Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனநாட்டிய மேடையில் ஆடினேன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்ட  இடம் துலங்க வரும்  தாய்குலமே வருக.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

தொட்ட  இடம் துலங்க வரும்  தாய்குலமே வருக.

எஸ்.எம. சுப்பையாநாயுடு இசையில் சீர்காழியார் குரல்.

ஜெயலலிதாஅரசியலில் இருந்த போது அவரை வரவேற்பதற்கு இந்தப் பாடல் பயன் படுத்தப் பட்டிருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழகத் தெரிய வேணும்  உலகில் பார்த்து நடக்க வேணும்  பெண்ணே .....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மயங்குகிறாள் ஒரு மாது (1975)

வரிகள்: கண்ணதாசன்

இசை:K விஜயபாஸ்கர்

பாடியோர்: KJ ஜேசுதாஸ்

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
வாழையடி வாழையென
வாழையடி வாழையென
வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்
கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசுக்கு நன்றி சொல்வேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதும் உந்தன் ஜாலமே .....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மனிதன் மாறவில்லை(1962)

இசை: கண்டசாலா

பாடியோர்  : P சுசீலா & A L ராகவன்

வரிகள் : தஞ்சை. ராமையா தாஸ்

காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல் விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ ஆஹாஹாஹ்...(காதல்)

தீர்த்த யாத்திரைக்கு ராமேஸ்வரமும்
திருக்கழுக்குன்றமும் ஏனோ
ஆருயிர் பதியும் அருகிலிருந்தால்
வேறே தெய்வமும் ஏனோ ஆஹாஹாஹ் (தீர்த்த)

புன்னகை வதனம் பூரணச்சந்திரன் போல்
பகலில் நிலவாய் காயவே
உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில்
உலகம் நீலகிரி ஆகவே ஆஹாஹஹா
காதல் யாத்திரைக்கு கொடைக்கானலும்
காஷ்மீரெல்லாம் ஏனோ.......

தந்தை தாயுடன் தமையன் பாசமும்
தங்கள் அன்பினால் காணவே ஆஹாஹாஹ்
பதி ஆதரவே சதியின் மோட்சமென
பழைய சாஸ்திரம் பேசவே ஆஹாஹாஹ்
தீர்த்த யாத்திரைக்கு சிவகைலாசமும்
ஸ்ரீவைகுண்டமும் ஏனோ
உயிரும் உடலும்போல் சதிபதி இருந்தால்
உலகமே சொர்க்கம் ஆகாதோ......(காதல்)..

டிஸ்கி :

லைற்றா.. பிருந்தாவானமும் நந்தகுமாரனும் சாயல் அடிக்குதல்லொ..,👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்.....எஸ்.எஸ்.ஆர்,    எஸ்.வரலட்சுமி.......! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/13/2020 at 10:08 AM, suvy said:

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்.....எஸ்.எஸ்.ஆர்,    எஸ்.வரலட்சுமி.......! 

Suvy, எஸ்.எஸ்.ஆருடன இருப்பது குமாரி கமலா அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kavi arunasalam said:

Suvy, எஸ்.எஸ்.ஆருடன இருப்பது குமாரி கமலா அல்லவா?

படம் - சிவகெங்கை சீமை . ஆண்டு - 1959 - கதை & வசனம் & பாடல் - கண்ணதாசன். பாடியவர்கள் - T.M.S. & சீர்காழி & V.N.சுந்ததம் & லீலா &சுசீலா & T.S.பகவதி & ஜிக்கி & ஜமுனாராணி & கோமளா & ராதா ஜெயலட்சுமி மற்றும் S.வரலட்சுமி - ஆகியோர். இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி ,- இயக்கம் - K.சங்கர்.

 

பாடல்,1) சாந்து பொட்டு தளதளங்க, மிகவும் அருமையான இசையுடன் ஆரம்பித்து, பாடல் முடியும்வரை இசை கூடவே வருகிறது. அதுமட்டுமல்ல, மருதுபாண்டியர் புகழும் சேர்ந்து வருகிறது. பாடல்,2) வீரர்கள் வாழும் திராவிட நாட்டை, பாடல்,3) முத்து புகழ் படைத்து, பரதத்துடன் சங்கீதம் கலந்த , தென்னவர் புகழ் பாடும் அருமையான பாடல். பாடல்,4) கொட்டுமேளம் கொட்டுங்கடி, பாடல்,5) கன்னம் கருத்தகிளி, பாடல்,6) கனவு கண்டேன் நான், இந்த மூன்று பாடல்களுக்கும் விசுவும், ராமுவும் இசையை வாரி வழங்கியுள்ளார்கள். பாடல்,7) தென்றல் வந்து வீசாதோ, சோகத்திலும் ஒரு சுகமுண்டு என்பர். அதை இந்த பாடலில் காணலாம். பாடல்,8) இமையும் விழியும் எதிரானால், பாடல்,9) விடியும் விடியும் என்றிருந்தோம், பாடல்,10) கனவு கண்டேன் ( சோகம்) மனதை கனக்க வைக்கும் சோகப்பாடல்கள். மனதை மயக்கும் பாடல்கள் பல இருந்தும்கூட, படம் வெற்றிபெறாது பெரும் மனக்குறையே.....!

 

நன்றி கவிஅருணாசலம். நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.ஆனால் இவர் s . வரலட்சுமி ....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

இவர் s . வரலட்சுமி ....!  

0-B27-D1-B9-62-A7-44-D3-87-E6-2-EC4-CECF

 

46-D7-DE41-192-E-40-F5-958-B-BFECD0775-F

இவர் குமாரி கமலா

Edited by Kavi arunasalam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : யானை பாகன் (1960)

வரிகள் : புரட்சிதாசன்

இசை:  K.V மகாதேவன்

பாடியோர்: சீர்காழி & P சுசீலா

ஆண்: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

பெண்: ம்..ம்....

ஆண் : செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே..

பெண்:  செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

ஆண் : பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் பருவம்..

பெண்  : சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்..

ஆண்: பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் பருவம்..

பெண் : சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்..

ஆண் : கன்னியின் ஆவல் தனை
கடைக்கண் சொல்லும் கண்ணே..
கன்னியின் ஆவல் தனை
கடைக்கண் சொல்லும் கண்ணே..

பெண்: எண்ணத்தைக் கிள்ளும் அந்த
இன்பத்தை சொல்லும் முன்னே..
எண்ணத்தைக் கிள்ளும் அந்த
இன்பத்தை சொல்லும் முன்னே..

ஆண் : செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே..

பெண்: செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..அலை மோதும் உணர்வாலே கனலாகவே..

ஆண் : உள்ளம் அடிவானம் தொடும்
ஆசைக் கடலாகவே..

பெண் : அலை மோதும் உணர்வாலே கனலாகவே..

ஆண் : உள்ளம் அடிவானம் தொடும்
ஆசைக் கடலாகவே..

பெண் : நிழலாகி உருவான காதல் தன்னை
நிழலாகி உருவான காதல் தன்னை..

ஆண் : நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே..
நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே..

பெண் : செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..

ஆண்: தித்திக்கும் தேன் குடமே
செண்பகப் பூச்சரமே
செங்கனி வாய் திறந்து
சிரித்திடுவாய்..

பெண் : ஆ ஆ ஆ ஆ...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

0-B27-D1-B9-62-A7-44-D3-87-E6-2-EC4-CECF

 

46-D7-DE41-192-E-40-F5-958-B-BFECD0775-F

இவர் குமாரி கமலா

s .வரலட்சுமி......!

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது....ஆனால் சிவகெங்கை சீமை படத்தில் குமாரி கமலா நடித்திருக்கிறாரா .......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது....ஆனால் சிவகெங்கை சீமை படத்தில் குமாரி கமலா நடித்திருக்கிறாரா .......!  🤔

நடித்திருக்கிறார்.

நாம் படத்தில் நடனம் ஆடி திரையுலகுக்கு வந்த குமாரி கமலா பின்னாளில் நடிக்கவும் ஆரம்பித்தார். சிவகங்கைச் சீமையில் அவர் நடிக்கும் போது பிரபல ஓவியரான லட்சுமணனின் மனைவியாக இருந்தார். அதனால் குமாரி கமலா என்ற அவரது பெயர் கமலா லட்சுமணன் என்று திரையில் வர ஆரம்பித்தது. அந்தப் பெயர் மாற்றம் பலருக்குத் தடுமாற்றத்தைத் தந்தது என்பது என்னவோ உண்மை.

கண்ணதாசனின் தமையன் .எல்.சிறீனிவாசின் (இரண்டாவது) மனைவி எஸ்.வரலட்சுமி  ஒரே நேரத்தில் வெளிவந்த சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய இரண்டு படத்திலும்  நடித்திருந்தார்.

Suvy, நீங்கள் ரசிக்கும் சீமானாக இருந்து இந்தப் பாடலை கேட்டு கற்சிலையின் கட்டளகில் கற்பனை செய்து சுகங்களில் கலைகளை அறியுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே.....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆஹா ஹா ஆசைதீர ஆடலாமே ஊஞ்சல்  மேலே....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்(1960)

வரிகள்: R பழனிசாமி

இசை : TG லிங்கப்பா

பாடியோர் : AM ராஜா & P சுசீலா

பெண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ …
ஆண் : ஓஓ …ஓஓ ….ஓஓ ….ஓஓ …
ஆண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

பெண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

ஆண் : நிலம் தந்த பொன் போலே
கலை தந்த தேர் போலே
மலை தந்த மான் இனமே
தமிழ் சிந்து பாடிவா..

பெண் : புகழ் மாலை
வீணே பாடுவதேனோ
பாவையை ஏய்ப்பதற்கோ ஓ
பார்வையில் வேல் எதற்க்கோ..

ஆண் : மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

பெண் : ஒளி வீசும் வான் நிலா
குளிர் ஓடை தேன் மலர்
வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ
இனி என்றும் நம் சொந்தமே..

ஆண் : இயற்கையின் செல்வம்
யாவர்க்கும் சொந்தம்
யாருக்கும் உரிமையில்லை ஓ
ஏன் இதை உணரவில்லை..

ஆண்/பெண் :
மனம் என்னும் வானில்
மழை மேகமாகவே..
ஆசைகள் மேவிடுதே ஓ
அமுதாகும் வாழ்வினிலே ஓ
அமுதாகும் வாழ்வினிலே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா மகள் ரோஜா மலர்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பொன்னித் திருநாள் (1960)
பாடியவர் : P B ஸ்ரீனிவாஸ்
வரிகள்: முத்துசாமி
இசை: K V மகாதேவன்

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே
விளையாடும் வெண்மதி நீதானா
விந்தைகள் பேசும் விண்மீன்கள் கூட்டத்திலே..

விளையாடும் வெண்மதி நீதானா
எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்..

எந்தை முன்னோர்கள் இயல் இசை நாடகம்
பயின்றதெல்லாம் உன்னிடம்தானா..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா..

சோலை நடுவிலே தூய தமிழ் பாடும்
நீல குயிலும் நீதானா..

கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கானில் வாழ்ந்திடும் மானின் இனத்திலே
கவரி மான் என்பதும் உன் இனம்தான..

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே , கண்டுவிட்ட  கோலம் என்ன வெள்ளி நிலவே.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் திருமணம்(1958)

வரிகள்: கண்ணதாசன்

இசை: லிங்கப்பா & சுப்பையா நாயுடு 

பாடியோர்: AM ராஜா & ஜிக்கி

தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ. - தேன்
பொங்கி ததும்பும் கோவை கனிகள்
புன்னகை செய்வதுண்டோ புன்னகை செய்வதுண்டோ

கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும் - கனி
புன்னகை செய்யும் வண்ண நிலவில்
கெண்டை விளையாடும் கெண்டை விளையாடும்

தங்க நிலவில் இன்பக் கதைகள்
சொல்லித் திரிவதுண்டோ....... ஆஆஆஆ

காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே - என்
சிந்தை இனிக்க செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே..... (தங்க நிலவில்)

மாலையின்றி ஒரு மேளமின்றி – தென்றல்
மணம் முடித்தது பூவை
சொந்தம் யாருமில்லாத போதிலும் –இது
யௌவன உலகின் தேவை

வான் வெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய் - கலை
ஞான உலகை பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய் (தங்க நிலவில்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில்  யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா .......!  😁

Edited by suvy
ஏ.பிழை திருத்தம்....!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

துன்பம் நேர்கையில்  யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா .......!

நீண்ட நாட்கள் கேட்காமல் இருந்த பாடல். பாரதிதாசன் பாடல் எழுத ராஜேஸ்வரி பாடியிருப்பார்.

அண்ணாவின் ஓர் இரவு திரைப்படத்தில் (பத்மினியன் அக்கா) லலிதாவுடன் (அமலாவின்  மாமனார்) நாகேஸ்வரராவ்.

ஓரு இரவில் அண்ணாதுரை எழுதிய நாடகம் என்பதால் ‘ஓர் இரவு’ என்று பெயர் வைத்ததாக எங்கோ வாசித்த ஞாபகம். நாடகம் பெற்ற வெற்றி திரைப்படமாக வந்த போது கிடைக்கவில்லை.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை கண்டாலே மனம்போலே.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மந்திரவாதி (1956)

வரிகள்  : கல்யாண்

இசை : லக்ஷ்மணன்

பாடியவர்  : ஜிக்கி

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.