Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

தென்றலே நீ செல்வாய் நில்லாமல் செல்வாய்,என்னை தேடும் கண்களை கண்டு காதலை நீ சொல்வாய்....

என்னாயிற்று? திடீரென 64 வருடங்கள் பின்னோக்கி?

நீண்ட நாட்களுக்குப் பின் கேட்கிறேன். நன்றி Suvy

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலைச்சாரலில் இளம் பூங்குயில் ---அதன் 

மார்பினில் ஒரு ஆண்குயில் ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2020 at 10:13 AM, suvy said:

ஓஹோ எந்தன் பேபி, நீ வாராய் எந்தன் பேபி.......!  

மென்மையான குரல் மட்டுமல்ல மெலடியான பாடல்களுக்கும் பொருத்தமானது .எம்.ராஜாவின் குரல்.

தனது அமைதியான குரலால்  பல உள்ளங்களில் புகுந்து இசையால் ஒரு ராஜ்ஜியம் அமைத்த .எம்.ராஜா திடீரெனஓகோ என்தன் பேபிஎன்று ஒரு துள்ளல் பாட்டைப் பாட அது  அன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைத்து. இன்று எழுபது வயதுக்கு மேல் இருக்கும் அன்றைய இளைஞர்கள் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்டால் போதும் அன்றைய காதல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போவார்கள்.

வீதியில் தங்களுக்கு விருப்பமான பெண்கள் போனால் சைக்கிளில் வரும் அன்றைய இளைஞர்களுக்கு பாட வருகின்றதோ இல்லையோ  வாயில் இந்தப் பாடல் கண்டிப்பாக விசில் வடிவமாக (எங்கள் ஊரில் அதைசீக்காய் அடிப்பதுஎன்பர்கள்) வரும்.

மாசிலா உன்மைக் காதலே”, “மயக்கும் மாலை பொழுதே”, “பிருந்தாவனமும் ந்தகுமாரனும்என்று .எம்.ராஜா அன்று பாடிய பல மெலடிப் பாடல்கள் காலம் கடந்தும் வாழ்கின்றன.

பிருந்தாவனமும் ந்தகுமாரனும் பாடலுக்கு நடிகை ஜமுனா பிடிக்கும் அபிநயம் சிரிக்கவைக்கும்.

 

 

ஆனால் பாடல் எவ்வளவு ரசிக்கப்பட்டது என்பதற்கு சீனா பெண்கள் பங்கு கொள்ளும் இந்த வீடியோ ஒரு சாட்சி

 

 

A

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு என்னென்னவோ ரகசியம் 

உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது  உயிரிலே கலந்தது.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்  இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஒருமுறைதான் வரும் கதை பல கூறும் உல்லாச புதுமைகள் காட்டும்  இளமை

கண்ணதாசனின் இந்த வரிகளை பின்னாளில் ஆலங்குடி சோமு பயன்படுத்தியதாக ஒரு சர்ச்சை அப்போது வந்தது.

ஜிக்கியின் குரலில் பாடல் கேட்க இனிமை.

M.N..ராஜம், M.N.நம்பியார் இருவரது முதல் எழுத்துக்களை வைத்தும் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்ததால்  இருவரும் அண்ணன் தங்கை என்று நான் சிறுவனாக இருந்தபோது நினைத்திருந்தேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் விளையாட கட்டிலிடு கண்ணே.........!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்  முடியவில்லை ......!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது 
தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே........!  😄

20 hours ago, Sasi_varnam said:

அருமையான பதிவுகள் ... இன்று தான் பார்க்க நேர்ந்தது 
தொடரட்டும் இந்த கருப்பு வெள்ளை பாட்டு வேட்டை 👌

தொடருகின்றோம், வருகைக்கு நன்றி சசிவர்ணம்........!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமலர் சிரிப்பிலே  கண்களின் அழைப்பிலே.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன ......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன

ஜீவனாம்சம் படத்தில் தொடங்கிய சிவகுமார் - லட்சுமி ஜோடிப் பொருத்தம்  பல படங்களில் தொடர்ந்தது.  அது கண்மணி ராஜாவிலும் தெரிகிறது

பொதுவாக வெளிநாட்டவர்கள் கடற்கரையில் கோர்ட் சூட்டோடு உலாவருவதில்லை. ஆனால் தமிழ்ப்பட ஹீரோக்களுக்கு அது ஏனோ பிடிப்பதில்லை.

நீண,ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன்.

பதிவுக்கு நன்றி Suvy

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அனார்கலி (1955)

பாடியோர்: ஜிக்கி & கண்டசாலா

வரிகள்: தஞ்சை .ராமையா தாஸ்

இசை : ஆதித்ய நாராயண ராவ்

கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ.......(கனிந்த)

காதல் மலரின் மது மேலே
மயங்கும் வண்டு போலே
மகிழும் நாள் ஒன்றே
மதுவின் சுவையாலே இந்நாளே
மலர்ந்தது உன்னாலே......

வலையில் விழும் மானே உன்னால்தானே
நிலையுணர்ந்ததாலே உன்னால் நானே....(கனிந்த)
வெண்ணிலவே உன் வானில் தவழும் பாராய்
கண்ணொளியாக வானில் வளர் தாரா
மனக்கண்ணில் வாழும் எழில் தீரா
கனிவானதே அதன் சுவை காணுதே
இரு மனம் ஒரு மலர் அன்பானதே........(கனிந்த)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலம்தானோ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே, தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ ......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2020 at 9:59 AM, suvy said:

கானா இன்பம் கனிந்ததேனோ  காதல் திருமண ஊர்வலம்தானோ......!   😁

 எனக்குப் பிடித்த பாடல்களில் இந்ததப் பாடல் முதன்மையானது. 2014இல்  இந்தப் பாடலைப் பற்றி நான் எழுதியதை கீழே பதிகிறேன் 

பி. ஆர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப் படம் சபாஸ் மீனா. 1958இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், மாலினி, சந்திரபாபு, சரோஜாதேவி நடித்த ஒரு வெற்றிப் படம். சந்திரபாபுவுக்கு இரட்டை வேடம். இந்தப் படம் நகைச்சுவைப் படமானதால், சிவாஜி கணேசனை விட சந்திரபாபுவுக்குத்தான் படத்தில் அதிக வாய்ப்பு. இதனால் பி.ஆர் பந்துலுவுக்கு சிவாஜி கணேசனை திருப்திப் படுத்த வேண்டிய நிலை. எனவே சபாஸ் மீனா படத்துக்காக அவருக்கான ஒரு மெலடி நிறைந்த பாடல் உருவாகிறது.

சிவாஜி கணேசனுக்கு குரல் கொடுப்பவர் டி. ஏ. மோதி. இவர் ஐம்பதுகளில் ஒரு சில பாடல்களைப் பாடி இருந்தாலும் கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோருடன் போட்டி போட்டு முன்னுக்கு வருவது முடியாமல் இருந்தது. அதிகமாகப் பேசப்படாத அவரால் பாடப் பட்ட இந்தப் பாடலுக்கு இணைந்து குரல் தருபவர் பி.சுசிலா.

மழையில் நனைந்து கொண்டு காதலனும் காதலியும் பாடும் பாடல் காட்சியில் குதூகலத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னாரோ என்னவோ தேவைக்கு அதிகமாகவே சிவாஜி கணேசன் குதூகலத்தைக் காட்டி பாடல் காட்சியில் நடித்திருப்பார். இதில் நடித்த மாலினி பின்னர் சபாஸ் மாப்பிள்ளை திரைப் படத்தில் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். பிறகு திரையில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. 

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
காணா இன்பம் கனிந்ததேனோ 
காதல் திருமண ஊர்வலந்தானோ...


என்று கு.ம. பாலசுப்பிரமணியம் அவர்களது பாடல் வரிகள் மழை போல் அழகாக இருக்கும்.

இவ்வளவு பெரும் மழையில் நனைந்து காதலர்கள் இப்படி மகிழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பின்னாளில் திரைப் படங்களில் வந்ததா தெரியவில்லை. அப்படி வந்திருப்பின் இதுவே முன்னோடி.

இதே மெட்டில் அதே ஆண்டு வெளிவந்த எங்கள் குடும்பம் பெரிது என்ற திரைப்படத்துக்கும் 'ராதா மாதவ வினோத ராஜா எந்தன் மனதின் ப்ரேம விலாசா..' பாடலை  டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்திருப்பார். ஆனாலும் காணா இன்பம் கனிந்ததேனோ.. பாடலில் டி.ஏ.மோதியின் குரல் இனிமையும் பி.சுசிலாவின் கம்மிங்கும் சிவாஜி கணேசன் மாலினியின் நடிப்பும் பாடலுக்கான வரிகளும் அதற்கேற்ற இசையும் குறிப்பாக அந்த பெரு மழையும் அற்புதம்.

மழை பிடிப்பதால் குடை பிடிக்காதவர்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப் போகும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடாத மனமும் ஆடுதே .......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பி.பீ. சிறீனிவாஸை விட ஏ.எம். ராஜவின் குரல் ஜெமினிக்குப் பொருத்தமானது என்பது என் கருத்து.

இந்தப் பாடலைக் கேட்கும் போது “வானோரும் காணாத பேரின்பமே” என்று சொல்லிக் கொள்ளலாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணும் மின்னல்தானோ காதல் கலைதானோ......!   😄

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.