Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன் அத்தானும் நான்தானே ......!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கண்ணன் என் காதலன்(1968)

வரிகள் : வாலி

இசை : M S விஸ்வநாதன்

பாடியோர் : P சுசீலா & T M சவுந்தரராஜன் .

கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..

மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..
பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..
தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..
மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..

முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ

சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..
மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்
இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பிடித்தமான பாடல் ஒன்று

எனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன்.

1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார்.

மட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த "தயா" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார். 

எமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன்.  பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும். 

அப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந்துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக்  காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார்.  அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு....

"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."

பாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன்.

சில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.  இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். "தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
சிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது. 
இந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட !

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."

சில பாடல்கள் பலபேருடைய வாழ்க்கை அனுபவங்கள் இல்லையா?

மாலைப்பொழுதின் மயக்கத்திலே ...

பிடித்த வரிகள் “ தெளிவும் அறியாது..முடிவும் தெரியாது..மயங்குது எதிர்காலம்..”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகப் போகத் தெரியும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோடு கண் கலந்தால் ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம் .......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அன்னமிட்ட கை(1972)

வரிகள் : வாலி

இசை :K V மகாதேவன்

பாடியோர் :TMS &  S ஜானகி


அழகுக்கு மறுபெயர்
பெண்ணா?
அல்லி மலருக்கு மறுபெயர்
கண்ணா?

தமிழுக்கு மறுபெயர்
அமுதா? - அதைத்
தருகின்ற இதழ்
தங்கச் சிமிழா?

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது!
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது!

அந்திப் பொழுதில் தொடங்கும்!
அன்புக் கவிதை அரங்கம்!

இளமைக்குப் பொருள்
சொல்ல வரவா?
அந்தப் பொருளுக்கு
மறுபெயர் உறவா?

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடிப் பாய்ந்து மறைவதென்ன?
கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன?

அது முதல் முதல் பாடம்!
அடுத்தது என்ன நேரும்?
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்!
அதில் இருவர்க்கும் சரிபங்கு கிடைக்கும்!

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

ஆலிலை மேலே
கண்ணனைப் போலே
நூலிடை மேலே ஆடிடவோ?

ஆடும் போது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ?

பெண்மை மலர்ந்தே வழங்கும்!
தன்னை மறந்தே மயங்கும்!

விடிந்த பின் தெளிவது
தெளியும்!
அது தெளிந்த பின் நடந்தது
புரியும்!

அழகுக்கு மறுபெயர் பெண்ணா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல்.....!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

படம் : சாந்தி(1965)

இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி

வரிகள் :கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென
எடுத்து கையோடு கொண்டானடி

கன்னி என் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் வந்தானடி

வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி
சேராமல் சென்றானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
 நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி

ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
 ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கென சொல்வானடி
வாழ்கென சொல்வானடி

செந்தூர் முருகன் கோவிலிலே
ஒரு சேதியை நான் கேட்டேன்
கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்..கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்... என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்...

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மகனே நீ வாழ்க (1969)

வரிகள்: கண்ணதாசன்

இசை : TR பாப்பா.

பாடியோர் : TMS & P சுசீலா ..

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி - நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா - இந்த  
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊர் என்றவனே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பயணம்(1976)

வரிகள்:கண்ணதாசன்

இசை:MS விஸ்வநாதன்

பாடியவர் : SP பாலசுப்ரமணியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தைத்தரு  பத்தித் திருநகை.....!   🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும்.......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பாவை விளக்கு (1960)

இசை : KV மகாதேவன் 

பாடியோர் : CS ஜெயராமன் & LR ஈஸ்வரி

வரிகள் : மருதகாசி

பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வைரம் (1974)

பாடியோர் : SPB & J ஜெயலலிதா

வரிகள் : கண்ணதாசன்

இசை : TR பாப்பா

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்

கண்மணி ராஜா பொங்குது நாளும்
பார்த்தது போதும்
ஒ ஒ காளைக்கு யோகம்
மங்கள் மேளம் குங்குமக்கோலம்
மணவறை மகிமை
ஹஹ அதுவரை பொருமை
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
.
திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே ஓடையையும் பார்த்தேன்
சிரிப்பாள் என்னை மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்

எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பதைக் கண்டேன்
இன்றே நான் பார்க்கவா இல்லை நாள் பார்க்கவா
ஓஓ அவசரம் என்ன
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
.
இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காணும் வேண்டுமென்றால் அவளிடம் தந்தேன்
கடைக்கண் பேசும் கனிமொழி யாவும் பாலாபிஷேகம்
இடையெனும் பதுமை நடையெனும் தேரில் ஊர்வல கோலம்

மாலை பொண்மாலையா இல்லை பூ மாலையா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ கோவிலில் பார்த்தோம்
.
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஹொ ஹொ ஏங்குது மோகம்
ஹா ஹா பாடுது ராகம்
லா லா ஏங்குது மோகம்
ம்ம் ம்ம் பாடுது ராகம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமலர் சிரிப்பிலே.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் காந்தி ஜேசு பிறந்தது பூமியில் எதற்காக .........!  😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.