Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கல்லும் கனியாகும் (1968)

இசை : MSV

வரிகள் : புலமைபித்தன்

பாடியவர்:TMS

எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........(எங்கே)

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
உலகம் எல்லாம் காணுகிறேன்
நிலவும் வானும் கடலும் இங்கே
உலகம் என்றால் நாணுகிறேன்......(எங்கே)

சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
இழந்த சிறகை இணைக்க எண்ணி
உனது கையை நீட்டுகிறாய் (எங்கே)

மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்.......(எங்கே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைனர் லைவ்வு ரொம்ப ஜாலி, மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ………. வரும் வரை (ஆசை)

பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில்
வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது

மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை)

வாழ்ந்திருந்தால் தினம் நான்
உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல
நான் உனை சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை)

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பது போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவேயில்லை ...........நாம் ஒன்றானோம் (ஆசை)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உங்கள் விருப்பம் (1974)

இசை : விசய பாஸ்கர்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் :சவுந்தரராஜன் & அஞ்சலி

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா (மஞ்சள்)

தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன்
அதிசய வரவு ஆனந்த உறவு
அரண்மனை காவகல்காரன் தூங்கிவிட்டானா
நாயகன் இங்கே காவலன் அங்கே
நல்ல நேரம் பூஜை செய்ய..... (மஞ்சள்)

கோபுர கலசம் கோவிலின் அழகு
யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா
மாலையும் இல்லை மணவறை இல்லை
மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா
நானொரு பாதி நீயொரு பாதி
நல்ல நேரம் பூஜை செய்ய....... (மஞ்சள்)
நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு
ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு
தழைத்தது நினைவு பலித்தது கனவு
தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு
இனி என்ன வேலை இணைத்தது சேலை
நல்ல நேரம் பூஜை செய்ய...... (மஞ்சள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் .........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மிட்டாய் மம்மி (1976)

இசை : V.குமார்

பாடியோர் : TMS & P சுசிலா

வரிகள் : அவிநாசி. மணி

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் (திருக்)

ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்...........(திருக்)

பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
பூஜைக்குப் போகும் வேளையிலே அவள்
பூமியை மறந்து வந்தாள்

ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர்கலை கூற வந்தாள்
ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்....(திருக்)

பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்

அழகிய இதழ்களில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்.......(திருக்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நீலவானம்(1965)

இசை : MS.விஸ்வநாதன்

வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களே
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களே (ஓஹோஹோ )

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆகலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம் (ஓ ஹோ ஹோ )

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா, அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா.........!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ..........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பெண் ஒன்று கண்டேன்
(1974)
இசை: MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர்கள்:  SPB & P. சுசிலா

காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது

 காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க

பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது  
ஏன் ஏன் ஏன்

மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது
காதலர் கை பட பொங்கி வழிந்தது
தேன் தேன் தேன்

தேன் சுவையோ இல்லை மான் சுவையோ
என நான் துடித்தேன் இந்த வேளையிலே

நான் தரவோ இல்லை நீ தரவோ  
என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்துப் பதிக்க
.
பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு
சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ  
சொல் சொல் சொல்

பாதரசம் என ஓடிடும் பார்வையில்
காதல்ரசம் தரும் கன்னியின் அருகே  
நில் நில் நில்

ஆத்திரமோ இல்லை அவசரமோ - எனை  
அணைத்திடவே இந்த நாடகமோ

நீ அறிவாய் அதை நான் அறிவேன் - இதில்  
கேள்விகள் நூறு கேட்கனுமா
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

காத்திருந்தேன் கட்டியணைக்க..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த இரு மலர்கள் ..........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மாட புறா (1962)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மருதகாசி

பாடியோர் : சூலமங்களம். ராச லெட்சுமி & P சுசீலா

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே (மனதில்)

ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே (மனதில்)..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சூதாட்டம் (1970)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா.

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்..
நடக்கப் போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்...  

விளக்கேற்றி வைக்கிறேன்

மஞ்சளிலிலே நீகொடுத்தாய் மங்கலம்... இந்த
மஞ்சத்திலே நான் அறிவேன் மந்திரம்...
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்... அதைக்
கொஞ்சட்டுமே நீகொடுத்த குங்குமம்... உனைத்
தஞ்சமென தழுவிக்கொண்டது பெண்மனம்... இனி
கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன்மனம்!..

விளக்கேற்றி வைக்கிறேன்

கருணைமிகு மாரியம்மன் துணையிலே.. நல்ல
கல்வியுண்டு செல்வமுண்டு மனையிலே
பொறுமையுடன் பாசமுண்டு பெண்ணிலே... அதன்
பூஜையெல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே... என்
வீடுஎன்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான்.. நான்
வாழ்வு என்பது காண வந்தது இங்குதான்!...  

விளக்கேற்றி வைக்கிறேன்

பருவங்கண்டு ஓடிவரும் மழையிலே... நல்ல
பழங்களுண்டு நெல்லுமுண்டு வயலிலே..
கணவனெனும் மேகம் தந்த மழையிலே.. இளம்
மனைவிடம் மழலை வரும் மடியிலே... நான்
காதல் தெய்வம் காண வேண்டும் பண்பிலே.. நீ
காவல் தெய்வம் ஆகவேண்டும் அன்பிலே..

விளக்கேற்றி வைக்கிறேன் .....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)

இசை : V.குமார்

வரிகள் ; வாலி

பாடியோர் : SPB & P சுசீலா .

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும் ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் (உள்ளத்தில்)

நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ பாடாதோ நான் துயில

அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
போக போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி (உள்ளத்தில்)

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட
பள்ளியறை பாடங்களை புகட்ட
முக்கனியும் சக்கரையும் திகட்ட
முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க (உள்ளத்தில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில இருப்பேன் நான் பார்த்து பார்த்து ரசிப்பேன்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாணத்தாலே கால்கள் பின்ன பின்ன நடக்கும் நாடகமே.......!    😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சிவகாமி (1960)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மு.ஷெரிப்

பாடியவர் :TMS

வானில் முழு மதியை கண்டேன்..

வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே.......!   😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.