Jump to content

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி........!  😁

படம்  :பெற்றால் தான் பிள்ளையா (1966)

இசை : MSV 

பாடியோர் : TMS

வரிகள் : வாலி 

கவியரசர் கண்ணதாசன் நினைவு நாளில் அவருடைய அரிய தத்துவ பாடல் ஒன்றை போடுவீர்கள் என்டு எதிர்பார்த்து வந்தனன் தோழர் ..👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்றைப் போடுங்கள்தோழர்........!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பணத்தோட்டம் (1963) 

இசை : MSV & ராமமூர்த்தி

வரிகள் :  கண்ணதாசன்

பாடியவர் : TMS 

குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்
மனிதனுக்குத் தோட்டமடி மனத்தோட்டம் –அந்த
மனிதன் விளையாடுமிடம் பணத்தோட்டம்

மனத்தோட்டம் போடுமென்று
மாயவனார் கொடுத்த உடல்
பணத்தோட்டம் போட்டதேயடி - முத்தம்மா
பணத்தோட்டம் போட்டதேயடி (மனத்)

சங்கத்தால் பிறந்த இனம்
சிங்கம்போல வளர்ந்த குணம்
தங்கத்தால் அழிந்ததேயடி- முத்தம்மா
தங்கத்தால் அழிந்ததேயடி (மனத்)

ஊசி முனைக் காதுக்குள்ளே
ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி- முத்தம்மா
கட்டையிலும் வேகாதடி (மனத்)

எண்ணெயுடன் தண்ணீரை
எப்படித்தான் கலந்தாலும்
இரண்டும் ஒன்று சேராதடி- முத்தம்மா
இயற்கை குணம் மாறாதடி! (மனத்)

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் மலர்சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்  : பருவகாலம்(1974) 
இசை :  தேவராஜன் 
வரிகள்:  புலமைபித்தன் 
பாடியோர் :  மாதுரி 

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவ காலம்...(வெள்ளி)

பாடும் பறவை ஆயிரம் நடுவே
நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்
தந்தேன் எனதுறவை..

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்
இங்கே வரவேண்டும் – இனி
எல்லா நலமும் எல்லா வளமும்
எவரும் பெறவேண்டும்...(வெள்ளி)

முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து
சிந்தும் புன்னகையோ – அலை
மோதும் அருவி என்னைப் போலே
இளமைக் கன்னிகையோ..

அன்னை மடியில் பிள்ளை இருந்தால்
அன்பு பெருகாதோ - கொடி
ஆசைக் கொண்டால் தழுவும் பூவின்
உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977) 
இசை : இளையராஜா 
வரிகள் :  வாலி 
பாடியோர் : SPB & சுசீலா

ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ!

ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க் கவிதை பாடினான் (ஒரு)

தமிழ் கொண்ட வைகைப்போலே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட

பனிப் போல கொஞ்சும் உன்னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட

மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ?
வா.........மெல்ல வா........ (ஒரு காதல் தேவதை)

கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட

மாமல்லன் என்னைக் கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக

ஊடல் எனும் ஒரு நாடகம்
கூடல் தனில் அரங்கேறிடும்
வா........நெருங்கி வா..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடி தேடி காத்திருந்தேன் தெய்வம் என்னை பார்க்கவில்லை .........!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ரங்கராட்டினம் (1971)

இசை V.குமார்

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி 

முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)

ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்

பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம், சோம்பல் இருந்தா ஏற்பது கஷ்டம்......!  👍 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2020 at 06:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: ரங்கராட்டினம் (1971)

இசை V.குமார்

வரிகள் :  கண்ணதாசன் 

பாடியோர் : A.M  ராஜா &  L.R ஈஸ்வரி 

முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ (முத்தாரமே)

ராமன் நெஞ்சிலே சீதை வண்ணமே வாழும் என்று
என் மன்னனோடு நான் சொல்ல வேண்டுமோ இங்கே இன்று
கணவன் மனதிலே களங்கம் கண்டதோ சீதையின் நெஞ்சம்
என் காதல் உறவிலே மாற்றம் காண்பதோ பேதை நெஞ்சம்

பெண்ணல்லவா மனம் போராடுது
நான் சொல்லியும் என் தடுமாறுது (அத்தானிடம்)

தேக்கி வைத்த அணை தாண்டி போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்கும் அல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாதபடி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
காதல் என்னும் நதி பாதை மாறினும் உன்னை சேரும்
உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
மனக் கண்ணிலும் நான் உனைப் பார்க்கிறேன் ..

அருமையான பாடல்.நீண்ட நாளுக்கப்புறம் கேட்கிறேன்.
நன்றி புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்காது ஜம்பம் பலிக்காது என்னைத் தொடவே உம்மாலே முடியாது.....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுக்கோடி உறுமிமேளம் .......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா குடை பிடிக்க ..

படம்: அபலை அஞ்சுகம்(1959) 

வரிகள் : சுரதா

இசை : K.V மகாதேவன்

பாடியோர்: T.R  மகாலிங்கம் & P. சுசீலா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்......!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அழகர் மலை கள்வன்(1959)

இசை :  கோபாலன்

வரிகள் : புரட்சிதாசன்

பாடியோர் :A.L ராகவன் & P.சுசீலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் விழிவாசல் அழகான மணிமண்டபம்........!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனசிலே .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : காவேரி (1955)

இசை : G.ராமநா தன்

வரிகள் : உடுமலை. நாராயணகவி

பாடியோர் : C.S.செயராமன்& சிக்கி

அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ
யாருமில்லா வேளையிலே இந்த வெட்கம் ஏனோ....
இன்பமாம் ராஜபோகம் ஏழைக்கேது ஸ்வாமி
இருவர் நாமும் உறவு கொண்டால் ஏற்குமோ இப்பூமி.....

அரசனென்றாலும் ஆண்டியென்றாலும்
மருவிய காதலிலே பேதமுன்றோ
ஆசையினால் பேசும் வாசகம் நிஜமா
அன்பாலென்றும் ஒன்று சேருமா
சந்தோஷம் தீர்ந்தால் பின் மாறுமா

ஸப்தகலை ஞானமெனும் கடவுள் மீது ஆணை
கனவிலும் என் நினைவிலும் நான் கைவிடேனே மானே....
............???????? வீரமது நாடு
உற்ற துணை நாமேதான் உலகினிலே

வேண்டுமென் பாக்யமெல்லாம்
வேல் விழி நீயல்லவோ
வேண்டாத வீண் புகழ்ச்சி வேண்டுமோ
கண்ணே இன்னும்கூட நாணமா...
அன்பே என் ஆருயிரே அவனியில் நாமே
இன்ப துன்பம் எதுவரினும் இசைந்து வாழுவோமே....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்னும் மேடையின்மேலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது.....!  💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்.......!   👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றுதோறாடிவரும் குமரவடிவேலன் .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கார தேருக்கு சேலை கட்டி .....!   💞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : எங்கள் குடும்பம் பெருசு(1958)

இசை: TG லிங்கப்பா

 பாடியோர்: TMS &  சுசீலா

 வரிகள்: கிருட்டிண மூர்த்தி

ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் பிரேம விலாசா
ராதா மாதவ வினோத ராணி
எந்தன் மனதின் பிரேம விலாசி....(ராதா)

வாடா மல்லிகை பூவனந்தனிலே
மோக மூட்டும் நிலவினிலே
சொர்க்கம் தானே இங்கே நானே
ஆனந்தமானேன் ஆசையினாலே (ராதா)
ஜீவியமெல்லாம் கோகுலவாசி
உலவும் யமுனா நதி நீயே
நானே ராதா மாதவன் நீயே
ஆடுவோம் மகிழ்ந்தே பிரேமையினாலே (ராதா) ..

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.