Jump to content

`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays


Recommended Posts

`உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் உண்ணா நோன்பு!’ - கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்! #LentDays

 
 

கிறிஸ்தவர்களின் தவக்காலம், வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. 'சாம்பல் புதன்' அல்லது 'விபூதி புதன்' எனப்படும் நிகழ்வில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாகக் கருதுகிறார்கள். 
தவக்காலம்... இறைவனை மனிதன் அதிகமாகவும் ஆழமாகவும் தேடும் காலம். இந்த  நாள்களில் மனக்கட்டுப்பாட்டுடன் தவ முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். அதாவது கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தவும், இறைவனோடு ஒன்றாகத்  தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளவும் இந்த நோன்பு உதவியாக இருக்கும்.

தவக்காலம்

 


கிறிஸ்தவர்களின் புனித நூலான, 'பைபிள்' எனப்படும் வேதாகமத்தை இந்த நாள்களில் அவசியம் ஒவ்வொரு நாளும் வாசிக்க வேண்டும்.; தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வழிபாடுகளில் பங்கேற்கவேண்டும்.

புனித வெள்ளி நாளில் இயேசு கிறிஸ்து பட்ட கஷ்டங்களை பைபிளில் வாசித்துத் தியானிக்க வேண்டும்; வெள்ளிக்கிழமைகளில் 'ஒரு சந்தி' எனப்படும் ஒருவேளை உணவு உண்ணாமல் இருப்பது, 'சிலுவைப் பாதை' எனப்படும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பது; இறைச்சி உணவுகள் மற்றும் மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்காமல் இருக்க வேண்டும். 
தினந்தோறும் ஜெபமாலை சொல்ல வேண்டும். 'இயேசுவே என்மேல் இரக்கமாயிரும், இயேசுவே, நான் பாவி. இயேசுவே, உம் ரத்தம் என்னை கழுவட்டும், உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்' என்று சொல்லி ஜெபிக்க வேண்டும்.

உடல்நலம் குன்றியவர்கள், மிகுந்த கஷ்டத்தில் இருப்பவர்கள் இயேசு கிறிஸ்து பட்ட கஷ்டங்களை நினைத்து, ஆறுதலும் நம்பிக்கையும் பெற வேண்டும்.  தாங்கள் செய்த பாவங்களை, இறைவனிடம்  அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டும். கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல், ஆன்மிக வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காமல், தேவையற்ற புத்தகங்களை வாசிக்காமல் மனதை இறைவன்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

தவக்காலம்

 

தங்களுக்குக் கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில், பத்தில் ஒரு பகுதியை இறைப் பணிக்குச் செலவு செய்வது மிகுதியான பலனைத் தரும். தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளைத்  தவிர்ப்பது, நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்வது, சமாதானமில்லாமல் வாழும் குடும்பத்தினரிடம் சமாதானம் ஏற்படுத்த முயற்சிப்பது போன்றவற்றையும் இந்த தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும். தீய சிந்தனைகளை விட்டொழிக்க வேண்டும். இப்படியாக பல்வேறு நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக, தவக்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது உணவு உண்ணாமல் இருப்பது, இறைச்சி உணவுகளை உண்ணாமல் இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். 
உண்ணா நோன்பு என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிகழ்வே. பழைய ஏற்பாட்டில், இறைவன் மோயீசனை நோக்கி, தனக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் இடையே ஏற்படவிருக்கும் உடன்படிக்கை வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளும்படி பணித்திருக்கிறார். அப்போது மோயீசன், இறைவன் குறிப்பிட்ட இடத்திலேயே 40 நாள்கள் பகலும் இரவுமாக அவருடன் தங்கி எந்த உணவையும் உண்ணாமல் எதையும் அருந்தாமல் இருந்தாராம்.

இயேசு கிறிஸ்து தனது பொதுவாழ்வைத் தொடங்குவதற்கு முன் பாலைவனத்தில் 40 நாள் பகலும் 40 நாள் இரவும் உண்ணா நோன்பு இருந்தார் என்று புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது. 

இயேசு கிறிஸ்து 40 நாள்களின் முடிவில் பசியுற்றிருக்கும்போது சாத்தான் அவரை நெருங்கி, நீர் கடவுளின் மகனாக இருந்தால், 'இந்தக் கற்கள் அப்பமாக மாறும்படி கட்டளையிடும்' என்றானாம். அதற்கு இயேசு கிறிஸ்து மறுமொழியாக, 'மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று; கடவுள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லிலும் உயிர் வாழ்கிறான் என்று எழுதப்பட்டிருக்கிறதே' என்றார்.

தவக்காலம்


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பதன் காரணம் இதுவே. 'உயிர் வாழ இறைவனின் வாக்கு எவ்வளவு முக்கியம்' என்பதை தங்களுக்குத் தாங்களே நிரூபித்துக்கொள்வதற்காகவே உண்ணா நோன்பு இருப்பது அவசியமாகும். ஆனால், 'நான் நோன்பு இருக்கிறேன் என்று என்னைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் அர்த்தமில்லை' என்றும் சொல்லப்படுகிறது.

``நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாக இருக்கவேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டு தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர். நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு. அப்போது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல் மறைவாயுள்ள உன் தந்தைக்கு (இறைவனுக்கு) மட்டும் தெரியும். அவரும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார் (மத்தேயு:6:16)'' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

உண்ணா நோன்பு என்பது நம்மை நாமே வருத்திக்கொள்வது என்பது ஒருபுறம் இருந்தாலும், நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மைப்படுத்துவதாக அமைந்தால் நல்லது.

https://www.vikatan.com/news/spirituality/116069-lent-day-begins.html

Link to comment
Share on other sites

`மனிதனே... மனம் திரும்பு!’ சாம்பல் புதனின் சிறப்பு - தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்! #AshWednesday

 
 

னிதனே
மனம் திரும்பு!
கல்வாரி நோக்கி, 
கால்களைப் பதித்து
கருணைதேவனைப்
பின்தொடர
மனம்திரும்பி வா!

 

இன்று முதல் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. 'தவக்காலம்' என்பது மனமாற்றத்துக்கான ஒரு காலமாகக் கருதப்படுகிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சில கருத்துகள் சொல்லப்படுகின்றன.  ''இப்போதாவது உண்ணாநோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்துடன் என்னிடம் திரும்பி வாருங்கள்'' என்கிறார் ஆண்டவர். 

 

சாம்பல் புதன்

நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமை உள்ளவர், பேரன்புமிக்கவர்'' - யோவேல் இரண்டாம் அதிகாரத்தில் 12 முதல் 13 வரையிலான இறைவசனங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

'சாம்பல் புதன்', 'விபூதி புதன்', 'திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள், கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் ஒரு சோகமான விழா. சாம்பல் புதனில் தொடங்கி, 40 நாள்களுக்கு மேல் நீடிக்கும் இந்த தவக்காலப் பயணம் என்பது மனிதனின் சுய ஆய்வுப் பயணத்துக்கான காலமாகும். கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மன மாற்றத்துக்கான காலமாக இதை அனுசரிக்கின்றனர். 

பைபிளில், நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. `இஸ்ரவேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.' `மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார்.' `இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் நோன்பிருந்தார்.' இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.

சாம்பல் புதன்


கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு வழிபாட்டின்போது கையில் ஏந்தி வந்த குருத்தோலைகளை வீடுகளில் பத்திரமாக வைத்திருப்பார்கள். அவை அனைத்தையும் எடுத்து வந்து ஆலயத்தில் எரியூட்டி சாம்பலாக்கி, கிறிஸ்தவ மதகுருக்களால் நெற்றியில் பூசி இந்த ஆண்டு தவக்காலத்தைத் தொடங்குவார்கள். அப்போது. குருவானவர் `மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லிக்கொண்டு சாம்பலை நெற்றியில் பூசுவார்கள். 

'சாம்பல்' என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மன மாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டக்கூடியது. ஏழைகள் மற்றும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு உதவுவது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துவது, வெளிவேடம் இல்லாத இறை உறவுக்கு வழிவகுக்கும். ஜெபத்தைச் சொல்வது, பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருப்பது போன்றவை இந்த தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்குமுறைகளாகும்.

சாம்பல் புதன்


பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி கடவுளின் வார்த்தையை மிகவும் கவனமாக வாசிப்பதும் வாசிக்கக் கேட்பதும் அந்த வார்த்தைக்கேற்ப வாழ்வதும் தவக்காலத்தில் பொருத்தமானது. தாம் செய்த பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்பதும் அதே மன்னிப்பை பிறருக்கு வழங்குவதும் தவக்காலத்தின் சிறப்பாகும். தவக்காலங்களில் சாம்பல் புதனன்றும் புனித வெள்ளியன்றும் கிறிஸ்தவர்கள் உண்ணாநோன்பு இருப்பார்கள். இதுதவிர தவக்காலத்தின் மற்ற நாள்களின்போதும் வழக்கமாக உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொள்வதுண்டு. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி உண்பதைத் தவிர்ப்பார்கள்.

உலகின் பல பகுதிகளில் தவக்காலத்தின்போது சிறப்புக் காணிக்கைகள் பெறப்பட்டு ஏழை நாடுகளில் அவதிப்படுவோரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக அவற்றை நன்கொடையாகக் கொடுப்பதும் உண்டு. இந்தச் செயல்கள் அனைத்துமே உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; இறைவனோடும் பிறரோடும் உறவை ஆழப்படுத்த வேண்டும் என்பதையே முன்னிறுத்துகின்றன.

https://www.vikatan.com/news/health/116351-ash-wednesday-is-the-starting-day-of-lent.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.