Jump to content

எங்கடா போறே, சிறீலங்காவா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடா போறே, சிறீலங்காவா..?

 

ஆபத்தான விடயங்களை சீண்டிப்பார்ப்பது இளசுகளின் இயல்பு.. ஆனால் இப்படியா..?  boucheoh.gif

பாம்பன் பாலத்திருந்து குதிக்கும் நபர், கடலின் நீரோட்டம் பற்றி அறியாமல் விளையாடுவதை என்னவென்று சொல்வது?

 

 

 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை... பதற வைத்த, காணொளி.
இளம் கன்று. பயம் அறியாது  சொல்வார்கள். ஆனால் இப்படி செய்வதால்... வரும் உயிர் ஆபத்துக்கள் அதிகம் என்பதை, இவர்களுக்கு... தமிழக ஊடகங்கள்  கற்றுக் கொடுக்கவில்லை என்பது வேதனை.

முதலில் இவர்கள்...  ஆழ்கடலில், சுலபமாக நீந்தக் கூடிய உடைகள் போடவில்லை.
மற்றும்.... இவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்கும் போது, தண்ணீரில் எந்தக்  கோணத்தில்.. உடலை வைத்திருக்க வேண்டும் என்ற, அடிப்பறை அறிவு இவர்களுக்கு தெரியவில்லை.

உப்புத்   தண்ணீர், அடர்த்தியானது. அதில்.. எமது உடல் நிறையை, படுத்த படி பாய்ந்தால்,  கடினமான  கொங்கிரீட் நிலத்தில் விழுந்தது போல்....  தோல் வெடிக்கும், உடல் சிதறும், எலும்பு முறிவு ஏற்படக் கூடிய  சாத்தியங்கள் மிக அதிகம் என்பதை.... ஜேர்மனி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக காட்டி மக்களுக்கு  விழிப்புணர்வு  ஊட்டியதை பார்த்தேன்.    

"தொப்பொன்று... விழுந்தான், பட்டென்று... செத்தான்"  என்ற கதையாகி விட்டால்.... 
இவர்களை  நம்பி வளர்த்த  பெற்றோரின்...  கவலையை,  நினைத்துப் பார்க்க வேண்டாமா?    

தமிழக தொலைக்காட்சிகள்... ரஜனி/ கமல்/ விசால்... போன்ற நடிகர்கள்,  அரசியலுக்கு வருவார்களா? மாட்டார்களா? எனற உப்பு சப்பு இல்லாத விடயங்களை.. விவாதிப்பதை விட தமிழ் மக்களுக்கு பிரயோசனமான... விடயங்களை விவாதிப்பது நல்லது.

வார சஞ்சிகளை பார்த்தால்... முன் அட்டைப்  படத்திலிருந்து, பின் பக்கம் வரை... சினிமா  நடிகைகளின்  படங்கள். இதெல்லாம் ஏன்... என்று புரியவில்லை.

Edited by தமிழ் சிறி
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

எங்கடா போறே, சிறீலங்காவா..?

 

 

ஆபத்தான விடயங்களை சீண்டிப்பார்ப்பது இளசுகளின் இயல்பு.. ஆனால் இப்படியா..?  boucheoh.gif

 

 

காணொளியில வேற போட்டிருக்காங்க இனி கண்டவென்லாம் போய் விழுந்து மேல போகப் போறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினிமா பழையதும் சரி சமீபத்தில் பத்து வலசு கூட்டம் விசால் போன்றவர்கள் கூட தண்ணியில் நீச்சலுக்கு பாயும்போது பிழையாகவே பாய்கிறார்கள் அதுவும் கதாநாயகிகள் என்றால் பன்னிக்கு பாவாடை கட்டி குதிப்பது போல் எடுப்பார்கள் தமிழ்நாட்டில் நீச்சல் பற்றிய அடிப்படை அறிவு ஒருத்தருக்குமே இல்லையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் உள்ளவர் இப்படி குதிப்பது  முதல் தரமன்று படத்தை பார்க்கும்போது தெரிகிறது ஆனாலும் உயிர் ஆபத்து விளையாட்டு இனி என்ன போலிஸ் தேடிபோய் பிடித்து நாலு போடு போட்டு விடியோவில் அமைதியாக சிங்கன் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவார் பாருங்கள் அப்படி பிடிபடாவிட்டால் ஆள் XXX:14_relaxed:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.