Jump to content

பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?


Recommended Posts

பெண்களின் சக்தியை அடையாளப்படுத்தும் பூப்படைதல் நிகழ்ச்சி தேவையா?

ஒரு பெண், தனது முதல் மாதவிடாயை அடைவதில் என்ன பெரிய விஷயம் இருந்துவிடப் போகிறது? தமிழ் கலாசாரத்தில் அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுவதோடு, அதைத்தொடர்ந்து ஒரு பெரிய நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

பெண்படத்தின் காப்புரிமைTAMILCULTURE.COM

என் மூத்த சகோதரிக்கான நிகழ்ச்சியை நடத்த, குடும்பத்தினர் தயாராகியபோது, எதற்காக என்றே எனக்கு புரியவில்லை. ஆர்வ மிகுதியால், இந்த சம்பிரதாயத்தின் முக்கியத்துவம் குறித்து என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.

என் சகோதரி `பெரிய பெண்` ஆகியுள்ளதால் இந்த நிகழ்ச்சி நடப்பதாக அவர்கள் கூறியதும், அந்த அறியாத வயதில் எல்லா ஆண் குழந்தையும் கேட்கும் கேள்வியைதான் நானும் கேட்டேன்.

"நான் `பெரிய பையன்` ஆகியதற்கான நிகழ்ச்சி எப்போது?" என்று நான் கேட்டேன்.

என் குடும்பத்தினர் அன்று எதற்காக அவ்வளவு நேரம் சிரித்தார்கள், வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று யார் வந்தாலும், அந்த கதையை ஏன் தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள, எனக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது.

பூப்படைதல் என்றால் என்ன?

பூப்படைதல் என்பது, ஓர் உடல், இனப்பெருக்கம் செய்ய தயாராகி விட்டது என்பதை குறிக்கும் விஷயம். தமிழ் கலாசாரத்தில், பூப்படைதல் நிகழ்ச்சி நடத்தப்படுவது என்பது, பெண்களின் சக்தியை அடையாளப்படுத்துவதற்கே.

என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? எஸ்டி, 22 வயது பெண்

இது தூய்மையான, அபாயகரமான இயற்கை சக்தி என்பதால், இவை கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது.

இதன்மூலம், மாதவிடாயை அடைந்த பெண், மனப்பக்குவத்தை அடைந்துவிட்டார் என்று பார்க்கப்பட்டது. அதோடு, அவர் குறிப்பிட்ட சில தூய்மையற்ற பலவீனங்களுக்கு ஆளாகக்கூடும் என்றும் பார்க்கப்பட்டது.

ஆண் `வயதை அடைதல்` என்பது, தானாக நடக்கும் என்று பார்க்கப்பட்டாலும், மாதவிடாயை அடையாத பெண்கள், பெண்மையில் முழுமை அடையாதவராக பார்க்கப்படுகிறார்.

ஆகவே, இந்த நிகழ்ச்சி என்பது, இளம்பெண், பெண்மணியாக மாறுவதை பெருமையாக கொண்டாடும் நிகழ்ச்சி. இதன்மூலமாக அவர் திருமணத்திற்கும், குழந்தைகளை பெறவும் தயாராகிவிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.

"என் ஆண் உறவினர்களிடம் நான் என்ன கூறுவேன்? என் துணியில் படிந்துள்ள கறையை கொண்டாட வந்ததற்கு நன்றிகள் என்றா? என்று கேட்கிறார், 22 வயதுடைய பெண் ஒருவர்.

குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்" எஸ்பி, 27 வயது பெண்

முதல் மாதவிடாய், பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டது. அந்த கட்டுப்பாட்டில், சமைக்கப்படாத முட்டை சாப்பிடுவது, காலையில் கடலை எண்ணைய் குடித்தல், உணவிற்குப் பிறகு குறைந்த அளவு தண்ணீரே குடித்தல், இனிப்பு உணவுகளை சாப்பிடாமல் இருத்தல் ஆகியவையும் அடங்கும்.

அப்பெண்ணின் வயிறு வீங்குவதை தவிர்க்கவே, தண்ணீர் குறைவாக குடிக்கப்படுகிறது. மேலும், அடுத்து வரவிருக்கும் மாதவிடாய்களின் வலியை குறைக்கவும் இந்த உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

மாதவிடாய் நேரத்தில் பெண் கோவிலுக்கு செல்லக்கூடாது, பூசைக்கான பாத்திரங்களை தொடக்கூடாது, பொதுவாக வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது ஆகியவையும் சில கட்டுப்பாடுகளே.

என் மகள், `பெரிய பெண்` ஆகிவிட்டார்!

கார்ட்டூன்படத்தின் காப்புரிமைTAMILCULTURE.COM

ஒரு பூப்படைதல் நிகழ்ச்சி என்பது, நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடப்படுவது. நிகழ்ச்சிக்கு வருவோர் அழகான பரிசுகளோடு வருவார்கள். அவர்களுக்கு நல்ல உணவுகள் பரிமாறப்படும்.

முதல் மாதவிடாயின் முதல்நாள், அப்பெண், தனது நெருங்கிய உறவினர்களால், குளிப்பாட்டி, தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு, அவருக்கு மிகவும் சுகாதாரமான உணவுகள் அளிக்கப்படும்.

இந்த தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்தபிறகு, மீண்டும் அவரை குளிப்பாட்டி, புடவை அணிவார். மீண்டும் வீட்டின் முக்கிய அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்.

புடவை அணிதல் என்பது, அப்பெண் பாலியல் ரீதியாக பக்குவப்பட்டுவிட்டார் என்பதை குறிக்கிறது.

இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாச்சாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாச்சார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது" விகே, 25 வயது பெண்

"குளியல் அறையில், என் தங்கையிடம் ரகசியமாக, என்னுடைய மாதவிடாய் குறித்து கூறிக்கொண்டு இருந்த நேரத்தில், வெளிநாட்டில் வாழும் என் உறவினர்களிடம் என் அம்மா இதை கூறிக்கொண்டு இருந்தார்" என்கிறார் 27 வயதாகும் பெண் ஒருவர்.

இந்த நிகழ்ச்சியை எவ்வளவு ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் என்பது, அந்தந்த குடும்பத்தின் விருப்பத்தை பொருத்தது. மிகவும் நெருக்கமான உறவினர்களைக் கொண்ட ஒரு சிறிய நிகழ்ச்சியில் தொடங்கி, உள்ளூர் தபால்காரருக்குக்கூட தெரியும் அளவிற்கு இந்த கொண்டாட்டம் நடைபெறும்.

என் சகோதரியின் நிகழ்ச்சிக்காக, பெற்றோர் வீட்டின்கீழ் இருந்த ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்து 100 பேர் வரை அழைத்து விழாவை நடத்தினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, என் உறவினரின் மகளின் நிகழ்ச்சி என்பது, ஆயிரம் பேர் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. வெவ்வேறு வகையான ஆடைகளையும் அவர் அணியவேண்டி இருந்தது.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

பெண்படத்தின் காப்புரிமைPRAKASH MATHEMA/AFP/GETTY IMAGES

"பெண்களுக்கான உரிமை என்பது, மிகவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய் கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தை அவர்கள் அடையும், அந்த சாதாரண காலம் என்பது மரியாதையை இழக்கிறது" என்கிறார், 27 வயதாகும் டி.எஸ் என்னும் பெண்.

பண்டைய காலங்களில், பதின்பருவத்திலேயே பெண்கள் திருமணம் செய்ய அனுப்பப்படுவர். திருமணத்திற்கு, குறிப்பிட்ட அந்த பெண் தயார் என்பதை விளம்பரப்படுத்துவதற்கு, இந்தப் பூப்படைதல் நிகழ்ச்சிகள் பெரிய பங்கு வகித்தன.

பெண்களுக்காக உரிமை என்பது, மிகவும் மிகைபடுத்தப்பட்டுள்ளது. அவர்களின் மாதவிடாய்கால சுகாதாரம் மற்றும் தூய்மையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய `பூப்படைதல்` நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுக்கும்போது, பாலியல் ரீதியாக எடுக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தை அவர்கள் அடையும், அந்த சாதாரண காலம் என்பது மரியாதையை இழக்கிறது" டிஎஸ், 27 வயது பெண்

ஆனால், இந்த காலத்தில், பெண்கள் பூப்படைதல் காலத்திற்கும், திருமணத்திற்கு இடையே பெரிய இடைவேளை உள்ளது. இளம் வயதில் இந்த உடல்ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் பெண்கள், அதிக வயதில்தான் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், பல பெண்கள் பெற்றோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான கலாச்சார முக்கியத்துவத்தை பெண்களிடம் எடுத்துக்கூறி, அவர்களின் கருத்தையும் பெற்றோர் கேட்க வேண்டும்.

 

 

இந்த கால சமூகத்திற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்புள்ளது நேயர்களே?

மகளிரே, இத்தகைய பழக்கவழக்கங்களில் உங்களின் அனுபவம் என்ன?

அதிலும் முக்கியமாக, பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆகப்போகிறவர்களே, உங்கள் பெண் குழந்தைகளுக்கும் இந்த கலாசார முறையை நீங்கள் பின்தொடர்வீர்களா?

"இது வெறும் வயதிற்கு வரும் நிகழ்ச்சி. பல்வேறு கலாசாரங்களில் இவை உள்ளன. இது நம் கலாசார மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதி. யூத ஆண்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சியைப்போன்றது" என்கிறார், வி.கே என்னும் 25 வயது பெண்.

(தமிழ்கல்சர்.காம் (tamilculture.com) என்ற இணையதளத்தில் அனு என்பவர் எழுதிய கட்டுரை இது)

http://www.bbc.com/tamil/india-42745730

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் காண்பிக்காமல்  வீட்டுக்குள்ளேயே பெண்களை பூட்டி வைத்திருந்த ஆதிகால ’’தமிழன்’’ , அவ,கல்யாணத்திற்கு தராராகிவிட்டா என்பதை பிறருக்கு சொல்ல  பெண்கள் பூப்படைதலை  விழாவாக கொண்டாடினானாம்,

மணமேடைவரை மணப்பெண் குத்தாட்டம்போட்டபடியே வரும் நாகரிகத்துக்கு மாறிவிட்ட நவீன தமிழன், இன்றும் பூப்படைதலை விழாவாக்கி கொண்டாடுவதற்கு, பரிசுபொருட்கள் ,பணம் என்ற வருமானம் ஒன்றைதவிர வேற எந்த காரணமும் இல்லை!

புலத்தில் வெள்ளைக்காரர்களைகூட   பூபுனித நீராட்டுவிழாவுக்கு அழைத்து , அவனுக்கு இது என்ன பங்ஷன் என்று விளக்கமும் வேறு கொடுக்கிறார்களாம் நம்மவர்கள், அப்போது அவன் சிம்பிளா ஒரேயொரு கேள்விமட்டும் கேட்கிறானாம்.. ‘’அப்போ ஒவ்வொரு மாதமும் நீங்கள் ஹால் எடுத்து கொண்டாடுவீங்களா’’?

அங்கேதான் அசிங்கம் தலையில் ஏறி சென்று கூடுகட்டி வாழ்கிறது! <_< 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய சடங்கு ஒரு காலத்திற்கு அவசியமாக இருந்தது. பல உறவு முறைகளுக்கு ஏதுவாக இருந்தது. 
இன்றைய காலத்திற்கு அவசியமற்றதாகவே மாறிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சாமத்திய வீட்டு விவாதங்கள் யாழில் கொடிகட்டிப் பறந்த காலமும் உள்ளது. ஆனால் “சாறிப் பார்ட்டி” நடத்தமாட்டோம் என்று சொல்லும் பெற்றோர் எவரையும் இதுவரை புலம்பெயர் நாடுகளில் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழினம்....இதையும் கடந்து பயணிக்க வேண்டும் என்பதே ...எனது விருப்பம்!

விலாசம் காட்டுவதை விடவும்....வேறு நல்ல நோக்கங்கள் எதுவும்....இந்தச் சடங்குகளுக்கு...இப்போது கிடையாது!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

பூப்படைந்த பிள்ளையை வைத்து இப்படிப் போடுற ஆட்டம் மோசமானது. தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இப்படி ஆடம்பரமாக நடைபெறுவதில்லை. இப்போதெல்லாம் அந்தப் பூப்படைந்த சின்னப் பிள்ளையை வைத்து சூட்டிங் எடுக்கிரமாதிரி ஒளிப்பதிவுகள் செய்யிறாங்கள். புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரே இதனை ஊக்குவிக்கின்றார்கள். இந்தத் தறி கெட்ட கலாச்சாரம் இன்னும் நின்ற பாடில்லை. இந்தப் பண விரையத்தையும் பண்பு விலகலையும் தவிர்த்து நல்ல எதிர்காலத் திட்டங்களுக்கு பணத்தைச் செலவு செய்யலாம். நம்மவர்களின் சமூக வாஞ்சையற்ற மோசமான பிற்போக்குப் புத்தியை இன்று வரை எடுத்தியம்பி நிற்பவற்றில் இந்தக் களியாட்டச் சாமத்தியச் சடங்குகள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இதனைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் சார்ந்ததே. இதனை இக்காலத்தில் கொண்டாடுவது தேவையில்லை என்றோ நாகரிமில்லை என்றோ எடுக்க வேண்டியதில்லை. நேர்மறையாக இரண்டு செய்திகள் :

1. பெண்ணின் உடல் சார்ந்த மாற்றம் எதுவும் தீட்டு அன்று; புனிதமானதே;கொண்டாடப்ப்படவேண்டியதே என்று தற்கால மனிதனுக்கும் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குள் பெண் செல்லத் தடை சொல்வதுதான் அநாகரிகம். அந்த சமயத்தில் அவள் கருவறைக்குள் சென்று பூஜையே செய்யலாம் என்றதே பங்காரு அடிகளார் போன்றோரின் வெற்றி.

2. நமது  தாய் வழிச் சமூகத்தில் இது தாய் மாமனுக்குரிய விழாவாகக் கருதப்பட்டது. "எங்கள் குலம் உங்கள் வீட்டிலும் ஆல் போல் தழைக்கப் போகிறது"என்று பெண்ணின் தாய் வீட்டார் வந்து தாய் மாமன் மூலம் நிறுவும் விழா. 'உண்ணாமல் உறவு நில்லாது' என்பது போல 'கொண்டாடினால்தானே உறவு !'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் அடிமையாக இருந்த காலத்தில் தேவையாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் வாழுமா வீழுமா? என்பது அந்த இனத்தில் வாழும் மனிதர்களின் 
அன்றாட வாழ்கை முறையிலேயே தங்கி இருக்கிறது.
ஒவ்வரு தனிமனித செயல்பாடும் ..... எதோ ஒரு வகையில் ஒட்டுமொத்த 
இனத்தையும் பாதிக்கிறது.

அனுமானுக்கு அவர் கோவில் கட்டுகிறார் நீங்கள் விரும்பினால் 
போய்  கும்பிடுங்கள் இல்லாவிட்டால் சும்மா இருங்கள்  என்பதை 
சமூகம் சார்ந்து சித்திப்பவனால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சாயிபாபா  தலையில் துப்பாக்கி வைத்தா அழைக்கிறார் ? 
என்பது அடிமட்ட்மான கேள்வி ........ ஒரு மூட கூட்ட்டம் சமூகத்தில் 
உருவாகி கொண்டு இருப்பதை சிந்திக்க தெரிந்தவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

ஆறறிவை அடகுவைத்த இனம் 
பிரபாகரனை கை  நீட்டும் போதுதான் 
நாங்கள் இங்கே பலருடன் முரண்பட வேண்டி வருகிறது.

இந்த தலைப்பு முன்னைய காலத்து தீட்டு துணி போல
இங்கே தேவையான அளவிட்கு போட்டு துவைத்து காயப்போட்டு கந்தல் 
ஆக்கிய ஒன்று இனி இது பற்றி விவாதிப்பது வீண்........

.......... வேண்டுமானால் ஈழத்தமிழனுக்கு    ஆறாம் அறிவு 
செய்லபடுகிறதா இல்லையா ? எனும் தலைப்பில் விவாதித்தால் 
இவைகள் வெறும் உதிரிகள்தான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.