Jump to content

2018ன் முதல் எடுப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts


2018ன் முதலாவது கவிதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது பிரபஞ்சத்துள் மாநுடமாக நம்மை உயர்த்தும் காதல் பற்றிய கவிதை. இன்னும் முடியாத கவிதையின் முதல் பத்தி இதோ.  அர்த்தமுள்ள ஆரம்பமா? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். எழுதுங்கள். ஒரு கவிதை வளருவதை தருவது கவிதைப் பட்டறைபோல இளம் கவிஞர்களுக்கு உதவக்கூடுமானால் மகிழ்வேன். பல தடவைகள் நான் எடிற் பண்ணி மாற்றுவதையும் கவனியுங்கள்.
.
முகநூலை அணைத்துவிட்டு 
சன்னலை திறக்கிறேன்
முன்னே ஒளி அலைக்கும் 
பனி மலைகளில் 
உன் மலரும் மார்புகளூடு 
அசைகிற தங்கப் பதக்கம்போல 
காலைச் சூரியன் உயர்கிறது.
. 
கண்ணம்மா  உன்

பந்தாடும் காதலால்                                                                                                                                 என்னையும் உயர உதைத்து 
 மாநுடமாக 
 பிரபஞ்ச பெரு வெளியில்  உருட்டிறியே.

- தொடரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதிக் கொண்டு வாருங்கள் ஐயா, பிரபஞ்ச வெளியில் உங்களுடன் உருள ஆயத்தமாய் இருக்கின்றோம் .....! 

Link to comment
Share on other sites

தொடர்ந்து எடிற் பண்ணி வெளியிட முடியவில்லை. எனவே 2ம் கட்டத்தை இங்கு வெளியிடுகிறேன். படப்பிடிப்பில் சிக்கியுள்ளதால் விரைவாக செயல்ப்பட முடியவில்லை.

.

முகநூலை அணைத்துவிட்டு 
சன்னலை திறக்கிறேன்
முன்னே ஒளி அலைக்கும் 
பனி மலைகளில் 
உன் மலரும் மார்புகளூடு 
அசைகிற தங்கப் பதக்கம்போல 
காலைச் சூரியன் உயர்கிறது.
. 
கண்ணம்மா 
உன் பந்தாடும் காதலால் 
என்னையும் உயர உதைத்து
பிரபஞ்ச பெரு வெளியில் 
மாநுடமாக உருட்டிறியே.
.
என் அன்பே 
பூச்சுட்டி அலங்கரித்த 
பண்பட்ட காமமே
காதல் என வாழாதிருந்தேனே.
பெண் பல்லாயிரம் ஞானக் கதவுகளென 
அறிந்திலனே கண்ணம்மா.
உன் அணைப்பில் பாதங்களின்கீழ்
பூமி நழுவிச் சுழல 
உயரச் சிறகு விரிக்குதென் ஆன்மா

.
- தொடரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.