கியோ சிலவற்றை உதிர்த்து விடக்கூடியவராகவே இருந்து வந்திருக்கிறார். சில சமயங்களில் உண்மையை அடக்கி வைக்கத் தெரியாத மனிதராகவும் வலம் வருகிறார்.

அப்படி வீரப்பன் குறித்த வில்ல பிம்பம் வெளிப்படும் போதெல்லாம் வீரப்பன் நிஜ நாயகனாக கற்பிதம் கொள்ளும் அரசியலுடனே இரண்டறக் கலந்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பொங்கி விடுவது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அதில் ரஜினி போன்ற ஆகப் பெரும் பிரபல்யங்கள் சர்ச்சைக்குள் சிக்கும்போது, அதில் தர்மசங்கடமாக மாட்டிக்கொள்ளும் மற்ற அரசியல் தலைவர்கள் இரு தரப்பையும் கட்டுப்படுத்தி சமாதானப்படுத்த முயற்சிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றளவும் கூட அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அரசியலாகத்தான் 'பாபா' படத்தை ஒட்டி வந்த ராமதாஸ்-ரஜினி விவகாரத்தை பார்க்க வேண்டியதாகிறது. இந்த 'பாபா' பட விவகாரம் கூட மீடியாக்கள் ஊதிஊதி பெரிசாக்கி விட்ட சூழலின் ஒரு கட்டத்தில் ராமதாஸ், 'இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது!' என்று அறிவித்து ஒதுங்கிக் கொண்டார்.

rajjpg

ராஜ்குமார் | கோப்புப் படம்.

ராமதாஸ் இப்படி அறிவித்தாலும், அவருக்கு (மருத்துவர் ராமதாஸுக்கு) எதிரான எதிர்நிலை கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ரஜினிக்கு எதிரான சில அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அதுவும் எப்படி? ரஜினிக்கு பின்னால் சுரண்டல் கும்பல் இருப்பதாக கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

'பாபா படத்தை நீங்களும் விமர்சனம் செய்தீர்கள். மருத்துவர் ராமதாஸும் விமர்சனம் செய்தார். ஆனால், பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது! என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறாரே! என்ன காரணம்?' என்பது முன்னணி புலனாய்வு இதழ் நிருபரின் கேள்வி.

அதற்கு திருமாவளவன் பதில் சொல்கிறார்:

'பாபா படத்தை திடீரென எதிர்த்ததற்கு பின்னணி என்னவென்று தெரியவில்லை. அதைப் போல் திடீரென நிறுத்திக் கொண்டதற்கான காரணமும் புரியவில்லை. திரைமறைவில் என்ன நடந்திருக்கும் என்பதும் நாங்கள் அறியோம். ஆனால் எங்கள் எதிர்ப்பு, கொள்கை அடிப்படையில் அமைந்தது. தமிழக சினிமா உலகம், தமிழக இளைஞர் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. தமிழ் இனத்திற்கு விரோதமாகவே செயல்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் கடந்த 15 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக இளைஞர்களை ஏமாற்றி வருகிறார். இளைஞர்களின் ரசிக உணர்ச்சியை மூலதனமாக்கி, அதைச் சுரண்டுகிற வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் பண்பாட்டு சீரழிவை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் ரஜினி, வீரப்பன் பற்றி பேசிவிட்டதால் ஜாதி அடிப்படையில் 'பாபா' படத்தை விமர்சனம் செய்கிறார் டாக்டர் ராமதாஸ்.

ரஜினி இளைஞர்களைச் சீரழிக்கிறார் என்பதுதான் ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டு. அவருடைய கட்சியில் உள்ள இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?

வன்னியர்கள் படத்தைப் பார்க்கக்கூடாது என்றுதான் ராமதாஸ் சொல்கிறார். தியேட்டர்களுக்கு தீ வைப்பது, படப்பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடுவது, பொது மேடைகளிலேயே, 'அவன், இவன்! என்று ஏகவசனம் பேசுவது. பத்திரிகையாளர்களை அவள், இவள் என்று வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நான் நினைத்தால் எந்தப் படமும் ஓடாது என்கிறார். இந்த மாதிரியான பண்புகளைத்தான் அவருடைய இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். மற்றபடி இளைஞர்களை நல்வழிப்படுத்துவற்காக எந்த முயற்சியும் அவர் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. ஒரு விதத்தில் சொல்லப்போனால் இளைஞர்கள் சீரழிவிற்கு டாக்டர் ராமதாஸும் ஒரு காரணமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை!

03THRAJINIKANTHjpg

ரஜினி | கோப்புப் படம்.

 

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை ரஜினி பரப்புகிறாரா?

பெரியாரையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு 'பாபா' படத்தில் கருத்துகள் சொல்லப்படுகின்றன. ரஜினியின் படங்களில் ஆன்மிகம் என்ற பெயரில் இந்த மதப் பிரச்சாரம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைக்கூட அரைகுறை ஆடைகளில் அழகிகளுடன் ஆடிப்பாடிக் கொண்டுதான் ரஜினி சொல்கிறார். அதனால் ரஜினியை மட்டுமின்றி அவருக்குப் பின்னால் இருக்கும் சுரண்டல் கும்பலையும் எதிர்க்க வேண்டும்.

ரஜினியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சினிமாக்காரர்கள் சிங்கப்பூரில் போய் பிச்சை எடுக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் ராமதாஸ். அரசியல்வாதிகளும் நிதி வசூல் செய்பவர்கள்தான். அது மட்டும் சரி என்கிறீர்களா?

இதற்கு அரசியல்வாதி என்ற கோணத்தில் இருந்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் எந்த மனிதனையும் கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது மனிதநேயம் அல்ல. பிச்சை எடுக்கிறார்கள் என்று அவர் சொல்லியிருப்பதன் மூலம் பிச்சைக்காரர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஏன், அவர்கள் ஏழைகள், எளியவர்கள் என்ற ஆதிக்க மனப்பான்மைதானே? என்றார் திருமாவளவன்.

இப்படி படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்குள்ளாக பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் ரஜினி மூழ்கி எழுந்த வேலையில் 'பாபா' படத்தை வெளியிட்ட தியேட்டர்காரர்கள் போட்ட முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை என புலம்பித் தள்ளினார். அதனால் விநியோகஸ்தர்கள் பாடு திண்டாட்டம் ஆகி விட்டது.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல்: 24- ஆன்மிக குருவின் மரணம்

rajinijpg

ரஜினி | கோப்புப் படம்.

ரஜினியின் மீது காழ்ப்பு கொண்டவர்கள், எதிர்நிலையாளர்கள், 'இனி ரஜினி அவ்வளவுதான். அவர் படம் ஓடாது!' என்றெல்லாம் கூட பரவலாகப் பேசத் தொடங்கினர். படம் பலத்த நஷ்டம் என்பதை மீடியாக்கள் மூலம் பேட்டிகளும் அளித்தனர் சிலர். இதை அறிந்த ரஜினி தன்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று சொல்லி 'பாபா' படத்தின் மூலம் நஷ்டமடைந்தவர்களை நேரடியாக அழைத்துப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

இப்படி அனைவருக்கும் பல கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டது. உலக சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும், தயாரிப்பாளரும் செய்திராத காரியத்தை ரஜினி செய்திருக்கிறார். மிகவும் தாராள மனதுடன் அவர் நடந்து கொண்டிருக்கிறார். நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று இந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர்கள் புகழாரமும் சூட்டினர். 27.09.2002 தேதியன்று இந்த விஷயத்தை பத்திரிகை நிருபர்களை சந்தித்து பகிர்ந்து கொண்டனர் 'பாபா' பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள்.

 

''திரை உலகில் உள்ள அனைவருக்கும் முன்னோடியாக ரஜினிகாந்த் தாராள மனதுடன் நடந்து கொண்டிருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் எங்களை அழைத்தார். 'பாபா' படம் வாங்கியவர்கள் ஒரு பைசா கூட நஷ்டம் அடையக்கூடாது. யார், யாருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ, அதன்படி எல்லா பணத்தையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். 'பாபா' படம் விற்ற பணம் அப்படியேதான் இருக்கிறது. அதில் இருந்து நான் ஒரு பைசா கூட தொடவில்லை. முழுப் பணமும் திருப்பிக் கொடுக்கப்பட்டால்தான் எனக்குத் தூக்கம் வரும் என்று சொன்னவர் அப்படியே செய்தார். அவர் சொன்னபடி 110 தியேட்டர் உரிமையாளர்கள், 10 விநியோகஸ்தர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் திருப்பிக் கொடுத்தும் விட்டார். உப்பிட்ட தமிழ் மண்ணை ரஜினி மறக்க மாட்டார்'' என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

'பாபா' படம் மூலம் 20 கோடி ரூபாய் வசூலாகியது. இங்கே இப்போது பீக்கில் உள்ள இளம் நடிகர்கள் படங்கள் ரூ.20 கோடி வசூலித்தால் அது மாபெரும் வெற்றிப் படமாக கருதப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் வேடிக்கையான இன்னொரு அரசியல் விஷயம் நடந்தது. அதாவது ரஜினியின் மறைமுக பின்புலத்துடன்தான் 1996-ல் உருவானது தமாகா கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். அக்கட்சி 'பாபா' படம் ரிலீஸான (14.08.2002) அன்று மாலைதான் தன் தாய்க்கட்சியான காங்கிரஸுடன் இணைந்தது. மதுரை ரிங்ரோடு, பாண்டி கோயில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இதற்கான இணைப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டார். ஆறாண்டுகளாக (1996-2002) தனித்து செயல்பட்டு வந்த அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அதில் இணைந்தனர்.

தன்னால் தன் கண்முன்னே அதீத சக்தி அரசியல் ததும்ப எழுச்சியுடன் எழுந்து பீடு நடைபோட்டு நகர்ந்து காணாமல் போன அண்ணாமலை 'சைக்கிள்', 'கை'யுடன் இணைவது குறித்து கூட ரஜினிகாந்த் ஒற்றை அரசியல் வார்த்தை உதிர்க்கவில்லை. மீடியாக்கள் கூட அதையும் இதையும் தொடர்புபடுத்தி எழுதவில்லை.

இது 'பாபா' படம் வெளியான நாளன்று நடந்த வேடிக்கையான அரசியல் நிகழ்வு என்றால் அதே நாளில் வேதனையான ஒரு சம்பவமும் நடந்தது. அதுதான் ரஜினியின் ஆன்மிக குருவான சுவாமி சச்சிதானந்த மகராஜ் மரணம். (ரஜினி தன் 'பாபா' பட வெளியீட்டிற்கு அமெரிக்காவில் இருந்து ஒருவரை வரவழைத்தார். நன்றாக இருந்தவர் செத்துப்போனார். அவர் நம் தமிழர்தான் என்று ராமதாஸ் மரக்காணம் அருகே பேட்டியில் சொல்லியிருந்தாரே! அது இவரை குறிப்பிட்டுத்தான்)

நடிகர் ரஜினிகாந்தின் குருவும் 'பாபா' படம் வெளியாக முக்கிய காரணமாகவும் இருந்தவர்தான் சச்சிதானந்த மகராஜ். கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இவர் தனது 35 வயதிலேயே அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் விர்ஜினியாவில் மிகப் பெரிய ஆசிரமத்தை அமைத்துள்ளார். இந்த ஆஸ்ரமத்துக்கு ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக சென்று வருகிறார். தனது குருவாகவும் சச்சிதானந்த சுவாமிகளை ரஜினி ஏற்றுக் கொண்டிருந்தார்.

03THRAJINIKANTHjpg

ரஜினி | கோப்புப் படம்.

 

நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆன்மிகத்தில் ஈடுபட முடிவு செய்திருந்த ரஜினியை 'பாபா' படம் எடுக்கச் சொன்னதே சச்சிதானந்த சுவாமிகள்தான் என்பது ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தின் பேச்சாக அப்போது இருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல் 'பாபா' படம் எடுத்து முடிக்கப்பட்ட பின் அமெரிக்காவில் இருந்து சுவாமிஜி சென்னைக்கு அழைக்கப்பட்டார். அவரின் கையாலேயே 'பாபா' படம் 2002, ஆகஸ்ட், 14-ம் தேதி பூஜை போடப்பட்டு சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதன் பின்னரே அடுத்த நாள் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் படம் வெளியானது.

14-ம் தேதி பூஜை நடத்தி முடித்தபோதே சச்சிதானந்த சுவாமிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சையும் தரப்பட்டது. இதற்கடுத்த நாள் சச்சிதானந்த சுவாமிகளுக்கு திடீரென மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மரணச் செய்தி அறிந்தவுடன் உடனே தனது மனைவி லதாவுடன் மருத்துவமனை சென்று மரியாதை செலுத்தினர் ரஜினி. 'நான் எங்கு இறந்தாலும் என் உடலை விர்ஜீனியாவில் உள்ள லோட்டஸ் ஆஸ்ரமத்துக் கொண்டு சென்றுவிட வேண்டும்!' என்று ஏற்கெனவே சொல்லியிருந்த சச்சிதானந்த மகராஜ், தனக்காக அங்குள்ள ஆசிரமத்தில் ஒரு சமாதியை தயார் நிலையில் வைத்திருந்தார். அங்கேயே தன் உடலுடன் சில பொருட்களையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என அவர் சொல்லியிருந்ததால் அவரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சுவாமிகளின் இறுதிச் சடங்குகள் அமெரிக்காவில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் நடைபெற்றது.

இதற்காக அவரது உடல் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டது. அதற்காக ரஜினியும் அமெரிக்கா சென்றார். 'பாபா' படத்தை அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை இந்த சுவாமிகளின் பேரனுக்குத்தான் ரஜினி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இந்த சச்சிதானந்த மகராஜ் 'பாபா' படத்தை சென்னையில் பூஜை போட்டு ரிலீஸ் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் நடந்த உலக அமைதி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அப்போது இவர்தான் ரஜினியை 'பாபா' படம் எடுக்க தூண்டியவர் என்பதை அறிந்து நிருபர்கள் மொய்த்துக் கொண்டனர்.

அப்போது மிகவும் ஜாலியாக பேட்டியும் கொடுத்தார். 'ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே' என்பது பழமொழி. தற்போது ஆவதும், 'பென்' (pen)னாலே, அழிவதும் 'பென்' (pen)னாலே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலையங்கங்கள் மூலம் நாட்டின் தலையெழுத்தையே எழுதுபவர்கள் பத்திரிகையாளர்கள்தான். அதில் நல்ல விஷயங்களை எழுதினால் நாட்டில் நல்லது நடக்கும். கெட்ட விஷயங்களை எழுதினால் கெட்டதுதான் நடக்கும். நல்லது நடப்பது குறைந்துவிட்டது. அதனால்தான் தேவையில்லாமல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள்தான் நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை எழுத வேண்டும் என்று பேச்சை ஆரம்பித்தவர், நிருபர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும் நின்று நிதானித்து பதில்களை சொல்ல ஆரம்பித்தார்.

ரஜினி படங்களில் நடிப்பது குறைந்து வருவது ஏன்?

''இப்போது கூட படத்தில் நடிப்பது பற்றி ரஜினி முடிவு செய்யாமல் இருந்தார். அமெரிக்காவிற்கு வந்து மூன்று வாரங்கள் என்னுடன் தங்கியிருந்த போது ''நல்ல கதையுள்ள படங்களின் வரவு குறைந்து விட்டது. நீயும் படத்தில் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. நல்ல கதையுள்ள, மக்களுக்கு பயனுள்ள படம் பண்ணு என்று சொன்னேன். அப்புறம்தான் பாபா படத்தை எடுக்க ஆரம்பித்தார்'' என்று சச்சிதானந்த மகராஜ் தெரிவித்தார்.

- பேசித் தெளிவோம்!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.