Jump to content

முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால்


Recommended Posts

முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால்

 

 

ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசிய நோ-பால் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. #SAvIND

 
முக்கிய போட்டிகளில் இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்திய நோபால்
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கீட்டதால், அந்த அணியின் வெற்றிக்கு 28 ஓவரில் 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் டி வில்லியர்ஸை இழந்த நிலையில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் மில்லர் 8 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் க்ளீன் போல்டானார். ஆனால் சாஹல் க்ரீஸ்க்கு வெளியே கால் வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. 7 ரன்னில் இருந்து தப்பித்த மில்லர், ஹர்திக் பாண்டியாவின் அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். அத்துடன் 28 பந்தில் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிந்தார்.

மில்லர் அவுட்டில் இருந்து தப்பியது போது தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. இதுதான் போட்டியை போக்கையே மாற்றியது. மில்லர் அவுடாகியிருந்தால் இந்தியாவின் வெற்றிக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்திருக்கும். முக்கியமான போட்டியில் நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோய் உள்ளது.

நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோனது இது முதன்முறையல்ல. இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. கெய்ல் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாமுவேல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு சார்லஸ் உடன் லென்டில் சிம்மன்ஸ் ஜோடி சேர்ந்தார்.

201802111549436254_1_ashwin-s._L_styvpf.jpg

7-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் லென்டில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ-பால் என்பதால் லென்டில் சிம்மன்ஸ் தப்பித்தார். அப்போது 12 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 13.1 ஓவரில் 144 ரன்கள் தேவைப்பட்டது. அவுட்டில் இருந்து தப்பிய லென்டில் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார்.

201802111549436254_2_hardikpandya-s._L_styvpf.jpg

மீண்டும் 50 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போதும் நோ-பால் என்பதால் தப்பித்தார். இரண்டு முறை தப்பித்த சிம்மன்ஸ் 51 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு துணையாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த தோல்வியால் டோனி மிகவும் விரக்தியடைந்தார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. 4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

201802111549436254_3_bumrah-ss._L_styvpf.jpg

ஆனால் பும்ரா அதை நோ-பால் ஆக வீசியதால் பகர் சமான் தப்பித்தார். பின்னர் 106 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 114 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் பாகிஸ்தான் 300 ரன்களுக்கு மேல் குவித்து முதன்முறையாக சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது.

இப்படி முக்கியமான போட்டிகளில் நோ-பாலால் இந்தியாவின் வெற்றி பறிபோய் உள்ளது. இது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/02/11154943/1145343/SAvIND-No-ball-headache-india-team-in-important-match.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.