Jump to content

சுத்தமான தேனிலே மருத்துவம்.


Recommended Posts

சுத்தமான தேனிலே மருத்துவம்.

சுத்தமான் தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லீற்றர் பாலுக்கு ஒரு லீற்றர் தேன் சமமானது. எங்கே மேலே சொல்லவில்லை என்று ஆதங்கப்படவேண்டாம். முதலில இங்க இருக்கிற பெரிய மனிதர்கள் சிலர் நான் சொல்லவருவதிலும் பார்க்க கூட சொல்லாம் என்னும் ஒரிரு தினங்களில் ஆகவே விட்டுப்பிடிப்போமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தமிழ் பரிகாரிகள்(தமிழ் வைத்தியர்கள்) இல்லை இங்கே வாரவை மருத்துவர்களும், பேராசிரியர்களும், எஞ்ஜினியரும் ஆகவே பயப்பிடாம எடுத்துவிடும்

:P :huh:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சுத்தமான தேனிலே மருத்துவம்

சுத்தமான் தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லீற்றர் பாலுக்கு ஒரு லீற்றர் தேன் சமமாகும்.

1. பித்த நீர்ச சுரப்பி இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

2. குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதயநோய் ஆகியவற்றுக்கு தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

3. தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்திபேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல், ஆகிய நோய்கள் குணமாகும். பசியை அது வளர்க்கும் அதே நேரம் ஜீரணத்துக்கும் உதவும்.

4. தேன் தேவையில்லாத படிந்து தொந்தையில் இருக்கும் தீங்குவிழைவிக்கக்கூடிய கொழுப்பினை கரைக்கக்கூடியது. ஆகவே உடல் பருமனாக, தொந்தி பெரிதாக , உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

5. ரத்தப்பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றில் இருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக்கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

6. நமது உடம்பின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப்புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

7. வயதான சிலருக்கு அவ்வப்போது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்கள் குற்றமடைதல், அல்லது குரல் தொனியே இல்லாது தொண் டையை அடைத்து விடுதல் போன்ற கப நோயகள் கண்ட போது, ஒரு நாளைக்கு நலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து குடித்து வந்தால் நல்ல குணம் ஆகும்.

8. முக்கிய மாக இளம் வயதினர், நடுத்தர வயதினர்கள் மக்டொனால்களில் சாப்பிடுவதும், மதுபாணம், சிகரற் பிடிக்கும் பழக்கம் இருக்குமானால் நிச்சயமாக கிழமையில் கடைசிநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் கண்விழித்ததும் சில எழிமையான உடற்பயிற்சிகளினை செய்யவும். இதனால் கை, கால்கள் சுறுசுறுப்பாவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். அதன் பின்பு பல் துவக்கியதும் ஒரு டம்ளரில் வெது வெதுப்பான நீரில் 2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறும், ஒரு மேசைக்கரண்டி தேனும் கலந்து குடிக்கவும். எலுமிச்சை கல்லீரலில் உள்ள நஞ்சை வெளியேற்றும். தேன் உடம்பின் தசைகளை ஈரமாக்கும். தண்ணீர் உடம்பில் சேர்ந்திருக்கும் கெட்ட நீர், உப்பு இவைகளை அகற்றி வெளியேற்றும். அதிகப்படியான நீர்தான் சள்ளை உருவாகவும், உடம்பு ஊதவும் காரணமாகிறது.

Link to comment
Share on other sites

இயற்கையின் வழி தோன்றியதே ஆயுள் வேத மருத்துவம் என்று நான் நினைக்கின்றேன். யாரும் தெரிந்தவர்கள் இதற்கு சரியான் பதிலை உங்களுக்கு தருவார்கள்.

Link to comment
Share on other sites

இயற்கையின் வழி தோன்றியதே ஆயுள் வேத மருத்துவம் என்று நான் நினைக்கின்றேன். யாரும் தெரிந்தவர்கள் இதற்கு சரியான் பதிலை உங்களுக்கு தருவார்கள்.

கை மருந்து. வீட்டு வைத்தியம், இயற்கை வைத்தியம் ஆகிய மூன்றும் ஒன்றைதான் குறிக்கிறது.

நிற்க!

என்னிடம் தேனும் கறுவா பட்டைத்தூளும் கலந்த ஒரு வைத்தியம் சம்பந்தமான .PPS file இருக்கிறது. அதை எப்படி இவ் இழைத்தில் (thread) தரவேற்றுவது என யாராலும் சொல்ல முடியுமா?

நன்றிகள்

Link to comment
Share on other sites

அதுதானுங்க எனக்கும் தெரியுதில்லை. இங்க கேட்கக்கூடாது கத்தனும்.

ஏனங்க உங்களத்தான் இங்க யாராச்சும் எங்களுக்கு உதவி செய்வீர்களா??????????????????? இப்ப கேட்டிருக்கும். யாரு சொக்காட்டியும் மோகன் இதுகளினை கட்டாயம் பார்ப்பார். அடிச்சுச்சொல்லுகிறேன்.

Link to comment
Share on other sites

சர்க்கரை நோய் இல்லாதவரென்றால் உணவு உண்ட சிறிது நேரம் கழித்து படுக்கப்போவதற்கு முன்பு ஒரு தம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேனைக் கல்ந்து குடித்து விட்டுப்படுக்கவும். அலாதியான தூக்கம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேன் மிகச் சிறந்த மருத்துவ குணம் உள்ளது என்பதை நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே அறிந்திருக்கின்றோம்.

புலிப்பாசறை சொன்ன தகவல்களின் படி ஊளைச்சதை குறைய வேண்டுமெனில் காலை எழுந்ததும் காலைச்சாப்பாட்டிற்கு முன்னர் வெதுவெதுப்பான இளஞ்சூட்டு நீரில் தேசிக்காய் பாதி மூடி பிழிந்து இரண்டு மேசைக்கரண்டி தேன் கலந்து குடித்துவர உடல் மெலியும் ஆனால் அதன் பின் பால் கலந்த தேனீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதே வேளை தலைமுடி கொட்டுப்படவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை நோர்வேயில் இருந்து ஒளி/ஒலிபரப்பாகும் தாய்நிலத்திலிருந்த மருத்துவர் டலஸ்(அ)டலிமா அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

சர்க்கரை வியாதிகள் உள்ளவர்கள் தேனைத் தவிர்ப்பது மிக நல்லது.

மாதவிடாய்க்காலங்களின் ஏற்படும் வயிற்றுவலிக்கும் தேன் ஒரு மிகச் சிறந்த நிவாரணி. வறுத்து அரைத்த சீரகத்தூளுடன் தேனைக்கலந்து சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. சாப்பாடும் செரிக்கும்.

காலை வேளையில் பாணை ஆகாரமாகக் கொண்டவர்கள் பாணோடு தேன் தொட்டுச் சாப்பிடுங்கள்.உடல் மினுமினுப்பு அடையும்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.