Jump to content

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.8 பில்லியன் முகநூல் பயனர்கள் உலகளவில் இருப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது. ஆனால் அது நன்மையைத்  தருகிறதா என்பதுதான் இன்று கேள்வியாகப் போயிருக்கிறது.

 

சமீபத்திய ஆய்வு  ஒன்றின்படி, Facebook சமுதாயத்தில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பபதாக அறிக்கை வெளிவந்திருக்கிறது.

 

முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் McDonald’s  உணவகம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிக்கை வெளியானது. இப்பொழுது அதை மூன்றாவது இடத்துக்கு (21 சதவீதம்) தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தில் Facebook (27 சதவிகிதம்) வந்து அமர்ந்திருக்கிறது. முதலாவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தில் மார்ல்போரோ (41 சதவீதம்) தொடர்ந்தும் இருக்கிறது.

 

 பல ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதில் சில விடயங்களை ஆராய்ச்சியாளர்கள்  சுட்டிகாட்டுகிறார்கள்.

 

சமூக வலைத்தளங்களில் நிறைய நேரம் செலவழிக்கும்போது மக்கள் தங்களது மகிழ்ச்சியை இழக்கிறார்கள்,

அத்தோடு வலைத்தளங்களுக்கு அடிமையாகிறார்கள்,

அவர்களின் அன்றாட சமூக வாழ்க்கையை அழிகின்றன.

என்பன அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டும் பிரதான விடயங்கள்.

 

மேலும் பேஸ்புக்கில் கொடூரமான குற்றங்கள் அல்லது தற்கொலைகள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன என்ற குரல்களும் பெரிதாக வெளிவர ஆரம்பித்து விட்டன.

 

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும் என்பது Facebook இல் விழுந்து கிடப்பவர்களுக்குப் புரிந்தால் சரி.

 

- கவி அருணாசலம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.