Jump to content

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?


Recommended Posts

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

 

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக போராட்டங்களில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்களுக்கு, போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் எச்சரித்திருப்பதாக பௌத்த பிக்குகளின் அமைப்பொன்று விளக்கம் அளித்துள்ளது.

அதேவேளை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயற்பாட்டை பாராட்டியுள்ள பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் ஸ்ரீலங்கா தூதரக அதிகாரிகளும்,  சிங்களவர்களும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவைப் போன்று பதிலடி கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்றும்  அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் - தமிழ் தோழமை இயக்கமும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த போராட்டம் கடந்த நான்காம் திகதி பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா அரசின் தமிழனப் படுகொலைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பது போன்று சைகை மூலம் ஸ்ரீலங்கா தூதரக பாதுகாப்புக்கான பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடுத்த எச்சரிக்கை குறித்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அவரை குறித்த பதவியில் இருந்து இடைநிறுத்துவதாக அறிவித்த ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு பிரிகேடியர் பிரியங்கவின் நடவடிக்கை தொடர்பில் விசாரணையொன்றையும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்திருந்தது.

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தரான திலக் மாரபன அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருந்த இந்த அறிவிப்பை ஒருசில மணித்தியாலங்களுக்குள் இரத்துச் செய்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிகேடியர் பிரியங்கவை மீண்டும் பதவியில் அமர்த்தும்படி அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்தார்.

இந்த நிலையில் இலண்டனில் தூதரக சேவையில் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை இணைத்து கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதற்காக இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு சென்றிருந்த பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முலுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர் குறித்த நடவடிக்கையை பாராட்டி கடிதமொன்றை கையளித்துள்ளார்.

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  “புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்படட பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் அமர்த்த முடிவெடுக்கப்பட்டதையிட்டு வெளிவிவகார அமைச்சுக்கு நன்றி தெரிவித்தோம். அவரை மீண்டும் அப்பதவியில் நியமிக்கும்படி ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தியிருந்தோம்.

அந்த வகையில் மிகவிரைவில் அவரை அப்பதவிக்கு திரும்பச்செய்வதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் பிரியதர்ஷன எமது கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொண்டு பதிலளித்தார். உண்மையிலேயே புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகளின் குழுக்களால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களின் கழுத்தை அறுப்பதாக பிரிகேடியர் எச்சரிக்கை விடுக்கவில்லை. ஆனால் அப்படியொரு எச்சரிக்கையையே தங்களுக்கு விடுத்திருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததைப் போன்றே உங்களது தலையையும் இழக்கநேரிடும் என்ற செய்தியையே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வழங்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த குழுவினர் ஸ்ரீலங்காவுக்கு எதிராக வெளிநாட்டு அமைச்சுக்கள், நாடாளுமன்றங்களில், முறைப்பாடு செய்யப்படுவதை புலம்பெயர் சிங்களவர்கள் உன்னிப்பாக பார்க்கவேண்டும். எனவே புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் குழுவினர் செய்வதை பார்க்கிலும் அதிகமாக அவர்களுக்கு பதில் வழங்க புலம்பெயர் சிங்களவர்கள் நடவடிக்கை வேண்டும். இதற்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” - என்றார்.

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

https://news.ibctamil.com/ta/internal-affairs/Buddhist-monks-comment-on-London-Issue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே தமிழனை தாக்கிகொண்டு கிடவுங்கோ ரூபவாகினியில் காலிமுகத்திடலில் சுதந்திர கொண்டாட்டம் நடத்தினம் பின்னணியில் கொழும்பு காபரில் வேலை என்று  சீனன் இடத்தை பிடித்துகொண்டு இருப்பது தெரிகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.colombotelegraph.com/index.php/photographic-evidence-shows-throat-slitting-gesture-by-patriot-mimics-gruesome-habit/

குறித்த அதிகாரி கடமை நீக்கம் செய்யப்பட்டுக்கதாக செய்திகள் கூறுகின்றன. 

அதே நேரம் ஜனாதிபதி அந்த முடிவை திரும்பவும் மாற்றியதாகவும், அந்த அதிகாரி திரும்பவும் அவரின் கடமையை பிரித்தானிய தூதுவராலயத்தில் தொடர்வதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதில் எது சரி?

 

Link to comment
Share on other sites

1 hour ago, Sasi_varnam said:

குறித்த அதிகாரி கடமை நீக்கம் செய்யப்பட்டுக்கதாக செய்திகள் கூறுகின்றன. 

அதே நேரம் ஜனாதிபதி அந்த முடிவை திரும்பவும் மாற்றியதாகவும், அந்த அதிகாரி திரும்பவும் அவரின் கடமையை பிரித்தானிய தூதுவராலயத்தில் தொடர்வதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதில் எது சரி?

இதில் சரியானது, வழமைபோல் பிரித்தானியா வாழ் இளிச்சவாய் தமிழர்களும், இளிச்சவாய் தமிழ் அமைப்புகளும் எவராவது பயங்கரவாதி பிரியங்க பெர்னாண்டோ மீது முறைப்பாடு செய்து, யாரோ எவராவது வந்து தொடரும் சிங்கள-பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று இலவு காத்த கிளி போல காத்துள்ளார்கள்.

இதுவரை பிரித்தானியா வாழ் தமிழர் அமைப்புகளும், தமிழர்களும் சட்ட ரீதியான முறைப்பாடுகள் எதையும் எங்கும் செய்யவில்லை எனத் தெரிகிறது! தமிழினத்தின் அழிவுக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் தொடர் வெற்றிக்கும் தமிழினத்தின் இது போன்ற சுயநல செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்!

தமிழர் அமைப்புக்கள் அறிக்கைகள் விட்டு அரைவேக்காட்டு அரசியல் செய்வது எக்காலத்திலும் பயனில்லாத செயல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்த பிக்குவின் அறிக்கையையும், கைது செய்யப்பட்டு கழுத்தறுபட்ட நிலையில் கைகள் பின்னுக்குபிணைக்கப்பட்ட   போராளிகளின் படங்களையும் சர்வதேச ஊடகங்களுக்கு கிடைக்கும்படி அனுப்ப முடிந்தவர்கள் யாரும் செய்யலாம்.இது ஏற்கனவே கலம் மக்ரே செய்துவிட்டார். இருந்தாலும் இப்போ சந்தர்ப்பம் சாதகமாக  மாறி இருக்கும் போது திரும்ப  பயன்படுத்திப் பாக்கலாம் என்றொரு நப்பாசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

 

புலிகளின் தலைவர்களுக்கு நேர்ந்ததே நேரிடும் என்றே பிரிகேடியர் எச்சரித்தார்?

இந்தப் புத்த பிக்குவின் முகத்தில், வழமையாக ...மத குருமார்கள் முகங்களில்...காணப்படும் அமைதியோ...சாந்தமோ காணப் படவில்லை!

இலவசமாகக் கொடுக்கப்படும்...அரிசிக்கும்..பருப்புக்கும்...வேறு வசதிகளுக்குமாகப் புத்த பிக்கு ஆனவர் போல உள்ளது!

இலவீக ஆசைகளுடன்...மத குருமார் ஆனவர்கள்....தங்கள் முனைப்புகளையே எப்போதும் முன்னெடுப்பார்கள்!

நாட்டைப்பற்றியோ...மதத்தைப் பற்றியோ...எந்தக் கவலைகளும்...இவர்களிடம் கிடையாது!

இவர்கள் போன்றவர்களுக்கு....முக்கியத்துவம் கொடுக்கும்...எமது பத்திரிகைகள் தான் ....வெட்கப் பட வேண்டும்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.