Jump to content

லண்டனில் மீண்டும் தமிழர்களை ஒன்றிணைய வைத்த சம்பவம்! கொலை மிரட்டல் விடுத்தவர் தப்புவாரா?


Recommended Posts

லண்டனில் மீண்டும் தமிழர்களை ஒன்றிணைய வைத்த சம்பவம்! கொலை மிரட்டல் விடுத்தவர் தப்புவாரா?

 

 

பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற சைகையினூடு கொலைமிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, அவர்மீது சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தனர்.

இந்த சட்ட நடவடிக்கைகளை வழிநடத்தும் சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலருமான அருண்கணநாதன் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆகியோர் முதல்கட்டமாக, பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட 50க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் அடிப்படையில், Westminister Magistrate Court இல் கிரிமினல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து, பிடியாணைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதன் விளைவாக, பிரிகேடியர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரியால் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை அருண்கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் முடுக்கி விட்டிருந்தனர். அதன் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை உட்பட, பல்வேறு அமைப்புக்களை ஒருங்கிணைந்து, பிரித்தானிய பிரதமர், உள்நாட்டு அமைச்சர் மற்றும் பொதுநலவாய அமைச்சு ஆகியோருக்கு விண்ணப்பம் ஒன்றை நேற்று சமர்ப்பித்து இருந்தனர். அந்த இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர பாதுகாப்பு விலக்கப்பட வேண்டும் என்றும், போர்க்குற்றம் மற்றும் கிரிமினல் குற்றங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட மீளாய்வு (JR) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் புலம்பெயர் 13 தமிழ் அமைப்புக்கள் கையெழுத்து இட்டிருந்தன. இதன் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அந்த இராணுவ அதிகாரியை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் பிரித்தானியாவில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று, தமிழர் ஒருங்கிணைப்பு குழு தலைமையில் இடம்பெற்றது. இந்த மாபெரும் எதிரப்புப் பேரணியில் முதல் முறையாய் பல்வேறு அமைப்புகள் ஒருமித்த குரலாய் ஒன்றுதிரண்டர். ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், தமிழரின் ஒருமித்த பலத்தை நிரூபித்தனர்.

இந்த ஒன்றுபட்ட செயற்பாடானது, புலம்பெயர் அமைப்புக்கள் மீது இருந்த நம்பிக்கையீனத்தை போக்கி, தமிழர் பலத்தை மீண்டும் ஒருங்கிணைந்து பெரும் நம்பிக்கையை ஏற்படுதியுள்ளது. இந்த பெரும் ஒன்றிணைவுக்காக கடுமையாக பாடுபட்டு, பிரித்தானிய புலம்பெயர் அமைப்புக்களை முதல் தடவையாக வெற்றிகரமாக ஒருங்கிணைத்த பெருமை சிரேஸ்ட சட்டத்தரணி அருண்கணநாதன் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆகியோரையே சாரும்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/uk/01/173751?ref=home-latest

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.