Jump to content

சொர்க்கமே என்றாலும் ஷோபாபோல் வருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை  தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லைஎன்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது.

 

அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான்  இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காகநேரமில்லைஎன்றேன்.

 

சும்மா ஷோபாவிலை படுத்துக் கொண்டு ரிவி பாக்கிறதுக்கே அப்பாவுக்கு நேரம் காணாதுமூத்தவனிடம் இருந்து ஒரு நக்கல் வந்தது. கூடவேகிளுக்என்ற மருமகள்மாரின்ரை சிரிப்பும் சேரந்து வந்தன.

கொஞ்ச நேர கலந்துரையாடலுக்குப் பிறகு சொன்னேன், “ஓகே வாற சனிக்கிழமை நடக்கிற பிறந்தநாள் விழாவுக்கு போவோம்அந்த போவோம் என்ற வார்த்தைகளில் நான் அவர்களையும் மெதுவாக சேர்த்து விட்டிருந்தேன்.

 

வெள்ளை மேசை விரிப்புஅதன் மேலே அலங்காரம் என்ற பெயரில் சில காகிதத்தாலான சில வேலைப்பாடுகள். அவற்றின் மத்தியில் பிளாஸ்ரிக் கப்புகள், கோலா, பன்ரா, ஸ்பிரைட் என்று ஒன்றரை லீற்றர் போத்தல்கள் என மேசை  நிறைந்திருந்தது. உளுந்து வடை ஒன்று கடலைப்பருப்பு வடையுடன் ஜோடி சேரந்து சம்பலோடு எங்கள் மேசைக்கு வந்தது. பக்கத்தில் இருந்த மனைவியிடம்வடை எப்பிடி?” என்று கேட்டேன்கேட்கவில்லை என சைகையால் பதில் தந்தாள். எட்டு ஊருக்கும் கேட்கும்படி தமிழ் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

 

உங்கடை வீட்டை வரோணும் எண்டிருந்தன். இஞ்சை கண்டது நல்லதாப் போட்டுது.” அடுத்த பிறந்த நாள் விழாவுக்கான அழைப்பிதழ்  எங்களுக்கு அங்கேயே கிடைத்தது. நான் எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட அழைப்பிதழ்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்த தெரிந்தவர் என்னைப் பார்த்து சிரித்தார். எனது வாய் பேசாமல் இருந்திருக்கலாம். அதுவும் பதிலுக்கு சிரித்துவிட  என்னைப் பார்த்து சிரித்தவர் பேனையை எடுத்து எதையோ கிறுக்கி விட்டு என்னை நோக்கி எழுந்து வந்தார். அவரது கையில் வெள்ளை என்வெலப் தெரிந்தது. இன்னுமொரு அழைப்பிதழ் நடந்து வருகிறது என்பது தெரிந்தது.

 

சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி பிறந்தது. கொத்துறொட்டிக்கு வெங்காயம் போடுகிறார்கள்தானே! பிறகு எதற்கு லீக்ஸையும் சேர்க்கிறார்கள்எதற்கு வம்பு என்று எதுவுமே கேட்காமலே சாப்பிட்டேன். ஏற்கெனவே அடுத்த கிழமைக்கான பிறந்தநாள் விழாவின் அழைப்பிதழ் வீட்டில் இருக்கிறது. இப்பொழுது இன்னும் இரண்டு சேர்ந்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது ஒரு விழாவுக்குள் இன்னொரு விழா வந்து இடைஞ்சல் தராமல் ஒவ்வொரு சனிக்கிழமையையும் உனக்கு எனக்கு என்று ஒற்றுமையாக பிரித்தெடுக்க எங்களுக்கு தெரிந்திருக்கிறது.

 

எங்கடை காரிலை இடமிருக்கு. சனிக்கிழமை நான் வந்து உங்களை பிக்கப் பண்ணுறன்என்று மூத்தவன் சொல்லி இருந்தான். அவன் சனிக்கிழமை வந்த போது நான் ஷோபாவில் அமர்ந்திருந்தேன்

 

இன்னும் வெளிக்கிட இல்லையோ?” என்று கேட்டான். அவனது கேள்வியில் பட்டும் படாமலும் எரிச்சல் இருந்தது தெரிந்தது

 

காலிலை சுளுக்கிப் போட்டுதுஎன்று காலில் சுற்றி இருந்த பன்டேஜைக் காட்டினேன். தாயைப் பார்த்தான்

 

அப்பா வராமல் நான் தனியாக வாறது நல்லா இருக்காதுதாய் சொன்னதும்  “வரயில்லை எண்டால் ஒரு எஸ்.எம்.எஸ் ஆவது அனுப்பி இருக்கலாமே. நான் மினக்கெட்டு இஞ்சை வந்திருக்க தேவையில்லைஎன்று சலித்துக் கொண்டான். வேலை இடத்துக்கு நேரே போய் இருமி, தும்மி, பம்மிக் காட்டித்தானே சுகமில்லை எண்டு லீவு எடுக்க வேண்டி இருக்கு. அதுபோலத்தான் பன்டேஜைக் காட்டினால்தானே உனக்கும் விளங்கும் என்று சொல்ல நினைத்தேன்

 

மூத்தவன் போகும் போது, “அப்பான்ரை பேரிலை ஐம்பது யூரோ குடுக்கிறன். அப்பாட்டை வேண்டி வையுங்கோஎன்று தாயிடம் சொல்லிவிட்டுப் போனான்.

 

கடைக்கு போய் அடுத்த கிழமைக்கான பொருட்களெல்லாம் வாங்கி வந்து, வார விடுமுறையில் செய்வதற்கென ஒதுக்கி வைத்திருந்த வேலையில் இருபத்தைந்து வீத வேலையை மட்டும் முடித்துவிட்டு சாப்பிட்டுஅப்பாடிஎன்று ஷோபாவில் அமர்ந்து ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது பிறந்தநாள் விழாவுக்குப் போன பிள்ளைகள் விழா முடிந்து திரும்பி வந்தார்கள்.

 

ஷோபாவில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்த மூத்தவனின் கண்களில், “நான் போற பொழுதே ஷோபாவில்தான் இருந்தாய். திரும்பி வருர போதும் அதிலேயே இருக்கிறாய். ஐஞ்சாறு மணித்தியாலமா ஒரே இடத்திலேயே இருக்கிறீயே...” என்ற ஏளனம் தெரிந்தது

 

சின்னவன் கையில் வெள்ளை என்வெலப்புகள் இருந்தன. நான் அவனது கையைப் பார்ப்பதை புரிந்து கொண்ட அவன், “இன்னும் மூன்று விழாக்களுக்கு அழைப்பு கிடைச்சிருக்கு என்றான்

 

கதைத்து முடிந்து அவர்கள் போன பிறகுதான் பார்த்தேன்என்னுடைய அழைப்பிதழ்களுடன் அவர்களுக்குக் கிடைத்த அழைப்பிதழ்களும் கலந்து என் மேசையில்  ஒன்றாக இருந்தன.

 

ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

 

கவி அருணாசலம் 

10.02.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நடை முறை வாழ்வை  அழகாக சொல்லிய கவி அருணாசலத் தாருக்கு ... பாராட்டுக்கள் .  

விழாவுக்கு சென்ற இடத்தில அழைப்பு கொடுப்பது ..எனக்கு சரியாக படவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் ஏதாவது விசேசமெண்டால் எங்களுடன் வருவதில்லை. காரணம் அங்கு இவர்கள் வயதுப் பிள்ளைகள் வேறு வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டிருக்கினம். அவர்களுக்குக் கதைப்பிராக்குக்குக்கூட ஆக்கள் கிடைப்பதில்லை. 

மற்றும் சத்தமாக ஒலிபெருக்கியில் பாட்டுப்போடுவது அதற்குள் நாங்கள் இரைச்சலாகக் கதைப்பது. பிறந்தநாளுக்கு கோக் வெட்டி ஊட்டும்போது எதுவித இயற்கைத்தனமும் இன்றி கமராவைப் பார்த்து கேக் ஊட்டும் கையால் போலியோ வந்தவர்கள்போல் மடக்கி எந்த வித சம்பந்தமுமில்லாது ஜடங்கள்போல் முகத்தைக் கமராவுக்குக்காட்டிக்கொண்டு. கப்பி பேர்த்டே பாடுவதற்கூட வெட்ப்படும் அல்லது தெரியாத சமூகமாகத் தெரியும் ஒரு விருந்துக்கு ஏன் வரவேண்டும் தவிர இன்னுமொரு புறத்தில் பெர்சுகள் சிறுடுகள் இளசுகள் எனப்பேதமின்றீப்பதான் தண்ணியைக்கண்டதுபோல வாய்ய்குள் ஊத்துவது

அதைவிட மோசம் என்னவென்றால்

மனைவி என்ன நிறத்தில உடை உடுத்துகிறாவோ அதே நிறத்தில் மினுங்கல் மிட்டாய் பலூன் நிறத்தில் ஆண்களும் உடை உடுத்தி மைனர் குஞ்சுகள்போல் வலம்வருவது.  

இதுதவிர பெற்றொர் தண்ணியடியிலையும் கதையளக்கிறதிலையும் மினக்கிட சிறுசுகள் புதிதாக வாங்கிக்கொடுத்த தொலைபேசியில் விலையாடு ஏதாவதை எடுத்து அதன் பற்றறி இறங்கினாலும் நிலத்தோட கிடக்கிற பிளக் பொயின்ன்ரில இணைச்சு தரையோட தரையாகப் படுத்துக்கிடந்து அனாதைப்பிள்ளையாக விளையாடுவது

இவைகளைப்பார்த்தால் கொஞ்சம் விசையம் விளங்கின இளையோருக்கு இதுகளில் கலந்துகொள்ள மனம்வருமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு 60  அல்லது எழுபது எடுப்பினம்....போனவுடனை 2.00 பெருமதியான ஒருவடை,ஒரு கேக்கு..ஒரு முருக்கு...ஒரு சமோசா...ஒரு மாங்கோ மிக்ஸ்....பிறகு நீண்டலயினிலை நின்று...ஒரு கோபபயில்  எல்லா வகையான சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு....கையிலை பழமும்...அயிஸ்  கிறீமையும் எடுத்துக்கொண்டு போனால்....பின்பு என்னொருலயினிலை நின்று செயற்கை சிரிப்புடன் ஒரு போட்டோ எடுத்துவிட்டால் பேர்த்த்டே முடிந்தது.......அப்ப கோல் நடத்திரவை 3 பெரிய மாளிகை கட்டுவினம்தானே...பேர்த்டேவச்சவர் 10 வ்ரியம் கடன் கட்டுவர்......இது கனடா நிலை பாருங்கோ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசாகிப் போனால் எதிலும் விருப்பம் சிரத்தையின்றி மனம் பழைய நினைவுகளிலேயே சுழன்று அமைதியை தேடும்.. பிள்ளைகளின் இக்கால களியாட்டங்களோடு மனம் ஒன்றாது.

ஆனால் புலம் பெயர்ந்து அந்நிய தேசத்தில் எம் கலாச்சாரத்தில் அரிதாக அமையும் ஏதேனும் விழாக்கள், கொண்டாட்டங்களில் கலந்துகொண்டால், நாலு சனத்தை பார்த்துக் கதைத்த திருப்தியும், சந்தோசமும் கிட்டுமே?

எங்கும் போகமாட்டேனென்று அடம்பிடித்து சோபாவிலேயே எவ்வளவு நாள் கவிழ்ந்து கிடப்பது..? 'வயசுப்போன இந்த அப்பாவே இப்படித்தான்' என பிள்ளைகளுக்கும் சலிப்பு வருமே..? பின்னர் முற்றாக ஒதுக்கிவிடுவார்கள். 'பிள்ளைகள் எங்களை கண்டுகொள்ள மாட்டேங்கிறார்'களென வயசான பெற்றோர்கள் பிந்நாளில் புலம்பி பிரயோசனமில்லை.

நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ பிள்ளைகளின் விருப்பத்தை மதித்து, அவர்களோடு வெளியில் விழாக்களுக்கு சென்று வருவது குடும்ப உறவுகளுடனான இறுக்கத்தை தவிர்க்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

வயசாகிப் போனால் எதிலும் விருப்பம் சிரத்தையின்றி மனம் பழைய நினைவுகளிலேயே சுழன்று அமைதியை தேடும்.. பிள்ளைகளின் இக்கால களியாட்டங்களோடு மனம் ஒன்றாது.

ஆனால் புலம் பெயர்ந்து அந்நிய தேசத்தில் எம் கலாச்சாரத்தில் அரிதாக அமையும் ஏதேனும் விழாக்கள், கொண்டாட்டங்களில் கலந்துகொண்டால், நாலு சனத்தை பார்த்துக் கதைத்த திருப்தியும், சந்தோசமும் கிட்டுமே?

எங்கும் போகமாட்டேனென்று அடம்பிடித்து சோபாவிலேயே எவ்வளவு நாள் கவிழ்ந்து கிடப்பது..? 'வயசுப்போன இந்த அப்பாவே இப்படித்தான்' என பிள்ளைகளுக்கும் சலிப்பு வருமே..? பின்னர் முற்றாக ஒதுக்கிவிடுவார்கள். 'பிள்ளைகள் எங்களை கண்டுகொள்ள மாட்டேங்கிறார்'களென வயசான பெற்றோர்கள் பிந்நாளில் புலம்பி பிரயோசனமில்லை.

நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ பிள்ளைகளின் விருப்பத்தை மதித்து, அவர்களோடு வெளியில் விழாக்களுக்கு சென்று வருவது குடும்ப உறவுகளுடனான இறுக்கத்தை தவிர்க்கும்.

 

அதற்க்கு வேறு பல இடங்களுக்கு போகலாம்.... சில பிறந்த நாள் கொண்டாட்டம், saree functions க்கு போனால், சந்தோசம் திருப்தி கிடைக்காது.... மன இறுக்கம், இரத்த அழுத்தம் அதிகமாகும்.... முக்கியமா கனடாவில்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Sabesh said:

அதற்க்கு வேறு பல இடங்களுக்கு போகலாம்.... சில பிறந்த நாள் கொண்டாட்டம், saree functions க்கு போனால், சந்தோசம் திருப்தி கிடைக்காது.... மன இறுக்கம், இரத்த அழுத்தம் அதிகமாகும்.... முக்கியமா கனடாவில்... 

கனடாவில் இம்மாதிரி குடும்ப விழாக்களென்றால் பகட்டை காட்டவும், புறணி பேசும் இடமாகவுமா அமைகிறது..?

பெரும்பாலும் அந்நிய தேசத்தில் தமிழர்கள் வாழும்போது இம்மாதியான விழாக்கள், ஒன்றுகூடல்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து, அழுத்ததிலிருந்து மனம் விடுபட்டு லேசாக உதவாதா? No social life..?

saree functions - இம்மாதிரியும் குடும்ப விழாக்கள் உள்ளதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.