Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கல்லும் கனியாகும் (1968)

இசை : MSV

வரிகள் : புலமைபித்தன்

பாடியவர்:TMS

எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........(எங்கே)

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
உலகம் எல்லாம் காணுகிறேன்
நிலவும் வானும் கடலும் இங்கே
உலகம் என்றால் நாணுகிறேன்......(எங்கே)

சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
இழந்த சிறகை இணைக்க எண்ணி
உனது கையை நீட்டுகிறாய் (எங்கே)

மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்.......(எங்கே)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைனர் லைவ்வு ரொம்ப ஜாலி, மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ………. வரும் வரை (ஆசை)

பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில்
வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது

மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை)

வாழ்ந்திருந்தால் தினம் நான்
உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல
நான் உனை சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை)

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பது போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவேயில்லை ...........நாம் ஒன்றானோம் (ஆசை)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உங்கள் விருப்பம் (1974)

இசை : விசய பாஸ்கர்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் :சவுந்தரராஜன் & அஞ்சலி

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா (மஞ்சள்)

தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன்
அதிசய வரவு ஆனந்த உறவு
அரண்மனை காவகல்காரன் தூங்கிவிட்டானா
நாயகன் இங்கே காவலன் அங்கே
நல்ல நேரம் பூஜை செய்ய..... (மஞ்சள்)

கோபுர கலசம் கோவிலின் அழகு
யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா
மாலையும் இல்லை மணவறை இல்லை
மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா
நானொரு பாதி நீயொரு பாதி
நல்ல நேரம் பூஜை செய்ய....... (மஞ்சள்)
நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு
ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு
தழைத்தது நினைவு பலித்தது கனவு
தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு
இனி என்ன வேலை இணைத்தது சேலை
நல்ல நேரம் பூஜை செய்ய...... (மஞ்சள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் .........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மிட்டாய் மம்மி (1976)

இசை : V.குமார்

பாடியோர் : TMS & P சுசிலா

வரிகள் : அவிநாசி. மணி

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் (திருக்)

ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்...........(திருக்)

பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
பூஜைக்குப் போகும் வேளையிலே அவள்
பூமியை மறந்து வந்தாள்

ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர்கலை கூற வந்தாள்
ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்....(திருக்)

பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்

அழகிய இதழ்களில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்.......(திருக்)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நீலவானம்(1965)

இசை : MS.விஸ்வநாதன்

வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களே
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களே (ஓஹோஹோ )

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆகலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம் (ஓ ஹோ ஹோ )

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா, அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா.........!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ..........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பெண் ஒன்று கண்டேன்
(1974)
இசை: MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர்கள்:  SPB & P. சுசிலா

காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது

 காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க

பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது  
ஏன் ஏன் ஏன்

மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது
காதலர் கை பட பொங்கி வழிந்தது
தேன் தேன் தேன்

தேன் சுவையோ இல்லை மான் சுவையோ
என நான் துடித்தேன் இந்த வேளையிலே

நான் தரவோ இல்லை நீ தரவோ  
என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்துப் பதிக்க
.
பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு
சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ  
சொல் சொல் சொல்

பாதரசம் என ஓடிடும் பார்வையில்
காதல்ரசம் தரும் கன்னியின் அருகே  
நில் நில் நில்

ஆத்திரமோ இல்லை அவசரமோ - எனை  
அணைத்திடவே இந்த நாடகமோ

நீ அறிவாய் அதை நான் அறிவேன் - இதில்  
கேள்விகள் நூறு கேட்கனுமா
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

காத்திருந்தேன் கட்டியணைக்க..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த இரு மலர்கள் ..........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மாட புறா (1962)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மருதகாசி

பாடியோர் : சூலமங்களம். ராச லெட்சுமி & P சுசீலா

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே (மனதில்)

ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே (மனதில்)..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சூதாட்டம் (1970)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா.

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்..
நடக்கப் போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்...  

விளக்கேற்றி வைக்கிறேன்

மஞ்சளிலிலே நீகொடுத்தாய் மங்கலம்... இந்த
மஞ்சத்திலே நான் அறிவேன் மந்திரம்...
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்... அதைக்
கொஞ்சட்டுமே நீகொடுத்த குங்குமம்... உனைத்
தஞ்சமென தழுவிக்கொண்டது பெண்மனம்... இனி
கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன்மனம்!..

விளக்கேற்றி வைக்கிறேன்

கருணைமிகு மாரியம்மன் துணையிலே.. நல்ல
கல்வியுண்டு செல்வமுண்டு மனையிலே
பொறுமையுடன் பாசமுண்டு பெண்ணிலே... அதன்
பூஜையெல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே... என்
வீடுஎன்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான்.. நான்
வாழ்வு என்பது காண வந்தது இங்குதான்!...  

விளக்கேற்றி வைக்கிறேன்

பருவங்கண்டு ஓடிவரும் மழையிலே... நல்ல
பழங்களுண்டு நெல்லுமுண்டு வயலிலே..
கணவனெனும் மேகம் தந்த மழையிலே.. இளம்
மனைவிடம் மழலை வரும் மடியிலே... நான்
காதல் தெய்வம் காண வேண்டும் பண்பிலே.. நீ
காவல் தெய்வம் ஆகவேண்டும் அன்பிலே..

விளக்கேற்றி வைக்கிறேன் .....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)

இசை : V.குமார்

வரிகள் ; வாலி

பாடியோர் : SPB & P சுசீலா .

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும் ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் (உள்ளத்தில்)

நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ பாடாதோ நான் துயில

அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
போக போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி (உள்ளத்தில்)

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட
பள்ளியறை பாடங்களை புகட்ட
முக்கனியும் சக்கரையும் திகட்ட
முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க (உள்ளத்தில்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில இருப்பேன் நான் பார்த்து பார்த்து ரசிப்பேன்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாணத்தாலே கால்கள் பின்ன பின்ன நடக்கும் நாடகமே.......!    😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சிவகாமி (1960)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மு.ஷெரிப்

பாடியவர் :TMS

வானில் முழு மதியை கண்டேன்..

வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே.......!   😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.