Jump to content

சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம்


Recommended Posts

சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம்

 
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 20 நிமிடம்தான்! - எப்படி செயல்படுகிறது ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்?படத்தின் காப்புரிமைVIRGIN HYPERLOOP ONE

உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள் பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில் சென்றடைய முடியும்.

இதுதான் ஹைப்பர்லூப் என்னும் அதிநவீன போக்குவரத்து தொழில்நுட்பத்தினுடைய சாராம்சம்.

உலகின் போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பகட்ட ஆய்வுகள் நடக்கும் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திற்கு சென்றது பிபிசி.

இந்த யோசனையை முன்வைத்தது யார்?

ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் யோசனையை முதல் முறையாக முன்வைத்தவர் உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் முன்னணி எலக்ட்ரானிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகிய இரண்டு மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலுள்ள எலான் மஸ்க் ஆவார்.

மஸ்க் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்களையும், தேவையையும் அறிவித்தபோது அமைதி காத்த பல நிறுவனங்கள் அதன் பிறகு இந்த திட்டத்தில் தீவிர ஆர்வத்தை செலுத்த ஆரம்பித்தன.

இது எப்படி செயல்படுகிறது?

காந்த விசையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'மாக்லெவ்' ரயில் முறையை அடிப்படையாக கொண்ட இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், மாக்லெவ் போன்ற ரயில்கள் ஒரு குழாயினுள் செலுத்தப்பட்டு கிட்டதட்ட 1,123 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படும்.

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 20 நிமிடம்தான்! - எப்படி செயல்படுகிறது ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது, காந்த விசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் 'மாக்லெவ்' ரயில்கள் மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இது ஏற்கனவே ஷாங்காய் போன்ற இடங்களில் செயல்பாட்டில் உள்ளது.

ஏற்கனவே காந்த மிதத்தல் தொழில்நுட்பம் மூலம் அதிவேகத்தில் இயக்கப்படும் மாக்லெவ் ரயிலை ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின்படி, ஒருவித குழாயினுள் செலுத்தி இயக்கினால் கிட்டத்தட்ட ஒரு விமானம் செல்லும் வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் அது செல்லும்.

இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

எலான் மஸ்க் இந்த ஹைப்பர்லூப் திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டே வெளியிட்டார். ஆனால், இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்க மற்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விர்ஜின் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ரிச்சர்ட் பிரான்சன் இத்திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இத்திட்டம் தற்போது 'விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்' என்று அழைக்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதா?

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 2021ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இத்தொழில்நுட்பம் இன்னும் சோதனை முயற்சி அளவிலேயே உள்ளது.

அமெரிக்காவிலுள்ள நெவாடா மாகாணத்தில் லாஸ் வேகாசின் வடக்கே 40 மைல் தொலைவில் பாலைவனம் போன்ற பகுதியில் இதற்கான சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை பார்க்கும்போதே அது மிகப் பெரிய முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டம் என்பது தெரிய வருகிறது.

சோதனை முயற்சிக்காக 500 மீட்டர் நீளமுள்ள பாதை அல்லது டேவ்லூப் அமைக்கப்பட்டு 200 உயர் திறன் கொண்ட பொறியாளர்கள் உள்பட 300 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுவரை இதில் மனிதர்கள் பயணித்துள்ளனரா?

இந்த இடத்தில் எண்ணற்ற சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை அதிகபட்சமாக 387 கிலோமீட்டர் வேகத்தில் ஹைப்பர்லூப்பை இயக்கி சோதனையும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 20 நிமிடம்தான்! - எப்படி செயல்படுகிறது ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்?படத்தின் காப்புரிமைAFP

இருந்தபோதிலும், இதுவரை மனிதர்களை ஹைப்பர்லூப்பின் உள்ளே உட்கார வைத்து சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.

புதன் கோளுக்கு கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பி வெற்றிகண்ட நாசாவின் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த அனிதா சென்குப்தா, "சவாலான பொறியியல் பிரச்சனைகளை கொண்ட வேறு கோளுக்கு விண்கலம் அனுப்பும்" முயற்சியிலேயே வெற்றிபெற இயலும்போது பூமியிலேயே மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் வெற்றியடைய முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மேலும், சோதனை மையத்தை நோக்கி சுட்டிகாட்டும் அவர், "இது ஒரு யதார்த்தமான திட்டம், ஏனெனில் நாங்கள் செய்யும் விடயங்களை கண்கூடாக காண முடியுமென்று" கூறுகிறார்.

சுருக்கமாக சொன்னால், "ஒரு வெற்றிட குழாயின் ஊடாக பயணிக்கும் மாக்லெவ் ரயிலே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்" என்று அவர் மேலும் விளக்குகிறார்.

இதில் பயணிப்பது ஆபத்தானதா?

பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானம், அப்போது அது எதிர்கொள்ளும் அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு எவ்வாறு வானத்தில் பாதுகாப்பாக பறக்கிறதோ அதே போன்று ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிப்பதும் பாதுகாப்பானதே என்று அவர் கூறுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், "மக்களுக்கு விமானத்தில் பறப்பதிலோ அல்லது மாக்லெவ் ரயில்களில் பயணிப்பதிலோ பிரச்சனை ஏதுமில்லை என்ற நிலையில், அவை இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது" என்று அனிதா கூறுகிறார்.

இந்த திட்டம் பாதுகாப்பு சான்றிதழை பெற்று வரும் 2021 ஆம் ஆண்டில் வணிகரீதியான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

எலான் மஸ்க் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

"விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்" திட்டத்தை ரிச்சர்ட் பிரான்சன் முன்னெடுத்து வரும் நிலையில், இந்த யோசனையை முதல் முறையாக வெளியிட்ட டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், லாஸ்ஏஞ்சலீஸின் தரைக்கடியில் தனது திட்டத்தை செயற்படுத்தி கொண்டு வருகிறார்.

மேலும், அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனிற்கு அரை மணிநேரத்தில் செல்லும் ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து "வாய் மொழியிலான" சம்மதத்தை கடந்த கோடைகாலத்தின்போதே பெற்றுவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 20 நிமிடம்தான்! - எப்படி செயல்படுகிறது ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்?படத்தின் காப்புரிமைAFP

இந்தியாவிற்கும் வருகிறதா ஹைப்பர்லூப்?

சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடம், சென்னையிலிருந்து மும்பைக்கு 50 நிமிட பயணத்தை சாத்தியப்படுத்தி காண்பிக்க முடியும் என்று கூறுகிறது ஹைப்பர்லூப் நிறுவனம். சென்னை மட்டுமின்றி நாட்டின் மற்ற மெட்ரோ நகரங்களையும் இணைக்கும் பாதைகளை அறிவித்ததுடன் அதில் குறிப்பிட்ட ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான இணைய ஓட்டெடுப்பும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில் மும்பை-பெங்களூரு-சென்னையை இணைக்கும் திட்டம் வெற்றியும் பெற்றிருந்தது.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்ட 'விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன்', இந்தியாவில் தங்களது ஆரம்பகட்ட சோதனைகளை செய்வதற்கான அனுமதியை அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மகாராஷ்டிர அரசாங்கத்துடன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/science-42771697

Link to comment
Share on other sites

  • 1 year later...

Toronto to Montreal Hyperloop Train in under 40 minutes

img

Toronto to Montreal Hyperloop Train – Would you like to get from Montreal to Toronto in 39 minutes, in a futuristic vehicle propelling you through a low-pressure tube at up to 1080 kilometers per hour? Well, that soon may very well be possible with the Toronto to Montreal Hyperloop Train.

Toronto and Montreal are finalists in Hyperloop One’s global competition to build the first ‘hyperloop high-speed transportation system’. The Toronto to Montreal route is one of their top choices. The two cities are major contenders where the company would build one of their first routes in the world.
The proposed route would connect Montreal, Ottawa, and Toronto and would travel 2-3 times faster than high-speed rail and magnetic levitation trains and 10-15 times faster than traditional rail.

https://totimes.ca/toronto-montreal-hyperloop-train-40-minutes/

 

Link to comment
Share on other sites

அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வர இருக்கும் லாஸ்வேகாசின் ஹைபர்லூப் சுரங்கப்பாதை

157759190394762.jpg

அமெரிக்காவின் லாஸ்வேகாசில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக சுரங்கப்பாதை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

லாஸ்வேகாசில் உள்ள மாநாட்டு அரங்கம் முதல் ஸ்ட்ரிப் எனப்படும் காசினோக்கள், ஓட்டல்கள் அமைந்துள்ள பகுதி வரை 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹைபர்லூப் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் எலோன் மஸ்க்கின் போரிங் கம்பெனி ஈடுபட்டுள்ளது.

இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் மிக்க அப்பகுதியில் சாலையைக் கடக்காமல் சுரங்கப்பாதை வழியாகவே சென்றடைய முடியும். கார்களைத் தவிர 16 பேர் அமர்ந்து செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 10 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் இந்த சுரங்கப்பாதை அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக ட்விட்டர் பதிவில் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/94762/அடுத்த-ஆண்டுசெயல்பாட்டுக்கு-வரஇருக்கும்-லாஸ்வேகாசின்ஹைபர்லூப்-சுரங்கப்பாதை

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.