Jump to content

ஏற்கனவே இருந்தவையும் ஏற்கனவே இல்லாதவர்களும்


Recommended Posts

தீவிரசிந்தனை செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்.. 

நான் சில சமயங்களில் எனக்குள் நினைத்துக்கொள்ளும் ஓர் விடயம் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதை விளக்குவதற்கு இலகுவாக அமைவதற்காக சில உதாரணங்களை முதலில் குறிப்பிடுகின்றேன்.

=> தோமஸ் அல்வா எடிசன் இந்த உலகில் தோன்றினார், வாழ்ந்தார், பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை செய்தார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார்.

=> திருவள்ளுவர் தோன்றினார், வாழ்ந்தார், திருக்குறளை இயற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார்.

=> பீட்டர் தோன்றினார், வாழ்ந்தார், பெருந்தெருக்கள் போடும்பணியில் ஓர் கூலி தொழிலாளியாக பங்காற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார்,

=> தங்கம்மா தோன்றினாள், வாழ்ந்தாள், எதுவித சமூகத்திட்டங்களிலும் பங்கெடுக்கவில்லை, வாழ்ந்தாள், பின்னர் மறைந்தாள்.

=> இவ்வாறு வெவ்வேறு கோடானுகோடி கோடி கோடி மனிதர்கள் தோன்றினார்கள்/தோன்றுகின்றார்கள்/தோன்றுவார்கள், வாழ்ந்தார்கள்/வாழ்கின்றார்கள்/வாழ்வார்கள், எதையோ செய்தார்கள்/செய்கின்றார்கள்/செய்வார்கள் அல்லது செய்யவில்லை/செய்யமாட்டார்கள், பின்னர் மறைந்தார்கள்/மறைகின்றார்கள்/மறைவார்கள்.

இனி மயக்க நிலை தொடர்கின்றது..

தோமஸ் அல்வா எடிசன் அவர் இல்லாத ஒன்றை படைத்தாரா அல்லது இருக்கும் ஒன்றை விளங்கிக்கொண்டாரா? 

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினாரா அல்லது மொழியறிவை அனுபவித்து திருக்குறளை உணர்ந்தாரா?

அதாவது,

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

ஏற்கனவே இருந்தவையும்.. ஏற்கனவே இல்லாதவர்களும்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரபஞ்சத்தில் பருப்பொருளாக இல்லாத ஒன்றை உருவாக்க மனிதனால் முடியும் என்பதைத்தான் மனிதன் உருவாக்கிய மதம், கடவுள், பணம், ஜனநாயகம், கலைகள், சமூக ஒழுங்குகள் போன்றன உணர்த்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தார் என நம்பவைத்த மாதிரிதான்.tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலேயே தீவிர சிந்தனை செய்பவர்களுக்கு மட்டும் எண்டு கோடு போட்டு காண்பித்ததால் நான் வாசிக்கவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தேடல் குருஜி.....!  tw_blush:

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பக்குவப்பட்ட மனித இனம் வாழ்ந்து வந்திருக்கு. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பும், பனைஓலைச்சுவடிகளுக்கு முன்பும் வாழ்ந்தவர்கள் சாதாரணமாக சராசரி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் இன்றோ இவ்வளவு சாதனங்கள் இருந்தும் ஒரு மனிதன் எவ்வித நோய் நொடியுமின்றி,மருந்து மாத்திரை இல்லாமல்  அறுபத்தி ஒண்டரை ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அசாத்தியமாய் இருக்கின்றது. இதெல்லாம் மனிதனுக்குத்தான்.

அடர்காட்டில் வாழும் விலங்குகளும், ஆழ்கடலில் வாழும் மீனினங்களும், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பறவைகளும் இன்றும் அன்றைய வாழ்க்கையையே வாழுகின்றன.....!  tw_blush:

இல்லாதவற்றில் இருந்து எதையுமே எடுக்க முடியாது. ஏற்கனவே இருப்பவற்றை எடுத்துதான் அவற்றை சேர்த்தும் பிரித்தும் மாற்றியும் வைப்பதன் மூலம் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

ஒலியும் அப்படியே அண்டத்திலும் பிண்டத்திலும் நிறைந்துள்ளது. காற்றைக் கொண்டு ஏற்ற இறக்கங்களுடன் வெளியேற்றுவதன் மூலம் பேச்சுக்கள் மொழிகள் உருவாகின்றன...!  tw_blush:

ஏதோ என் நினைவில் இருந்து......!  tw_blush:

 

Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

இல்லாதவற்றில் இருந்து எதையுமே எடுக்க முடியாது. ஏற்கனவே இருப்பவற்றை எடுத்துதான் அவற்றை சேர்த்தும் பிரித்தும் மாற்றியும் வைப்பதன் மூலம் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன.

நீங்கள் கூறுவது இயற்கையான சிந்தனை முறை.. தொடர்ந்து எழுதுங்கள்.

நீங்கள் கூறியது போல் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்று சித்தர் பாடல் உள்ளது. அதே போல் மனிதன் உருவாக்கிய ஒரு இயந்திரம் சிந்தித்தால் மனிதனிடம் உள்ளதே இயந்திரத்திலும் உள்ளது இயந்திரத்தில் உள்ளதே மனிதனிடமும் உள்ளது என்றும் சிந்திக்க முடியும். ஒரு மனிதனின் உடல் இயக்கத்திற்கு ஒப்பாகவே ஒரு கார் அமைகின்றது. சாதாரண முள்ளு கரண்டி மேசைகரண்டி கூட மனிதனின் கைகளை பிரதிபலிக்கின்றது. காரைப் பொறுத்தவரை மனிதன் அதைப்படைத்த கடவுளாகின்றான்.  மனிதனை பொறுத்தவரை இந்த அண்டம் அவனை படைத்த கடவுளாகின்றது. விவாதத்துக்கான கருத்துக்களாக இவற்றை முன்வைக்க முடியாவிட்டாலும் இவ்வாறு சிந்திப்பதில் ஒரு சுவார்சியம் இருக்கின்றது. 

 

Link to comment
Share on other sites

On 2/4/2018 at 1:04 AM, கரும்பு said:

தோமஸ் அல்வா எடிசன் அவர் இல்லாத ஒன்றை படைத்தாரா அல்லது இருக்கும் ஒன்றை விளங்கிக்கொண்டாரா? 

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினாரா அல்லது மொழியறிவை அனுபவித்து திருக்குறளை உணர்ந்தாரா?

அதாவது,

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே?

இல்லத ஒன்றை படைத்தார் என்பதற்கில்லை என்றே தோன்றுகின்றது.. ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனை மாறுபடும்.

உதாரணமாக எடிசன் கணடுபிடிதத வெளிச்சம் சூரியனில் உள்ளது. 

சமுதாயம் மிக சீரழிந்த நிலையில் இருந்தபோது ஒழுக்க நெறிகளை எழுதவேண்டிய தேவை திருவள்ளுவருக்கு இருந்தது.

இவ்வாறு சிந்தனையை தூண்டும் பதிவுகளை தொடரந்து எழுதுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பக்குவப்பட்ட மனித இனம் வாழ்ந்து வந்திருக்கு. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு முன்பும், பனைஓலைச்சுவடிகளுக்கு முன்பும் வாழ்ந்தவர்கள் சாதாரணமாக சராசரி நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் இன்றோ இவ்வளவு சாதனங்கள் இருந்தும் ஒரு மனிதன் எவ்வித நோய் நொடியுமின்றி,மருந்து மாத்திரை இல்லாமல்  அறுபத்தி ஒண்டரை ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது அசாத்தியமாய் இருக்கின்றது. இதெல்லாம் மனிதனுக்குத்தான்.

இப்போது விரும்பியோ விரும்பாமலோ இரசாயன உயிர்கொல்லிகள் நாளாந்தம் நாம் சாப்பிடும் உணவுகளில் சேர்த்தே சாப்பிடுகிறோம்.அப்புறம் எப்படித் தான் உயிர் வாழ்வது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.