Jump to content

“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation


Recommended Posts

“நீங்கா வலி!” பெண்ணுறுப்புச் சிதைவுக்கு ஆளான பெண்களின் கதை! #FemaleGenitalMutilation

 
 

உலகில் வாழ்ந்து வரும் பெண்களில் 200 மில்லியன் பெண்கள் பெண்ணுறுப்புச் சிதைவால் (Female Genital Mutilation) பாதிக்கப்பட்டவர்கள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு (2016). அதென்ன ஜெனிடல் மியுட்டிலேஷன் என்பவர்களுக்குப் பெண்ணுறுப்பில் உடலுறவு கொள்ளுவதில் இன்பம் தரும் பகுதியை, ப்ளேடாலோ அல்லது ஏதேனும் கருவியைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துவிடுவார்கள். பெண்ணுறுப்பிலிருந்து மாதவிடாய் வெளியேறும் அளவுக்கான சிறு துவாரத்தை மட்டும் வைத்துவிட்டுப் பிற பகுதிகளைத் தைத்து மூடிவிடுவார்கள். இப்படிச் செய்வதில் பல நிலைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் இந்தச் சடங்கு, நடைபெற்றால்தான் அவள் சுத்தமானவளாகப் பார்க்கும் நடைமுறை சில கலாசாரங்களில் இருக்கிறது.

இந்தியாவிலும் சில பகுதிகளில் பெண்ணுறுப்புச் சிதைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. உலகம் முழுக்க இதற்கு எதிரான மிகப்பெரிய அளவிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது வரவேற்க வேண்டிய விஷயம். இன்று (06 பிப்ரவரி) உலகப் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான நாள் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) முன்னிட்டு, இந்த நிகழ்விற்கு ஆளாகிப் பின், இதற்கு எதிரான மிகப்பெரிய பிரசாரங்களில் முன்னெடுத்து வரும் பெண்களின் கருத்துகள் இதோ...

 

ஜஹா டுக்குரேஹ்

அமைதியான, அன்பான ஊர் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த எங்கள் சொந்த ஊரான மொகடிஷுவில்  எனக்கு அந்தப் பயங்கரம் என் ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்டது. எங்கள் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எங்கள் வீட்டிற்கு பல்வேறு பரிசுப்பொருள்களுடன் நிறையப் பேர் வந்தார்கள். அது போன்றதொரு சூழ்நிலையில் இருப்பதே அலாதியாக இருந்தது. நானும் என் சகோதரி லெய்லாவும் விளையாடிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பக்கத்து வீட்டுக்காரப் பெண் என்னை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே உணவு அருந்தும் மேஜை இருந்தது. தெரியாத ஒரு ஆள், வித்தியாசமான சில கருவிகளுடன் அங்கு அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள். ”அவளை டேபிளில் படுக்கவைத்து, உடையை அகற்றுங்கள்” என்ற அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் அழத் தொடங்கிவிட்டேன். மற்றொரு அறையிலிருந்த என் தங்கை மற்றும் அருகில் இல்லாத அம்மாவை நினைத்து அழத் தொடங்கினேன். அந்தச் சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றானதும், வீட்டின் கூரையை வெறித்துப் பார்க்கத் தொடங்கினேன். எனக்கு அந்த நிமிடங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. குளிர், அவமானம், குழப்பம் இதோடு சேர்த்து மோசமான வலி. நான் நினைவிழக்கத் தொடங்கினேன். ஆனால், அந்தக் கருவிகளின் ஒலி எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது - ஃபேரஸ் ஹுஸ்ஸைன்


 

கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள்  ஆறு வயதுக் குழந்தை. விடியற்காலையில் எழுந்து, குளித்து, உடைகளை அணிந்து கொண்டு உங்கள் தோட்டத்தின் முடிவில் இருக்கும் ஒரு கூடாரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். அதன் பின் உலகின் மோசமான நிகழ்வு உங்கள் உடலில் அரங்கேற்றப்படுகிறது. அந்த நிகழ்வை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மறக்கவே மாட்டீர்கள். காரணம் அது உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தமாக, விவாகரத்தாக, குடும்ப வன்முறையாக... பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். நான் பல வருடங்களாக மெளனமாக இருந்தேன். என்னுடைய மௌனத்தை நான் உடைத்தபோது, ஒரு அடைக்கப்பட்ட கதவிலிருந்து வெளியே வந்ததுபோல் உணர்ந்தேன். இனி அங்கு பேசாமல் இருக்கும் கோடானுகோடிப் பெண்களுடைய குரலாக நான் இருக்க விரும்புகிறேன்.  ஏனெனில், அது எவ்வளவு மோசமானது என்பது எனக்குத் தெரியும்! - ஹீபோ வார்டர்


 

நான் எப்படி இவ்வளவு வலிமையான பெண்ணாக மாறினேன் என்பதற்கான காரணம் எனக்குப் புரிய சற்றுத் தாமதமானது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களின் தொகுப்பும்தான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் வாழ்வதைத் தேர்ந்தெடுத்தேன். நான் உறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டவள். சில நொடிகளில் நடந்தேறிவிட்ட அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கதறலையும் வலியையும் தாண்டி, மெதுவாகக் கண்களைத் மூடித் திறந்தேன். அப்போது சோகமாகவும் வருத்தம் தோய்ந்த முகத்தோடும் இருந்த என் தாயின் கண்களைப் பார்த்தேன்.

 ”நீ வாழ விரும்புகிறாயா. நீ வாழ விரும்பினால் போரிடு” என்றார் அவர். “என்னைச் சுற்றி நடந்த நிகழ்வுகள் முழுவதும் எனக்குப் புரியாவிட்டாலும், இறைவனிடம் என் உயிரை வைத்திருக்கும்படி கண்களை மூடி வேண்டினேன். வலி வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்துகொண்டேன். ஒரு முத்து உதிப்பதைப்போல, என் வலியிலிருந்து எனக்கு ஏதாவது நல்லது நடக்கலாம். எனக்கு ஏற்பட்ட வலியின் மூலமாகவே என் தைரியத்தை வளர்த்தெடுத்தேன். ஏனெனில் இந்த வலி வீணாவதில் எனக்கு விருப்பமில்லை - ஜே கமாரா ஃப்ரெட்ரிக்


 

நீங்கள் நேசிக்கும் நம்பும் ஆட்கள்கூட உங்களைக் காயப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்துகொண்ட காலம் அது. நடந்தவற்றை ஏற்றுக்கொள்வற்கே எனக்குப் பல காலம் தேவைப்பட்டது. என் பாட்டியின் நம்பிக்கையின்படி, பெண்ணுறுப்புச் சிதைவு என்பது பெண்ணாக என்னை எந்த வகையிலும் உயர்த்தப்போவதில்லை... என் நம்பிக்கைகளின்படி குறைக்கப் போவதும் இல்லை.

என்னால் நான் விரும்பும் மனிதர்களிடம் கோபப்படவும், வருத்தப்படவும் முடியும். என்னால் வலிமையாகவும், வலிமை குன்றியவராகவும் இருக்க முடியும். ஏற்கெனவே நடந்துவிட்ட ஒன்றை என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இன்றைய பொழுது என் கைகளில் இருக்கிறது. என்னை உறுதிப்படுத்திக்கொள்ள, வளர்த்தெடுக்க என்னால் முடியும் என்பதை என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பயங்களிலிருந்து வெளியே வந்து இந்தக் கொடுமைகளுக்கு எதிராக என்னால் போராட முடிகிறது என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இனி ஒருவருக்கேனும் இந்தக் கொடுமை நடக்கக் கூடாது. அது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மோசமான வலியினை உண்டாக்கும். முக்கியமாக, இது தேவையற்றது!  - ஃபட்டுமட்டா ஜாட்டா


 

என் வாழ்நாளுக்கும் மனதிலிருந்து அகல முடியாத வலியை ஏற்படுத்திவிட்டார்கள். சிறுமியாக இருந்தபோது நான் சென்ற சுற்றுலா, என் மனதில் வடுவாகிப் போயிருக்கிறது. அந்த வாடை, என்னுடைய கதறல், உடலிலிருந்து வெளியேறிய ரத்தம்... என அப்போது எழுந்த என் உணர்வுகளை இப்போதும் மறக்க முடியவில்லை. உளவியல் ரீதியாகக் கடுமையான பாதிப்பினை அது என் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கொடுமையிலிருந்து என் தங்கையைப் பாதுகாக்க முடியவில்லை என்கிற குற்றவுணர்ச்சியிலிருக்கிறேன். நான் என்னை ஒரு முழுமையான பெண்ணாக உணரவில்லை. என்னிடமிருந்து ஒன்று எடுக்கப்பட்டுவிட்டது. உணர்வு மற்றும் உள்ள ரீதியிலான இந்த வலிகள் என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதியாகி இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவை என்னுடைய முடிவல்ல! - ஆயிஸ்ஸா எதூன்


 

என்னுடைய 7 வயதில், சோமாலியாவில் என்னுடைய பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டது. இதன் விளைவுகளை 12 வயதில் சந்திக்கத் தொடங்கினேன். சிறிதாக விடப்பட்டிருந்த துவாரம் வழியாக மாதவிடாய் வரமுடியாமல் தொற்று ஏற்பட்டுப் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு என்னுடைய முதல் சீரான மாதவிடாய் போக்கை 17 வயதில் பெற்றேன். அதன் பிறகு நடந்த தொற்றுகள் தொடர்கதையாகிப் போனது. என் அம்மாவும், பாட்டியும் இந்தக் கொடூரத்துக்கு பலியானவர்கள்தாம்.

உச்சகட்டமாக IVF மற்றும் கருச்சிதைவுகளை அனுபவித்தேன். என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும், என் உடன் பிறந்தவர்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கொடூரம் நடக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள்தாம் பெண்ணுறுப்புச் சிதைவினை அனுபவிக்காத முதல் தலைமுறை. அவர்களிடம் ‘மற்றவர்கள் உன்னை எந்த அளவிற்கு நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதே அளவு நீ உன்னை நேசி. மற்றவர்கள் உன் காதுகளில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஷயங்களை நீயே உனக்குச் சொல்லிக்கொள். உனக்காக மட்டுமில்லை, உன்னைச் சுற்றியிருக்கும் குரலற்றவர்களுக்கும் குரலாக இரு” என்று எப்போதும் சொல்லுவேன் - ஹோடா அலி


 

13 வயதில் எனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையில், பீறிட்டக் குருதியின் காரணமாக மரணத்துக்கு அருகில் சென்று வந்தேன். நான் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக இந்தச் சடங்கு ரகசியமாகத்தான் நடத்தப்படும். என்னுடைய பெண்ணுக்கு இது நடக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை எப்போதும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். என்னுடைய இந்தப் பயம் அவளுக்கு 'அந்த வலி' எப்படியிருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறது. இன்று அவளும் பெண்ணுறுப்புச் சிதைவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறாள். ஒரு விஷயம் பல நாள்களாக நீடிக்கிறது என்பதற்காகவே அவற்றை நீடிக்கவிடக் கூடாது. மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு விஷயம் கலாசாரமாக இருக்கக் கூடாது - ஹவா டாபோ செஸ்ஸே


 

அந்த நிகழ்வு நடக்கும்போது நான் பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை. எனவே, அப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு நினைவும் எனக்கில்லை. உங்களுடைய நினைவு தெரிந்து உங்கள் பெண்ணுப்பு சிதைக்கப்படுகிறது அல்லது உங்களுக்கு அப்படி ஒன்று இருந்ததாகவே தெரியும் முன்பே அகற்றப்படுகிறது. எப்படி இருந்தாலும், அதன் விளைவுகளை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். உடல் ரீதியாக உங்களுக்கு ஏற்படும் தொற்றுகள், பாலியல் ரீதியான ஆரோக்கியம் ஒருபுறம் இருக்க நீங்கள் மன ரீதியாக அனுபவிக்கும் துன்பம் மற்றொரு புறம் உங்களை வாட்டும். கட்டாயம் மற்ற பெண்களைப்போல் உங்களால் உடலுறவு கொள்ள முடியாது. சிலர் இதனைக் கலாசாரம், மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்கள். ஆனால், இது சரி தவறு சம்பந்தப்பட்ட விஷயம். பெண்ணுறுப்புச் சிதைவு என்பது கட்டாயம் தவறு. 

எனக்கு குழந்தை பிறக்கும்போது, அவளுக்கு இது போன்றதொரு கொடுமை நிகழவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் குழந்தையைப் பாதுகாப்பதன் மூலம், இது போன்றதொரு கொடூரம் வேறு எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதைத்தான் செய்துகொண்டும் இருக்கிறேன் - ஜஹா டுக்குரேஹ்


 

நான் கருவுறும்போதுதான், உறுப்புச் சிதைவு என்னை எந்த அளவுக்குத் தீவிரமாக பாதித்திருக்கிறது என்பதை உணரத்தொடங்கினேன். அது மிக மோசமான மன உளைச்சலைக் கொடுத்தது. ஒவ்வொரு முறை மருத்துவரிடம் நான் செல்லும்போதும் மிக மோசமான உடல் உபாதைகளுக்கு உள்ளானேன். என்னை யாராவது தொட்டாலே பயந்து ஒடுங்கினேன். மருத்துவர் என்னைத் தொட்டுப் பரிசோதிக்கும்போதெல்லாம் எனக்கு பய அடைப்பு ஏற்பட்டது. அந்த நிமிடம்தான் என் குழந்தைகளுக்கு இப்படியொரு நிகழ்வு ஏற்படக் கூடாது என்பதை முடிவு செய்தேன். ஒரு பெண் அந்த நிகழ்வுக்கு உட்படுத்தப்படும்போதே, அவள் நம்பும் நபர்களால் அத்துமீறித் தாக்கப்படுகிறாள்; மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறாள். அதன் தழும்புகளைத் தன் வாழ்நாள் முழுக்க தாங்கிச் செல்கிறாள்  - லெய்லா ஹுஸ்ஸைன்


 

அப்போது எனக்கு பதினோரு வயதிருக்கும்... எனக்கும் என் சகோதரிகளுக்கும் சேர்த்து உறுப்புச் சிதைவுக்கான நிகழ்வு நடைபெற்றது. இதை ஒரு கலாசார நிகழ்வாகவும், எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாசாரமாகவும் மக்கள் பார்க்கலாம். ஆனால், அனுபவிக்கும் பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் மோசமான காயங்களை ஏற்படுத்தும். யாருக்கும் பயன்பெறாத, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமை. இது உறவுகளைப் பாதிக்கும். ஆனால், மக்கள் இது குறித்து உரையாட மாட்டார்கள்.

தற்போது எனக்கு 36 வயதாகிறது. எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள். உறுப்புச்சிதைவின்போது நான் அனுபவித்த வலியை வார்த்தைகளில் வடிக்க முடியாது. பிரசவ வலிகளுக்கும் அப்பாற்பட்டு கற்பனை செய்யக்கூட முடியாத வலியைத் தரும் உறுப்புச் சிதைவு.  என்னுடைய பெண் குழந்தைகளை இந்தக் கொடூரத்திலிருந்து நான் காப்பாற்றியிருக்கிறேன் - சரியன் கரிமா கமரா

https://www.vikatan.com/news/womens/115622-fgm-survivors-speak-out-what-it-is-like-to-experience-the-most-cruelest-act-known-on-earth.html

Link to comment
Share on other sites

சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்

 

உங்கள் விருப்பம் இல்லாமல் உங்கள் உடலின் ஒரு பகுதியை ஒருவர் வெட்டினால் எப்படி இருக்கும்? அதை எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா?

சிறுமிகளின் பெண் உறுப்பு சிதைப்பு: இந்தியாவின் கசப்பான உண்மைகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் இது நடக்கிறது. புனேவைச் சேர்ந்த நிஷ்ரின் சைஃப், பெண் உறுப்பு சிதைப்பு சடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

"அப்போது எனக்கு ஏழு வயது. எதுவும் எனக்கு சரியாக நினைவில்லை. அந்த சம்பவத்தின் மங்கிய காட்சிகள் மட்டுமே என் நினைவில் உள்ளன," என்கிறார் நிஷ்ரின்.

"பல பெண்கள் ஏற்கனவே அமர்ந்திருந்த சிறிய அறைக்குள் என் அம்மா என்னை அழைத்துச் சென்றார். அப்போது அவர் என் உள்ளாடையைக் கழட்டினார்," என்று பிபிசியிடம் கூறினார் நிஷ்ரின்.

"அப்போது எனக்கு பெரிதாக வலி ஒன்றும் இல்லை. வெறும் ஊசியை வைத்து குத்தியது போலவே இருந்தது. பின்னர் வலியைத் தாங்க முடியவில்லை. என்னால் அடுத்த சில நாட்கள் சிறுநீர் கழிக்கவே முடியவில்லை," என்கிறார் அவர்.

Bohra muslimsபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் மட்டுமே

வளர்ந்த பின்னர் தனக்கு நடந்ததை சகித்துக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டார் நிஷ்ரின்.

இந்தியாவில் பெண் உறுப்பு சிதைப்பு வழக்கம்

வழக்கமாக ஆண்களுக்குத்தான் பிறப்புறுப்பில் உள்ள தோல் அகற்றப்படும். எனினும் பல நாடுகளில் பெண்களுக்கும் இந்த வலி மிகுந்த சடங்கு செய்யப்படுகிறது.

female genital mutilationபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் மட்டுமே

இந்தியாவும் அந்தப் பட்டியலில் அடக்கம். போரா இஸ்லாமிய (தாவூதி போரா மற்றும் சுலைமான் போரா) குழுவினரிடையே இது சாதாரணமாக நடக்கிறது.

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ள அவர்கள் மிகவும் வளமான, கல்வியறிவு மிக்க சமூகத்தினர் ஆவர்.

போரா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் நிஷ்ரின் இந்த சடங்குக்கு ஆளானார்.

பெண் உறுப்பு சிதைப்பு என்றால் என்ன?

இந்த சடங்கு 'காஃப்டா' என்றும் அழைக்கப்படுகிறது. இச்சடங்கின்போது சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் என ஐ.நா-வின் விளக்கம் கூறுகிறது.

பெண் உறுப்பு சிதைப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதையும் ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இந்நடைமுறையை நிறுத்தக் கோரி டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. போரா இஸ்லாமியக் குழுவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு 6-7 வயது இருக்கும்போதே பெண் உறுப்பு சிதைக்கப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு மயக்க மருந்துகூட கொடுக்கப்படாது. தாங்க முடியாத அந்த வலியைப் பொறுத்துக்கொள்வதையும், வலியால் துடிப்பதையும் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

வழக்கமாக பிளேடுகள் அல்லது கத்தி இதற்கு பயன்படுத்தப்படும். சடங்கு முடிந்த பிறகு வலியைக் குறைப்பதற்காக மஞ்சள், வெந்நீர் அல்லது களிம்புகள் பயன்படுத்தப்படும்.

பெண் குறிக் காம்பு போரா சமூகத்தால் தடைசெய்யப்பட்ட 'ஹரம் கி பூட்டி' என்று கூறப்படுகிறது என்கிறார் போரா இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இன்சானியா தாரிவாலா. பெண்களின் உடலில் அதன் இருப்பு அவர்களது பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்று கருதப்படுகிறது.

female circumcisionபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"பெண் உறுப்பு சிதைப்பால் பெண்கள் திருமணத்துக்கு முன்பு பாலுறவுகொள்ள மாட்டார்கள்," என்று நம்புகிறார்கள் என்கிறார் இன்சானியா.

ஏமாற்றி உறுப்பு சிதைக்கப்படும் சிறுமிகள்

இன்சானியாவை இந்தச் சடங்கில் இருந்து அவரது அம்மா காப்பாற்றிவிட்டார். ஆனால், திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வதாக ஓர் அரைக்குள் ஏமாற்றி அழைத்துச் சென்று, இன்சானியாவின் மூத்த சகோதரிக்கு இந்த சடங்கை நிறைவேற்றிவிட்டார் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்.

"என் அம்மா எனக்கு சடங்கு செய்யவிடாமல் தடுத்ததால் குடும்பத்தில் பலருக்கும் அவர் மீது கோபம் இருந்தது. என் சகோதரியின் வலியை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான், அதற்கு எதிராக நான் போராடுகிறேன்," என்கிறார் இன்சானியா.

நாற்பது வயதாகும் நிஷ்ரின் தனது மகள்களுக்கு இந்த கொடிய சடங்கு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்கிறார். "இது ஒரு குழந்தைகள் மீதான வன்கொடுமை," என்கிறார் அவர்.

உடல் தூய்மையைப் பராமரிக்க பெண் உறுப்பு சிதைக்கப்படுவதாக நிஷ்ரினிடம் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் இச்சடங்குக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்பதை பின்னர் அவர் புரிந்துகொண்டார்.

மசூமா ரானால்விபடத்தின் காப்புரிமைMASOOMA RANALVI/FACEBOOK Image captionமசூமா ரானால்வி

"இச்சடங்கிற்கான காரணங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறார்கள். முதலில் தூய்மைக்காக என்றார்கள், பின்னர் பாலுணர்வைக் கட்டுப்படுத்த என்றார்கள். இப்போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர் பாலுணர்வை அதிகரிக்கவே இது செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள் ," என்கிறார் இன்சானியா.

"அது பாலுணர்வை அதிகரிக்கவே செய்யப்படுகிறது என்றால், ஏழு வயது சிறுமிக்கு செய்வதன்மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்," என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

பெண் உறுப்பு சிதைப்புக்கு எதிராக இந்தியாவில் பிரசாரம் செய்துவரும் மசூமா ரானால்வி, மேற்கண்ட கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் பெண்களின் உடல் நலத்தில் அது மோசமான தாக்கத்தையே செலுத்துகிறது என்றும் கூறுகிறார்.

"இது பெண்கள் உடல் நலத்தை மட்டுமல்லாது மன நலத்தையும் பாதிக்கிறது. இது பின்னாளில் அவர்கள் பாலுறவின் மூலம் மகிழ்ச்சி அடைவதையும் தடுக்கிறது," என்கிறார் மசூமா.

'சாஹியோ', 'வி ஸ்பீக் அவுட்' உள்ளிட்ட அமைப்புகள் இந்தியாவில் இதற்கு எதிராக போராடி வருகின்றன.

ஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஏற்கனவே இதை ஒரு குற்றமாக அறிவித்துள்ளன.

Female Genital Mutilationபடத்தின் காப்புரிமைAFP

இந்தியாவில் ஏன் தடை இல்லை?

சமீபத்தில் இந்த சடங்கைத் தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதற்கு, "பெண் உறுப்பு சிதைப்பு நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால் அரசு இந்த நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது," என்று அமைச்சகம் பதில் அளித்தது.

"பெண் உறுப்பு சிதைப்பை ஒரு குற்றமாகவே கருதாத நாட்டில் எப்படி அதற்கான குற்ற ஆவணங்கள் இருக்க முடியும்," என்று கேட்கிறார் மசூமா.

Supreme Courtபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"என்னவென்றே அறியாத மிகவும் இளம் வயதில் அவர்கள் எப்படி காவல்துறையிடம் புகார் அளிக்க முடியும்? அது எப்படி வெளிவரும், " என்கிறார் அவர்.

உடந்தையாக இருக்கும் மருத்துவர்கள்

"போரா சமுதாய மத குருக்களிடமும் அரசு பேச வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கொடிய சடங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாது," என்கிறார் மசூமா.

சில படித்த, பணமுள்ள போரா குடும்பத்தினர் மருத்துவர்கள் மூலம் இதைச்செய்கிறார்கள்.

female circumcisionபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இது ஒரு மருத்துவ நடைமுறை அல்ல என்பதால் மருத்துவர்களுக்கும் இதுகுறித்து எதுவும் தெரியாது. எனினும் பணத்துக்காக அவர்கள் இதில் ஈடுபடுகிறார்கள்," என்று கூறும் மசூமா இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகத்திற்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை.

"பெண் உறுப்பு சிதைப்பை முடிவுக்கு கொண்டுவர நாம் மருத்துவர்களின் உதவியையும் பெற வேண்டும். கற்பதிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறியும் சோதனை செய்வது குற்றமாக்கப்பட்டதைப் போல பெண் உறுப்பு சிதைப்பு செய்வதும் குற்றமாக்கப்பட வேண்டும்," என்று முடிக்கிறார் மசூமா.

http://www.bbc.com/tamil/global-42985909

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.