Jump to content

ட்விட்டர் லைக்ஸை விற்பனை செய்த நிறுவனம்: விசாரணைக்கு உத்தரவு


Recommended Posts

ட்விட்டர் லைக்ஸை விற்பனை செய்த நிறுவனம்: விசாரணைக்கு உத்தரவு

 
 
ட்விட்டர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சமூக ஊடகமான ட்விட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ட்விட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ட்விட்டர் கணக்குகளை தொடங்கி அதனை விற்ற நிறுவனத்தை விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.

திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழிமுனைவோர்கள் தங்களை ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடர்வதை விரும்புவார்கள். இவர்களை பின் தொடர்வதற்கென போலி தானியங்கி கணக்குகளை உண்டாக்கி அந்த கணக்குகளை அவர்களுக்கு விற்றுள்ளது அமெரிக்காவின் ஒரு நிறுவனம்.

இது குறித்து பேசிய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் எரிக், "ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி நியூயார்க் சட்டத்திற்கு விரோதமானது" என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ள நிறுவனத்தின் பெயர் `டேவுமி`.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை டேவுமி நிறுவனம் மறுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விற்பனைக்கு `லைக்ஸ்` மற்றும் `ரீடீவீட்`

டேவுமி தனது இணையதளத்தில் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. குறைந்தபட்ச விலை 12 டாலர்கள் எனவும் அதில் கூறி உள்ளது. அதுபோல, வாடிக்கையாளர்களுக்கு `லைக்ஸ் மற்றும் ரீடீவிட்` -களும் விற்பனைக்கு உள்ளதாக கூறி உள்ளது.

ட்விட்டர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ட்விட்டர் மற்றும் அல்லாமல் பிற சமூக ஊடக கணக்குகளான பின்ட்ரஸ்ட், யுடியூப் ஆகியவற்றுக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை போலியாக உயர்த்தி உள்ளது.

ட்விட்டரில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ள கணக்கு கருத்தியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்த முடியும். அதுபோல, அந்த கணக்குகளை இடப்படும் இடுகைகள் அதிக பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

டேவுமி நிறுவனம் நியூயார்க்கில் பதிவுபெற்ற நிறுவனம் என்றாலும், அதன் ஊழியர்கள் செயல்படுவது ஃபிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து என்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்.

கடந்த காலங்களில், இது போன்ற நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுக்கவில்லை என்று அதன் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் டேவுமி மற்றும் இதுபோல செயல்படும் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் கூறி உள்ளது.

ட்விட்டர் பகிர்ந்துள்ள ஒரு ட்விட்டில், டேவுமி மற்றும் அதுபோல செயல்படும் நிறுவனங்களின் தந்திரங்கள் எங்களது கொள்கைக்கு எதிரானது. அவர்களை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது.

http://www.bbc.com/tamil/global-42855353

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.