Jump to content

சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு...


Recommended Posts

சாப்பாட்டில் கறிவேப்பிலை கண்டால் அனிச்சையாகத் தூக்கி எறிபவர்கள் கவனத்துக்கு...

 

 
kurry_leaves

 

வேப்பிலை... கறிவேப்பிலை; அதை ஏன் சாப்பிட வேண்டும் என்று நினைத்து தினமும் சாப்பாட்டில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை உண்ணாமல் தூக்கி எறிபவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கானது;

000_curry_leaves.jpg

கறிவேப்பிலையின் தாவரவியல் பெயர் முர்ராயா கொயிங்கீ (Murraya Koengii)

கறிவேப்பிலையில் வாசமில்லா மலைக் கறிவேப்பிலை, மணம் மிக்க செங்காம்பு ரகம், மகசூல் மிக்க வெள்ளைக்காம்பு ரகம் எனப் பல ரகங்கள் உள்ளன.

இந்தியச் சமயலறைகளில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமிழகச் சமையலறைகளில் தவிர்க்கவே முடியாத ஒரு பண்டம் கறிவேப்பிலை. நம்மூரில் ஒவ்வொரு வீட்டிலும் காலையில் எழுந்து வேர்க்க, விறுவிறுக்க ஒவ்வொரு பண்டத்தையும் சமைத்து முடித்து கடைசியில் தாளிதம் செய்ய ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இல்லாமல் போய்விட்டதென்றால் இல்லத்தரசிகளுக்கு தங்களது சமையல் எத்தனை சுவையானதாக அமைந்த போதிலும் கறிவேப்பிலை இல்லாது முழுமை பெற்றதான உணர்வைத் தருவதே இல்லை. 

curry-leaf-curry-15-1455523242.jpg

சரி அத்தனை அத்யாவசியமானதாகக் கருதப்படும் கறிவேப்பிலையை நாம் எல்லோருமே வீணாக்காமல் சாப்பிடுகிறோமா என்றால்... அது தான் இல்லை. தங்களது தட்டி விழும் உணவிலிருக்கும் கறிவேப்பிலையை வீணாக்காமல் உண்ணும் பழக்கம் வெகு சிலருக்கு மட்டுமே உண்டு. நம்மில் பலரும் கறிவேப்பிலை என்றால் அது வெறுமே வாசத்துக்காக மட்டுமே உணவில் சேர்க்கப்படுகிறது என்று கருதி அப்படியே தட்டில் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு குப்பையில் கொட்டுகிறோம். இது தவறு!

கறிவேப்பிலையில் குவிந்திருக்கும் சத்துக்கள்...

கறிவேப்பிலை உணவில் சேர்க்கப்படுவது வாசனைக்காக மட்டுமல்ல, அதிலிருக்கும் சத்துக்களைப் பட்டியலிட்டால் அப்புறம் எவரொருவரும் அதைத் தூக்கி எறிய மாட்டார்கள். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன.

அது மட்டுமல்ல  நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புகள், நிக்கோடினிக் அமிலம் என உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் தாராளமாக அள்ளி வழங்கக் கூடியது கறிவேப்பிலை.

இப்படிப்பட்ட கறிவேப்பிலையை சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, அசைவ கிரேவிகள் போன்றவற்றில் தாளிதம் செய்ய மட்டுமல்லாமல், தனியாகக் கறிவேப்பிலையை மட்டுமே பயன்படுத்தி துவையல், தொக்கு, ஊறுகாய், இட்லி, தோசைப்பொடி, சாதத்தில் பிசைந்துண்ண கறிவேப்பிலைப்பொடி என்று தனியாகவும் ருசித்து மகிழலாம். வாசனை பசியைத் தூண்டும் என்பதோடு உடலுக்கும் ஆரோக்யமானது.

அதோடு கறிவேப்பிலையை சமையலில் சேர்த்து தான் உண்ண வேண்டும் என்பதில்லை. பச்சையாகவும் உண்ணலாம். 

கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்...

  • நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
  • வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். 
  • இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர். இளம்பெண்களுக்கு முடி உதிராமல் ஒரே சீராக வளரவும் கறிவேப்பிலை உதவும்.
  • சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 
  • இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவேற்படும்.

இந்தியாவில் தென்னிந்தியர்கள் மட்டுமே கறிவேப்பிலை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். வட இந்திய பதார்த்தங்களில் கறிவேப்பிலை ஒரு சில பண்டங்களில் மட்டுமே சேர்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் கறிவேப்பிலை இல்லாத உணவுப் பண்டமே இல்லை எனலாம். தென்னிந்தியப் பகுதிகளுடன் உணவு விஷயத்தில் நெருங்கிய தொடர்புடைய இலங்கையிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு அதிகமே! இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள தமிழர்களுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பின் காரணமாக சிங்களர்களும் தங்களது அனேக பதார்த்தங்களில் கறிவேப்பிலையை அதிகம் பயன்படுத்திகிறார்கள். 

curry-leaves.jpg

 

தமிழ்நாட்டில் அபார்ட்மெண்ட் கலாச்சாரம் பரவும் முன் ஒவ்வொரு தனி வீட்டிலும் புழக்கடையில் நிச்சயம் ஒரு கறிவேப்பிலை மரம் வளர்ப்பதென்பது பாரம்பரிய பழக்கமாக இருந்தது. தற்போது அபார்ட்மெண்டுகளில் வசிப்பவர்கள் கூட மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என்ற பெயரில் கறிவேப்பிலை மரத்தை தொட்டிகளில் வைத்து வளர்க்க பெரும் ஆர்வத்துடனே இருக்கிறார்கள். வீட்டுக்கொரு கறிவேப்பிலை மரம் வளர்ப்பது உடல் ஆரோக்யத்துக்கு மட்டுமல்ல நமது சுவாசத்துக்கும் நல்லது. 

thotti_kari_leave.jpg

அதோடு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழின் வாசகர் கடிதம் பகுதியில் வாசகர் ஒருவர் கறிவேப்பிலை தொடர்பாக தனது வருத்தமொன்றைப் பதிவு செய்திருந்தார்; அது என்னவென்றால், 

கடைக் கறிவேப்பிலை VS  வீட்டுக்கறிவேப்பிலை...

இன்று நகர்ப்புறங்களில் கறிவேப்பிலை மரம் வைத்து வளர்க்க முடியாதவர்கள் தங்களது கறிவேப்பிலைத் தேவைக்கு மளிகைக் கடைகள் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களையே பெரும்பாலும் நம்பி இருக்கிறார்கள். ஆனால், அருகிலுள்ள கிராமத் தோட்டங்களில் இருந்து கறிவேப்பிலை பறித்து மொத்தமாக சாக்குகளில் அடைத்து அதை விற்பனைக்காக கொண்டு வரும் சில்லறை வர்த்தக வியாபாரிகள் அட கறிவேப்பிலை தானே என அதை மிக எளிதாகக் கருதி மின்சார ரயிலின் கழிப்பறையோரத் தரைகளில் அசுத்தமாக ஸ்டாக் செய்து எடுத்துக் கொண்டு வந்து கடைகளுக்கு சப்ளை செய்து விடுகின்றனர். இதை அறியாத இல்லத்தரசிகளோ கறிவேப்பிலை தானே என்று பல நேரங்களில் அதைச் சரியாகச் சுத்தம் செய்யாமலே கூட தாளிதத்துக்குப் பயன்படுத்தி விடுகிறார்கள். அவர்களெல்லாம் ஒரே ஒரு முறை வெவ்வேறு பகுதிகளில் இருந்து கறிவேப்பிலை எவ்விதமாகப் பெரு நகரங்களை வந்தடைகிறது எனும் முறைகளைக் கண்டால் கொதித்துப் போய் இனிமேல் சமையலில் கறிவேப்பிலையே பயன்படுத்துவதில்லை என்ற முடிவுக்கே கூட வந்து விடுவார்கள் எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

அது நிஜம் தான், உணவில் கறிவேப்பிலையைப் பலர் தூக்கி வீசுகிறார்கள் என்பதற்காக அதை நாம் அசுத்தப்படுத்தி கொண்டு வந்து தான் விற்கவேண்டுமென்பதில்லை. அப்படி நாம் வாங்கும் கறிவேப்பிலை குறித்த அச்சம் நமக்கு இருக்குமாயின் வீட்டுத்தோட்டம் எனும் திட்டத்தின் கீழ் மண் தொட்டிகளிலோ அல்லது துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகளிலோ கறிவேப்பிலைச் செடிகளை வாங்கி வந்து வீட்டுத் தேவைக்கு மட்டுமாக வளர்த்துப் பயன்பெறலாம். மொத்தமாக பயன்படுத்தாமலே புறக்கணிப்பதைக் காட்டிலும் இது சிறந்த முறை. இந்த முறை அபார்ட்மெண்ட் வாசிகளுக்கானது.

உங்களுக்கு செடிகொடிகள் வளர்க்கத் தோதாக கையகல நிலம் வீட்டைச் சுற்றி இருப்பதாக இருந்தால் அது வாடகை வீடாக இருந்த போதிலும் நீங்கள் தாராளமாக கறிவேப்பிலை மரம் வளர்க்கலாம். மிக எளிதாக எந்த விதமான ஸ்பெஷல் உரங்களும் இன்றி நீங்கள் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தி மிஞ்சும் காய்கறிக் கழிவுகள், பழத்தோல்கள், தேங்காய் நார்க்கழிவுகள் மற்றும் சாண உரத்தில் போஷாக்காக வளரக்கூடியவை கறிவேப்பிலை மரங்கள். வீட்டிற்கு ஒரு மரம்... ஒரே ஒரு மரம் போதும். மொத்தக் குடும்பத்தின் ஆரோக்யத்துக்கும் உத்தரவாதம் அளிக்கக் கூடியவை இவை.

இந்தியாவில் கறிவேப்பிலை சாகுபடி...

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கறிவேப்பிலை அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கறிவேப்பிலை சாகுபடி செய்யத் தோதான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பொதுவாகத் தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களுமே கறிவேப்பிலை சாகுபடி செய்யத் தோதானவை தான் என்றாலும் எல்லாவகை மண்ணிலும் நல்லபடியாக வளரும் கறிவேப்பிலை செம்மண் நிலத்தில் மட்டும் அபிரிமிதமான சாகுபடி பலன்களைத் தரக்கூடியது என தமிழகத் தோட்டக்கலைத்துறையினர் கூறுகின்றனர்

நன்கு பாதுகாத்து வளர்க்கப்பட்ட கறிவேப்பிலை மரம் 25 வருடங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கக் கூடியது.

இத்தகைய அருமையான பலன்களைக் கொண்ட கறிவேப்பிலையை சாப்பிடாமல் தூக்கி எறிவது எத்தனை அபத்தமான செயல்?!

எனவே, இனி வீட்டிற்கொரு கறிவேப்பிலை மரம் வளர்ப்பதோடு... சாப்பாட்டில் கறிவேப்பிலை கிடந்தால் நிச்சயமாகத் தூக்கி எறியவே மாட்டோம் என்றும் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.