Jump to content

Recommended Posts

சென்னை சூப்பர் கிங்க்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபட்வுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. குருனால் பாண்டியா 41 ரன்கள் எடுத்தார்.

வாட்சன் 3 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

AP18097561473085_21123.jpg

சின்னத்தல ரெய்னாவின் அசத்தல் ஃபீல்டிங்!

1_20099.png

Link to comment
Share on other sites

ஐபிஎல்- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

 

ஐபிஎல் 11-வது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. #VivoIPL #IPL2018 #MIvCSK

 
ஐபிஎல்- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
 
மும்பை:

ஐபிஎல் 11-வது சீசனின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், எவின் லெவிசும் களமிறங்கினர். லெவிஸ் டக் அவுட் ஆனார். ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய இஷான் கிஷானும், சூர்யகுமார் யாதவும் இணைந்து ரன் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்களும், இஷான் கிஷான் 29 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

201804072347541568_1_de1a6bbn._L_styvpf.jpg

அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடனும், குருணல் பாண்டியா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சில் வாட்சன் இரண்டு விக்கெட்களும், இம்ரான் தாஹிர், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

201804072347541568_2_ipl-1._L_styvpf.jpg

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக
ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர்.

மும்பை:

ஐபிஎல் 11-வது சீசனின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், எவின் லெவிசும் களமிறங்கினர். லெவிஸ் டக் அவுட் ஆனார். ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய இஷான் கிஷானும், சூர்யகுமார் யாதவும் இணைந்து ரன் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்களும், இஷான் கிஷான் 29 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடனும், குருணல் பாண்டியா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சில் வாட்சன் இரண்டு விக்கெட்களும், இம்ரான் தாஹிர், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக
ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர்.

ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஷேன் வாட்சன் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து 6-வது ஓவரில் சுரேஷ் ரெய்னா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அம்பதி ராயுடு 22 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனியும் நீடிக்கவில்லை. அவர் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 51 ரன் எடுத்து தத்தளித்தது.

கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுமையாக விளையாடியது. அணியின் எண்ணிக்கை 75 ஆக உள்ளபோது ஜடேஜாவும் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாஹர் டக் அவுட் ஆனார். சென்னை அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி 7 ஓவரில் 82 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன் 8 ரன்களுடனும், மார்க் வுட் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.

பிராவோ மட்டும் தனியாக நின்று போராடினார். இவர் ஐபிஎல் தொடரின் முதல் அரை சதமடித்து அசத்தினார். இவர் 30 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் சென்னை அணி 1 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது,

இறுதியில் மும்மை அணி வித்தியாத்தில் வெற்றி பெற்றது

மும்பை அணி சார்பில் மயங்க் மார்கண்டே 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், முஸ்டாபிசுர் ரகுமான், பும்ரா, மெக்லனேகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு வீழ்த்தினர்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/07234754/1155749/chennai-super-kings-beat-mumbai-indians-in-5-wkts.vpf

Link to comment
Share on other sites

டிவைன் பிராவோவின் பிரமிப்பூட்டும் சாகச அதிரடி: தோல்வியின் விளிம்பிலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

 

 
Bravo

நம்ப முடியாத பிரமிப்பூட்டும் அதிரடியில் வெற்றி பெற்ற சென்னை அணி மற்றும் பிராவோ.   -  படம். | ஏ.எஃப்.பி.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் முதல் போட்டியில் டிவைன் பிராவோவின் தனிமனித பிரமிப்பூட்டும் சாகச அதிரடியில் 169/9 என்று 1 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நம்ப முடியாத வெற்றியை ஈட்டியுள்ளது.

பிராவோவின் நம்ப முடியாத திகைப்பூட்டும் அதிரடி!

   
 

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸும் தொடக்கச் சரிவிலிருந்து மீண்டு இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், குருணால் பாண்டியா அதிரடியில் 165/4 என்று ஒரு நல்ல ஸ்கோரை எட்ட, தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வது ஓவர் முடிவில் 119/8 என்று தோல்வியின் விளிம்பில் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கை 19 பந்துகளில் 29 ரன்களுடன் ஆடி வந்த டிவைன் பிராவோதான்.

18 பந்துகளில் 47 ரன்கள் தேவை, வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 15.66. அப்போதுதான் ரோஹித் சர்மா, முஸ்தபிசுரிடம் கொடுக்காமல் ரன்களை தொடக்கத்திலிருந்தே கொடுத்து வந்த மெக்லினாகனிடம் கொடுக்க, ரோஹித் சர்மா, மும்பை ரசிகர்களின் நகங்கள் காலியாகும் அதிரடி ஆரம்பமானது.

அந்த ஓவரின் முதல் பந்தை இம்ரான் தாஹிர் எதிர்கொள்ள 1 ரன் எடுத்துக் கொடுத்தார். ஸ்ட்ரைக் பிராவோவிடம் வந்தது.

முதல் பந்து மோசமான பந்து என்று கூற முடியாது தரையிலிருந்து பெயர்த்து பவுலர் தலைக்கு மேல் நேராக மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார் பிராவோ. அடுத்த பந்து பேடில் விழுந்தது, ஆனாலும் அடிப்பதற்கு போதிய இடமோ காலமோ இல்லாத நிலையிலும் ஒரே தூக்குத் தூக்கினார் மிட்விக்கெட்டில் மீண்டுமொரு அதிர்ச்சி சிக்ஸ். அடுத்த பந்து லாங் ஆனில் தட்டிவிட்டு 2 வேக ரன்களை எடுத்தார். அடுத்த பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரே இழுப்பு இழுக்க பவுண்டரிக்குப் பறந்தது. 18வது ஓவரின் கடைசி பந்தை சிங்கிளுக்குத் தட்டி விட்டு 19வது ஓவரில் பேட்டிங்குக்கு வந்தார் பிராவோ. மெக்லினாகன் ஓவரில் 20 ரன்கள்!

bravo2jpg

பிராவோவின் பேய் சிக்சில் ஒன்று.   -  [படம். | ஏ.எஃப்.பி.

 

19வது ஓவரை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா வீச முதல் பந்து யார்க்கர் மிஸ் ஆக சற்றே ஒதுங்கிக் கொண்டு லாங் ஆஃப் மேல் மிகப்பிரமாதமான ஒரு சிக்சரை அடித்தார் பிராவோ, அடுத்த பந்தும் யார்க்கர் மிஸ் ஆகி புல்டாஸ் ஆக மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்ஸர். அடுத்த பந்து சிங்கிளாக இருந்திருந்தால் இம்ரான் தாஹிர் ஸ்ட்ரைக்குக்கு வந்திருப்பார், ஆனால் ஓவர் த்ரோவில் 2வது ரன் வந்தது. அடுத்ததாக பும்ராவின் ஸ்லோ யார்க்கர் சரியாக விழ மட்டையை பிராவோ கீழே இறக்க பந்து ஸ்டம்பில் பட்டது, ஆனால் பைல்கள் விழவில்லை, மும்பையின் துரதிர்ஷ்டம், சென்னையின் அதிர்ஷ்டம். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸாக அமைய மிட்விக்கெட்டில் மீண்டும் பந்து சிக்சருக்குப் பறந்தது. அடுத்த பந்து ரவுண்ட் த விக்கெட்டில் பும்ரா வீச ஷார்ட்டாக வைடாக வீசினார் பிராவோ அடிக்க ரோஹித்திடம் கேட்ச் ஆனது. அப்போது இந்த ஷாட்டை அடித்திருக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் 7 பந்துகளில் 7 ரன்கள்தான் தேவைப்பட்டது.

பிராவோ 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீச வந்தார். 13வது ஓவரில் இடது காலில் காயம் ஏற்பட்டு பெவிலியன் சென்ற கேதார் ஜாதவ் மீண்டும் களமிறங்கினார். 7 ரன்கள் தேவை என்ற நிலையில் முஸ்தபிசுர் வீசிய முதல் 3 பந்துகளில் ரன்கள் வரவில்லை, மும்பைக்கு நம்பிக்கை பிறந்தது. அப்போதுதான் ஒரு ஏ.பி.டிவில்லியர்ஸ் ஷாட் ஒன்று ஜாதவ்வுக்குக் கைகொடுத்தது, முஸ்தபிசுர் வீச லேசாக ஆஃப் திசையில் நகர்ந்து மண்டியிட்டு மட்டையை பந்திற்கு கொடுத்து பைன் லெக் மேல் ஒரு தூக்குத் தூக்கினார் அது சிக்ஸ் ஆனது ஆச்சரியம்தான்.

2 பந்து 1 ரன் எடுத்தால் வெற்றி. ரோஹித் சர்மா அனைவரையும் முன்னால் கொண்டு வந்தார், ஆனால் ஜாதவ் கவர் திசையில் அருமையான பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல்-க்கு வந்து முதல் போட்டியிலேயே, அதுவும் தோல்வியின் வாயிலிருந்து ஆட்டத்தைப் பிராவோ பிடுங்கி வர அபாரமான வெற்றி பெற்றது.

இளம் லெக் ஸ்பின்னர் மார்க்கண்டே, ஹர்திக் பாண்டியா அபாரம்!

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஷாட் தேர்வு, அடிப்பதற்கு சரியான பவுலர்களை தேர்வு செய்யாதது என்று ஏகப்பட்ட தவறுகளைச் செய்து விக்கெட்டுகளை மடமடவென இழந்தது.

தொடக்கத்தில் ஷேன் வாட்சன் (16), அம்பாட்டி ராயுடு (22) ஆகியோர் 22 பந்துகளில் 27 ரன்கள் என்ற நம்பிக்கைத் தொடக்கத்தைக் கொடுத்தனர். அப்போது ஹர்திக் பாண்டியாவிடம் வாட்சன் வீழ்ந்தார், மெதுவான் விரல் பந்து அது வாட்சன் கணிக்கவில்லை லாங் ஆனில் கேட்ச் ஆனார். ரெய்னா 4 ரன்களில் மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்துக்கு பலியானார்.

ஹர்திக் பாண்டியா மிடில் ஸ்டம்பில் ஷார்ட் ஆக வீச ஒதுங்கிக் கொண்டு புல்ஷாட் ஆடிய ரெய்னா மிட் ஆனில் குருணால் பாண்டியாவிடம் ஆட்டமிழந்தார்.

markandejpg

தோனியை வீழ்த்திய மகிழ்ச்சியில் மயங்க் மார்க்கண்டே.   -  படம். | பிடிஐ.

 

அடுத்ததாக இளம் லெக்ஸ்பின்னர் மார்க்கண்டே, 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆடிவந்த ராயுடுவை வீழ்த்தினார், ராயுடு தேவையில்லாமல் ஒரு ஸ்வீப் ஷாட்டை ஆட கூக்ளியில் எல்.பி.ஆனார்.

அடுத்த அதிர்ச்சி கேப்டன் தோனி, இவர் 5 ரன்களில் மார்க்கண்டேயின் கூக்ளியில் பின்னால் சென்று கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். களநடுவர் அதை எப்படி நாட் அவுட் என்று கூறினார் எனத்தெரியவில்லை, தோனிக்கு அவுட் கொடுக்க பயந்திருப்பார். ஆனால் ரிவியூவில் தோனி நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.

ஜடேஜாவுக்கு இந்த ஆட்டம் மோசமாக அமைந்தது, பவுலிங்கில் ஒரே ஓவர் 9 ரன்கள் பேட்டிங்கில் 12 ரன்களில் முஸ்தபிசுர் கட்டரை மிக மோசமாக ஆடி வெளியேறினார். 5/75 என்று ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கேதார் ஜாதவ்வுடன் பிராவோ இணைந்தார். ஜாதவ் பவுண்டரி வறண்டு போனபோது மார்க்கன்டேயை இறங்கி வந்து ஒரு சிக்ஸ் தூக்கினார். பிராவோ இறங்கி மார்க்கண்டேயை நேராக மிக அழகாக ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் தேவையில்லாமல் மார்க்கண்டே பந்தை மேலேறி வந்து அடிக்கப்போய் ஸ்டம்ப்டு ஆனார். 13வது ஓவரில் கேதார் ஜாதவ் இடது தொடை சதைப்பிடிப்பினால் பெவிலியன் திரும்ப சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பிக்கை அற்றுப் போனது. ஹர்பஜன் சிங் இறங்கி பந்தை நன்றாக டைமிங் செய்தார், ஒரு பவுண்டரி அடித்தார். அதுவும் மிஸ்பீல்ட். ஹர்பஜன் சிங்கும் 8 ரன்களில் மெக்லினாகன் பந்தை தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மார்க் உட் 1 ரன்னில் ஹர்திக் பாண்டியாவின் 3வது விக்கெட் ஆனார். அப்போதுதான் 17 ஓவர்கள் முடிவில் 119/8. பிராவோ மட்டும் 29 ரன்களில் கிரீசில் இருந்தார், அதன் பிறகுதான் மெக்லினாகன், பும்ரா என்று விளாசித்தள்ளி வெற்றிக்கு அருகில் கொண்டு விட்டு அவுட் ஆனார். பிறகு மீண்டும் இறங்கிய கேதார் ஜாதவ் மிக அருமையான பைன்லெக் சிக்ஸ், கவர் பவுண்டரி மூலம் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்ட நாயகன் பிராவோ. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்குக் காரணமான மெக்லினாகன் 4 ஓவர்கள் 44 ரன்கள், பும்ரா 4 ஓவர்கள் 37 ரன்கள், முதல் 2 ஓவர்களில் 8 ரன்கள்தான். பாண்டியா 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மார்க்கண்டே 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நம்ப முடியாத வெற்றி.

2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ஒரு அபாரத் தொடக்கம் இந்த முதல் போட்டி.

http://tamil.thehindu.com/sports/article23469424.ece

Link to comment
Share on other sites

ரகசியம் உடைந்தது: பொலார்டும், பிராவோவும் 400 எண் கொண்ட ‘ஜெர்சியை’ ஏன் அணிந்தார்கள் தெரியுமா?

 

 
chennai

சிஎஸ்கே வீரர் டிவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட்: கோப்புப் படம்   -  படம்: பிடிஐ

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ ஆகியோர் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை (ஆடை) ஏன் அணிந்தார்கள் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் 2 இலக்கம் எண்கள் கொண்ட ஜெர்சிகளையே அதிகமாக அணிவார்கள். அதிலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே 3 இலக்க எண்களை அணிவார்கள். சில வீரர்கள் ஜெர்சி எண்ணை தங்களின் ராசியாக எடுத்துக்கொண்டு அதை மாற்றாமல் விளையாடுவார்கள்.

இந்நிலையில், 11-வது ஐபில் சீசனில் மும்பையில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டிவைன் பிராவோவும் 400 எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார்கள்.

இது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது, இருவரும் ஏன் 400 எண் கொண்டஜெர்சி ஏன் அணிந்தார்கள் என்று கேள்வி எழுப்பிக்கொண்டனர். ஒருவேளை இருவரும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் என்பதால் ஒரே மாதிரி எண் கொண்ட ஜெர்சியை அணிந்தார்களா என்றும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒருவிக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்த வெற்றிக்கு பின் ஆட்ட நாயகன் விருது பெற்ற டிவைன் பிராவோவிடம் இது குறித்து ஊடகத்தினர் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:

''நானும், பொலார்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இருவரும் இப்போது வெவ்வேறு அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இருவருக்கும் டி20 போட்டியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

டி20யில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் பொலார்ட் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. அதேபோல ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு லீக், மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரும் நான்தான்.

இந்த சாதனையை குறிப்பிடவே நாங்கள் இருவரும் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்தோம். அதன்படி முதல் போட்டியில் அதுபோல் அணிந்து விளையாடினோம்.

எனக்கும், பொலார்டுக்கும் இந்த சாதனை என்பது மிகப்பெரிய மைல்கல்லாகும். இது தொடர்பாக பொலார்டும் அவரின் அணி நிர்வாகத்தில் பேசினார். நானும் பேசி இந்த முடிவெடுத்தேன்.

30 வயதுக்கு மேல் செல்லும் போது உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். நான் காயத்தில் இருந்து மீண்டும் வந்து நீண்ட நாட்களுக்குப் பின் அணியில் இடம் பிடித்துள்ளேன். எனக்கு 24 வயது கிடையாது. ஆதலால், எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என்பதால், தொடக்கத்தில் மெதுவான ஆட்டத்தை விளையாடி அதன்பின் அதிரடியாக பேட் செய்தேன். வீரருக்கு உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம்.

என் மீது கேப்டன் தோனி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், அதற்குரிய இடத்தையும் சிஎஸ்கே அணியில் எனக்கு கொடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் என்னுடைய பங்கு என்பதே, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதுதான். அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.''

இவ்வாரு பிராவோ தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23471360.ece?homepage=true

Link to comment
Share on other sites

என் வேலை முடியாததால், 50 ரன்கள் அடித்தும் நான் பேட்டை உயர்த்தவில்லை: மனம் திறந்தார் பிராவோ

 

Dwayne-Bravo-CSK-MI-Sportzpics-380

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டிவைன் பிராவோ   -  படம்: பிசிசிஐ

அணியை வெற்றி பெறவைக்க வேண்டும் என்கிற என்னுடைய வேலை முடியாததால், 50 ரன்களைக் கடந்தபின்பும் நான் பேட்டை உயர்த்தவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ தெரிவித்தார்.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த 11-வது ஐபிஎல் சீசனின் முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது. டிவைன் பிராவோ அதிரடியாக பேட் செய்து 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

வெற்றிக்கு பின் ஊடகங்களிடம் டிவைன் பிராவோ பேசியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இணைந்தபின் நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இந்தப் போட்டியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சிறப்பான இன்னிங்ஸை இதற்கு முன் நான் விளையாடியதில்லை . இது எனக்கு சிறப்பாக அமைந்துவிட்டது.

நான் களமிறங்கியதில் இருந்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இருந்தது. அதுதான் எனது வேலையாக இருந்தது. என் வேலை முடியாததால், நான் அரை சதம் அடித்தபோதும் கூட பேட்டை உயர்த்தவில்லை. இன்னும் வெற்றிக்கு அதிக தூரம் போக வேண்டும், ஆதலால் பேட்டை உயர்த்துவதைக் காட்டிலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில்தான் ஆர்வமாக இருந்தேன்.

கடைசி ஓவரில் நான் ஆட்டமிழந்தபோது மிகவும் வேதனைப்பட்டேன். அணியின் வெற்றிக்காக இத்தனை நேரம் விளையாடிவிட்டு கடைசி நேரத்தில் ஆட்டமிழக்கிறோமே என்று வருந்தேனேன். ஆனால், வெற்றி கிடைத்தபின் மகிழ்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.

என்னால் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்ய முடியாவிட்டாலும் கூட, இந்தப் போட்டியில் நான் விளையாடியது மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால், இந்த நாள் எனக்கானதால் அதை நான் எடுத்துக்கொண்டேன். நான் களத்தில் நின்று பும்ரா என்ன மாதிரியான பந்துவீசினாலும், ஸ்விங் செய்தாலும் அடித்து விளாசுவது மட்டுமே குறிக்கோளாக இருந்தேன். வான்ஹடே மைதானத்தில் பந்தை நாம் ஒரு லென்த்தில் வீசினாலும், அது பிட்ச் ஆகும் இடம் வேறு மாதிரி இருக்கும் என்பதால், நிதானமாகவே பேட் செய்தேன்.

கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டபோது, ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்தாலும் பந்துவீச்சாளர் நெருக்கடிக்கு ஆளாவார் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் கடைசி நேரத்தில் அடித்து ஆடினேன்

வெற்றிக்கு அருகே வந்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பின் என்னுடைய ‘கேப்டன் கூல்’ தோனி என்னை பாராட்டுவார் என நினைத்தேன். ஆனால், பெரிதாக ஒன்றும் பாராட்டவில்லை. நன்றாக பேட் செய்தீர்கள் என்று மட்டும் தெரிவித்தார். ஏனென்றால் எனது திறமையை நன்கு அறிந்தவர் தோனி, என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார்

இவ்வாறு பிராவோ தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23472074.ece?homepage=true

Link to comment
Share on other sites

காவிரி போராட்டம் எதிரொலி: சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் கேரளாவுக்கு மாற்றம்?

 

 
ipl

சென்னை சேப்பாக்கம் மைதானம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடந்த போராட்டம்: கோப்பு ப்படம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் கேரளாவுக்கு மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தபின், அந்தத் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தது.

இதனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழக்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடயே வரும் 10-ம் தேதி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிலர் போட்டி நடத்தும் இடத்துக்கு சென்று காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டத்தை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் கேரளாவின் திருவனந்தபுரம், அல்லது கொச்சி நகருக்கு மாற்றப்படலாம் என்று செய்திகள் வந்தன.

வரும் 10-ம் தேதி சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியைத் தவிர்த்து வரும் 20-ம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கெனவே கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினை இருக்கும் நிலையில், பெங்களூரு அணி சென்னையில் விளையாடுவது சர்ச்சையை ஏற்படுத்தலாம். இதனால், இந்தப் போட்டி மற்றும் அடுத்து வர இருக்கும் சில போட்டிகளை கொச்சின் அல்லது திருவனந்தபுரத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

இது குறித்து கேரள கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஜேயேஷ் ஜார்ஜ் கூறியதாவது:

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் இது தொடர்பாக நேற்று இரவு என்னுடன் பேசினார். இன்று பிசிசிஐ, ஐபிஎல் உயர் அதிகாரிகள் அமிதாப் சவுத்ரி, ராஜீவ் சுக்லா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளை மாற்றுவது குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார்கள்.

திருவனந்தபுரம், கொச்சி நகரில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விருப்பமாக இருப்பதாக நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

கொச்சியில் மிகச்சிறப்பான முறையில் கிரீன்பீல்ட் ஸ்டேடியம் தயாராகி இருக்கிறது. இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த மைதானம் தயாராக இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது.

ஒருவேளை திருவனந்தபுரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும், தமிழர்கள் சாலை மார்க்கமாக எளிதாக வந்து போட்டியைக் காணலாம். ஏறக்குறைய 8 மணிநேரத்தில் திருவனந்தபுரத்தை அடைந்துவிடலாம்.

 இவ்வாறு ஜேயேஷ் ஜார்ஜ் தெரிவித்தார்.

ஆனால், ஒரு தனியார் செய்திச் சேனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன், சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது என்று கூறியிருப்பதாக செய்தி ஒளிபரப்பாகியதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23472812.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2-வது ஆட்டம்- டெல்லியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

 
அ-அ+

லோகேஷ் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டதால் டெல்லியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #KXIPvDD

 
 
 
 
ஐபிஎல் 2-வது ஆட்டம்- டெல்லியை எளிதாக வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
ஐபிஎல் 11-வது சீசனின் 2-வது ஆட்டம் சண்டிகரில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி டெல்லி அணியின் கொலின் முன்றோ, கவுதம் காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முன்றோ 4 ரன்னில் ஆட்டமிழக்க, கவுதம் காம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (11), விஜய் சங்கர் (13) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 13 ரன்னில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த காம்பீர் 42 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

201804082024452664_1_rahul002-s._L_styvpf.jpg

அதன்பின் வந்த கிறிஸ் மோரிஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 27 ரன்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

பின்னர் 167 ரன்னகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 14 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 2.5 ஓவரில் 50 ரன்னைத்தொட்டது.

அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 16 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய அகர்வால் 5 பந்தில் 1 சிக்சருடன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் 22 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய கருண் நாயர் சிறப்பாக விளையாடி 33 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

201804082024452664_2_gambhir002-s._L_styvpf.jpg

இருவரின் சிறப்பான அரைசதங்களால் மற்ற வீரர்கள் நிதானமாக விளையாடினார்கள். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/08193257/1155860/IPL-2018-Kings-XI-punjab-beats-Delhi-daredevils-by.vpf

Link to comment
Share on other sites

ஐபிஎல் 3-வது ஆட்டம்- கேகேஆர்க்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

 
அ-அ+

ஐபிஎல் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 177 ரன்களை இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்துள்ளது. #IPL2018 #KKRvRCB #RCBvKKR #VivoIPL

 
 
 
 
ஐபிஎல் 3-வது ஆட்டம்- கேகேஆர்க்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி
 
 
கொல்கத்தா:
 
ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பியூஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி, மெக்கல் உடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மெக்கல்லம் நரேன் பந்தில் போல்டாகி வேளியேறினார்.
 
201804082143216164_1_iplkkr._L_styvpf.jpg
 
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 23 பந்தில் ஐந்து சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே விராட் கோலி 33 பந்தில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதிஷ் ராணா பந்தில் போல்டானார். 
 
இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் வினய் குமார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 
 
இதன்மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 177 ரன்களை இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.  #IPL2018 #KKRvRCB #RCBvKKR #VivoIPL
 
Link to comment
Share on other sites

ஐபிஎல் 3-வது ஆட்டம் - 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா

 

ஐபிஎல் 3-வது ஆட்டத்தில் சுனில் நரேனின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. #IPL2018 #KKRvRCB #RCBvKKR #VivoIPL

 
 
 
 
ஐபிஎல் 3-வது ஆட்டம் - 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா
 
கொல்கத்தா:

ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

201804082348114520_1_7ry5suxf._L_styvpf.jpg

கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி, மெக்கலமுடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மெக்கல்லம் நரேன் பந்தில் போல்டாகி வேளியேறினார்.

201804082348114520_2_ipl2._L_styvpf.jpg

அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 23 பந்தில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். விராட் கோலி 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் வினய் குமார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 177 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேனும் கிரிஸ் லின்னும் இறங்கினர். ஆட்டத்தின் 2வது ஒவரில் கிறிஸ் லின் 5 ரன்களில் அவுட்டானார். அடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

201804082348114520_3_ipl1._L_styvpf.jpg

சுனில் நரேன் தனது அதிரடியை ஆரம்பித்தார். அவர் 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து நிதிஷ் ரானா இறங்கினார். உத்தப்பா 12 ரன்களில் வெலியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

நிதிஷ் ரானாவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 55 ரன் ஜோடி சேர்த்த நிலையில், நிதிஷ் ரானா 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரிங்கு 6 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார், அவர் 9 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வினய்குமாருடன் சேர்ந்து தினேஷ் கார்த்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 35 ரன்களுடனும், வினய்குமார் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2018 #KKRvRCB #RCBvKKR #VivoIPL

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/08234811/1155882/kolkatta-beat-bengalore-in-4-wickets-ipl-2018.vpf

Link to comment
Share on other sites

நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்: விராட் கோலி ஒப்புதல்

 

 
kohlijpg

ஏமாற்றத்துடன் கோலி.   -  படம். | ஏ.எஃப்.பி.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்- 2018 போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 200 ரன்களை எட்டியிருக்கலாம் ஆனால் கேப்டன் விராட் கோலி வழக்கத்துக்கு மாறாக படுமந்தமாக ஆடி 33 பந்துகளில் 31 ரன்களையே எடுத்ததும் தோல்விக்குக் காரணமாகியது.

அதாவது ரன் எடுக்காத டாட் பால்கள் கோலி பேட்டிங்கில் அதிகம், இதை அவரே ஒப்புக்கொண்டார். கோலி இறங்கும் போது ரசிகர்கள் மைதானம் நெடுக ‘கோலி.. கோலி’ என்று கோஷம் எழுப்பி உசுப்பேற்றிய போதும் கூட கோலி பேட்டிங் நேற்று சோபிக்கவில்லை.

 

இதனை அவரும் ஒப்புக் கொண்டு பேசியுள்ளார். கோலி இறங்கி முதல் 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் வீசிய 5வது ஓவரில் கடைசி 3 பந்துகளில் இரண்டு பந்துகளை மிட் ஆஃபுக்குத் தள்ளிவிட்டார், ரன் இல்லை, கடைசி பந்தை பவுலரிடமே தள்ளி விட்டார் ரன் இல்லை. இத்தனைக்கும் குல்தீப் யாதவுக்கு சரியான லைன் கிடைக்கவில்லை இதே ஓவரில்தான் ஒரு லெக் திசை மோசமான பந்தில் 5 வைடுகள் சென்றது.

பிறகு சாவ்லாவின் அடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு பந்தையும் கோட்டை விட்டார் கோலி. 7வது ஓவரில் நரைனின் முதல் 2 பந்துகள் பிறகு கடைசி 2 பந்துகள் கோலி ரன் எடுக்காமல் டாட் பால்களாக மாறியது. மொத்தம் அவர் சந்தித்த33 பந்துகளில் 11 பந்துகள் ரன் இல்லாத டாட் பால்களானது. இந்த 11 பந்துகளில் அவர் குறைந்தது 15 ரன்களையாவது எடுத்திருந்தால் அப்படியிப்படி என்று 200 ரன்கள் பக்கம் வந்திருக்கும்.

இந்நிலையில் சுயவிமர்சன ரீதியாக விராட் கோலி கூறியது:

15 ரன்கள் குறைவாக எடுத்தோம். நான் உட்பட ஏகப்பட்ட டாட் பால்கள் (ரன் இல்லாத பந்துகள்), நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்.

பகுதி நேர ஸ்பின்னரிடம் டிவில்லியர்ஸும் நானும் அடுத்தடுத்து அவுட் ஆனோம். அது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்தப் போட்டியிலிருந்து நிறைய பாசிட்டிவ் அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம். ஸ்பின்னர்கள் பவுலிங் செய்வது கடினமாக அமைந்தது.

இவ்வாறு கூறினார் கோலி.

தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஏ.பி.டிவில்லியர்ஸ், கோலி கடைசி வரை நின்றிருந்தால் கடினமாக அமைந்திருக்கும். ஆனால் எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. ரசிகர்கள் அபாரம், ரசிகர்களுக்காகத்தான் ஆடுகிறோம், இப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவும் இப்படிப்பட்ட அணிக்காகவும் ஆடுவதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article23478269.ece?homepage=true

Link to comment
Share on other sites

"சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடந்தே தீரும்" சொல்கிறார் ராஜீவ் சுக்லா!

 
 

சென்னையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என ஐ.பி.எல் தொடரின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்

காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தின் பல இடங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உண்ணாவிரதம், ரயில் மறியல், கடையடைப்பு போன்ற பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு அமைப்பினரும் மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

csk_15076.jpg

காவிரி விவகாரத்துக்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். தற்போது சென்னையில் நடைபெறும் போட்டிகள் மக்களைப் பிரிக்கும் செயல். தமிழகப் போராட்டங்களை மறைக்கவே ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகின்றன என பல கருத்துகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா நடைபெறாதா என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும் என ஐ.பி.எல் சி.இ.ஓ தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஐ.பி.எல் தொடரின் சி.இஓ. ராஜீவ் சுக்லா, “திட்டமிட்டபடி சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும். அதற்காகப் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களை ஐபிஎல் போட்டிகளில் கலக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/india/121657-ipl-matches-in-chennai-will-be-held-as-per-the-schedule-says-ipl-chairman-rajiv-shukla.html

Link to comment
Share on other sites

நரேன் அதிரடி ஆட்டத்துக்கு காரணம்?: கேப்டன்ஷிப்பில் கோட்டை விட்டாரா கோலி?

 

 
sunil-narine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரேன்   -  படம் உதவி: ட்விட்டர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனுக்கு எதிராக சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் திறன்மிக்க வகையில் பயன்படுத்தாமல்விராட் கோலி தவறு செய்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன்.

இடது கை ஆட்டக்காரரான சுனில் நரேன், 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

இந்நிலையில், பேட்டிங்கில் அதிக நிபுணத்துவம் இல்லாத சுனில் நரேன் முதல் போட்டியில் புகழின் உச்சத்துக்கு சென்றுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் சுனில் நரேனின் அதிகபட்சமே 30 ரன்கள்தான். மற்றவகையில் பல்வேறு நாடுகளில் நடந்த லீக் ஆட்டங்களில் அதிகபட்சம் 79 ரன்கள் வரை சேர்த்துள்ளார்.

எனினும் அதிலும் சராசரி என்பது 30 ரன்களுக்கு மேல் கிடையாது. அப்படி இருக்கும் போது, நரேனின் திடீர் அதிரடிக்கு காரணம் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் விராட் கோலி முறையாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுனில் நரேனைப் பொறுத்தவரை டி20 போட்டிகளி்ல் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவரின் ரன் சேர்ப்பு திறன் என்பது 15.93 சதவீதமும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 36 சதவீதமாகும். அதாவது சுழற்பந்துவீச்சு மூலம் நரேனின் ரன்குவிப்பை 69 சதவீதம் கட்டுப்படுத்த முடியும், வேகப்பந்துவீச்சில் 51 சதவீதம் கட்டுப்படுத்த முடியும் என்று இஎஸ்பிஎன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த கால நரேனின் பேட்டிங்கையும், எந்த பந்துவீச்சில் அதிகமாக ஆட்டமிழந்துள்ளார் என்று ஆய்வு செய்தால், கடந்த 36 இன்னிங்ஸ்களில் 29 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த 18 இன்னிங்ஸ்களில் 6 முறை மட்டுமே சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

அப்படி இருக்கும் போது, நரேனுக்கு எதிராக ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் திறமையாக கேப்டன் விராட் கோலி கையாண்டு இருக்கலாம். அதாவது, அவர் அடித்து ஆடத் தொடங்கும்போதே வேகப்பந்துவீச்சுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

ஆனால் நேற்றையப் போட்டியில், நரேனின் சேர்த்த அரைசதத்தில் 30 ரன்கள் வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு மூலம் கிடைத்தவையாகும்.

மேலும், ஆப்-ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசும் போது, லாங்-ஆப் திசையில் எந்தவிதமான பீல்டரையும் கோலி நிறுத்தவில்லை. அதேபோல லெக் ஸ்பின்னர் சாஹல் பந்துவீச வரும்போது, டீப் மிட்விக்கெட்டில் பீல்டர்களை நிறுத்தாமல், அதிகமாகன இடைவெளி இருந்தது. இது நரேன் அடித்துஆடி ரன் சேர்க்க முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த இடைவெளியில் பீல்டர்களை நிறுத்தி இருந்தால், ரன்வேகத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம், விக்கெட்டையும் எடுத்திருக்கலாம்.

மேலும், கிறிஸ்வோக்ஸ் பந்துவீச்சும் அதிகமான அளவில் அவுட் ஸ்விங் ஆக வந்தது. அந்த நேரத்தில் ஆப்-ஸைடில் பீல்டர்களை அதிகமாக நிறுத்தாமல் விட்டதும் நரேனின் அதிரடியாக சில ஷாட்களை அடிக்க முக்கியக் காரணமாகும்.

அதன்பின், நரேனுக்கு எதிராக பந்துவீச உமேஷ் யாதவ் அழைக்கப்பட்டார். இவரின் சிலபந்துகளை அடித்த நரேன், லோ-புல்டாஸ் பந்தை அடிக்க முடியாமல் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகினார்.

kohlijpg

விராட் கோலி

 

ஆதலால், நரேனுக்கு எதிராக சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் விராட் கோலி சரியாக கையாளாமல் விட்டுவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23480106.ece

Link to comment
Share on other sites

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

Link to comment
Share on other sites

ஐபிஎல் 4-வது ஆட்டம்- ஐதராபாத் அணிக்கு 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 126 ரன்களை இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. #IPL2018 #SRHvRR #RRvSRH #VivoIPL

 
 
ஐபிஎல் 4-வது ஆட்டம்- ஐதராபாத் அணிக்கு 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
 
 
ஐதராபாத்:
 
ஐபிஎல் 11-வது சீசனின் 4-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அஜிங்கியா ரகானே, டார்கி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன்பின் சஞ்சு சாம்சன், ரகானே உடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 13 ரன்கள் எடுத்த ரகானே ஆட்டமிழந்தார்.
 
201804092206482495_1_ipl0904-1._L_styvpf.jpg
 
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். சஞ்சு சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 17 ரன்களும், ஷ்ரேயாஸ் கோபால் 18 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி பந்துவீச்சில்

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/09220648/1156091/IPL-2018-Rajasthan-Royals-set-126-as-target-for-Sunrisers.vpf

Link to comment
Share on other sites

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது #SRHvRR

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பின்னடைவு?- கேதார் ஜாதவ் ஐபிஎல்-லிருந்து விலகல்

 

 
jadhav

கேதார் ஜாதவின் அதிசய சிக்ஸ்.   -  படம். | விவேக் பெந்த்ரே

ஐபிஎல் முதல் போட்டியில் கடைசியில் முக்கியமான சிக்சரை அடித்து பிராவோவின் அதிரடியை வெற்றியாக உறுதி செய்த கேதார் ஜாதவ் இடது தொடை தசைநார் பிரச்சினை காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலும் விலகுகிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4ம் நிலையில் இறங்கிய கேதார் ஜாதவ், ஒரு சிக்சருடன் போராடி வந்த போது 13வது ஓவரில் தசைப்பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பினார், பிறகு பின்னால் இறங்கி கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற போது கடினமாகப் போராடி ஒரு அபாரமான சிக்சர் கைகொடுக்க ஸ்கோர்கள் சமமாக, பிறகு பவுண்டரி அடித்தது சிஎஸ்கேயின் நம்பமுடியாத வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் அவர் காயம் தீவிரமடைந்த நிலையில் ஐபிஎல் போட்டி முழுதும் அவர் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மைக் ஹஸ்ஸி கூறும்போது, “இன்னும் அவருக்கான மாற்று வீரரைத் தேர்ந்தெடுக்கவில்லை.இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்புதான், அவர் ஒரு சிறந்த வீரர், அணியில் முக்கியமான வீரர், அவரது இடத்தைப் பூர்த்தி செய்வது எங்களுக்கு ஒரு பெரிய பணிதான்:” என்றார்.

சிஎஸ்கே அணி ரூ.7.8 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது. இதனையடுத்து அம்பாட்டி ராயுடு நடுவரிசைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது. முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

காயமடைந்த டுபிளெசிசும் நாளை சென்னையில் நடக்கும் போட்டிக்கு தயாராக மாட்டார் என்றே தெரிகிறது. மொஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக நடைபெறும் போட்டிக்குத்தான் டுபிளெசிஸ் தயாராவார் போல் தெரிகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/article23483317.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018: தவான் அரைசதத்தால் ராஜஸ்தான் ராயல்சை எளிதாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 

ஐபிஎல் கிரிக்கெட்டின் 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. #IPL2018 #SRHvRR #RRvSRH #VivoIPL

 
 
ஐபிஎல் 2018: தவான் அரைசதத்தால் ராஜஸ்தான் ராயல்சை எளிதாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
ஐதராபாத்:

ஐபிஎல் 11-வது சீசனின் 4-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

201804092315080704_1_ipl0904-1 - Copy._L_styvpf.jpg

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அஜிங்கியா ரகானே, டார்கி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். ஷார்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதன்பின் சஞ்சு சாம்சன், ரகானே உடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 13 ரன்கள் எடுத்த ரகானே ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். சஞ்சு சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 17 ரன்களும், ஷ்ரேயாஸ் கோபால் 18 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் அணி பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

201804092315080704_2_ipl-srh._L_styvpf.jpg

இதன்மூலம் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 126 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரிதிமான் சஹா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். சஹா 5 ரன்கள் மட்டுமே எடுத்து உனத்கட் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் தவான் உடன், கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். சிறப்பாக விளையாடிய தவான் அரைசதம் கடந்தார்.

ஐதராபாத் அணி 15.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #IPL2018 #SRHvRR #RRvSRH #VivoIPL

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/09231508/1156098/IPL-2018-Sunrisers-Hyderabad-beat-Rajasthan-Royals.vpf

Link to comment
Share on other sites

பேட்டிங் கவலைகளுடன் தோனியின் சிஎஸ்கே: தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தாவை முறியடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

 

 
dinesh-dhoni

2009-ல் தினேஷ் கார்த்திக், தோனி.   -  படம்.| ஏ.எஃப்.பி.

கடந்த ஞாயிறன்று பார்ட் டைம் ஸ்பின்னர், சுனில் நரைன் என்ற அதிரடி வீரரை வைத்து பயங்கர ஸ்டார்கள் நிறைந்த பெங்களூரு அணியை ஊதிய தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணியை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செவ்வாயன்று சந்திக்கிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டக்காரர்கள், அரசியல் சக்திகள் சென்னையில் போட்டிகளை நடத்தக் கூடாது என்று குரல் கொடுத்து வரும் நிலையில் போட்டிகளை மாற்ற வாய்ப்பில்லை என்று பிசிசிஐயின் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

 

அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டிவைன் பிராவோ மட்டுமே பேட்டிங்கில் பார்மில் இருப்பது தெரிய வந்தது. மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை, சென்னை அணி இன்னமும் சரியாக ‘ஜெல்’ ஆகவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பவுலிங்கில் தீபக் சாஹர், ஷேன் வாட்சன், பிராவோ தவிர மற்றவர்கள் சரியாக வீசவில்லை.

பெரிய கவலை ஹர்பஜன் சிங், மற்றும் ஜடேஜாவின் பந்து வீச்சு ஆகும். இம்ரான் தாஹிரையே அன்று மும்பை புரட்டி எடுத்தனர். மார்க் உட் பந்து வீச்சும் 40 ரன்களுக்கும் மேல் சென்றது.

மாறாக தன்னம்பிக்கையின் உச்சத்தில் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா அணி களமிறங்குகிறது, ஒரு புறம் தமிழகத்தைச் சேர்ந்த 8 பந்து 23 ரன்கள் வெற்றி புகழ் தினேஷ் கார்த்திக் தன் சொந்த மைதானத்தில் வேறு அணிக்குக் களமிறங்குகையில், ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனி தலைமையில் நாளை ஆட்டம் சேப்பாக்கம் ரசிகர்களினால் களைகட்டும் என்று கருத இடமுண்டு.

சென்னையில் ஆடிய போட்டிகளில் சிஎஸ்கே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது மட்டுமே சிஎஸ்கேயின் வலுவாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே தங்கள் சொந்த மண்ணான சென்னை பிட்ச் நிலைமைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அணி என்றே பலராலும் கருதப்படுகிறது. ஆனால் ஸ்பின் பந்து வீச்சில் சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, ராணா ஆகியோர் சிறந்து விளங்குகிறார்கள், குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஸ்பின்னில் வீழ்த்துவது கடினமானது.

சென்னை அணியின் பேட்டிங் கவலைகள்:

கேதார் ஜாதவ் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து காயம் காரணமாக விலகியதையடுத்து சென்னை மிடில் ஆர்டரில் ஒரு பெரிய துளை விழுந்துள்ளது, டுபிளெசிஸ் இன்னமும் விரல் காயத்திலிருந்து விடுபடாததால் மொஹாலியில் அடுத்து கிங்ஸ் லெவன் அணிக்கு எதிராகவே களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முரளி விஜய்யும் வலைப்பயிற்சியின் போது விலா எலும்பில் அடி வாங்கியதால் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவர் விளையாடத் தயார் என்று கூறிய ஹஸ்ஸி, இருந்தாலும் கேப்டனின் உள்ளுணர்வு என்ன கூறுகிறதோ அதன்படியே தேர்வு நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

முரளி விஜய், ஷேன் வாட்சன் தொடக்கத்தில் களமிறங்க கேதார் ஜாதவ் இடத்தில் ராயுடு களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. மிகப்பெரிய தொடர் என்பதால் ஒரு வெற்றியை அதுவும் பிராவோ அடித்ததை மட்டும் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னம்பிக்கையுடன் ஆடுவதாகக் கூற முடியவில்லை. சுரேஷ் ரெய்னா இன்னமும் கூட தன் ஷார்ட் பிட்ச் பந்து பலவீனத்தை சரி செய்து கொள்ளாமல் ஆடுவது அவரது முயற்சியின்மையையே காட்டுகிறது. அன்று கூட ஹர்திக் பாண்டியாவே அவரை சோதனைக்குள்ளாக்கியதைப் பார்த்தோம்.

ஹோம் கமிங் அல்லது தாய்வீடு திரும்புதல், தல தோனி, என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்தாலும் நாளை வெற்றி பெற்றால்தான் சென்னை அணியைப் பற்றி முழுதாக அறுதியிட முடியும். சென்னை அணியில் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பற்றியும் உறுதியாக எதுவும் கூற முடியவில்லை. அதுவும் இளம் வீரர்கள் மேல் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாத போது அவர்கள் எப்படி உத்வேகம் பெற முடியும்? எவ்வளவு இளம் வீரர்கள் அதிக ரன்கள் பட்டியலில் வந்துள்ளனர் என்று கேள்வியை அன்று அவர் முன் வைத்ததோடு, வயதான் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்தது உண்மைதான் என்று ஒப்பும் கொண்டுள்ளார். எனவே சென்னை அணிக்கு கவலைகள் அதிகம்.

மேலும் ஸ்பின் பிட்ச் என்றாலும் கொல்கத்தா அணியில் சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் உள்ளனர். இவர்களை அடித்து நொறுக்கும் சாத்தியம் அங்கு ஷேன் வாட்சன், பிராவோ ஆகியோருக்கு உள்ளது, தோனி தன் ஆட்டப்பாணியை மாற்றினால்தான் அணிக்கு உத்வேகம் பிறக்கும். அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள 5-ம் நிலையில் களமிறங்குவதுதான் சரி.

மேலும் இங்கிலாந்தின் டாம் கரன் கொல்கத்தா அணியில் ஆடினால் அவரது யார்க்கர்கள், வேகம் குறைந்த பந்துகள் பெரும் சென்னைக்கு ஒரு தலைவலியாக அமையும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு, உள்ளூர் சாதகம் என்று சென்னைக்கு வெற்றி சூழ்நிலைகள் அதிகம் என்றாலும் சிங்கத்தை அதன் குகைக்குள் வந்து பிடரியைப் பிடித்து உலுக்கப்போவதும் இன்னொரு சிங்கம் தினேஷ் கார்த்திக்தான் என்பதை மறுதலிக்க முடியாது.

மார்க் உட்டுக்குப் பதில் ஒன்று லுங்கி இங்கிடி இறங்கலாம் அல்லது ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றே தெரிகிறது.

கொல்கத்தா அணியில் யு-19 உலகக்கோப்பையில் கலக்கிய 2 அதிவேகப் பவுலர்களான நாகர்கோடி, மால்வி ஆகியோரும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. எது எப்படியிருந்தாலும் இன்னொரு செம ரகளைப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாகக் காத்திருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23483570.ece?homepage=true

Link to comment
Share on other sites

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று ஐபிஎல் ஆட்டம்: சென்னை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை

 

 
10CHPMUGROUND

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் எழில்மிகு தோற்றம்.   -  படங்கள்: ம.பிரபு

10CHPMUCSKTEAM

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்.

10CHPMUGROUND

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் எழில்மிகு தோற்றம்.   -  படங்கள்: ம.பிரபு

10CHPMUCSKTEAM

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வருடங்கள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ 30 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பிரதானமான காரணமாக இருந்தார்.

51 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து நம்பிக்கை தளர்ந்திருந்த நிலையில் பிராவோ சரிவில் இருந்து அணியை மீட்டிருந்தார். கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் தனது அசாத்தியமான பேட்டிங்கால் வெற்றியை சாத்தியமாக்கினார். அதிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற திறமையான பந்து வீச்சாளருக்கு எதிராக பிராவோ மட்டையை சுழற்றியது பிரம்மிக்க வைத்தது.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவையாக இருந்த சூழ்நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தன்னால் ஒரு அடி கூட ரன் சேர்ப்பதற்காக ஓட முடியாது என்ற சூழ்நிலையில் முதல் 3 பந்துகளை வீணடித்த கேதார் ஜாதவ் அடுத்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி வெற்றியை பதிவு செய்த விதம் சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு பெருக்கி உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு ஆகியோரும் அவர்களை தொடர்ந்து களம் புகுந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறினர். பிராவோவின் அதிரடி, கேதார் ஜாதவின் சாமர்த்தியம் ஆகியவை எடுபடாமல் இருந்திருந்தால் அந்த ஆட்டத்தில் சென்னை அணி மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்திருக்கும்.

இதேபோல் பந்து வீச்சில் மார்க் வுட், வாட்சன், தீபக் ஷாகர் ஆகியோர் சற்று நெருக்கடி கொடுத்த போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் கைப்பற்றத் தவறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். முரளி விஜய், ஷர்துல் தாக்குர் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 2 வருடங்களுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் களமிறங்கும் சென்னை அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்ளக்கூடும்

அதேவேளையில் புதிய கேப்டனான தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த சீசனை விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று முன்தினம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் சிங்கத்தை (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை) அதன் குகையிலேயே இன்று சந்திக்கிறது கொல்கத்தா.

பெங்களூரு அணிக்கு எதிராக நித்திஷ் ரானா, சுனில் நரேன் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கினர். 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் சுனில் நரேன் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசி மிரட்டினார். பந்து வீச்சிலும் சுனில் நரேன் சோடை போகவில்லை. 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் நித்திஷ் ரானா பந்து வீச்சில் டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோரது விக்கெட்களை ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் பேட்டிங்கில் 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்த கூட்டணியிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்களைத் தவிர தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் 35 ரன்கள் சேர்த்து தனது பங்களிப்பையும் நேர்த்தியாக வழங்கியிருந்தார். ஆட்டம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையிலும் தினேஷ் கார்த்திக் அவசரம் காட்டாமல் இறுதி வரை நிதானமாக பேட் செய்த விதம் பாராட்டுக்குரிய வகையில் அமைந்தது.

கொல்கத்தா அணி கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் தனது முதல் ஓவரில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் கடைசி ஓவரில் 16 ரன்களை தாரைவார்த்தார். எனினும் மற்ற பந்து வீச்சாளர்களான பியூஸ் சாவ்லா, மிட்செல் ஜான்சன், சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாகவே செயல்பட்டனர். இவர்களில் ஜான்சன், சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடித் தரக்கூடும். பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

சுனில் நரேனுக்கு எதிராக பெங்களூரு அணியினர், சரியான கள வியூகம் அமைக்கத் தவறினர். அதாவது வாஷிங்டன் சுந்தரும், கிறிஸ் வோக்ஸூம் ஒரே நீளத்தில் பந்து வீசினர். இவை, சுனில் நரேன் பெரிய அளவில் ஷாட் மேற்கொள்வதற்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் லாங்-ஆப், டீப் மிட்விக்கெட் திசையிலும் பீல்டர் நிறுத்தப்படாததை சுனில் நரேன் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் இந்த விஷயத்தில் சென்னை அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். சுனில் நரேன் விக்கெட்டை விரைவாக கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

 

அணி விவரம்

சென்னை: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, ஷர்துல் தாக்குர், டு பிளெஸ்ஸிஸ், மார்க் வுட், சேம் பில்லிங்ஸ், இம்ரன் தகிர், தீபக் ஷாகர், லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், கனிஷ்க் சேத், மோனு சிங், துருவ் ஷோரே, கிஷித்ஸ் சர்மா, சைதன்யா பிஷ்னோய், ஹர்பஜன் சிங்.

கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸல், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நிதிஷ் ரானா, நாகர்கோட்டி, ஷிவம் மாவி, ஜான்சன், சுப்மான் கில், வினய் குமார், ரிங்கு சிங், டெல்போர்ட், ஜவோன் சீயர்லெஸ், அபூர்வ் வான்கடே, இஷாங் ஜக்கி, டாம் குர்ரன்.

வேறு இடத்துக்கு மாற்றமா?

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்படும் என்ற கருத்து நிலவுகிறது.அது உண்மையல்ல. சென்னை ஆட்டங்களை மாற்றும் திட்டம் ஐபிஎல் நிர்வாகத்திடம் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் தினங்களில் கூடுதல் பாதுகாப்பு தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே திட்டமிட்டப்படி போட்டிகள் சென்னையில் நடைபெறும். நாளை (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

கேதார் ஜாதவ் விலகல்

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி கூறும்போது, “தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேதார் ஜாதவ் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது எங்களுக்கு துரதிருஷ்டவசமானதுதான். அவருக்கான மாற்று வீரரைத் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை.இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்புதான், அவர் ஒரு சிறந்த வீரர், நடுகள வரிசையில் முக்கிய வீரராகவும் திகழ்ந்தார்” என்றார்.

கேதார் ஜாதவ் விலகி உள்ளதால் நடுகள வரிசையை பலப்படுத்தும் விதமாக தொடக்க வீரரான அம்பாட்டி ராயு நடுகள வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் துருவ் ஷோரே வாட்சனுடன் தொடக்க வீரராக களமிறக்குவது குறித்தும் சென்னை அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23487389.ece?homepage=true

Link to comment
Share on other sites

சுழற்பந்து முக்கிய பங்கு வகிக்கும்: பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கருத்து

 

 
10CHPMUDHONU

ஆடுகளத்தை பார்வையிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் சென்னை - கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியளார் மைக்கேல் ஹசி தெரிவித்தார்.

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

டு பிளெஸ்ஸிஸ் இன்னும் முழுமையாக பயிற்சியில் ஈடுபடவில்லை. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்தில் இருந்து அவர் குணமடைந்து வருகிறார். ஏற்கெனவே அருக்கு கை விரலில் லேசான முறிவும் ஏற்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்கள் அவர், பயிற்சியில் ஈடுபட தொடங்குவார். பஞ்சாப் அணிக்கு எதிராக 15-ம் தேதி நடைபெறும் ஆட்டத்துக்கான அணி தேர்வுக்கு டு பிளெஸ்ஸிஸ் தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

முரளி விஜய் தொடக்க கால பயிற்சியின் போது காயம் அடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மெதுவாக குணமடைந்து சிறப்பான நிலையில் விளையாடுவதற்கு தயாராக உள்ளார். அம்பாட்டி ராயுடுவும் சிறந்த வீரர்தான். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். அதேவேளையில் தற்போது முரளி விஜய்யும் சிறப்பாக பந்துகளை எதிர்கொள்கிறார். இதனால் பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு அணித் தேர்வு என்பது மகிழ்ச்சியான தலைவலிதான்.

சேப்பாக்கம் ஆடுகளம் நன்றாகவே உள்ளது. சிறிய அளவில் உலர்ந்த நிலையில் ஆடுகளம் காணப்படுகிறது. இதனால் இரு அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என நான் எதிர்பார்க்கிறேன். பொதுவாக ஆடுகளம் பார்க்க சிறப்பாகவே உள்ளது. அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வேண்டும்.

கேதார் ஜாதவ் இழப்பு பெரிதுதான். காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் காயம் அடைந்திருப்பது துரதிருஷ்டவசமானதுதான். அவர் இல்லாத இடத்தில் ஏற்பட்டுள்ள பெரிய துளையை நாங்கள் அடைக்க வேண்டும். முதல் நான்கு இடங்களில் களமிறங்கும் வீரர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டும்.

கொல்கத்தா அணிக்கு எதிரான மோதலை இளம் வீரர்களுக்கும், அனுபவ வீரர்களுக்குமான மோதலாக நான் பார்க்கவில்லை. கொல்கத்தா அணி தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது. அந்த அணியில் சுழற்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. வெற்றியை தேடித்தரக்கூடிய சில வீரர்களும் அங்கே இருக்கிறார்கள். குறிப்பாக கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல். கொல்கத்தா அணி தங்களது சொந்த பேட்டிங் அல்லது பந்து வீச்சால் வெல்லாம்.

சிறந்த அணிகள் பொதுவாக அனுபவம் வாய்ந்த சில வீரர்களை கொண்டிருப்பார்கள். என் மனதில் தோன்றுவது என்னவென்றால் எந்த அணி நெருக்கடியான நிலையில் திறனை சிறந்த திறனை வெளிப்படுத்தும் என்பதுதான். இரு அணியிலுமே உயர்ந்த திறன்கள் கொண்ட வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் தரமான போட்டியை பார்க்கலாம்.

இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article23487422.ece

Link to comment
Share on other sites

சன் ரைசர்ஸிடம் ராஜஸ்தான் சரண்; ராகுல் திரிபாதியை தொடக்கத்தில் இறக்காமல் தவறு செய்தது

 

 
sun%20risers

ரஹனே விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சன் ரைசர்ஸ்   -  படம். | பிடிஐ.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2018 4வது போட்டியில் நேற்று கேன் வில்லியம்சன் தலைனை சன் ரைசர்ஸ் அணியிடம் ரஹானே தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்தது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் (49) தவிர யாரும் சோபிக்கவில்லை, இதனையடுத்து 20 ஒவர்களில் 125/9 என்று மடிந்தது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி ஷிகர் தவண் (77), கேன் வில்லியம்சன் (36) ஆகியோர் பேட்டிங்கில் 15.5 ஓவர்களில் 127/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக் உயரமானவர் என்பதால் இந்தப் பிட்சில் பந்துகளை அவரால் நன்றாக எழும்பச் செய்ய முடிந்தது. அபாய அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் (5) விக்கெட்டையும் ஸ்டான்லேக் கைப்பற்றினார். வில்லியம்சனின் அபாரமான கேட்ச் அது.

ஆப்கான் அதிசய ஸ்பின்னர் ரஷீத் கான் (1/23) மற்றும் ஷாகிப் அல் ஹசன் (2/23) ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியை பாடாய் படுத்தி நடு ஓவர்களில் ஏற்கெனவே நிலையை விட்டு நகராத ராஜஸ்தான் தேரின் சக்கரங்களுக்கு மேலும் முட்டுக்கட்டைப் போட்டனர். சித்தார்த் கவுல் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ராயல்ஸ் செய்த தவறென்ன?

தொடக்கத்தில் ரஹானேயும் டி ஆர்க்கி ஷார்ட் என்ற ஆஸி.வீரரும் இறங்கினர். டி ஆர்க்கி ஷார்ட் ஒரு அபாரமான அதிரடி வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இங்குதான் சிக்கல் தொடங்கியது. ராகுல் திரிபாதி தொடக்க வீர்ராக 2017 ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரமாதமாக ஆடியவர், ஆனால் அவரைப் போய் 5-ம் நிலையில் களமிறக்கினார் அப்போதே சன் ரைசர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

rahul%20tripathijpg

ரைசின் புனே சூப்பர் ஜெயண்ட்சுக்கு ஆடிய போது ராகுல் திரிபாதி.   -  படம். | பிடிஐ.

 

ராகுல் திரிபாதி 32 டி20 போட்டிகளில் 654 ரன்களை 131.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 654 ரன்களில் 62 பவுண்டரிகள் 26 சிக்சர்கள் என்று 404 ரன்களை பவுண்டரி சிக்சர்களிலேயே அடித்துள்ளார். அவரை வேறு டவுனில் மாற்றியது ராஜஸ்தான் செய்த பெரும்தவறானது.

டியார்க்கி ஷார்ட் பிபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்தவர்தான் ஆனால் நேற்று 4 ரன்களில் அவர் மிட் ஆஃபில் தட்டி விட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடி வில்லியம்சனின் பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் இறங்கி புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் இரண்டு பவுண்டரிகளை அடித்துத் தொடங்கினார். பவர் பிளேயில் 48 ரன்கள் என்ற நிலைக்குப் பிறகு தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் வர ராஜஸ்தான் ‘ஆட்டம்’ தொடங்கியது பென்ஸ்டோக்சையே கட்டிப்போட்ட அவர் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் லாங் ஆனில் ஸ்டான்லேக் பந்து வீச்சில் வெளியேற ராகுல் திரிபாதி 5-ம் நிலையில் இறங்கி 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தை இழுக்க நினைத்தார், மட்டையில் சரியாகச் சிக்காமல் லாங் ஆனில் பாண்டேயிடம் கேட்ச் ஆனார். இதே ஓவரில் 42 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். மேலேறி வந்து ஆடுவார் என்பதை எதிர்பார்த்த ஷாகிப் பந்தை ஆஃப் திசையில் தள்ளி வீச சாம்சன் ஷாட் சரியாகச் சிக்காமல் கவரில் எழும்பியது, ரஷீத் கான் ஓடி வந்து சறுக்கிக்கொண்டு கேட்ச் பிடித்தார், அபாரமான கேட்ச் அது. ஷாகிப் ஒரே ஓவரில் திரிபாதி, சாம்சனை வெளியேற்ற 14வது ஓவர் முடிவில் 94/5 என்று சரிந்தது ராஜஸ்தான்.

அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் (6) ரஷீத் கான் பந்தை புல் ஷாட் ஆட வாய்ப்பு வந்ததையடுத்து ஆடினார், ஆனால் பந்து தாமதமாக வந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. ஷ்ரேய்ஸ் கோபால் 18 ரன்களை எடுக்க ராயல்ஸ் 125 ரன்களை பாடுபட்டு எடுத்தது.

ரஹானே கேட்ச் விட்ட பிறகு ஷிகர் தவண் அபாரம்:

வார்னர் இல்லாததால் விருத்திமான் சஹாவை சன் ரைசர்ஸ் தொடக்கத்தில் தவணுடன் இறக்கியது. அவர் 5 ரன்களில் உனாட்கட் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். முன்னதாக ஷிகர் தவண் 0-வில் இருந்த போது தவல் குல்கர்னி பந்தை குறிப்பார்த்து ஸ்லிப்பில் கொடுக்க அங்கு ரஹானே கேட்சை விட்டார். குல்கர்னி முதல் 6 ஓவர்களில் 51% விக்கெட்டுகளை வீழ்த்தியவர் நேற்று ரஹானேவினால் அது கைகூடவில்லை.

ஆனால் அடுத்த ஓவரிலேயே தவல் குல்கர்னியை ஒரு பவுண்டரி மற்றும் ஒரு அப்பர் கட் சிக்ஸ் விளாசினார் தவன். 33 பந்துகளில் அவர் அரைசதம் எடுக்க கேன் வில்லியம்சன் ஒரு முனையில் அழகாக ஆடி 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தவண் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 நாட் அவுட். 127/1 என்று சன் ரைசர்ஸ் வெற்றி. ஆட்ட நாயகன் ஷிகர் தவண். இது மிகவும் தவறு 2 கேட்ச், ஒரு விக்கெட் அற்புதமான பந்து வீச்சுக்கு ரஷீத் கானுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஷாகிப் அல் ஹசனுக்கு கொடுத்திருக்க வேண்டும், ஆனால் சூப்பர்ஸ்டார் கலாச்சரம்... ஷிகர் தவண் ஆட்ட நாயகன்!

http://tamil.thehindu.com/sports/article23487600.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.