Jump to content

பனி நிலா


Recommended Posts

பனி நிலா - சிறுகதை

 

சிறுகதை: அராத்து, ஓவியங்கள்: செந்தில்

 

கார் டயர் டொம்ம்ம்  என்று வெடித்து வண்டி 130 டிகிரி திரும்பித் தேய்த்துக்கொண்டு போனது. மதிய நேரமே இரவுபோலக் காட்சியளித்தது. கடும் மழையால் இப்படி இரவு போல இருந்தாலும், இப்போது மழை பெய்யவில்லை. இந்தக் குளிரிலும் இரண்டு குளிர்ந்த  பியர் அடித்துவிட்டு தன் உயர்ரக ஏசிக்காரை புகையிட்டு நாறடித்துக்கொண்டு வந்த தரண், முன்னால் சென்ற காரின் டயர் வெடித்ததைப் பார்த்ததும், பதமாக பிரேக் அடித்தான்.

p44a_1517902040.jpg

டயர் வெடித்த காரிலிருந்து பதற்றமேயில்லாமல் ஒருத்தி இறங்கினாள். பார்ப்பவர்க்கு ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருப்பதுபோலத் தோன்றினாலும், அது  ஒரே கவுன். உடலுடன் ஒட்டியில்லாமல் படர்ந்து இருந்தது. தரண் அவளைக் கண்டு, ஒருகணம் உருக்குலைந்து உடைந்துபோனான்.

தூறல் இப்போது ஆரம்பித்தது. டாக்ஸி டிரைவரும் அவளும் ஏதோ பேசிக்கொண்டார்கள். லக்கேஜை இறக்கினார்கள்.

அந்தச் சாலை சென்னையின் சாலை போலவே இல்லை. புயல் அறிவிப்பினால், நடமாட்டமில்லாமல் இருந்தது. புயல் அடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் மரங்கள் கல்லுளிமங்கன்போல அமைதியாகக் காத்திருந்தன.

தரண் பைனாகுலரை வைத்துப் பார்த்தால் அவளின் முதுகில் இருக்கும் மெல்லிய மயிர்க்கால்களில் ஒரு துளி மழைநீர் நடனமாடிக்கொண்டிருப்பது தெரியும்.

தரணுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. மூளையில் ஏதோ உருகி, மீண்டும் உறைவது போல இருந்தது. இவள் எனக்கானவள் என்று அவனை மீறி முணுமுணுத்தான். இந்த உலகில் இருக்கும் அனைவருக்குமான காதல் உணர்வைத் தரண் மட்டுமே அப்போது அனுபவித்தான்.

ஒரு மாய உலகத்தில் நுழைந்த அனுபவத்தில் மிதந்தான். மரங்கள் லேசாக அசைந்தாட ஆரம்பித்தன. மரங்களிலிருந்து லேசான கோரைப்பற்கள் எட்டிப்பார்த்தன. புயலின் போது என்ன செய்வோம் என்று அவை முன்னறிவிப்பதுபோல இருந்தன.

இது என்ன அனுபவம்? பியர் அடித்ததாலா என்று மனதிற்குள் பேசாமல் வெளிப்படையாக முணுமுணுத்துக்கொண்டான். உடலெங்கும் சிலிர்த்து ரத்த ஓட்டம் அதிகரித்துக் காதல் உணர்வை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில் மெல்லிய பயத்தில் சிறுநீர் முட்டியது.

இன்னொரு கால் டாக்ஸி அவளின் அருகில் வந்து நின்றது. அவள் அதில் ஏறி, பயணத்தைத் தொடர்ந்ததும், தலையை உலுக்கிக்கொண்டு பின்தொடர்ந்தான்.

மரங்கள் மீண்டும்  அபாயமான அமைதியில் ஆழ , இரண்டு கார்கள் மட்டும் அந்தச் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன.

அவளுடைய டாக்ஸி செல்லும் வழியை வைத்து விமான நிலையத்திற்குத்தான் செல்வதாக யூகித்த தரண், நண்பனுக்கு கால் செய்தபடியே ஓட்டினான். புளூ டூத்தில் போன் கனெக்ட் ஆகவில்லை. அவளுடைய கார் விமான நிலையத்தில், உள்நாட்டு முனையப் புறப்பாட்டில் நின்றது.

காரை அவளுடைய டாக்ஸிக்குப் பின்னே நிறுத்திவிட்டு, பாம்பு மகுடியானதுபோல அவளைத் தொடர்ந்தான்.

விமான நிலையம் சோகமாக இருந்தது. ஒரு விமானம் கடனே என்று வந்து இறங்கி அலுத்துக்கொண்டு, முனகியபடிக்கு நொண்டியடித்துக்கொண்டே போய் ஓரமாக நின்று முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அவள் தன்னுடைய பயணக் காகிதங்களையும், அடையாள அட்டையையும் எடுப்பதைப் பார்த்தான். அவற்றைச் சரிபார்க்கும் சிஐஎஸ்எஃப் பணியாளரின் பின்னால் கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டான். தன் மொபைலை எடுத்து அங்கே குறி பார்த்து, ஜூம் செய்து வைத்துக்கொண்டான்.

p44b_1517902109.jpg

அவள் பயணக் காகிதங்களைக் கொடுத்ததும், அலுவலர் தூக்கிப் பிடித்துப் பார்க்கும்போது கஷக் கஷக் கஷக் என அந்தக் காகிதங்களின் நிழலுருவைக் கைப்பேசியில் உள்ளிழுத்துக் கொண்டான்.
‘ஜீரோ ஒன் ஜீரோ ஒன் யார் வண்டி இது? சீக்கிரம் எடுங்க, ஜாம் ஆவும் பாரு’ என்று கட்டைக்குரல் மைக்கில் ஒலிக்க, தலையையும் கையையும் போக்குவரத்துக் காவல் வண்டியை நோக்கி ஆட்டிக்கொண்டே, கைப்பேசியில் அந்தப் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டே காரை நோக்கி ஓடினான்.

டெல்லி செல்கிறாள். விமானம் புறப்பட இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. வெப் செக்கின் செய்திருப்பதால் உட்காரும் இடத்தின் நம்பரும் தெரிந்தது. 7 ஏ. ஒருகணத்தில் காதலாகி, பித்துப்பிடிக்க வைத்தவளின் பெயர் ‘பனி நிலா’  எனக் காணப்பட்டது.

பரபரவென செயலியைக் கைப்பேசியில் இயக்கி அதே விமானத்தில் 7 பி என்ற இருக்கையை முன்பதிவு செய்து வெப் செக்கின் செய்தான்.

நண்பன் வந்து என்ன என்ன என நடுவில் சுரண்டிக்கொண்டிருந்தான். கார் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, ‘`போன்ல பேசறேன்’’ என்று சொல்லியவாறு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

விமான நிலைய ஓடுதளத்தைத் தாண்டி நீண்ட தூரத்தில் இருந்த மரங்கள் செடிகள்போலச் சின்னதாகக் காட்சியளித்தன. புயலை வரவேற்பதைப்போல மெல்லிய நடனத்தில் ஈடுபட்டிருந்தன அந்தச் செடி மரங்கள்.

அவளிடமிருந்து ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தான். சத்தம் வராமல் கனைத்துக்கொண்டான். கால் மேல் கால் போட்டுக்கொண்டு மொத்த விமான நிலையத்தையும் அளப்பதைப்போலப் பார்வையைச் சுழற்றி அவள் அவனின் பார்வைக்குள்  வந்ததும் சுழற்சியின் வேகத்தைக் குறைத்தான்.

அவள் ஓடுதளத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கால் மேல் கால் போட்டிருக்கவில்லை. செருப்பைக் கழற்றி வைத்திருந்தாள். தனியாக ஜோடியாக முப்பது டிகிரி கோணத்தில் இவனைப் பார்த்துக் கொண்டிருந்த செருப்புகளே இவனுக்குக் காதலுணர்வைக் கூட்டின. அவளின் பாதங்களைப் பார்த்தபடியே இருந்தான். அவள் தன்னுடைய பார்க்கும் திசையைத் திருப்பியதும் அவளின் பக்கவாட்டு முகம் இவனுக்குத் தெரிந்தது. அந்த தரிசனமே இவனுக்கு மூச்சு முட்டியது. மூச்சுத்திணறி இறப்பவன்போல தலையை உலுக்கிக்கொண்டான். விமானத்தில் அவளின் பக்கத்தில் அமரப்போவதை நினைத்து ரத்த அழுத்தம் எகிறியது. ரத்தத்துளிகள் மூளையில் பன்னீர் தெளிப்பதைப்போல மீண்டும் தலையை உலுக்கிக்கொண்டான்.

விமானத்திற்கு அழைப்பு வந்தது. அவள் எழுந்து நேராக நின்றாள். அந்த நிற்றலில் ஒரு கம்பீரம் தெரிந்தது. அசட்டு அழகு. அங்கு நின்றது, வரிசையில் நின்றது, வரிசையில் நகர்ந்தது என எங்குமே அவள் ஒன்றரைக் காலிலோ, ஒண்ணே முக்கால் காலிலோ நிற்கவில்லை. மிக நாகரிகமாக, அளவெடுத்ததுபோல நடந்தாள், நின்றாள்.  அவள் அப்படி நடந்துகொண்டதுகூட ஆச்சர்யமில்லை. ஆனால், அவளின் அவயவங்கள்கூட அளவாக, நாகரிகமாக அசைந்தன. அவள் பழக்கி வைத்திருக்கிறாளா, தானாகப் பழகிக்கொண்டனவா என்பது புதிர்தான்.

விமானத்தினுள் கடைசி ஆளாக நுழைந்தான். ஏழாம் வரிசையில் அமர்ந்திருந்தாள். மட்டமான புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவள் பக்கத்தில் அமர்ந்தான். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளின் வாசனைத் திரவியம் இவன்மீது படர்ந்து தாக்கியது. புயலுக்கு பயந்து அடித்துப்பிடித்து அவசரமாக விமானம் விண்ணில் பாய்ந்ததுபோல இருந்தது.

செயின்ட் தாமஸ் மலையை அரைவட்ட வலத்தால் கடந்து சென்னை வெளிவட்டச் சாலைகளைக் குறுக்காகக் கடந்து ரொய்ங்க் என்று சத்தமிட்டபடியே நிலைபெற்றது.

விமானத்தினுள் விளக்கு எரிந்தது. என்னென்னமோ டிஜிட்டல் சத்தங்கள்.விமானத்தினுள் பெரிதாகக் கூட்டமில்லை.

“ஹாய் பனிநிலா!” - சடுதியில் முடிவெடுத்து அழைத்துவிட்டான்.

அவள் சாதாரணமாகத் திரும்பினாள். அந்த முகத்தை வெளியில் விலகி ஓடிக்கொண்டிருந்த மேகங்கள் ஒருகணம் படமாக வரைந்து கலைந்திருக்கலாம். அந்த முகத்தில் ஆச்சர்யம், அதிசயம், புன்னகை, கோபம், அதிர்ச்சி ஏதும் இல்லை. நிர்மலமாகவும் இல்லை. இந்தக் கணத்தில் இவனைப் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிட்ட ஒன்றைச் செய்வது போல இருந்தது. திரும்பிய நான்கு நொடிகள் கழித்து ஒட்டிக்கொண்டு இருந்த உதடுகள் நடுவில் மட்டும் பிரிந்தன.

“யெஸ்” என்றாள். இன்னும் கொஞ்சம் உதடுகள் பிரிந்தன. மீண்டும் உதடுகள் ஒட்டிக்கொண்டன.இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் , கீழுதடு மேலுதட்டை நாடிச்சென்று ஒட்டிக்கொண்டது. மேலுதடு கீழுதட்டைவிடத் திமிராக இருப்பதாகப் பட்டது. சடுதியில் சிரித்துக்கொண்டான்.

மீண்டும் ``யெஸ்’’ என்றாள். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

``இல்லை, கீழுதட்டையும் சேர்த்து அல்லவா நான் காதலிக்க வேண்டும்?’’ என்றான்.

``வாட்?’’

“ஸாரி ஸாரி, உளறிட்டேன். உங்களை, உங்க கார் டயர் வெடித்ததிலிருந்து தொடர்ந்து வந்திட்டிருக்கேன். ரொம்பப் படபடப்பா இருக்கு, ஒரே மூச்சில எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்களை முதல் முறை பார்த்த உடனே என்னவோ ஆயிடிச்சி. என் வாழ்க்கை, என் மனசு, என்னோட இயல்பு எல்லாமே மாறிட்ட மாதிரி ஒரு உணர்வு… ம்ம்..ம்ம்… நான், எனக்கு... எனக்கு... என்னவோ ஆயிடிச்சி. சோல் மேட்டுன்னு சொல்வாங்களே… ஸாரி க்ளிஷேவா இருக்கு… அதையும் தாண்டி… பல ஜென்ம பந்தம்… இதுவும் க்ளிஷேதான்… ஸாரி, அவ்ளோ காதல், என் தெய்வம் மாதிரி, என் அம்மா மாதிரி, என் குழந்தை மாதிரி, எனக்கு எல்லாமே நீதான்னு, ஸாரி, நீங்கதான்னு சட்டுன்னு தோணிடிச்சி. தேவதைன்னு சொல்லலை, ஆனா, தேவதையைவிட மேல, பிரியமான தேவதை, என்ன சொல்றதுன்னே தெரியலை, உங்க கால் சுண்டு விரல் கூட இப்ப என் மனசுல, இல்ல நியூரான்ல எங்கோ பத்திரமா இருக்கு. உன் முகம்… அதை இன்னும் என்னால முழுக்க உள்வாங்கவே முடியலை. உன் முகத்தோட மொத்த அழகையும் உள்வாங்க மூளை தடுமாறுது, திணறுது, இவ்ளோ அழகை உள்வாங்கிப் பழக்கப்படலை இதுவரைக்கும். நான் சரியா சொல்றனான்னு தெரியலை… ஸாரி, அதனால உன்னைத் தொடர்ந்து வந்தேன். எப்படியோ இப்ப உன் பக்கத்துல உக்காந்துட்டிருக்கேன்.”

p44c_1517902129.jpg

“வாவ்… ஒரு பழைய  சினிமா ரொமான்ட்டிக் சீன்போல இருக்கு. சினிமாலதான் இப்படி நடக்கும்னு நினைச்சிட்டிருந்தேன்.”

“ரியல் லைஃப் சினிமாவைவிட சுவாரஸ்யங்கள் நிறைந்தது.”

“ம்ம்... ஆமாம்… நான் இன்னொரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் கொடுக்கவா?”

“என்னது’’

“நீ என்னைத் தொடர்ந்து வந்து இந்த ஃபிளைட்ல ஏறி என் பக்கத்து சீட்ல உக்காருவன்னு எனக்குத் தெரியும்.”

“வாட்?’’

“ரெண்டு வைப்பர் ஓவர் ஸ்பீட்ல ஆட ஆட, அதுக்கு நடுவுல உன் முகத்தைப் பார்த்தேன்.”

“ஓ காட்.”

“இவன் என் ஆளு, என்னைத் துரத்தி வருவான்னு தெரிஞ்சிது’’

“மை காட், எப்படி?”

“ஏன்னா நான் ஒரு சூன்யக்காரி’’

சீட்டை சாய்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்டபடி இருந்தான் தரண்.

திரும்ப பனிநிலாவைப் பார்த்து, “எனக்கு எல்லாமே கனவுபோல இருக்கு பனி.”

“சரி கனவுன்னே வெச்சிப்போம். இந்தக் கனவிலிருந்து முழிக்கணும்னு இருக்கா  இப்ப?”

“இல்லை.”

“சரி, இதைக் கனவுன்னே வெச்சிப்போம். போற வரைக்கும் போகட்டும், இப்ப கொஞ்ச நேரம் தூங்குவோமா?”

“நீ தூங்கு, நான் கனவை கன்ட்டினியு பண்ணிக்கிட்டே, நீ தூங்கறதைப் பாத்துக்கிட்டே இருக்கேன்.’’p44d_1517902139.jpg

பனி தூங்க ஆரம்பித்தாள். பனியின் சீட் பெல்ட்டை விடுவித்து விட்டான் தரண். அவள் கண்ணை மூடி சற்று நேரம் கழித்து தனது இருக்கையின் சாய்வுப்பகுதியில் தவழ்ந்த அவளின் முடிக்கற்றையில் முத்தமிட்டான். காதலில் முடிக்கற்றைகளுக்கும் உணர்விருக்கும். முடிக்கற்றைகள் அந்த முத்தத்தை உள்வாங்கின. எதிர்ப்பக்கத்தில் இருந்த முடிக்கற்றைகள் லேசாக ஆடி ஆர்ப்பரித்தன.

வானிலை சரியில்லாததால் வார்ப்பட்டையைப் போடவேண்டி அறிவிப்பு வந்ததும், பனிநிலா எழுந்தாள்.

விமானம் தரை இறங்குவதற்கு முன்னதாக அவள், ஹிமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்தவள் என்றும், அப்பா ஹிமாச்சல், அம்மா தமிழ்நாடு என்ற ஒரு சுருக்கமான காதல் கதையையும் சொன்னாள். அப்பா அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்.

விமானம் இறங்கியவுடனேயே ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் அவளுடைய ஊருக்கு காரில் செல்வதாகக் கூறினாள்.

“வாவ்” என்றான். விமானம் டெல்லியில் தரை தட்டியது. சென்னையில் புயல் ஆரம்பித்தது.

கார் சண்டிகர் பாதையில்  பயணிக்க ஆரம்பித்தது. சண்டிகர் தாண்டி பெரிய ஏசி தாபாவில் நின்றது. முதலில் தான் உடை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள். அவள் வரும் வரையில் அவளுடைய கைக்குட்டையை எடுத்து நீண்ட முத்தமிட்டான். முத்தமிடுகையில் மூக்குக்கும் வேலை கொடுத்தான். முன்பைவிட அதிக ஒளியுடன் திரும்பி வந்தாள். அளவாக உணவருந்திய பின், மீண்டும் வண்டி கிளம்பியது.

மலையேற ஆரம்பித்ததும், நான் உறங்கவா என்றாள்.

நான் இன்னும் கனவிலேயே இருக்கிறேன் என்றான்.

நீண்ட நேர ஓட்டுதலுக்குப்பிறகு, வாழைப்பழங்கள் சுருங்கித் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு கடையில் வண்டியை நிறுத்தினான். கடையில் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாமல், தானே ஒரு தேநீர் போட்டான். சத்தம் கேட்டு அசைந்தவனை ஆசுவாசப்படுத்தி விட்டு 500 ரூபாயை அவன் தலைமாட்டில் வைத்துவிட்டு, ஒரு சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டான்.

அவள் காரில் தூங்கிக்கொண்டிருந்தாள்.

சிகரெட் அடித்து முடித்துவிட்டு, காரில் ஏறினான். அவள் செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு காலைத்தூக்கித் தன் இருக்கையில் வைத்துக்கொண்டு, ஒருக்களித்து ஒரு சின்னஞ்சிறு குழந்தைபோலத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளின் செருப்பை எடுத்துப்பார்த்து முகர்ந்தான். அதை ஒரு முத்தமிட்டான்.  மீண்டும் கீழே இறங்கி அவளுக்கான ஒரு தேநீரைப் போட்டு அவனே குடித்தான். அப்போது காரின் கண்ணாடி வழியே அவளின் தொண்டைக்குழியைப் பார்த்தான்.

மீண்டும் ஓட்டம். ஒரு நதியைப் பாலத்தின் மூலம் கடந்ததும் அது பக்கவாட்டில் தொடர்ந்து ஓடி வர ஆரம்பித்தது. குளிர் ஏற ஆரம்பித்ததும் காரில் வெப்பத்தைக் கூட்டினான். நிற்காமல் வளைந்து நெளிந்து ஓட்டியபடியே உயர ஆரம்பித்தான். முரட்டு ஓட்டம் இல்லாமல் வாழ்விலேயே இப்போதுதான் ஒரு பரதநாட்டிய நங்கையின் லாகவத்தோடு ஓட்டிக் கொண்டிருந்தான். அதிகாலை நான்கு மணி ஆகியும் கண் செருகவேயில்லை. பனிநிலா எழுந்துகொண்டாள். சற்று நேரம் அரைத்தூக்கத்தில் இருந்தாள். சில மணித்துளிகள் கழித்து ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தினார்கள். தேநீர் முடிந்ததும் சற்று நேரம் பனி ஓட்டுவதாகச் சொல்லி ஓட்ட ஆரம்பித்தாள்.

அதிகாலைக் காற்றைச் சுவைக்க ஆர்வம்தான். ஆனால், கண்ணாடியைத் திறந்தால் உறைந்து விடுவோம் என்றாள்.

“நான் உறைந்து எவ்வளவோ நேரம் ஆகி விட்டது” என்றான் தரண்.

கன்னங்களால் சிரித்த பனிநிலா , “நீ என்னை எவ்ளோ லவ் பண்ற தரண்?” என்றாள்.

“சொல்லவே தெரியலை பனி, எனக்கு இந்த உலகமே வேணாம்னு இருக்கு. யாரும் வேணாம். எதுவும் வேணாம். நீ நீ மட்டும் போதும். தனியான ஒரு கிரகம், இல்ல, தனியான ஒரு காடு. எந்தத் தொந்தரவும் இல்லாம உன்னை லவ் மட்டும் பண்ணிட்டிருந்தா போதும்” என்றான்.

“யூ ஆர் லக்கி தரண். நீ கேட்டதை எல்லாம் நான் உனக்குத் தரேன்.’’

“நிஜமாவா ராணிக்குட்டி.”

“ஆமாண்டா ராஜாக்குட்டி. நாம இப்ப போறதே யாருமில்லாத மலைமேல, தனியா இருக்கும் காட்டுக்கு நடுவுல, யாரும் இல்லாத பங்களாவுக்குத்தான். அங்க போனா வெளில வரவே எட்டு மாசம் ஆகும். யாரும் வர மாட்டாங்க. நாம ரெண்டு பேரு மட்டும்தான். இன்னொண்ணு தெரியுமா? இந்தக் குருவி, காக்காகூட வராது. நதியோட சலசலப்புகூடத் துணைக்கு இருக்காது. ஏன்னா நதியே உறைஞ்சு போய்க் கிடக்கும். நேரமும் உறைஞ்ச மாதிரிதான் இருக்கும். அந்த உறைந்த உலகத்துல நம்ம காதல் மட்டும் உயிர்ப்போட இருக்கும். அங்க இறந்த காலம் , எதிர்காலம் ஏதும் கிடையாது. எல்லாமே நிகழ்காலம்தான். லவ்வுக்கு பாஸ்ட், ஃப்யூச்சர் ஏதும் வேணாம். அதை நிகழ்காலத்துல உறைய வச்சி வாழ்வோம். என்னா?”

“என் பனிக்குட்டி, எல்லாமே நான் மனசுல நினைச்ச மாதிரியே நீ பேசற . அந்த இடம் எங்க இருக்கு ?”

p44e_1517902152.jpg“மணாலி தாண்டி, ரோத்தாங் பாஸ் போயி, கேலாங் தாண்டிப் போனா ஜிஸ்பான்னு ஒரு சின்ன கிராமம் வரும். அந்தக் கிராமத்துல 30 வீடுகள்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்லயும் ஒருத்தவங்கதான் இருப்பாங்க. அங்க போறதுக்கான பாதை இன்னும் 10 நாளில் அடைச்சுடுவாங்க. அதுக்கு அப்புறம் ரோட்டை முழுக்கப் பனி பொழிஞ்சி மூடிடும். அதுக்கு அப்புறம் ஆறு மாசமோ எட்டு மாசமோ கழிச்சிதான் பனியைச் செதுக்கிட்டு ரோட்டைத் திறப்பாங்க. நடுவுல ஏதாச்சும் எமர்ஜென்சின்னா ஹெலிகாப்டர்தான். கடை, கிடை ஏதும் கிடையாது. அந்த கிராமத்தைத் தாண்டி மேல ஏறினா பல ஏக்கர்ல எனக்கு ஒரு பண்ணை இருக்கு. அதுக்குள்ள ஒரு மர பங்களா இருக்கு. அங்க யாரும் இல்லை. நாம மட்டும்தான் தங்கப் போறோம். நம்ம மர வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஆறு ஓடுது.’’

“ வாவ் , சான்ஸே இல்ல பனி , பனிக்கு நடுவில் பனிநிலாவோட இருக்கப்போறேன்.’’

பேசிக்கொண்டே வண்டி வேகமெடுத்து, மணாலியை வந்தடைந்தபோது விடிந்திருந்தது. ஓர் அறையெடுத்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, உடை மாற்றிக்கொண்டாள். ஹிமாச்சலபிரதேசத்தை லேசாகப் பிரதிபலிக்கும் படியான உடையணிந்து கொண்டாள்.

இந்த நாட்டின் இளவரசியே என்று கூறி அவளின் இடது கைச் சுண்டு விரலைப் பிடித்தான். அவளுடைய ரத்தம் இவனுடம்பில் பாய்வது போல ஒரு மோனமான சிரிப்பை உதிர்த்தாள். ஆலு பரோட்டா சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

டீசல் முழுக்க நிரப்பிக்கொண்டாள். இரண்டு பெரிய கேன்கள் வாங்கி, அதிலும் டீசல் நிரப்பிக்கொண்டனர்.
 
ஆல் வீல் டிரைவ் மோடுக்கு மாற்றி ஓட்ட ஆரம்பித்தாள். சாலையே இல்லாமல் பாறையாக, சேறாகக் கிடந்த இடங்களையெல்லாம் அநாயாசமாகக் கடந்தாள். ரோதாங்க் பாஸ் தாண்டி,  கேலாங்குக்குச் சற்று முன்பாக ஒரு குடில் இருந்தது. மதியம் ஆகிவிட்டபடியால் அங்கே ஆட்டுக்கறி உணவு உண்டார்கள். இன்றோடு அந்தக் கடையை அடைக்கப் போவதாகக் கூறினார்கள். அநேகமாக நாளையே சாலையை அடைத்துவிடுவார்கள். பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஆட்கள் போக்குவரத்தும் குறைந்துவிட்டது என்றார்கள்.

மீண்டும் ஆரம்பித்த பயணத்தில் சாலையை உடைத்துக்கொண்டு, நீர் மரண வேகத்தில் கிழித்துக்கொண்டு சென்றது. அதையெல்லாம் ஓவியம் வரையும் நிதானத்தோடு ஸ்டியரிங்கைப் பயன்படுத்திக் கடந்தாள். இப்போது பனிக்கட்டிகள் தட்டுப்பட ஆரம்பித்தன. சாலையின் இரு பக்கத்திலும் பனிக்கட்டிகள். தூரத்து மலைகளின் மீது பனிக்கட்டி உறைந்து கிடந்தது. பக்கத்தில் இருக்கும் ஆழமான பள்ளத்தாக்கையும், தொலைவில் இருக்கும் பனி உறைந்த மலைகளையும் ஒருங்கே பார்க்கும்போது, இரண்டையும் விழுங்கியதுபோல அடிவயிறு கலங்கியது.

கார் ஜிஸ்பாவினுள் நுழைந்தது. ஜிஸ்பா,  அநியாய போதையில் சாத்தான் வரைந்த ஓவியம் போல அவ்வளவு அழகாகவும், புதிராகவும் இருந்தது.

பனி சொன்னது போல 30 வீடுகள்கூட தேறுமா என்பது சந்தேகம். ஊரே உறைந்து கிடக்க, ஆட்கள் நடமாட்டம் ஏதுமில்லை. ஜிஸ்பாவைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்று, இடதுபுறம் பிரியும் ஒரு மோசமான தனியார் சாலையில் கார் திரும்பி  தத்தித் தத்திச் சென்றது. கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர்களைக் கடக்க ஒரு மணி நேரம் ஆனது.

ஒரு மணி நேரத்திற்குப்பிறகு, ஆறு தென்பட்டது. பக்கத்தில் ஒரு மர வீடு. பனி மர வீடு என்று சொன்னாளே ஒழிய, அது வீடு அல்ல, மர பங்களா. தரைத்தளம் மற்றும் முதல் தளம் என பிரமாண்டமாக இருந்தது.
“இங்கேதான் காதல் வளர்க்கப்போகிறோம்” என்று கூறி, துள்ளி இறங்கினாள்.

நதி ஓடிக்கொண்டிருந்தது. நீர் பாறையைப் பழித்தபடியும், பாறை நீரைப் பழித்தபடியும் ஏதோ கலவையான சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது நதி.

“ஆறு ஓடுறதைப் பாத்துக்கோ, இன்னும் கொஞ்ச நாளில் உறைஞ்சிடும்” என்றாள்.

 வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

“தூங்கறியா?” என்றாள்.

“இல்ல, இப்பவே ஈவ்னிங் ஆயிடிச்சி , ஏதாவது டிரிங்க் இருந்தா கொஞ்ச நேரம் குடிச்சிட்டு, சீக்கிரம் தூங்கிடலாம்” என்றான்.

“இந்த ஊர்லயே தயாரிச்ச வைன் இருக்கு” என்றவள், உள்ளே சென்று பெரிய மண் குடுவையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்டவன், இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தவன்போல, அவளின் இடையில் கைகொடுத்துத் தன்னருகே இழுத்து அணைத்துக்கொள்ள முயன்றான்.

அவன் நெற்றியில் பாக்ஸர்போலக் குத்திவிட்டு, சிரித்தாள். விலகினாள். ``குடிச்சிட்டிரு வந்துடறேன்’’ என்றவள், பங்களாவுக்குள் ஓவியம் கலங்குவதைப் போல நடந்து சென்று மறைந்தாள்.

வீட்டை விட்டு வெளியே வந்து நதிக்கரைக்குச் சென்றான் கையில் வீட்டில் தயாரித்த வைனுடன். நதியின் பக்கத்தில் ஒரு பாறை மீதமர்ந்தான். வைனை ருசிக்க ஆரம்பித்தான்.

பதநீரில் கசப்பும் கொஞ்சம் தணலும் சேர்த்தது போல இருந்தது.

இன்னும் இரவாகவில்லை.

இந்த இமாலயக் குளிர் நரம்பினூடாகப் பாய்ந்து மூளையில் தேள் கொடுக்கால் கொத்துகிறது. பெரிய உடல் நடுக்கம் இல்லை, ஆனால் மன நடுக்கம் உண்டாக்குகிறது. நுரையீரலில் சுடச்சுட பனி சென்று அமர்ந்து கொண்டது போல இருந்தது. மூச்சுக்காற்று குளிர்ச்சூடாக வெளியேறியது. தக்காளியைப் பிதுக்கி மூக்கில் தேய்த்துக்கொள்ளலாம்போல இருந்தது. பிராண வாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை இப்போதுதான் உணர்ந்தான். மணாலியில் பனி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கும்போது கண்டுகொள்ளவில்லை. பிராண வாயுத் தட்டுப்பாட்டை உடலின் பாகங்கள் முதன்முறையாக உணர்ந்ததால், அபயக்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தன. உடலுக்குள்ளே ஒரு ஆம்ப்ளிஃபையரை வைத்தால் நூறு ஆம்புலன்ஸ் சைரன்களின் ஒலி கேட்கும்.

அந்தக் குளிரிலும் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டு, ஒரு முக்கால் கால்சராய் போட்டுக்கொண்டு தரணை நோக்கி வந்தாள் பனிநிலா.

அந்த உடையில் அவளைப் புதிதாய்ப் பார்த்தான். காதல் நட்சத்திரங்கள் கூட்டமாய் பின் மண்டையில் தாக்குவதுபோல உலுக்கிக் குலுக்கி எழுந்தான்.

p44f_1517902175.jpg

சூரியன் மங்கிக்கொண்டிருந்தது. அவளின் பின்னணியில் பனிமலை தூரத்தில் தெரிந்தது. பனி என்றால் வெள்ளை என்றுதான் இதுவரை தரண் நினைத்திருந்தான். இப்போதுதான் கரும்பனியும் உண்டென்று கண்டுகொண்டான். கரும்பனி மற்றும் வெண்பனிப் பின்னணியில் வண்ணமயமாகப் பனிநிலா மிதந்து வருவதைக்கண்டு, அவளை நோக்கிச் சென்றான்.

``இந்த நிமிடத்திலிருந்து, இப்போதுதான் உன்னைப் பார்த்ததுபோலப் புதிதாகக் காதலிக்கிறேன்’’ என்றான்.

“நான் சொல்ல வருவதை எல்லாம் நீ சொல்கிறாய்” என்றாள். ஆனால் “ஒரே ஒரு ஏமாற்றம்தான் என்றாள்.’’

“என்ன ?”

“என்னைத் தேடி நீ இங்கு வருவாய் எனச் சில வருடங்கள் இங்கே காத்திருந்தேன். நீ வந்திருக்க வேண்டும், அதுதான் இன்னும் உண்மையான காதல். ஆனால் நீ என்னை சென்னையில் பார்த்துதான் தொடர்ந்து வந்தாய்.”

“மன்னித்துவிடு. என் தவறுதான். நான்தான் வந்திருக்க வேண்டும்’’  என்று கூறிய தரண் பனியை மெல்ல இழுத்து நெற்றியில் முத்தமிட்டான். விடுவித்துக்கொண்டு, அவள் திரும்பியதும் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு முகம் புதைத்தான்.

“தரண், அங்கே தணல் போட்டிருக்கிறேன். அதனருகே அமர்ந்து பேசலாம் வா.”

தரணை முதன்முறையாகக் கையைத் தொட்டு, பிடித்து  அழைத்துச் சென்றாள். தரணுக்கு அவளாகவே தந்த ஸ்பரிஸம் தாங்க முடியவில்லை. மின்மினிப்பூச்சிகள் வைரஸ்களாக மாறி ரத்தத்தில் ஓடுவதைப்போல வித்தியாசமாக நடந்தான்.

“என்னோட ரெண்டு கண்ணையும் பிடுங்கி உன்கிட்ட கொடுத்துடணும்போல இருக்கு’’ என்றான்.

பனிநிலா தரணை அழைத்துச்சென்று தணலின் அருகே போட்டிருந்த மரக்கட்டையில் அமர வைத்தாள்.

அவளும் ஒரு வைன் கோப்பையை எடுத்துக்கொண்டாள்.

“தரண் உன்கூட கொஞ்சம் பேசணும். நீ தெளிவா புரிஞ்சிப்ப. நானே சொல்லட்டுமா, இல்ல நீ சொல்றியா?”

“லவ் யூ சோ மச் பனி.”

“அதேதான். ஆனா விரிவா சொல்றேன். நம்ம காதல் செத்துடக்கூடாது. வளரணும்.”

“நிச்சயமா பனி.”

“காதலுக்கு முக்கியமான  எதிரிகள் பல பேர் இருக்காங்க. எல்லோரையும் ஒதுக்கணும்.”

“நம்ம காதல் வளரணும்னா, நான் சாகணும்னாகூட சாகத் தயாரா இருக்கேன் பனி.”

“சரி… நமக்குள்ள செக்ஸ் வேண்டாம். செக்ஸ் முடிஞ்ச அடுத்த செகண்ட் காதல் குறைய ஆரம்பிக்கும். செக்ஸ் வளர்ந்துகிட்டே போகும். நாம தப்பா, அதைக் காதல்னு நினைச்சிப்போம்.”

“ஓக்கே செக்ஸே வேண்டாம்.’’

“ஒண்ணு சொல்லட்டுமா? குழந்தைகூட காதலுக்கு எதிரிதான்.”

“ஆமாம், ஆமாம்.’’

“நமக்கு செக்ஸும் வேண்டாம், இந்தக் காதலைக் கொல்லும்  குழந்தையும் வேண்டாம்டா.’’

‘`ஓக்கே’’

“அப்புறம், நாள் கூடக் கூடவும் காதல் குறைஞ்சி, ஒரு அலுப்பு வரும். அதனால…”

“அதனால...’’

“நாம தினமும் அன்னிக்கிதான் முதன்முதலா பார்த்த மாதிரி, லவ்வை ப்ரப்போஸ் பண்ணி லவ் பண்ணலாம். ஏன்னா, முதன்முதலா காதலைச் சொல்லிக் காதலிக்க ஆரம்பிச்ச அந்த நாளோட அடர்த்தி  அடுத்தடுத்த நாளில் இருக்கறது இல்லை.’’

“சரி , பனி… நான் உன்னை தினமும் அதே தீவிரத்தோட, புதுசா காதலிக்கிறேன். காதலை எப்பவும் புத்தம் புதுசா ஃப்ரெஷ்ஷா வச்சிப்போம்.”

“அம்மா, அப்பா, வேலை, நண்பர்கள், பொழுது போக்கு, செக்ஸ் எல்லாமே காதலுக்கு எதிரிகள்தான்.’’

“ஆமாம் பனி, நமக்கு நம்ம காதல் மட்டும் போதும்.”

“இன்னும் எட்டு மாசம் வெளி உலகைப் பார்க்க முடியாதுடா. நீ, நான், இந்த வீடு, உறைந்த இந்த நதி, அப்புறம் நம்ம காதல் மட்டும்தான்.’’

“எனக்குக் காதல் மட்டும் போதும் பனி, வேறெதுவும் தேவையுமில்லை பனி.’’

“அப்புறம், செக்ஸ் வச்சிக்கிட்டா குழந்தை பிறக்குது இல்லடா?”

“ஆமாம்.’’

“அதேபோல உண்மையா, தீவிரமா காதலிச்சா ஏன் எதுவும் புதுசா உருவாகிறது இல்ல?”

“தெரியலையே!”

“ஏன்னா யாரும் இதுவரைக்கும் உண்மையா, தீவிரமா காதலை வளர்க்கறதே இல்லை. காதல் உருவான அன்னிக்கே அது மெதுவா  கொல்லப்பட ஆரம்பிச்சிடுது.”

“ம்ம்”

“காதல் பாவம், அதுக்கு வளர்ச்சியே இல்லை. உருவான நாளில் இருந்தே அது அழிய ஆரம்பிக்குது. அழிக்க ஆரம்பிச்சிடறாங்க.’’

“ஆமாம் பனி , நீ சொல்றது சரிதான்.”

“ஆனா நாம ஒழுங்கா காதலை மட்டும் வளர்த்து ,  காதலால் உருவாகும் ஒண்ணுக்கு உயிர் கொடுப்போமா?”

“எப்படி பனி?’’

“அர்ப்பணிப்போட காதலிச்சா, காதல் உருவாகி வளரும். அது ஒரு உணர்வு.  உருவமில்லாம காற்றில் கலந்திருக்கும். அந்த உணர்வை நாம உணரலாம். அது நம்மளைச் சுத்திதான் இருக்கும். நம்மகிட்ட மட்டும் பேசும்.இப்போதைக்கு அரூபமா நினைச்சிப்போம். அதுக்கு ஒரு பேர் வைப்போம்.”

“என்ன பேர் வைக்கலாம்?”

“ம்… சிமிழ்… ஓக்கே வா?’’

“ம்ம் ஓக்கே… சிமிழ், சூப்பர்’’ என்றான் தரண்.

“ஹாய் சிமிழ்” என்றாள் பனி.

இப்போ வரைக்கும் நான் நல்லா இருக்கேன். இப்பவே கிஸ் வரைக்கும் வந்துட்டீங்க. இனிமேலும் இப்படியே போச்சின்னா… செக்ஸ் வரைக்கும் போயிடும். நான் செத்துடுவேன், போய்த் தூங்குங்க என்றது சிமிழ்.
“சிமிழ் சொன்னது கேட்டுச்சா’’ என்றாள் பனி.

“கேட்டிச்சி’’ என்றான் தரண். சிரித்தான். பனியை மென்மையாக முத்தமிட்டான். “என் முத்தத்தில் காமமே இல்லை, காதல் மட்டும் தான். என் முத்தத்தால் நீ அழியமாட்டாய் சிமிழ்,  வளர்ந்துகிட்டுதான் போவ’’ என்ற தரண், “சிமிழுக்குக் கேட்டுச்சான்னு கேளு பனி” என்றான்.

“இப்போதைக்கு நம்பறேன்’’ என்ற சிமிழ், தரண் முத்தமிட்ட பனியின் கன்னத்தை வருடிச் சென்றது.

இருவரும் எழுந்து கைகோத்தபடிக்கு நடந்து உள்ளே சென்றனர். பனி, தரணின் தோளில் சாய்ந்துகொண்டு நடந்தாள்.

பின்னாலேயே வந்த சிமிழ், “பிரிஞ்சி நடந்து போங்க” என்றது.

தரணை இன்னும் இறுக்கிக்கொண்டாள்  பனி. “காதல் உணர்வால் கட்டிப்பிடிக்கிறீங்க, ஓக்கே! நானும் வளர்கிறேன். அது எப்போ எல்லையைத்தாண்டிக் காம உணர்வுக்குள்ள போகுதோ, பிரிய முடியுதா உங்களால?” என்று சிமிழ் கேட்டது.

“நிச்சயமா விலகிடுவோம்’’ என்றாள் பனி.

சிமிழ் அழ ஆரம்பித்தது. ``எனக்கு இப்பவே கழுத்தை நெரிக்கிற மாதிரி இருக்கு” என்றது சிமிழ்.

“ஸாரி சிமிழ், எனக்குக் காமம் ஏதுமில்லை.இந்த தடியனுக்குத்தான் போல இருக்கு’’ என்ற பனி, செல்லமாக அவனது தலையில் தட்டி தரணைப் பிரிந்தாள்.

இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

உன் பெட் ரூமைக் காட்டறேன் என்றவள், முன்னால் நடந்தாள், தரண் பின்தொடர்ந்தான்.

அவனது படுக்கையறையைக் காட்டி, அவனை உள்ளே தள்ளினாள் பனி. அறையினுள் ஹீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. கதகதப்பாக இருந்தது.

அவளையும் உள்ளே இழுத்தான் தரணி.

இழுத்ததும் அவனுடன் வந்து ஒட்டிக்கொண்டாள் பனி.

கட்டிப்பிடித்தல் என்றால், மார்பும், மார்பகங்களும் எந்தத் தடையும் இல்லாமல் முதலில் சேர வேண்டும். மார்பகங்கள்,  வயிற்றையும் வயிற்றையும் சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தரணின் மார்பில் புதைந்த பனியின் மார்பகங்கள் அவனது இதயத்தோடு பேசின.

“எனக்கு மட்டும் இழுக்கும் சக்தி இருந்தா,  உங்களைப் பிரிச்சி தனித்தனியாக் கட்டி வெச்சிடுவேன்” என்றபடியே சிமிழ் நுழைந்தது.

தரணை விலக்கிய பனி, “சிமிழ் வருத்தப்படுதுடா, தெரியலையா?’’ என்றாள்.

“இதுக்கெல்லாம் வருத்தப்படுவியா சிமிழ்? நான் உன்னை நல்லா போஷாக்கா வளர்த்துட்டுதான் இருக்கேன்” என்றான் தரண்.

சிமிழ் இருவர் தலையிலும் குதித்து ஆடியது.

“தரண், நம் காதலுக்கு எதிராக யார் இருந்தாலும் கொல்ல வேண்டும். உனக்குத் தெரியுமா? காதல் ஆதி உணர்ச்சி” என்றாள் பனி.

“ஆம் ஆம்’’ தரணுக்கு மூச்சு இரைத்தது.

“கொல்லுதலும் ஆதி உணர்ச்சி. இந்த நாகரிகம், பெருந்தன்மை, அன்பு, பாசம் எல்லாம் நடுவில் வந்தவை.’’

“ஆமாம்’’ என்றான் தரண்.

“நம் காதலுக்குத் தடையாக இருந்தால் நான் உன்னையும் கொல்லுவேன். என்னையும் கொல்லுவேன்’’ என்றாள்.

“அதுதான் சரி’’ என்றது சிமிழ்.

“கனவு போல இருக்கிறது கண்ணே’’ என்றான் . ‘`கண்ணே” என்பதை சொல்லவில்லை, முணுமுணுத்தான்.

“இது கனவு என்றால், இதிலிருந்து, நீ எழ விரும்புகிறாயா’’ என்றாள்.

“எழுந்தாலும், எழ விரும்பவில்லை என்று சொல்லத்தான் விரும்புவேன் உன்னிடம், அப்போதும் நீ இருக்க வேண்டும்’’ என்றான்.

“சரி போய் தூங்கு, காலையில், புதிதாக சந்திக்கலாம். புதிதாக காதலிக்கலாம். காதலை உறைய வைக்கலாம். காலத்தை, வாழ்வை உறைய வைத்து காதல் காதல் காதல் என வெறும் காதலோடு காதலாக வாழலாம் தரண்’’ என்று சொல்லியபடி பின்னகர்ந்தாள். தரண் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். கைகளை விடுவித்துக்கொண்டே நகர்ந்தாள் பனி.

“லவ் யூ பனி’’ என்று கத்தியபடியே, படுக்கையில் வந்து விழுந்தான் தரண். நீண்ட நாள்களுக்குப்பின் படுக்கையில் விழுவது போல இருந்தது. தூக்கம் சொக்கியது.  தூங்கப்போவதற்கு முன்பு, அறையை நோட்டமிட்டான். நல்ல பெரிய அறை. மூலையில் சலனம் தெரிந்தது. மூலையை நோக்கினான் தரண்.

மூலையில், நூற்றாண்டுத் தாடியுடன், தரண்.   கண்களில் காதல் ஒளிர அமர்ந்திருந்தான். அவன் கைகளில் சிகரெட் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அசாத்திய பேரமைதியோடு சிமிழ் அமர்ந்து இருந்தது தெரிந்தது.

குட்டிச் சிமிழ், குதித்துக்கொண்டே எங்கோ ஓடியது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.