Jump to content

மாயை - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

மாயை…
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
இலையுதிர்கால சருகுகளாய்
உலகமெங்கும் சிதறினமே
அம்ம நீ போனது எங்கடி
அனுதினம் உன்னையே தேடினேன்.
இனிவழி ஏதென நோகையில்
இணையத்தில் வந்து கண் சிந்தினாய்.
நீயுமா தேடினாய் கண்ணம்மா?.
எல்லை இலாத மின் அம்பலம் அங்கு
ஏங்கும் மனசுகள் சங்கமம்
உந்தன் இருப்பை உணர்வதில்
உயிரே மயங்குது கண்ணம்மா
.
இணைவெளியிடைக் கண்ணம்மா
உந்தன் எழிலில் மொழியில் கரைகிறேன்
அகதி அழிந்திடும் அன்பிலே
ஆதரவான மொழியிலே.
ஆவியைத் தின்கிற கண்ணிலே போதை
ஆசை சிவந்த இதழ்களிலே
 
காட்ச்சியும் பேச்சுமே கரைகளாய்
மாயக் காதல் நதியினில் நீந்தினோம்.
சித்து நிலையடி கண்ணம்மா நாம்
சேர்ந்து சிறகை விரிப்பதால்.
இது பித்து நிலையடி கண்ணம்மா உயிர்
படைத்திடும் தேவரின் வேட்கையால்
.
2
,
உன் பந்தாடும் காதலால்
என்னையும் உயர உதைதாய்
பிரபஞ்ச பெரு வெளியில்
உருட்டிவிட்டாய்.
.
என் அன்பே
பூச்சுட்டி அலங்கரித்த
பண்பட்ட காமமே
காதல் என வாழாதிருந்தேனே.
பெண் பல்லாயிரம் ஞானக் கதவுகளென
அறியாது இழந்தேனே கண்ணம்மா.
மாய மொழிகளால் நீ அணைக்கையில்
என் பாதங்களின்கீழ்
காற்பந்தாய்ப் பூமி சுழல
உயர்கிறதென் கவிமனசு.
,
3
.
முகநூலை அணைத்துவிட்டு
சன்னல் திறந்தால்
வெளியே ஒளி அலையும்
கூதல் பனி மலைகளில்
மலருமுன் மார்புகள் அசைக்கும்
பொற் பதக்கமாய்
காலைச் சூரியன் உதிக்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

நன்றி. கவிஞன் நவீனனுக்கு அன்பும் நன்றியும். யாழில் கவிதைகள் வெளியிடுவதே முன்னர்போல நம்மவர்கள் வாசித்து எதிரும் புதிருமாக விமர்சனங்கள் எழுதுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில்தான். சாதக பாதகமான விமர்சனங்கள் யாவும் பயனுள்ளவை. இப்ப முன்னர்போல யாரும் என் கவிதைகளை வாசிக்கிறதோ விமர்சிக்கிறதோ இல்லை. விருப்பம் சொன்ன கவிஞர் நவீனனுக்கு என் அன்பு.விமர்சனக் கருத்து எழுதுவது மேலும் சிறப்பு.

Link to comment
Share on other sites

45 minutes ago, poet said:

நன்றி. கவிஞன் நவீனனுக்கு அன்பும் நன்றியும். யாழில் கவிதைகள் வெளியிடுவதே முன்னர்போல நம்மவர்கள் வாசித்து எதிரும் புதிருமாக விமர்சனங்கள் எழுதுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில்தான். சாதக பாதகமான விமர்சனங்கள் யாவும் பயனுள்ளவை. இப்ப முன்னர்போல யாரும் என் கவிதைகளை வாசிக்கிறதோ விமர்சிக்கிறதோ இல்லை. விருப்பம் சொன்ன கவிஞர் நவீனனுக்கு என் அன்பு.விமர்சனக் கருத்து எழுதுவது மேலும் சிறப்பு.

poet  அவர்களே ஏன் இந்த கொலைவெறி..:grin:

 

நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை ..tw_blush:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மிகவும் நன்றாக இருக்கின்றது.

முகநூலை அணைத்துவிட்டு
சன்னல் திறந்தால்
வெளியே ஒளி அலையும்
கூதல் பனி மலைகளில்
மலருமுன் மார்புகள் அசைக்கும்
பொற் பதக்கமாய்
காலைச் சூரியன் உதிக்கிறது.
 
அழகான உவமை ஐயா.....!  tw_blush:
உங்களின் கருத்துக்கு நவீனன் பதில் எழுத நிறைய யோசித்திருப்பார் என்று நினைக்கிறன்.....நான் என்றால் தெரியாதமாதிரி போயிருப்பேன்.....!  tw_blush:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை படிக்கையிலே பாரதியாரின் காற்றுவெளியிடைக் கண்ணம்மா என் மனக்கண்ணில் வந்து போனது. கவிஞர் பொயற்றின் கவிதையில் உவமான உவமேயங்களுக்குப் பஞ்சம் இருக்காது. கவிதையை படித்து ரசிப்பதற்கு என்னைப்போல் பலர் உள்ளனர். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

நன்றி காவலூர் கண்மணி நவீனன் சுவி மற்றும் இணையனுக்கு என் அன்பும் நன்றிகளும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.