Jump to content

டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !!


Recommended Posts

டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!!

மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும்.

இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம்.

How To Prepare Milk Cake Baklava

உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃப் விஷால் அட்ரியா மற்றும் செஃப் ஜேடபிள்யூ மாரிடேட் இருவரும் இணைந்து விழாக்கள் சமயத்தில் செய்யும் ரெசிபி ஆகும்.

இங்கே நாம் இந்த மில்க் கேக் பக்லவா எப்படி செய்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

மில்க் கேக் பக்லவா
 
PREP TIME
25 Mins
COOK TIME
1H0M
TOTAL TIME
1 Hours25 Mins

Recipe By: செஃப் விஷால் அட்ரியா, செஃப் ஜேடபிள்யூ மாரிடேட்

Recipe Type: டிசர்ட்

Serves: 12 பேர்கள்

INGREDIENTS
  • ப்லோ சீட் - 10

    மில்க் கேக் - 7-8 துண்டுகள்

    நறுக்கிய பிஸ்தா பருப்புகள் - 1/2 கப்

    உருக்கிய தெளிவான வெண்ணெய் - 3/4 கப்

    சர்க்கரை - 2 கப்

    தண்ணீர் - 2 கப்

    ரோஸ் வாட்டர் - 5-6 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
Merken 
HOW TO PREPARE
  • முதலில் பேக்கிங் ட்ரேயை எடுத்துக் கொள்ள வேண்டும்

    மடிக்காத ப்லோ சீட்டை எடுத்து கொள்ளவும்

    இப்பொழுது இந்த ப்லோ சீட்டை பேக்கிங் ட்ரேயில் விரிக்க வேண்டும்

    இப்பொழுது வெண்ணெய்யை கொண்டு ப்லோ சீட்டின் மீது தடவ வேண்டும்.

    ஒரு பெரிய பெளலை எடுத்து அதில் மில்க் கேக்கை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதனுடன் பிஸ்தா பருப்பை சேர்க்கவும்

    உதிர்த்த மில்க் கேக் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக கலக்கவும்.

    இப்பொழுது பெளலில் உள்ள கலவையில் ஒரு சிறிய பகுதியை எடுத்து பேக்கிங் ட்ரேயில் பரப்ப வேண்டும்.

    மறுபடியும் ஒரு ப்லோ சீட்டை அதன் மேல் வைத்து வெண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும். அப்புறம் மில்க் கேக் மற்றும் பிஸ்தா கலவையை பெளலில் இருந்து எடுத்து இன்னொரு லேயர் பரப்ப வேண்டும். இப்பொழுது இன்னொரு ப்லோ சீட்டை எடுத்து அதன் மேல் வைத்து வெண்ணெய்யை அதில் தடவவும்.

    இப்படி லேயர் லேயராக 10 ப்லோ சீட்டுகள் வரை பயன்படுத்த வேண்டும்.

    பத்தாவது ப்லோ சீட் வைக்கும் போது பாஸ்ட்ரியை சற்று அழுத்தி சமமாக இருக்கும் படி செய்யவும்.

    இப்பொழுது வெண்ணெய்யை எடுத்து கடைசி ப்லோ சீட்டில் பரப்ப வேண்டும்.

    இதை ப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1மணி நேரம் குளிர்விக்க வேண்டும். பிறகு அதை எடுத்து அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கனசதுர வடிவத்தில் சிறிய துண்டுகளாக வெட்டவும்.

    பிறகு பேக்கிங் ட்ரேயை 180 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் ஓவனில் வைத்து 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.

    இந்த இடைவேளை நேரத்தில் அடுப்பில் ஓரு கடாயை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

    இப்பொழுது சூடான கடாயில் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

    பிறகு தண்ணீர் சேர்க்கவும்

    நன்றாக சிரப்பை கொதிக்க விடவும். ஒரு மிதமான பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

    பிறகு ஓவனிலிருந்து ட்ரேயை எடுத்து விடவும்.

    இப்பொழுது பேக்கிங் செய்யப்பட்ட கலவை பக்லவா என்று பெயர்.

    இப்பொழுது காய்ச்சிய சர்க்கரை சிரப்பை பக்லவா மேல் ஊற்றி பரப்ப வேண்டும்.

    இப்பொழுது பக்லவா கேக் துண்டுகளை ட்ரேயில் இருந்து எடுக்கவும்.

    சுவையான பக்லவா கேக் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    டேஸ்டியான பக்லவா கேக் இப்போ வீட்டிலேயே ரெடியாச்சு.

     

INSTRUCTIONS
  • பக்லவா ஒரு சிரப் கிரீக் டிசர்ட்.
NUTRITIONAL INFORMATION
  • பரிமாறும் அளவு - 30 கிராம்
  • கலோரிகள் - 1188 கலோரிகள்
  • கொழுப்பு - 80 கிராம்
  • புரோட்டீன் - 18 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 104 கிராம்
  • நார்ச்சத்து - 6 கிராம்

https://tamil.boldsky.com/recipes/milk-cake-baklava/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.