Jump to content

சுவையான 'பக்கோடா' செய்வது எப்படி..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான 'பக்கோடா' செய்வது எப்படி..?

nm-k1KH-621x414@LiveMint.jpg?resize=621,d689149364ac004ca93b29d97b003e52.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இப்ப கொஞ்ச நாளா பக்கோடா என்பது ரொம்ப பிரபலமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
‘அந்த’ ஒரு வார்த்தை: கூகுள் தேடலில் இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘பக்கோடா’!

 

pakoda1.jpg

 

புதுதில்லி: உலக அளவில் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் கடந்த வாரம் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன வார்த்தைகளில் 'பக்கோடா' முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பொழுது, 'பக்கோடா விற்பது என்பதும் ஒரு வேலை வாய்ப்புதான், பக்கோடா விற்பனை செய்யும் நபர் தன் வீட்டிற்கு ரூ. 200-ஐ வருமானமாகக் கொண்டு சென்றால், அதனை நாம் வேலைவாய்ப்பாக கருத வேண்டுமா..? இல்லையா..?' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்து பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்வினைகளை உண்டாக்கியது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாஜக அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோடியின் இந்த பேச்சினை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரமும் விமர்சனம் செய்து இருந்தார். அவர் கூறும்பொழுது, 'பக்கோடா விற்பனை செய்வதை பிரதமர் வேலைவாய்ப்பு என குறிப்பிட்டு உள்ளார். அப்படிப்பு பார்த்தால் பிச்சையெடுப்பது என்பது கூட ஒரு வேலைதான். ஏழ்மை காரணமாக வாழ்க்கைக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களையும் நீங்கள் வேலை வழங்கப்பட்டவர்களாக கருதலாம்' என்று காட்டமாக விமர்சித்தார்.

செவ்வாய்க்கிழமையன்று கூட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ஜி மற்றும் பக்கோடா விற்பனை செய்யும் போராட்டத்தினை புதுச்சேரியில் நடத்தினார். இப்படியாக பக்கோடா தொடர்பான விவாதம் எதோ ஒரு வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இதன் விளைவாக உலக அளவில் பிரபல தேடுபொறி தளமான கூகுளில் கடந்த வாரம் இந்திய அளவில் ஆன வார்த்தைகளில் பக்கோடா முதலிடம் பிடித்துள்ளது. அதிலும் அதிகமான தடவைகள் அந்த வார்த்தையினைத் தேடியவர்கள் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.